Sunday, December 18, 2022

மதிப்பனூர் மறவர் நடுகற்கள்

மதிப்பனூர் மறவர் நடுகற்கள்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டத்தில் உள்ள மதிப்பனூர் எனும் ஊரில் பெருமாள் கோயில் அருகில் ஆறு நடுகற்களில் ஒன்றாக இந் நடுகல்லும் உள்ளது. இவர்கள் அறுவரில் ஐவர் ஒரே ஊரினர் என்பதும், ஒருவர் பூங்கா நாட்டின் கடக்குறிச்சி எனும் ஊரைச் சேர்ந்தவர் என்பதும் செய்தியில் தெரிகிறது.
1. ஸ்ரீ குடி
2.காட்டு நா-
3.ட்டு இ-
4.டை ஆற்-
5.றூர் பால்
7. வழுதி கு-
8. ளத்து ம-
9.றவன் பெற்-
10. றானுக்கு.‌
என ஆவணம் 31, 2020 - பக்: 51 ல் பதிவிடப்பட்டுள்ளது. பதிவிட்ட நடுகல் படியைப் படத்தில் உள்ளது படி வாசிக்க 'மறவன் பேரயன் பெற்றானுக்கு' என்றுள்ளது. ( திருத்தம் மேற் கொள்ள வேண்டும்)
- ஸ்ரீ குடிகாட்டு நாட்டின் இடையாற்றூரிலுள்ள வழுதிகுளத்தைச் சேர்ந்த 'மறவன் பேரரையன் பெற்றான்' என்பவனுக்கு மேற்கண்ட நடுகல் எழுப்பப்பெற்றுள்ளது.
மீதமுள்ள ஐந்து நடுகற்களில், நாகன்நம்பி என்பவனுக்கு உடையான் பூதம் என்பவன் கல் எடுப்பித்துள்ளான், கொற்றன் ஆச்சனன் பொய்கையரையன் என்பவனுக்கு யார் கல் எழுப்பியது என்பது தெரியவில்லை. கலங்கன் காரி என்பவனுக்கு தகடனும், அரமான பெற்றான் என்பானுக்கு அப்பன் காரியும் நடுகல் எடுப்பித்துள்ளதை அறிய முடிகிறது. இவை தவிர, பூங்கா நாட்டின் கடக்குறிச்சி ஊரைச் சேர்ந்த நம்பன் உடையச்சி என்பவள் 'சிதைக் கடன்' ( சிதை கடன்- உடன்கட்டை ஏறுதல்) ஆற்றியதையும் கூறுகிறது.
-மேற்கண்ட ஐந்து நடுகற்கள் மற்றும் சதிக்கல் 13-14 ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவையாகும்.



கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.

Thursday, December 8, 2022

மதுரைக் ARE.1962-63 கோயில் கல்வெட்டுகளில் மறவர் சமூகம்

ஆளுடைய காமகோட்டத்து நாச்சியார் கோவில் மறவர் கல்வெட்டுகள்

https://thevar-mukkulator.blogspot.com/2023/02/blog-post_23.html

மறவர் கல்வெட்டுகள் சில தொகுப்புகள்-1

https://thevar-mukkulator.blogspot.com/2021/08/blog-post.html

அரிய மறவர் கல்வெட்டுகள் சில....

https://thevar-mukkulator.blogspot.com/2019/04/blog-post.html

மறவரையர்கள்(அரசுமக்கள்) மறமுதலிகள்(தலைவர்கள்)

https://thevar-mukkulator.blogspot.com/2016/04/blog-post.html

மறவர் பாடிகாவல் குலசேகர பாண்டியன் காலத்தில்

https://thevar-mukkulator.blogspot.com/2015/10/blog-post.html

புதுக்கோட்டை மறவர்களின் பட்டங்கள் கல்வெட்டு ஆதாரங்களுடன்

https://thevar-mukkulator.blogspot.com/2014/05/blog-post_4546.html

https://thevar-mukkulator.blogspot.com/2013/08/blog-post_13.html

https://thevar-mukkulator.blogspot.com/2016/03/blog-post_19.html


மாது உறை அதுவே மதுரை.தமிழின் முந்தைய பெயர் மதுரம் என சிலர் கூறுகின்றனர். அதுபோலே பாண்டியநாடு தமிழுடைத்து.

தமிழின் தோற்றுவாயாய் இருக்கும் மதுரை.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டுகளின் முழுமையான ஆய்வு நிறைவுபெற்றுள்ள நிலையில், அந்த ஆய்வின் வழியாக பல புதிய உண்மைகள் வெளியாகியுள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கல்வெட்டுகள் இதுவரை முழுமையாக ஆய்வு செய்யப்படாமலேயே இருந்தது. மத்திய அரசு 60 கல்வெட்டுக்களை ஆங்கில குறிப்புகளாக மட்டும் வெளியிட்டிருந்தது.தற்போது இந்துசமய அறநிலையத்துறை ஏற்பாட்டில் தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் தலைமையிலான குழுவினர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மீனாட்சி அம்மன் கோயிலில் மொத்தமுள்ள 450 கல்வெட்டுக்களையும் ஆய்வு செய்து படியெடுத்து தொல்லியல் துறை வசம் ஒப்படைத்துள்ளனர்.



கல்வெட்டுகளின் நிலை :


கோயிலில் கண்டறியப்பட்ட 450 கல்வெட்டுக்களில் 78 முழுமையாக இருந்தன. இதில், 77 முழு தமிழிலும், 1 முழு சமஸ்கிருதத்திலும், தேவநாகரி மொழியில் எழுதப்பட்ட 1 வரி கல்வெட்டும் உள்ளன.


மதுரை மீனாட்சியம்மன் கோயில் கல்வெட்டை ஆராய்ச்சி செய்கின்றனர்

இவை தவிர, 23 துண்டு கல்வெட்டுக்களும், 351 சிறிய சிறிய துண்டு கல்வெட்டுக்களும் உள்ளன. இந்த துண்டுக் கல்வெட்டுக்கள், கோயில் பெரிய அழிவுக்கு உள்ளாகியுள்ளதை குறிக்கிறது. அதனால் தான் கல்வெட்டுக்கள் சரியான அமைப்பில் இல்லாமல் சிதறி உள்ளன.


கோயில் கட்டுமான தகவல்கள் :


2000 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் ஒரு சிவன் கோயில் இருந்ததாக மதுரை காஞ்சி நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 7ம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தர், "அங்கயற்கண்ணி தன்னோடு ஆலவாய் அமர்ந்த அண்ணல்" என பாடியுள்ளார்.


கிபி 1200-ல் கோவில் கட்டப்பட்டுள்ளதும், கிபி 1250-ல் இயற்கை பேரிடரால் கோயிலின் கருவறை, ஆடவல்லான் சந்நிதி, எழுநிலை கோபுரம் ஆகியவை அப்போது சிதைந்ததும் தெரியவருகிறது. அதன்பின் கோவில் சீரமைக்கப்பட்டு 1250-ல் கோயிலுக்கு முதன்முறையாக திருத்தேர் செய்யப்பட்டுள்ளது.


கி.பி 1190 - 1216 வரை ஆட்சி செய்த சடையவர்ம குலசேகரன் காலத்திய 'வைகைக்கரை' கல்வெட்டு தான் கோயிலில் இருப்பதில் மிக பழமையான கல்வெட்டு. அது, கிபி. 650 - 700 ஆண்டில் கூன்பாண்டியன் (எ) நின்றசீர் நெடுமாறன் வைகையில் தடுப்பணை கட்டி திருப்புவனம் மற்றும் திருச்சுழி பகுதிக்கு நீர் கொண்டு சென்றதை குறிக்கிறது.


தமிழகத்தில் அணை கட்டப்பட்டதற்கு உள்ள முதல் கல்வெட்டு சான்று இது தான். கோயிலில் இருப்பதிலேயே மிக பழைய சிற்பம், சொக்கநாதர் சன்னதிக்கு இடதுபுறம் உள்ள சூரியனார் சிற்பம் தான். அது 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது.


கோயில் கோபுரங்களில் கிழக்கு கோபுரம் தான் மிக தொன்மையானது. அது 12-ம் நூற்றாண்டில் குலசேகரன் காலத்தில் துவங்கப்பட்டு, அவரது தம்பி மாறவர்ம சுந்தரபாண்டியன் காலத்தில் முடிவடைந்துள்ளது. எனவே, அந்த கோபுரத்திற்கு சுந்தரபாண்டியன் திருக்கோபுரம் என்ற பெயரும் உள்ளது.


கோபுரங்களும் அவை கட்டப்பட்ட காலமும் :


1. கிழக்கு கோபுரம் - 13ம் நூற்றாண்டு


2. மேற்கு - 14ம் நூற்றாண்டு


3. தெற்கு - 15ம் நூற்றாண்டு


4. வடக்கு - 16ம் நூற்றாண்டு


மண்டபங்களும் அவை கட்டப்பட்ட ஆண்டும் :


1. கம்பத்தடி மண்டபம் - கிபி 1583


2. நூற்றுக்கால் மண்டபம் - கிபி 1600


3. ஆயிரங்கால் மண்டபம் - கிபி 1600 (வீரப்ப நாயக்கரால்  கட்டப்பட்டது)


13ம் நூற்றாண்டுக்கு பிறகு மதுரையில் இஸ்லாமியர்கள் படையெடுப்பு நிகழ்ந்துள்ளது. அப்போது கோயில் பேரழிவுக்கு உள்ளாகியது. மீனாட்சியின் கருவறை, அர்த்த மண்டபம் கூட சேதப்பட்டுள்ளன.


மதுரை மீனாட்சியம்மன் கோயில்

விஜயநகர பேரரசு காலத்தில் கிபி 1530 முதல் 1546 வரையிலான அச்சுதராயர் என்பவரின் காலத்திய கல்வெட்டில் தான் சித்திரை திருவிழா பற்றிய முதல் குறிப்பு இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு மாதமும் திருவிழா நடைபெற்றதும், அதன் செலவுகளுக்காக பல கிராமங்கள் அளிக்கப்பட்டதும் குறிக்கப்பட்டுள்ளன.

கிபி 1736ம் ஆண்டு வரை மதுரையில் நாயக்கர் ஆட்சி நடைபெற்றுள்ளது.  நாயக்கர்களால் பாதுகாக்கப்பட்டு நமக்கு அளிக்கப்பட்டது தான் இப்போதுள்ள கோயில்.


அம்மன் பெயர் மீனாட்சி அல்ல :


கல்வெட்டு ஆய்வில் கண்டறியப்பட்ட மிக முக்கியமான குறிப்பு, மீனாட்சி என்ற பெயர் எங்குமே இல்லை என்பது தான். 1752ம் ஆண்டு வரை மீனாட்சி என்ற பெயரே அம்மனுக்கு கிடையாது. 1710ல் தான் சொக்கநாதர் என்ற பெயரே சுவாமிக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்பு வரை சுவாமியை, "மாடக்குளக்கீழ் மதுரோதய வளநாட்டு மதுரையில் திரு ஆலவாய் உடைய நாயனார் திருக்கோயில்" என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அம்மனை, "திருக்காமக்கோட்டம் உடைய ஆளுடைய நாச்சியார்" என்றே குறிப்பிட்டுள்ளனர். 1898ம் ஆண்டின் கல்வெட்டில் தான் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் என்று இப்போது நாம் குறிப்பிடும் பெயர் காணப்படுகிறது.



இதுபோக மீனாட்சி என்னும் பெயர் 'கயல்கண்னி' , தடங்கண்ணி என்னும் பெயரில் வேறோரு பெயர் என்பது உண்டு. அதுவும் பாண்டியர் கல்வெட்டில் உள்ளது. இதுபோக

பிரதிமாதேவி(இறைவன் பாகம் கொண்டவள்) என்ற பெயரும் உள்ளது.சீர்பாதம் தாங்கும் தொழிலாளர்கள் போராட்டம் :


கிபி 1710ல் விஜயரங்க சொக்கநாதர் காலத்தில் சுவாமிகளின் பல்லக்கை சுமக்கும் சீர்பாதம் தாங்கும் தொழிலாளர்கள் 64 பேருக்கு  சாமநத்தம் உள்ளிட்ட 4 கிராமங்கள் தானமாக அளிக்கப்பட்டுள்ளன. அவரது ஆட்சிக்கு பின்னால், அந்த கிராமங்கள் திரும்ப பெறப்பட்டதை எதிர்த்து சீர்பாதம் தாங்கிகள் கோயில் முன்பாக போராட்டம் நடத்தினர்.

அப்போது குட்டி என்பவர் சொக்கநாதர் சன்னதிக்கு நேரே உள்ள வாயில் கோபுரத்தில் ஏறி கீழே குதித்து இறந்தார். அதனால், அப்பகுதியில் பக்தர்கள் செல்வது நிறுத்தப்பட்டது. அந்த வாயிலில் பக்தர்கள் செல்வது நிறுத்தப்பட்டதால் திருமலை நாயக்கர் காலத்தில், அம்மன் சன்னதிக்கு நேரே அமைக்கப்பட்ட வாயில் வழியாக தான் நாம் தற்போது சென்று கொண்டிருக்கிறோம்.


சோழவந்தான் கிராமத்தின் உண்மையான பெயர் :


கிபி 946 - 966 வரை ஆட்சி செய்த வீரபாண்டியன் என்ற மன்னன் சோழ மன்னன் ஒருவனின் தலை கொண்டதை குறிக்கும் வகையில் 'சோழாந்தக சதுர்வேதி மங்கலம்' என 


சோழர்கள் செய்யாததும், செய்ததும் :


சோழர்கள் 200 ஆண்டு காலம் மதுரையை ஆட்சி செய்துள்ளனர். எந்த மன்னரும் மீனாட்சி கோயிலுக்கு எந்த திருப்பணிகளையும் மேற்கொள்ளவில்லை. 3ம் குலோத்துங்கன் - 'முடிகொண்ட சோழபுரம்' என மதுரையின் பெயர் மாற்றினான். ஆனால், அந்த பெயர் நிலைக்கவில்லை.

ராஜராஜசோழன் சோழவந்தான் பெயரை 'ஜனநாத சதுர்வேதி மங்கலம்' என மாற்றினான். அதுவும் நிலைக்கவில்லை.


நில தானம் பற்றிய குறிப்பு:


மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பாத்தியமாக சோழவந்தான், வாடிப்பட்டி, காரியாபட்டி, இளையான்குடி உள்ளிட்ட 80 கிராமங்கள் அளிக்கப்பட்டுள்ளன. திருமலை நாயக்கர் பஞ்ச கம்மாளர்களுக்கு சில கிராமங்களை தானமாக அளித்துள்ளார். மடங்கள் கட்டி அவை இயங்குவதற்கு நிலங்கள் கொடுக்கப்பட்டதை 2 கல்வெட்டுகள் குறிக்கின்றன.


மீனாட்சியம்மன் கோயில் கல்வெட்டு



தேவராயர் காலத்தில் சாதி வரி என்ற வரி நீக்கப்பட்டு உள்ளதற்கான குறிப்புகள் உள்ளன. பிராமணர்களை பற்றிய குறிப்புகள் உள்ளன. அதில் 'நாவித பிராமணர்' என்றும் ஒரு குறிப்பு உள்ளது. மறவர்,பிராமணர்,கம்மாளர்,பறையர் தொடர்பான குறிப்புகள் உள்ளன. 


மறவர்கள் நிலவுடைமை சமுதாயமாக இருந்ததும் தெரிய வருகிறது.


இவ்வளவு பெரிய மீனாட்சி கோயில் கல்வெட்டுக்களில் அரசியல் வரலாறு பற்றியோ மக்கள் வாழ்வு பற்றியோ எந்த செய்தியும் இல்லை என்று தெரிவிக்கும் சாந்தலிங்கம், 12, 13 ஆம் நூற்றாண்டுகளில் வேளாண் சமுதாய எழுச்சிக்கு பின்னர் அவர்களை சமாதானம் செய்யும் பொருட்டே பெண் தெய்வங்கள்/கிராம பெண் தெய்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சுவாமிக்கு இணையாக அம்மனுக்கு கோயில்கள் கட்டப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடுகிறார்..


மறவர்களின் நில உடைமை பற்றிய கல்வெட்டு:


இடம்:மதுரை,வடக்கு திருச்சுற்று சுவர்,தென்மேற்கு மூலை

ஆண்டு:கி.பி1227  மொழி:தமிழ் கல்வெட்டு என்:10

மன்னன்:முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்.

செய்தி: கோயிலுக்கு பல ஊர்களிலிருந்தும் நிலக்கொடை

கொடுக்கபட்டுள்லது. மழவராயர் தடங்கண்ணிச் சிற்றூருடையான்

என்ற அதிகாரி. இதில் குறிக்கபடும். நங்க ஏரி,கொடுமளூர்,வடதலை செம்பிநாடு

என்ற இடம் இராமநாதபுரம் அருகே உள்ள மேலக்கொடுமலூர்,தாமரை ஊருணி

ஆகும். அம்மன் பெயர் கயல்கண்ணி என்றும். நங்க ஏரி மறவர் விற்ற நிலம்.







கல்வெட்டு 1:

ஸ்வஸ்தி ஸ்ரீ பூமலர் திருவும் பொரு செயமடந்தை தாமரைக்கு முலை

சேர்புயதிருப்ப வேதநாவின் வெள்ளிதாமரை காதல் மாது கவின் பெறதிளைப்ப

வெண்டிரையுடுத்தி மண்டினி கிடக்கை.........

.......கொற்றது எண்டிசையானை எருத்த மேறிகண்ட நாடமதென கயல்கணி கூர

கோசலம் துளுவம் குதிரங்குச்சுர மாளுவம் மகதம் பொப்புலம் புண்டரங்க கலிங்கம் தெலிங்கம் சோளகம் சீனம் முதலாம் விதிமுறை திகழ வெவ்வேறு

வகுத்த நிலக்கிழமையின் முடிபுனை வேந்தர் கொரு தனிநாயகன் என்றுகேத

திருமுடி சூடி செங்கோலேச்சி..........மதிக்குலம் விளங்க கோமுதல் கோற பன்மரான திருபுவனசக்கரவர்திகள் சுந்தர பாண்டியதேவர்க்கு யாண்டு............


.........வடதலை செம்பி நாட்டு கீழை கொடுமளூரான மதுரோதய நல்லூர் அரையன்

திருநாடுடையான் நீலகங்கரையன்..........இவ்வூர் அரையன் பூவனான வேணாடுடையார் காங்கை உழுதாங்குடி நல்லூரான பிரிதிமாதேவி நல்லூர்

பால் பாவூர் நங்கையேரி மறவர் பக்கல் விலை கொண்டு உடைய...

இப்படியூர் நங்கையேரியும் புத்தேம்பலும் ஆன இக்குளங்களுக்கு........

விரி வயக்கலுகும் வானவன் விழுப்பரையன் ஏம்பலுக்கும் தெற்கில்..

வடவெல்லை கண்டன்குறிச்சி எல்லைக்கும்..........அனுபவித்து  வேனாவுடையார்க்கு

விற்ற செய் பொன்னேரி பற்றாய கூட்டி அழகம்பெருமால் உடையானுக்கு

ஒற்றிவைத்து வேணாடுடையானுக்கு இம்மறவர் விற்ற நிலமும் ஆக இந்நிலங்களும்.........

இவ்வூர் நத்ததில் அரையர்குடியிருப்புக்கு...தென்.அந்தராயம் காரிவராய்ச்சியும்...........

குருகுலத்தரயன் எழுத்து.......அரயன் பல்லவராயன் எழுத்து......


விளக்கம்:

இதில் விளக்கம் என்னவெனில் மதுரை ஆளுடையநாச்சி கயல்கண்ணி கோவிலுக்கு மழவராயர் என்ற அதிகாரி வேண்டாடுடையார் என்ற அதிகாரியை

பணித்து இராமநாதபுரம் வடதலை செம்பி நாட்டில் உள்ள கொடுமளூர் அருகே உள்ள நங்கைஏரி மறவருக்கு சொந்தமான நிலங்களை

விழைக்கு வாங்கி கோவிலுக்கு பூசை காரியங்களுக்கு விடுமாறு கட்டளை இட்டுள்ளார், இதல் நங்கைஏரி மறவர் நிலங்கள் வேனாடுடையர் வசத்துக்கு

முன் அழகம்பெருமாள் உடையான் என்பவர் குத்தகை எடுத்துள்ளார். இந்த கல்வெட்டில் வரும் வேண்டாடுடையார் மற்றும் அழகம் பெருமாள் உடையானும்

நங்கைஏரி ஊரை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். இது மதுரை ஆளுடையநாச்சியார் கோவில் காலத்தில் ஆதாவது மதுரை மன்னன் முதலாம்

மாறவர்ம சுந்தரபாண்டியன் காலத்திலே மறவர்கள் நில உடைமை சமுதாயமாக மதுரைக்குட்பட்ட வடதலை செம்பி நாட்டில் இருந்துள்ளனர். வடதலை செம்பிநாட்டு மறவர்கள் தங்கள் நிலத்தை குத்தகைக்கும் வினியோகத்திற்கும் உடையவராக உள்ளனர்.இந்த கல்வெட்டில்

3 இடத்தில் மறவர்கள் இருந்தது தெரியவருகிறது இதுபோக அந்த ஊரில் அரையர் குடியிருப்பும் இருந்துள்ளது. இதில் இன்றைய மீனாட்சி அம்மனுக்கு  தடங்கண்ணி,கயல்கண்ணி,பிரிதிமாதேவி என்ற பெயர் கல்வெட்டில் வருவது சிறப்பு.






இடம்:மதுரை,வடக்கு திருச்சுற்று சுவர்,தென்மேற்கு மூலை

ஆண்டு:கி.பி1227  மொழி:தமிழ் கல்வெட்டு என்:11

மன்னன்:முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்.

செய்தி: சென்ற கல்வெட்டின் தொடர்ச்சி. 

மழவராயர் தடங்கண்ணிச் சிற்றூருடையான்

என்ற அதிகாரி. இதில் குறிக்கபடும். நங்க ஏரி,கொடுமளூர்,வடதலை செம்பினாடு



என்ற இடம் இராமநாதபுரம் அருகே உள்ள மேலக்கொடுமலூர்,தாமரை ஊருணி

ஆகும். அம்மன் பெயர் கயல்கண்ணி,தடங்கண்ணி,கயல்கண்ணி,பிரிதிமாதேவிஎன்றும். நங்க ஏரி மறவர் விற்ற நிலம்.


கல்வெட்டு 2:

ஸ்வஸ்தி ஸ்ரீ  திரபுவனசக்கரவர்திகள் கோனேரின்மை கொண்டான் திருவாலவாய உடையார் கோயில் பஞ்சாசுர தேவகன்மிகளுக்கு............


.........வடதலை செம்பி நாட்டு கீழை கொடுமளூரான மதுரோதய நல்லூர் அரையன்

திருநாடுடையான் நீலகங்கரையன்..........இவ்வூர் அரையன் பூவனான வேணாடுடையார் காங்கை உழுதாங்குடி நல்லூரான பிரிதிமாதேவி நல்லூர்

பால் பாவூர் நங்கையேரி மறவர் பக்கல் விலை கொண்டு உடைய...

இப்படியூர் நங்கையேரியும் புத்தேம்பலும் ஆன இக்குளங்களுக்கு........

விரி வயக்கலுகும் வானவன் விழுப்பரையன் ஏம்பலுக்கும் தெற்கில்..

வடவெல்லை பல தடிக்கும் தெற்கு நிலம் பறையர் குடியிருப்புக்கும் மேற்படி

ஊர் வயக்காலுக்கும் வடக்கும்...கண்டன் குறிச்சி..............

...........ப்பிரதிமாதேவி நல்லூர் ஊரார் பக்கல் இப்பாவூர் நங்கையேரி

மறவர் விலை கொண்டு அனுபவித்து வேனாவுடையார்க்கு விற்ற செய்

......அழகம்பெருமாள் உடையாள் தியாகஞ்சிரியாளுக்கு ஒற்றிவைத்த

வேனாடுடையார்க்கு இம்மறவர் விற்ற நிலமும்.................பாவூர்

நங்கை ஏரி மறவர் பக்கல் விலைகொண்ட உடைய பரப்ப்யிம்..


..இம்மறவர் விற்ற நிலமும் ஆக இந்நிலங்கல் கடமையும்

அந்தராயம் காரிவராய்ச்சியும்...........

பாண்டிய உத்திர மந்திரி எழுத்து.......அரயன் பல்லவராயன் எழுத்து......


விளக்கம்:

இது 10 கல்வெட்டின் தொடர்ச்சியான 11 ஆம் கல்வெட்டு,

 இதல் நங்கைஏரி மறவர் நிலங்கள் வேனாடுடையர் வாங்கும் முன் அழகம்பெருமாள் உடையான் மகள் சிறியாள் என்பவர் குத்தகை எடுத்துள்ளார். இந்த கல்வெட்டில் வரும் வேண்டாடுடையார் மற்றும் அழகம் பெருமாள் உடையானும் நங்கைஏரி ஊரை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். இது மதுரை ஆளுடையநாச்சியார் கோவில் காலத்தில் ஆதாவது மதுரை மன்னன் முதலாம் மாறவர்ம சுந்தரபாண்டியன் காலத்திலே மறவர்கள் நில உடைமை சமுதாயமாக மதுரைக்குட்பட்ட வடதலை செம்பி நாட்டில் இருந்துள்ளனர். வடதலை செம்பி நாட்டு மறவர்கள் தங்கள் நிலத்தை குத்தகைக்கும் வினியோகத்திற்கும் உடையவராக உள்ளனர்

.

இந்த கல்வெட்டில் அதே நங்கை ஏரி ஊரில் பறையர் குடியிருப்பு ஒன்று இருந்துள்ளது தெரிகிறது.




இடம்:மதுரை,வடக்கு திருச்சுற்று சுவர்,தென்மேற்கு மூலை

ஆண்டு:கி.பி13 ஆம் நூற்றாண்டு  மொழி:தமிழ் கல்வெட்டு என்:13

மன்னன்:முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்.

செய்தி: சென்ற 2 கல்வெட்டின் தொடர்ச்சி...............மூன்றாம் கல்வெட்டு

அதே அதிகாரிகள் பெயர் அதே ஊர் நங்கைஏரி மறவர் விற்ற நிலம்.




கல்வெட்டு 3:


ஸ்வஸ்தி ஸ்ரீ  திரபுவனசக்கரவர்திகள் கோனேரின்மை கொண்டான் திருவாலவாய உடையார் கோயில் பஞ்சாசுர தேவகன்மிகளுக்கு............


.........வடதலை செம்பி நாட்டு கீழை கொடுமளூரான மதுரோதய நல்லூர் அரும்பெற்கூற்றத்து அழகப்பிரான் ஆழ்வான்..........இவ்வூர் பற்றான பரளை

வனவன் விழுப்பரையன் பலதடிக்கும் தெற்கில் தெற்கு நிலம் பறையர் குடியிருப்புக்கும் மேற்படி

ஊர் வயக்காலுக்கும் வடக்கும்...கண்டன் குறிச்சி..............


நல்லூர் பால் அரியூர் சேத்திரபாலர்க்கு.. இப்பிரதிமாதேவி நல்லூர் ஊரார்

பக்கல் இம்மறவர் விலை கொண்டு அனுபவித்து வேனாவுடையார்க்கு விற்ற ப்ராச் செய் மற்றும் பொன்னமனேரி பற்றாய்...


..இவை மிழலை கூற்றத்து கீழ் கூற்று கச்சனூருடையான்

அருளாளன் சேவகத்தேவனான வாணாயிராஜனெழுத்து......


மேலே சொன்ன 3 கல்வெட்டுகளில் கிட்டதட்ட 7 இடத்தில் நங்கை ஏரி மறவர்கள் பெயர்கள் வந்துள்ளன.



இடம்:மதுரை,அம்மன் சன்னதி வெளியேறும் முக்குறுனி பிள்லையார்

எதிரே உள்ள இரட்டை சுற்று கிழக்கு சுவர்

ஆண்டு:கி.பி13 ஆம் நூற்றாண்டு  மொழி:தமிழ் கல்வெட்டு என்:15 ARE.1962-63 No.466

மன்னன்:இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்.

செய்தி: திருப்புவனத்திற்குத் தெற்கில் உள்ள பூம்பிழால்,கன்மியர் கோட்டை

முத்தரையன் கோட்டை,காஙையிருக்கை போன்ற ஊர்களில்

வாழும் மறவர்களிடமிருந்து நிலங்களை விலைக்கு பெற்ற கோவிலுக்கு கொடுத்த செய்தி கூறப்படுகிறது. இந்த பூம்பிழால் திருப்புவன்-திருச்சுழி

சாலையில் உள்ளது.




இடம்:மதுரை,அம்மன் சன்னதி வெளியேறும் முக்குறுனி பிள்லையார்
எதிரே உள்ள இரட்டை சுற்று கிழக்கு சுவர்
ஆண்டு:கி.பி13 ஆம் நூற்றாண்டு  மொழி:

தமிழ் கல்வெட்டு என்:15 ARE.1962-63 No.466
மன்னன்:இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்.
செய்தி: திருப்புவனத்திற்குத் தெற்கில் உள்ள பூம்பிழால்,கன்மியர் கோட்டை,முத்தரையன் கோட்டை,காஙையிருக்கை போன்ற ஊர்களில் வாழும் மறவர்களிடமிருந்து நிலங்களை விலைக்கு பெற்ற கோவிலுக்கு கொடுத்த செய்தி கூறப்படுகிறது. இந்த பூம்பிழால் திருப்புவன்-திருச்சுழி சாலையில் உள்ளது.

கல்வெட்டு 4:
ஸ்வஸ்தி ஸ்ரீ பூமலர் திருவும் பொரு செயமடந்தை தாமரைக்கு முலை
சேர்புயதிருப்ப வேதநாவின் வெள்ளிதாமரை காதல் மாது கவின் பெறதிளைப்ப
வெண்டிரையுடுத்தி மண்டினி கிடக்கை.........
.......கொற்றது எண்டிசையானை எருத்த மேறிகண்ட நாடமதென கயல்கணி கூர
கோசலம் துளுவம் குதிரங்குச்சுர மாளுவம் மகதம் பொப்புலம் புண்டரங்க கலிங்கம் தெலிங்கம் சோளகம் சீனம் முதலாம் விதிமுறை திகழ வெவ்வேறு
வகுத்த நிலக்கிழமையின் முடிபுனை வேந்தர் கொரு தனிநாயகன் என்றுகேத்ட்த
திருமுடி சூடி செங்கோலேச்சி..........மதிக்குலம் விளங்க கோமுதல் கோற பன்மரான திருபுரசக்கரவர்திகள் சுந்தர பாண்டியதேவர்க்கு யாண்டு............

................கீழ் வேம்பநாட்டு....திருக்கடம்ப ம..த்தரனான அதிகைமான் காங்கை(இருக்கை) பூம்பிலால் வேளன் கூத்தனான.....நல்லூர் மழுவாடி..... முத்தரையன்
கோட்டை மறவரிடம் விலை கொண்ட...ம கன்மியார் கோட்டை மறவரில்
ஆழ்வான் பாண்டியான தென்னவன் தென்கங்கரையனான உடையார் ஆழ்வான்..
தொண்டீஸ்வர உடையார் ஊரனிக்கு.........இறையிலிக்காக இறுப்பாக வேண்டி..
.......அதிகைமான் காங்கை......பூம்பிலால் வேலான் கூத்தனான........ அழகனான
அழகிய அரையனும்......
பாண்டியன் ஏம்பலும் கன்மியார் கோட்டை மறவரில் ஆழ்வான்
பாண்டியனான தென்னன் கங்கரையன்...........உள்ளிட்டார் பக்கல் விலை கொண்டு அனுபவித்து வரும்....பூம்பிலால்.........எல்லைக்கு........இறையிலி நீர்நிலம்.......
உள்பட..........





விளக்கம்:
 இந்த கல்வெட்டு மீனாட்சி அம்மன் கோவில் முக்குருனி விநாயகர் அருகே உள்ள இரண்டாம் மாறவர்ம சுந்தரபாண்டியன் கல்வெட்டாகும்.இதில் திருப்புவனம்-திருச்சுழி சாலையில் உள்ள பூம்பிலால்,முத்தரையன்கோட்டை,கன்மியார் கோட்டை ஊர் மறவர்களிடம் விலை கொண்ட நிலங்களை ஆளுடைய நாச்சியாருக்கு இறையிலி விட்டுள்ளனர். மேற்கண்ட கன்மியார் கோட்டை மறவரில் பாண்டியனான தென்னவன் தென்கங்கரையன்
என்பவனிடம் அதேபோல் முத்தரையன் கோட்டை மறவரில் உடையான் தென்னவதரையனிடம் பெற்ற நிலங்களின் விபரம் இந்த கல்வெட்டுகளில் வந்துள்ளது. இதே போல் கன்மியார் கோட்டை மறவர் ஊரில் உள்ள அரையன் பெயர் அதிகமான், தென்னவதரையன்,விழுப்பரையன் போன்றோர் இடம்பெற்ற செய்தியும் வந்துள்ளது. கன்மியார் கோட்டை மறவரில் தென்னவன் ஆழ்வான பாண்டியனான தென்னகங்கரையனும்,முத்தரையன் கோட்டை மறவரில் உடையான்
தென்னவதரையனும் இந்த நிலங்களை விற்குமுன் வேறு ஒருவருக்கு ஒற்றி வைத்துள்ளனர் இதன் பின்னே இறையிலியாக கொடுக்கபட்டுள்ளது.



இடம்:மதுரை,அம்மன் சன்னதி வெளியேறும் முக்குறுனி பிள்லையார்
எதிரே உள்ள இரட்டை சுற்று கிழக்கு சுவர்
ஆண்டு:கி.பி13 ஆம் நூற்றாண்டு  மொழி:தமிழ் கல்வெட்டு என்:21
மன்னன்:இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்.
செய்தி: இதற்கு முன் பார்த்த கல்வெட்டின் தொடர்ச்சியாக இருக்கலாம்.திருப்புவனத்திற்குத் தெற்கில் உள்ள பூம்பிழால்,கன்மியர் கோட்டை
முத்தரையன் கோட்டை,காஙையிருக்கை போன்ற ஊர்களில்
வாழும் மறவர்களிடமிருந்து நிலங்களை விலைக்கு பெற்ற கோவிலுக்கு கொடுத்த செய்தி .

கல்வெட்டு 5:
சக்கரவர்த்தி கொனேரின்மை கொண்டான்.....மாடக்குளம் கீழ் மதுரை(திருவாலவாயுடைய)............

................கலான் காங்கை(இருக்கை) கொங்கர......பக்கல் விலை கொண்ட தூசி ஏம்பல்..... கன்மியார் கோட்டை மறவரில்
ஆழ்வான் பாண்டியான தென்னவன் தென்கங்கரையன் எல்லைக்கு கிழக்கே வடவெல்லை.............நான்கெல்லை.... புன்செய் நத்தமும்.....இறையிலி கார்யவராச்சி.......
உள்பட..........




விளக்கம்:
 இந்த கல்வெட்டு  சென்ற கல்வெட்டின் தொடர்ச்சி மீனாட்சி அம்மன் கோவில் முக்குருனி விநாயகர் அருகே உள்ள இரண்டாம் 
மாறவர்ம சுந்தரபாண்டியன் கல்வெட்டாகும்.இதில் திருப்புவனம்-திருச்சுழி சாலையில் உள்ள  கன்மியார் கோட்டை மறவரில் பாண்டியனான தென்னவன் 
தென்கங்கரையன் என்பவனிடம்  பெற்ற நிலங்களின் விபரம் இந்த கல்வெட்டுகளில் வந்துள்ளது.
இதே போல் கன்மியார் கோட்டை மறவர் ஊரில் உள்ள அரையன் பெயர் அதிகமான், தென்னவதரையன்,விழுப்பரையன் போன்றோர் இடம்பெற்ற செய்தியும்
வந்துள்ளது. கன்மியார் கோட்டை மறவரில் தென்னவன் ஆழ்வான பாண்டியனான தென்னகங்கரையனும்,முத்தரையன் கோட்டை மறவரில் உடையான்
தென்னவதரையனும் இந்த நிலங்களை விற்குமுன் வேறு ஒருவருக்கு ஒற்றி வைத்துள்ளனர் இதன் பின்னே இறையிலியாக கொடுக்கபட்டுள்ளது.




இடம்:மதுரை,அம்மன் சன்னதி வெளியேறும் முக்குறுனி பிள்லையார்
எதிரே உள்ள இரட்டை சுற்று கிழக்கு சுவர்
ஆண்டு:கி.பி13 ஆம் நூற்றாண்டு  மொழி:தமிழ் கல்வெட்டு என்:22 ARE 1962-63 NO.466
மன்னன்:இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்.
செய்தி: இதற்கு முன் பார்த்த 2 கல்வெட்டின் தொடர்ச்சியாக இருக்கலாம்.திருப்புவனத்திற்குத் தெற்கில் உள்ள பூம்பிழால்,கன்மியர் கோட்டை
முத்தரையன் கோட்டை,காஙையிருக்கை போன்ற ஊர்களில்
வாழும் மறவர்களிடமிருந்து நிலங்களை விலைக்கு பெற்ற கோவிலுக்கு கொடுத்த செய்தி .

கல்வெட்டு 5:
கோ.........கலி கெட கடவுள் வேதியர்..தொழில் கழங்க தெலிங்க சோனகஞ் சீனம் முதலாய ......சுடரொளி ...பள்ளியரை கூடத்து பள்ளிபீடம்.............

..............கொற்றிலக்கை......பற்றாக வரிஞ்சியூர்கிழான் திருக்கோடிக்காவல்...
முத்தரையன் கோட்டை பற்றில் விலைகொண்ட சங்கரநாரயனேன்....புன்செய்க்கும்..........புன்செய்(நத்தமும்)......
 பொன்வரியும் மற்றும்..........

பூம்பிழால் முத்தரையன் கோட்டை மறவரில்..................
டையார்......வடக்கும் மேலெல்லை......வினியோகமும் தருவதான அச்சும்
காரியவராய்ச்சியும்......... உட்பட
.........காங்கையிருக்கை.....பூம்பிலால் ........மறவர் பக்கல்........

............முதல் ஜீவித பற்றாக இறையிலி........................கூற்று....
பராந்தகநல்லூர் இரும்.....திருமுடி..............

விளக்கம்:
இதற்க்கு முன் பார்த்த பூம்பிழால்,முத்தரையன் கோட்டை,கன்மியார்கோட்டை
மறவரின் பெயரும் மறவர் பக்கலும் வந்துள்ள  நிலங்களை இறையிலியாக கொடுக்கபட்டுள்ளது.




இந்த கல்வெட்டுகளின் மூலம் நாம் தெரிவது யாதெனில் பாண்டிய நாட்டில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திலும் அதன்
முன்பும் பாண்டிய நாட்டுக்குட்பட்ட பூம்பிழாலை,முத்தரயன்கோட்டை,கன்மியார் கோட்டை மறவர்களும் நில உடைமை பெற்ற ஒரே சமூதாயமாய் வாழ்ந்து வருவது நிருபிக்க பட்டுள்ளது. மேலும் அந்த நிலங்களின் நாட்டார்,அரையர்,ஆழ்வார் என வந்துள்ள பலரும்
மறவர் என அறிய காண்கிறோம்.


பூம்பிழால்,முத்தரையன் கோட்டை,கன்மியார் கோட்டை என்ற இடம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திற்கு தெற்கே திருச்சுழி செல்லும் வழியில்
தொடராக வந்துள்ள ஊர்களாகும். மேற்கண்ட ஊர்களில் இராமநாதபுரம்,சிவகங்கை மாவட்டத்தை சார்ந்த மறவர்கள் தொகையாக வாழ்ந்து மேற்பட்ட பாண்டியர் காலத்தில் வருகின்றனர்.

மேலும் இவை தமிழக தொல்லியல் துறையின் மூலமாக வெளிக்கொனரபட்டுள்ளது.ARE 1962-63 கல்வெட்டு தென் இந்திய கல்வெட்டுகள் தொகுதி வருடம் 1962-63ல் வெளியாகிவுள்ளது அதில் வந்த செய்தி வெளியாகிவுள்ளது.


நன்றி:
தென் இந்திய கல்வெட்டு தொகுதிகள்
வருடம் 1962-63

Wednesday, November 30, 2022

ஊத்துமலை மன்னர் கண்ணப்பநாயனார் வம்சமா ?

ஊத்துமலை ஜமீனை இப்போது பலரும்  இன்னும் எத்தனையோ சாதிகளும் கிண்டலடிக்கும் ஊத்துமலை ஜமீன் தன்னை "கண்ணப்பர் குலத்தில் வந்த மருதப்ப தேவன்" என குறிப்பிட்டுள்ளாரா இல்லை கண்ணப்பர் குலத்தில் தோன்றிய முனையதரையர் முத்தரையர் என்ற பட்டம் கொண்ட திருமங்கை ஆழ்வார் குலத்தில் தோன்றியவரா என பார்ப்போம். 

எங்கள் ஊத்துமலை மன்னர் "மறவர் குல மாணிக்கம்" அவரை போலியாக வகையாடி உள்ளனர்.

 பாளையபட்டு வம்சாவளிகள் என மெக்கன்சி கையெழுத்து பிரதிகள் என்ற ஆங்கிலேய ஆவணத்திலும் அவர் கையெழுத்து இட்ட மூலப்பிரதியில் என்ன சொல்லபட்டது. அதே நேரம் அந்த ஓலையை எழுதிய புள்ளிகள் அவரது தகவலை தவிர இனைப்பாக சேர்த்து விட்ட "பெரியபுராணம்" மற்றும் "நாலாயிரம்திவ்வியபிரபந்தம்" உள்ள செய்திகள் ஊத்துமலை வம்சாவளியில் இருந்ததா என்று பார்ப்போம்.

 பாளையபட்டு வம்சாவளியிலே "கண்ணப்பர் குலத்தில் தோன்றிய மருத்தப்பன்" என்றோ "கள்ளதிருமங்கை மன்னன் குலத்தில் தோன்றிய மருதப்பன்" என ஒரு இடத்தில் கூட சொல்லவில்லையே. 

மாறாக "மரவங்கிசத்திலே தோன்றிய நாகராஜா மகன் தின்னராசா" என பொதுவாக சொல்லி இருந்தது அந்த ஒலை. அது மெக்கன்சி உதவியாக இருந்த தெலுங்கு பிராமணர் ஒருவர் "பெரியபுராணம்" என்ற செய்யுளில் உள்ள கண்ணப்பன் மறவன் என வந்ததை வைத்து இதில் சேர்த்து விட்டுள்ளார். 

இதேபோல் கள்ளர் திருமங்கை மன்னனையும் மறவர் என சேர்த்துள்ளார் இது அவரின் சேர்க்கை. பாளையபட்டு வம்சாவளியில் "மீனாட்சி அம்மன் விலாப்புரத்தில் தோன்றி மறத்தன்மை கொண்டதால் மறவர்கள் என்றும் திக்கு விசயத்துக்கு மறவ வீரர்கள் சூழ சென்றார்" என வந்துள்ளது. 

அடுத்து கண்ணப்பர் பற்றி, "அப்படிபட்ட மறவங்கிஷத்திலே நாகராசா மகன் தின்னராசா ராச்சிய பரிபாலன் செய்யும் நாளில்" என  கண்ணப்பர் கதை மொத்த மறவருக்கும் பொதுவாக சொன்னது. இதை 12 ஆம் நூற்றாண்டுக்கு முன் எந்த பெரியபுராண பெயரை பார்க்கவே முடியாது. 12 ஆம் நூற்றாண்டுக்கு முன்னே மறவர் கல்வெட்டுகள் 50க்கு மேல் உள்ளது. அப்பிடி இருக்க கன்னப்பர் பற்றி 12-நூற்றாண்டுக்கு முன் எந்த இடத்திலும் இல்லையே. பெரியபுராணம் என்பதே ஒரு வெள்ளாளன் என்ற சாதியை சேர்ந்த சேக்கிழான் என்பவராலே எழுதப்பட்டது. இதை பின்னால் பார்ப்போம்.

 பாளையபட்டு வம்சாவளியில் 2-ஆம் பக்கம் "பெரியபுராண கவிதை என்னவென்றால் 'என் மரக்குலத்து வந்த வேட்டுவ சாதியால் கரடி,வேங்கை......' என இது பெரியபுராணத்தில் உள்ள கதை என தெளிவாக கூறுகிறார்கள் .

கன்ணப்பரை ஊத்துமலை மன்னர் தன் குல முன்னோர் என சொல்லவில்லை ஆனால் அந்த வம்சவளி எழுதியுள்ளவர் சேர்த்துள்ளார். இது போக வடமொழி சமஸ்கிருத ஸ்லோகங்களை சேர்த்துள்ளார் அந்த பிராமணர். இது ஊத்துமலை மன்னர் அறியாதது. ஆக கன்னப்பர் கதையை மருதப்ப தேவர் கோரவில்லை அந்த பிராமணர் சொருகியுள்ளார். 

இதேபோல் 3-ஆம் பக்கத்தில் அந்த பிராமணரே எழுதியுள்ளார் என அவரின் மொழிநடை "பிராமண பாஷை" வருகிறது.........."பெரியாவாள் தோத்திரம் செய்ய" "ஜந்துக்கள் முதல்" "ஷேமம் கொண்டு" என வார்த்தை வருகிறது.

 3-ஆம் பக்கத்தில் "அப்படிப்பட்ட மரக்குலத்தில் கவியராஜா ஸ்ரீ ரங்கநாதருக்கு திருப்பனி" என கலியன் என்ற பெயரை கவிராஜ என சொல்கிறார் அந்த பிராமணர்.பின் திருமங்கை ஆழ்வார் கதை வருகிறது. இங்கேயும் "திருமங்கை மன்னன் வழி வந்த மருதப்பன்" என சொல்லவே இல்லை.


6-ம் பக்கதிலே கண்ணப்பநாயனார்,திருமங்கைமன்னன் கதை எங்கிருந்து எடுக்கபட்டது என தெளிவாக சொல்கிறார் அந்த பிராமணர் "யிப்படி எல்லார் பேர்பெற்ற மரக்குல சரித்திரங்கள் மதுராபுரியில் சங்கத்தார் செய்யுளிலும் சொல்லியிருக்கிறது. சந்த சங்க செய்யுள் காரிகைதாரணத்திலிருப்பது என்னவென்றால்............... "யிப்படி புராணங்கள்,கலம்பகங்கள்,கம்பராமாயணம் மற்ற பிரபந்தங்களில்லும் சொல்லியிருக்கிறார்கள்" என தெளிவாக இது அனைத்தும் புராணத்திலிருந்து தான் சொல்லபட்டது. மருதப்ப தேவன் வம்சாவளியில் இல்லை என தெளிவாக சொல்கிறார். 

இதன் பின்னே தான் ஊத்துமலை ஜமீன் கையெழுத்திட்ட சுயசரிதை தொடங்கு கிறது.... அப்படிப்பட்ட மரக்குல பரம்பரையாயிருக்கிற வங்கிஷத்திலே எங்கள் முன்னோர் கிளுவை கொண்டையங்கோட்டை பிரிவு என தொடங்குகிறார். 

ஆக கண்ணப்பன் கதையும்,திருமங்கை மன்னன் கதையும் ஊத்துமலை வம்சாவளியின் பிரதியில் இல்லை.

 இதே கொண்டயங்கோட்டை மறவரில் தான் நெற்கட்டான்செவ்வல்,சுரண்டை,நடுவகுறிச்சி அனைவரும் ஒரே பிரிவுதான். அதில் எதிலும் கண்ணப்பன் கதையும் திருமங்கை மன்னன் கதையும் குறிப்பிடபடவே இல்லை.

 இதன் பின் பாளையபட்டு வம்சாவளியில் .......... ஒரு பிரிவினர் இடப்பெயர்ச்சி ஏற்படும் போது பொதுவாக சொல்லும் "மகட்கொடை மறுப்பு கதை" தான் சொல்லபட்டுள்ளது. மகட்கொடை மறுப்பு கதை மறவர்,கள்ளர்,நாயக்கர், நாடார்,வலையர்,வெள்ளாளர்,நாட்டுகோட்டை செட்டி என பல சாதிகளிலும் உள்ளது. ஆதாவது நாங்கள் பிழைக்க வரவில்லை மன்னனை பகைத்து வந்தோம் என சொல்வதில் உயர்வு கருதி சொல்லபடுகிறது. குறிப்பாக தெலுங்க நாயக்கர்கள் "ஆந்திராவில் இசுலாமியன் பெண் கேட்க இராவில் கிளம்பி வந்தோம்" எனவும் நாடார் sishri.org ஒரு கட்டுரையில் "கொச்சி ராசா பென் கேட்டான் கொழும்பு மன்னன் பெண் கேட்டான் கிளம்பி வந்தோம்" நாட்டுகோட்டை செட்டி காவிரிபூம்பட்டினதின் சோழ மன்னன் பெண்கேட்டதால் கிளம்பி காரைக்குடி வந்ததாக ஆயிரம் கதைகள் உள்ளது. என கூறும் இந்த கதைகள் பொதுவானவை.


 மறவர் வரலாறு என்றும் "பெரியபுரானம்" "அக்கினிபுராணம்" போல் கற்பனை இருக்காது யதார்த்த நேர்மையே இருக்கும் கண்ணப்பன் கதை நம்பமுடிகிறதா? திருமங்கை மன்னன் கதை நம்பமுடிகிறதா? ஆனல் பக்தியை கிண்டல் பன்னவில்லை. ஊத்துமலை ஜமீன் வரலாறு- ந.ராசையா எழுதியுள்ளார் அதில் வருவதை கவணியுங்கள் அதுவே ஊத்துமலை நிஜ வம்சாவளி, 


தமிழகத்தின் தென்பகுதிகளில் குறுநில மன்னர்கள் ஆண்டு வந்தனர். அவர்களைப் பாளையக்காரர்கள் என்று அழைத்தனர் பாளையக்காரர்களில் மறவர் மேற்கு பகுதி பாளையங்களாகவும் நாயக்கர் கிழக்கு பகுதி பாளையங்களாகவும் திருநெல்வேலி சிமையுள்ள அவனைவரும் இராமநாதபுரம் பகுதியில் உள்ள "கிழுவை"[ஆனால் கிழுவை நாடு தென்காசி பகுதியில் உள்ள கேரள குற்றால பகுதி என தெரியாது]" நாட்டிலிருந்த வந்தவர்களேன "வாள் எழுபது" என்னும் நூலில் ஆசீர்வாததேவர் பக்கம் 16ல் கூறுகிறார் அவ்வாறு வந்த பாளையங்களில் ஒன்றுதான் ஊத்துமலை பாளையமாகும்.


 ஊர்க்காடு,சுரண்டை,நடுவக்கு|றிச்சி,தலைவங்கோட்டை,சொக்கம்பட்டி நெற்கட்டுஞ்செவ்வல்,அழகாபுரி,தென்மலை,சிவகிரி,சேத்தூர்,கொல்லங்கொண்டான் குருக்கள்பட்டி,சிங்கம்பட்டி,மனியாச்சி,கடம்பூர்,ஊத்துமலை ஆகியவை மறவர் பாளையமாகும். 

பாண்டிய மன்னனுக்கு சகல உதவிகளும் செய்து நாட்டில் அமைதி ஏற்படக்காரணமாக இருந்த மறவர்களுக்கெல்லாம் பட்டங்களும்,பதவிகளும் வழங்கபட்டன. ஊத்துமலை ஜமீந்தார்க்கு விஜயகுனராம பாண்டியன் என்ற பட்டமும் உபய சாமரம் பல விருதுகளுடன் கொடிகளுடன் வழங்கினான்

 பாண்டியன் உக்கிரன்கோட்டையில் அரசு செலுத்தும்போது குறும்பர்களின் தொல்லைகளை ஒழித்ததால் இப்பகுதி "ஊத்துமலை" வழங்கியதாக வரலாறு கூறுகிறது. 

வேறு ஒரு ஆய்வின்படி ஊத்துமலை மன்னர் சேரநாட்டிலிருந்து பிரிந்து கிழக்கே வந்து அரசு ஏற்படுத்தியதாகவும் அதனாலேதான் மறவர் பாளையத்தில் ஊத்துமலை மட்டும் வைணவ மதத்தை சார்ந்தவர் என தெரிகிறது. இதுவே உண்மையாக இருக்ககூடும் காரணம் இவர்கள் தலைநகரம் "வீரகேரளம்புதூர்". மற்றும் கொண்டையங்கோட்டை மறவர்கள் பற்றிய கயத்தாறு வெட்டும் பெருமாள் பாண்டியன் கல்வெட்டில் "குண்டையம் கோட்டை மறவரில்" என வருகிறது. இந்த குண்டையம் என்னும் இடம் இன்றய கேரளாவில் இருக்கிறது. 

ஆதாவது தென்காசியிலிருந்து 80கி.மி தொலைவில் இருக்கிறது. அதுவே கிளுவை நாடு அங்கு "குண்டையம்" இடத்தில் இருந்த கோட்டையை தான் "குண்டையங்கோட்டை" என கூறுகிறார்கள். மேலும் பாண்டியன் நடத்தி வந்த தசரா திருவிலாவை தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் விழவை இன்று ஊத்துமலை ஜமீனே நடத்துகின்றனர்.

 பாண்டியருக்கு பின் நாயக்கர் ஆட்சியில் 72 பாளையத்தில் ஒன்றானது ஊத்துமலை. மதுரை நாயக்கர் ஆட்சியை ஒழித்து விட்டு பாண்டியர் ஆட்சியை மீண்டும் நிலை நிறுத்த மாவீரன் பூலித்தேவன் தலைமையில் ஐந்து கோட்டைகள் எழுந்தன. அதில் முக்கியமான ஒன்று ஊத்துமலையாகும். ஊத்துமலையில் பஞ்சபாண்டியர்களில் ஒருவரான "மாறவர்மன் கோட்டை" என்னும் பெயர் சூட்டபட்டது பூலித்தேவனால்..


 மேலும் இன்றைய ஊத்துமலை மன்னரே பூலித்தேவனின் பெண்ணடி வாரிசு.பூலித்தேவன் ஆண்வாரிசு இல்லாமல் இறந்தார். அவரின் பெண் ஊத்துமலையில் வந்த மருமகளாவர். 


பாண்டியன் வீரகேரளவர்மன் என்பவனின் பேரே வீரகேரளம்புதூர் என சதாசிவபண்டாரத்தார் "பாண்டியர் வரலாறு" நூலில் கூறுகிறார்.. தென்காசி பராக்கிரம பாண்டியன் மன்னுக்கு ஊத்துமலை பாளையக்காரர் உதவி செய்த்தாக "இராசசேகர தங்கமனி" பாண்டியர் வரலாற்றில் கூறியுள்ளார்.

 கொண்டையங்கோட்டை மறவர்களும் சேரநாட்டில் இருந்து வந்து பாண்டியர் பட்டங்களை அனிந்த சேர பாண்டியரே ஆவர். வெட்டும் பெருமாள் கல்வெட்டில் கொண்டையங்கோட்டை மறவருக்கு அஞ்சாத கண்டன்,சீவலவன்,வென்றுமுடிகொண்ட பாண்டியதேவன்,தொண்டைமான்,இராமகுட்டி(இது சேர பெயரே),ஆள்புலி தேவன், என சேரன் பாண்டியன் பெயர்களே வந்துள்ளது. ஊத்துமலை வம்சாவளி பிரதி பற்றியும் இந்த நூலில் வருகிறது. 


இப்படி யதார்தமான வரலாறு கொண்ட ஊத்துமலை எந்த இடத்திலும் கண்ணப்பர் வம்சம் என்றோ இல்லை திருமங்கை மன்னன் வம்சமோ கூறவில்லை. 



இப்போது ஊத்துமலை ஜமீன் தோன்றும் பல நூறு வருடங்களுக்கும் முன்னே கண்ணப்பனை கோரிய ஜாதிகள் யாவை என பார்ப்போம். 

இவர்கள் கல்வெட்டுகளிலே கண்ணப்பன் பெயரை கொண்டுள்ளனர்.


 "பெரியபுராணம்" என்ற கற்பனை தமிழ்நாட்டில் 12-ஆம் நூற்றாண்டுக்கு முன் கிடையவே கிடையாது. அதை எழுதிய சூத்திரனும் ஒரு வெள்ளாளன் தான். "கண்ணப்ப நாயனார்" பாடல்களிலே கண்ணப்ப நாயனாரை வேடர்,மறவர்,மழவர்,எயினர் மள்ளர்,மலையர்,குறவர்[இது அத்தனையும் ஒரே ஜாதியா?] என விதவிதமாக பாடியுள்ளார். 

இதைப்போல் இராமாயன குகனை மறவர் என குறித்து இத்தனை வருட வரலாற்றில் மறவரின் மீது பழிபோட்டது தொண்டை மண்டல வேளாளர் ஓலை சுவடிதான்.




காலின் மெக்கன்சி பிரபுவும் வெள்ளாளர் ஒலைகளும்
காணாடு-கோனாடு வெள்ளாளர் சண்டை(தேக்காட்டூர் சுப்பிரமணிய வேளார் ஒலை)
மறவர் ஜாதிவர்ணம் ஓலை(போலி செய்திகள்)
கணகசபை பிள்ளையின் நாகர் திரிபுகளும் வெள்ளாள மயமாக்கலும்
K.K Pillai or Kanagasabai pillai's Fake Naga Race claims and Vellalization
https://www.vocayya.com/ தலத்திற்கு


 இது வெள்ளாளர்கள் மறவர் சாதி மீது கொண்ட காழ்ப்புனர்ச்சி காரணமாக ஆந்திர பகுதி வேட்டுவனை மறவர் என எழுதியுள்ளனர். பெரியபுராணத்தில் பிராமணன் மன்னன் சூத்திரன் என மூனு பிரிவு மக்களை தான் குறித்துள்ளனர். அதில் பிராமணன்,மன்னனை தவிர மித்த அனைத்து நாயன்மாரும் வெள்ளாளர் என கல்வெட்டுகளில் வந்துள்ளனர். 





கீழ்வருகின்ற சேக்கிழார் வரலாறு சேக்கிழார் புராணம் எனும் உமாபதி சிவாச்சாரியாரால் எழுதப்பெற்ற நூலை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்நூலில் வருகின்ற சில செய்திகளையும், இந்த நூலின் ஆசிரியர் உமாபதி சிவாச்சாரியார் என்பதையும், மா. இராசமாணிக்கனார் எனும் ஆய்வாளர் மறுத்துள்ளார்.

பிறப்பு

பொ.ஊ. 12-ஆம் நூற்றாண்டில் தொண்டை நாட்டைச் சேர்ந்த புலியூர்க் கோட்டத்தில் உள்ள குன்றத்தூர் என்னும் ஊரில் வேளாளர்[1] மரபில் வெள்ளியங்கிரி மற்றும் அழகாம்பிகை ஆகியோருக்கு முதல் மகனாகச் சேக்கிழார் பிறந்தார்

சேக்கிழார் வரலாறு குறித்தும், அவருடைய காலம் குறித்தும் பல்வேறு அறிஞர்கள் ஆய்வு செய்துள்ளார்கள். மா. இராசமாணிக்கனார் அவரது பெரியபுராண ஆய்வு நூலில் பல்வேறு ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார்.[2]

அதன்படி சேக்கிழாரின் இயற்பெயர் இராமதேவன் என இருக்கலாம் என்று கூறுகிறார்.[2] மேலும் சேக்கிழார் வரலாற்றில் கூறப்படும் அரசன் சீவக சிந்தாமணியைப் படித்ததும், அதற்குச் சேக்கிழார் மறுப்பு தெரிவித்து பெரியபுராணம் இயற்றியது குறித்தான கருத்துரு தவறானது என்றும், சேக்கிழார் சீவக சிந்தாமணியைப் படித்து, அதிலிருக்கும் கருத்துகளைப் பெரியபுராணத்தில் எடுத்தாண்டுள்ளார் என்றும் கூறுகிறார்.[2]

சேக்கிழார் பெரிய புராணம் எனும் திருத்தொண்டர் புராணத்தினை இரண்டாம் இராசராசன் காலத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவில் திருவொற்றியூர்க் கோயிலில் இயற்றியுள்ளார்.[2] இக்காலம் பொ.ஊ. 1174 ஆக இருக்கலாம் என்பது அவரது ஆய்வு



முதலில் கோரிய ஜாதி பள்ளி என்ற வன்னிய சாதியர், 

கல்வெட்டுகளில், சம்புவரையர் திருக்கன்னப்பன் பாதம் தொட்டு வில் கோர்ப்போம். இல்லை எனில் "வேட்டை விச்சாதரோம் திருகண்ணப்பவம்சம் அல்லாதோர்" என சம்புவரையர் கண்ணப்பன் வம்சம் என சம்புவரையர் கூறியுள்ளார். 

ஆணால் கல்வெட்டுகள் படி திருகண்ணப்ப வம்சம் என கல்வெட்டு பொரித்திருப்பது மறவர்கள் அல்ல அது தொண்டைமண்டல பகுதியை சார்ந்த சம்புவரையர். என்பவர்
"சம்புவரையர்களுக்கு இதற்கு விட்டோம் இதற்க்கு கழிவு சொல்லுவோர் வேட்டைகாரர் வம்சமும் திருக்கண்ணப்ப வம்சமும் அல்லோம்" என அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்பநாயனார் வழி வந்ததாக சம்புராயர்கள் கூறுகின்றனர். 

இதே போல் பள்ளிகள் என்னும் இனக்குழுவினர் வேட்டையில் வரும் விலங்குகளை விற்று பிளைக்கும் ஜாதி
என கூறுகின்றனர். 

 வன்னியர் வரலாறு எனும் நூலை நடன,காசிநாதன் எழுதியுள்ளார்.

 "வன்னியர் வரலாறு" எனும் நூலில் வன்னியன் என பெயரில் வந்த கல்வெட்டுகளில் வன்னியர்கள் நாயன் கண்ணப்பன் என நிருபனமாகிறது.

"நீலாங்கரையன் வன்னிய நாயனான உத்தம நீதி கண்ணப்பன்"

"இவன் வன்னிய நாயனாரான உத்தம நீதி கண்ணப்பன் பாக்கல் வேண்டு"
பள்ளி சாதி தான் கண்ணப்ப நாயனார் சாதி என உறுதியான கல்வெட்டு


வன்னிய வேட்டைக்காரன்

In the Pudukkottai District, kalappur Mayilapatti inscription pertaining to Sundara Pandiya says the following :-
"மஹாபிரதானி மண்டலிக குமாரர் வன்னிய வேட்டைக்காரன்
மல்லைய தொண்ட நாயக்கர் மருமகனார்
" (Avanam-13, Year-2002, Page-23)
"வேட்டைக்காரன் அத்தி மல்லன் விளக்கநேன்
களமிருதூர்ப் பள்ளி பெருமான் 
தொண்டநைச்
சாத்தி வைத்த விளக்கு"
(A.R.E No.365 of 1902)





வன்னியநாயன்<=>வன்னியர்கள் தலைவன்.
வன்னியநாயன் கண்ணப்பன் என வன்னியர்களின் நாயகன் கண்ணப்பன் என்பதை நினைக்க உள்ளம் பூரிக்கிறது. உவகை கொள்கிறது. 

 மலைமான் ஒருவனும் தன்னை கண்ணப்பன் என கூறியுள்ளான். 

இராஜமானிக்கனார் "சோழர் வரலாறு" 71 க.என்.1919 "அருளாள பெருமாளான இராச இராச மலையமான் மகனான கண்ண்பன் மலையமான்". 

கண்ணப்பன் மலையமான் என்றால் என்ன பெயருக்கு முன்னே இன்ஷியல் வைப்பதன் அர்த்தம் என்ன. பின்ன வன்னியர் என ஆந்திர காளஹஸ்தி,காஞ்சிபுரம் என்ற பல்லவ நாட்டில் இருப்பவர்கள் யாரப்பா? இவங்க தான் சொல்லனும்.




இனி கண்ணப்பர் வம்ஸம் பற்றி யாருக்கும் கருத்து இருக்காது .

சிலை எழுபதையும் வன்னியபுராணத்தையும் பனையோளை கோமாளிகள் என்றும் உண்மையல்ல என அரசாங்க நடுவர்களே தீர்ப்பிட்டதை வெளியே சொல்லாமல் வெளியிடுகள் மூலம் விளம்பரம் செய்கின்றனர்.



கொங்கு நாட்டு பட்டயக்காரர்களிலே தாராபுரம் பட்டகாரர்,கோபன் மன்றாடி என்ற இரு கொங்கு வேட்டுவர் கண்ணப்ப வம்சத்தில் தோன்றி சேரன் வேண்டுகோளில் கொங்கு பகுதியில் குடியேறிதாக கூறுகின்றனர். சில பட்டயங்களில் வேட்டுவர், முத்தரையரின் வழித்தோன்றல்கள் என்று செப்புகின்றன. வேட்டுவர் முத்தரையரும் கண்ணப்ப நாயனாரைத் தமது குல தெய்வமாகக் கொண்டு வழி படுகின்றனர். எட்கார் ஃதர்ஸ்ட்டன் (Edgar Thurston) அவர்கள் முத்தரையர், வேட்டுவர், வலையர் ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறியுள்ளார்.அங்கிருந்த வேட்டுவ வேந்தனிடம் படை உதவி பெறுவதுண்டு. ஒருகால கட்டத்தில் காளஹஸ்தியில் இருந்த வேட்டுவர் கொங்கு நாட்டில் குடியேறியுள்ளனர். இதனால், வேட்டுவர் காளஹஸ்தி வேந்தரிடையே சுமுகமான உறவும் இருந்தது. இதனை வைத்துக்கொண்டு வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம் காளஹஸ்தி எனக் கூறுதல் தவறாகும்.பழைய கோட்டைப்பட்டக்காரர் செப்பேடுகளில் வேட்டுவ முத்திரைக்காரர் ஒருவர் குறிக்கப்பெறுகிறார். வேட்டுவ கவுண்டப் பட்டக்காரருள் ஒருவரான தலைய நாட்டுவள்ளல் கவுண்டர் என்பார் சுந்தரபாண்டிய தண்டெறி முத்துராஜா என்று மெக்கன்ஸியால் குறிக்கப்பெறுகிறார். வேட்டுவ கவுண்டருள் கொங்கர் செல்வ முத்தரையன், சோழ முத்தரையன், சிய முத்தரையன், சேந்த முத்தரையன் முதலானோர் குறிக்கப்படுகின்றனர். கோபி வட்டம் கொங்கர் பாளையத்தில் இன்றும் பெரும் அளவில் முத்தரையர் வசிக்கின்றனர். திருச்சி மாவட்டம், திருச்சி வட்டத்திலும் (குறிப்பாக வடசேரிப் பகுதி) குளித்தலை வட்டத்திலும் வாழ்ந்து வருகின்ற ஊராளிக் கவுணடர்கள் முத்தரையர், கண்ணப்பர் குலவலையர் என அழைக்க்படுகின்றனர். கொங்கு நாட்டின் பல பகுதிகளில் கண்ணப்பருக்கு வழிபாடு நிகழுங்கால் முத்தரையரி முதலுரிமை பெறுகின்றனர். இவற்றை நுண்ணிதின் ஆராய்ந்து பார்க்குங்கால் வேட்டுவர்க்கும், முத்தரையர்க்கும் ஏதோ ஒருவிதமான நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதனை ஊகிக்கலாம். 


தென்பகுதிகளில் மறவருக்கு அருகே வாழும் 
வலையர் சமூகத்தார்களே தங்களை கண்ணப்பர் கோத்திரத்தார் என குறிப்பிடுகிறார்கள். ஆனால் ஒரு மறவன் கூட தன்னை கண்ணப்பர் வழி வந்தவன் என குறிப்பிட படவில்லை 

இராமநாதபுரம் ஜாதிகளிலும் கண்ணப்ப கோத்திர வலையர் எனவே குறித்துள்ளனர் 




இதைப்போல் 12 ஆழ்வார்களில் ஒருவரான "திருமங்கை ஆழ்வார்" அவரை எந்த பிரபந்தம் மறவர் என குறிப்பிட்டது தெரியவில்லை அவரை ஒருவராக கோரினார். அதனாலே தாம் வைனவராக உள்ளதாக கூறியுள்ளார். நாம் கேட்பதல்லாம் கன்னப்பநாயனார் காலம் எது கன்னப்பநாயனாரை பெரியபுராணம் கூறும் காளஹஸ்தியில் இன்று மறவர் இருக்கின்றனரா? அல்லது மறவர்கள் இருந்த சுவடு உள்ளதா? கன்னப்பநாயனார் வழி வந்தவர் திருமங்கை ஆழ்வார் என ஏதும் ஆதாரமுள்ளதா என கேட்டால் கிடையாது என்றே பதில் வரும்.


முத்திரையர் முனையத்தரையரான திருமங்கை  மன்னரை கள்ளர் என்றும் காரள
ர் என்றும் கோரி வருகின்றனர் 


 புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களின் கல்வெட்டில் 


கல்வெட்டுகளில் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள் தங்களை கள்ள திருமங்கையாழ்வார் மந்திரியினுடைய (சோழனின் மந்திரியாகிய) வங்குஷம் என்றும், இந்திர குல வங்குஷம் என்று கூறுகின்றனர்.


சோழர் கல்வெட்டில் 

1235  ஆம் ஆண்டு திருப்பதியை அடுத்த திருச்சானூர் எனும் அலர் மேல் மங்கைபுரக் கோவில் சோழர் காலத்தில் ‘இளங்கோவில் எனப்பட்டது. அதனில் பெரிய நாட்டவர்’ கார்த்திகை மாதத்திற் கூடிக் கோவில் சம்பந்தமான காரியங்களைக் கவனித்தனர் ; காராளர் கற்பகம்’ எனப் பட்ட திருமங்கையாழ்வார்க்கு நாட்பூசை செய்ய ஏற் பாடு செய்தனர் என்று மூன்றாம் இராஜராஜ சோழன் காலத்து (19-ஆம் ஆட்சி ஆண்டு)க் கல்வெட்டுக் கூறு கிறது. இந்த பகுதியானது புதுக்கோட்டை தொண்டைமான்களின் பூர்விக பகுதியாகும்.

இதனால் காராளர் என்று வருவதால், அது வெள்ளார் சாதியை குறிக்கும் என்று கூறுகின்றனர். ஆனால் காராளர் என்பதற்கு பல விளக்கங்கள் அகராதியில் உள்ளது. தமிழ் இலக்கியங்களில் பல்வேறு பொருளில் ஆளப்பட்டுள்ளது. இதை வள்ளல் தன்மையைக் குறிக்கும் சொல்லாகவும், மழையால் பயன் விளைப்போர், முற்காலத்திருந்தஒரு முருட்டுச்சாதியாரையும், சூத்திரர் என்றும் குறிப்படப்படுகிறது. 

மிலேச்சர், காராளர், நான்காவது வருணம் என்பதற்கு பல பொருள் உள்ளன. மிலேச்சர், காராளர், நான்காவது வருணம் என்று வருவதால் இவரை வெளியில் இருந்து வந்தவர் என்றும், காராளர் என்பதால் வெள்ளாளர் என்றும் எழுதிவருகின்றனர். ஆனால் திருமங்கையாழ்வார் கள்ளர் மரபில் வந்தவர் என்று தெளிவாகவே குறிக்கப்பட்டுள்ளது.

 காராளர் கற்பகமான திருமங்கையாழ்வார்க்கு என்ற வரி உணர்த்துவது என்ன வென்றால் கற்பகம் : கற்பகம்" என்றால் கேட்பதெல்லாம் கொடுப்பது. கற்பக விநாயகர் என்றால், வேண்டியதை தரக்கூடியவர். காராளர் கற்பகமான திருமங்கையாழ்வார்க்கு, அதாவது காராளர் வேண்டியதை தரக்கூடிய திருமங்கையாழ்வார்க்கு என்பதே பொருள். இதையே கல்வெட்டில் தொல்லியல் துறையும் குறிப்பிட்டுள்ளது. இதில் காராளர் என்பவர்களின் வணங்கும் தெய்வம் திருமங்கையாழ்வார். இந்த காராளர் என்பது வெள்ளார் என்பவர்களை மட்டுமே குறிக்காது என்பதற்கு பல தரவுகள் உள்ளன. மேலும் காராளர் என்ற பட்டமுடைய கள்ளர்களும் உள்ளனர் சோழமண்டலத்தில் இன்று.



தொண்டை மண்டல கல்வெட்டுகளில் அதாவது காடவராயன்  கல்வெட்டில் ,
வெள்ளாளரில் கண்ணப்பன் முதலி

யன  என வருகிறது இதுபோல் சிறுத்தொண்ட வெள்ளாளன் என 
அதே பெரியபுராணம் கூறும் நாயன்மார் அனைவரும் வெள்ளாளர் என வருகின்றனர்.

வெள்ளாளன் கண்ணப்பன் என வந்துள்ள  கல்வெட்டை விரைவில் 
இணைக்கிறேன் .

காலஹகஸ்தி கோவில் கல்வெட்டில் :

வெள்ளாளரில்    வடுகமிராட்டி மகன் வடுகமிராட்டி...........திருவிளக்கு இடையரில்
சாணக்கோன் மகன் மழையாழ்வான்
வெள்ளாளரில் சிங்கம நாயக்கன் மகன் சூரப்ப நாயக்கன்









இப்படி மறவரை தவிர பள்ளி,மலையர்,சம்புவரையர்,வேட்டுவர்,வலையர்,நாயக்கர் என 
பலரும் தன்னை கண்ணப்பன் என சொல்லும் போது  கண்ணப்பர் மறவர் என்று கல்வெட்டு வராதபோது ஏன் மறவரை அதுவும் ஊத்துமலை ஜமீனை கூறுகின்றனர் 

இல்லை மேலே குறிப்பிட்ட பள்ளி ஜாதியை போல் அஞ்சு நாள் பள்ளி ,பண்டமுத்து  பள்ளி ,ஓலை நாகவடம்  என்ற பிரிவு மறவரில் உள்ளதா 

இல்லை வலையரை போல் முத்தரைய வலையர்,சரகு வலையர்,கண்ணனப்ப முத்தரையர் என பிரிவு உள்ளதா 

இல்லை கொங்கு வேட்டுவ வெள்ளாளரை  போல் ஆந்தை,காடை,பட்டாலி குருவி,கண்ணர் குருவி,
கரடி,வெள்ளை  என பறவை,விலங்கு கூட்ட பெயர்கள் உள்ளதா? இத்தனைக்கும் கொங்கு வேட்டுவரும் வெள்ளாளரும் வெள்ளாளர் வேட்டுவர் என கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளனர்.

இல்லை காளகஸ்தியில் மறவர் உள்ளனரா ? இதல்லெலாம் கொடுமை .

மறவர் கண்ணப்பர் வழியினர் என ஆதாரபூர்வமாக கல்வெட்டு இல்லாத போது  வெள்ளாள சாதி சேக்கிழான் எழுதியது போல் 12 ஆம் நூற்றாண்டு ஓலை  எப்படி  ஆதாரமாகும்.

ஊத்துமலை மன்னரும் மற்ற மறவரும் கல்வெட்டு  மற்றும் வம்சாவளிகளில் எந்த இடத்திலும் தன்னை கண்ணப்பன் எனவும் குகன் எனவும் சொன்னதில்லை இதெல்லாம் வெள்ளாளரின் மெக்கன்சி ஓலையால் வந்த வினை.

ஊத்துமலை மன்னர் மறவர் குல மாணிக்கமே.அவரை நான் கூட ஊத்துமலை ஒன்றை வைத்து மொத்த மற்றவரையும்  கண்ணப்பர் குலம்  என கூறவேண்டாம். என்று நானே எழுதியுள்ளேன் 
அது தவறு அதற்க்கு 

வருந்துகிறேன்

.

ஜமீண்கள்
=======
நடுவக்குறிச்சி ஜமீன் கொத்தாள தேவர்(குற்றால தேவர்) வம்சம்
முருக்க நாட்டு பாளையக்காரண் மூவரையன்
திரையன் தேவர்கள்
ஊர்க்காடு ஜமீன்
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு
தென்னாட்டு புலி சிங்கம்பட்டி ஜமீன்
ஆவுடையார்புரம் ஜமீன்தார் ஆபத்துக் காத்தார் புலித்தேவன்
குருக்கள்பட்டியின் மறைந்த ஜமீன்
சுரண்டை ஜமீன் கட்டாரி வெள்ளைதுரை
கொல்லங் கொண்டான் ஜமீன் 
ஊத்துமலை ஜமீன்
சிவகிரி ஜமீன்-மறவர்கள்
சேத்துர் ஜமீன்
கடம்பூர் ஜமீன்
மணியாச்சி ஜமீன்

நன்றி: ஊத்துமலை ஜமீன் வரலாறு 
தென் இந்திய கல்வெடுகள்
 பாளையபட்டு கைபீது