Thursday, June 27, 2013

பார்க்கவ குல மக்கள்.மலாடர்=மலையர்=சேதியர்.

பார்க்கவ குல மக்கள் வேளாண்மையில் ஈடுபடுவதால் வெள்ளாளர் போன்ற ஒரு ஜாதியாக பொதுவான அறியாமையால் கருதப்படுகின்றனர்.ஆனாலும் உண்மையில் மலையர்,மலாடர்,சேதியர் என்ற சத்திரிய சமூகமான இவர்கள் எவ்வாறு எப்போது நில உடைமையாளர்களாக வேளாண்மைத் தொழிலில் இறங்கினர் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கொடுத்த விளக்கம் .....


      LITERATURE CASTE AND SOCIETY.(REFERENCE BOOK)

TAMIL SOCIETY AND THE MILITARY IN THE AGE OF THE MEDIEVAL CHOLAS.

                                              WARFARE AND SOLDIERS.

Noboru karashima examined seven inscriptions from uttathur which belongs to the periods of the RAJARAJA 3rd.

These inscriptions all recorded within three years of the reign of RAJARAJA3rd show land transaction (selling and buying) by several suruthimans fellows in the Thiruchchirapalli district.
The suruthimans seem to be closely related to the palli, vanniya or agambadiyar castes and claimed kshathriya origin.

we find the earliest reference of the surutiman community in an inscription dated 1015 AD where a suruthiman lays down his life as a vanguard soldier in the battle of katakkam.
Another suruthiman referred to in 1141AD as a member of the urattur nadu and as landholding was an important qualification for being a nattar,we can presume that this person was a kani-holder.in the next one referred to in 1150AD we find the person mentioned as a land holder(UDAIYAN) Natalvan.
so here we find an erstwhile non-peasant martial community slowly transforming itself and becoming substantial landlords in the lower cauvery basin in the thirteenth century.

சேர வம்சத்தின் மலையர் மழவர் வம்சத்தைச் சேர்ந்த மக்களான இவர்கள்...

"கள்ளர் மறவர் கனத்ததோர் அகமுடையர் மெல்ல மெல்லவே வந்து வெள்ளாளர் ஆனாரே"

என்ற பழமொழிக்கு ஏற்ப மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆயினர். அதாவது பனிரெண்டாம் நூற்றாண்டு காலத்தில் நில உடைமை சமூகமாகி உடையார்,நாட்டார்,நாடாள்வார்,
கிழார்(மூப்பனார்),வேளாளர் என்ற அந்தஸ்துகளில் இருந்து கால மாற்றத்தின் போது உண்டாகும் பல்வேறு அரசியல் காரணங்களால் பதினெட்டாம் நூற்றாண்டு முதலாய் பார்க்கவ குலத்தாரில் பலரும் முழுமையான விவசாயிகளாக மாறினார்கள்.

ஆனாலும் என்றைக்கும் தம்மை வெள்ளாளர் என்று கூறிக் கொண்டதும் கிடையாது. வெள்ளாளர்களோடு மண உறவு கொண்டதும் கிடையாது.
சித்திர மேழி பெரியநாட்டார் என்ற அமைப்பில் நாட்டார் பதவியில் இருந்த இவர்கள் வெள்ளாளர்களில் இருந்து தம்மை வேறுபடுத்திக்காட்டவே பதினைந்தாம் நூற்றாண்டிலேயே தம்மை பார்க்கவ குல சத்திரியர் என்று அழைத்துக் கொண்டனர்.
ஏனெனில் மன்னராட்சிக் காலந்தொட்டே வெள்ளாளரிடம் வரிவசூல் செய்யும் கடமை கொண்ட பண்டாரத்தார், பண்டரையர்,பாளையத்தார் போன்ற பதவிகளைக் கொண்டவர்கள் பார்க்கவ குல சமூகத்தவர்.பார்க்கவ வம்சத்து மலையமான் மக்கள் அனைவரும் மழவர்,மலையர் மலாடர் என்று வழங்கப்படும் ஒரு மரபைச் சேர்ந்தவர்கள்.சேதியர் என்றும் பொதுப் பெயரால் அழைக்கப்படுபவர்கள்.
எட்கர் தர்ஸ்டன் பார்க்கவர்களைப் பற்றிய குறிப்புகளில் சேர மறவர்கள் என்கிறார்.இது மழவர்களை நேரடியாக சுட்டுகிறது. .Tradition traces the descent of the three castes from a certain Deva Raja, a Chera king, who had
three wives, by each of whom he had a son, and these
were the ancestors of the three castes. There are other
stories, but all agree in ascribing the origin of the castes
to a single progenitor of the Chera dynasty.
 It seems
probable that they are descendants of the Vedar soldiers
of the Kongu country,
 who were induced to settle in the
eastern districts of the Chera kingdom.

மேலும் வன்னியரான சதாசிவ பண்டாரத்தார் கூட அதியர் மரபையும், மழவராயர் மரபையும் மலாடு நாடு (பார்க்கவ குலம்)மலையர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறார்.
மேலும் போரின் போது ஆநிரைகளை கவர்தல் என்பது மலாடர்களின் முக்கிய தொழிலாக இருந்துள்ளது.
தஞ்சைக்கள்ளர்,மறவர் ஆகியோர் பார்க்கவ குலத்தாருக்கு உடன் பிறப்பு போன்றோரே.
பார்க்கவ குல மக்களின் முன்னோர் என்பவர்கள் தமிழ் நாட்டின் சிறந்த போர்க்குடியான சேதியர்களே.
சேதியன் எனில் வெட்டுபவன்,அழிப்பவன்=மறவன் எனப்பொருள் வரும்.
(சேதித்தல் என்பது வெட்டுதலை,அழித்தலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.)

எடுத்துக்காட்டு..
தாதை தனைத் தாளிரண்டுஞ் சேதிப்ப... (திருவாசகம்-15, 7) 2. அழித்தலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல். மேலுலகுஞ் சேதித்தீர்... (உபதேசகாண்டம்-சூராதி., 50) 3. "'அவர்களை சேதித்தனர்"" என்பது உறுப்புச் சேதித்தலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.

(வெட்டுதல் அழித்தல்)பகைவரை சேதிக்கும் தொழிலே மறவனின் வாளின் வேலை.ஆகவே மறக்குல மலையர்கள் சேதியர்களாக ஆண்ட நாடு சேதிநாடு எனப்பட்டது.
சேதியன் என்ற கத்தி கொண்ட மறவர்களே பார்க்கவ குலத்தில் சுருதிமான் (மூப்பனார்=கிழார்) பட்டம் கொண்டு கத்திரியர் என்ற கத்திக்காரர்கள், சவளக்காரர்கள் என்று போர்க்கருவிகளின் பெயரினையே பட்டப்பெயராகக் கொண்டு இன்றைக்கும் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களில் சவளக்காரர் என்போரில் சிலர் மட்டும் கால ஓட்டத்தில் ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக வேறு சில இனக்குழுக்களில் குறிப்பாக மீனவரோடும்,அண்ணாவி என்ற ஏதோ ஒரு தெலுங்கு சாதியினரோடும் கலந்து விட்டாலும்,இன்றைக்கும் தன் இன மரபு மாறாமல் பார்க்கவ குலத்தில் சுருதிமான்(மூப்பனார்) பட்டம் கொண்டு நெல்லைச்சீமையில் சில சவளக்காரர்கள் மட்டுமே பார்க்கவ குல மூப்பனார் என்று தனித்து விளங்குகின்றனர்.இவர்கள் எல்லாம் மலையமான் வழிவந்த சேதியர் என்பது அவர்களுக்கே தெரியாது.
ஆனாலும் தம் முன்னோர்கள் சவளம் என்னும் வளையும் கத்தி பிடித்து போர் செய்தவர்கள்,பாரி மன்னரின் பார்க்கவ குல வம்சம் என்று மட்டுமே இன்றைக்கும் மறவாமல் கூறுவார்கள்.

சேதியர்களாய் பாண்டிய நாடு சென்று கத்திக்காரர்களும், சவளக்காரர்களுமாக போர்களின் போதெல்லாம் முன்னணி சிப்பாய்களாக பணியாற்றியவர்கள்.முன்னணிப் படையினர் என்பவர்களே வாளும்,கத்தியும்,வேல் என்ற ஈட்டியும் கொண்டு போரின் போது முதல் வரிசையில் களம் இறங்குபவர்கள்.படைக்கு முன் வரிசைத் தலைவன் என்ற பொருளில்
 HEAD MAN மூப்பனார் என்று இருந்து, பின்னாளில் விவசாயத்திற்கு திரும்பிய குழுக்களான சேதியர்கள் இவர்களே.(அநேகமாக ஆயிரம் ஆண்டுக்கு முன்னர் வன்னியர் என வழங்கப்பட்டவர்களும் இவர்களே)

இன்றைக்கும் பாரியின் வம்சம் நாங்கள் என்று மட்டுமே மார் தட்டிச் சொல்லத் தெரிந்த மழவர்,சேதியர் இனமான பார்க்கவ குலத்தோரே நீங்கள் வேள் பாரி மட்டுமல்லாது மலையமான்கள்,அதியமான்கள் என்ற வேளிர்களின் குலத்தில் வந்தவர்கள்.
நீங்கள் அனைவரும் மலாடர்,மலையர்,சேதியர் என்றழைக்கப்படும் மறக்குலத்தை சேர்ந்தவர்கள்.
கத்திரியர்,கத்திக்காரர்,சவளக்காரர் என்று வாள் பிடித்து போரிட்ட சத்திரிய குல சேதியர் சமூகம் நீங்கள்.
பார்க்கவ குலத்தோரே இவ்வாறு ஆண்ட வரலாறு கூறுவது உங்களை சிறப்பாக உயர்த்திக் காட்ட வேண்டி மட்டுமல்ல.

ஈகையும்,வீரமும் சமதர்ம நோக்கமும்,நல்லொழுக்கங்களும் நமது வேளிர் குலச் சிறப்பு என்பதையும் அதனை எல்லாம் பின்பற்ற வேண்டிய கடமையையும் உங்களுக்கு உண்டென்பதை உணர்ந்த வேண்டியும் தான் நம்மவர்களாலேயே தற்பெருமை கூடாது என்று கருதி சொல்லாமல் விடப்பட்ட நம் குல வரலாற்று உண்மைகள் இன்றைக்கு பொதுவில் உங்களுக்காக வெளிப்படுத்தப் படுகின்றது.

நன்றி:
செய்தி வழங்கியவர்:
சேரமான் பெருமாள்

Wednesday, June 26, 2013

ஈழ மறவர் தாலாட்டு


முற்காலத்தில் ஈழத்தில் மறவர்கள் நெடுந்தீவூ பகுதியில் குடியிருந்தனர். இக்குலத்தவர்களுக்கு ஒரு பிள்ளை பிறந்து விட்டால் அதிலும் ஆண் குழவி வந்தால் பிள்ளை பிறந்த முப்பத்தொராம் நாளை வெகு சிறப்பொடு கொண்டாடுவார்கள். உற்றார் உறவோர் நண்பர் முதலானோருக்குத் திருமுகம் போக்கி யாவரும் வரவழைக்கப்பட்டு அக் கொண்டாட்டம் நடைபெறும். இவ் வைபவத்தின் போது நடுவீட்டில் இதற்கென சாணத்தால் மெழுகிடப்பட்ட இடத்தில் மஞ்சள் மாவினால் ஒருசிங்க உருவம் கீறுப்பட்டிருக்கும். அதன்மேல் வயதுமுதிர்ந்த மூதாட்டி ஒருத்தி பிறந்த சிசுவை மடியில் வைத்துக்கொண்டு ஒரு பாடல் படிப்பாள். அப்பாட்டில் குறிப்பிடும் சாமான்களெல்லாம் பிள்ளைக்கு அன்பளிப்பாக இனசனங்கள் கொண்டுவந்து வைப்பார்கள். அப்பாடல் வருமாறு:


“சோழநாடு கண்டு வந்தீரோ தம்பி
சோழப் பொரி கொண்டு வந்தீரோ தம்பி
சேரநாடு கண்டு வந்தீரோ தம்பி
செந்நெல் பொரி கொண்டு வந்தீரோ தம்பி
பாண்டிநாடு கண்டு வந்தீரோ தம்பி
பச்சை முத்துக்கொண்டு வந்தீரோ தம்பி
சென்னை நாடு கண்டு வந்தீரோ தம்பி
சீரகம் கொண்டு நீ வந்தீரோ தம்பி
மதுரைநாடு கண்ட வந்தீரோ தம்பி
மஞ்சள்பொடி கொண்டு வந்தீரோ தம்பி
கொங்குநாடு கண்டு வந்தீரோ தம்பி
கொத்தமல்லி கொண்டு வந்தீரோ தம்பி”


இவ்வண்ணம் ஒவ்வொரு நாட்டையும் சரக்குகளையும் சொல்லி முடித்த பின்.

“அப்பாவைப் பார்த்திடவந்தீரோ தம்பி
ஆனைக்குட்டி வாங்கவந்தீரோ தம்பி
ஆச்சியைப் பார்த்திட வந்தீரோ தம்பி
ஆட்டுக்குட்டி வாங்க வந்தீரோ தம்பி
மாமனைப் பார்த்திட வந்தீரோ தம்பி
மான்குட்டி வாங்கிட வந்தீரோதம்பி
அத்தையைப் பார்த்திட வந்தீரோ தம்பி
அன்னக்குஞ்சு வாங்க வந்தீரோ தம்பி
பாட்டனைப் பார்த்திட வந்தீரோ தம்பி
பசுக்கன்று வாங்கிட வந்தீரோ தம்பி
பாட்டியைப் பார்த்திட வந்தீரோ தம்பி
பால் மோர் குடித்திடவந்தீரோ தம்பி”


இப்பாடலைப்பாடும்போது பெற்றார், பேரர்கள், மாமன்மார்கள் முதலானோர்கள் ஆட்டுக்குட்டி, பசுக்கன்று, கோழிக்குஞ்சுகளையும் மாமன், அத்தை முதலானோர் ஆனை, குதிரை, மான் முதலியவைகளை வெள்ளித் தகட்டிலும், செம்பத்தகட்டிலும், சில பணம் படைத்தவர்கள் தங்கம் பொன்னிலும் செய்து அன்பளிப்புச் செய்வர். இவைகள் முடிந்ததும் வயது முதிர்ந்த பெரியவரொருவர் பிள்ளையைத் தூக்கி மடியில்வைப்பர். அப்போது மறவ வாலிபர்கள் மறாட்டியமும்@ சிலம்பும் அடிப்பர் (மறாட்டியம் என்பது ஒரு முளத்தடிகொண்டடிக்கும் கோலாட்டம்) இவர்கள் கோலாட்டம் அடிக்கும்போது, பிள்ளையை வைத்திருக்கும் பெரியவர் கீழ்வரும் பாடலைப்பாடுவர்.

“ஆனைமுது கேறிவந்தீரோ தம்பி
அரசைப் பிடித்திடவந்தீரோ தம்பி
குதிரை முதுகேறி வந்தீரோ தம்பி
கொடியை உயர்த்திட வந்தீரோ தம்பி
தேரினிலேறி நீ வந்தீரோ தம்பி
தேசம் பிடித்திட வந்தீரோ தம்பி
வேலைச் சுழற்றி நீ வந்தீரோ தம்பி
வெற்றியெடுத்திட வந்தீரோ தம்பி
வாளைச் சுழற்றி நீ வந்தீரோ தம்பி
வடநாடு வென்றிட வந்தீரோ தம்பி
ஈட்டி சுழற்றி நீ வந்தீரோ தம்பி
ஈழம் பிடித்திட வந்தீரோ தம்பி
படைகள் திரட்டி நீ வந்தீரோ தம்பி
பகைவனை வென்றிட வந்தீரோ தம்பி”

இப்பாடலில் மறவர்களின் வீரமும், அவர்கள் பணி யாற்றும் படைகளின் வரிசையும், பாவிக்கும் ஆயுதநாமங்களும் நாடு பிடிக்கும் திறனும் தொனிக்கிறது. அன்றியும் சிங்கரூபம் கீறி பிள்ளையை வளர்த்திவைத்திருப்பதின் காரணம் இவர்களின் குலதெய்வமான துர்க்கையின் சிங்கவாகனத்தை நினைப்பூட்டுதற்கென எண்ண இடமுண்டு

மறவருக்கமைந்த வடிவத்தைப் “பண்டைத் தமிழர் பண்பாடு” என்னும் நூலில் கூறப்பட்டதைப்போல், “கல்லெனத்திரண்டதோளர், கட்டமைந்த மேனியர், முறுக்கு மீசையர், தருக்குமொழியினர், வீறிய நடையினர், சீறிய விழியினர், முதலாம் அம்சங்கள் இவர்களுக் கிருப்பதையும் பரக்கக்காணலாம்.

மறவர் குலத்தவர்களில் ஒரு பகுதினரான கருங்கை மறவர் போரில்லாக் காலங்களில் காடுகளில் சென்று புலிகளை வேட்டையாடி அப்புலிகளின் பற்களை எடுத்துவந்து தம் மாதர்களுக்கு மாலையாகக் கோர்த்துக் கழுத்தில் அணிவதற்குப் பரிசாகக் கொடுப்பர்.
புலியாட்டம் என்பது விளையாட்டுக்களில் இடம் பெறும் ஒரு வகை விளையாட்டு. ஒருவர் புலிபோல் சோடித்துக் கொண்டு மணமக்களுக்கு முன்னால் பாய்ந்து, பாய்ந்து விளையாடிக்கொண்டு வருவார். இவ்வழக்கம் இவர்கள் மத்தியில் மாத்திரம் இருந்ததாக அறிகிறோம். திருவிழாகளிலும் இவர்கள் சந்தோஷத்திற்காகவும் சென்று புலியாட்டம் ஆடுவது வழக்கம். புலிப்பல்தாலி, புலிசகமாலை முதலியனயாவும் இக்குலத்தவர்களின் உரிமைச் சொத்தாகத் தெரிகிறது

“மறங்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற மாலை வெண்பல் தாலி” என ஒரு பழங்காலக் கவிதை இதன் உண்மையை எடுத்தோதுகிறது.

நெடுந்தீவில் வாழ்ந்த இக்குலத்தவர்களும் சங்கு மணிகளாலும், பொன்னாலும் அணிகலன்களைத் தேடாது, புலிப்பல், புலிநகம் முதலானவைகளையே சிறு நூல்களில் கோர்த்துக் கழுத்தில்கட்டியும், பன்றி முள்ளுகளைக் கொண்டையில் செருகியுமுள்ளார்க ளெனப் பரம்பரைக் கதைகளுமுண்டு.

மணவீடுகளில் புதுமாப்பிள்ளையும், புதுப்பெண்ணையும் வியந்து கூறிப் பெண்கள் வாழ்த்துக்கள் படிப்பது தமிழர் வழக்கம். இவ்வழக்கம் இவர்களுள்ளும் இருந்து வந்தது. ஒரு பெண் மாப்பிள்ளையை வியந்து கூறிப்படிக்கும் பாடலில் ஒன்றைக் கீழே தருகிறேன்.

ஆனைகளைக் கட்டுதற்கோ - பெண்கொடுத்த
ஆலமரம் போதாது


குதிரைகளைக் கட்டுதற்கோ - பெண்கொடுத்த
கொல்லைகளம் போதாது


சிங்கங்களைக் கட்டுதற்கோ - பெண்கொடுத்த
சிறுதோட்டம் போதாது


வேங்கைகளைக் கட்டுதற்கோ - பெண்கொடுத்த
வெளிநிலங்கள் போதாது


வேல் சொருகி வைப்பதற்கோ - பெண்கொடுத்த
வீட்டுவளை போதாது


அம்புவில்லு வைப்பதற்கோ - பெண்கொடுத்த
அரண்மனையோ போதாது


போதாது போதாது - பெண்கொடுத்த சீதனங்கள் போதாது.

இவ்வாழ்த்துப்பா மூலம் இவர்கள் மறவர் குலத்தவர்களென்பதும், புலிவேட்டையாடு வர்களென்பது தெரிகிறது.

அன்றியும் அக்காலம் இக்குலத்தவர்களின் மணக்கோல ஊர்வலங்களில் மணமுரசோடு, கோலாட்டம், மறாட்டியம், புலியாட்டம் முதலாம் விளையாட்டுக்களும் இடம் பெறும். ஒருவர் புலிபோல் சோடித்துக் கொண்டு மணமக்களுக்கு முன்னால் பாய்ந்து, பாய்ந்து விளையாடிக்கொண்டு வருவார். இவ்வழக்கம் இவர்கள் மத்தியில் மாத்திரம் இருந்ததாக அறிகிறோம். வேறுசாதியாரின் மண்வீடுகளிலும் இவர்கள் சந்தோஷத்திற்காகவும் சென்று புலியாட்டம் ஆடுவது வழக்கம். புலிப்பல்தாலி, புலிசகமாலை முதலியனயாவும் இக்குலத்தவர்களின் உரிமைச் சொத்தாகத் தெரிகிறது.

வல்லம்பர் நாட்டார்

வல்லம்பர் நாட்டார்

எங்கள் பக்க கிராமங்களில் (சிவகங்கை,புதுக்கோட்டை,இராமநாதபுர மாவட்ட கிராமங்கள்)
வல்லம்பர் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி 'பாலையநாடு' என்றும்
கள்ளர் சமூகம் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமங்கள் 'கள்ள நாடு' என்றும்,
மறவர் சமூகம் வசிக்கும் கிராமப்பகுதிகளை 'மறவர் சீமை' என்றும் பிரிவுகள் உண்டு.
இதில் எங்கள் வல்லம்பர் சமூக மக்களில் மேலின வல்லம்பர், கீழின வல்லம்பர் என்ற இரு பிரிவுகள் உண்டு. இதன் பொருள் மேற்கத்திய கிராம மக்கள்,கிழக்கத்திய கிராமமக்கள் என்பது.எங்கள் மேலின வல்லம்பர் மக்கள் வாழும் பதினாறு கிராமங்களை பாலைய நாடு என்கின்றனர்.நாங்கள் கொள்ளக்,கொடுக்க என்று எல்லா உறவுகளையும் இந்தப் பதினாறு ஊர்களுக்குள் தான் வைத்துக்கொள்வோம். இந்தப் பதினாறு ஊர் மக்களும் உலகின் எல்லா இடங்களிலும் பல்கிப் பெருகி உள்ளனர்.இப்போது சில ஆண்டுகளுக்கு முன் கீழின,மேலின மக்கள் ஒன்று கூடி உறவுகளை வளர்த்துக்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

           எங்கள் கிராமங்களில் நகரத்தார் மக்களின் கொடையால் தடுக்கி விழுந்த இடமெல்லாம் மேல்,உயர் நிலைப்பள்ளிகள்,மகளீர்,இருபாலரும் படிக்கும் கல்லூரிகள். அதனால் 1950க்குப் பிறகு எங்கள் ஊரில் படித்த மக்கள் அதிகம்.எங்களின் பதினாறு கிராமங்களில் நான் பிறந்த ஊர் பாலையூர் - கண்டனூர்.(நடுவண் அமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்களின் ஊர்) இந்த ஊரில் ஒரு வருடம் விளையும். ஒரு வருடம் விளையாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிழைப்புத் தேடி எங்கள் மக்களும் புலம் பெயரத்தொடங்கினர்.புலம் பெயர்ந்தவர்களுக்கு அவர்கள் கற்ற கல்வி கைகொடுத்தது.நகரத்தார் மக்களுடன் எங்கள் மக்களும் அவர்களோடு உதவியாளர்களாக,கணக்குப்பிள்ளைகளாக அன்னிய தேசங்களுக்கு பொருளீட்டச் சென்றனர்.ஊரில் எஞ்சியிருந்த மக்கள் விவசாயம்,ஆடுகள்,மாடுகள்,கோழிகள் வளர்ப்பில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.இத்தோடு குழந்தைகளைப் பள்ளியனுப்பி படிக்கவைத்துள்ளனர்.வீடு,தோட்டம்,வயல்,கட்டுத்தறி தான் எங்கள் பெண்களின் உலகம்.மாலை நேரம் திரைப்படம்.திரையரங்கம் முன் கூடும் கூட்டம், அதை நம்பி தேநீர்,உணவு விடுதிகள்,பத்திரிக்கை,வார,மாத இதழ்கள்,நாவல்கள்,திரைப்படப்பாடல் புத்தகங்கள் விற்பனை செய்யும் ஒரு புத்தகக்கடை இப்படி ஊரே களையாக இருக்கும். நாங்களும் பிழைப்பிற்காக வேற்று ஊரில் இருந்து, அவ்வப்போது வயல் வேலைக்காகவும்,திருவிழா,உறவுகளில் திருமணங்கள் இப்படி வந்து போவதுண்டு.அப்போதெல்லாம் எங்களைக்கவரும் விசயங்கள் மூன்று.1.கண்மாய்,2.வயல்,3.திரையரங்கம்.நாங்கள் இருந்த ஊரில் திரையரங்கம் இருந்தாலும் கட்டுப்பாடு அதிகம். சொந்த ஊரில் சொந்தங்களின் சலுகை. இப்படி எங்களின் குழந்தைப்பருவ சொர்க்கம்.எல்லா சமூக மக்களும் குறிப்பறிந்து உதவி,இயைந்து வாழ்ந்தார்கள்.

  காலம் மாறியது.மாற்றங்களுக்கு எங்கள் கிராமங்களும் விதிவிலக்கல்ல.எங்கள் ஊரில் எல்லா சமூகத்திலும் கற்றவர்கள் அதிகமாகி,பணப்புழக்கம் அதிகமாகி வாழ்க்கை வசதிகள் பெருகின.தோட்டங்கள் தரிசாகிப் போயின. பசுக்கள் நிறைந்தன.கண்மாய் மழைக்காலத்திலும் நிறையாது போனது. காரணம் கண்மாய்க்கு நீர் வரத்து குறைந்தது.காடு,மேடுகள் மனைகளாகிய காரணம்.கண்மாயில் நீர் குறைந்ததால் ஊரில் இரு சமூக மக்களின் வேறுபாடுகளால் வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு.மற்ற சமூக மக்களுக்கு யார் பக்கம் சேருவது என்ற குழப்பம்.இப்படி வயல் வரப்புகளும் தரிசாகி கருவேலமரம் மண்டி முள் காடாய்க் கிடக்கிறது.பசுக்களுக்கு வைக்கோல்,புல் கிடைக்காது கட்டுத்தறிகளும் வெறுமையாயின. இந்த வெறுமைகளை நிரப்ப தொலைக்காட்சிப் பெட்டிகள் வீட்டுக்கு வீடு வருகை தந்தன.திரையரங்கம் நஷ்டத்தில் ஓடுகிறது என்று அதன் உரிமையாளர் அதையும் இழுத்து மூட அதை நம்பியிருந்த உணவகம்,புத்தகக்கடைகளும் தன் கதவுகளை அடைக்க நம்மைப்போல் வெளியூரில் இருந்து சொந்த ஊர் திரும்பும் மக்களுக்கு வெறுமையான ஊரைப்பார்த்து துக்கத்தில் தொண்டை அடைக்கிறது.கூடிக்களித்திருந்த,உறவுகளாய் இருந்த எல்லா சமூக மக்களும் பழைய இணக்கமில்லாது அவரவர் வேலை அவரவர்க்கு.

              இந்த வேறுபாடுகளைக் களைய, எங்கள் ஊர் மறுபடி பசுமை பெற எந்த அவதாரத்தை இறைவன் அனுப்புவாரோ? காத்திருக்கிறோம்.

நன்றி:மாயன் தேவர்

ஞான சேதிராயர்-உடையார் வம்சம்

வட தமிழகத்தில் மன்னர் ஆட்சி முடிவுற்ற வேளையில் ஊர்க்காவலையும்,போரையும்தவிர வேறு தொழில் அறியாத காரணத்தால்,அப்போது  மன்னராட்சி நடை பெற்ற திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு  பார்கவ குல சுருதிமான்களான உடையார் குல மூப்பனார்கள் கத்திக்கார படைவீரர்களாக(கத்திரியர்கள்) அகமுடையாராக பணி புரிய சென்றனர்.அவ்வாறு சென்ற பார்கவ குல சுருதிமான்களின் வாரிசுகள் இன்றைக்கும் திருநெல்வேலி,கன்னியாகுமரி,ராம்நாடு,மதுரை போன்ற பகுதிகளில் வாழ்கின்றனர்.அவர்களை இன்றைக்கும் அவ்விடங்களில் கத்திக்கார மூப்பனார்கள் என்று பட்டமிட்டு அழைக்கப்படுவதைக்காணலாம்.மூப்பனார்கள் பதினாறாம் நூற்றாண்டு வரை சோழ நாட்டின் அகமுடைய மறவர்களாக,தளபதிகளாக,குறுநில மன்னர்களாக இருந்துள்ளார்கள் என்பதை சுருதிமான்களைப்பற்றிய கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம்.அரைய தேவன்,நாடாழ்வான் என்ற பட்டங்களும் மூப்பனார்களுக்கு(சுருதிமான்) இருந்துள்ளது.
மலையமான் சேதிராயன் வன்னியநாயகன் என்பவர்களுக்கு படை முதல்வராக ஆதியாம் கத்திக்கார மெய்க்காப்பாளர்கள் என்று இருந்துள்ளனர். 

அரசன் தொண்டைமான் சேதிராயர்:

இவர் பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் கோயில் இறைவனுக்கு நிலகங்களை தானமாக கொடுத்தை செய்தியாக தெரிகிறது
காலம்: மூன்றாம் இராஜராஜர் கி.பி.1238
"ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி கோயிலுக்கு...... அரைசன் தொண்டைமான் பெருமாள் பிள்ளையான் சேதிராய தேவனான அரும்ப 
உடையார்................."
இவர் இப்பகுதியை ஆண்ட சேதிராய உடையாராக இருக்கலாம் என்றும் அரும்பாவூர் சேதிராயராக இருக்கலாம்

மந்திரி ஞான சேதிராயன்:


காளையார் கோயில் தலத்தையும் விஞ்சை என்னும் தலத்தையும் உயர்த்தி திருப்பனி செய்தவன் சேது நட்டு சேதிராயன் என்னும் 
மந்திரி,பாண்டியநாட்டை சோழர் வென்றுகொண்ட போது பாண்டியன் நாடு வேண்டி வர பாண்டிய ராஜாவால் சோழருக்கு தூது சென்ற தலைவன்.
"தெருக்களுமாடமும் கோபுரம்மும்..... .....திருக்குளமும்கண்டான் மந்திரி சேதிராயன்." இவர் பாண்டியனின் மந்திரி ஆக இருந்தவர்.

வேனாடன்:


இவர் சேர நாட்டில் இருந்து சேது நாட்டுக்கு குடி புகுந்த "கொடுமூர் பெரிய பிரபு வேனாடன்" இவரை விக்கிரம்சோழணூலா வில்"கலி தனை பாரில் விலக்கிய வேனாடன்". இவரே சேது நாட்டில் சாளைகிரமங்கள்(வைனவ திருத்தலங்கள்) கண்டவர்.இவர் சேர நாட்டை சார்ந்த வேனாடு எனற பகுதியை ஆண்ட நாடாழவ சேதிராயராக இருக்கலாம். இவர்களளெல்லாம் சேதிராய உடையார் வம்சத்தவர்களெ 

சேதிராயர்


என்பது கள்ளர்களின் பட்டபெயர்களில் ஒன்றாகும். சென்னை பல்கலைகழகத்தின் தமிழகராதி(Tamil Lexicon University of Madras) சேதிராயர் என்பதற்கு மூன்று பொருள்களை தருகிறது. 

சேதிராயர் என்பவர் தமிழகத்தின் நடுநாட்டரசர். 
திருவிசைப்பா ஆசிரியர்களில் ஒருவரான சிவனடியார் 
கள்ளர்களின் பட்டங்களில் ஓன்று. 

தொண்டை நாட்டிற்கும் சோழநாட்டிற்கு இடைப்பட்ட பிரதேசத்தை 'நடுநாடு'{சேதிநாடு} என்று அழைத்தனர். சேதிராயர் என்பவர்கள் தமிழ்நாட்டின் நடுநாட்டை ஆண்ட அரசகுலத்தினர் என்பது புலனாகிறது. தொண்டை நாட்டிற்கும்-சோழ நாட்டிற்கும் நடுவில் இருப்பதால் இம்மாவட்டத்தை 'நடுநாடு' என்றனர். இதற்கு வேறு ஏதும் ஆதாரம் உண்டா ? 
உண்டு. 

சொல்ஆய்வின் படி சேதிராயர் என்பது சேதி + அரையர் என பிரிபடும். 

சேதி என்பது நாட்டின் பெயர் அரையர் என்பது அரசர் என பொருள்படும். 
ராயர் -> அரையர் -> அரைசர் -> அரசர் 
இதன்படி 
சேதி + அரசர் -> சேதி நாட்டு அரசர்
 என நேரடி பொருள் தருகிறது. 

சேதிராயர் என பட்டபெயர் தரித்திருப்போர் சேதி நாட்டு அரச வம்சத்தினர் ஆவார்கள். 

இதற்க்கு மேலும் ஆதாரம் உண்டு. 

புதுக்கோட்டை மன்னர் கல்லூரி தமிழ் பேருரையளராக பணிபுரியும் முனைவர் மு. பழனியப்பன் சில தகவல்களை தருகிறார். அதை கீழே காணலாம். " திரு விசைப்பாவின் திரு கடைகாப்பு பதிகம் பாடிய சேதிராயர் " .......... 


" ஏறுமாறு எழில் சேதிபர் கோன் தில்லை நாயனாரை நயந்துரை செய்தன " என்ற அடிகள் 10 ஆம் பாடலில் இடம் பெறுகின்றன. 

இங்கு 

சேதிராயர் " சேதிபர் கோன் " என விளிக்கப்பட்டுள்ளனர். 
இதன் வழியாக இவர் அரசர் என்பது உறுதிபடுத்தப்படுகிறது. 
சேதி என்பது குல பெயர் ஆகும். 

" முதற் குலோத்துங்கன் (1070-1120) காலத்திலும் 
இராசராசர் சேதிராயர், இராசேந்திர மலையம்மான் என்று பட்டம் தரித்தவர்கள். திருக்கோவிலூர், கிளியூர் ஆகிய நகரங்களை தலைநகரங்களாக கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். 

திருக்கோவிலூரில் வாழ்ந்த 
மெய்பொருள் நாயனாரும் சேதிநாட்டை சார்ந்தவர் என்ற பெரிய புராண குறிப்பு இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.பெரியபுராணம் குறிப்பிடும் மெய்ப் பொருள் நாயனார் 'சேதியர்' என்ற பட்டப் பெயருடன் இப்பகுதியை ஆண்டதாக அறிகிறோம். இதுபோலவே சுந்தரமூர்த்தி நாயனாரின் வளர்ப்புத் தந்தை நரசிங்க முனையரையர் திருநாவலூரில் ஆண்டதாக தெரிகிறது 
என முனைவர் மு. பழனியப்பன் குறிப்பிடுவது உறுதியான ஆதாரமாகும். 

ஆனால் வரலாறு என்பது இலக்கிய ஆதாரத்தை மட்டும் எடுத்து கொள்ளவதில்லை. மேலும் நாணயம், கல்வெட்டு போன்றவற்றையும் துணை கொள்கிறது. 

அதன்படி 
கல்வெட்டு ஆதாரம் 
ஏதும் உண்டா? எனில் உண்டு. 

1. இராசராசன், இராசேந்திரன் முதலான சோழ மன்னர்களின் ஆட்சி காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுகளில் சேதிராயன் என்ற பெயர் காணப்படுகிறது. என நா.மு. வே. நாட்டார் அவர்கள் கள்ளர் சரித்திரத்தில் குறிப்பிடுக்கிறார். 


2. விழுப்புரம் மாவட்டத்தில் நெய்வனை என்னும் ஊரில் சிவன்கோவிலில் கல்வெட்டுக்களில் இறைவன் பெயர் "பொற்குடங் கொடுத்தருளிய நாயனார்" என்றும்; இப்பதி "மிலாடு ஆகிய சனாதன வளநாட்டுக் குறுக்கை கூற்றத்துக்கு உட்டபட்ட ஊர்" என்றும் குறிக்கப்பட்டுள்ளது கல்வெட்டு முதல் குலோத்துங்கன் சோழனின் 48 வது ஆண்டு காலத்திலிருந்து .......................இராசேந்திர சோழ சேதிராயர் என்பவர் இக்கோவில் நடராசா மூர்த்தியை பிரதிட்டை செய்தார் என்ற குறிப்பு உள்ளது. 


மேலும் சில கருத்துக்களை பார்ப்போம். 


போத்தப்பிராயர், காடவராயர், பல்லவர்(பல்லவதரையர்), தொண்டையர், சம்புவரையர், இலடராயர், மலைமான்(சேதிராயர்), வானகோவைரையர், முனையதரையர், ஓயமானர், முத்தரயர், மழவராயர், பழுவேட்டரையர், இருக்குவேளிர் முதலிய பல்குடி சிற்றசர்கள் சோழர்களுக்கு அடங்கியவர் என்று சில குறிப்புகள் கூறுகின்றது. ஆனால் இவர்கள் (சேதிராயர்) சூரியகுலத்தினரான சோழர் குலத்தின் கிளை குலத்தினர் ஆவார்கள். மேலும் 


சர்க்கரை புலவரின் வழித்தோன்றலான திருவாளர், சர்க்கரை ராமசாமி புலவர் அவர்களின் வீட்டில் இருந்ததொரு மிக பழமையான ஏட்டில் ஏழு கூட்ராமும், பதினெட்டு நாடும், ஏழு ராயரும் குரப்பட்டுள்ளது. 


ராயர் எழுதுவராவர்: 1 . சேதிராயர் 2 . காலிங்கராயர் 3 . 
வாணதிரியர் 4 . கொங்குராயர் 5 . விசையராயர் 6 . கனகராயர் 7 . கொடுமளுர்ராயர் என திரு ந. மு. வேங்கடசாமி நாட்டார் கள்ளர் சரித்திரம் 3 ம் அதிகாரத்தில் குறிப்பிடுகிறார்.

நாம் மேலே கண்ட கல்வெட்டு இலக்கிய ஆதாரங்களில் இருந்து சேதிராயர் என்பவர்கள் சேதிநாட்டு அரசகுலத்தினர் என்பதும் அவர்கள் சூரிய குலமான சோழர் குலத்தின் கிளைகுடியினர் என்பதும் தெளிவாகிறது. 


அவர்கள் தமிழ்நாட்டில் திருகோவிலூர், மற்றும் கிளியூர் என்ற நகரங்களை தலைநகரமாக கொண்டு நாடு நாடான செதினாட்டை ஆட்சி செய்தனர் என்பதும் அவர்கள் சேதிராயர் மற்றும் மலையமான் என்ற பட்டங்களை தரித்து ஆட்சி செய்தனர் என்பது புலனாகிறது.

Sunday, June 23, 2013

கற்க்குறிச்சி(கல்லாம்பாறை) மறவர்கள்

அழகுபாண்டித் தேவர்கள்


தூத்துக்குடி மாவட்டத்தில் கற்க்குறிச்சி மறவர்கள் என்றோர் மறவர்களில் ஒரு பிரிவினர்கள் உண்டு.இவர்கள் கற்க்குறிச்சி என்ற கல்லாம்பாறை என்ற ஊரின் மறக்குல மக்கள் ஆதனால் ஊர் பெயரே 'கற்க்குறிச்சி' மறவர் என்று மறவரில் 38 பிரிவினர்களில் இவர்களும் ஒருவராவர்.இவர்களை 'அழகுபாண்டித்தேவர்கள்' என அழைப்பது வழக்கம் இவர்கள் பல நிலப்பரப்புகளுக்கு முடிமன்னர்களாக வாழ்ந்துள்ளார்கள்.'அழகு பாண்டித்தேவர்கள்' என்ற பட்டம் தூத்துக்குடி பரதவர்களிடமும் காணப்படும்.கொண்டையங்கோட்டை மறவர்களிலும் இந்த 'அழகு பாண்டியன்' கிளை உண்டு.இவர்கள் பல நிலப்பிரபு அதிபர்களாகவும் சிற்சில பாளையங்களுக்கு அதிபராகவும் வாழ்ந்துள்ளனர்.

சில வரலாற்று நூல்கள் 4 தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: கெ.ராஜையன்
[Rise And Fall Of Poligars Of Tamilnad . Prof .K.Rajaiyyan M.A, M.Litt, A.M, PhD, Published by University Of Madras 1974]

ஜெ.எச்.நெல்சன்,எச்.ஆர்.பேட் ஆகியோரின் பழைய ஆவணப்பதிவுகளை வாசித்த பின் உதாரணமாக பாளையப்பட்டுகக்ளை விவரிக்கும் பேட் அவற்றில் எது எந்த சாதி என்றும் சாதிக்குள் எந்த உபசாதி என்றும் சொல்கிறார். நெல்லைப்பகுதி பாளையப்பட்டுக்கள் பெரும்பாலும் கொண்டையங்கோட்டை மறவர்கள்.புதுக்கோட்டை(திருநெல்வேலி), குமாரகிரி பாளையம் போன்றவை கற்குரிச்சி மறவர்கள். [திருநெல்வேலி கெஜட்: ஹெச்.ஆர்.பேட் மற்றும் நெல்சன்).

இவர்கள் குமாரகிரி பாளையம்,புதுக்கோட்டை பகுதிகள் மட்டும் ஆளவில்லை பாஞ்சாலங்குறிச்சி அருகில் இருந்த அழகுபாண்டியாபுரம் என்ற இடத்தையும் ஆண்டுள்ளனர்.இவர்களை கற்க்குறிச்சி வீர அழகுபாண்டித்தேவர்கள் என்று தான் பட்டம் இருந்துள்ளது.இந்த பாளையத்தை தவிர குமாரபாளையத்தை ஆண்ட "குமார அழகு பாண்டிய தேவர்" களின் வம்சாவளியினர் குமாரகிரி பாளையத்திலும் புதுக்கோட்டை பகுதியிலும் வாழ்ந்து வருகின்றார்கள்.

இவர்களை பற்றிய கல்வெட்டு செய்திகள் ஒன்று கல்லாம்பாறை தூத்துக்குடியில் கிடைத்துள்ளது. அதில்

இடம்: கோயில் ம்க மண்டபம் நுழைவாயிலின் தென்புறச்சுவர்.
காலம்: கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டு.

கல்வெட்டு: ஸ்வஸ்தி ஸ்ரீ கோமாறபன் திரிபுவன சக்கரவர்த்தி சுந்தரபாண்டிய தேவர்க்கு யாண்டு 11 வதின் எதிர் மூவாண்டு திரு வழுதி வளநாட்டு கற்க்குறிச்சியாண மணத்தியில் நாயனாரிடையாற்றீச்வரம் உடைய நாயனார்க்கு இம்மணத்திக்கு
காரியஞ் செய்கின்ற மலை மண்டலத்துக்கு
கண்ணணூருடையான் 'ஸ்ரீ க்யிலாசமுடையான் வீரமழகிய பாண்டியத்தேவர்க்கு
இந்நாயனார் முப்பது வட்டத்து சிவப்பிராமணரோம்
பிடிபாடு குடுத்த ப்ரிசாவது இந்நாயனார்க்கு இவர் வைத்த சந்தியா தீபம் ஒன்று இஸ்ந்தியா தீபம் ஒற்றுக்கு
இவர் பக்க் இவ்வாட்டை ஆடிமாதங்க் கொண்ட அச்சு அரையும் ஒன்றுங்க் கொண்டு
சந்திராதித்தவரை செலுத்த்வோமாக கைக்கொண்டோம்.

செய்தி: 'திருவழுதி வளநாட்டு கற்க்குறிச்சியாண மனத்தியில் குறிப்புள்ள நாயனார் இடையாற்றீச்வரமுடையார்' என இறைவர் குறிப்பிடப்டுகின்றார். கற்க்குறிச்சி என்ற ஊர் 'கல்லாம்பாறை' என்ற பெயரில் தனி ஊராக அருகில் உள்ளது. தாமிரபரணிக்கும் தேரிக்கால்வாய்க்கும் இடையில் அமைந்த கோயில் என்பதால் இடையாற்றீச்வரம் என வழங்கபட்டுள்ளது. இவ்வூர் தொடர்பாண பணிகளை கவனிக்கும் செயலராக இருந்த மலை மண்டலத்துக் கண்ணனூருடையான் 'ஸ்ரீ க்யிலாசமுடையனான் வீரமழகிய பாண்டிய தேவன் என்பவர் இந்த கோய்லில் சந்தியா தீபம் எரிக்க இக்கோய்லில் மாத்ததின் முப்பது நாள்களும் பூசை பணிபுரியும் உரிமை படைத்த சிவ பிராமணர்களிடம் அரை அச்சும் ஒரு காசும் கொடுத்துள்ளார்.

நன்றி:
'மனத்தி சிவன் கோயில் கல்வெட்டுகள்' அர.அகிலா,மு.நளினி இப்பகுதிக்குகான கள ஆய்வுகள் திருமதி தமிழரசி வேலுசாமி ,திருமதி.சிவ அரசி முத்துகாளத்தி ஆகியோர் அமைத்திருக்கும் "திரு.கன்னம்மாள் இராசமானிக்கனார் அறக்கட்டளை".

பார்க்கவ குலத்தின் பட்டங்களும் விருதுகளும்.

தெய்வீகன் மலையமான் நரசிங்க உடையாரின் வம்சாவழியினரான சுருதிமான்,மலையமான்,நத்தமான் மரபினர் பார்க்கவ குலம் என்று அழைக்கப் படுவர். இவர்கள் மரபுவழி வந்தவர்களே சேதிநாடு,மலையமாநாடு,நடுநாடு,நத்த நாடு,மாவலி நாடு,பெண்ணை நாடு,கோவல நாடு,தெய்வீக நாடு,முள்ளூர் நாடு  என்றெல்லாம் அழைக்கப்படும் நடுநாட்டுப் பகுதிக்கு அரசனாகவும், வேளிராகவும்,போர் வீரராகவும்,சோழனின் போர்ப்படைத் தளபதியாகவும்,பெரிய அதிகார பதவிகளிலும்,கருவூலக் காவல் அதிகாரியாகவும் இருந்த இவர்களுக்கு அநேகமான பட்டங்களும்,விருதுப் பெயர்களும் உண்டு.

 

பட்டங்கள்

மலையமான்
நத்தமான்
சுருதிமான்
உடையார் 
நயினார் 
மூப்பனார்

இவை ஆறும் தற்போது பார்க்கவ குலத்திற்கு வழங்கி வரும் பொதுவான பட்டங்கள்.

..............................................................................................................

விருதுகளும் பட்டங்களும்.

மலையமான்
நத்தமான்
சுருதிமான்
வேளிர் 
வேள்
சேதிராயர்
மலாடுடையார்
மிலாடுடையார்
முனையரையர்
மலையரையர்(மலையர்களை ஆண்டவன்)
கோவலரையர்(கோவலர்களை ஆண்டவன்)
கொங்குராயர்(கொங்கர்களை ஆண்டவன்)
பண்டரையர் 
பண்டாரத்தார்(கருவூல காவல் அதிகாரி)
பண்டாரியார்
பாளையத்தார்
கொங்கராய பாளையத்தார்
நாட்டார்
பெரிய நாட்டார்
சீமை நாட்டார்
வானாதிராயர்
வானராயர்
வானகோவரையர்
தேவன்
அரையத்தேவன்
வானவிச்சாதரன்
வானவிச்சாதிர நாடாழ்வான் 
மலையராயர்
மலையரசன்
மழவராயர்(மழவர்களை ஆண்டவன்)
மலாடர்
சேதியர்
சேதிபர்
சேதியர் கோன்.(சேதியர்களின் அரசன்)
மகத நாடாள்வார்
மகத நாடன்
சேதி நாடன்
நாடாள்வான்
கத்திக்காரர்
சவளக்காரர்
அகமுடையார்(முதலியார்,உடையார்)
வன்னியர்
காவல்காரர்
வன்னிய நாயகன்(வன்னியர்களை ஆண்டவன்)
காடவராயர்
பல்லவராயர்
நான்முடியன்
நரசிங்க மைந்தன்
நந்திப் பொருப்பன்
பெண்ணை நாடன்
மாவலி நாடன் 
வில்லாளன்
பதினெண் புவியன்
கோவல் வேந்தன்
வலாரித்துறையன்
பெண்ணைத் துறைவன்
நத்த நாட்டேந்தல்
இறையாபுரியான்
இரண கேசரி 
வர்மன்
தொண்டைமான்
கச்சிராயர்
மலைய குல ராசன்
மலாடர் கோமான்(மலையர்களின் அரசன்)
அருணாட்டேந்தன்
மூப்பர்பிதா
வேதமுணர்ந்தோன்
வேனாட்டான்
கொங்கர் கோன்
கோவலூரான்
குடவல கோவல காவலன்
பெண்ணையம் படப்பை நாடு களவோன்.
மலைய நத்தன்
மலையமன்னன் (உடையார்,நயினார்)
நத்தமன்னன் (உடையார்)
சுருதிமன்னன் (உடையாரில் மூப்பனார்)
இருங்கோவேளர்(சுருதிமான்)

இன்னும் அநேகம் பட்டங்களும் விருதுகளும் உண்டு.
நன்றி:
செய்தி வழங்கியவர்:
சேரமான் பெருமாள்

வெள்ளைச்சாமித் தேவர் என்ற மதுரகவி பாஸ்கரதாஸ்

ச.முருகபூபதி தொகுத்த “மதுரகவி பாஸ்கர தாஸின் நாட்குறிப்புகள்”
தாத்தா தாஸின் நாட்குறிப்புகளை அவரது பேரன் முருகபூபதி பல ஆண்டுகள் தேடித் தேடி அவற்றைக் கோர்த்து அற்புதமாய் இந்நூலை நமக்குத் தந்துள்ளார். இந்த நாட்குறிப்பு 1.1.1917 லிருந்து துவங்குகிறது. 92 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழக மக்களையும், அவர்களது கலைவாழ்வையும் முழுமையாக 20.9.1951 வரை 34 ஆண்டுகள் பதிவு செய்துள்ளார். இது ஒரு கடிதம், தகவல் இலக்கியமாய், கலைக்களஞ்சியமாய் 719 பெரிய பக்கங்களாக பாரதி புத்தகாலயம் வெளியிட்டு சாதனை படைத்துள்ளது. தமிழகத்தின் சமூக, அரசியல், கலை வரலாற்றை, நூறாண்டுகளுக்கு முன்பிருந்த வாழ்க்கையை நாம் நேரில் தரிசிக்க முடிகிறது. அந்த வகையில் இப்பெருநூல் ஒருகலைஞனின் காலப்பெட்டகமாய்த்திகழ்கிறது.

தாஸ் 1892ம் ஆண்டு ஜூன் 6ம்நாள் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் என்ற ஊரில் பிறந்தார். இளவதிலேயே மதுரையில் தனது பாட்டி வீடு சென்று நாடகக் கலைஞராய் மலர்ந்தார். கதரை உடலிலும் காந்தியை உள்ளத்திலும் ஏந்தி கடைசி வரை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாய் நின்றுள்ளார். ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாடல்களை எழுத மேடையில் பாடியதற்காக 29 முறை கைது செய்யப்பட்டுள்ளார். இவரது பாடல்களைப் பாடிய விஸ்வநாததாஸ், காதர்பாட்சா போன்ற கலைஞர்களும் அக்காலத்தில் போலீசாரால் மேடையில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒருமேடை நாடக நடிகராக, பெருங்கவிஞராக, நடன, நாட்டிய, பாடல், ஆடல், நாடக நடிப்புப் பயிற்சியாளராக, திரைக்கதை மற்றும் உடையாடல் எழுதுபவராக, கிராமிய நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரிப்பவராக இவர் பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட கலைஞராக வாழ்ந்ததை இந்நாட்குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது. தனக்கு மேடையிலும், தனிப்பட்ட முறையிலும் கிடைக்கும் பணம் மற்றும் பரிசுகள் சககலைஞர்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாக வாழ்ந்துள்ளார். சாதி வேறுபாடுகளைப் பாராமல் சக கலைஞர்கள், தலித்துக்கள் வீடுகளில் சாப்பிட்டு, அவர்களுக்கும் தனது வீட்டில் விருந்தளித்திருக்கிறார். தீண்டாமையை எதிர்த்தவராக இருந்துள்ளார்.
வெள்ளைச்சாமி என்ற இவரது இயற்பெயரை ராமனாதபுரம் சேதுபதி இவரைத் தனது அரசவையில் பாடவைத்து “முத்தமிழ் சேத்திர மதுரகவி பாஸ்கரதாஸ்” என்ற பெயரைச் சூட்டினார். இதில் பாஸ்கரன் என்பது பஸ்கர சேதுபதி மன்னரைக் குறிக்கும். இவரது பாடல்கள் பெரும்பாலும் விடுதலைப் போராட்ட வீரர்கள், அவர்களது தியாகங்கள், குறிப்பிடத்தகுந்த நிகழ்ச்சிகள் பற்றியதாகவே எழுதியுள்ளார். பிரிட்டிஷாருக்கு அஞ்சாமல் ஒவ்வொரு பாடலிலும் தனது பெயரையும் பதிவு செய்துள்ளார். மதுரை காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வைத்தியநாதய்யருடன் பேசி மதுரையில் நடிகர்களைத் திரட்டி கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடத்தியுள்ளார் தாஸ். புதுச்சேரி சென்று மூன்று மாத காலம் தலைமறைவு வாழ்க்கையும் நடத்தியுள்ளார்.
தாஸ் தனது காலத்தில் வாழ்ந்த விடுதலைப் போராளிகள் மகாத்மா காந்தி முதல் அனைத்துத் தலைவர்களோடும் தொடர்புடன் இருந்துள்ளார். காந்தியைப் பற்றிப்பாடல் எழுதி அவரிடமே கொடுத்துள்ளார். நாமக்கல் கவிஞர் போன்ற அவர் காலத்திய கவிஞர்களோடும் நெருக்கமாக இருந்துள்ளார். அக்கால நாடகக் கலைஞர்கள் அனைவரோடும் குருபீடத்தில் மதிக்கப்பட்டுள்ளார். எம்.எஸ்.சுப்புலெட்சுமி, கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் போன்ற கலைஞர்கள் இவர் இயற்றிய பாடல்களைப் பாடியுள்ளனர். நடிகர்களுக்கு மனக் குவிப்பு, நடுங்காத தேகம், ஞாபக சக்தி, குரல் வலிமை, உடை பற்றிய ஞானம் பற்றி வகுப்புகள் நடத்தியுள்ளார். அவரது மனக் குவிப்பு இதுவரை கேள்விப்படாத ஒரு சொல்லாகும்.
“ஜட்கா ஓட்டி சின்னுத்தேவன் பீட்டர் குடும்பனின் மகள் ஜெபமேரியைத் திருமணம் பண்ணிவைக்குமாறு அழுது வேண்டினான். அவனுடன் சென்று பீட்டர் குடுமபனின் குடும்பத்தாருடன் பேசி முடித்தேன். பீட்டர் குடும்பனின் பூட்டி என்னை ஆசீர்வசித்து அனுப்பினாள்” என்று தாஸ் தனது நாட்குறிப்பில் எழுதியுள்ளார். சாதிக்குரோதங்கள் மலிந்த அன்றைய சமூகத்தில் இதையெல்லாம் செய்து முடிக்கிற அளவுக்கு செல்வாக்குமிக்கவராய் திகழ்ந்துள்ளார். அதுமட்டுமல்ல, மணப் பெண் ஜெபமேரிக்கு ஒரு தங்கச் சங்கிலியும் பட்டுச்சேலையும் வாங்கிக் கொடுத்துள்ளார். தனக்குக் கிடைக்கும் பணத்தை எல்லாம் வாரி இறைத்திருக்கிறார். பணமில்லாத போது நோட்டு எழுதியும், சொத்தை அடமானம் வைத்தும் கடன் வாங்கிக் கூட பலருக்கு உதவியுள்ளார். நாடகத் துறைப் பணிகளோடு அவர் விவசாயமும் தொடர்ந்து செய்து வந்தது வியப்பாயிருக்கிறது.
தமிழகம் முழுவதும் சுற்றிய இவர் கொழும்பு யாழ்ப்பாணம் முதல் ஆலப்புழை வரை சென்று நாடகங்கள் நடத்தியுள்ளார். பின்னாளில் கம்யூனிஸ்ட்டுத் தலைவரான கே.பி.ஜானகியம்மாள் ஸ்திரீபார்ட் நடிகையாக ஏராளமான நாடகங்களில் நடத்துள்ளார். அவரது இளவயது புகைப்படமும் இந்நூலில் வந்துள்ளது. 1929ம் ஆண்டில் தங்கம் பவுன் ரூ.13க்கு கிடைத்துள்ளது. தாஸ் மதுரை அமெரிக்கன்கல்லூரி மாணவர்கள், மற்றும் பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே நாடகப் பயிற்சியளித்துள்ளார். அவர் எழுதிய பாடல்களில் பனங்காட்டுப் பாடல்கள், சேவல் கட்டுப்பாடல், வன்னிமரப்பாடல்கள் வரை உள்ளன. 1931ல் ஒரு சந்தன சோப் விலை 4 அணா தான். அவர் தனது நாட்குறிப்பில் அன்றாட வரவு – செலவுகளையும் தவறாது எழுதியிருப்பதால் அக்கால விலைவாசி நிலைமைகளை நம்மால் புரிய முடிகிறது.
1938ல் மதுரையில் பேய் பொம்மை என்ற ஆங்கிலப்படத்தை தாஸ் பார்த்துள்ளார். சினிமா காட்சியின் போது பயந்து ஓடியசிலருக்கு தியேட்டர்காரர்கள் பாலும் பழமும் கொடுத்தனர் என்று குறிப்பிட்டுள்ளார். வயக்காட்டில் நின்ற மயில் கூட்டத்தில் காலில் காயம் ஏற்பட்ட ஆண் மயிலுக்கு மருந்திடச் சொல்லியிருக்கிறார் தாஸ். அவரது இறுதி நாட்களில் நாட்குறிப்பு பெரும்பாலும் நாகலாபுரத்திலேயே நிலைத்து விடுகிறது. நோயும் ஊசி மருந்துகளுமாய் குறிப்புகள் உள்ளன. ஆனால், பாடல்கள் எழுதுவது, பாடுவது மட்டும் குறையவே இல்லை. பலவிதமான மனிதர்கள், வினோதங்களைப் படித்தறிய முடிகிறது. கொடுத்தவன் ஏகாலியானாலும் அவனளித்த கொக்குக் கறியும் குதிரை வாலிச் சோறும் தாஸுக்கு இனிக்கிறது.
சினிமா சகாப்தம் தமிழகத்தில் 1931ல் துவங்குகிறது. தாஸ் திரைப்படங்களுக்கு வசனம் பாடல்களை எழுதியுள்ளார். காளிதாஸ், வள்ளிதிருமணம், பிரகலாதா, சுலோசனாசதி, திரௌபதி, வஸ்திராசுரன், ராதாகிருஷ்ணன், சதி அகல்யா, சாரங்கதாரா, ராஜா தேசிங், ராஜசேகரன், போஜராஜன், உஷா கல்யாணம், சித்திரஹாசன், ராதாகல்யாணம் போன்ற படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார்.
விடுதலைப் போராளிகள் போராட்டங்களை நடத்திச் சிறை சென்ற காலத்தில் தாஸ் தனது நாடகங்கள், பாடல்கள் மூலம் மக்களுக்குத் தேசபக்தியூட்டியுள்ளார். விடுதலைப் போரில் மக்கள் உற்சாகமுடன் பங்கேற்க அவரது பாடல்கள் உதவியுள்ளன. 75 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழக மக்களின் வாழ்க்கை, வளமைகள், நாடக மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள், நாதஸ்வரக் கலைஞர்கள், தலைவர்கள் என அனைவரையும் இந்த நாட்குறிப்பில் ஒரு சேர தரிசிக்கலாம். ஒப்பற்ற கலைஞனாக இருந்தும் எளிய மனிதர்களை நேசிக்கும் எளிய மனிதராகவே வாழ்ந்திருக்கிறார். இதை ஊன்றிப் படித்தால் ருசிகரமான தகவல்களும், ஆய்வாளர்களுக்கான விபரங்களும் கிடைக்கும். இம்மாபெரும் கலைஞர் 20.12.1952ல் நாகலாபுரத்தில் காலமானார்.
மதுரகவி பாஸ்கரதாஸின் மகள் சரஸ்வதியை மணந்த மருமகன் திரு.சண்முகம், ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அவரது புதல்வர்கள் தமிழ்ச்செல்வன், கோணங்கி, முருகபூபதி மூவருமே படைப்பாளிகள். மற்றொரு சகோதரர் பாலசுப்பிரமணியன் இவர்களுக்கு எல்லா வகையிலும் துணை நின்று வருகிறார். மதுரகவியின் பாரம்பரியத்தையும் சாதனைகளையும் இந்த நாட்குறிப்புகளில் நயம்படக் காண்கிறோம். மிகுந்த சிரமப்பட்டு இந்த நாட்குறிப்புகளை அவரது பேரன் ச.முருகபூபதி தொகுத்துள்ளார். இதே போன்று அவரது பாடல்களையும் தொகுப்பதோடு அவற்றை விசிடிகளில் பதிவு செய்து வெளியிட்டால் பெரும் சாதனையாய் நிலைத்து நிற்கும். இந்நூலை பாரதி புத்தகாலயம் சிறந்த முறையில் அச்சிட்டு வெளியிட்டுள்ளது.
அப்போது தேவர்கள் மாநாடு ஒன்று கூட்டியிருக்கிறார்கள். அந்த மாநாட்டிற்கு மதுரகவி பாஸ்கரதாஸ் அவர்களையும் முதுகுளத்தூர் முத்துராமலிங்கத் தேவர் அவர்களை-யும் கூப்பிட்டார்களாம். இருவருமே ஒரு ஜாதியின் பெயரால் கூட்டப்படும் மாநாட்டிற்கு வரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்களாம். மதுரகவி பாஸ்கரதாஸ் அவர்கள் மிகப் பெரிய இந்துஅபிமானி என்பது தெரிய வருகிறது. ஆனால், அவர் எல்லா ஜாதிக்காரர்-களோடும் மதத்தினரோடும் நல்லுறவு கொண்டு அற்புத மனிதராகத் தெரியவருகின்றார் அவருடைய நாட்குறிப்பின் மூலம்….
நாடகத்தில் தீவிர ஈடுபாடுகொண்ட வெள்ளைச்சாமித் தேவரென்ற பாஸ்கரதாஸ் 1925இல் இந்து தேசாபிமானிகள் செந்தமிழ் திலகம் என்னும் பாடல் நூலை வெளியிட்டார். இவரது பாடல்கள் சாதாரண வர்ண மெட்டுகளுடன் எளிதாகப் பாடக்கூடியவையாயிருந்ததால் மக்களிடையே பெரும் வரவேற்புப் பெற்றன. இவரது பல நாடக மேடைப் பாட்டுகளும் தனிப் பாடல்களும் பிராட்காஸ்ட் கம்பெனியின் கிராம்ஃபோன் தட்டுகளாக வெளிவந்தன. அதிலும் ‘வந்தே மாதரமே, நம் வாழ்விற்கோர் ஆதாரமே’ என்னும் பாட்டு மக்களிடையே மிகப் பிரபலமடைந்தது. இவரது பாடல்களைப் பாடாத கலைஞரே இல்லை….
மதுரையில் நாற்பதுகளில் இயங்கிய சித்ரகலா என்ற ஸ்டுடியோவுடன் பாஸ்கரதாஸ் கொண்டிருந்த தொடர்பு பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது. நடிகர்களின் அமைப்பிற்கெல்லாம் முன்னோடியாய் அமைந்த மதுரை நடிகர் சங்கத்தை 1926இல் தோற்றுவித்தவர் பாஸ்கரதாஸ்….
ஈ. வே. ரா, இ. மா. பாலகிருஷ்ண கோன், அரியக்குடி ராமானுஜம் அய்யங்கார், எம். எஸ். விஜயாள், முத்துராமலிங்கத் தேவர், தண்டபாணி தேசிகர் எனப் பல தமிழ்நாட்டு வரலாற்று நாயகர்களுடன் தொடர்புகொண்டிருந்தார். எம். எஸ். சுப்புலட்சுமிக்கு பாஸ்கரதாஸ் பாட்டுகள் எழுதித் தந்திருக்கின்றார்….
நன்றி :மதுரகவி பாஸ்கரதாஸின் நாட்குறிப்புகள்.
புத்தக விலை ரூ.400
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,
சென்னை – 18.
© தேவர் தளம்

பாண்டித்துரை தேவர்

பாண்டித்துரை தேவர் (மார்ச் 3, 1867 – டிசம்பர் 2, 1911; பாலவ நத்தம், தமிழ்நாடு) நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த அமைப்பாளர்களில் ஒருவரும், தமிழிறிஞரும் ஆவார். இவரே நான்காம் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராக பணியாற்றினார். இவர் செந்தமிழ் (இதழ்) என்னும் இதழ் வெளியிடவும், ‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சி யின் சுதேசிக் கப்பல் விடும் பணிக்கும் பொருள் உதவி நல்கினவர்.
பாண்டித்துரைத் தேவர் பாலவனத்தம் ஜமிந்தார் என்றும், மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவர் என்றும், தலைமைப் புலவர் என்றும், செந்தமிழ்கலாவிநோதர் என்றும், செந்தமிழ் பரிபாலகர் என்றும், தமிழ் வளர்த்த வள்ளல் என்றும், பிரபுசிகாமணி என்றும், செந்தமிழ்ச் செம்மல் என்றும் அழைக்கப்பட்டவர். மூவேந்தரும் போய் முச்சங்கமும் போய்ப் பாவேந்தருங் குறைந்து பழைய நூலுரைகளும் மறைந்து படிப்பருமின்றிக் கேட்பாருமின்றித் தமிழ்க் கல்வி மழுங்கிவரும் காலகட்டத்தில் மதுரை மாநகரில் தமிழ்ச்சங்கங் கூட்டியும், அருந்தமிழ் நூல்களை ஈட்டியும், படித்து வல்லவராவர்க்கு பரிசில் கொடுத்தும், செந்தமிழ் என்னும் மாசிக வாசிக பத்திரிகையை வெளிவிடுத்தும், இப்படிப் பலவாறான தமிழ்த் தொண்டினை திறம்படச் செய்த செந்தமிழ் ஆர்வலராவார்.

பிறப்பு :
புகழ் பூத்த தேவர் மரபில் தோன்றிய பொன்னுசாமித் தேவருக்கும் முத்து வீராயி நாச்சியாருக்கும் மூன்றாவது மகனாக 1867ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் நாள் பிறந்தார்.பொன்னுசாமித் தேவரவர்கள் இராமநாதபுர மன்னருக்கு அமைச்சராகயிருந்தவர்.இவர் சிறுவராக இருக்கும் போதே தந்தையை இழந்தமையால், சேஷாத்திரி ஐயங்கார் என்பவரின் மேற்பார்வையில் வளர்ந்தார். இக்காலகட்டத்தில் அழகர் ராஜ் என்ற தமிழ் புலவர் இவரின் தமிழ் ஆசானாவார் மற்றும் வழக்குரைஞர் வெங்கடேஸ்வர சாஸ்த்திரி இவரின் ஆங்கில ஆசிரியராவார். இவர்களிடம் இருந்து மிக்க ஆர்வத்தோடு கற்ற தேவர், இரு மொழியிலும் நல்ல தேர்ச்சி எய்தி இராமநாதபுரத்தில் சிவர்டிஸ் என்ற அங்கிலேயாரால் நடத்தப்பட்ட உயர்பள்ளியில் மேல் கல்வி கற்றார்.
சேஷாத்திரி ஐயங்காரால் மேற்பார்வை செய்யப்பட்ட தேவரின் சொத்துக்கள் எல்லாம் இவர் பதினேழு வயதை அடைந்ததும் இவரிடமே கையளிக்கப்பட்டன. இச்சொத்துக்களில் பாலவந்தனம் ஜமீனும் அடங்கும். இளம் வயதில் தமிழில் நல்ல தேர்ச்சியும் ஆர்வமும் பெற்றிருந்த தேவர், அதன் வளர்ச்சிக்காக தன் உடல், உயிர், பொருள் எல்லாவற்றையும் அர்ப்பணித்தார் என்றால் மிகையாகாது. இக்காலகட்டத்தில் தேவரின் நெருங்கிய உறவினராகிய பாஸ்கர சேதுபதி அவர்கள் இராமநாதபுர அரியணையில் அமர்ந்து, இவரின் தொண்டுகளுக்கு துணை புரிந்தார் என்பர்.
தமிழ்த் தொண்டு:
அக்காலத்தில் அறிய தமிழ் நூல்களை கண்டெடுத்து, அவை அழியா வண்ணம் அச்சிட்டு வந்த சாமிநாதையருக்கு உதவும் பொருட்டு தேவர் அவர்கள், அவரை இராமநாதபுரம் வரவழைத்துக் கௌரவித்து மணிமேகலை, புறப்பொருள் வெண்பாமாலை போன்றவற்றை அச்சிட பொருளுதவி செய்தார். தனது ஆசிரியர் ஒருவரான இராமசாமிப்பிள்ளை என்றழைக்கப்படும் ஞான சம்பந்தப்பிள்ளை மூலம் தேவாரத் தலைமுறை பதிப்பையும், சிவஞான சுவாமிகள் பிரபந்தத் திரட்டையும் பதிப்பித்து வெளியிட்டார். பிற மதத்தவரின் சைவ எதிர்ப்பு ப் போக்கை மறுக்கும் பொருட்டு கோப்பாய் சபாபதி நாவலர் மூலம் மறுப்பு நூல்கள் வெளியிட்டார். மேலும் தண்டியலங்காரம் போன்ற சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் அவர்களின் நூல்களுக்கும், தேவர் அவர்கள் பதிப்பிக்கும் பொருட்டு உதவி புரிந்திருந்தார். குமாரசுவாமிப்புலவர், தேவரால் தொகுக்கப்பட்ட சைவமஞ்சரிக்கு வழங்கிய சிறப்புப்பாயிரம் இவரின் சிறப்பை நன்கு புலப்படுத்தும்.
சைவமஞ்சரி சிறப்புப்பாயிரத்தை கீழே காட்டுதும்:-
திக்குலவும் புகழாளன் பிரபுகுல சிகாமணியாய்ச் சிறந்த சீலன்
அக்கிரகண் ணியன்பொன்னு சாமியெனு நரபால னருளும் பாலன்
நக்கனடி யாவர்பாலன் பேறுளத்தன் வெண்ணீறு நண்ணும் பாலன்
தக்கபொரு ணிலவுகலை வினோதனுயர் சற்சங்க சனானு கூலன் .
பூதேவன் புகலியர்கோன் முதலறிஞர் தமிழ்நூலின் பொருள்க ளுள்ள
மீதேவன் பறமருவப் பதித்தேவன் றேவனெனும் வெளிறு நீங்கி
நீதேவ னெனக்கொண்டு நிலத்தேவன் பகைகடந்து நெறிநின் றீசன்
மாதேவன் பதத்தேவன் மகிழ் பாண்டித்துரைத்தேவ மன்னன் மாதோ
நான்காம் தமிழ்ச் சங்கம் :
துரை மாநகரில் தேவர் தங்கியிருந்த போது, அவ்வூர் அறிஞர்கள் தமிழ்ச் சிறப்புப் பற்றி சொற்பொழிவாற்றும்படி வேண்டிக் கொண்டனர். இதற்கு இணங்கிய தேவர், உரைக்கு வேண்டிய ஆராய்ச்சி செய்யும் பொருட்டு, திருக்குறள், கம்பராமாயணம் போன்ற நூல்களை ஈட்ட முயற்சித்த போது, அங்காடிகள், நூலகங்கள் மற்றும் அறிஞர்களின் மனைகளிலிருந்தும் பெற முடியவில்லை. இந் நிகழ்வு தேவரின் உள்ளத்தை மிக கடுமையாகப் பாதித்தது. பண்டைக்காலம் முதல் தமிழ்ச் சங்கங்கள் கூடிய மதுரை மூதூருக்கும், அங்கு வளர்ந்த தமிழுக்கும் ஏற்ப்பட்ட துன்பியல் நிலையை எண்ணி இவர் உள்ளம் வேதனையுற்றது. இந் நிலையை மாற்றும் நோக்குடன் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவத் திட்டமிட்ட தேவர் அவர்கள், தனது திட்டத்தை 1901 ஆம் ஆண்டு வைகாசி மாதம் சென்னையில் கூடிய மாகாண அரசியல் மாநாட்டில் அவையோர் முன் வேண்டுகோளாக முன்வைத்தார். அம்மாநாட்டில் நான்காம் தமிழ் சங்கம் மதுரையில் நிறுவுவது என்று திர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் உடனடியாகவே நான்காம் தமிழ் சங்கம் நிறுவப்பட்டு செயல்பட தொடங்கியது. இத் தமிழ் சங்கதிற்கு தலைவராக தேவரே பொறுப்பேற்று சங்கத்தை கட்டியெழுப்பும் பொருட்டு அயராது செயல்பட்டார். மேலும் தமிழகம் மற்றும் ஈழம் முதலிய நாடுகளிலிருந்து தமிழ் வல்லுனர்களை அழைத்து, சங்கத்தில் அங்கத்தவராக்கி எதிர்கால தமிழ் வளர்ச்சிக்கு வழிவகுத்தவர் தேவராவார்.தமிழன்னைக்கு மேல் கூறிய தொண்டுகள் மட்டுமல்லாது, செய்யுள் இயற்றித் தொண்டாற்றும் புலமையும் ஆற்றலும் தேவரவர்களிடம் இருந்தது, இதற்கு சான்றாக சிவஞானபுர முருகன் காவடிச்சிந்து, சைவ மஞ்சரி, இராஜராஜேஸ்வரிப் பதிகம், பன்னூல் திரட்டு மற்றும் பல தனி நிலைச் செய்யுள்களும் பல சிறப்பாயிரங்களும் திகழ்கின்றன. தமிழுக்கு மட்டும் அல்லாது பிற நற்பணிகளுக்கும் பொருளுதவி செய்யும், வழக்கம் உடைய வள்ளலாக வாழ்ந்த தேவரவர்கள், வ. உ. சிதம்பரம்பிள்ளை அவர்கள் சுதேசி நாவாய்ச் சங்கம் நிறுவதற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து உதவியது குறிப்பிடத்தக்கது. தமிழின் உயர்வுக்காக உறங்காது உழைத்த உத்தமர், 1911ஆம் ஆண்டு மார்கழி மாதம் இரண்டாம் நாள் வள்ளல் பாண்டித்துரைத் தேவர், உயிர் துறந்ததை எண்ணி தமிழ் உலகம் வருந்தியபோதும், அவரால் உருவாக்கப்பட்ட நான்காம் தமிழ் சங்கம் நூறாண்டுகளுக்கு மேலாக தமிழ்த் தொண்டாற்றி வருவது தேவரவர்களின் உண்மைத் தமிழ்ப் பற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
© தேவர் தளம்

Sunday, June 16, 2013

பள்ளர்கள்- வேந்தர் யார்? மூவேந்தர் யார்? என கொந்தளித்த ஆசீர்வாதம் பாதிரியார்


மருதம் தொலைக்காட்சியின் திடீர் சித்தர் குருசாமி...முதல்..........மறுப்புகளத்தின் புனைவுகள் வரைக்கும்............
வேந்தர் யார்? மூவேந்தர் யார்? என கொந்தளித்த ஆசீர்வாதம் பாதிரியார் முதல்
இன்றைய மீண்டெழும் மள்ளர் வரலாறு? பாண்டியர் வரலாறு மீட்பு? ...என்று புனைவு வரலாறு எழுதும் அனைவருக்கும் ...

பள்ளர் தான் பாண்டியராம் ஏன் என்றால் பள்ளாங்குழி ஆட்டத்திற்கு பாண்டியாட்டம் என்று பெயராம்.

பள்ளனாகிய பாண்டியன் ஆடிய ஆட்டம் தான் பாண்டியாட்டம்
என்று ஆராய்சியில் மூழ்கி முக்குலத்தோரை தவிர சகல சாதியரும் பள்ளர்தான் என நூல் எழுதி

"அறத்தில் மண்டிய மறப்போர் பாண்டியர்" என்று விளங்கிய பாண்டியர்களை பள்ளாங்குழி ஆடும் பெண்டியர் என விமர்சித்து பாண்டியர்களுக்கு இழிவை ஏற்படுத்திய செந்தில் மள்ளர் வரை.



சகலசாதியையும் தூற்றும் இந்த கூட்டத்தின் வேலைகள் என்ன இந்த பதர்கள் எப்படி மூவேந்தர் என்பதை இவர்கள் காட்டிய ஆதாரம் என்ற (செல்லாத) சீட்டை கொஞ்சம் சரிபார்க்கவும்.
இதில் என்ன ஆதாரம் உள்ளது என எவரும் கவனிக்கவில்லை.அது ஆதாரம் தானா?
இவர்கள் காட்டிய ஆதாரத்தில் நிஜமாக என்ன உள்ளது என அனைவரும் சற்று கவனிக்கவும்.


அவதாரம்(ஆதாரம்) #1
1)தென்காசி கோயிலும், தென்பாண்டி வேந்தர்களும்-posted by கடுங்கோன் பாண்டியன்.

 திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலத்தின் அருகே பொதிகை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது தென்காசி. இங்கே பாண்டியர்களால் கட்டப்பட்ட சிவன் கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். இக்கோயிலின் ஆய்வினூடாகவும் பள்ளகளே பாண்டியர் என்று அறிய முடிகிறது. பராக்கிரம பாண்டியன் மெய்க்கீர்த்தியில் ” சிவநெறி யோங்கச் சிவாற்சனை புரிந்துமருது ராற்கு மண்டப மமைத்து” (ச.கணபதிராமன் ,தென்காசி அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில் வரலாறு, பக்.89 )எனவரும் அடிகளில் மருதூரார்களான மள்ளர்கட்கு - பள்ளர்கட்கு மண்டபமமைத்த செய்தி இடம் பெற்றுள்ளது. மேலும் இக்கோயிலில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. இங்க பாண்டியன் பள்ளருக்கு சிவார்ச்சனை புரிந்த மருதூரார்க்கு மண்டபம் அமைத்து என வரும் கல்வெட்ட்டில் இருந்து பள்ளன் தான் பாண்டியனாம். 

இது தான் பள்ளர் இன வரலாற்றுப் புனைவாளர்களின் மிகப் பெரிய பித்தலாட்டம். அந்த நிஜக்கல்வெட்டில், மருதூர் அர்ச்சகர்கள் யார் அந்த கல்வெட்டு கூறும் செய்தி என்ன என இங்கு கவனிக்கவும்.......................................................................

"கிபி.1422.முதல்.1463.ம் ஆண்டுவரை பாண்டிய மன்னராக அரசாண்ட அரிகேசரி. பராக்கிராம பாண்டியரின் மெய்கீர்த்தியின் செய்தி இது.

"கயலினையுலகின் கண்ணென திகழச் சந்திரகுலத்து வந்தவதரித்து முந்தையோர் தவத்து
முறையென வளர்த்து.
அந்தனர் அனேகர் செந்தழல் ஓம்ப சிவார்ச்சனை புரிந்து மருதூரவர்க்கு
மண்டபமமைத்து சண்பக வனத்துச் சங்கரர் தமக்கு மண்டபம் அமைத்து மணிமுடிசூட்டி விழாவணி நடத்தி விசுவநாதருக்கு தென்காசிப் பெருங்கோயில் செய்து மறுமை குறுதியும் மேம்பட நல்கி விற்றிருந்தருளிய ஸ்ரீஅரிகேசரி பராக்கிராம பாண்டிய தேவர் யாண்டு".

இங்கு குறிப்பிடும் மருதூர் அர்ச்சகர்கள் "முந்தையோர் தவத்து முறையென வளர்த்த அந்தனர்"...........என்றும்

..............கடைசியில் பராக்கிரம பாண்டிய தேவர்" என்ற முழுக்கல்வெட்டு செய்தியையும் முழுங்கி...........

அந்தணர்களுக்கு பாண்டிய தேவர் வழங்கிய செய்தியை பள்ளர்கள் தங்களுக்கு ஏற்றார்போல் திரித்து அதையே மருதூரர் என்று பள்ளரை குறிப்பிட்டதாக மாற்றி கூறிக்கொண்டுள்ளனர்.

இங்கு கல்வெட்டில் கூறப்பட்ட அந்தணர்களும்  பள்ளர்கள் தான் என்று கூற வருகிறார்களோ?.......இது தான் பள்ளர்கள் பாண்டியர்கள் என்ற ஆதாரமாம்..........இப்படி ஒரு பொய்யுரைக்க கொஞ்சம் கூட 
நாக்கூசவில்லை.........நாப்பிளக்க பொய்யுரைத்தல் என்பது இது தான்.இப்படித்தான் எல்லா ஆதாரமும் இருக்கின்றது......

அதேப்போல் தொடர்வோம் அடுத்த நகைச்சுவைக்கு.

அவதாரம்(ஆதாரம்) #2
2)சங்கரன் கோயிலும், பள்ளர்களின் தேர்த் திருவிழாவும்-posted by கடுங்கோன் பாண்டியன்.

முதலில் பள்ளர்கள் வலைதளத்தில் நம்மக்கள் வாதப்பரதி வாதங்களில் கோபத்துடனே ஈடுபடுவது படு முட்டாள்தனமான செய்கை. அதாவது இவர்கள் என்ன ஆதாரத்தை காட்டுகிறார்கள் அது ஆதாரமா? அல்லது புதிய அவதாரமா? என தெளிவாகக் கவனியாமல் கோபத்தை மட்டும் காட்டுவது வேடிக்கை தான். வீடு பூட்டியுள்ளதா? திறந்துள்ளதா? என கொஞ்சம் கூட உற்று நோக்காமல் அவன் கூறுவது என்ன என்பதைத்தான் பார்ப்போமே.

சோழ,பாண்டிய கல்வெட்டுகளில் சில ஆச்சர்யமான கல்வெட்டுகள் உள்ளது. அதாவது சோழன் ஒருவன்
மான்முகம் கொண்ட கொம்புள்ள அரக்கனை கொன்று ஈராயிரம் சிவ பிராமணர்களை காத்து நாஞ்சில் நாட்டில் குடியேற்றியதாக ஆதாரப்பூர்வமான கன்யாகுமரி கோவில் கல்வெட்டு ஒன்று உள்ளது.அதைப்போல் இந்திரமண்டலத்தில் பாண்டியன் விருந்தினனாக சென்று அங்கு தேவேந்திரன் மகன்கள் நால்வரை இழுத்து வந்ததாக கல்வெட்டு கூறுவதாக பல ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

அதைப்போல் இலங்கை பத்துதலை அரக்கனை சிரம்கொண்டவன் என்று சோழன் மற்றும் பாண்டிய மன்னர் செப்பேடுகளிலும் வருகின்றது. அப்படியானால் இருவரும் ஸ்ரீ ராமன் வழி வந்தவர்களா? இது அரசர்களின் தற்பெருமையால் மிகைப்படுத்தப்பட்ட,கடவுள்களோடு தம்மை இணைத்து கூறிக்கொண்ட மிகையான புகழ்ச்சி செயல்கள் ஆகும்.

இங்கே பள்ளர் கூறும் கதையை பார்போம்.

(அருள்மிகு சங்கரநாராயண சுவாமி தல வரலாறு, பக்.14-15 )

மற்றுமொரு கல்வெட்டில் (கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்ப்பக்கம் உள்ள கல்வெட்டு) ” விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 14 நாள் திங்கட்கிழமையும் உத்திராடமும் பெற்ற நாள் தெய்வேந்திரக் குடும்பன் பலாத்துப்படி : முன் துவாபர யுகத்தில் உக்கிரப் பெருவழுதியும் சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு இருக்கின்ற காலத்திலே தெய்வேந்திரன் பக்கல் மழை கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம் மகிழ்ந்து இரும் என்று சேரனும் சோழனும் வணங்கியிருக்க பாண்டியன் தெய்வேந்திரனுடனே கூடியிருக்க, தேவேந்திரனும் வரிசை செய்தாற்போல கவடு நினைக்க. பாண்டியன் கோபித்து எழுந்து தேவ கன்னிகை மக்கள் நாலு குடும்பத்தாரை கைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு சென்னல் விதையும், கன்னல் விதையும் (கதலி) விதையும் பனைவிதையும் முதலான பல வித்தும் ஒரு ரிசபமும் ஒரு சாவியும் கொண்டு பூமியில் வந்தான் நால்வரில் முதல்வனுக்கு தேவேந்திரக் குடும்பப் பட்டமும் கட்டி, மூன்று பேருக்கு வாரியன், அக்கசாலை, (இளந்தாரியன்) என்று வரிசைப் பட்டமும் கட்டி ஒரு நாளையிலே 12000 கிணறு வெட்டி வேளாண்மை கண்ட படியினாலே ராஜாவும் மனம் மகிழ்ந்து வெள்ளானையும் வெள்ளை வட்டக் குடையும் சேறாடியும் பகல் பந்தம் பாவாடை ரெட்டைச் சிலம்பும் ரெட்டைக் கொடுக்கும் நன்மைக்கு 16 பந்தக்காலும் துன்மைக்கு 2 தேரும் பஞ்சவன் விருந்தும் . . . . .18 மேளமும் கட்டளையிட்டு நடக்கிற காலத்தில் பறையர் தங்களுக்கு இந்த வரிசை உண்டென்று நடப்புவித்தார்கள். ஆனபடியினாலே ஐந்து சாதிக்கும் பிள்ளை என வேந்தலிலிருக்கும் அனுமக் கோடி அடிச்சாலும் (வாகைகுளம்) குட்டிக் குடும்பனும் அல்ல கர்த்தாகுடும்பனும், கூட்டிக் கொண்டு சமூகம் ஏறி விண்ணப்பித்துக் கொள்ள ஆதி பூர்வ ராஜாக்கள் கொடுத்த பட்டயம் பார்த்துப் பறையர்களுக்கு உண்டான வரிசை நன்மைக்கு மூன்று கால் பந்தலும் ஒரு சிலம்பும் ஒரு கொடுக்கும் ஒத்த மாராப்பும், ஒரு பந்தமும் கிளப் பாவாடையும் மஞ்சியில் தண்டியக் கொம்பில்லாத வீடும் துன்மைக்குக் கட்டணமும், பட்டடப் படிக்கு கட்டளையிட்டோம். குடும்பிகளுக்கு குதிரைக்குடையும் இட்டு இந்த இரண்டு கோட்டை விதைப் பாடும் கொடுத்து இந்த வரிசைப் பரிகாரம் கட்டளை இடுவித்தோம். இதற்க்கு அதிகம் பண்ணினவர்கள் கங்கைக் கரையில் பசுவைக் கொன்ற தேசத்திலே போலாவார்களாகவும்” ( தென்னிந்தியா கோயில் கல்வெட்டுகள் II 863D - 3226 , 432 /1914 ) என்று திருநெல்வேலி -சங்கரன் கோவில் - கரிவலம் வந்த நலூரிக் கோயில் கல்வெட்டுகள் குறித்துள்ளன. (தென்னிந்தியா கோயில் கல்வெட்டுகள் II 863D - 3226 , 432 / 1914 )"

இங்கே கூறும் தமிழ் வழக்கை கவனியுங்கள்...................
"சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு இருக்கின்ற காலத்திலே"
"ஒரு சாவியும் கொண்டு பூமியில் வந்தான் நால்வரில் முதல்வனுக்கு தேவேந்திரக் குடும்பப் பட்டமும் கட்டி, மூன்று பேருக்கு வாரியன்[வரியவன்], அக்கசாலை, (இளந்தாரியன்)[இளந்தாரி] என்று வரிசைப் பட்டமும் கட்டி ஒரு நாளையிலே 12000 கிணறு வெட்டி"

"பந்தக்காலும் துன்மைக்கு 2 தேரும் பஞ்சவன் விருந்தும் ....[ஏன் இடையில்...என்ன ஆச்சு?.............. கானோம்]. . . . .18 மேளமும் கட்டளையிட்டு"

"மூன்று கால் பந்தலும் ஒரு சிலம்பும் ஒரு கொடுக்கும் ஒத்த (மாராப்பும்), ஒரு பந்தமும் கிளப் பாவாடையும் "[ஏன் ரெண்டு ஜாக்கட்டு நாலு லுங்கியும் கொடுக்க வேண்டியது தானே"]

"இதற்க்கு அதிகம் பண்ணினவர்கள் கங்கைக் கரையில் பசுவைக் கொன்ற தேசத்திலே
போலாவார்களாகவும்” ( தென்னிந்தியா கோயில் கல்வெட்டுகள் II 863D - 3226 , 432 /1914 )"
[சிக்குனாண்டா சில்லுவண்டு].................................
...................இது முதலில் கல்வெட்டே கிடையாது...........இதில் வரும் செய்திகள் இன்றைய வழக்கு தமிழே...........கல்வெட்டு செய்திகள் கிடையாது.
...........................................................................
இது செப்பு பட்டய செய்திபோலத்தான் தெரிகிறது.....................இதன் கடைசியில் வரும் "கங்கைக் கரையில் பசுவைக் கொன்ற தேசத்திலே போலாவார்களாகவும்”..
.................................

..............இது முழுக்க முழுக்க தஞ்சை மன்னன் சரபோஜி மற்றும் சேதுபதி மன்னர்கள் பட்டயத்திலேயே
பிற்பாடு 18-ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் இசுலாமியருக்கு எதிராக[பசு புலால்] உண்பதை மறைமுகமாக விமர்சித்த வரிகளே யாகும்
....இந்த வரிகள் பிற்பாடே..............எனவே இதில் வருவது கல்வெட்டு செய்திகள் என நம்ப இடமில்லை.................
ஆனால் சில புனைவு எழுத்தாளர்கள் இந்திரன் மகன்களை பாண்டியன் சிறையெடுத்த கல்வெட்டு உள்ளதாக கூறுகின்றனர்.

உண்மையில் அந்த செப்பு பட்டயத்தில் என்ன தான் கூறியிருக்கிறார்கள் என பார்ப்போம்

அதில் சேர,சோழ,பாண்டியரை தேவந்திரன் என கூற வில்லை. அதாவது சேர,சோழ,பாண்டியர் இந்திரனை காண அவன் நாட்டுக்கு சென்றனர் அதில் பாண்டிய மன்னன் உக்கிர பெருவழுதி கோபம்கொண்டு தேவேந்திரன் குடும்பத்தாரையும் அவன் நாலு(4) மகன்களையும் இழுத்து வந்தான் என்று தான் கூறுகிறது.

அவர்களை வாரிசாக்கவில்லை கொத்தடிமையாக உழுதொழிலில் ஈடுபடுத்தினான்.
இந்த்ரனுக்கு ஜெயந்தன் என்ற மகன் இருந்ததாக புராணம் கூறுகிறது அவனை தவிர தனியாக நாலுமக்கள் இருந்ததாக ஆதாரமில்லை. அதுவும் இந்திரன் தன் மகனுக்கு வஜ்ரம்,வில்,அஸ்திரம்,தேர் கொடுப்பதற்கு பதில் கதலி விதை,பனை விதை,சென்நெல் கொடுத்தனுப்பினானாம். உன்மையில் அவர்கள் யார்?அவர்கள் இந்திரன் மகன் தானா?

பாண்டியனின் தனிச்சிறப்பு:

பாண்டியன் இந்திரனின் முடியை உடைத்து அவனை வீழ்த்திய சந்திர வம்சத்தவன்.இதற்கு பரிசாக அவனது ஆரத்தை பெற்றவன்.வேல் எறிந்து இந்திரன் மற்றும் வருணனின் சதிச்செயலை முறியடித்து மதுரையை காத்தவன் என புராணம் கூறுகின்றது.
சோழனின் தனிச்சிறப்பு:
முசுகுந்த சோழன் இந்திரனை வீழ்த்தி இந்திரப்பட்டம் புனைந்து இந்திரனாக அமர்ந்தவன்.பின்பு தேவரும் மூவரும் கேட்க இந்திரனது பதவியை அவனுக்கே விட்டு கொடுத்தவன்.சோழனின் லைடன் செப்பேட்டில் இந்திரனை சிறைப்பிடித்த ரகு வம்சத்தில் தோன்றிய ரவி குலத்திலகமென புகழ்பெற்றவன்.

நிஜ செய்தி இது தான்:

பாண்டியன் உக்கிரப்பெருவழுதி கீழ்க் காஞ்சியிலிருந்து நாற்பத்தொண்ணாயிரம்(41000) வேளாண்குடிகளைப் பாண்டி நாட்டிற் குடியேற்றினர் என்றும் தெக்கத்தூர், சுப்பிரமணியவேளார் என்பாரிடம் உள்ள ஒரு ஒலைச்சுவடியில் குறித்திருக்கிறது. ஆதொண்டைச் சக்கரவர்த்தி காஞ்சியிலிருந்து வெள்ளாளர்களைச் சோணாட்டில் குடியேற்றினர் என்றும், இதில் தேவேந்திர பள்ளன் மற்றும் தேவேந்திரப் பறையன் முதலிய தேவேந்திரன் மகன்கள் உண்டு.இன்னும் இரண்டு மகனார்கள் யார் என தெரியவில்லை.

பாண்டியன் உக்கிரப்பெருவழுதி நாலு(4) மகன்கள் அல்ல நாற்பத்தொன்னாயிரம் இந்திரன் மகன்களை தொண்டை நாட்டில் மட்டுமல்ல அவன் சிறை எடுத்த நாடு எது தெரியுமா? எல்லா
வேளாளர்களுக்கும் பூர்வீகமான கங்க நாடு என்றழைக்கப்படும் கர்நாடக நாடு.
கங்க மன்னன் தன்னை இந்திரனாக கூறிக்கொள்வான்.இவனது முத்திரை தேவேந்திரனின் வாகனமான யானையாகும்.

இவனது முன்னோர்கள் கங்கை கரையில் வேளாண்மையில் ஈடுபட்டவர்கள்.
கங்கநாட்டின் மன்னர்களின் சிலர்,
Western Ganga Kings (350-999) Konganivarman Madhava (350 - 370) Madhava (370-390) Harivarman (390-410) Vishnugopa (410-430) Madhava III Tandangala (430-469) Avinita (469 - 529) Durvinita (529 - 579) Mushkara (579 - 604) Polavira (604 - 629) Srivikrama (629 - 654) Bhuvikarma (654 - 679) Shivamara I (679 - 726) Sripurusha (726 - 788) Shivamara II (788 - 816) Rachamalla I (816 - 843) Ereganga Neetimarga (843 - 870) Rachamalla II (870 - 907) Ereganga Neetimarga II (907 - 921) Narasimha (921 - 933) Rachamalla III (933 - 938) Butuga II (938 - 961) Marulaganga Neetimarga (961 - 963) Marasimha II Satyavakya (963 - 975) Rachamalla IV Satyavakya (975 - 986) Rachamalla V (Rakkasaganga) (986 - 999) Neetimarga Permanadi (999) Indravarman (?-893) Devendravarman IV (893-?) Vajrahasta Anantavarman (1038-?)

இந்த மேலை கங்க மன்னரில் இந்திரன்,தேவேந்தரன், மல்லன் என பட்டங்கள் உள்ளதை கவனிக்கவும்.மேலை கங்கரின் சின்னம் யானை(ஐராவதம்) இது இந்திரனின் வாகனமான ஐராவத்தை(யானை) ஒத்தது.
பள்ளர்கள் ஆந்திராவில் இருந்து வந்த மலாஸ் சாதியர் என்றும் பள்நாடு என்ற பள்ளர் நாடு இன்னும் ஆந்திராவில் உள்ளது.








வடுக பள்ளர் 
==============

பள்ளர்கள் தங்களை வடுக பள்ளர் எனவும் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் எனவும் பழனி கோவில் செப்பேட்டில் தங்களை கொணர்ந்து பழனிக்கு குடியேறியது பழனி நாயக்கர்கள் தான் என குறிப்பிட்டுள்ளனர் 



தொட்டிய பள்ளர்கள்:



தொட்டிய பள்ளன்,வடுகபள்ளன்,அந்நிய பள்ளன்,கருநாடபள்ளன்,குடகு பள்ளன்....... என வரும் பள்ளர்கள் தமிழினமா? இன்னும் சிங்களர்களில் உட்பிரிவாக வரும் சிங்கள பள்ளர்களும் சிங்களப்பறையன் தெலுங்க பறையன் வடுகபறையன் கருநாட கோலியப்பறையன் தமிழினமா?


பள்ளர்களும் பறையர்களும் தமிழர்களே அல்ல தமிழ் மன்னர்களால் பிடித்து வரப்பட்டவர்கள்.

தெலுங்கு திராவிடர்களும்,கம்யூனிஸ்டுகளும் மற்றும் கிருத்துவ மிசினரிகள் தமிழ் மன்னர்களை இழிவு செய்யவே பள்ளர்,பறையர் என தமிழர்களை எழுதுகின்றனர்.

ஏன் இந்த திராவிடர்கள் பள்ளர் பறையரை தமிழர் அல்ல தங்கள் தெலுங்கு சாதி என ஏன் எழுதவில்லை என்றால் தமிழ் மன்னர்களையும் அவர்கள் வரலாறுகளையும் அழித்தொழிக்க நடந்த நீண்ட கால சதியே இவை

சளுக்க காலாடிகள் என்ற தலைப்பில் நஞ்சுண்டா சாமி என்ற கன்னட காலாடியர் எழுதியது.
2013/10/chalavadi-chalukyas-by-m-nanjundaswami.html
இதில் புலிகேசி என்பவன் புலையர் கேசியாம் கங்கரும் சளுக்கரும் விவசாய குடும்பத்தில் தோன்றினராம்.
There was a king called Polaveera (இதில் புலையவீரா என்ற கங்க மன்னன் இருந்ததாக கோலியர் என்ற கன்னட பள்ளர்கள் கூறுகின்றனர்)(Lord or Hero of land; Holeya) among the Ganga Kings. He was one of the sons of the Durveeneeta (495-535AD); the other son was named Mushkara. The Polaveera King granted Palachchoge village (EC. IX (1990) 537 AD, sixth century, Tagare village inscription, Hasan district, Belur taluk, page no. 472). 2. Pollabbe (mother of land, goddess of land) of NaguLas built the Basadi; a jain shrine (SII. XVIII, 315, 859-60, Ranibennur, Haveri district page no. 420). 3. Pratāpashāliyumappa hollagā(vunda)na guna prbhāvam (the influence of the powerful chief of Holla (Holeya or Poleya) village). (B. K. No. 108 of 1926; BK. 51, 1155) 4. There is an evidence of a Polaveera of Nolambas for having attacked the king Pruthvipati Didiga of Ganga dynasty. A brief synopsis of the ongoing discussion:
இதை வைத்து கங்கர்கள் பள்ளர்கள் எனக்கூற முடியாது அவர்கள் கீழ் இருந்தவர்களே பள்ளர்கள்.இதற்கு ஆதாரம்.

Ancestors of Pallars and Paraiyars?





Castes and Tribes of Southern India: Volume III—K

  1. www.gutenberg.org/files/42993/42993-h/42993-h.htm   Cached
    Project Gutenberg's Castes and Tribes of Southern India, ... Kalti (expunged).—A degraded Paraiyan is known as a Kalti.
  2. பள்ளரும் பறையரும் வேளான் கூலிகள் மட்டுமல்ல ஆங்கிலேயர் காலத்தில் குற்றபரம்பரையாக இருந்துள்ளனர் இதில் பள்ளு காலாடிகளும் பறையரும் இராமநாதபுர மாவட்டத்தில் குற்றப்பரம்பரையாக இருந்துள்ளனர்.

    சில நரபலிகள் வேறு பள்ளுபறையர் மக்களை கோட்டை கட்டுவதற்கும்,கட்டிடம்,அனை,மடை கட்டுவதற்கும் பல்வேறு காலகட்டத்தில் பயன்படுத்தியுள்ளனர். திருமயம் கோட்டை கட்ட பறையர் இருவரையும் Madurai மாரியம்மன் தெப்பகுளம் வெட்டுவதற்கு பள்ளரையும் நரபலிகளாக குடுத்துள்ளனர்.
கர்னாடக மைசூரின் பகுதியிலே காலாடி(பள்ளன்) தான்  ஊர் தோட்டி:


In a note on the Kulwadis, Kulvadis or Chalavadis of the Hassan district in Mysore, Captain J. S. F. Mackenzie writes * that " every village has its Holigiri as the quarter inhabited by the Holiars is called outside the village boundary hedge.
The Toti or Kulavadi (he who directs the ryots), always a Holaya, is a recognized and indispensable member of every village corporation. In his official position he the village policeman, the beadle of the village community, the headman’s henchman: but in the rights and privileges which yet cling to him we get glimpses of his former estate, and find proofs that the Hoilayar were first to establish villages. All the castes unhesitatingly admit that the Kulavadi is (de jure) the owner of the village. If there is a dispute as to the village boundaries, the Kulavadi is the only one competent to take the oath as to how the boundary ought to run and to this day a village boundary dispute is often decided by this one fact- if the Kulavadis agree, the other inhabitants of the village can say no more. Formerly when village was first established, a large stone, called Karukallu*, was set up within it. To such stones the Patel** once a year makes an offering, but the Kulavadi, after the ceremony is over, is entitled to carry off the rice, &c., offered, and in cases where there is no Patel, the Kulavadi performs the ceremony.
Melukote Chaluva Narayana Temple), the right of the outcastes (Mallas[பள்ளர்], Holeyas[பறையர்] and Madigas[சக்கிலியர்]) to enter the temple was stopped at the dhvaja stambham, the consecrated monolithic column, from which point alone can they now obtain a view of the god.”
The Mallas in the battle
The Malas or Holeyas who were called Malloyis by Tolemy and also called Mallas by the British
in their writings were the major antagonists of the British in the battle. Tipu sultan trusted the Malla soldiers more than any of his other soldiers for their bravery, obedience, and battle worthiness. It was one of the reasons why the battle took place in Mallavelly; the present Malavally in the Mandya district of Karnataka. The Malla soldiers attacking the Colonel Arthur Wellesley ’s British army can be seen in the painting shown at the top of the article.
ஆனால் அங்கே கர்னாடக பள்ளர்கள் தங்களை பாண்டியர் சோழர் என கூற வில்லை அவர்கள் தங்களை சளுக்க புலையர்கேசி என்ற புலிக்கேசி வழிவந்தவர்கள் என கூறுகின்றனர் ஆனால் அவர்கள் தங்களை கங்கர்கள்,சளுக்கர்கள் வழி வந்ததாக கூறுகின்றனர்,எப்படியென்றால் இங்கே  தெற்கில் உயர்ஜாதியினர் தங்களை வீழ்த்தி அரியணையை பறித்தாக இங்கே இவர்கள் எப்படிகதை கூறுகின்றனரோ அதே போல அங்கே உயர்ஜாதியினரை தூற்றியும் தம்மை சளுக்க,கங்கமன்னர்கள் வழிவந்தவர்களாகவும் கூறுகின்றனர்.

Mr. Hampa Nagaraiah has proved classically that the Chalukyas, Rashtrakutas and Gangas were agriculturists. He has based his studies on the sources available in the Indian languages and based on them he has made some hypothesis to draw the conclusions. I agree with him completely and would place before you some of my views based on my Sumerian and Akkadian studies

சளுக்கர்கள் வழிவந்தவர்கள் தான் காலாடியாம்(கர்னாடகபள்ளர்)

The descendants of the Chalukyas are called Chalavadis. T
he caste of the rich men in India becomes the upper caste and the caste of those who lose power and position becomes the lower caste.
சளுக்கர்கள் உழவராம் புலையர் வழி வந்தவன் தான் புலிகேசியாம்(புலையர்கேசியாம்)
Chalukyas belong to an agricultural family.
5. Chalukyas were agriculturalists from the Badami-Shirahatti areas of the northern Karnataka. The Polaveeras (the plowmen, land lords, Holeyas) of this family strengthened themselves to build up a dynasty that swayed over a large track of the land and founded the strong kingdom. The Rashtrakuta kings12 too were agriculturists, it is proved beyond doubt by the emblem that they had. It was a well designed plow it is the kind of plow even used throughout India. It seems the Ganga dynasty was also founded by an agricultural family. 6. The knowledgeable historians have to consider the natural derivation of the word Chalukya from the agricultural term that is closer to the reality and human beings rather than from the imaginary divine genesis of the dynasty13. 7. In the word Belvola (vel+pola(n) = velvola, belvola, belvala) the second half is pola; land.The Chalukyas were kings of the Belvola - 300 country.


"தெலுங்கு பறையர் கதை "

இப்படித்தான் ஊருக்கு ஒரு வேஷம்.


இங்குள்ள பள்ளர்கள் தங்களை மூவேந்தர் பரம்பரை எனக் கூறுவதுபோல் கர்னாடக பள்ளர்கள் தம்மை சளுக்க,கங்கர் வழி வந்தவர்கள் என்று அங்கு பொய்யை பரப்பி திரிகின்றனர்.

மொத்ததில் கங்கரும் சளுக்கரும் கூட பள்ளர்கள் கிடையாது
.அவர்களுக்கு கீழ் இருந்த கொத்துகுடி தான் இவர்கள்.
ஆனால் இன்றைய காலத்தில் அந்த ஊர் கன்னட பள்ளர்களும் இந்த மாதிரி பித்தலாட்ட வேலைகளில் இறங்கி உள்ளனர்.

மொத்தத்தில் உக்கிரபெருவழுதி பாண்டியனும் சோழனும் கங்க,சளுக்கர்களை வீழ்த்தி அந்த நாட்டில் உள்ள உழுகுடிகளை சிறை பிடித்து வந்தபோது இங்கு கொண்டு வரப்பட்டவர்கள் தான் பள்ளர்கள்.
இதைத்தான் தென்காசி கல்வெட்டு கங்க மன்னனின் உழுகுடிகளை சிறைப்பிடித்து வந்ததைத்தான்
தேவேந்திரன் மகன்களை சிறைபிடித்து வந்தான் என கூறுகிறது. அதுவும் 14-ஆம் நூற்றாண்டு கல்வெட்டா அல்லது செப்பு
பட்டயமா என முழுமையாக தெரியவில்லை.ஆனால் அதில் எந்த பள்ளனையும் பாண்டியன் என கூறவில்லை.

மேலும் இதில் பாண்டியன் பள்ளர்களை சிறைபிடித்து கொண்டு வ்ந்து உழவுக்கு ஆட்படுத்தினான் என்று தான் ஆதாரம் உள்ளதே தவிர பள்ளன் பாண்டியன் என்று எந்த ஆதாரமும் இல்லை.
இந்த பதர்கள் தான் தங்களை பாண்டியர் என கூறுகிறார்கள்

இவர்கள் காட்டும் எந்த ஆதாரத்தில் பாண்டியன் பள்ளன் என்று உள்ளது ?
1)இதில் எங்கே பள்ளன் பாண்டியன் என கல்வெட்டு உள்ளது?:


"கல்வெட்டே காணவில்லை"

தமிழகத்தில் நெல்லை முதன் முதலாய்ப் பயிர் செய்தவர்கள் பள்ளர்களே எனக் கூறும் கரிவலம்வந்த நல்லூர்க் கல்வெட்டும் ( ARE 432 /1914 ) திருவில்லிப் புத்தூர்க் கல்வெட்டும் (ARE 588 /1926 ) பள்ளர்களைப் பாண்டியன் உக்கிரப் பெரு வழுதியுடன் தொடர்புபடுத்துகின்றன
பாண்டியன் நெடுஞ்செழியனிடம் நீதி கேட்டுத் தனது கற்பின் வலிமையால் நீதியை நிலைநாட்டிய கற்புக்கரசி கண்ணகியின் பெருமையை உணர்த்தும் வகையில் 300 ஆண்டுகளுக்கும் மேலாகச் சித்தரைப் பிறப்பன்று வெண்குடைத் திருவிழாவைப் பள்ளர் குல மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
அந்த கொண்டாட்டம் இது தான்.

தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் புலையர் எனும் பழங்குடியின மக்கள் வாழுகின்றனர். இவர்கள் வேட்டையில் கிடைக்கும் இறைச்சி, மற்றும் காய், கனி, கிழங்கு வகைகளை உண்பர். புலையரது தலைவனுக்கு கணியன் என்று பெயர். இவர்களிடையே குடும்பி, குள்ளன், மல்லன், குடியன் என்னும் பிரிவுகளும் உள்ளன. சித்திரை மாத முழுநிலவு நாளில் விழா கொண்டாடுகின்றனர். திருமணவிழாவில் கற்பூரவல்லி என்று வாசமுள்ள செடிக்கொத்தொன்று மணமகள் கழுத்தில் அணிவிக்கப்படுகிறது. பெண்களிடம் பித்தளை மோதிரமும், கண்ணாடி வளையல்களும் அணியும் வழக்கம் பரவலாக உள்ளதுபெரும்பாணாற்றுப்படை ( 248 – 52 ) என்று பேசுகிறது.
Y





2)இதில் வரும் ஈழக் குடும்பிகள் என வரும் தொடர் ஈழவர் சமூகத்தை தான் காட்டுகிறது.

திருப்பரங்குன்றம் கோவில் கல்வெட்டி உள்ள ஓர் செய்தி
ஈழ குடும்பிகன் நெல்வேலி(இலங்கையில் உள்ள ஒரு ஊர்,தமிழக திருநெல்வேலி அல்ல) ஈழவன் என்பது ஈழநாட்டை சார்ந்த ஈழவனே.இதைப்போலத்தான் கன்யாகுமரி ஈழவ சாணார் பகுதியில் சாணாப்பள்ளர் என்பவர் இன்றும் வாழ்கின்றனர்.

“எருக்காட்டூர் ஈழக் குடும்பிகன் போலாலயன்( புலையர்) செய்த ஆய்சதன நெடுஞ்சாதனம்”
என்று ஈழக் குடும்பிகன் என்ற ஈழ நாட்டுப் பள்ளர் குலத்தவன் செய்வித்த கற்படுக்கை கொடை பற்றி மேற்கண்ட பொறிப்புகள் தெரிவிக்கின்றன.

"இதுவும் பள்ளன் தான் பாண்டியன் என்பதற்கு  ஆதாரமாம்"............எங்கு உள்ளது பள்ளன் பாண்டியன் என்ற ஆதாரம்.
இலங்கையை பொருத்தவரை பள்ளர்கள் சிங்களர்களின் உட்பிரிவாகவும் பிரதேமெடுத்தல்,பாணிய வழங்குதல் போன்ற கரும காரியங்களை செய்வதாகவும் இந்திரனான சிங்கள விஜயனை மூதாதயராக கூறும் இவர்களை பாவணர் போன்ற (பாதிபள்ளர்) இணத்தவரின் முயற்சியில் தான் இன்று தமிழர் என கூறிவருகின்றனர் என்பது தமிழ் ஈழ கருத்து.

சிங்கள தமிழர்கள்:

பள்ளர் பறையர் சாணார்கள் சிங்களர்களின் வாழும் தமிழர் எனவும். தமிழரில் வாழும் சிங்களர் எனவும்  தமிழ் தேசியம் என்ற கூட்டமைப்பு கூறுகிறது. இவர்கள் சிங்களர்கள் ஆதி தமிழர்கள் என அங்கீகரித்து கொள்கின்றனர்.
The Durave or toddy tapper castes are related to the Ezhavas of Kerala or the Nadar or Tamil Nadu. Mangala Samaraweera, former Minister of Foreign Affairs, one time member of the ruling Sri Lanka Freedom Party and fired by President Rajapakse belongs to the Durave caste.






இலங்கையை சார்ந்த வேத்தா எனும் வேட்டுவர் மக்களின் உட்பிரிவே பள்ளர்களும் சாணார்களும் என ஸ்ரீனிவாச அய்யங்கார் கூறுகிறார். இந்த வேதா மக்களின் மூதாதையன் இராவணன் ஆவான். அவனின் மகனே இந்திரா சித்தி. சாணார்கள் இறைவனின் அமைச்சர் ஒருவரை  மூதாயர் 
என கூறுகின்றனர் பள்ளர்கள் இந்திரன் என இந்திரசித்துவை கோருகின்றனர்.

பள்ளரும் சாணாரும் இலங்கை பூர்வீகமும் ஒரு வாய்ப்பு உள்ளது.





இடங்கை வலங்கை சாதி மக்கள் தத்தம் பூர்வீகத்தை தேடவும் முனைப்பாக செயல்பட்டனர்.  இடக்கையை சார்ந்த பள்ளிகள்,பள்ளர்கள் தங்களின் பூர்வீகம் ஆந்திரா,ஒரிசா என பல்லவ,பாண்டிய நாட்டுக்கு வெளியே தேடினர். ஆனால்

பறையர்,நத்தமான்,வேடன்,மலையமான் போனற மக்கள் சோழநாடே தங்களின் பூர்வீகம் என கூறுகின்றனர்

பள்ளர்கள் காஞ்சிபுரம்க இடங்கை வலங்கை கல்வெட்டு படி அவர்கள் பொஊர்வீகம் ஆந்திராவோ,கலிங்கமோ அந்நிய தேசம் எனவும் அவர்கள் இந்த நாட்டு குடிகளில் தங்களை அடிமகர்களாக சோழர்கள் பிடித்து வந்தனர் என இடங்கை வலங்கை வரலாறு கூறுகிறது. 
இடங்கை-வலங்கை 
ஸ்ரீனிவாச அய்யங்கார்.


பள்ளர்களை பற்றிய நிஜக்கல்வெட்டு இப்படித் தான் உள்ளது.

கொடும்பாளுர் கல்வெட்டு:
விக்கிரம கேசரி சதுர்வேதி மங்கலம்:
முதற்குலோத்துங்கனின் கல்வெட்டு(117)
விக்கிரம கேசரி சதுர்வேதி மங்கலத்தின் பிராமணர் ஒருவர் விளக்கு எரிப்பதற்கு 64 காசுகள் கொடை வழங்கிய செய்தி குறிப்பிடப்படுகின்றது.சிதைந்த நிலையில் காணப்படும் இரண்டாம் பாண்டிய பேரரசின் கற்ப்பொருப்பில்(கல்வெட்டு550)
"இப்பிரமதாயத்தின் புறஞ்சேரியிலிருக்கும் பள்ளரும்,பிடாகையிளிருக்கும் பள்ளரும் கற்றளேரி குளத்தை
செப்பனிடும் பணியை மேற்கொண்டமைக்காக சபையார் அன்னர்க்கு வழங்கிய பரிசில்"
கூறப்படுகின்றது.
இதற்க்கு பின்னர் காணப்படும் சக ஆண்டு 1227 மற்றும் ஸ்க ஆண்டு 1313 இரு கல்வெட்டுகளிலும்(687,777) சபா குறித்த செய்தி காணப்படவில்லை.



புதுக்கோட்டை மாவட்டம்:

13-ஆம் நூற்றாண்டுக்குரிய திருவரங்ககுள கல்வெட்டு(434) மற்றும் குலசேகர பாண்டியன் பெருஞ்சுனையூர்
கல்வெட்டு(561)...
" ஆலயத் திருப்பனி செய்ய நிதிப்பற்றாக்குறை காரணமாக குடிநீங்காத் தேவதனமாக விற்க்கபட்ட நிலத்திற்கு பள்ளிப்பேறு பள்ளர் பெற்ற பண்டம் ஆகிய செலவினங்கள் பொதுவில் இட்டு(நில உடைமையளரும் உழுகுடியும் சமமாய் செலவிட்டு) ஐந்தில் மேல்வாரம் அளக்க வேண்டும்"



சோழர் காலத்தில் சேரிகள் 

சேர்ந்து செறிவாக வாழ்ந்ததால் ‘சேரி’ எனப்பட்டது. இதுபோல் பார்ப்பனச் சேரி, ஆயர்சேரி என்றும் பண்டு அழைக்கப்பட்டுள்ளன. இன்றும் வடுகச்சேரி, செட்டிச்சேரி என்னும் ஊர்கள் இருப்பதையும் நினைவில் கொள்க.
சோழர் காலத்தில் அவரவர் சாதிக்குப் பின்னால் (கிராமத்தை) தூய தமிழில் சேரி என்னும் பெயரைச் சேர்த்துக்கொண்டனர். அந்த வகையில் கண்மானச்சேரி, பறைச்சேரி, ஈழச்சேரி, வலைச்சேரி மற்றும் தீண்டாச்சேரி ஆகியவை உருவாயின. தீண்டாச்சேரி என்பது கைவினைஞர் குடியிருப்பு, பறையர் குடியிருப்பு, ஈழவர் குடியிருப்பு, வலைஞர் குடியிருப்பு மற்றும் தீண்டத்தகாதோர் குடியிருப்பு ஆகியவை. பார்ப்பனர் குடியிருப்புக் கூட, ‘சேரி’ என்ற நிலையில்தான் குடியிருப்புகள் அமைந்திருந்தன.

சேரிமக்கள்(பார்ப்பானர்,பறையர்,இடையர்,கம்மாளர்,ஈழவர்,செட்டி ,பள்ளர்) இவர்கள் அனைவரும் பூசகர் அல்லது அந்தணர் என்னும் தகுதி தங்களுக்கே உண்டு என கூறுபவர்கள் . இவர்களனைவரும் பூணுல் இடும் மக்கள் . அந்தணன் என்னும் தகுதி இல்லாவிட்டாலும் பூசாரி என்னும் பட்டமாவது தங்கள் இனத்தில் ஒருவருக்கு வைத்திருப்பார் 

பார்பானுக்கும் பறையருக்குமான பழமொழிகள் ஏராளம் உண்டு.

சேரி எனும் வரும் மக்கள் ஒரே மக்களா இல்லை வேறு வேறு மக்களா என்பது ஆய்வுக்குரியது.


•நாட்டரசன்கோட்டை செப்பேடு 1•
மாட்சிமை தாங்கிய, சிவகங்கை சமஸ்தானம் - தேவஸ்தானம் மேதகு DSK. மதுராந்தகி நாச்சியார் அவர்களின் ஆளுமையில் உள்ள நாட்டரசன் கோட்டை அருள்மிகு கண்ணுடைய நாயகி அம்மன் ஆலயத்தைச் சேர்ந்த ஊழியர்கள் சிலரிடம் அவர்களின் உரிமைகளைப் பேசும் மூன்று பட்டயங்கள் உள்ளன.
அவற்றில் இதுவும் ஒன்றாகும். இவை வரலாற்றிற்கு புதிய வரவுகளாகும்.
இந்த பட்டயம், நாட்டரசன் கோட்டையில் வசிக்கும் பறையர் சமூகத்தைச் சேர்ந்த திரு.முத்துக்குமார் அவர்களிடம் உள்ளது. பட்டயத்தில் குறிக்கப்படும் " சின்னான்" வழியில் வந்தவர்கள் இந்த குடும்பத்தினர்.
இவர்கள் இன்று வரை கண்ணாத்தாள் கோயிலின் வெளிமண்டபத்தில் மேளம் அடிப்பது, தேருக்குத் தைலங்கொடி வெட்டி வந்து கட்டி வைப்பது, ஆலய வளாகத்தைச் சுத்தமாகப் பராமரிப்பு செய்வது ஆகிய பணிகளைச் செய்து வருகின்றனர். இதற்காக இவர்களுக்கு மானிய ஊழியத்துடன், திருவிழாக் காலங்களில் ஆட்டுத்தலை இரண்டும், காளாஞ்சியும் தரப்படுகிறது. பட்டயத்தில் இவர்களுக்கு ஆட்டுக் கால்கள் தரப்பட்டுள்ள செய்தி வருகிறது.
•செப்பேட்டின் காலம் •
சிவகங்கை மன்னர் சசிவர்ணத் தேவரின் தகப்பனார் கன்று மேய்க்கி பெரிய உடையாத் தேவரவர்கள் ஆவார், அவருடைய பெயரே சசிவர்ணத் தேவருக்கும் இந்த பட்டயத்தில் பயின்று வந்துள்ளதாக அறிகிறேன். ஏனெனில் , " தாண்டறாய பிள்ளை பிறதானிக்க நாளையில்" என்று செப்பேட்டில் வாக்கியம் வருகிறது. தாண்டவராயப் பிள்ளை சசிவர்ணத் தேவரின் காலத்தில் தொடங்கி முத்துவடுகநாதத் தேவர் காலம் முடிய சிவகங்கைப் பிரதானியாக இருந்தவர். ஆகவே இதன் காலம் 18 ம் நூற்றாண்டு. இது மன்மத வருடம், மாசி மாதம் 22 ம் தேதி எழுதப்பட்டுள்ளது.
• பட்டயம் சொல்லும் செய்திகள் •
18 ம் நூற்றாண்டின் சமூகநிலையை இந்தப் பட்டயம் படம்பிடித்துக் காட்டுகிறது. வளநாடு எனும் நிர்வாகப்பிரிவுகள் சுட்டிக்காட்டப் பெறுகிறது. தேவர் - செட்டியார் முதலியோர் நீதியும் நிதியும் தரும் இடத்திலும், பள்ளர் - பறையர் - சக்கிலியர் முதலியோர் அதை மேற்கண்டோரிடம் பெறுபவராகவும் இருந்துள்ளனர்.
மேளம் அடிக்கும் தொழில் பறையர்களுக்கானதாக அறியப்படும் நிலையில், இந்த பட்டயத்தில் பள்ளருக்கும் அது உரித்தான தொழில் எனும் செய்தியை ,...
" பறையங்கள் யிப்போது கொட்ட தப்பு கிடையாது யென்று சொன்னான் அதற்கு உள்ளூற் பள்ளனை மேளங் குடுக்க சொன்னாற்கள் யென்னிடத்தில் மண் மேளந்தானிருக்குது யென்று சொன்னாற்கள் மேற்படி மேளம் உடைந்து போனால் போன மேளந் தாரேன் யென்று பறையங்கள் சொன்னாற்கள் " - (வரிகள் 22 லிருந்து 28 முடிய)
- எனப் பயின்று வரும் வரிகள் தெளிவுபடுத்துகின்றன. இவர்கள் தங்கள் சமூகக் கடமைகளில் இருந்து தவறும்போது, அவர்களுக்கு அபராதம் விதித்தல், கொடுத்த காணியைத் திரும்பப் பெற்றுக் கொள்ளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்துள்ளதை அறிய முடிகிறது.
• பட்டய வரிகளின் விளக்கம் •
சிவகங்கை மன்னர் சசிவர்ணத் தேவர் அரசாள, அவரது பிரதானியாக தாண்டவராயப் பிள்ளை இருக்கும் காலத்தில்,.. ஆனக்கன் சேனை வளநாட்டைச் சேர்ந்த சேவளத்தூர் முத்தண்ணத்தேவர் மற்றும் மன்னமுடித் தேவர் ஆகியோரது இல்லங்களில் முறையே வெள்ளையன், மசறவெட்டி மற்றும் நத்தான் வீமன் ஆகிய பறையர்கள் வேலைசெய்து வரும்போது மாடு காணாமல் போக விட்டு விடுகின்றனர்.
இதனால் அவ் வீட்டார்கள் இவர்களை ஒரு கூடத்தில் அடைத்து வைத்து, மிளகாய் மீது முட்டியிட வைத்து, சித்ரவதை செய்து இனி உங்களுக்கு உழுவதற்கு நிலம் கிடையாது என்று கூற, விஷயம் உள்ளூர் பெரிய மனிதர்களின் காதுக்குப் போகிறது. அவர்கள் எல்லோரும் சேர்ந்து அப்படிச் செய்ய வேண்டாம் என்று தண்டனையை நிறுத்தி, மேற்கண்ட பறையர்களுக்கு அபராதம் போட்டு, வெள்ளிக்கிழமை அன்று ஐயனார் கோயிலுக்கு மேளம் அடித்து வணங்க வேண்டும் என்று கூற, அந்த அபராதத்தை நத்தை பொறுக்கிக் குடும்பன், இருளக் குடும்பன், சிலம்பக் குடும்பன், மானம்பாக்கிக் குடும்பன் ஆகிய நால்வர் பறையர்களுக்காக முன்நின்று ஏற்றுக் கொள்கின்றனர்.
மேற்கண்ட நான்கு பறையர்கள் மேளங்கள் எங்களிடம் இல்லை கொடுத்தால் அடிக்கிறோம் என்று கூற, பறையர் மேளம் கொட்ட பள்ளர்கள் தங்களின் மேளங்களைத் தரட்டும் என்று பஞ்சாயத்தில் சொல்லப்படுகிறது. உள்ளூர் பள்ளர்களான மேற்கண்ட நால்வர் எங்களிடம் மண்ணால் செய்யப்பட்ட மேளங்களே உள்ளன என்று கூறி, அது உடைந்து போனால் யார் தருவது என்று கேட்கின்றனர். அவ்விதம் மேளம் உடைந்து போனால் அதற்குப் பதிலாக வேறு மேளங்களைத் தருகிறோம் என்று பறையர்கள் உறுதியளிக்கின்றனர். ஆனால்.. மழையில் மேளங்கள் கரைந்து விடுகிறது, பள்ளர்கள் வாங்கிய மேளத்தைத் தருமாறு கேட்க, மாலையில் தருகிறோம் என்று கூறிய பறையர்கள் நால்வரும் அதற்குப் பிணையாக 'சோனை' எனும் சக்கிலியரை வைக்கின்றனர்.
பிறகு சொல்லாமல் கொள்ளாமல் இரவோடு இரவாக காட்டுக்குள் ஓடிவிட்டனர். இவர்களைக் காட்டிலுள்ள ஊருணி அருகே கண்டுபிடித்து வளச்செட்டி கண்டன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் செட்டி ஆகியோரிடம் சென்று வழக்கு கேட்க அவர்கள் உங்கள் உள்ளூரில் கொடுத்த தீர்ப்பே போதும் அதன்படி நடந்து கொள்ளவும் என்று கூற, உள்ளூர் அளித்த தீர்ப்பின்படி இன்னும் இவர்கள் 30 பொன் தரவில்லை என்று பள்ளர்கள் முறையிட்டனர். இதனால் அந்த தீர்ப்பை ஒரு ஓலையில் எழுதி பறையர்களுக்குத் தந்துவிட்டு, அதன் ஒரு நகலை பள்ளர்களிடம் அளிக்கின்றனர்.
இதை ஒப்புக் கொண்ட பறையர்கள் மீண்டும் சாத்தரசன்கோட்டை எனும் ஊருக்கு ஓடிப்போய்விட்டனர். மீண்டும் அவர்களைக் கண்டுபிடித்த பள்ளர்கள் அவர்களை அவ்வூரிலிருந்த சாத்தரசன் - தெத்தரசன் - மூவரசன் ஆகியோரிடம் கூட்டிச் சென்று நியாயம் கேட்கின்றனர். அவர்கள் மூவரும் முன் அளித்த தீர்ப்பின்படி மீண்டும் நடந்து கொள்ளப் பணிக்க, அதை மறுத்து பறையர்கள், நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்த கனகசெட்டித் தேவன் - நாட்டரசத் தேவன் - கரியாங்குடியான் - சினகராயன், வடகளவழி நாட்டார் காளைப் பட்டாராசன் - முகநாராயணப் பிள்ளை - பேயி வெட்டிக்காளை ஆகியோரிடம் சென்று தக்க நீதி கேட்கிறார்கள். இருவரிடமும் விசாரணை செய்து முன் அளித்த தீர்ப்பிற்கு ஏதும் ஆதாரம் இருக்கிறதா என்று கேட்க, பறையர்கள் இல்லை என்றனர். ஆனால் பள்ளர்கள் தங்களிடம் இருந்த தீர்ப்பு நகலைக் கொடுத்தனர். பள்ளர்களின் பக்கம் நியாயம் இருப்பதை அறிந்த மேற்கண்ட நாட்டார்கள் பறையருக்கு நூறு பொன் அபராதம் விதித்தனர். பறையர்களால் இந்த அபராதம் கட்ட முடியாத வகையில், நாட்டரச முதலி அந்த அபராதத்தை நான் கட்டுகிறேன் அதற்குப் பதிலாக மேற்கண்ட பறையர்கள் என்னிடம் வேலை செய்ய வேண்டும் என்று கூறி, அவர்களுக்கு உழுநிலம், குடிக்க கஞ்சி, அவர்களுக்கு நேரும் நன்மை - தீமைகள் அனைத்தும் பார்த்துக் கொள்வதாகக் கூற, பறையர்கள் ஒப்புக் கொண்டு அதன்படி நடக்கின்றனர்.
சிசம்பன் எனும் ஆசாரி எழுத, பட்டயத்தில் பறையர்கள் நால்வரும் ஒப்பமிட்டுள்ளனர்.
• செப்பேடு வரிகள் •
1. உ ஸ்ரீ ராமஜெயம்
2. மன்மத ௵ மாசி ௴ உ൰ ௳ கண்ணுமேக்கி உடை-
3. யதேவற் விசையரெகுநாதத்தேவன் றாச்சியத்தில் தா-
4. ண்டறாயபிள்ளை பிறதானிக்க நாளையில் ஆனக்கந்
5. சேனைவளநாடு சேகறம் சேவளதூற் முத்தண் –
6. தேவற் வீட்டில் வெள்ளையனும் மஸறவெட்டியும் நத்-
7. தானும் வீமனும் மன்னமுடி தேவற்வீட்டிலும் ௸(மேற்படி) முத்-
8. தண் தேவற்வீட்டிலும் துறசன வேலை செயிதும் மாட்-
9. டைகானாமல் பிடித்தும் யிப்படி செயிதபடியால் கண்டு பி-
10. டித்து உண்ணிகூடத்தில் அடைத்துவையித்து மொள-
11. காயை புதைத்து தொந்தறவு செயிது காணிகறையில்-
12. லை யென்று சொன்னார்கள் அதற்கு உள்ளுற் பரிதி
13. சொ[ன்]னா[ற்]கள் அப்படி சொல்லுவது சறியில்லை
14. காணிபூமி குடுக்க வேணுமென்று சொன்னார்கள்
15. யின்னைக்கி வெள்ளிக்கிளமை அய்யனாற் கோவி-
16. லுக்கு நாள் வைக்கப் போறொம் தப்புகொம்புயெ-
17. டுத்துச் செவிக்க சொல்லுங்கள் யென்று சொ-
18. ன்னா[ர்]கள் அதுக்கு நத்தைபுறக்கி குடும்பனையும் சே-
19. வளற்தூற் யிருளக்குடும்பனையும் சிலம்பக்குடும்பனையும்
20. மானம்பாக்கி குடும்பனையும் நாலு பேறையும் நெதையி-
21. ல் வைக்க அவதாறத்தை யேத்துக்கொள்ள சொன்னாற்-
22. கள் அது போலெ யேத்துக்கொண்டான் ௸(மேற்படி) பறை-
23. யங்கள் யிப்பொது கொட்ட தப்பு கெடையாது யெந்
24. று சொன்னான் அதற்க்கு உள்ளுற் பள்ளனை மோள-
25. ங் குடுக்கச் சொன்னாற்கள் யென்னிடத்தில் மண் மோள-
26. ந்தானிருக்குது யென்று சொன்னாற்கள் ௸(மேற்படி) மே-
27. ளம் உடைந்து போனால் போன மோளந்தாரென்
28. யென்று பறையங்கள் சொன்னாங்கள் அதற்க்-
29. கு கோவிலுக்குப் போயிட்டு வரும் போது மளைபெயிந்து
30. மோளம் உடைஞ்சு போச்சுது உடைஞ்சு போன சே-
31. தி கேட்டு பள்ளன் மோளம் கொண்டு வா வென்று சொ-
32. ன்னான் சாயந்திறம் தாறொமென்றான் அதுக்கு சாமி-
33. ந் கேட்டான் சக்கிலியசோனை யெத்துக்கொண்டா-
34. ன் அண்ணைக்கு [றா]த்திறியில் புறப்பட்டு காட்டு ஊறணி-
35. க்கி ஓடிப்போயிட்டான் தடத்தைப் பக்கிபிடித்து வள-
36. ச்செட்டி கண்டணிக்கி கூட்டி போயி வளக்கு கேட்டாற்க-
37. ள் முத்துகிஷ்ட்டணன் செட்டிவகையாற் பேற்களும்
38. கூடி கெள்க்கும் போது உள்ளுற்தி கேத்து சறியென்று -
39. (சொ)ன்னாற்கள் யினிமேல் பேசியபடிகித் தருவான்
40. யென்று சொன்னாற்கள் உள்ளுற் அவதாறம்
41. போட்ட முப்பது பொன் யின்னும் தறவில்லை யென்-
42. றான் தேசத்தாற் நாளை கேட்டுத்தரனு மென்று சொன் –
43. னாற்கள் தீருப்பு நகுலை பள்ளன் வாங்கிக் கொண்டா-
44. ன் பறையன் ராத்திறியில்ப் புறப்பட்டு சாத்தறசன் கோ-
45. ட்டைக்கி ஓடிப்போயிட்டான் தடத்து வளியெ பொயி-
46. கண்டுபிடித்து சாத்தரசன் தெத்தரசன் மூவரசனிடத்தி-
47. ல் கூட்டிக்கொண்டு நாயம் கேட்டாற்கள் முன் திற்ப்-
48. பு சறியென்று சொன்னாற்கள் அதுக்குச் சம்மதியா-
49. மல் மேலேறிய நாட்டறசம்பத்துக்குப் போனான் அங்-
50. கே கண்டுபிடித்து நாட்டிலெ கொண்டு போயி ஞாயம்
51. சொல்லும் போது நகுலை யிருக்குதாவென்று கேட்டாற்-
52. கள் பரையன் யில்லை யென்றான் பள்ளன் குடுத்தான்
53. ௸ (மேற்படி) நகுலை பாற்க்கும் போது பறையன் செயிதது தப்புதா-
54. மென்று மோளத்துக்கு வேலை ௬௰(60) பொன் அவதாறம்
55. ௰ (10) பொன் ஆக பொன் யெளுவதும் குடுக்க சொன்னாற்க-
56. ள் யிந்த தீற்ப்பு கனகசெட்டி தேவனும் நாட்டரச-
57. தேவனும் கறியான்குடியானும் சிணகறாயனு-
58. ம் வடகறை வெளுவநாட்டாற் காளைபட்டாறசன் மு-
59. கநாறாயனபிள்ளையும் பேயிவெட்டிகாளையும் வலை-
60. சட்டியாற் முத்துபணிக்கன் பூவூணடியெ காளிஅ-
61. ளகன் பரிசாரி நெவளி அஞ்சுவகை தொள்ளாளி
62. கத்தாபட்டு சொடாலையிளெ அ (😎 பெரும் கூடி ௸ (மேற்படி) நாட்ட-
63. ரச முதலி ௸ பொன் ௱ (100) குடுக்க சொன்னாற்கள் நா-
64. ன் குடுத்தால் யெனக்கு பறையன் யென்ன உபகா-
65. றம் (செ)யிவான் யென்று கேட்டான் நீ சொல்லுறபடி
66. கேள்க்கச் சொல்லுரோமென்று சொன்னாற்கள் -
67. யெனக்கு கொட்டாறக் காற்க்க வேனுமென்று சொன்னா-
68. ற்கள் அதுக்கு யென்ன சம்பளம் குடுக்குறதென்று கே-
69. ட்டான் ஒரு சட்டி கஞ்சியும் ஒரு வேட்டியும் நாதரக்காலு நா-
70. லுகாலும் சிருகுடல் அஞ்சிலெ ஒருபங்கும் தங்குலா வே-
71. லைக்கி நன்மை தின்மைக்கி ஒரு பணமும் ஒரு பானை சாதம் ந-
72. ன்மை தின்மைக்கி தப்புகொட்டாவும் யிஷ்பறன் கோவில்
73. தேற் அடிவிட்டு யிருக்குது நானுனக்கு காணியில் அறைபங்-
74. கும் தருகிறேன் ஆவுடையான்னுக்கு அறைபங்கு விட்டு முன் பொ-
75. ன்னும் தந்து யிருக்குறென் யென மலைபோலெ வேலை-
76. பாற்த்தார் தபோனாய் ௸ பொன் நூறு குடுத்து விட்ட காணியும் இளந்து
77. பொக வெணுமென்று சொன்னான் அந்தபடிக்கி சரியென்று ஒ-
78. ப்புகொண்டான் முன்பாலை முன்சந்தணம் முதலி நாட்டறசன் வா-
79. ங்கி பொறகு பளிகாணி சின்னான் வாங்கிறது அப்பால் அவறவற்
80. சேற்ந்த பேற்கள் வாங்கி கொள்கிறது
81. இந்த படிக்கிறவ – வெள்ளையன்
82. இந்த [படி]க்கிறவ- மஸறவெட்டி
83. இந்த- நத்தான்
84. இந்த – வீமன்
85. இந்தபடிக்கி கல்லுகாவேரி புல்லுபூமி சந்திறன்
86. சூரியாள்(ன்) உள்ள வரைக்கி ஆண்டு அனுபவித்து கொள்வாறாகவும்
87. இந்த பட்டையம் எளுதினது சி சம்பனு ஆசாறி
நன்றி!






பெருவாயில் நாட்டு பெருஞ்சுனையூரில் உள்ள கல்வெட்டு:
கல்வெட்டு(561)
"பெருவாயில் நாட்டு பெருஞ்சுனையூரில் சிவாலயத்திருப்பனிக்குரிய செலவிற்கு ஒற்றி வைக்கப்பட்ட தேவதான நிலத்திற்கு மேல்வார அளவு கூறுகையில்
பள்ளி பேறு பள்ளன் பெறும் பண்டம் ஆகியன் பொதுவில் ஏற்று கொள்ளப்பட வேண்டும்" என கூறப்படுகின்றது.இங்கு பள்ளித்தியர் பள்ளர் ஆகிய வேளான் தொழிலாளர்கள் சுட்டப்படுகின்றனர்.வர்மன் குலசேகர பாண்டியனின் வாராப்பூர் கல்வெட்டு மற்றும் மேலூர் கல்வெட்டு:


காலம் 14-ஆம் நூற்றாண்டு

"முனையதரையின் மக்கனாயன் என்பார் தன் மகன் சீராள தேவர்க்கு காணியாட்சியும் மனையும் அடிமைகளையும் கொடுத்த செய்தி கூறப்படுகின்றது. தாம் கொடுத்த அடிமையாரன் தேவியும் இவள் மகள் சீராளும் தம்பி சீராளனும் மகன் திருமெய்ய மலையாளனும் சிவத்த மக்கனாயனும் ஆகிய பேர் எட்டும்
பள்ளடியாரில்(அடிமைகளான பள்ளரில்) வளத்தி மகள் மன்றியும் இவள் மகள் பொன்னியும் கொள்ளி மகள்
தொழுதியும்,உடப்பி மகன் பொன்னனும்,வளத்தி மகன் வில்லியும் அக இவ்வகைபட்யுள்ள அடிமையும் காணியாட்ச்சியும் மனையும் அளிக்கபட்டதாக கூறப்படுகின்றது.
இங்கு பள்ள குடும்பத்தினர் முழுமையும் அடிமைகளாக கூறப்படுகின்றது.



முதலில் கூறப்பட்ட எட்டு அடிமைகளும் பள்ளர் சமூகத்தவர்கள் அல்லர்.அவர்கள் வெள்ளாளர் முதலான பிறசமூகத்தவர்.




விஜயநகர காலத்திய கல்வெட்டில்

அரையர் குழுக்கள் பகை கொண்டு மோதிக்கொண்டு பின்னர் பகைதீர்ந்து உடன்பாடு(காவமுறி) காண்கின்றனர்
ஓடிப்போன பள்ளர் அடிமைகள்(பள்ள பசகள்)க்கு தஞ்சம் கொடுத்தமையே இப்பகைக்கு காரணமாம்.
"முன்னாளில்
மாவலி வானாதிராயனின் குழுவிற்குரிய பள்ளர் அடிமைகள் ஓடிப்போய் நெருஞ்சிக்குடி ஊரில் தஞ்சம் புக,மாவலி வானாதிராயன் நெருஞ்சிக்குடி ஊரவரின் மாடுகளை அழித்து ஓடிய பள்ளரையும்
பிடித்துக் கொண்டு வருகையில்,
நெருஞ்சிக்குடி ஊரவர் பரம்பையூர் ஊரவரயும் துணைக்கழைத்து கொண்டு வானாதிராயனை எதிர்த்தனர்"


இதே போல,
காடவ மல்லன் என்றும் மூவன் காடவப் பிள்ளை என்பவனையும் பள்ளர்கள் தங்கள் இனத்தவன் என கூறும் கல்வெட்டும் பொய்யே.
கல்வெட்டு (439),
வலையர் இனத்தவர்களான மூவன் காடவப்பிள்ளை ஒரு நிகழ்விலும்,காடவமல்லன் ஒரு நிகழ்விலும்,வலைவாணன் எனும் வலையர் தலைவன் இரு நிகழ்விலும் காவற்பொறுப்பை ஏற்றுள்ளனர்.
ஆனால் படைப்பற்று குடியிருப்பான குருந்தன் பிறையை சார்ந்த மூவன் காடப்பிள்ளை இக்குடியிருப்பின் ஆளும் வர்க்கமான மறவர்களின் கட்டுப்பாட்டிலே செயல்பட்டதாக கூறுகிறது.

சோழர் கல்வெட்டு:
சோழர் கால கல்வெட்டுக்களிலும் குடியிருப்பு என்ற பொருளிலேயே சேரி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பறைச்சேரி (தெ.இ.க;4,க.எ.529;52,81,83) (தெ.இ.க;26, க.எ.686)
மேலைப்பறைச்சேரி (தெ.இ.க. தொகுதி2, க.எ.5)
என்று வரும் வரிகள் இதற்குச் சான்றாகும். மேலும் தலித்துகளுக்குரிய நிலங்கள் பறைத்துடவை (தெ.இ.க. 26, க.எ.686) பள்ளன் விருத்தி(தெ.இ.க.8 க.எ.151) என்றும் அவர்களுக்குரிய சுடுகாடு பறைச்சுடுகாடு (தெ.இ.க.4, க.எ.529, 68, 79, 83, தெ.இ. க. உ.தொகுதி 1,2, க.எ. 5)என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

வரி

சோழர் காலத்திலேயே பள்ளர் வரி தொடங்கி விட்டது:

TANJAVUR BRIHADHISWARA TEMPLE INSCRIPTIONS
INSCRIPTIONS ON THE WALLS OF THE CENTRAL SHRINE
No. 95. On the outside of the north enclosure.[1]
This record begins with the prasasti Tirumannivalara, etc., of the king.
It records the gift of 150 cows to the temple of Tirukkalatti-mahadeva by Chalukkiyakalakalan Kalappiriyan, the kankani-nayakam of Arrur-nadu.  The cows were distributed in the presence of Velipak-kilan Koyilmarayan, the Srikaryam and devarkanmigal of the temple, at the instance of the donor, among the shepherds Pallan Sattan, Pallan Sanan, Totti Madhavan . . . . . . . . . . tta-kon, and Sangan Alinjil, 30 a piece, stipulating the daily supply by each of them of 1 ulakku of ghee measured by Arumolidevan nali.  And another (2) endowment of 9 anradu narkasu, paid into the temple treasury by Vallan Kilan Sadangavi Soman of Pungunram in Tirumunaippadi for the supply of 1 alakku of ghee out of the interest on the endowed amount for mantradipam, andikkappu and tiruvalatti.
 [To the shepherd Pallan[29]].................. [residing] at Sri-Parantaka-chaturvedi[mangalam], a free village in Rajendrasimha-valanadu, were assigned ninety-six ewes in all, (viz.) seventy-two cases out of the ewes given by the [Pe]rundaram Lokamarayan for the sacred lamps (which he) had (vowed) to put up “(in case) no filth was thrown (on) him in the war of the lord Sri-Rajarajadeva at Kori ;” and twenty-four ewes, (which could be got) for the eight kasu given out of the money deposited, for sacred lamps, by the royal secretary, Karayil Eduttapadam, the headman of Rajakesarinallur. From (the milk of these ninety-six ewes) he himself and his dependents, (viz.) his uterine brothers Pallan Kuttan and Pallan Kiran ; his nephew Mugatti Eruvan ; and the shephered Modan Tiran, living at Sri-Parantaka-chaturvedimangalam, a free village in Rajendrasimha-valanadu, have to supply (oneurakku of ghee per day, for one sacred lamp, by the Adavllan (measures).
மேலும் தலித்துகளுக்குரிய நிலங்கள் பறைத்துடவை (தெ.இ.க. 26, க.எ.686)

பள்ளன் விருத்தி(தெ.இ.க.8 க.எ.151)

என்றும் அவர்களுக்குரிய சுடுகாடு பறைச்சுடுகாடு (தெ.இ.க.4, க.எ.529, 68, 79, 83, தெ.இ. க. உ.தொகுதி 1,2, க.எ. 5)என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.
சோழர் காலத்தில்

பள் வரி, பறை வரி

என்ற வரிகள் நடைமுறையில் இருந்துள்ளன. சில நேரங்களில் இவ்வரி கட்டுவதிலிருந்துவிலக்களிக்கப்பட்டதையும் சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. மேலும் அரண்மனைக்குக் காணிக்கைப் பணமாக மக்கள் செலுத்தவேண்டிய வரி வாசல் காணிக்கை எனப்பட்டது. இவ்வரியிலிருந்து

பள்ளர்களுக்கு விலக்களிக்கப்பட்டதை பள்ளக்குடிக்கு வாசல் பணம்மானியமாகவும் (தெ.இ.க. 26, க.எ.336) என்ற கல்வெட்டு வரி தெரிவிக்கின்றது.

உழப்பறையர், தேவேந்திரப் பறையன் என்ற உட்பிரிவுகளையும் சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.
விக்கிரமச் சோழன் காலத்தியக் கல்வெட்டொன்றில் வெள்ளான் மாப்புள்ளிகளில் சோழன் பறையனான தனபாலன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
வேளாண்மைத் தொழில் செய்து வந்த பறையர்கள் வெள்ளாளன் என்று அடைமொழியிட்டு அழைக்கப்பட்டனர் என்பதை இக்கல்வெட்டு வெளிப்படுத்துகிறது. (SII ங:253)
சேதுபதிசெப்பேடுகளில் இடம் பெறும் பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.
பள்ளுப்பறை சகலமும் சர்வ மானியமாக (இராசு.1994;208) பள்ளுப்பறை இறை, வரி ,ஊழியம்....ஆண்டனுபவித்துக் கொள்ளவும் (மேலது, 242) பள்ளுப்பறை...சந்திராக்கமாக அனுபவிச்சிக் கொள்வாராகவும் (மேலது, 451) பள்ளுப்பறை சகலமும் ஆண்டு கொள்வது (மேலது, 528)

இலக்கிய ஆதாரம்:

இவர்களுக்கு இலக்கிய ஆதாரத்திற்கு மள்ளர் இலக்கியம் என சில வரிகள் வருகிறது என்று ஆதாரமாக சில வரிகளை காட்டுகிறார் தவத்திரு பள்ள சித்தர் குருசாமி அது எந்த இலக்கியம் என குறிப்பிடுவதில்லை. "திருவிளையாடல் புராணத்தில்" மள்ளர் பற்றிய சிறு குறிப்பு வரும். ஆனால் அது 16-ஆம் நூற்றாண்டு என்றும் 18-ஆம் நூற்றாண்டு என்று சிலர் கூறுகின்றனர். அதில் வரலாற்று ஆதாரம் கிடையாது. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தை எழுதியவர். இவர் வேதாரணியத்தில் வசித்த மீனாட்சி சுந்தர தேசிகரின் மகன் ஆவார். தந்தையே குருவாக இருந்து, மகனுக்கு சைவ சித்தாந்த கருத்துக்களைப் போதித்தார். வேதாரணியத்தில் கோவில் கொண்டுள்ள சிவனை துதித்து வந்த பரஞ்சோதி முனிவர், தமிழகத்திலுள்ள பிறகோயில்களையும் பார்க்க ஆவல் கொண்டார். மதுரைக்கு வந்த அவர், மண்டபம் ஒன்றில் தங்கியிருந்த போது, அவரது கனவில் தோன்றிய மீனாட்சியம்மன், சிவன் அந்நகரில் நிகழ்த்திய லீலைகளை அழகு தமிழில் பாடும்படி உத்தரவிட்டாள்; அதற்கிணங்கி பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தை எழுதினார் என்பது தொன்ம நம்பிக்கை. மதுரையில் சிவபெருமான் செய்த திருவிளையாடல்கள் பற்றி என்னும் வடமொழி நூலில் சொல்லப்பட்டுள்ளது. இயற்றிய இந்த லீலைகள் சொல்லப்பட்டுள்ளன. இந்த லீலைகள் பற்றி சொன்னார் என்றும், அதை வியாசருக்கு சனத்குமாரர் சொன்னார் என்றும், வியாசர் அதை ஸ்கந்தபுராணத்தில் எழுதினார் என்றும் வழங்கப்படுகிறது.

இன்னோன்று ஆதாரம் முக்கூடற்பள்ளுவில் வரும் "மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளிக்கோர் பள்ளக்கனவனாய்".......... இது ஒரு ஆதாரமா? இது தான் பாண்டியன் என்ற ஆதாரமா? இதில் இரு பள்ளித்திகளுக்கு ஒரு பள்ளன் தாலி கட்டியுள்ளான்.வேறு என்ன பள்ள இலக்கியத்தில் வருகிறது,சக்கலத்தி சண்டை.பண்ணை ஆண்டையின் கொடுமை,நெல் வகை இது தானே வருகிறது.இது உழுகுடிகள் விவரம் தானே.இதெல்லாம் அரசகுடிகளுக்கு ஆதாரமா?




மருத நிலத்தில் தோன்றியது தான் மன்னர் இனமா?

மருத நிலத்தில் தோன்றிய மள்ளர்
இனத்தை பற்றி சேக்கிழார் என்ன கூறுகிறார்.

முதலில் புலையர் இனத்தில் தோன்றிய நந்தனார் நாயனார் இறைவனை ஒத்த இறைதிருமகனாவார்.அவரை விமர்சிப்பதற்கு வருந்திகிறோம் ஆனல் இலக்கிய ஆதாரத்திற்கு தான் இங்கு சுட்டுகின்றோம்.
மற்றவூர் புறம்யின் வல்மருங்கு பெருங்குலையில்....தொழில் உழவர் கிளையது வன்றி....பல் நிறந்த்ள்தோர் புலைப்பாடி(1051:பெரியபுரானம்)
பொருள்:
அந்த ஆதனூரின் வெளியே உள்ள மருத நிலத்தை சேர்ந்த வெளிநிலத்தில் புலைச்சேரி ஒன்று இருந்தது. அதில் உழவர் கூட்ட்டம் நிரம்பியது.
வன்சிறுதோல் மிசையுழத்தி ம்கவுறங்கும் நிழல் மருதும்.....வஞ்சிகளும் விசிபறை தூங்கும்(1053) "
அந்த புலைச்சேரியின் மருத மர நிழலில் உழத்தியார் தன் குழந்தைகளை தூங்க செய்வர்.வார்களில்
இழுத்துக் கட்டபட்ட மாமரங்களில் பறைதொங்கும்.
"இப்படித்தா கிய கடைஞர் இருப்பின்வரை...........நந்தனார் என ஒருவர்(1056பெரியபுராணம்)


இப்படி உள்ள கடைஞர் குடியில் தோன்றியவர் தான் நந்தனார்.

"ஊரில்விடும் பறைதுடைவை உனவுரிமை யாக்கொண்டு(1058பெரியபுராணம்)

தம் பிறப்பினால் வெந்த வெட்டிமை தொழிலுக்காக கொடுக்க பட்ட பறைத்துடைவை என்னும் மானிய நிலத்தில் தொழில் உழவு செய்து வாழ்ந்தார் நந்தனார்

அல்குந்தம் குலம் நினைந்தே அஞ்சி அனைந்தில நின்றார்(1068பெரியபுரானம்)
அந்தனர் யாகத்தை நெருங்கிய நந்தனார் தன் குலத்தை நினைத்து அஞ்சி நின்றார்.
இறுதியில் யாகத்தில் தோன்றி இறைவனின் திருவடியை சரனடைந்த அவர் அந்த அந்தனர்களை விட மேன்மை பெற்றவராக அங்கு சூழ்ந்த அந்தன மக்களால் வனங்கபட்டு தேவர்கள் பூமாரி பொழிந்து இறைவனுடன் கையிலை சென்றார்.

[பிணத்துக்கு பள்ளம் தோண்டுபவனே பள்ளன். மள்ளன் என்பவன் பள்ளனாகவும் மற்றும் பறையனாகவும்  இருக்ககூடும் கொங்கு கல்வெட்டு மள்ளன் என்பவன் பறையன் என செப்புகிறது.மள்ளன் பள்ளனா? இல்லை பறையனா? என இறந்து போன பாவாணாரோ அல்லது ஆமை ஆராய்சியாளர் ஒரிசா பாலுவோ தான் பதில் தர இயலும்.]

13-ஆம் நூற்றாண்டு கண்டதேவி ஹிஜிரா கல்வெட்டு புலையர்,பாணர்,பள்ளர்,பறையர் ஆகிய கீழ் சாதிகள் என குறிப்பிடபட்டுள்ளது.
ஹிஜிரா கல்வெட்டு எண் : 771(கிபி 1300 இல் இருந்து 1330 க்குள்)
இடம் : கண்டதேவி படி எடுக்கப்பட்ட ஆண்டு அல்லது பதியப்பட்ட ஆண்டு -1921
மதுரையில் பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சி 1290 களில் துவங்குகிறது.(சுந்தர பாண்டிய தேவர்) சுல்தான்கள் மதுரையை தாக்கி பாமினி ஆட்சியை நிறுவுகிறார்கள்.பாண்டிய மன்னர்கள் தென்காசியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்ய துவங்கிறார்கள். ஆனாலும் காரைக்குடி,திருப்பத்தூர்,தேவகோட்டை பகுதி காரணவர்களில் சிலர் , ஆங்காங்கே சுல்தான்களின் படையை தாக்கியும்,சூறையாடியும் பெரும் சேதம் விளைவிக்கிறார்கள். கோபம் கொண்ட சுல்தான் மறவர் படைகள்  வாழ்ந்த கண்டதேவியை ஆண்ட சூரைக்குடி என்னும் விஜயாலயத்தேவரின் வன்னிய சூரைக்குடியை தாக்கி பெரும் சேதம் விளைவிக்கிறார்கள். கத்தி முனையில் இனிமேல் சுல்தான் ஆட்சியை எதிர்த்து தாக்குதல்,சூறையாடல் நடத்த மாட்டோம் என்று கள்ளர், கருமார்,உள்ளிட்டோர் முன்னிலையில் ஒப்பந்தம் கல்வெட்டாக பெறப்படுகிறது.அப்படி ஒப்பந்தத்தை மீறினால் கீழ்காணும் தண்டனையை ஏற்றுக்கொள்கிறோம் என்பது தான் கல்வெட்டு. 1) எங்கள் மீசையை மற்றும் தாடியை மழித்து கொள்கிறோம். 2) எங்கள் மனைவியை ஒப்படைக்கிறோம். 3) புலையர்,பாணர்,பள்ளர்,பறையர் உள்ளிட்ட
கீழ்சாதியினர் எங்களை பெண் ஓவியமாக வரைந்து அவர்களின் குழந்தைகளின் காலில் கட்டி சுத்தட்டும். என கல்வெட்டு முடிகிறது.
என கல்வெட்டு முடிகின்றது.








இங்கு புலையர் என்று குறிப்பிடும் மக்கள் யார்?

புலையர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல்தேடல்
தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் புலையர் எனும் பழங்குடியின மக்கள் வாழுகின்றனர். இவர்கள் வேட்டையில் கிடைக்கும் இறைச்சி, மற்றும் காய், கனி, கிழங்கு வகைகளை உண்பர். புலையரது தலைவனுக்கு கணியன் என்று பெயர். இவர்களிடையே குடும்பி, குள்ளன், மல்லன், குடியன் என்னும் பிரிவுகளும் உள்ளன. சித்திரை மாத முழுநிலவு நாளில் விழா கொண்டாடுகின்றனர். திருமணவிழாவில் கற்பூரவல்லி என்று வாசமுள்ள செடிக்கொத்தொன்று மணமகள் கழுத்தில் அணிவிக்கப்படுகிறது. பெண்களிடம் பித்தளை மோதிரமும், கண்ணாடி வளையல்களும் அணியும் வழக்கம் பரவலாக உள்ளது



பள்ளரின் பட்டங்கள்:குடும்பன் இங்கே குடும்பி என்றுள்ளது.
மல்லன் மள்ளன் என்ற பட்டமும் பள்ளரிடம் உள்ளது அதையும் அறிவோம்.குடியன் குடி அடிமை என்றும் அறிவோம்.ஆனால் இந்த குள்ளன் யார்?
குள்ளன்=பள்ளன்?கணியர் என்பது பறையரில்  வள்ளுவரைக் குறிக்கும்.
In the Thiruthuraipoondi inscription No.204, (Tamil Nadu Archaeology Department) pertaining to cholas period says as follows :-

"வண்ணார் பள்ளர் பறையர் உள்ளிட்டாரும்"

In the Madurai, Melur (keeranur) inscription (S.I.I. Vol-V, No.273) pertaining to Kulotunga chola-III says as follows :-

" இட்ட நிலம் கொங்கூர் குளத்துக் கிழைத்தூம்பில் எல்லைகளில் 
பள்ளக் கவருக்கு தெற்கும் மன்றாடி சோழ கொந் செய்க்கு வடக்கும்" 

In the Thiruthuraipoondi inscription No.1, (Tamil Nadu Archaeology Department) pertaining to pandiyas period says as follows :-

"வடபாற் எல்லை பள்ளன் ஓடை"

During the Kulasekara Pandiya period of 13th century, the inscriptions says as follows :

"இவ்வூர் குடும்பரில் பெரிய தேவப் பள்ளன்"


(Seminar on Hero-stones, Editor R. Nagaswamy (page-77) published by the State Department of Archaeology, Govt of Tamil Nadu - 1974).

In 1229 A.D., (Maravarman Sundara Pandya) the Nadu of Kana-nadu, the Nagaram, the Grama, Vanniyar and the Padaipparru's agreed to levy per capita on all the land holders as given below :-

For Brahmins, Chettis, Vellalas 1/2 Panam
for Minors 1/4 Panam
for Garrisons 1/4 Panam
for Parayars & Pallars 1/8 Panam 

It shows Brahmins, Chettis and Vellalas were held equals and from the manual labourers like Pallas and Paraiyas 1/4 of what was levied from others (Kudumiyamalai) was collected.

"பறையர் பள்ளர் பெர் ஒன்றுக்கு பணம் அரைக்காலும்"

(Tamil Coins a study, Dr. R Nagaswamy, Page - 107 & 108. Published by Institute of Epigraphy, Tamil Nadu State Department of Archaeology - 1981) &
Inscriptions of the Pudukottai State (I.P.S), Inscription No.561. (Kudumiyanmalai Inscription).

In the Thiruvallur District, Kuvam thirupuranthaka Eswarar koil inscription (1296 A.D), pertaining to "Thiribuvana Vira Ganda Gopala Devar (Telugu Chola) says as follows :-

"வைத்தாந் பள்ளநும்"
"இவை பள்ளன் எழுத்து" (S.I.I. Vol-XXVI, No.354).

In the Trichirapalli District Tiruppalatturai inscription says as follows :-

"புலை அடியாரில் முன்னால் நங்கைபுரத்தில் பாட்டத்தில் நின்ற 
புலை அடியாராய் உடையார் கம்பண உடையார் காரியப்பெர் 
சந்த்ரசர் விற்க நான் கொண்டு உடையெனான சாதனப்படியால் 
உள்ள பள்ளன் பிறவியும் இவன் பள்ளி அழகியாளும் இவன் மகன் நம்பாளும் இவன் தம்பி 
வளத்தானும் இவன் தம்பி தாழியும்" (S.I.I. Vol-VIII, No.590). 


In the Pudukkottai Thirumayam, Karaiyur Sundara Raja Perumal koil inscription pertaining to the king "Virupakshirayar" of 14-15th century A.D says as follows :-

"வலையர் ஆடிக்கு ஒரு கூடு முசலும் காத்திகைக்கு 
ஒரு கூடு முசலும் இடையர் பால் நெய்யும் பறையர் 
ஆடிக்கு இரண்டு கொழியும் காத்திகைக்கு இரண்டு 
கொழியும் பள்ளர் ஆடிக்கு இரண்டு கொழியும் 
காத்திகைக்கு இரண்டு கொழியும்" (I.P.S. Ins. No. 715)

In the Pudukkottai Thirumayam, Ilambalakudi Madavira Vinayagar koil inscription of 16th century says as follows :-

"இலம்பலக்குடியில் பள்ளற்கும் பறையற்கும் 
விருது சண்டையாக காஞ்சிபுரத்துக்குப் போய்
கல்வெட்டுப்"

"இலம்பலக் குடியில் பறையற்கும் 
பள்ளற்கும் சண்டை" (Avanam-15, July-2004, Page-31&32)

In the Pudukkottai Thirumayam, Karaiyur Thirumanganeeswarar koil inscription of 16th century says as follows :-

"காத்திகைக்கு இடையன் ப.ல் நெய்யும் ..
வலையன் முசலும் பள்ளன் கொழியும்
பரையன் கொழியும் ஆக இந்த சுவந்திரம்" (I.P.S. Ins. No.843)

In the Pudukkottai Thirumayam, Thekkattur Agatheeswarar koil inscription of 16th century says as follows :-

"தெற்காட்டூராக அமைந்த ஊரவரொம்
மேற்படியூற் பள்ளற்கும் பறையற்கும் 
பள்ளற்கு தவிலும் முரெசும் செமக்கலமும் 
நன்மை தின்மை பெருவினைக்குங்கொட்டி 
பொக கடவராகவும் பறையர் அஞ்சு கா" (I.P.S. Ins. No. 956)

In the Pudukkottai Thirumayam, Mellathanayam Mariamman koil inscription of 16th century says as follows :-

"வீர சின்னு நாயக்கரவர்கள் பள்ளருக் குச்சிலா 
சாதனங்கட்டளையிடப்படி பள்ளர் பறையர் 
இருவகைப் பெருக்கும் வெள்ளானை 
வாழை கரும்பு உண்டில்லை யென்று
விபகாரம் நடக்குமிடத்தில் பள்ளர் இந்த 
விருது தங்களுக் யெல்லாமல் பறையருக்கு 
இல்லை யென்று நெய்யிலெ க்கை பொடுமிடதில்
பள்ளருக்கு க்கைக்கு சுடாமல் வெற்றியான 
படியினாலெ" (I.P.S. Ins. No. 929)

In the above said inscriptions, the "Pallar Community people" and "Paraiyar Community People" were placed together. In one of the inscription, the "Pallar Community People" referred as "Pulai Adiyars"



புலையார் என்றால் புலால் உன்பவர் என சிலர் கருதிகின்றனர்.ஆனால் "புலம்-நிலம்" புலையர்-நிலத்தவர் புலையர் என்றால் மன்னை பன்படுத்தி உழவு செய்யும் உழவர் என கன்னட ஆதாரம் கூறுகிறது.
Wrong Derivation of the term Holeya and Pulaya’

Pulaya--name is derived by people belong to soil(pulay=land)

" Holeyas are the field labourers, and former agrestic serfs of South Canara, Pulayan being the Malayalam and Paraiyan the Tamil form of the same word. The name is derived by Brahmins from hole, pollution, and by others from hola, land or soil, in recognition of the fact that, as in the case of the Paraiyan, there are customs remaining which seem to indicate that the Holeyas were once masters of the land ; but, whatever the derivation may be, it is no doubt the same as that of Paraiyan and Pulayan

இங்கு நாம் காட்டிய ஆதாரத்தில் புலையர் தான் பள்ளர்கள் என நிருபணமாக உள்ளது.

இவர்கள் பாண்டியர்கள்,சோழர்கள் என்று ஆதாரம் காட்டினால் முதலில் சோழரும் பாண்டியரும் புலையர் என்றே நிருபிக்க வேண்டும்.

பின்பு தான் மற்ற இனத்தவரை பற்றி தூற்ற வேண்டும். ஆனால் இவர்களுக்கு முழுமுதல் வேலையே மற்றவர்களை தூற்றுவது தான்.

இவர்கள் மூவேந்தர் இனம் என கூறுவதற்கு பதில் இவர்களின் மறைந்து போன நாகரிகத்தை தேடலாம். அதை விடுத்து தான் தான் மூவேந்தர் இனம் என்றும் ஏதோ அந்த பதவியை இவர்கள் தான்  பறித்துக் கொண்டனர் என்று மற்றவரை தூற்றுவதும் மிகப்பெரிய சரித்திர பிழையாகும்.


பள்ளர்களும் ஆந்திர பூர்வீககுடிகளே

https://thevar-mukkulator.blogspot.com/2013/02/blog-post_5.html

பள்ளர் வேறு? பறையர் வேறு இனமா?

https://thevar-mukkulator.blogspot.com/2013/03/blog-post_8.html

பள்ளர்(Mallas),பறையர்(Holeyas ),சக்கிலியர்(Madigas)

https://thevar-mukkulator.blogspot.com/2013/04/mallasholeyas-madigas.html

"நாங்கள் குற்றப்பரம்பரை அல்ல" என கூறும் குற்றப்பரம்பரை இனங்கள்

https://thevar-mukkulator.blogspot.com/2021/02/blog-post_22.html

"ஏவல் மரபினர்" சரித்திரம்

பா.நீலகண்டன்

(Article in communist website)

பண்டைத் தமிழகத்தின் ஜாதி அமைப்பைக் குறித்து ஆராயப்புகும் ஒருவனுக்குக் கிடைக்கும் முதன்மை ஆதாரம் இலக்கியமே. தாழ்த்தப்பட்ட மக்கள் இலக்கியங்களில் தலை மக்களாக இடம் பெறலாகாது என்ற இலக்கிய மரபு ஒன்று இருந்து வந்த அன்றையச் சூழலில் அவர்களைப் ஫ற்றிய செய்திகள் இலக்கியங்களிலும் மிக அரிதாகவே காணப்படு~ கின்றன. சிற்சில சொற்களையும் உவமைகளையும் ஆதார~ மாகக் கொண்ட ஆய்வை நடத்த வேண்டியுள்ளது.தமிழ் இலக்கிய வரலாற்றின் துவக்க காலத்தில் இருப்பது தொல்காப்பியம். தொல்காப்பியத்தின் அகத்திணையியல், மரபியல் இரண்டும் ஜாதி அமைப்புக் குறித்த சில செய்தி~ களைத் தெரிவிக்கின்றன. பிரிவு பற்றிப் பேச வந்த அகத்~ திணையியல் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற நான்கு பிரிவினரைச் சுட்டுகின்றது. இந்நால்வரும் "ஏவல் மரபினர்" (தொல் அகத்திணையியல்.26) எ஁ன்றும் குறிக்கப்~ படுகின்றனர். 



அதாவது "பிறரை ஏவிக்கொள்ளும் தொழில் தமக்குளதாகிய தன்மையை உடையவர்கள்" என்று இதற்கு நச்சினார்க்கினியர் விளக்கம் தருகிறார். இதிலிருந்து நான்கு 63 குலத்தினரின் ஏவலுக்குக் கீழ்ப்பட்டுக் குற்றேவல் செய்த ஒரு பிரிவினர் சமுதாயத்தில் இருந்தனர் என்பது புலனா~ கிறது. அவர் யார்?மேற்குறிப்பிட்ட நான்கு பிரிவினர்஖்஖ான மரபும் தொழி~ லும் வரையறுத்த மரபியல், அதனை அடுத்து, `அன்னராயினும் இழிந்தோர்க்கு இல்லை' (தொல்.மரபியல்:84) என்கிறது. இங்கு `இழிந்தோர் என்பதற்கு "நான்கு குலத்தினும் இழிந்த மாந்தர்" என இளம்பூரணர் உரை எழுதுகிறார். 

இந்த இழிந்த மக்கள் யார்?நடுவண் ஐந்திணைக்குரிய தலைமக்களைப் பற்றிக் கூறிய பிறகு, அதன் புறத்தவாகிய கைக்கிளை, பெருந்~ திணைக்குரிய மக்களைப் பற்றி அகத்திணையியலில் பேசப்~ படுகிறது. "அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் கடிவரையில புறத்து என்மனார் புலவர்"இதை முன்னெழுப்பிய இரு கேள்விகளுக்கான ஐயங்களுக்~ கான விடையாக஼க் கொள்வோம். இங்கு அடியோர் என்ப~ வரைப் பிறருக்குக் குற்றவேல் செய்வோர் ' எனவும், வினை~ வலர் என்பவரைப் `பிறர் ஏவிய தொழிலைச் செய்தல் வல்லோர் எனவும் நச்சினார்க்கினியர் விளக்கி உரைக்கிறார். இவர்கள் ஏன் அதனைந்திணைக்கு உரியர் அல்லர் என்பதற்கு இளம்பூரணர் நீண்டதொரு விளக்கம் தருகிறார்; அகத்~ திணையாவன அறத்தின் வழாமலும், பொருளின் வழாம~ லும், இன்பத்தின் வழாமலும் இயலல்வேண்டும். அவை~ யெல்லாம் பிறருக்குக் குற்றேவல் செய்வார்க்குச் செய்தல் அரிதாகலானும் அவர் நாணுக்குறைபாடு உடையவர் 64 ஆகலானும், குறிப்பறியாது வேட்கை வழியே சாரக் கருது~ வராகலானும், இன்பம் இனிய நடத்துவார் பிறர் ஏவல் செய்யாதார் என்பதனாலும் இவர் புறப்பொருட்டு உரியர் ஆயினார்" என்கிறார். இது பிறருக்குக் குற்றேவல் செய்வோரின் சமூகப் பொருளாதார நிலையை விளக்கு~ வதோடு அன்றைய இலக்கியங்கள் மேட்டுக்குடியினரின் இலக்கியங்களே என்ற உண்மையையும் தெளிவுபடுத்து஖ிறது. ஆக, பொருளாதார ஆதிக்கமும் சமூக மதிப்பும் கொண்டோர் ஒரு பக்கம்; 


அவர்களுக்கு அடித்தொழில் செய்தோர் ஒரு பக்கம் என்஼்று அன்றையச்சமூகம் பிளவு~ பட்டுக்கிடந்த஼து என்பது புலனாகிறது. அடிமை, இழிந்தோர் என்ற சொற்஖ள் குற்றேவல் செய்தோரின் சமூக இழி~ நிலையைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.சங்க இலக்கியங்களில் துடியர் பறையர் என்போர் பேச஬்படு~ கின்றனர். துடி, பறை என்னும் தோல் கருவிகளை இயக்கு~ பவர்கள் இவர்கள். இவர்கள் "இழிசினர் "என்றும் "இழி~ பிறப்பாளர்"என்றும் இலக்கியங்களில் இழித்துரைக்கப்படு~ கின்றனர்.துடியெறியும் புலைய எறிகோல் கொள்ளும் இழிசின" (புறம்: 287)"பூக்கோல் இன்று என்று அறையும் மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே" (புறம்: 289)"இழிபிறப்பாளன் கருங்கை சிவப்ப வலிதுரந்து சிலைக்கும் வன்கண் கடுந்துடி' (புறம்:170)கட்டில் நிணக்கும் இழிசினன் கையது போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று (புறம்: 82) 65 இழிசினர் என்றும் இழிபிறப்பாளர் என்றும் அழைக்கப்படும் இவர்களின் தொழில் பறை மற்றும் துடியறைதல், தோல் பொருட்களைப் பழுதுபார்த்தல் என்று தோல்தொழிலோடு ஒட்டியதாகத் தெரிகிறது.புலையன் என்பது ஏசத்தக்க இழிசொல்லாக இலக்கியத்தில் சில இடங்களில் கையாளப்படுகிறது. (கலி:72:4; 311:2) 


பறையர் துடியர் பாணர் ஆகியோரும் புலையர் என அழைக்கப்படுகின்றனர்....... புலையன் பேழ்வாய்த் தண்ணைமை இடந்தொட்டன்ன அருவி இழிதரும் பெருவரை நாடன் (நற்றிணை: 345:5-7)"மலையமா ஊர்ந்து போகிப் புலையன் பெருந்துடி கறங்கப் பிறபுலம் புக்கவர்" (நற்றிணை77:1-2)புதுவன ஈகை வளம்பாடிக் காலின் பிரியாக் கவிதைப் புலையன்தன் யாழின்" (கலித்: 95:9-10)இவர்கள் மட்டுமின்றி இழிதொழிலைச் செய்யும் வேறு சிலரும். உதாரணமாக சுடுகாடு காக்கும் வெட்டியான் துணி வெளுக்கும் வண்ணான் ஆகியோரும் புலையன் புலைத்தி என்ற பொதுப் பெயராகலேயே அழைக்கப்படுகின்றனர். "கள்ளி போகிய களரி மருங்கின வெள்ளி னிறுத்த பின்றைக் கள்ளொடு புல்லகத்திட்ட சில்லவிழ் வல்சி புலையனேவப் புல்மேல் அமர்ந்துண்டு அழல்வாய்ப் புக்க முன்னும் பலர்வாய்த்திராஅர் பகுத்துண்டோரே" (஫ுறம்:360:16-2) 66 "அடியியல் விழவின் அழுங்கல் மூதூர் உடையோர் பான்மையின் பெருங்கை தூவா வறனில் புலைத்தி எல்லின் தோய்த்த புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கம்" (நற்.90:1-4)ஆக, அன்றை௟ச் சமூக அமைப்பில் பறையர்,துடியர், பாணர், வண்ணார், வெட்டியான் போன்ற வேலைப் பிரிவினர் இழி~ நிலைச் சாதியினராகக் கருதப்பட்டனர் எனக்கொள்ளலாம். அன்றைய விவசாயத் தொழில் சாதியினராக விளங்கியவர்~ கள் இவர்களா? இது பற்றி உறுதியாக஼க் கூறமுடியாவிடினும் சில யூகங்களை முன்வைக்கச் சங்க இலக்கியம் இடமளிக்கிறது. நெல்கதிரை அறுவடை செய்யும் மக்கள் பறையை முழக்கிக் கொண்டே அறுவடை செய்ததாக இலக்கியங்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன.வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇக் கண்மடல் கொண்ட தீந்தேன் இரிய" (புறம்:348)வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇப் பழனப் பல்புள் இரிய" (புறம்:350)


வெண்ணெல் அரிநர் மடிவாய்த் தண்ணுமை பன்மலர்ப் பொய்கைப் படுபுள் ஓப்பும்" (அகம்: 204)வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇச் செங்கண் எருமை இனம்பிரி பொருத்தல்" (மலைபடு:471-2)ஒலிந்த பகன்றை விளைந்த கழனி வன்மைவினைநர் அரிபறை" (மதுரை.காஞ்: 261-62) பறையறைவர்கள் இழிந்தவர்கள், புலையர்கள் என்னும்~ போது, இங்கு அறுவடைத் தொழிலில் ஈடுபட்டவர்களும் இழிநிலை மக்களாக இருக்க வேண்டும். 67 மதுரைக்காஞ்சியில் வன்கைவினைஞர் (அதாவது வலிய கை~ யினால் தொழில் செய்பவர்கள் என்ற பொருளில் ) எனச் சுட்டப்படுவது போல வேறு சில இடங்களில் நெல் வயல்~ களின் களை பறிப்பவர்களும் அவ்வாறே சுட்டப்படுகின்றனர். அத்தோடு கடைசியர் எனவும் அழைக்கப்படுகின்றனர்.கைவினை மாக்கள்தம் செய்வினை முடிமார் சுரும்புண மலர்ந்த வாசங் கீழ்ப்பட நீடின வரம்பின் வாடிய விடினும் கொடியரோ நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாது பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும். (குறுந்:309)



கொண்டைக் கூழைத் ண்தழைக் கடைசியர்(பள்ளர் )  சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும் மலங்குமிளிர் செருவில் தனம்பு தடிந்திட்ட பழன வாளைப் பரூரக்கண் துணியல் புது நெல்வெண்சோற்றுக்கண்ணுறையாக விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி நீடு கதிர்க் கழனி சூடு தடுமாறும் வன்கை வினைஞர் " கடிமலர் களைந்து முடிநாறு அழுத்தித்தீ தொடிவளைத் தோளும் ஆகமும் தோய்ந்து சேறாடு கோலமொடு வீறுபெறத் தோன்றிச் செங்கண் நெடுங்கயல் சின்மொழிக் கடைசியர் வெங்கண தொலைச்சிய விருந்தின் பாணி" (சிலம்பு10:127-131) இவை முன்குறிப்பிட்ட யூகத்தை வலியுறுத்துவனவாக அமைகின்றன. அதாவது விவசாயத் தொழிலில் நேரடி உடல் உழைப்பில் ஈடுபட்டவர்஖ளின் `கடைநிலை' மக்களே என்பது "கடைசியர்"(பள்ளர் ) என்று சொல்லால் புலனாகிறது. சங்க காலத்தில் பண்ணை அடிமைகள் இருந்தனரா என்ப஼தற்கான 68 தற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லையெனினும், இக்~ கடைசியர் தங்கள் சமூக நிலையில் அடிமைகளின்று பெரிதும் வேறுபட்டிருக்கவில்லை எனக் கொள்ள இட~ முண்டு" என்கிறார் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி!


இலக்கியங்கள் சுட்டும் `உழவர் ' என்ற சொல்லுக்கு உரியவர்~ களாக விவசாயத் தொழிலில் நேரடி உடல் உழைப்பில் ஈடுபடும் இக்கீழ் மக்களைக் கருத இடமில்லை. மருத நிலங்~ களில் வாழும், உழுதுண்பாராகிய சிறுநிலை உடைமையாளர்~ களே 'உழவர் ' என்று சுட்டப்படும் சொல்லுக்கு உரியவர்~ களாகத் தெரிகிறார்கள்.ஈரச் செவ்வி உதவின வாயினும் பல்லெருத்துள்ளும் நல்லேருது நோக்கி வீறுவீறாயும் உழவன் போல" (புறம்:289:1-3)வைகுபுலர் விடியல் மைபுலம் பரப்பக் கருநனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின் எரிமருள் பூஞ்சினை இனைச்சிதர் ஆர்ப்ப நெடுநெல் அடைச்சிய கழனியேர் புகுத்துக் குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர அரிகால் போழ்ந்த தெரிபகட்குழவர்" (அகம்:41:1-6)நிலம், ஏர், எருது ஆகிய உற்பத்திச் சாதனங்க஼ளை உழவர் உடைமையாகக் கொண்டிருந்தனர். இதனடிப்படையில் விவசாய உற்பத்தியல் உடல் உழைப்பில் ஈடுபட்ட `கடை~ நிலை' மக்கள் நிலஉடைமையற்றவர்களாக இருந்தனர் எனவும் கொள்ளலாம். 69 சங்க இலக்கியங்களில் புலையர், பறையர் ,கடைசியர் என்று சுட்டிச் சொல்லப்பட்டவர்கள் தாழ்ந்த சாதியினரே; நில உடைமையற்ற விவசாயக் கூலிகளே; இன்றைய பள்ளர் பறையர் சாதியினரின் முன்னோர்களே என்ற முடிவுக்கு வருவதற்கான ஆதாரங்கள் இடைக்கால இலக்கியங்களில் காணப்பெறுகின்றன.



சீவக சிந்தாமணி ஏமாங்க஼த நாட்டின் வளம் பற்றிக் கூறும் போது, நஞ்சை நிலத்தில் நிகழும் விவசாய உற்பத்தி பற்றி விரிவாகப் பேசப்படுகிறது. அங்கு உழவு முதல் அறு~ வடை ஈறாக உள்ள விவசாயத் தொழிலைச் செய்பவர்஖ள் `கடைசியர் ' என்றே அழைக்கப்படுகின்றனர்."சேறமை செருவினுள் செந்நெல் வான்முளை வீறொடு விளைகெனத் தொழுது வித்துவார் நாளிது பதமெனப் பறித்து நாட்செய்வார் கூறிய கடைசியர் குழாங்கொண் டேகுவார் (பா. எண் 45) கடைசியர் பெண்கள் களை பறிக்கும் தொழிலின் ஊடே மது அருந்திக் களித்தாக மற்றொரு பாடல் கூறுகிறது.வளைக்கையால் கடைசியர்(பள்ளர் )  மட்டு வாக்கலின் திளைத்தவர் பருகிய தேறல் தேங்குழிக் களிப்ப உண்டு இள அனங் கன்னி நாரையைத் திளைத்தலின் பெடைமயில் தெருட்டுஞ் செம்மற்றே" (பா.எ:50)சேக்கிழாரின் ஆதனூர் புலைப்பாடி வருணனை புலையர்~ களின் வாழ்க்கைச் சூழலை யதார்த்தமாகச் சித்திரிக்கிறது.மற்றவ்வூர்ப் புறம்பணையின் வயல்மருங்கு பெருங்குலையில் சுற்றம் விரும்பி கீழ்மைத் தொழிலுழவர் கிளைதுவன்றிப் பற்றிய கொடிச்சுரைமேல் படர்ந்த பழங்கூரையுடைப் புற்குரம்பைச் சிற்றில பல நிறைந்துளதோர் புலைப்பாடி.கூர்உகிர் மெல்லடியளகின் குறும்பார்ப்புக் குழுச்சுழலும் வார்பயில் முன்றிலினின்ற வள்ளுகிர நாய்த்துன்ற பறழ் கார் இருப்பின் சரிசெறிகைக் கருஞ்கிறார் கவர்ந்தோட ஆர்சிறுமென குரைப்படக்கு மரைக்கசைத்த விருப்புமணிவன்சிறுதோல் மிசைஉழத்தி மக஼உறக்கும் நிழல்மருதுந் தன்சினைமென் படையொடுங்குந் தடங்குழிசிப் புதைநீழல் மென்சினைய வஞ்சிகளும் வசிப்பறை தூங்கின மாவும் புன்சிறுநா௟்ப் புனிற்றுமுழைப் புடைத்தெங்கும் முடைத்தெங்கும்செறிவலித்திண் கடைஞர் வினைச்செயல்புரி வைகறையாமக் குறியளக்க அளைக்குஞ் செங்குடுமி வாரமச் சேக்கை வெறிமலர்த்தண் சினைக்காஞ்சி விரிநீழல் மருங்கெல்லாம் நெறிகுழல் புன்புலைமகளில் நெற்குறு பாட்டொலி பரக்கும்புள்ளுந்த஼ண் புனல்கலிக்கும் பொய்கையுடையப் புடையெங்குந் தள்ளுந்தாள் நடையசையத் தளையவிழ் பூங்குவளை மது விள்ளும் பைங்குழல் கதிர்நெல் மிலைச்சி புன்புலைச்சியர்கள் கள்ளுண்டு களிதூங்கக் கறங்குபறையுங் கலிக்கும்(பா:6-10)


புலையர்கள் இங்கு`புன்புலை மகளிர்' என்றும் புன்புலைச்சி~ யர்கள் என்றும் அழைக்கப்படுவதிலிருந்து அவர்களின் சமூக இழிநிலையை உணரலாம். இவர்களே செறிவலித்திண் கடைஞர் இப்படித்தாகிய கடைஞர் இருப்பின் என்று கடைஞர், கடைசியர் எனவும் சுட்டப்படுகின்றனர். இவர்~ களுக்கான குடியிருப்புகள் உயர்சாதியார் இருந்த ஊருக்குப் 71 புறத்தே வயல்களுக்கு நடுவேயான மேட்டுநிலத்தே தனித்து அமைந்து இருந்தது என்பதைப் `புறம்பணையின் வயல் மருங்கு.... புற்குரம்பைச் சிற்றில் பல நிறைந்துளதோர் புலைப்பாடி' என்ற வரிகள் உணர்த்துகின்றன. உயர்சாதி நில உடைமையாளர் வீடுகளைப் `புயலடையும் மாடங்கள்' என வருணிக்கும் சேக்கிழார் புலையர்களின் குடியிருப்பைப் `பைங்கொடிச் சுரைமேல் படர்ந்த பழங்கூரையுடைப் புற் குரம்பைச் சிற்றில் ' என அதன் ஏழ்மை நிலை தோன்றச் சித்திரிக்கிறார். இது இரு வர்க்கத்திற்கும் இடையேயான ஏற்றத்தாழ்வைத் தெளிவாக வெளிப்படுத்து஖ிறது. `கீழ்மைத் தொழில் உழவர்' என்பது இவர்களே விவசாயக் கூலிகளாக விளங்கியதை மெய்ப்பிக்கும். இது தவிர மாடறுக்கும் தொழிலுடைய இவர்஖ள் அதிலிருந்து கிடைக்கும் தோல், நரம்பு, கோரோசனை முதலாய பொருட்களை உயர்சாதி~ யார் கோயில்களுக்கு அளித்து வந்தனர். தோலும் விசிவாரும் பேரிகை முதலாய கருவிகளுக்கும் ,நரம்பு வீணைக்கும், யாழுக்கும், கோரோசனை அர்ச்சனைக்கும் பயன்படுத்தப்~ பட்டன. இவ் ஊர் கோயில் பணியைச் செய்து வருபவருக்கு ஊர்ப்போதுவிலிருந்து `பறைத்துடவை'என்னும் பறைத் தொழில் மான்யம் அளிக்கப்பட்டது.



ஊரில் விடும் பறைத்துடவை உணவு உரிமையாகக் கொண்டு சார்பில் வரும் தொழில் செய்வார் தலைநின்றார் தொண்டினால் கூரிலைய முக்குடுமிப் படையண்ணல் கோயில்தொறும் பேரிகையே முதலாய முகக்கருவி பிறவினுக்கும் போர்வைத்தோல் விசிவாரென்று இனையனவும் புகலுமிசை நேர்வைத்த வீணைக்கும் யாழுக்கும் நிலைவகையில் சேர்வுற்ற தந்திரியும் தேவர்பிரான் அர்ச்சனைகட்கு ஆர்வத்தினுடன் கோரோசனையும் இவை அளித்துள்ளார்." 72 என்ற நந்தனைக் குறித்த அறிமுக வரிகளால் அறியலாம். இவர்஖ள் கோயில்களுக்கு உள்ளேயும், உயர்சாதியார் குடி~ யிருந்த ஊர்களுக்கு உள்ளேயும் செல்ல அனுமதி மறுக்கப்~ பட்ட உண்மைக்கு நந்தனே சான்று.
நந்தனார் சரித்திரக் கீர்த்தனையிலும் இப்பறையர்களின் தொழில் விரிவாக எடுத்துரைக்கப்படும்.

"நாத்து நரம்புகளைச்-சுமப்பதும் உழுவதும் நஞ்சை வயலைச் சுற்றி-வருவதும் வளம்பெறப் பாத்திகட்டி விதை-தெளிப்பதும் பறிப்பதும் பாயுமடையைத் திறந்து- விடுவதும் அன்றியில்....


சேரியண்டையில் குடியிருப்பதும் பதறுகள் சிதறித் தூற்றி நெல்-அளப்பதும் பார்ப்பதும் ஊரை வளைத்துத் தமுக-கடிப்பதும் மதுக்குடம் உண்டு களித்துநா-முறங்குவது அன்றியில்.....ஆண்டைமார்களிடும்-பணிவிடை செய்வதும், 

அருகில் நின்றுகும்பிடுவதும் நடுவதும் தாண்டி நடந்து கோல்-பிடிப்பதும் அளப்பதும் தனித்துச் சுடலைதினம்-காப்பதும் அன்றியில்.... இது பறையர் வகுப்பாரின் தொழிலையும் சமூகக் கடமை~ யையும் தெளிவாக விவரிக்கிறது.

இதுவரை இலக்கியத்திலோ பிறவற்றிலோ இடம்பெறாத `பள்ளர்' என்ற வகுப்பாரைப் பற்றிப் பள்ளு இலக்கியங்கள் பேசுகின்றன. பள்ளு இலக்கியங்கள் கி.பி.பதினேழாம் நூற்~ றாண்டுக்குப் பிற்பட்டவைகள். இவைகளில் காலத்தால் முந்திய஦ுó முக்கூடற்஫ள்ளு, இப்பள்ளு இலக்கியங்களில் பேசப்~ படும் பள்ளர்கள் விவசாயத் தொழிலாளர்கள்; கடைநிலை 73 மக்கள் இவர்கள் யார் என்ற கேள்விக்கு விடை காணும் முன் பள்ளு இலக்கியம் காட்டும் உற்஫த்தி உறவுமுறை ஫ற்றிக் காணலாம்.முக்கூடற்பள்ளு இரண்டு வர்க்கங்களை முதன்மைப் படுத்து~ கிறது. உருவமற்ற நிலப்பிரபுவான இறைவனின் பிரதிநிதி~ யாய் இருந்து நிலத்தைக் கண்காணிக்கும் பண்ணை விசாரிப்~ பான்; விவசாய உற்பத்தியில் நேரடியாக ஈடுபடும் பள்ளர்~ கள் என்ற இரு வர்க்கத்தினர். நிலம் முக்கூடலில் கோயில் கொண்டுள்ள அழகர் ஆகிய திருமாலுக்குச் சொந்தமானது

முக்கூடல் அழகர் பண்ணை" (பா:36) "கத்தர் திருமுக்கூடல் கண்ணர் பண்ணை"(பா.91) "முக்கூடல்பரமனார் அழகர் தம் பண்ணை"(பா.113) "அடிக்குள் அடங்கும் படிக்கு முதல்வர் அழகர் முக்கூடல் வயலுள்ளே." (பா.129) ஆகிய வரிகள் இதை மெய்ப்பிக்கும் இடைக்காலங்஖ளில் தேவதானம் முதலான பெயர்களில் மன்னர்களால் கோயில்~ களுக்கு வழங்கப்பட்ட நிலவகையாக இதுவும் இருக்கலாம். இந்நிலங்களைப் பள்ளருக்குப் பிரித்துக் கொடுத்து, உற்~ பத்தியை மேற்பார்வையிடுபவனே பண்ணை விசாரிப்பான். இவன் கோயிலின் பிரதிநிதியாகவோ ,விசயநகரப் பேரரசுக் காலத்தில் மன்னனால் நியமிக்கப்பட்ட பாருபட்டயக் கார~ னாகவோ இருக்கலாம். பண்ணைகளில் நேரடியான உடலுழைப்பில் ஈடுபடுபவர்கள் பள்ளர்கள். இவர்கள் கோயில் என்னும் உருவமற்ற ஆனால் நிறுவன வடிவமான நிலப்பிரபுவுக்குச் சொந்தமான பண்ணையோடு பிணைக்கப்பட்ட பரம்பரைக் கொத்~ தடிமைகள். 74 "பண்ணைஏவலறும் பள்ளியர்"(பா.5) "முத்தமிழ் நாட்டழகர் கொத்தடியான்"(பா.13) என்று இவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதே இதற்குச் சான்று. இந்தக் கொத்தடிமைப் ஫ள்ளர்களுக்~ குள்ளே ஒரு தலைமைப் பள்ளன். அவன்஼தான் முக்கூடல் பள்ளுவில் வரும் வடிவழகக் குடும்பன. இவன் பண்ணை விசாரிப்பானால தலைவனாக நியமிக்கப்படுவதாகத் தெரி~ கிறது.....பள்ளர்்களுக்கெல்லாம் தலைமையைப் பள்ளனாக இருக்கும் வடி வழகக்குடும்பன், கோயில் நிலத்தை எல்லாம் சேரிப் பள்ளர்~ களுக்குப் பிரித்துக் கொடுத்துச் சாகுபடி செய்஖ிறான், அறு~ வடையில் அவரவர் செலுத்த வேண்டிய பங்கை வசூலித்துப் பண்ணைக்காரனிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பும் இவனதே. முக்கூடல் பள்ளுவில் தினச்சக்கரம், பெரிய நம்பி திருமாளிகை, ஏழு திருப்பதிக் கட்டளைகள், வடமேலந்திரன் மடம், ஆகியவற்றுக்குக் குறிப்பிட்ட நெல் அளக்கப்பட்ட செய்தியும், ஆடித்திருநாள் விழாவிற்கு 6000 கோட்டை நெல்லும், பங்குனித் திருநாள் விழாவிற்கு6000 கோட்டை நெல்லும்,மண்டகப்படி சார்த்தும் செலவிற்கு 1000 கோட்டை நெல்லும், உள்ளூர் அந்தணர்க்கு 4000 கோட்டை நெல்லும்,நாள் வழிபாட்டிற்கு 8000 கோட்டை நெல்லும் வடிவழகக் குடும்பனால் அளந்து குடுக்கப்பட்ட செய்தி வரு~ கிறது. விளைச்சலில் பள்ளர் பெறும் பங்கு எவ்வளவு என்ப~ தற்கான சான்று இல்லை, எனினும் அவர்களுக்கு மிகக் குறைந்த அளவே கொடுக்கப்பட்டு மீதியனைத்தும் பறிக்கப்~ பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. 75 "முப்பழமும் சோறும் உண்ணவே- நடத்திக்கொண்டீர்" என இளையபள்ளி பண்ணை விசாரிப்பானை எதிர்த்துப் பேசுவது இந்த யூகத்துக்கு இடமளிக்கிறது. பள்ளர்கள் தங்களை அடிமை யென்றும், பண்ணை விசாரிப்~ பானை ஆண்டை என்றும் அழைக்கின்றனர். இச்சொல்லாட்சி ஆண்டான்- அடிமை யென்னும் நிலப்பிரபுத்துவ உறவுமுறை~ யின் கொடுமையை வெளிப்படுத்துகிறது பக்கமே தூரப் போயும் தக்க சோறென வெள்ளாண்மை பள்ளா பள்ளா என்பார் மெய்கொள்ளாதவர்" என்ற குடும்பன் கூற்று பள்ளர்கள் தீண்டத்தகாதவர்஖ளாக நடத்தப்பட்ட சமூக நடைமுறையைப் புலப்படுத்தும். குடும்பனைச் சவுக்கினில் வைத்திடீர் ஆண்டே" என மூத்தபள்ளி பண்ணை விசாரிப்பானிடம் முறையிடுவது அடிமைகளைப் பண்ணைவிசாரிப்பான் சவுக்கால் அடிக்கும் வழமுறை நிலவியதை மெய்ப்பிக்கும். அடிமையின் காலில் மரக்கட்டையை மாட்டி அப்பால் இப்பால் நகர முடியாதபடி விலங்கிடுவது மற்றொரு வகைத் தண்டனை. கண்சிவந்து பண்ணைக்காரணங்கே வந்த பள்ளன்தன் காலில் மரக்குட்டை சேர்த்தானே " (93) முக்கூடல் பள்ளுவில் வடிவழகக் குடும்பன், பண்ணை விசாரிப்~ பானால் இவ்வாறு தண்டிக்கப்படுகிறான். இவ்வுறவு முறை~ யின் கோரம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆவணங்களில் இன்னும் தெளிவாக வெளிப்படுகிறது.அதற்குமுன் வரலாற்றில் இதுவரை இலக்கியத்திலோ கல் வெட்டுக்களிலோ செப்பேடுகளிலோ சட்டப்படாத இப் 76 பள்ளர் யார் என்ற கேள்விக்கு விடை காணலாம். இது குறித்து வரலாற்று அறிஞர்களிடையே பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. 

அவை குறித்துக் கேசவன் விரி~ வாக ஆய்கிறார் நிலஉடைமையாளர்களான வேளாளர்கள் தம் பண்ணைகளில் பள்ளர்களையே கூலிக்கு அமர்த்தியிருந்~ தனர் என்றும் இவர்஖ளைப் பாண்டிய மண்டலத்திற்கு வேளாளர்களே கொண்டு வந்து குடியமர்த்தினர் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இதைக் கூறுபவர் எட்கார்தர்ஸ்டன் வேளாளர்களுக்குள்ளே இழிநிலை அடைந்த ஒரு பிரிவினர் பள்ளர் என்னும் நிலைக்குத் தாழ்ந்தனர் என்பது மற்றொரு கருத்து. இக்கருத்தைத் தங்கராஜ் பின்வருமாறு விளக்கு~ கிறார். "உத்தேசமாக 14,15 ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே பண்ணை விவசாய முறையும் பண்ணையாள் (வேலைக்காரர்) அமர்த்திச் செயல்பட்ட விவசாய முறையும் வளர்ந்திருக்க வேண்டும். தமிழ் நாட்டில் பெருமளவு நிலவுடைமையும் பண்ணைமுதலாளிகள் உருவானதும் இக்காலத்திற்குப் பின்னரே எனக் க஼ொள்ளலாம். நிலஅபகரிப்பு, நிலம் வாங்கல் விற்றல் குத்தகை வாரம்-கடன் போன்ற நிலம் சம்பந்தப்~ பட்ட வழக்கங்கள் இக்காலத்திற்஖ுப் பின்னரே உருவாகி~ யிருக்க வேண்டும். இதனால் அதிக அளவு நிலம் சேர்த்த வேளாளர்கள் தங்களுக்குத் துணை வேலையும் பண்ணை வேலையும் செய்ய அவர்஖ளுக்குள்ளேயே நிலம் சேர்க்க முடியாது போனவர், நிலத்தைப் ஫றிகொடுத்தவர், நிலத்தை அடமானம் வைத்துவிட்டுத் திருப்ப முடியாது போனவர், நிலமே இல்லாது இருந்தவர், ஏழையாயிருந்தவர் ஆகியவர்~ களைக் கூலிக்கு அமர்த்தியிருந்தனர். நிலவுடைமை வாழ்க்~ கையில் அபலையாகிவிட்ட வேளாளர், நிலவுடைமையில் வெற்றி பெற்ற வேளாளர்களிடமே குத்தகை-வாரம் முதலிய 77 முறையில் நிலம்பெற்று பயிர்த்தொழில் செய்திருக்கின்~ றனர். இவ்வகை வேளாளரே காலப் போக்கில் தனிக்குலத்~ தினராக அதாவது ஜாதியினராக உருவாகியுள்ளனர் இவ்விரு கருத்தையும் கேசவன் மறுக்கிறார்.

"பள்ளர்கள் ஒரு குடியேற்றம் பிரிவினர் என்்று கூறும் தர்ஸ்டன் எந்தக் காலத்~ தில் இக்குடியேற்றம் நடந்தது என்றும், எந்த இடத்திலிருந்து இவர்கள் குடியேற்றப்பட்டனர். என்றும் விளக்கவில்லை. மேலும் தமிழகத்தில் குறிப்பாகத் தஞ்சை மதுரை நெல்லை மண்டலங்களில் பல்வேறு ஜாதியினரின் குடியேற்றங்஖ள் நடந்ததற்கு ஆதாரங்கள் இருக்கின்றனவே தவிர பள்ளர் சாதியினரின் குடியேற்றத்திற்கு வரலாற்று ஆதாரம் இல்லை. தங்கராஜ் கூறுவதைப் போல கி.பி.14,15 ஆம் நூற்றாண்டு~ களுக்குப் பின்தான் தமிழகத்தில் வாங்கல் ,விற்றல், குத்தகை வாரம்,கடன் போன்ற நிலம் தொடர்பான வழக்கங்கள் உருவானவை என்றில்லை. அதற்கும் முந்தைய காலங்களி~ லேயே நாம் இவற்றைக் காண்கிறோம். வாரம், காட்டுக்குத்~ தகை, மேல்வாரம், கீழ்வாரம் எனும் சொற்கள் குத்தகை~ யைத் தெரிவிக்க஼ின்றன. நிலம் விற்பனைக்கும் வாங்கலுக்கும் கல்வெட்டுச் செய்திகள் ஆதாரமாக உள்ளன. எனவே கி.பி. 14,15 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னரே இத்தகைய வழக்கங்கள் நடந்தேறின் என்றறிகிறோம் மேலும் அக்காலத்தில் பள்ளர்கள் குத்தகை பெறும் உழவர்~ களாக இருந்ததே இல்லை. பள்ளுப் பாடல்களில் வரும் பள்ளர்கள் குத்தகை பெறுபவர்஖ள் அல்லர்;

 பண்ணை அடிமைகளே. கி.பி. 1843 க்கு முன் ஫ள்ளர்கள் மேல்ஜாதி நிலவுடைமை மக்களுக்குப் பண்ணை அடிமைகளாகவே இருந்~ தனர்."பள்ளர்கள் எவ்வித விதிவிலக்கும் இன்றி விவசா௟த்~ தொழிலிலேயே ஈடுபட்டுள்ளனர். இதற்கு முந்திய காலங்஼களில் 78 எவ்்வித ஐயத்துக்கும் இடமின்றி இவர்கள் நிலமற்ற கட்டுண்ட அடிமைகளாகவே இருந்தனர். எனினும் இன்று அவர்களின் 22 சத௉வீதம் பேர் பண்ணையாட்஖ளாக உள்ளனர். 38 சதவீதம் பேர் கடந்த 10 ஆண்டுகளாகத்தான் குத்தகை~ யாளர்களாக உள்ளனர். 39 சதவீதத்தினர் நாட்கூலியாக உள்ளனர். ஒரே ஒரு நபர் மட்டுமே மிகச் சிறிய நிலத்தை உடைமையாக்கி விவசாயம் செய்்கிறார்" என்஖ிறார் த஼ஞ்சை மாவட்டம் கும்பா பேட்டை கிராமத்தை ஆய்வு செய்தசமூக~ வியலறிஞர் கத்லீன் கஃப். இது தஞ்சைக்கு மட்டுமின்றித் தமிழகத்திற்கே பொருந்தும் எனலாம். எனவே அண்மைக் காலத்திய சமூக வரலாற்று நிகழ்வுகளை 3,4 நூற்றாண்டு~ களுக்கு முந்தைய சமூக நிகழ்வு஖ளோடு அப்படியே பொருத்த முடியாது. எனவே, குத்தகைதாரர்களான வேளாளர்஖ள் இழிநிலை யடைந்து பள்ளர்களாக உருவாகியிருக்க வாய்ப்~ பில்லை என்கிறார் கேசவன். கி.பி. 1500 வரை வரலாற்று ரீதியாகத் தீண்டாமை குறித்து ஆராய்ந்த டாக்டர் அனுமந்தன் பள்ளர்களின் தோற்றம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கிறார்: கி.பி. 9 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொண்டை மண்டலத்தை வேளாளர்கள் தாக்கி அங்கே குடியமர்ந்த போது பல்லவர்~ களை ஒடுக்கினர். அந்நேரத்தில் வேளாளர்களின் மேலா~ திக்கத்தை ஏற்றுக்கொண்ட உயர்வகுப்புப் பல்லவர்கள் சோழர் படையில் சேர்ந்து படையாச்சி என்றழைக்கப்~ பட்டனர் என்றும், தாழ்நிலைப் பல்லவர்கள் அடிமையாக மாறிப் பள்ளர்களாக உருமாறினர் என்றும் இவர் கருத்துத் தெரிவிக்கிறார்.ஆனால் பிற்காலச் சோழர் காலத்தில் எழுந்த மெய்க்கீர்த்தி~ கள், கல்வெட்டுகள் ஆகியவற்றில் பள்ளர் என்ற சமூகப் பிரி~ வினர் காணப்படவில்லை. 

ஜாதி முறைகளைச் சொல்லும் கல் 79 வெட்டுகூட அந்தணரிலிருந்து புல்லுப்பறிக்கிற பறமன்வரை என்றுதான் கூறுகிறதே தவிர பள்ளர் இனத்தைக் குறிப்பிட~ வில்லை. நிகண்டுகளிலும் இலக்கியங்களிலும்கூட குறிப்புக்~ கள் இல்லை. எனவே டாக்டர் அனுமந்தன் கருத்தை ஏற்றுக் கொள்வதற்கில்லை என மறுக்கும் கேசவன் முடிவில் தமது கருத்தை முன் வைக்கிறார்.கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் விசயநகரப் நகரப் பேரரசின் ஒரு பகுதியாக மாறிய தமிழகத்திற்குள் ஏராளமான குடியேற்றங்஖ள் நடந்தேறின. கம்மவார்களும், நாயக்கர்களும் ரெட்டியார்களும் , நிலஉரிமை பெற்றுச் சிற்~ சில பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். இவர்களில் சிலர் ஆயக்கார அமைப்பின் அதிகாரிகளாகவும் ஆனார்கள். இவர்~ கள் மட்டுமின்றி கைவினைஞர்களும் ,பணியாளர்களும் குடிய~ மர்த்தப்பட்டனர்... கைவினைஞர்களாகவும், பணியாளர்~ களாகவும் இருந்த சேணியர், சாலியர், வண்ணார்,ஒட்டர் தொம்பரவர், சக்கிலியர் ஆகியோரின் குடியேற்றத்தினால் ஏற்கனவே இவர்களது தொழில்களைச் செய்து வந்த மக்கள் மத்தியில் ஒருவித வேலைப்பிரிவினை தொடங்கியிருக்கலாம். முந்தைய குடிமக்கள் தம் தொழிலை முழுவதும் கைவிட்டு, வேறு தொழிலைச் செய்திருக்கலாம். அல்லது தம் தொழில்~ களில் ஏதாவது ஒன்றை மட்டும் ஖ுறிப்பாக எடுத்துக்கொண்டு ஏனைய தொழில்களை விட்டிருக்கலாம். அன்றைய தமிழகத்தில் தோல்தொழில், சங்கு ஊதுதல் மாடு , அறுத்தல், பண்ணை அடிமை வேலை செய்தல் போன்ற~ வற்றைப் பறையரே செய்தனர். குடியேற்றப்பட்ட தெலுங்குச் சக்கிலியர்கள் பிணம் எடுத்தல், மாடு அறுத்தல் தோல், செருப்பு தைத்தல் போன்ற தொழில்களைச் செய்~ தனர். சக்கிலியர் விவசாயத் தொழிலில் ஈடுபட்டதற்கான சான்று இல்லை. ஆயினும் சக்கிலியர் தொழில்களுக்கும் 80 பறையர் தொழில்களுக்கும் சில ஒற்றுமைத் தன்மைகள் உண்஼டு. மாடறுத்தல், தோல்தொழில் போன்றன இவ்விரு ஜாதியினருக்கும் பொதுவான தொழில்களாக இருந்த஼ன. இத்தன்மை பறையர்஖ளுக்குள்ளே ஒருவித வேலைப் பிரிவினையை உண்டுபண்ணியிருக்கலாம் அதாவது சக்கிலியர் குடியேற்றத்திற்குப் பின்னால் பறையரில் ஒரு பிரிவினர், இருவருக்கும் இடையே இருந்த பொதுவான தொழிலைக் கைவிட்டு, இருவரையும் வேறுபடுத்தும் தொழி~ லான பண்ணை அடிமைத்தொழிலில் மட்டுமே ஈடுபட்டிருக்~ கலாம். காலம் செல்லச் செல்லப் பண்ணை அடிமைத் ~ தனத்திலேயே இருந்து, பண்ணைத் தொழிலை மட்டுமே கவனிக்கக்கூடிய சாதியினராக உருவெடுக்கக் காரணமா~ யிருந்தது எனலாம். 

வேறு தொழில்களையும் விட்டு விடாது செய்து கொண்டிருந்தவர்கள் பறையர்களாகவே இருந்தனர். வயல்களில்- பள்ளஙகளில் மட்டுமே தொழில் செய்த வேலைப் பிரிவினர் பள்ளர் எனப்பட்டனர் எனலாம் என்கிறார் கேசவன்ஆக பள்ளர்கள் கி.பி. 14,15 ஆம் நூற்றாண்டு கால அளவில் தமிழகத்தில் அன்றிருந்த பறையர் இனத்தில் இருந்து பிரிந்த ஜாதியினர் என்ற முடிவை ஒப்புக்கொண்டால், இடைக் காலத்திலும், பண்டைக்காலத்திலும் தமிழ்ச் சமூகத்தின் கடைநிலையிலிருந்த ,இழிநிலையிலிருந்த, மக்கட் பிரிவின~ ரான கடைசியர், இழிசினர், புலையர் பறையர் ஆகியோரின் வாரிசுகளே இவர்களும் என்பது தெளிவாகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய காலத்திலிருந்து மக்கள் தொகை அறிக்கைகள் தொடர்ச்சியாக வெளிவரத் தொடங்குகின்றன. இவைகள் பள்ளர்-பறையர் ஜாதியர் பற்றிய பல தெளிவான செய்திகளைத் தருகின்றன. அப்஼~ 81 போதைய தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் பள்ளர் பறையர் வகுப்பார் 16 சதவீதத்தினர்; இவர்களில் 642 சதவீதத்தினர் விவ஼சாயத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். தமிழகத்தில் பள்ளர் பறையர் ஜாதியார் பெற்றிருந்த இடத்தை மலையாள நாட்டில் செருமர்களும் கன்னட நாட்டில் கோலேயாஸ்களும் தெலுங்கு நாட்டில் மலாஸ்களும் வகித்து வந்தனர். செருமர்களில் 93.5 சதவீதத்தினரும்,கோலேயாஸ்களில் 65.7 சதவீதத்தினரும் மலாஸ்களில் 75.5 சதவீதத்தினரும் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.இப்புள்ளி விவரங்஖ளில் இருந்து சில உண்மை஖஼ளை அறிய~ லாம்.i.தமிழகத்தின் மொத்த மக்கட் தொகையில் பள்ளர் பறையர் வகுப்பார் ஒரு கணிசமான அளவில் இருந்துவந்துள்~ ளனர். ii. விவசாய உற்பத்தியில் நேரடி உடல் உழைப்பில் ஈடுபட்டவர்கள் இத்தாழ்த்தப்பட்ட மக்களே, 

iii. தமிழகத்~ தில் மட்டுமின்றித் தென்னிந்தியா முழுவதிலுமே தாழ்த்தப்~ பட்ட மக்களே விவசாய உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளனர் iv. ஜாதிக்கும் தொழிலுக்கும் இடையே ஒரு பிரிக்கமுடியாத பிணைப்பு இருந்து வந்துள்ளது என்பன போன்ற உண்மை~ கள் இப்புள்ளி விபரங்களிலிருந்து பெறப்படுகின்றன. இதனாலேயே பள்ளர்-பறையர் வகுப்பார் `விவசாயத் தொழிற் சாதியினர் என்று சமூகவியலாளர்களால் அழைக்கப்படுகின்றனர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் சமூக அமைப்பின் உற்஫த்தி உறவில் இவர்களுடைய இடம் என்ன? `பண்ணையாள்' என்று அழைக்கப்பட்ட இவர்கள் சமூகமாகவோ தனிப்பட்ட நிலையிலோ நிலத்தோடு பிணைக்கப்பட்டிருந்தானர். நில~ வுடைமையாளரின் குடும்பம் முழுவதும் அழிந்தால் ஒழிய இவர்களுக்கு விடுதலை கிடையாது. அப்போதும் ஏழ்மை 82 விரட்ட ஓரிடத்திலிருந்து விடுபட்டு மற்றோர் இடத்தில் கொத்தடிமையாயினர். அப்படியானவர்கள் நிலவுடைய~ யாளிரின் தனிச்சொத்தாகக் கருதப்பட்டனர். இவர்஖ளை விற்கவோ அடகுவைக்கவோ வாடகைக்கு விடவோ நில~ வுடையமையாளருக்கு உரிமை உண்டு. நிலத்தோடு சேர்த்தும் தனியாகவும் இவர்கள் விற்கப்பட்டனர். ஒரு அடிமை 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை மாவட்டத்திற்கு ஏற்ப விலை போனதாகத் தெரிகிறது.நிலவரி ஒன்றே அரசாங்கத்தின் முக்கிய வருவாயாக அமைந்~ திருந்த ஆரம்ப காலக்கட்டங்களில் பண்ணைகளை விட்டுத் தப்பியோடிய கொத்தடிமைகளை பண்ணையார்஖ளுக்கு மீட்டுத்தரும் முயற்சியில் மாவட்டக் கலெக்டர்களே ஈடு~ பட்டனர். 1830 இல் திருச்சி மாவட்டக் கலெக்டர் சேலம் மாவட்டக் கலெக்டருக்கு நிலத்திலிருந்து தப்பியோடிய பத்துப் பள்ளர்களை மீட்டுத்தரக் கோரி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது; பள்ளர்கள் நிலத்தின் அடிமை஖ள் ; நிலத்தைவிட்டு வெளியேறும் உரிமை அவர்களுக்கு கிடை~ யாது நிலவுடைமையாளரான பிராமணர் அவர்களுடைய உதவியின்றி நிலத்தைச் சாகுபடி செய்ய இயலாது. அவருக்கு அடிமைகளை மீட்டுத் தராவிடில் நிலமும் பாழாகும். அரசாங்கமும் நஶ்டமடையும்" என்று குறிப்பிட்டுள்ளார். நீதி மன்றங்களும்கூட, அடிமைமுறை மரபுவழிப்பட்ட நடை~ முறை என்று பண்ணையாட்களை விற்கும் அடகுவைக்கும் பண்ணையார் உரிமைக்குச் சாதகமாகவே ஆரம்பக்காலங்~ களில் தீப்பளித்தன.அடிமைகள் அவர்கள் செய்த சிறுசிறு தவறுகளுக்குக் கூடக் கடுமையாக஼த் தண்டிக்கப்பட்டனர். தாமஸ்பாபர் என்பவர் 1823 இல் சென்னையிலிருந்த கம்பெனியின் தலைமை நீதி மன்றத்திற்குச் சமர்ப்பித்த அறிக்கையில் 83 அடிமைகள் அவர்஖ள் செய்த சிறு தவறுகளுக்குத் தண்டனை~ யாக மூக்கறுக்கப்படுவது வழக்கமாக இருந்தது எனக் குறிப்~ பிடுகிறார்.தவறு செய்த, தப்பியோட முயன்ற அடிமைகள் கட்டி வைத்துச் சவுக்கால் அடிக்கப்பட்டனர். விலங்கிடப்பட்டனர். விலங்கு பூட்டப்பட்ட நிலையிலேயே வேலையும் வாங்கப்~ பட்டனர். சில இடங்஖ளில் மாட்டுச் சாணத்தையும் மாட்டு மூத்திரத்தையும் குடிக்கச் செய்தனர். இத்~ தண்஼டனை முறைகள் இவர்கள் கால்நடைகளுக்கு நிகராக்க கருதப்பட்ட உண்மையைப் புலப்படுத்தும் தீண்டத்தகாத இம்மக்கள் கொடுமையான சமூக இழிவு~ களுக்கும் உள்ளாக்கப்பட்டிருந்தனர். இவர்கள் உயர்சாதி~ யாரைத் தொடக்கூடாது; உயர்சாதியார் தெருவழியே நடக்கக்கூடாது; மண்பாத்திரங்களையன்றிப் பிற பாத்திரங்~ களை உபயோகிக்கக்கூடாது; காலில் செருப்பணியக்கூடாது: ஆண்கள் மட்டுமின்றிப் பெண்களும் கூட தங்஖ள் மார்புப் பகுதியை மறைக்கும் வண்ணம் ஆடை எதுவும் அணியக்~ கூடாது என்பன போன்ற சமூகக் கட்டுப்பாடுகள் சாதியின் பெயரால் இவர்கள் மேல் திணிக்கப்பட்டிருந்தன பள்ளர் பறையர் இங்கு எந்த அளவுக்குக் கொடுமையாக இழிவாக நடத்தப்பட்டனர் என்பதற்கு 32 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்து இந்துக்களின் நடைமுறை, வழக்கம் மற்றும் சடங்குகள் குறித்து ஆராய்ந்துள்ள `டூபோய்ஸ்' என்ற ஆங்கிலேயரின் கூற்றை இங்கு நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்; 


பறையர்கள் எங்கும் சொந்தச் சாகுபடி செய்ய அனுமதிக்கப்படுவது இல்லை. பிற சாதி~ யாருக்குத் தங்கள் உழைப்பை விற்பதே அவர்களுக்கு விதிக்கப்பட்டது. தங்கள் கடுமையான உழைப்புக்குப்பதிலாக மிகச் சிறிய அளவு கூலியையே அவர்கள் பெற்றனர். இவர்஼களின் 84 முதலாளிகள் தங்கள் சந்தோஶத்திற்காகக்கூட இவர்களை அடிக்கலாம்; அல்லது வேறு வகைத் துன்பங்களை அளிக்கலாம். இந்த அப்பிராணிகளுக்கு அதை எதிர்த்து முறையிடவோ பரிகாரம் தேடவோ உரிமை கிடையாது. பறையர்கள் இந்தியாவின் பிறவி அடிமை஖ள், நம் காலனி நாடுகள் ஒன்றில் அடிமையாக இருப்பதா அல்லது இங்கு பறையனாக இருப்பதா என்ற இரு சோகமான நிலைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்பட்டால் நான் தயக்க~ மின்றி முந்தியதையே தேர்ந்தெடுப்பேன்" என்கிறார் அவர்.பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து இ஼இந் நிலைமைகள் சிதையத் துவங்குகின்றன. 1843 இல் `அடிமை ஒழிப்புச் சட்டம்'வந்தது. இச்சட்டத்தின் மூலம் `சுதந்திரம்' அடைந்த அடிமைகள் மலேசியா, இலங்கை என்று ரப்பர்த் தோட்டங்களிலும், தேயிலைத் தோட்ட஛ங்களிலும் மாற்று வேலை பெற்றுச் சென்றனர். அங்கு ஓரளவு சேமித்த பணத்~ துடன் சொந்த ஊர் திரும்பியவர்கள் சிறு நிலத்தை உடைமையாக்கிச் சொந்த விவசாயம் செய்தனர் பொருளாதார நிலையில் போலவே, சமூக நிலையிலும் பல மாற்றப் போக்குகள் நிகழ்ந்தன. `தீண்டமை ஒழிப்புச் சட்டம்' வந்தது. கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சட்டங்கள் இயற்றப்பட்டன. பழைய புதிய சமூக அமைப்புச் சிதைந்து, அச்சிதைவிலிருந்து உருவாகி வந்த சமூக அமைப்பில் இவர்~ களும், சமூக விழிப்புணர்வும் எழுச்சியும் கொண்ட புதிய சக்தியாக உருவாகி வந்தனர். இதன் உச்சக்கட்ட வெளிப்~ பாடுகளாக தமிழ்நாட்டில் தஞ்சாவூரிலும் (1948), ஆந்திர நாட்டில் தெலிங்கானாவிலும் போராட்டங்கள் வெடித்தன. சமூக நிலையிலும் பொருளாதாரர நிலையிலும் தங்களை 85 அடிமைப்படுத்திய உயர்சாதி நில உடைமையாளர்களை எதிர்த்துத் தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்திய ஆயுதந்~ தாங்கிய போராட்டங்கள் இவை. நில உடைமையாளர்~ களை நிலத்திலிருந்து விரட்டியடித்துவிட்டு, அநேக கிராமங்~ களை இவர்கள் கைப்பற்றி `சோசலிச' அடிப்படையிலான நிர்வாகம் செய்தனர். இப்போராட்டங்களில் பங்கேற்றவர்~ களில், தலைமையேற்று நடத்தியவர்களில் பெரும்பாலோர் அரிசனங்஖ளே கிராமப்புற மக்கட்தொகையிலும், கிராம விவசாய உற்பத்தி~ யிலும் இன்றளவும் பிரதான அங்கம் வகிப்பவர்கள் இப்~ பள்ளர்- பறையர் சாதி௟ினரே. வரலாறு நெடுக அரக்கத்தன~ மான சமூக இழிவுகளுக்கும் பொருளாதாரச் சுரண்்டலுக்~ கும் ஆளாகி வந்துள்ள இம்மக்களே கிராமப்புற பாட்டாளி வர்க்க சக்தியின் ஆணி வேராக இருக்கமுடியும் இவர்களை இவர்களின் தலைமையைப் புறக்கணித்துவிட்டு இங்கு எந்தவொரு சமூக மாற்றத்தையும் நிகழ்த்திவிட முடியாது.