Wednesday, July 31, 2013

இது 'வம்சம்' திருவிழா!



''கற்பூர நாயகியே... கனகவள்ளி. காளி... மகமாயி... கருமாரியம்மா!'' மரத்துக்கு மரம் கட்டப்பட்டு இருக்கும் லவுட் ஸ்பீக்கரில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிக்கொண்டு இருந்தார். மரங்களைக் கடந்தால், கேரள செண்டை மேளச் சத்தம் காதைக் கிழிக்கிறது. அம்மனைத் தோளில் சுமந்து சிலர் ஊர்வலம் வர... ஊரே திருவிழாக் கோலம்கொண்டு இருக்கிறது!
 புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகில் உள்ள விராச்சிலையில்தான் இந்தக் கொண்டாட்டம். ஊரின் காவல் தெய்வமான 'ஸ்ரீ மது அடைக்கலம் காத்த அம்பாள்’ திருக்கோயிலுக்கு ஆண்டுதோறும்  பிரமாண்டமாகத் திருவிழா நடத்துகிறார் கள். 'செவ்வாய் திருவிழா’ எனப்படும் இந்த விழாவில், கிட்டத்தட்ட 3,000 ஆடு களை நேர்ந்துகொண்டு வெட்டி, ஊர் முழுக்க விருந்துவைக்கிறார்கள்.
விராச்சிலையை வலம்வந்தோம். வரிசையாகப் பெண்கள் பொங்கல் வைத்துக்கொண்டு இருக் கிறார்கள். ஒரு தெருவில் குடும்பத்தினருடன் இயக்குநர் பாண்டிராஜ் பொங்கல்வைத்துக்கொண்டு இருந்தார். ''உங்க ஊர் திருவிழாவைப் பத்திச் சொல்லுங்களேன்'' என்றதும் உற்சாகமாகி விட்டார். ''கல்யாணம் ஆன ஒவ்வொரு ஆணும் ஒரு கிடா வெட்டுறது இந்தத் திருவிழாவில் வழக்கம். ஒவ்வொரு வீட்டுலயும் தனியாப் பொங்கல்வைக்காம பங்காளி வகையறாக் கள் ஒண்ணுசேர்ந்து பொங்கல்வைக்க ணும். சரியா 3 மணிக்கு சாமி தேர்லஊர் வலம் வரும். அப்படி ஊருக்குள்ள சாமி ஊர்வலம் வர்றப்ப, அந்தந்தத் தெருவுல கிடாய் வெட்டுவோம்.
இந்தக் கோயில் பதினெட்டுப்பட்டிக் கும் சொந்தம். அதனால, சித்திரை மாசமே பதினெட்டுப்பட்டிக்கும் பாட்டுப் பாடி திருவிழா அறிவிப்பு சொல்லுறது வழக்கம். அதுக்கு 'வளந்தானை’னு பேரு. அப்படித் திருவிழா அறிவிப்பு சொன்னதுமே பதினெட்டுப் பட்டியில் உள்ள மக்களும்மத்த ஊருல இருக்குற அவங்கவங்க சொந்தங்களுக்குத் தகவல் சொல்லிடுவாங்க. எல்லோரும் வந்து திருவிழாவுல கலந்துக்குவாங்க. அப்படிப் பேரு பெற்ற திருவிழா இது.  
பத்து வகையறாக்களுக்கு இந்தக் கோயில்ல முக்கியத்துவம் தருவாங்க. ஐநூற்றிப் புரையர், கானாட்டுப் புரையர், ஓயாமரி அம்பலம், தொண்டைமான் புரையர்,  மேலே வணங்கின தேவர், கீழே வணங்கின தேவர், வானாதிவிராயர்,     நஞ்சுண்டா ம.ஓ.சி, மணிக்கட்டி பல்லவ ராயர், எப்பாடு பட்டாலும் பிற்பாடு கொடாதவர்னு இந்த வகையறாக்களைப் பிரிச்சுவெச்சிருக்காங்க.
ஒவ்வொரு வகையறாவும் பத்து வயசுக்குக் கீழ உள்ள அவர்களின் உறவுக்காரப் பெண் குழந்தையைச் சீட்டுக் குலுக்கல் முறையில தலைமைக்குத்  தேர்ந்தெடுப்பாங்க. அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டக் குழந்தையை  ஊருக்கு நடுவுல இருக்குற பெரிய வீட்டுல தங்கவைப்பாங்க. அந்தப் பெரிய வீட்டுக்கு 'மது’னு பேரு. இந்தக் கோயில் அம்மன், ஸ்ரீ மது அடைக்கலம் காத்த அம்பாள் வாழும் வீடுன்னு அர்த்தம். அதுக்கு அப்புறம்தான் காப்புக்கட்டி திருவிழாவே ஆரம்பிப்பாங்க. அந்தப் பெண் குழந்தை திருவிழா முடியும் வரை அவங்க வீட்டுப் பக்கமே போகக் கூடாது. காலை, மாலை ரெண்டு வேளையும் கோயிலுக்குப்போய் சாமி கும்பிடணும். அடுத்தடுத்த நாட்கள்ல மத்த வகையறாக்களின் தலைமைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளையும் பெரிய வீட்டுல தங்கவைப்பாங்க. நவதானியத்தை முளைக்கவெச்சு, அதை எடுத்து இடிச்சி சாறு எடுப்பாங்க. அதுக்கு பேருதான் மது. அதை ஒரு புது மண் கலயத்துல வெச்சி, அந்தச் சிறுமிங்க ரொம்ப பயபக்தியோட கொண்டுபோகணும். அப்புறம்தான் இந்தச் செவ்வாய் திருவிழா நடக்கும். இதைஎல்லாம் தான் நான் என்னுடைய 'வம்சம்’ படத்துல காட்சிகளா வெச்சிருந்தேன்'' என்று சிரிக்கிறார் பாண்டிராஜ்!
- வீ.மாணிக்கவாசகம், பெ.தேவராஜ்
படங்கள்: பா.காளிமுத்து

Sunday, July 21, 2013

வெள்ளைச்சாமி,வெள்ளையன்,வெள்ளைதுரை பெயர்கள் எதனால்?

நம் தேவர் சமூகத்தில் வெள்ளைச்சாமி,வெள்ளையன்,வெள்ளைதுரை பென்னின் பெயர் வெள்ளச்சி போன்ற பெயர்கள் எதனால்? அதுவும் கரிய நிறம் பூண்ட தமிழ் தொல்குடிக்கு இந்த பெயர் எதற்கு? என்ற கேள்வி நெடுநாள்களாக வரலாற்று ஆய்வாலர்களும் பல யூகங்களை எழுப்பி வந்தனர்.நம் சமூகத்தில் மட்டுமல்ல மற்ற சமூகத்திலும் [ஆதாவது குறிப்பாக சொல்லப்போனால் தாமிரபரனி உற்பத்தியாகும் குற்றால மலையிலிருந்து கடலில் கலக்கும் பகுதி]வரை மறவர் சமூகம் மட்டுமல்ல மற்ற சமூகத்திலும் கானப்படுவதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.இதில் குறிப்பாக சுரண்டை ஜமீன் வெள்ளைதுரை,ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்ட வீரர் வெள்ளையத்தேவன்,சுதந்திரபோராட்ட வீரர் பாஸ்கரதாஸ் வெள்ளைசாமி தேவர்,வெள்ளச்சி நாச்சியார். முதலிய பெயர்கள் நெல்லை மாவட்டத்தில் புழங்க காரனம் இதுவே.

பாலை என்பது தனி நிலப்பரப்பே:

பல இடங்களில் சங்கப் பாடல்கள் மாயோனையும், வாலியோனையும் அழுத்தமாகக் குறிக்கின்றன. முல்லைநிலத் தெய்வம் மாயோன் தானே? (வாலியோன் மாயோனின் அண்ணன்; இவனைக் குறிப்பிடும் வழக்கம் சங்க இலக்கியத்தில் கொஞ்சம் அதிகம் தான். வாலியோனை வழிபாட்டிற் சிறப்பிப்பது பழந்தமிழகமும், இன்றைய ஒரிசாவும் தான்.)

பொதுவாகச் சங்க இலக்கியத்தில் பாலைத்திணையில் (சங்க இலக்கியத்தில் இந்தத் திணைப் பாட்டுக்கள் மிகுதியாய் உள்ளன.) பொருள்வயின் பிரிதலைக் குறிக்கும் எல்லா இடங்களிலும், சிலம்பில் (11:63-67) சொல்லப் படுவது போல்,

"வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் தானலம் திருகத் தன்மையிற் குன்றி முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்துப் பாலை என்பதோர் வடிவம் கொள்ளும்"

என்ற அளவில் முல்லையும் குறிஞ்சியும் திரிந்த இடமே பாலை என்பதாக ஒரு தமிழ் நாட்டு வரையறையைக் குறிப்பதாகக் கொள்ள முடியவில்லை. அவை வேறு ஏதோ ஒரு நிலைத்த இடத்தை, அதுவும் தமிழ்கூறும் உலகைத் தவிர்த்து, ஒரு மொழிபெயர் தேசமாகவே, குறிப்பதைக் கவனிக்க முடியும் . அதோடு வெய்யிலில் வேகும் பகுதியையே முதலில் குறித்திருக்க வேண்டுமோ என்றும் ஐயுற வேண்டியிருக்கிறது.
(மெய்யியற் சிந்தனை தமிழ்க் குமுகாயத்தில் அழுந்தியது கி.மு. 200 களுக்கு அப்புறமே. தொடக்க காலத்தில் தெய்வ வழிபாடு இருந்தது; ஆனாற் சமய நெறி கிடையாது. கி.மு.2300-2500 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட இடப்பெயர்கள் பெரும்பாலும் இயற்கையை ஒட்டியே அமைந்திருப்பதை நாவலந்தீவின் பல இடங்களின் பெயர்களில் பார்க்கலாம்.

வெள்ளைச்சாமி=பலராமன் வழிப்பாட்டின் வழிதோன்றிய திருநாமமே:

வாலியோன் பற்றிய செய்திகள் சிலம்பிலும், பரிபாடலிலும் காண்பது ஒரு புதிர். விடை இன்னும் நான் காணவில்லை. அவன் பலராமன் என்று சொல்லுவதே வடநாட்டில் (குறிப்பாக கலிங்கம், வங்கம் போன்ற இடங்களில்) வகரத்தை பகரமாக்கும் பலுக்கல் தெரிவு. தமிழில் வால் என்றால் வெள்ளை என்று பொருள். வாலியோன் = வெள்ளையோன். அவனுடைய சித்தரிப்பின் முழுப் பரிமானமும் தமிழ்வேர் வழி பார்த்தால் தான் புரிபடும். வால்/ வாலம் என்பது அப்படியே நேர்பொருளில் வெள்ளை நிறம் என்று புரிந்து கொள்ளக் கூடாது. கொஞ்சம் வெளுத்தவன் என்று பொருள் கொள்ள வேண்டும். அதாவது, கண்ணனைப் பார்க்க இவன் வெளுத்தவன்; அவ்வளவு தான். இவனும் கருப்புத் தான். கொஞ்சம் வெளிரிய கருப்பு. தமிழ்நாட்டுப் பெண்கள் இன்றும் எப்படி நிறங்கள் பற்றிக் கருத்துப் பரிமாறிக் கொள்ளுவார்கள் என்று எண்ணிப் பாருங்கள்.

பலராமன்=வாலியோன்[வெள்ளையோன்]=வெள்ளைச்சாமி பெயரானது:

வெள்ளைச்சாமி பெயர் இதனால் தான்.ஒருகாலத்தில் குறிஞ்சி,முல்லை மற்றும் பாலை நில மக்களின் வழிபடு தெயவமான பலராமனைத்தான் வெள்ளைச்சாமி என்று பெயர் வந்தது இது பழைய பலராமன் வழிபாட்டின் எச்சமே பண்டைய தொல்குடி சமூகத்தில் ஒன்றான மறவர் சமூகத்திலும் மற்ற தொல்குடி சமூகத்திலும் கான இதுவே காரனமாகும். எனவே தமிழ் கூறும் பொதிகைமலை பகுதியில் வெள்ளை என்ற பெயர் அந்த பகுதியில் ஒரு காலத்தில் இருந்து இன்று மறைந்த பலராமன் என்ற மாயோன் அன்னன் வழிபாடே.

Saturday, July 20, 2013

வேங்கடத்து நெடியோன்

வேங்கட மலையையும், அதில் திருமால் குடிகொண்டுள்ளதையும், அவன் பெயர் நெடியோன் என்பதையும் நமக்குக் கிடைத்தவற்றில் முதலில் பதிவு செய்த ஆவணம் சிலப்பதிகாரம் தான். நாம் கவனிக்க வேண்டியது நெடியோன் என்ற பெயர். [அந்தப் பெயரின் விளக்கம், "வாமனத்தின் முடிவில் எடுக்கும் திருவிக்கிரமத் அவதாரத்தால்" என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கதை தமிழ் இலக்கியங்களில் நெடுகவே பயின்று வந்திருக்கிறது. அப்படி ஒரு தாக்கம் ஏற்படவேண்டுமானால், அந்தத் தொன்மங்கள் இங்கு ஏற்பட்டிருக்கவே வாய்ப்பு உண்டு.] "நீள்நிலம் கடந்த நெடுமுடி அண்ணல்" என்று குறிப்பிட்டுக் காடுகாண் காதை 11:148 ல் சொல்லப்படும். இந்த அவதாரக் கதையில் வரும் மாவ(ல்)லி மன்னன் ஒரு சேர அரசனாய் இருந்திருக்க வாய்ப்பு உண்டு.

(இன்றைக்கும் மாவலி ஒவ்வொரு ஓணத்தன்றும் கேரளத்தில் நினைவு கூரப்படுகிறான்.) அவன் அரக்கன் என்பது நிறம் கருதியே அன்றி வேறாய் இருக்க வாய்ப்பு இல்லை. அரக்கு நிறம் என்பதும் தமிழர் நிறம் தான். மாந்தளிர் நிறம் அரக்குத் தானே? சேரமான் மாவண் கோ, விளங்கில் மாவண் கடலன், மாவண் புல்லி, மாவண் கிள்ளி எனப் பல்வேறு அரசர்களும், வேந்தர்களும் சங்க காலத்தில் சொல்லப் படுகிறார்கள். இந்த மா என்னும் முன்னொட்டு அவன் தமிழ் அரசன் என்று உணர்த்திவிடுகிறது. மாவல்லியின் தாத்தன் பெருகலாதன் என்பதும் கூடப் பெருஞ்சேரலாதன்>பெருங்கேரலாதன்>பெருங்கலாதன்>பெருகலாதன் என்ற திரிவில் அமையக் கூடிய பெயரே. அப்படி அய்யுறுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று ஆதன் என்னும் பெயரீறு சேர அரசர் பலருக்கும் இருந்திருக்கிறது. இரண்டு, மாவலியின் வழியில் வந்தவன், சோழன் மாவண் கிள்ளிக்குப் பெண் கொடுத்ததாக மணிமேகலைக் காவியத்தில் சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதையில் (16:53-55)

நீரிற் பெய்த மூரி வார்சிலை
மாவலி மருமான் சீர்கெழு திருமகள்
சீர்த்தி என்னும் திருத்தேவி ------

என்று பதிவு செய்யப் படும். இதே மாவண் கிள்ளியைச் செங்குட்டுவனின் மைத்துனன் என்று சிலம்பில் இளங்கோவடிகளும் பதிவு செய்வார். செங்குட்டுவனின் தாய் ஞாயிற்றுச் சோழன் என்று சிலம்பில் காணப்படும். ஆனால், பதிற்றுப் பத்தில் ஐந்தாம் பத்திற்கான பதிகத்தில் "குடவர்கோன் நெடுஞ்சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளி மகள் ஈன்ற மகன்" என்று மணக்கிள்ளியாக "ஞாயிற்றுச் சோழன்" என்னும் செங்குட்டுவனின் தாய்வழித் தாத்தனை உணர்த்தும். இத்தகைய உறவு முறையால் மாவல்லி என்பவன் சேரனாய் இருக்கவே பெரிதும் வாய்ப்பு உண்டு.

நெடியோன் என்ற பெயர் திருமாலுக்கு சிலம்பின் பல இடங்களிலும் பயிலப்படுகிறது. சிலம்பின் இந்திர விழவூர் எடுத்த காதை 5: 169-174 ல், புகாரில் இருந்த பல்வேறு கோயில்களைப் பற்றிச் சொல்லும் போது

பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீலமேனி நெடியோன் கோயிலும்
மாலை வண்குடை மன்னவன் கோயிலும்

என்று நெடியோன் பெயரை இளங்கோவடிகள் பதிவு செய்வார். சிலம்பின் கடலாடு காதை 6: 28-31 வரிகளில்

சிமையத்து இமையமும் செழுநீர்க் கங்கையும்
உஞ்சயம் பதியும் விஞ்சத்து அடவியும்
வேங்கட மலையும், தாங்கா விளையுள்
காவிரி நாடும் காட்டி ---------

என்று சொல்லி வேங்கட மலையும் பதிவு செய்யப் படும். அடுத்து, சிலம்பு வேனிற்காதை 8:1-2 ல்,

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு

என்ற புகழ்பெற்ற வரிகளின் மூலம் வேங்கட மலை என்பது அந்த நெடியோனின் குன்றம் என்றும், சிலம்பின் காலத்தில் தமிழ் வரப்பைக் குறிப்பதில் நெடியோன் குன்றத்தின் பெயர் அழுத்தமாகவே பயன்படும். மேலே நாடுகாண் காதை 10: 9-10 ல்

அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டத்து வலஞ்செயாக் கழிந்து

என்று திருவரங்கத்தைப் பதிவு செய்ததோடு நில்லாமல், விரிவாகக் காடுகாண் காதை 11:41-51 ல், திரு வேங்கடமும், செங்கண் நெடியோனும் கீழ்வரும் வரிகளால் விரிவாகச் சொல்லப் படுவார்கள்.

வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்குயர் மலையத்து உச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக்கோடி உடுத்து விளங்குவிற் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ ஆடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்

இந்த வரிகளில் மிக விரிவாக நெடியோனின் உருவம் வரையப் படுகிறது. வேங்கடத்தில் ஓர் அருவி இருந்ததாகச் சொல்லப் படுகிறது; (வேங்கடம் பற்றிய சங்கப் பாடல்கள் பலவற்றிலும் இந்த அருவி குறிப்பிட்டுச் சொல்லப் படுகிறது. ஆனால் இன்று அந்த அருவியைக் காணோம்.) மலையின் உச்சியில் கோயில் இருந்திருக்கிறது. ஒரு பக்கம் ஞாயிறும், இன்னொரு பக்கம் திங்களும் இருக்க, இடைநிலையில் மின்னல் எனும் கோடி உடுத்து, வில்லைப் பூண்டு, மேகம் நிற்பது போல சக்கரத்தையும் சங்கையும் தாமரைக் கைகளில் தாங்கி, மார்பில் ஆரம் அணிந்து, தங்க ஆடையில் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன் என்ற விவரிப்பைப் படிக்கும் போது, இன்றுள்ள பெருமாளின் திருமேனி அப்படியே நம் கண்முன் தோன்றுகிறது.

இந்தச் சொற்களைப் படிக்கும் போது திருமலையின் நெடியோன் திருமேனி திருவிக்கிரம அவதாரத்தைக் குறிக்கிறது என்றும் (செங்கண் மால் என்னும் குறிப்பு நரசிங்க அவதாரத்திலும், திருவிக்கிரம அவதாரத்திலும் ஆழமாய்க் குறிக்கப் படும் குறியீடுகள். திருமலையில் இருப்பவன் திருவிக்கிரமனே என்ற குறிப்பு சிலம்பில் ஆழவே வெளிப்படுகிறது. முதலாழ்வார் பாடல்களையும் கூர்ந்து படித்தால் இந்தச் செங்கண்மால் என்னும் குறியீடு புலப்படும்.), அந்த அவதாரத்தில் தாயார் உடன் வருவது இல்லை என்பதும் புலப்படும். சிலம்பில் துன்ப மாலை 18: 4 ல் "நெடுமால் அடி" என்ற சொல்லாட்சியும், அழற்படு காதை 22: 60 ல், "உரைசால் சிறப்பின் நெடியோன்" என்ற சொல்லாட்சியும் கூட "நெடியோன்" என்ற பெயரின் ஆழ்ந்த ஆட்சியை உறுதி செய்கின்றன. நெடியோன் என்று இல்லாமல், உயர்ந்தவன் என்ற பெயரில் ஊர்காண் காதை 14:8 ல், "உவணச் சேவல் உயர்ந்தோன் நியமம்" என்று வரும் கருத்து வேறு ஒரு பரிமானத்தைக் கொடுக்கும். நெடியோன் தவிர அந்தக் காலத்தில் பெரிதும் பயன்பட்ட பெயர்களை அடுக்கிச் சொல்லுவது ஆய்ச்சியர் குரவை 17: படர்க்கைப் பரவல் 2 ல் வரும் பாட்டாகும்.

பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்யக்
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே!

பெரியோன், மாயோன், விண்ணவன், கரியவன் என்ற பெயர்கள் எல்லாம் வேங்கட மலை பற்றி மட்டுமே சொல்லப் படுவதில்லை. ஆனால் நெடியோன் என்ற பெயர் தான் அங்கு விதப்பாகவே பேசப்படுகிறது.

அன்புடன்,
இராம.கி.

Friday, July 19, 2013

மலையமான் என்னும் மன்னிய சேர குலத்தோன்றல்-2


மாட்சி மிகு சேர மலையரின் நேரடி வழித்தோன்றல்கள் யார்? 

மூவேந்தரின் சதியால் ஏற்பட்ட பாரியின் மறைவிற்கு பின்,தந்தையை இழந்து நின்ற பாரிமகளிரை,புலவர் கபிலர் பெருமான் தனது முயற்சியின் மூலமாக மலையமான் திருக்கோவிலூரையாண்ட மலையமான் தெய்வீகன் என்ற அரசனுக்கு சங்கவை,அங்கவை இருவரையும் மணம் செய்விக்க முனைந்து;பாரியை சதியால் கொன்ற மூவேந்தரையுமே ஔவையாரின் உதவியுடன் அழைத்து, அவர்களின் முன்னிலையிலேயே பாரிமகளிருக்கும் மலையமான் தெய்வீகனுக்கும் திருமணம் செய்வித்தார். இவ்வாறு மூவேந்தர் முன்னிலையில் ஏற்பட்ட மண உறவின் காரணமாகவும், மூவேந்தரின் மக்களுடனும் உண்டான மண உறவின் காரணமாகவும் மலையமான் தெய்வீக ராஜனின் சந்ததியினர் பார்கவ குலம்,பாரியின் வம்சம் எனவும் அழைக்கப்படுகின்றனர்.தெய்வீகராஜனின் மக்கள் மலையமன்னர் நரசிங்க முனையரையர் ,நத்தமன்னர் மெய்ப்பொருள் நாயனார்,சுருதிமன்னர் குலசேகரன் என்ற மூவர்.அதில் மலையை ஆட்சி செய்பவர் மலையமான் எனவும் சமதளத்தை ஆட்சி செய்தவர் நத்தமான் எனவும்,மண்ணும்,மலையும் ஆள்பவர்,கல்வி,கேள்விகளில் தேர்ந்தவர் சுருதிமான் எனவும் வழங்கப்பட்டார்கள்.மேற்படி பட்டங்களைக்கொண்ட மலையமான்களாகிய தண்ணிழல் வாழ்நர் (சேர அரச குலத்தார்)என்று அழைக்கப்பட்ட இவர்களின் இனத்தார் பதினெட்டாம் நூற்றாண்டு வரைக்குமே மலையமன்னர்,நத்தமன்னர் என்ற குறுநிலமன்னர்களாக,பாளையக்காரர்களாக நாட்டார், உடையார்,நயினார்,மூப்பனார் என கிராம நிர்வாகிகளாக தலைவர்களாக இருந்தனர். அவர்களின் வம்சாவழியினர் இன்றைக்கும் அதே பட்டங்களுடனேயே அழைக்கப்படுகின்றனர். குல முதல்வராக குலசேகரன் சுருதிமன்னர் அறியப்படும் காரணத்தால் அவர்தம் வம்சத்தினர் மூப்பனார் ஆவார்.குலசேகரன் சுருதிமானை,குலசேகர ஆழ்வாராகவே கருத வேண்டியுள்ளது. மலையமான்களின் நேரடி மரபு வழி வந்தோர் பாரியின் வம்சமான பார்க்கவ குலத்தார் மட்டுமே.

இதை அன்றைய ஆங்கிலே அரசும் தென்-இந்திய சாதிகளை ஆராய்ந்த எட்கர் தர்ஸ்டனும் பார்க்கவ குல உடையார்களே சேரர் வழித்தோன்றல்கள் என அறிவித்துள்ளனர்.

Tradition traces the descent of the udayans from a certain Deva Raja, a Chera king, who had three wives, by each of whom he had a son, and these were the ancestors of the three castes(Nattamaan,sudermaan,malaiyamaan). There are other stories, but all agree in ascribing the origin of the castes to a single progenitor of the Chera dynasty. It seems probable that they are descendants of the Vedar soldiers of the Kongu country, who were induced to settle in the eastern districts of the Chera kingdom.-udayans- Edgar Thurston. Castes and tribes of southern India (Volume 7)

சேரனின் நேரடி வாரிசாகவும்,சோழர்களின் கிளைக்குடியாகவும் உள்ள மலையர் குல அரச குடும்பமாகிய இவர்களுக்கு இரண்டாயிரம் வருடத்திற்கு முற்பட்ட பாரம்பரியம் உண்டு.மலையமான் வம்சத்தவர்கள் சூரிய குலமாக அறியப்படுகின்றனர்.


சோழரின் கிளை குலத்தவர்களும் பார்க்கவர்கள் தான். 

பார்கவ குலத்தோர் சோழனுக்கு பெண் கொடுக்கும் உயர் நிலையில் இருந்த அரச குடும்பத்தார். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள சோழ பாண்டியபுரம் என்ற ஊரில் ஆண்டிமலை என்ற இடத்தில் உள்ள பாறையில் கி.பி.953 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டில் உள்ள செய்தி, "பாரிமகளிரின் பைந்தொடி முன்கை பிடித்தோர் வழி வரு குரிசில் சித்தவடவன்" என்பதாக அமைகிறது,பாரி மகளிரை மணம் செய்தவர்களின் வழி வந்த அரசன் சித்தவடவன் என்கிறது செய்தி. இவரது மகளான வானவன் மாதேவி என்பவர் தான் தஞ்சையை ஆண்ட சுந்தர சோழனின் மனைவி,ராஜராஜ சோழனின் தாயார். என்றைக்கும் பாரியின் வம்சமாக கல்வெட்டு கூறும் பாரிமகளிரின் பைந்தொடி முன்கை பிடித்தோர் வழி வரு வம்சத்தோர் பார்கவ குல சத்திரியர்கள் மட்டுமே. மேலும் “ தெய்வக்கவிதைச்செஞ்சொற்கபிலன் மூரிவண்தடக்கை பாரிதனடைக்கலப் பெண்ணைமலையற் குதவிப்பெண்ணை அலைபுனல்அழுவத்து அந்தரிட்சம்செல மினல்புகும்விசும்பின் வீடுபேறெண்ணி கனல்புகும் கபிலக்கல்லது*. ” –என இராசராச சோழன் கல்வெட்டும் மலையமான் பாரி வம்ச உறவினை மெய்ப்படுத்தும் கல்வெட்டு மூலமும் இவ்விரு வேளிர் வம்சமாக அறியப்படுபவர்கள் பார்கவ குல சத்திரியர்கள் மட்டுமே.. சுந்தர சோழன் இறந்தவுடன் அவரோடு சேர்ந்து உடன்கட்டை ஏறியவர் பார்கவ குல மலையமானின் மகளான வானவன் மாதேவி.க்ஷத்ரியப்பெண்கள் மட்டுமே உடன் கட்டை ஏறுதல் வழக்கம்.இன்றைக்கும் நத்தமான்,சுருதிமான்,மலையமான் பரம்பரையினர் பார்க்கவ குல க்ஷத்ரியர் என்று அழைக்கப்படுகின்றனர்.சோழனின் கிளைக்குடியாகவும் பார்க்கவ குலத்தார் வரலாற்றாளர்களால் கூறப்படுகின்றனர்.ஆனால் பெரும்பாலும் இவர்கள் தனித்தே பார்கவ குல க்ஷத்ரியர் என இயங்குகின்றனர்.சோழர்களில் சுந்தர சோழனுக்கும் இரண்டாம் ராஜராஜனுக்கும்(மலையமான் மகள் அவனிமுழுதுடையாள்)பெண் கொடுத்த இவர்கள் மூவேந்தரோடும்,வேளிர்களோடு மண உறவு கொண்டுள்ளனர்.பார்கவ குலத்தார் வானவன்,சேரன்,மலையன் என்னும் குடிப்பெயருடைய மலையமான்களின் நேரடி வம்சத்தாராகவும் பாரி மற்றும் மூவேந்தரின் பெண்ணடி வாரிசாகவும் உள்ள குடும்பத்தினர்கள். .

கரிகாலச்சோழன் காலத்திலிருந்தே மலையமானும் சோழனும் உறவினர் ஆவார்கள்: .

உடையார் ராஜராஜ சோழத்தேவர் என்ற பெயரில் உள்ள உடையார் என்ற பட்டம் ராஜராஜனின் தாய் வழிப்பட்டம் என்றும் வேறு எந்த சோழனுக்கும் உடையார் பட்டம் கிடையாது,என்று கூறுபவர்கள் உணரட்டும்,கண்டராதித்த சோழன் தொண்டை மானாற்று துஞ்சின உடையார்,ஆனை மேற்றுஞ்சின உடையார் என்று குறிப்பிடப்பட்டுள்ளார். கண்டராதித்தனின் மனைவி செம்பியன் மாதேவியார் மலைநாட்டு மழவராயர் மகள்.மழவர்=மலவர்(மலையர்).

கரிகாலனும் மலையமான் மன்னவனும்.
அபிதான சிந்தாமணி என்னும் நூலில் கரிகாலனும் மலையமானும் நண்பர்கள் என்று கூறியுள்ளது. கரிகாலன் சிறுவனாய் இருந்தபோது அவனது உறவினர்கள் அரியணைக்கு போட்டியிட்டு அதற்கு உரிமையான கரிகாலனை பொய் வழக்கிட்டு சிறையில் அடைத்தனர்.சிறையிலிருந்து தப்பிய கரிகாலன் மலையமான் பாதுகாப்பில் தான் வளர்ந்துள்ளார். கரிகாலன் தந்தை இளஞ்சேட் சென்னி வடுகரை வென்று பாழி அரணை அழிக்க மலையமான் பெரும் படைகள் கொடுத்து உதவியுள்ளார்.இளஞ்சேட் சென்னியால் வெல்லப்பட்ட பாழியின் மகன் பதினோரு வேளிர்களை சேர்த்துக் கொண்டு போர்த் தொடுத்துள்ளான். இங்கு மலையமான் வேளிர்களில் சேர்க்கப்படவில்லை.கரிகாலனின் பெயரர்களாக அறியப்படும் கிள்ளிவளவன்,நலங்கிள்ளி,நெடுங்கிள்ளி ஆகியோரின் காலத்தில் சோழநாடு மூன்றாய்ப் பிரிந்தது.அதே சமயம் தான் மலையமான் திருமுடிக்காரி வேந்தனுக்கு பாதுகாப்பும் படை பலமும் அளிக்கக்கூடிய வலிமை பொருந்திய தனி முடி சூடிய சிற்றரசராக இருந்தார். மலையமான் மகள் வானவன் மாதேவி இக்குலமே.ஆதாரமும் வலுவாக உண்டு. டாக்டர்.ராசமாணிக்கனார் ஒரு கட்டுரையில் திருமுனைப்பாடி நரசிங்க முனையரையர் என்ற மலையமான் தான் சுந்தர சோழனை வளர்த்து பாதுகாத்தும் வந்துள்ளார்,என்று கூறியுள்ளார். ஏன் சோழர்கள் மீது மலையமான்களுக்கு இவ்வளவு அக்கறை?காரணம் மிகவும் வலுவானதே. சோழனின் கிளைக்குடி என்று வரலாற்றில் கூறப்படும் குடிகளில் பாதி மலையமான்களின் குடி பட்டங்களே,அவையாவன மலையமான்,சேதிராயர்,கொங்குராயர்,முனையரையர்,மழவரையர் ஆகும். சேதிராயர் என்பதை சூரிய குலத்தின் கிளைக்குடி என்றே கூறியுள்ளனர். உண்மை இவ்வாறு இருக்க சோழராக உரிமை கொள்ளும் முழு தகுதியும் பார்க்கவ குலத்திற்கு உள்ளது எனவும் சோழர்களுக்கு முன்பிருந்தே உடையார் பட்டமுள்ளதையும் சுட்டிக் காட்டியாயிற்று.இவ்வளவு ஏன் சோழர்களின் ஊர் பெயர் உடையார் குடி. உடையாளூர்,உடையார்கள் இன்றைக்கும் அதிகமாக வசிக்கும் ஊர் இங்குதான் ராஜராஜனின் சமாதியும் உண்டு.ராஜராஜனுக்கு உடையார் பட்டமும் உண்டு.

மலையமான்கள் பார்க்கவ குலத்தார் எனக்கூறும் கல்வெட்டுகள் ஆதாரம். 

மலையமான்கள் தங்கள் இனம் என்று பல்வேறு இனத்தினரும் உரிமை கோரும் போது மலையமான் மன்னர்களே தங்களை பார்க்கவ குலத்தவர் எனக்கூறும் ஆதாரங்களில் முதன்மையானது...........
திருக்கோவிலூர் திருமால் கோவிலில் உள்ள கல்வெட்டு செய்தி:

"'மிலாடான ஜனநாத வள நாட்டுக் குறுக்கைக் கூற்றத்துப் பிரமதேயம் திருக்கோவலூரான ஸ்ரீ மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்து திரு விடைக் கழி ஆழ்வார் ஸ்ரீ விமானம் முன்பு இட்டிகை படையாய்ப் பலகை பிளந்தமை கண்டு பார்க்கவ வம்சத்து மிலாடுடையார் இரண கேசரி இராமரான நரசிங்க வர்மர் கோயிலை இழிச்சி கற்கொண்டு ஸ்ரீ விமானமும் மண்டபமும் எடுப்பித்து முத்துப் பந்தலுங் கொடுத்து முன்பு கல்வெட்டுப் படியுள்ள நிபந்தங்கள் எல்லாம் ஸ்ரீ விமானத்தே கல்லுவெட்டு வித்தார் நரசிங்க வர்ம ரென்று அபிஷேகம் பண்ணி முடிகவித்து மிலாடு இரண்டாயிரம் பூமியும் ஆண்ட மிலாடுடையார் நரசிங்க வர்மர். சந்திராதித்த வல் எரிக்க வைத்தா திரு நந்தா விளக்கு இரண்டு இவைக்கு விளக்கெரிக்க கொடுத்த சாவா மூவாயப் பெரும்பசு அறுபத்து நாலு."

திருக்கோவிலூரிலுள்ள திருமால் கோவிலில் திரு விடைக்கழி ஆழ்வார் சன்னதி ஸ்ரீ விமானம் பழுது பட்டதைக்கண்டு... பார்க்கவ வம்சத்தைச் சேர்ந்த மிலாடுடையார் இரண கேசரி இராமரான நரசிங்க வர்மர் செங்கலால் கட்டப்பட்ட கோயிலை புதிப்பித்து கருங்கற்களால் ஸ்ரீ விமானமும் மண்டபமும் எடுப்பித்து,ஐந்து ஸ்தூபியும் எடுத்து,உட்பிரகாரத்தையும் ஒருமண்டபத்தையும் கட்டி,முத்துக்கள் பதித்த விதானத்தையும் கொடுத்து,சூரிய சந்திரர் உள்ளவரை விளக்கெரிக்க இரண்டு நந்தாவிளக்குகளும் கொடுத்து (விளக்கு நெய்க்காக)அறுபத்து நான்கு பெரிய பசுக்களும் கொடுத்து இத்தகவலை கல்வெட்டில் வெட்டுவிக்கவும் செய்துள்ளார், நரசிங்க வர்மர் என்ற பட்டாபிஷேக பெயர் கொண்ட மிலாடு இரண்டாயிரம் பூமியும் ஆண்டவரான பார்க்கவ வம்சத்தை சேர்ந்த மிலாடு உடையார் நரசிங்க வர்மர். கல்வெட்டு கூறும் உண்மைகள் என்ற நூலில் தி.வை.சதாசிவ பண்டாரத்தார் மேற்கண்ட கல்வெட்டைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இன்னொரு காலம் அறியப்படாத கல்வெட்டில் பார்க்கவ வம்சத்து மிலாடுடையார் நரசிங்க வர்மர் பொன்னாலான ஸ்தூபி ஒன்றைக் கொடுத்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது. மலையமான் மன்னர்களில் ஒருவரான வாணகோவரையன் என்பவர் இந்த கோவிலில் நந்தா விளக்கெரிக்க வேண்டி நிலங்களை தானமளித்துள்ளார் என்று கோவில் வெளிச்சுற்று வடக்குபுறச் சுவரில் ராஜராஜ சோழன் கால கல்வெட்டு கூறுகிறது. அதே பகுதியில் மலையமான் பெரிய உடையான் என்ற மன்னர் கிராம சபையிடமிருந்து வரி விலக்கு பெற்ற நிலத்தினை வாங்கி இறைவனுக்கு தினசரி பூஜை,நைவேத்தியம் செய்விக்க தேவதானமாக வழங்கியுள்ளார் என்றொரு செய்தியும் காணப்படுகிறது. அதே கோவிலில் வேணு கோபாலசுவாமி சன்னதிக்கு செல்லும் படிக்கட்டுகளில் உடையார் பாளையத்தை ஆண்ட உடையார்கள் சில கட்டிடங்களை எழுப்பியதாக கல்வெட்டு செய்தி காணப்படுகிறது.

சேலம் கல்வெட்டு:
சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் பேளூர் தான் தோன்றியவார் கோயில் முன் புதைந்து கிடந்த தூண் கல்வெட்டு ஒன்று கல்வெட்டு ஆய்வாளர் புலவர் துரைசாமி அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது,அதில் பார்க்கவ கோத்திரத்து மிலாடுடையார் செம்பியன் மிலாடுடையார் என்ற மன்னர் பற்றிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தென்னார்க்காடு மாவட்டம் எலவானச்சூர் சிவன் கோவில் கல்வெட்டு,மற்றும் திருக்கோவில் வீரட்டானேஸ்வரர் கோவில் கல்வெட்டு.
முதலாம் ராஜேந்திர சோழரது ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட மேற்கண்ட இடங்களில் உள்ள கல்வெட்டுகளில் பார்க்கவ கோத்திரத்து ஆதவ வீமனை உத்தம சோழ மிலாடுடையான். என்ற மன்னன் இருந்ததான குறிப்புகள் காணப்படுகிறது

பார்க்கவ குலத்தாருக்கும் கள்ளர்,மறவர் இனத்திற்குமான ஒற்றுமை ஆதாரங்கள்: 

கள்ளர்களுக்கும் பார்க்கவகுல சகோதர கூறுகள்:
இன்றைய பார்க்கவ குலத்தவர்கள் தஞ்சை கள்ளர்களின் உட்பிரிவினரே என்று வரலாற்று ஆய்வாளர் கூறுகின்றனர்.ஆனால் பார்க்கவர்கள் தனித்தே இயங்கு கின்றனர். பாரி மற்றும் மலையமான்களின் வம்சத்தினராகவே வரலாற்று ஆய்வுகள் இவர்களைக் கூறுகின்றன .தற்காலத்தே இவர்கள் பார்கவ குல மூப்பனார், பார்கவ குல உடையார் என்ற பட்டங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். மூப்பனார் என்பது ஜாதிப்பெயர் கிடையாது.இனத்தின் மூத்த குடியினர் எனப்பொருள்படும் .(மைசூர் உடையார்கள் வேறு இனத்தவர்கள்.) உடையார் என்பதின் உட்பிரிவு பட்டங்களே மூப்பனார்,நயினார்,என்பதாகு தஞ்சைக்.கள்ளர்குல அரசவம்சமாக பழங்காலம் முதலே அறியப்பட்டவர்களான பார்க்கவ குல மூப்பனார்,பார்க்கவ குல உடையார் என்ற சேதிராயர்களான பார்கவ குலத்தினர் மற்றும் தஞ்சைக்கள்ளர்களான சோழர்கள் இருவரைப்பற்றிய கல்வெட்டு இலக்கிய வரலாற்று ஆதாரங்கள் அனைத்துமே சோழர்கள் கள்ளர் மரபினரே என உறுதிப்படுத்துகின்றன. பார்க்கவ குலத்தாரின் பட்டங்கள் தஞ்சை கள்ளரில் சில: 1758 வாணாதிராயர் 762 வாணரையர் 1875 , 1765 வாண்டையார் முனையரையர்,1580 மலையமான் 1581 மலையராயர் ,கொங்கராயர்,சேதிராயன்,535 கிளிநாடர் 683 537 கிளியாண்டார், 390 க686 கத்தரியாளியார் 539 கிளிப்பாண்டார் 2342மிலாடுடையார்,1535 மலாடுடையார்,735 நத்தமான்,347உடையான், 1234சேதியராயன்,432வன்னிய நாயகன்,2342பண்டரையர், 454கோவலராயர்,786வாணகோவரையன்,138வாணராயர்6,வாணவிச்சாதிரன், 454காடவராயன்,(காடவர்களை ஆண்டவன்)612பல்லவராயர்,533அரையதேவன்,1487நாடாழ்வான் 


தற்போது அழைக்கப்படும் பிரான்மலையை(இம்மலைப்பகுதியில் இருந்து தான் புகழ் பெற்ற பிறமலைக்கள்ளர் என்ற வகுப்பினரும் மதுரை நோக்கி வந்ததாக கூறப்படுகிறது).ஆண்ட பாரி மன்னனுக்கும் மலையமான் திருமுடிக்காரிக்கும் ஏற்பட்டுள்ள மணஉறவு வரலாறு கல்வெட்டில் உறுதி செய்து அறியப்பட்ட ஒரு சம்பவமாகும். வள்ளல் பாரி ஓரியக்குலத்தை சேர்ந்தவன். ஓரியர்=சக்கரவாள சக்கரவர்த்திகள்=நாகவம்சத்தினரின் தலைவர்கள்.பாரிவேள் இந்த வம்சத்தில் வந்தவன்.(உபரிசர வசு என்னும் சோழ மன்னனும் இவ்வம்சத்தவன்). நாகர்கள் என்று அழைக்கப்படும் மரபினரின் தலைவன். (விச்சாதரர்=வானவர்).கள்ளர் என்பார் வீரம் நிறைந்த நாகர்களே என்று கூறப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் 13-ஆம் நூற்றாண்டு சுந்தரப்பாண்டியத்தேவன் கல்வெட்டுகளில் ஒருபாடிக்காப்போன் மழவராயர் என்பவரைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 'மழவர்' என்பது மலைக்கோவலராகியபிரமலைக்கள்ளரைக் குறிக்கும் பெயர் என்பது மீண்டும் இவ்விடத்து நினைத்தற்குரியதாகும். திருமலை நாயக்கர் காலத்திலும் திருப்பரங்குன்றம் கோயிலின் அறங்காவலர் உரிமை 'காரி பின்னத்தேவன்' என்பவருக்கு 'திருமலைக்காரி பின்னத்தேவன் என பட்டம்கட்டி அவருக்கே உரிமையும் செப்புப்பட்டயமும் தரப்பட்டுள்ளது.எனவே காரி பின்னத்தேவன் என்பவர் திருக்கோவிலூர் மலையமான்.திருமுடிக்காரியின் மரபில் பின் வந்தவன் என்று பொருள் கொள்கிறார்.இவர்களுக்கு முற்காலத்தில் மழவராயர் என்று பட்டம் இருந்துள்ளது.மலையமான்களின் நேரடி மரபு வழி வந்தோர் பாரியின் வம்சமான மலையமான் குலத்தார் மட்டுமே.இன்றைக்கும் சிய்யான்(ஸ்ரீஆயன்) என்ற சொல் வழக்கும் மாயாண்டி,மலைச்சாமி(மலையமான்) போன்ற பெயர்கள் பிரமலைக்கள்ளர் மரபுப் பெயராய்க் காணலாம். இவர்களைத்தான் திருப்பரங்குன்றம் கோயில் கல்வெட்டு மழவராயர் என குறிப்பிடுகின்றது.

மறவர்களுக்கும் பார்க்கவ மலையமான் குலத்தவருக்குமான இன ஒற்றுமைகள்: 

சேதுபதி(செம்பியன்) மன்னர்களும் சிவகங்கை(கௌரி வல்லபர்) மன்னர்களும் பார்க்கவ குலத்தாரைப் போல் உடையார்தேவர் என்று பட்டம் உடையவர்கள் .இந்த பட்டம் எந்த வேறு குலத்தாரிடமும் கிடையாது.பாரி ஆண்ட பிரான்மலையை ஆண்ட அழகன் குமரன் நம்பிராஜன் உடையநயினார்(வீர கேரளன்) பட்டம் உடையவர்.

பண்டாரத்தார்:

பண்டாரத்தார் பட்டம் பார்க்கவ குல உடையாரிடம் உண்டு. சேத்தூர் ஜமீன்-சேவுக பாண்டியத்தேவரும்,கொல்லம்கொண்டான் ஜமீன்-வாண்டாய தேவரும் "வணங்காமுடி பண்டாற மறவர்" என்ற உட்பிரிவை சார்ந்தவர்கள்.

அணஞ்சான்:

பார்க்கவ குலத்தாரிடம் அணஞ்சான் பட்டம் உண்டு: (எ-டு)நுணாங்குறிச்சி சுருதிமான் அணஞ்சா ஆனைவிடப்பாடி       இது போன்று 
 சொக்கம்பட்டி ஜமீன் - "செம்புலி" சின்ன அணைஞ்சா தேவர் என்ற பட்டம் உடையவர்.






மறவர்குலத்தவரான அழகு முத்து சேர்வையின் முன்னோராக "உத்தம சோழ கோன் மிலாடுடையார்" என்ற பட்டம் உடையவர். தம் முன்னோரின் பட்டமான சோழ கோன் தான் அழகு முத்து கோனாக மருவியுள்ளது. பார்க்கவ குலத்தில் உத்தம சோழ மிலாடுடையான் என்ற மன்னர் இருந்துள்ளார்.

கொண்டையம் கோட்டை மறவரின் வெட்டுவான்,சேதியர் கிளைகள் சேதியராயரை குறிக்கும். பார்க்கவ குல கத்திக்காரர்கள் வாள்வீமன் கிளையை சார்ந்தவர்கள்.

திருமுடிக்காரியின் நாணயத்தில் பச்சைக் குதிரை முத்திரை உண்டு.சிவகிரி ஜமீனின் சின்னம் குதிரையாகும். மலையமான் வம்சத்தவரிடம் வன்னியநாயகன்,வன்னியர் பட்டம் உண்டு.இது போல் சிவகிரி வன்னிய மறவர்களுக்கு வன்னியர் பட்டம் உண்டு.

இதையெல்லாம் விட மலையமானை சங்க இலக்கியத்தில் "மறப்போர் மலையன்" என்றும் "கூர்வேல் மலையன்","ஒரிவாள் மலையர்" என்றும் கூறுவர்.இது மறவர்களை"நீலக் கச்சைப் பூவார் ஆடைப், பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன் மேல்வரும் களிற்றொடு வேல்துரந்து ; இனியே, தன்னும் துரக்குவன் போலும்-ஒன்னலர் எ·குடை வலத்தர் மாவொடு பரத்தரக்(புறம்)" ஆதாவது வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்தது கிடையாது என்று கூறுவர்.

இதையெல்லாம் விட மலையமானை திருக்கோவிலூர் சித்தலிங்கமடம் "உத்தம சோழன்" கல்வெட்டில்"சூரியன் மறவனான மலையகுலராஜன்" என கூறியுள்ளது.

ஆதாரம்:
சதிரன் மறவனான ராசேந்திர சோழ மலையமான், சூரியன் சாவன சகாயனான மலையகுலராசன், 
சூரியன் மறவனான மலையகுலராசன்,
சூரியன் பிரமன சகாயனான மலையகுலராசன், 

About 4 records of this volume assigned to Uttamachola have been published in S. I. I., Volume III (Nos. 130, 147, 151 and 151-A). About 22 inscriptions in this collection are assignable to Rajaraja I. No. 412 from Siddhalingamadam dated in the 4th year records a gift made by Maladudaiyan . . . . . . It is not impossible that this Sadiran alias Rajendrasola Malaiyaman is identical with a chief of the same name on whose behalfMalaiyaman Suriyan [Ma]ravan Suriyan alias Malaiyakula-rajaan of Kiliyurincluded in the same division is stated to have made a gift of 192 cows for two perpetual lamps, to god Tiruvidaikalivalvar of Tirukkovalur in Kurukkaik-kurram in Jananatha-valanadu. It appears as though these two chief were brothers, the former being elder of the two on whose behalf the gift was made, and it might not be wrong to suggest that this chief was a father of Sadiran Suriyan [Ma]ravan Suriyan alias Malaiyakularajan (S.I.I., Vol. VII, No. 133). 

எனவே நாம் மேலே குறிப்பிட்ட கள்ளர்,மறவர்,பார்க்கவகுல உடையார்கள் இவர்கள் யாவரும் இம் மண்ணையாண்ட சேர,சோழ,பாண்டியர் என்னும் மன்னாதி மன்னர் வழி வந்த போர்க்குலத்தவர்களான வீரமரபினரேயாகும்.பார்க்கவ குலத்தார்கள்,கள்ளர்,மறவர்,அகமுடையர் இவர் யாவரும் ஆதி மறக்குடிகளே.

மலையமான் என்னும் மன்னிய சேர குலத்தோன்றல்-1

வேளிர்
========
இளையர் என்ற இளமறவர்
மலையமான் என்னும் மன்னிய சேர குலத்தோன்றல்
கொடும்பாளூர் இருக்குவேளிரான இருங்கள்ளர் குலத்தவர்கள்
மறவர் என்பது இனப்பெயர்.. பன்பு பெயரல்ல!!

மலையமான் மன்னர் யார்?  







தென்னிந்திய அரச குலங்களில் மலையமான் குலமும் முக்கியமான ஒன்று. மூவேந்தரின் சதியால் ஏற்பட்ட பாரியின் மறைவிற்கு பின்,தந்தையை இழந்து நின்ற பாரிமகளிரை,புலவர் கபிலர் பெருமான் தனது முயற்சியின் மூலமாக மலையமான் திருக்கோவிலூரையாண்ட மலையமான் தெய்வீகன் என்ற அரசனுக்கு சங்கவை,அங்கவை இருவரையும் மணம் செய்விக்க முனைந்து;பாரியை சதியால் கொன்ற மூவேந்தரையுமே ஔவையாரின் உதவியுடன் அழைத்து, அவர்களின் முன்னிலையிலேயே பாரிமகளிருக்கும் மலையமான் தெய்வீகனுக்கும் திருமணம் செய்வித்தார். இவ்வாறு மூவேந்தர் முன்னிலையில் ஏற்பட்ட மண உறவின் காரணமாகவும், மூவேந்தரின் மக்களுடனும் உண்டான மண உறவின் காரணமாகவும் மலையமான் தெய்வீக ராஜனின் சந்ததியினர்.மலையமான் நாட்டின் தலைநகராக திருக்கோவலூர் இருந்திருக்கிறது. இப்போது, திருக்கோயிலூர் என்றும் திருக்கோவிலூர் என்றும் அழைக்கப்படுகிறது. 'மலையமானாடு' எனவும் 'மலாடு' எனவும் பெயர் பெற்றது விளங்கியது. இது தவிர வேறு பெயர்களிலும் திருமுனைப்பாடிநாடு, சேதிநாடு, மகதநாடு; சகந்நாதநாடு எனவும் அழைக்கப்பட்டது.

மலையமான் மன்னரின் பூர்வீகம்: 

சேரனின் நேரடி வாரிசாகவும்,சோழர்களின் கிளைக்குடியாகவும் உள்ள மலையர் குல அரச குடும்பமாகிய இவர்களுக்கு இரண்டாயிரம் வருடத்திற்கு முற்பட்ட பாரம்பரியம் உண்டு.மலையமான் வம்சத்தவர்கள் சூரிய குலமாக அறியப்படுகின்றனர்.இது இவ்வாறு இருப்பினும் இவர்களது நிஜப்பூர்வீகம் என்ன? என்ற கேள்விக்கு பதில் இவர்களது ஆதி வித்து சேரர்களிடமே தோன்றுகிறது. 

பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினைச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரர்களின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.

சேர வம்சமாக அறியப்படுபவர்கள் வானவர்,பொறையர்,வேளிர்,பழுவேட்டரையர்,வில்லவர்,உதயர் என பல வகைப்படுவர். The Chera king had the title Villavar Kon indicating Villavar clans founded the ancient Chera Kingdom. The Emblem on the flag of Cheras was Bow and Arrow. The Chera kingdom was founded by the integration of various Villvar tribes such as
Vanavar, Puraiyar, Velir and Pazhuvettaraiyars.
இதில் பல பிரிவுகள் இருப்பினும் வஞ்சியை(கரூர்) ஆண்ட உதையர்கள்(சேரலாதன் மரபினர்).மற்றொன்று தொண்டியை ஆண்ட பொறையர்கள்.சோழநாடு 24காதம், பாண்டியநாடு 57 காதம்,சேரநாடு 80 காதம் கொண்டது.சேரநாட்டின் உட்பிரிவில்1)வேணாடு2)பூழிநாடு3)குட்டநாடு4)குடகுநாடு5)கொங்குநாடு7)கொங்கனநாடு8)துளுநாடு8)கங்கநாடு9)
வனவாசிநாடு என்ற பிரிவுகளையுடையது.சேரமரபினர் தம்மை சூரிய,சந்திர,அக்கினி என்ற மூன்று தனிக்குலங்களாக தம் ஆட்சிபகுதிக்குள் கூறிக்கொள்வர்.இதில்

தொண்டியை ஆண்ட பொறையர் வம்சத்தினர்: 

இதில் தொண்டியை தலைநகராக கொண்டு குட்டநாடு,பூழிநாடு,குடகுநாட்டை ஆண்டவர்கள் பொறையர்கள் என்று பட்டம் கொண்டவர்கள்.இவர்கள் தம்மை சந்திரகுலமாக கூறிக் கொள்வர். அந்துவஞ்சேரல் இரும்பொறை (காலம் தெரியவில்லை) செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை கி.பி. 123-148 ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் கி.பி. 130-167 தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை கி.பி. 148-165 இளஞ்சேரல் இரும்பொறை கி.பி. 165-180 குட்டுவன் கோதை கி.பி. 184-194 மாரிவெண்கோ காலம் தெரியவில்லை சேரமான் வஞ்சன் காலம் தெரியவில்லை மருதம் பாடிய இளங்கடுங்கோ காலம் தெரியவில்லை
சேரமான் கணைக்கால் இரும்பொறை
 
போன்ற மன்னர்கள் பொறையர் பட்டம் உடையவர்கள்.

வஞ்சி(கரூர்) மற்றும் இன்றை கொச்சியை ஆண்ட உதயன்(சேரலாதன்) மரபினர்: 

இவர்கள் தம்மை சூரிய குலமாகவும் அக்னிகுலமாகவும் கூறிக்கொள்வர்.சங்க, பக்தி காலச் சேரர்கள் (சேரமான் பெருமாள், குலசேகரர் ஆகியோர்) கரூரினின்றே ஆட்சி புரிந்தனர். இவர்கள் மரபின் மன்னர்களாக
கடைச்சங்க காலச் சேரர்கள் : உதியஞ்சேரலாதன் கி.பி. 45-70 இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கி.பி. 71-129 ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் கி.பி. 130-167 

இந்த உதயன் என்ற சூரிய குல சேர மரபினர்களில் வந்தவர்களே பிற்கால பெருமாள் மன்னர்கள் இதில் தோன்றிய வம்சமே மலையர் வம்சமாகிய மலையமான்(உதயன் சேரலாதன் வம்சம்).பிற்கால குலசேகரன்கள். 

The Second dynasty Kulasekhara dynasty (Second Cheras) The Chera Kings Rajashekhara Varman and Kulashekhara Varman spearheaded Hindu religious movements in their roles as celebrated Saivite and Vaishnavite saints. Kulasekhara became one of the celebrated Alvars and his poems came to be called the Perumal thirumozhi. Kulashekhara Varman ruled around the 8th and 9th centuries. He called himself Kongar Kon (the king of the Kongu people) hailing from Kollinagar (Karur). Though Kongar were defeated by Cheran Senguttuvan in the 2nd century AD, the Kongu region had been occupied by the Kongars of Karnataka Western Ganga Dynasty around 470 AD. The title 'Kongar Kon' indicates Kulasekhara had regained control of Kongu from the Western Ganga Dynasty around 800 AD. Other titles of Kulasekhara mentioned in the Perumal thirumozhi are Villavar Kon, Malayar Kon, Kollikkavalan, Koikkon and Koodal Nayagan. The capital city of Mahodayapuram (present Kodungallur ) and surrounding places were devastated in the long war and the king, without even a palace of his own, is known to have stayed at alternative frugal accommodations. Kulashekhara Varman (800-820 AD) Rajashekhara Varman (820- 844 AD)- also called Cheraman Perumal. Sthanu Ravi Varman (844- 885 AD)- contemporary of Aditya Chola Rama Varma Kulashekhara (885- 917 AD) Goda Ravi Varma (917- 944 AD) Indu Kotha Varma (944- 962 AD) Bhaskara Ravi Varman I (962- 1019 AD) Bhaskara Ravi Varman II (1019- 1021 AD) Vira Kerala (1021- 1028 AD) Rajasimha (1028- 1043 AD) Bhaskara Ravi Varman III (1043-1082 AD) Rama Varma Kulashekhara (1090- 1102 AD)- also called Cheraman Perumal

உதயன்(சூரியன்) வம்சம் வந்த மலையமான்: 

உதயன்(சூரியன்) வம்சவழி வந்த மலையமான்களின் பட்டங்களும் சேரர்களின் பட்டங்களும்: உதய சேரர்களின் பட்டங்கள்:
உதயன்
கொங்கர் கோன்
மலையர் கோன்
பெருமாள்
வர்மர்
ரவி பாஸ்கர வர்மா
மகதை நாடாள்வான்
வானவன்(அ)வானவர் கோன்(வான்=
மலை-->மலையன்)
கொல்லி காவலன் 

முதலிய பல பட்டங்கள் உடையவர்கள்.இது சேரர்கள்களின் பட்டங்களாகும்.
இதைப்போலவே அச்சு அசலான பட்டங்கள் உதயன் வழித்தோன்றல்களாகிய மலையமான்களுக்கு உண்டு.

மலையமான் பட்டங்கள்: 
மலையர் கோன்:மலையமான்
இமயவரம்பன்
மலைய குல ராசன்
மலாடர் கோமான்
மலாடுடையார்
மிலாடுடையார்
மலையரையர்
மலையராயர்
மலையரசன்

கொங்கர் கோன்:கொங்குராயர்
கொங்கராய பாளையத்தார்

வானவன்:
வானாதிராயர்
வானராயர்
வானகோவரையர்
வானவிச்சாதிர நாடாழ்வான் 
சேதியன்(வெட்டுதல் என்ற பரசுராமரின் கோடாலியை ஏந்திய சத்திரியன்)
சேதி நாடன்
சேதியர் கோன்.

மகோதையபுரம் ஆண்டவன்:மகத நாடாள்வார்
மகத நாடன்
நாடாள்வான்
வில்லாளன்

சூரிய வம்சத்து உதயன் மரபினர்:
சூரியன்
உதயன்(உடையான் என திரிந்துள்ளது)
இரண கேசரி
வர்மன்
பெருமாள்

ஒவ்வொரு பட்டங்களுக்கும் சேரர்களே மலையமான்கள் என்ற ஒற்றுமை ஆதாரம்: 


உதயன்: 

"மறப்படைக் குதிரை மாறா மைந்தன் துறக்கம் எய்திய...உதியன் சேரல் பெரும்சோறு(பதிற்றுபத்து)
சூரியன்
உதயன்(உடையான் என திரிந்துள்ளது)
இரண கேசரி
வர்மன்
பெருமாள்
இது சூரிய வம்சத்து சேரன் என்ற பெயரே முற்காலத்தில் உதயன் சேரலாதன் என்றும் பிற்காலத்தில் ரவி(உதயன்) பாஸ்கர(மார்தாண்டன்) வர்மா என்று பெயர் வழங்கியுள்ளது.

(எ-டு)சேர மன்னர்கள் பட்டியல்: உதியஞ்சேரலாதன் கி.பி. 45-70 Rajashekhara Varman (820- 844 AD)- also called Cheraman Perumal. Sthanu Ravi Varman (844- 885 AD)- contemporary of Aditya Chola Rama Varma Kulashekhara (885- 917 AD) Goda Ravi Varma (917- 944 AD) Indu Kotha Varma (944- 962 AD) Bhaskara Ravi Varman I (962- 1019 AD) Bhaskara Ravi Varman II (1019- 1021 AD) 

மலையமான் மன்னர்களின் பட்டியல்: 

உதயன் என்கின்ற சூரியன் பெயரையே முதல் பட்டமாக மலையமான் மன்னர்கள் பூண்டுள்ளனர்.

சதிரன் மறவனான ராசேந்திர சோழ மலையமான், சூரியன் சாவன சகாயனான மலையகுலராசன்,
சூரியன் மறவனான மலையகுலராசன்,
சூரியன் பிரமன சகாயனான மலையகுலராசன், 

About 4 records of this volume assigned to Uttamachola have been published in S. I. I., Volume III (Nos. 130, 147, 151 and 151-A). About 22 inscriptions in this collection are assignable to Rajaraja I. No. 412 from Siddhalingamadam dated in the 4th year records a gift made by Maladudaiyan . . . . . . It is not impossible that this Sadiran alias Rajendrasola Malaiyaman is identical with a chief of the same name on whose behalf Malaiyaman Suriyan [Ma]ravan Suriyan alias Malaiyakula-rajaan of Kiliyur included in the same division is stated to have made a gift of 192 cows for two perpetual lamps, to god Tiruvidaikalivalvar of Tirukkovalur in Kurukkaik-kurram in Jananatha-valanadu. It appears as though these two chief were brothers, the former being elder of the two on whose behalf the gift was made, and it might not be wrong to suggest that this chief was a father of Sadiran Suriyan [Ma]ravan Suriyan alias Malaiyakularajan (S.I.I., Vol. VII, No. 133). But the exact relationship of these two chiefs is not clear.

உதயன் என்கின்ற வார்த்தையே பிற்பாடு உடையான்(சூரிய அரசன்) என மறுவியுள்ளது என்பதை கவனிக்க.
சூரியன் மறவன்,சூரிய பிராமன சகாயன்,சூரிய சாவன சகாயன் முதலிய பின்னோட்டங்கள் பாஸ்கர ரவி பெருமாள் அரசரான சேர மன்னர்களை குறிக்கும் சொல்லாகும். வர்மர்: பெருமாள் சூரிய குலங்களில் வரும் பட்டமான வர்மர்
 என்பதும் இங்கு மலையமான்களில் உள்ளது என்பதை கவனிக்க.
மலையமன்னர் நரசிங்க முனையரையர்,
நத்தமன்னர் மெய்ப்பொருள் நாயனார்,
சுருதிமன்னர் குலசேகரன்,(குலசேகர ஆழ்வார் தான் இவர்)
மிலாடுடையான் நரசிம்ம வர்மன் (௨)
பெரிய உடையான் கரிய பெருமான் சொக்கப் பெருமாள்.
தெய்வீகன் நரசிங்க வர்ம உடையான்,
வானவரம்பன் 

(அ)மலையர்க்கோன் (அ) சேரன்: 

Other titles of Kulasekhara mentioned in the Perumal thirumozhi are Villavar Kon, Malayar Kon வான்=மலை என்று அர்த்தம்,.......வானவன்=மலையன்.......சேரன்= மலைநாட்டிற்கு சிகரத்தை போன்ற தலைவன்
மலையமான்=மலையர்களுக்கு மன்னவனான சேர குலத்தான்.
மலைய மன்னன் பட்டம்:

"இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ் 
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் எங்கள் 
குலசே கரனென்றே கூறு.

ஆரம் கெடப்பர னன்பர்கொள் ளாரென்று அவர்களுக்கே 
வாரங் கொடுகுடப் பாம்பில்கை யிட்டவன் மாற்றலரை 
வீரங் கெடுத்தசெங் கோல் கொல்லி காவலன் வில்லவர்கோன் மலையர் கோன் கொங்கர் கோன்
சேரன் குலசே கரன்முடி வேந்தர் சிகாமணியே."
மலையமான்
மலைய குல ராசன்
மலாடர் கோமான்
மலாடுடையார்
மிலாடுடையார்
மலையரையர்மலையராயர்
மலையரசன்
மலையமான் என்கின்ற பெயருக்கு தமிழ் அகராதியிலே ஒரே அர்த்தம் தான் உண்டு அதாவது சேரன். 
வானவன்:
வான வரம்பன் = மலைகளை எல்லைகளாக உள்ள சேரன்.The Chera kingdom was founded by the integration of various Villvar tribes such as Vanavar(or)Vanar வானவர் குலத்து குறுநில மன்னர்களாக பிற்கால மலையமான்கள்.வானாதிராயர் வானராயர்-மலைராயர் வானகோவரையர்-மலை கோமான்  வானவிச்சாதிர நாடாழ்வான் 

போன்ற மலையர் குலத்து பிற்கால மக்கள் மகதை என்கின்ற ஆத்தூர் பகுதியே ஆண்டனர்.சேலம் மாவட்டத்தின கிழக்கும் தென்னார்க்காட்டின மேற்குப் பகுதிகளுமான மகத நாட்டினை வாணர்களான வாணாதிராசர், வாணகோவரையர் போன்றவர்கள் ஆத்தூர் அருகில் உள்ள அகழியூரைத் தலை நகரமாகக் கொண்டு ஆண்டனர்.

சேதிராயர்(கத்தியர்): 

சேதியன்(வெட்டுதல் என்ற பரசுராமரின் கோடாலியை ஏந்திய சத்திரியன்) பரசுராமர்(பார்க்கவ ராமர்) போன்ற குல குருவால் உருவாக்கப்பட்ட சத்திரியனே சேதியன் (எ) வெட்டுவான்.சேதியர் என்பது வெட்டுதலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
தாதை தனைத் தாளிரண்டுஞ் சேதிப்ப... (திருவாசகம்-15, 7) 2. அழித்தலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல். மேலுலகுஞ் சேதித்தீர்... (உபதேசகாண்டம்-சூராதி., 50) 3. "'அவர்களை சேதித்தனர்"" என்பது உறுப்புச் சேதித்தலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல். 
(வெட்டுதல் அழித்தல்)பகைவரை சேதிக்கும் தொழிலே மறவனின் வாளின் வேலை.ஆகவே மறக்குல மலையர்கள் ஆண்ட நாடு சேதிநாடு எனப்பட்டது.இந்த பட்டத்துடன் வந்த சூரிய குல சேரனை சேதியர்(அ)வெட்டுவான்(அ)கத்தியன் என கூறினர். . Katiyars claim descent from Lord Ramaof the Suryavanshi Kshatriya clan.

சேதி நாடன்
சேதியர் கோன்.
சேதிராயன் என்கின்ற பட்டத்தில்,
கிளியூர் மலையமான் அரச கம்பீர சேதிராயன்,
கிளியூர் ராசகம்பீர சேதிராயன் கலியபெருமாள் பெரிய நாயனான சேதிராயன்,
கிளியூர் ராசகம்பீர சேதிநாடன், ராசராச மலையராயன் ஆகிய அருளாளப்பெருமான் ராசராச சேதிராயன்,
கிளியூர் ஆகாரசூர மலையமான்,
ராசேந்திர சோழ மலையகுல ராசன்விக்கிரம சோழ சேதிராயன். இறையூரன் சேதிராயன்.
பெரிய உடையான் கோவலராயன்
கரிகால சோழ ஆடையூர் நாடாழ்வான்
ராசராச சேதிராயன்.

Malaiyaman Nanurruvan Malaiyan alias Rajendrachola­-chedi [ya*]rayan. The donor is referred to in the record as the wife of this chief. She is also mentioned in a record of Kolottunga I’ s successor Vikramachola (No. 422).

கொங்கர் கோன்:

கொங்கர்களை வென்ற சேரர் தலைவன் கொங்கர்க்கோன் என்ற பட்டம் பூண்டனர். கொங்கு-மலர்,கொங்குநாடு-பூவை நாடு...
Kulashekhara Varman ruled around the 8th and 9th centuries. He called himself Kongar Kon (the king of the Kongu people) hailing from Kollinagar (Karur). Though Kongar were defeated by Cheran Senguttuvan in the 2nd century AD, the Kongu region had been occupied by the Kongars of Karnataka Western Ganga Dynasty around 470 AD

கொங்கர்க்கோன் பட்டத்தில் மலையமான் சேரர்:

பூவையன் கோன்
பூவையன் மலையமான் (அ)ஆழ்வனங்கார மலையமான்
கொங்கர் கோன்
கொங்குராயர்
கொங்கராய பாளையத்தார்
(No. 407) and his wife who endowed some land to the same deity, with above mentioned chief who belonged to the Chedi clan is not known. Yet another Maliyaman named Puvan Marudan alias Alvanangara Malaiyaman of Kiliyur in Damar-nadu, a sub-division of Tirumunaippadi, is stated to have made a grant of 1650 kuli of land as tax-free, after purchase from the sabhai of Sirringur, for tiruppali-elichchi of the god Tiruppulippagavadevar of the same place.

மகோதையபுரம் ஆண்டவன்: 

பிற்கால குலசேகர பெருமாள்கள் மகோதையபுரம் என்ற கொடுங்காலூரை தலைநகரமாக கொண்டனர்.இதை ஆண்ட சேரர் மகோத நாடாள்வான் என பெயர் எடுத்தனர். மலையமான்களும் பின்னாளில் மகதநாடு கொண்டவனாக பாடப்பட்டனர்.சேதிநாடு என்பது  மகதநாடு,திருமுனைப்பாடிநாடு,ஜனநாத வளநாடு என்றும் வழங்கப்பட்டது.
மகத நாடாள்வார்
மகத நாடன்
நாடாள்வான்
வில்லவர் கோன்
 வில்லாளன்
என்று புகழப்பட்ட சேரர்களின் பட்டமும் மலையமானிடன் இருந்துள்ளது. 

(A. R. No. 404 of 1909.) Sidhalingamadam, Tirukkoyilur Taluk, South Arcot District Same wall. Parakesarivarman alias Tribh Kulottungacholadeva : Year 3, day [.] : 90=1135-36 A. D. This inscription contains the prasasti of the king, commencing with Pumevuvalar tirupponmadu punara, etc., mentions the queen Buvanamulududaiyal. It records a gift, made by the king and executed by Tribhuvanachakravatti Konerinmaikondan, of 10 veli of land as tax-free devadana in Adarpadi alias [Kama]vanavan-madiripuram in Kudal in Rajaraja-valanadu,......... A certain Villavarrayan( figures as the signatory.

சேரர்களின் மாலைகள்: 
வாகை மற்றும் நொச்சியை சேரர்கள் சூடினர்.

மலையமானுக்கு உரிய மலர் மாலைகள். 
கொன்றை,சண்பகம்,துளவம்,மந்தாரம்,புன்னை,தும்பை,செங்கழுநீர், நொச்சி, வாகை 
ஆகியன நாம் மேற்கோள் காட்டிய ஆதாரத்தில் மலையமான் இனத்தார் கரூரை ஆண்ட உதயன் சேரலாதன் மரபில் வந்தவரான குலசேகர பெருமாள் வழி வந்த கீர்த்தி பெற்ற சேர மரபினர் என தெளிவாகத் தெரிகிறது.

(தொடரும்)

Wednesday, July 17, 2013

சங்க கால சோழ படை தளபதிகளாக அறியப்பட்ட தேவர் இனத்தவர்கள்

  1. பழையன் சோழன் மறவன் (அகம்.326-9 ) இவன் குளமுற்றத் துஞ்சிய கிள்ளிவளவன் காலத்து சோழ படை தளபதி ஆவான்.
 
பிளைய மறவன் என்றும் பிளைய  மாறன் என்றும் அறியப்படும் பழையன் சிங்கள நாட்டை மேலும் 4 படை தளபதிகளோடு சேர்ந்து
வட்டகாமினி இடம் இருந்து கைப்பற்றி ஆண்டான், மேலும் அவன் மனைவி சோம தேவியை சிறை வைத்தனர்.

பழைய மறவன் (கி.மு 91 - 92)
பணய மாற (கி.மு 92 - 99)
பாக்கிய  (கி.மு 99 - 101)
புல அத்த (கி.மு 101 -104) அதற்கு பின்
தாதிக போன்ற  மறவர்களே  ஆட்சி செய்தனர்.



2. சோழன் மருகன் நல்லடி - வல்லங்கிழான்
நல்லடி அரசன் என்னும்  இவன்  "சோழன் மருகன் " என்று குறிப்பிடபடுகின்றான். இவன் ஆரிய படையை வென்றவன் என்று குறிப்பிடபடுகின்றான். தஞ்சை வல்லம் அருகே இவன் வழியினர் இன்றும் வல்லக்கோன், வலங்கண்டார், வல்லுண்டார், வல்லத்தரசு, வல்லத்தரசர், வல்லத்தரையர், வல்லமாண்டார், வல்லாண்டார், வல்லண்டார், வல்லாளதேவர், வல்லாளியார்,
வல்லாடியார், என்ற பட்டங்கள் தரித்து பெருவாரியாக வாழ்கின்றனர்
.
    
ஏனாதி - சேனைத்தலைவர், சேனாதிபதி.
காவிதி - வேளாண் மக்கள் தலைவன்.
எட்டி - வணிகர் தலைவர் பட்டம்.

ஏனாதி, ஏனாதியார், ஏனாதிகொண்டான், ஏனாதியான், ஏனாதிபிரியன்,

3. ஏனாதி திருக்கிள்ளிசோழன்- ( புறம் 167 ),

 ஏனாதி என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் ஏனாதிகொண்டான், ஏனாதியாண்டான், ஏனாதிப்பிரியன், ஏனாதியுடையான், ஏனாதியாளி எனவும் வழங்கும்.சிறந்த வீரமும் கொடையுமுடையவன். ஏனாதிமங்கலம், ஏனங்குடி, ஏனனூர், ஏனாதிகுடி என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன். இச் சோழ மன்னன் கோனாட்டு எறிச்சிலூர் மாடலின்  மதுரைக்குமரனார் என்னும் புலவரால் புகழ்ந்து பாடப்பெற்றவன். இப்பாடல் புறநானூற்றில் 167ம் பாடலாக இடம் பெற்றுள்ளது. இவன் மரபினர் ஏனாதிகொண்டான், எத்தொண்டான், ஏத்தொண்டான், ஏனாதியான், ஏனாதிபிரியன், ஏனாட்டுப்பிரியன், என்னாட்டுப்பிரியன், எத்திரிப்பிரியன், எத்தியபிரியன், எத்திரியப்பிரியன், என்னும் பட்டங்களை பெற்றனர். மேலும் இப்பட்டங்கள் படைத் தலைவர்களுக்கு உரியதாக கருதப்பட்டுள்ளது.சங்க காலத்தில் ஏனாதி பட்டம் என்பது அரசன் தன் படைத்தலைவன் மீது கொண்ட நன்மதிப்பினை உணர்த்த வேண்டி தன் பெயர் பொறித்த கணையாளி ஒன்றை அளிப்பதாகும்.
மேலும் இவன் காலம் சோழன் இலவந்திகை பள்ளி துஞ்சிய நலங்கிள்ளி சேட் சென்னி மற்றும் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் காலமாகவும் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

4. சோழிய ஏனாதி திருக்குட்டுவன் (புறம் 394 ) இப்பாடலில் இவன் நாடு, வலிமை, உருவம், வள்ளல் தன்மை போன்றவை கூறபடுகின்றது. 
சோழன் தமிழனே :

சில பொறம்போங்க்குகள் பாண்டியனை தவிர சோழன் தமிழன் அல்ல என கட்டுரைகள் எழுதி வருகின்றனர். அவர்கள் திராவிட மக்களும் சோழனால் ஆந்திராவில் இருந்து பிடித்துவரப்பட்ட  மக்களாகிய இவர்கள் கூறி வருகின்றனர். பாண்டியனுக்கு செந்தமிழோன் தமிழ் பாண்டியன் என்னும் பெயர் உண்டு ஆனால் சோழனுக்கு உண்டா சோழனின் தெலுங்கு சோழன் உண்டு என சப்பை கட்டு காட்டுகின்றனர். அந்நிய நிறுவனங்கள் வால்மார்ட்,கிசான் போன்ற நிறுவனங்கள் தமிழில் பெயர் வைத்தால் அது தமிழர் ஆயிடுமா. தெலுங்கு சோழன் என்பவர்கள் அப்படி சோழரின் பெயரில் ஆந்திராவை ஆண்ட  அந்த மாநில வேலைக்காரர்களே  ஒழிய அவர்கள் சோழர் கிடையாது சோழரின் கல்வெட்டுகளில் பெரும்பான்மை தமிழில் உள்ளது.

அதிலும் ஒரு கல்வெட்டு செந்தமிழ் பீடு இரட்டைபாடி கொண்ட சோழன் என சோழனை தமிழன் என பாடுகிறது சோழனை கோரும் வேறு மொழி பேசும்   மக்கள் இனி தெலுங்கு என்னும் வார்த்தை அடைமொழியாய் கொண்ட சோழனை காட்டினாள் உண்டு.

தெலுங்கர் குல காலன்  சோழனான தமிழனின்  வரி  இதோ:

"முடி கொண்ட சுந்தர சோழன் என்னும் செந்தமிழ் பீடிகை இரட்டை பாடி கொண்ட சோழனை தொல்புவியுடைய"

5.சங்ககாலத்தில் மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்,
ஆகியோர் ஏனாதிபட்டம் பெற்ற அரசர்களாவார்கள். ஏனாதி சாத்தஞ் சாத்தனார் ஏனாதி பட்டம் பெற்ற புலவராவார். இதன் மூலம் இப் பட்டங்கள் சங்ககாலம் முதல் வழங்கிய பட்டங்கள் என்று அறியமுடிகிறது
.


இவற்றில் இருந்து சங்கம் முதல் சோழன் படை தளபதிகளாகவும்
ஏனாதிபட்டம் பெற்றவர்களாகவும் வழிவழியாக வந்தவர்கள் சோழ மறவர்கள் இன்று தஞ்சை கள்ளர்களாகவும்  பார்க்கவ குல மலையமான்களாகவும் உள்ளனர். 


நன்றி:
செய்தி வழங்கியவர்:
காலிங்கராயர்  தேவர்

பூலித்தேவர் பூழியன்(பூழித்தேவர்) என்ற பாண்டிய மரபினரே




இந்தியாவிலேயே முதன் முதலில் கிழக்கிந்தியக் கம்பெனிப் படையை எதிர்த்துப் போர் செய்தவர் பூலித்தேவன்.வரி வசூலிக்க வந்த அலெக்சாண்டர் கெரான் என்பவனோடு 1755-ம் ஆண்டு பூலித்தேவன் செய்த போரே இந்தியாவில் கம்பெனிப் படையை எதிர்த்த ஒரு இந்தியனின் முதல் போராகும்.

பூலித்தேவர் பற்றிய பூர்வீகம்:

பூலித்தேவர் பற்றிய பூர்வீகம் பற்றிய பல ஆய்வாளர்கள் முன்னுக்கும் பின்னுக்கும் முரனாக பல வரலாற்று ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர்.பூழி நாடு என்பது பாண்டிய நாட்டில் அமைந்த ஒன்று. 1378ஆம் ஆண்டு சேர நாட்டில் இருந்த ஒரு மன்னனால் 'வரகுண ராமன் சிந்தாமணி காத்தப்ப பூழித்தேவர்' என்ற தளபதிக்குத் தானமாக வழங்கப்பட்ட நாடே இந்த பூழிநாடு. ஆரம்ப காலத்தில் இதன் தலைநகரம் ஆவுடையார் புரம். ஆனால் ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளர் ஸ்வெல்ஸ் ஆதாரப்பூர்வமான தனது கூற்றில்
தலைமுறை பெயர் ஆட்சியாண்டுகள்
1 வரகுண சிந்தாமணி பூலித்தேவன் 1378 - 1424
2 வடக்காத்தான் பூலித்தேவன் 1424 - 1458
3 வரகுண சிந்தாமணி வடக்காத்தான் பூலித்தேவன் 1513 -1548
4 சமசதி பூலித்தேவன் 1548 - 1572
5 முதலாம் காத்தப்ப பூலித்தேவன் 1572 - 1600
6 இரண்டாம் காத்தப்ப பூலித்தேவன் 1600 - 1610
7 முதலாம் சித்திரபுத்திரத்தேவன் 1610 - 1638
8 மூன்றாம் காத்தப்ப பூலித்தேவன் 1638 - 1663
9 இரண்டாம் சித்திரபுத்திரத்தேவன் 1663 - 1726
10 நான்காம் காத்தப்ப பூலித்தேவன் 1726 - 1767
"காத்தப்ப பூலிதுரை தேவர்".இவரது முழு அபிஷேக பெயராக "வரகுனராம சிந்தாமனி ஆபத்துகாத்த பூலித்துரைப்பாண்டியன்" என்பது தான்.
இந்த 10-வது பூலித்தேவர் தான் நாம் கொண்டாடும் சுதந்திர முழக்கமிட்ட மாவீரன்.



பூலித்தேவனது முன்னோர்கள் பற்றிய முரனான தகவள்கள்:

புலவர் ந.இராசையா முதல் வடகரையாதிக்கம் நூல் எழுதி செந்தூர்பாண்டியன் முதலாக தெரிவிக்கும் செய்தி இது தான்.பூலித்தேவர் முன்னோர் இராமநாதபுரம் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்றும்.இவர்கள் மூதாதயர்கள் தென்காசிப்பாண்டியனிடம் பாதுகாவலராக பனியாற்றியவர்கள் என்றும் அதன் பின்பு பாண்டியனால் தரப்பட்ட பகுதியான ஆவுடையாபுரம் பாளையத்தை திசைக்காவலராக ஆண்டார்கள் என்றும் கூறுகிறார்கள்.
ஆனால் வெள்ளையரின் ஆதாரப்பூர்வமான குற்றாலம் சிவன் கோயில் கல்வெட்டின் படி பூலித்தேவர்கள் 1374-ல் ஆட்சி அமைக்கபட்டிருந்தது என கூறுகிறார்.சிறிது நாளிலே திசைக்காவலனாக அதுவும் ஒரு முறை ஒரு புலியை வீழ்த்தி மன்னை காப்பாற்றியதால் 'பூலித்தேவர்' என்று பட்டமளித்து திசைக்காவல் வழங்கியதாக கூறும் செய்தி வாய்மொழிக்கதையாகவே உள்ளது.ஆனால் இவர் ஆண்ட பகுதி 'பூழிநாடு'[ஆவுடையாபுரம்(நெற்கட்டான் செவ்வல்) முதலிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி] என்பது இத்தனை வரலாற்று அய்வாளர்கள் கருத்துக்கு ஏன் தெரியவில்லை என்பது கேள்விக்குறியே. No. 483 (Page No 318)
(A. R. No. 460 of 1909.)
Suttamalli, Tirunelveli Taluk, Tirunelveli District Same wall. Tribh Konerimenkondan : Year 7, day [510 ?]
This inscription records a gift of land, 10 ma in extent, as tax-free devadana, made by the king, for worship and offerings in the temple of the god Bagavatisvaramudaiyar of Suttamalli alias Viravinodach-chaturvvedimangalam in Mel-Vemba-nadu. It is stated that the land belonged as jivitam to a certain Srivallava Savanadarayar, an Angavayijya for Rajaraja-Chaturvvedimangalam in Mulli-nadu and that it was taken over from him and was assigned to the temple.
The signatories were Arayan Kuvalayachandiran alias [Puli]yan devan of Koluvanur in Kilkurru in Milalaik-kurram, Araiyan Sri . . . devan alias Vinnadudaiyan of the same place.
ஆனால் சடையவர்ம சுந்தரபாண்டியன்(கோனேரி மேல் கொண்டான்) சுட்டமலை கல்வெட்டில் "அரையன் 'குவாளைய சந்திரன்' என்ற பூழிதேவன் என பூலித்தேவன் முன்னோர்கள் சாட்ச்சி கையொப்பம் இட்டுள்ள ஆதாரமான கல்வெட்டு உள்ளது.
இந்த 'பூழிநாடு' பகுதியே ஆண்டதால் தான் இவர்கள் குடும்பத்தின் பாரம்பர்யமான பட்டம் தான்

'பூழியன்' என்ற பாண்டியர்களின் திருநாமத்தின் பெயர்தான் பூழித்தேவன்

என்ற பெயர்தான் காலப்போக்கில் பூலித்தேவர் என்று மறுவியது என்று ஆதாரப்பூர்வமான் செப்பேட்டில் கூறும் செய்தியை பார்ப்போம்.இவர்தான் பாண்டியரின் நேரடி வழித்தோன்றல்

செப்பேட்டில் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி:

விடுதலைப் போரை முதலில் தொடங்கிய புலித்தேவனைப் பற்றிய அரிய தகவல்களைக் கூறும் செப்பேடு, திருச்செங்கோட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூலித்தேவன் அளித்த கொடைச் செய்தி எழுதப்பட்ட செப்பேடு ஒன்றை, திருச்செங்கோடு நாணயவியல் ஆய்வாளர் விஜயகுமார் கண்டுபிடித்துள்ளார்.அச்செப்பேடு 27 செ.மீட்டர் நீளம், 15 செ.மீட்டர் அகலம் உடையது. ஒரு கிலோ எடையுள்ள அச்செப்பேட்டில், ஒரு பக்கத்தில் மட்டும் 40 வரிகள் எழுதப்பட்டுள்ளன. இந்த செப்பேட்டை ஆய்வு செய்த ஈரோடு கொங்கு ஆய்வு மைய ஆய்வாளர் புலவர் செ.ராசு பின்வரும் தகவல்களைக் கூறினார்.

பூழித்தேவனா? புலித்தேவனா?நிஜப்பெயர் என்ன?

சேரநாட்டின் ஒரு பகுதியான பூழிநாட்டை ஆண்ட பாண்டியனுக்கு உட்பட்டு ஆட்சி புரிந்ததால் பூழித்தேவன் என்ற பெயர், பூலித்தேவன் என அழைக்கப்பட்டது என்றும், அவரது முழுப்பெயர் “காத்தப்ப பூழித்தேவன்’ எனவும் ஆய்வாளர் நா.ராசையா கூறியுள்ளார்.

ஆனால், 1748ம் ஆண்டு எழுதப்பட்ட இச்செப்பேட்டில், “ஆவுடையார்புரம் ஜமீன்தார் ஆபத்துக் காத்தார் பூழித்தேவன்" என்று எழுதப்பட்டுள்ளது.

நெற்கட்டுஞ் செவ்வல்:

கடந்த 1755ம் ஆண்டு வரி வசூலிக்க வந்த “அலெக்சாண்டர் கெரானிடம், ஒரு நெல்மணி கூட வரியாகக் கட்ட மாட்டேன்’ எனக் கூறியதால் ஊர்ப்பெயர், “நெற்கட்டான் செவ்வல்’ என அழைக்கப்பட்டதாகவும், மக்கள் ஆங்கிலேயர்களுக்குப் பயந்து, “நெற்கட்டுஞ் செவ்வல்’ என அழைத்ததாகவும் ராசையா கூறியுள்ளார். ஆனால், 1748ம் ஆண்டு வெட்டப்பட்ட இச்செப்பேட்டில், “கசுப்பா நெற்கட்டுஞ் செவ்வல்’ என்றே எழுதப்பட்டுள்ளது.

செப்பேட்டுச் செய்தி:

தன் முன்னோர் தலைநகரான ஆவுடையார்புரம் தலைநகரை மாற்றி, நெற்கட்டுஞ் செவ்வலில் கோட்டைக் கட்டி அவ்வூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர் புலித்தேவன்.

நெற்கட்டுஞ் செவ்வலில் ராமகோவிந்தப்பேரி என்ற பெயரில் பெரிய குளம் இருந்தது. அக்குளம் உடைந்து சிதைந்து பல ஆண்டுகள் பாசனம் இல்லாமல் இருந்தது.

தலைநகர்ப் பகுதி வளம் பெற அக்குளத்தைப் புதுக்குளமாகக் கட்டிப் பாசனம் செய்து பயிரிட புலித்தேவன் கேட்டுக்கொண்டதனால், நெற்கட்டுஞ் செவ்வலில் உள்ள பிறக்குடையாக் குடும்பன் என்பவர், தன் செலவில் ராமகோவிந்தப்பேரிக் குளத்தைப் புதுக்குளமாக அமைத்தார்.

விப வருடம் ஆடி மாதம் 25ம் நாள் பூழித்தேவன், பிறக்குடையாக் குடும்பனுக்கு மானிய பூமி நன்செய் நிலம் வழங்கியதோடு அவர் நிலங்களுக்குச் சில ஆண்டுகள் வரிச் சலுகையும் அளித்த விவரம் செப்பேட்டில் கூறப்பட்டுள்ளது.

குளம் பராமரிப்பு:

குளத்தில் உள்ள மீன்களைப் பிடிப்பதன் மூலம் வருகின்ற வருவாயிலிருந்து குளம் பராமரிப்பும், தூர் வாருதலும் நடைபெற வேண்டும் என்றும், இவற்றுக்குக் கணக்கெழுதி ஒப்பிக்க வேண்டும் என்றும் செப்பேட்டில் எழுதப்பட்டுள்ளது.

நிலங்கள் அளக்கப்பட்டு அடையாளமாக அவற்றிற்கு எண்கள் இடப்பட்டிருந்தது. 85, 86, 87, 88ம் எண் நிலங்கள் செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளன. நெல் கோட்டை, பாட்டம் என்ற அளவில் குறிக்கப்பட்டுள்ளது.

விதை நெல் விரை என்று கூறப்பட்டுள்ளது. பொதுவாக அக்காலச் செப்பேட்டில் வழக்கமாகப் பயின்று வரும் வடமொழிச் சொற்கள் இன்றித் தனித் தமிழில் செப்பேடு எழுதப்பட்டுள்ளது.

குளம், மடை விருத்திக்குத் தனி மானியமும் விடப்பட்டிருந்தது. புலித்தேவன் “நம்மிட மனோ ராசியில்’ இச்செப்பேட்டை எழுதிக் கொடுத்ததாகக் கூறியுள்ளார்.
மா மன்னர் பூழிதேவரின் முன்னோர்கள் 
பாண்டிய குலத்தவர்களே யெனஆதாரம் கூறும்பாண்டியர்களின் ஆவணமானபாண்டிகோவையில்5.ம்.பாடலில்.
இரும் கழல் வானவன் ஆற்றுக்குடியில்கல் சாய்ந்து அழியப்பெரும் கழல் வீக்கிய பூழியன்மாறன் தென்பூம்பொதியில்.
232.ம்.பாடலில்.ஓதம்கடைந்து அமரர்க்கு அமுதாக்கி உணக்கொடுத்துப் பூதம்பணிகொண்ட பூழியன்மாறன்.
299.ம்.பாடலில்.செருமால் கடற் படை சேரலார் கோன் நறையாற்று அழிய பொருமா சிலை தொட்டபூழியன் மாறன் பொருமுனைபோல்.
மாறன் அகப்பொருள் கூறும் பாண்டிக்கோவையிலிருந்து.1.ம்.பாடலில். யாழ் இயல்மெல் மொழியார்தம்முள்வைத்தெனக்கு எவ்விடத்தும் தோழி என் ஆருயிர் என்பதுகாட்டும்செறிபொழில் சூழ்கோழியும் வானவன் வஞ்சியும் கொண்டவன்வண்டு அறைதார்ப் பூழியன்மாறன் 
புகார் அனையாள் படைப்போர்விழியே.3.ம். பாடலில்.பொன்னம் கனை கழல் பூழியன் போர் மலைந்த தென்னன் பொதியில் செழம் புனம் காக்கும்.











பூலித்தேவர் பற்றிய பல ஆச்சர்யமான தகவல்கள்:
பூலி தேவர் வம்சம் குடும்பர்களுக்கு வழங்கிய கல்வெட்டு

பூலித்தேவர்தான் தென்பாளையப்பட்டுகளின் படைகளின் தலைவராக இருந்துள்ளார்.இவரது சொல்வருதிக்கே மேற்கு நாட்டின் மறவர் பாளையங்களும் திருநெல்வேலியின் இதர பாளையங்களும் இருந்துள்ளது. திருநெல்வேலி சரித்திரம் எழுதிய கால்டுவெல் பாளையக்காரர்கள் அனைவரும் மதிக்கும் மிக மரியாதைக்குரியவராகவும் சர்வதிகாரம் பெற்ற சுதேச தலைவராக இருந்துள்ளார் எனவும் கூறுகிறார்.இன்றை பல வரலாற்று ஆய்வாளர்கள் தெண்காசியின் ஆளுமை பாண்டிய மன்னனுக்கு பிறகு பூலித்தேவர்களிடமே இருந்து வந்தது என கூறுகின்றனர்.இத்தனையும் கூறும் ஆய்வாளர்கள் பூலித்தேவர் என்பது "பூழியன்" என்ற பூழித்தேவர் என்ற பாண்டியரின் கிளை வழியினர் என்பதும் பாண்டியர்களின் வழித்தோன்றல் என கூற மறுப்பது ஏனோ? பூழியன் என்பது பாண்டியரின் வழித்தோன்றல்களான பாண்டியர்களேயாகும்.

கவுரியன்:

இதுவும் பாண்டியனின் திருநாமங்களில் ஒன்றுதான்.இவர்களை கவுரியர் என்று கூறுவர்.அதுவும் கவுரி சீவல்லப பாண்டியன் சடையவர்ம பாண்டியனுக்கு பின் ஆண்டுள்ளனர்.
சிவகங்கை அரசர் "கவுரி வல்லபர்" என்றும் "பாண்டிய மண்டல ஸ்தாபனாசிரியன்" என்ற பட்டம் பெற்றவர் தம்மை சந்திர வம்சம் என கூறுகிறார்.
சசிவர்ணத்தேவர் முதல் வெள்ளையர் ஆட்சிவரை சிவகங்கை ஆண்டவர்களின் பட்டியல் பின்வருமாறு, 1. 1728 - 1749 - முத்து வீஜயரகுநாதகெளரி வல்லப உ. சசிவர்ணத்தேவர்
2. 1749 - 1772 - சசிவர்ண விஜயரகுநாத கெளரி வல்லப முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர்
3. 1780 - 1783 - கெளரி வல்லப வீரமங்கை ராணி வேலு நாச்சியார் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர்
4. 1841 - 1848 - கெளரி வல்லப உடையணத்தேவர்
5. 1801 - 1829 - கெளரி வல்லப உடையணத்தேவர் மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையணத்தேவரின் உடன் பங்காளி ராணி வேலு நாச்சியாரின் தத்து மைந்தன்
6. 1829 - 1831 - கெளரி வல்லப உ.முத்துவடுகநாதத்வேர்
7. 1831 - 1841 - கெளரி வல்லப மு. போதகுருசாமித்தேவர்
8. 1841 - 1848 - கெளரி வல்லப போ. உடையணத்தேவர்
9. 1848 - 1863 -கெளரி வல்லப மு.போதகுருசாமித்தேவர்
10. 1863 - 1877 - ராணி காதம நாச்சியார் போதகுருசாமி
11. 1877 - கெளரி வல்லபமுத்துவடுகநாதத்தேவர்
12. 1878 - 1883 - கெளரி வல்லப துரைசிங்கராஜா
13. 1883 - 1898 - கெளரி வல்லப து. உடையணராஜா
எனவே கவுரியர் என்ற பட்டத்துக்கு ஏற்ப சிவங்கங்கை ஆண்ட மன்னரும் பாண்டிய வழித்தோன்றல்கள் தான்.

மாறன்:

இதுவும் பாண்டியனின் திருநாமங்களில் ஒன்றுதான்.
(இலங்கையில் உள்ள நெடுந்தீவு மறவர்களின் திருநாமங்களில்)
இவர்களுக்கு வழங்கியுள்ள பழங்கால நாமங்களைக் கொண்டும் ருசுப்படுத்தலாம். வல்லைத் தேவன், வலங்கை மறான், புலிமாறன், விலங்குத் தேவன், கோரமாறன், கொம்புத்தேவன், நீலமாறன் முதலாம் பெயர்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. தேவன் மாறன் என்ற நாமங்கள் மறவருக்கு உரித்தான பெயர்களாகும். இன்னும் இவர்கள் கத்தோலிக்கரான பின் ஞானஸ்நானப் பெயரோடும் இவர்களின் குலப்பெயர்கள் இணைக்கப்பட்டிருப்பதை ஞானஸ்நானப் பதிவு நூலில் பரக்கக் காணலாம். விலங்குப் பாவுலு (இவர் விலங்குத் தேவன் சந்ததி) கொம்பன் அந்தோனி (இவர் கொம்புத் தேவன் சந்ததி) நீலன் குருசான் (இவர் நீலமாறன் சந்ததி) இவ்வண்ணம் எத்தனையோ பெயர்களுண்டு. இன்னும் இக் குலத்தவர்கள் வணங்கிய சூலியம்மாள் என்னும் தேவதையின் பெயரைக் கொண்டும் ஒரு பெண்மணிக்கு சூலாயி ஆனாள் என்ற பெயரும் ஞானஸ்நான டாப்பில் இருப்பதையும் அறியலாம்.

விடுதலைப் போரை முதலில் தொடங்கிய புலித்தேவனைப் பற்றிய அரிய தகவல்களைக் கூறும் இச்செப்பேடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வாறு புலவர் ராசு கூறினார். தினமலர், ஜூலை 12, 2008.
இரா. மணிகண்டன் (மே 2011). "சிவகங்கைச் சிங்கம் முத்துவடுகநாதர்". குங்குமம் .
. யாழ்ப்பாண சரித்திரம்(1933)- முதலியார் செ.இராசநாயகம
ஈழநாடு, யாழ்ப்பாணம் - 05.03.1986 அன்று வெளியான இதழ