Wednesday, November 14, 2018

சாணார் அகிலதிரட்டும் தினத்தந்தி புரட்டும்


இந்த பதிவு மறவர்களை தினத்தந்தியிலும் அகிலதிரட்டு அம்மானையில்
தேவையில்லாமல் பொய்யான வதந்தி செய்தியாக போட்ட நாடார்களுக்கு ஒரு பதில் கட்டுரையாகும்.


"இவன் கோமனம் காத்துல பறக்குதுன்னு
என் கோமனத்தையும் அவுத்துவிட்றாம் பாரு"

என வேடிக்கையாக சொல்லும் வழக்கம் உண்டு.

திருவிதாங்கூரில் தீட்டு சாதியினராக தாங்கள் வாழ்க்கை நடத்தி "பார்த்தாலே தீட்டு" என  மிகவும் தீண்டாமைக்கு ஆளாக்கபட்டு முலைவரி கட்டி தமிழகத்துக்கு தப்பி வந்து கிருத்துவ மதமாற்றத்தால் இன்று பொருளாதாரத்தின் உயரத்துக்கு சென்ற இந்த யோக்கியர்கள் தாங்கள் மட்டும் முலைவரி கட்டி பாதிக்கபடவில்லை தமிழகத்து சாதியரான மறவர்களும் இருந்தனர் என்ற போலியானஆதாரமான தாங்கள் எழுதிய இடங்கை வலங்கை சுவடி, வைகுண்டர் எழுதியதாக கதைவிடும்
"அகிலதிரட்டு அம்மானை" என்னும் திருட்டு பாட்டையும் தங்கள் சாதி பத்திரிக்கையான தினத்தந்தி என்னும் பத்திரிக்கையுல் எழுதி  பள்ளர்,பறையர் போன்ற சாதியர் மூலம் பரப்பி வருகின்றனர்.

இத்தனைக்கும் சாணார் தங்களை பாண்டியர்,சேரர்,சோழர் என வலங்கை இடங்கை சுவடிமூலம் பொய் கதை எழுதி பள்ளர்,பறையரை,பள்ளி  தூண்டிவிட்டு ஒரு கதையும் நடக்கவில்லை என்று இப்போது தினத்தந்தி பத்திரிக்கையில் எழுதி வருகின்றனர்.



அகிலதிரட்டு அம்மானை யாரால் எழுதபட்டது?

அகிலதிரட்டு அம்மானை "வைகுண்ட நாடார்" என்பவரால் எழுதபட்டது என்ற அவர்கள் கருத்தை பார்ப்போம்.

இதை பற்றி அவர்களின் வரலாறு என்று,






http://ayyavinvinchai.blogspot.com/2015/09/blog-post_19.html

தென் தமிழ்நாட்டின் அன்றைய நிலை

இந்தியத் திருநாட்டிற்கு இயற்கையளித்த நற்கொடையான மேற்குத் தொடர்ச்சி மலையால் சூழப்பட்டப் பகுதிதான் இன்றைய கேரளமும், நமது தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான குமரி மாவட்டமும்.  "கடவுள்களின் நாடு" என்று அழைக்கப்படும் பரசுராமரால் தோற்றுவிக்கப் பட்ட இக்கேரளம்தான் சுவாமி விவேகானந்தரால் "பைத்தியக்காரர்களின் கூடாரம்" என்றும் அழைக்கப் பட்டது. பகுத்தறிவுப் பகலவன் என்று புகழப்படும் பெரியார் அவர்களும் இக்கேரளத்தின் வைக்கம் எனும் இடத்தில் நிகழ்த்திய கோயில் நுழைவுப் போராட்டத்தின் மூலம் வைக்கம் வீரர் என்னும் பெயரைப் பெற்றார்.
நன்செய்நாடான நம் நாஞ்சில் நாட்டிலும் கேரளத்தின் தாக்கம் இருந்தது. சூத்திரர்களுக்கும் கீழ்ப்பட்டோர் எனக்கருதப்பட்ட அவருணர்கள் சொல்லொண்ணாத் துயரத்துக்கு ஆளாகியிருந்த நேரத்தில்தான் புத்தொளி ஒன்று பிறந்து சமத்துவத்துக்கு வழிகாட்டியது. திரளான மக்கள் கிறித்தவ சமயத்துக்கு மாறுவது மட்டுமே நம்மை சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும் என்று எண்ணி கிறித்தவர்களாக மாறிக்கொண்டிருந்தனர்......................... அவர்களை சிறுமைப்படுத்தி மிகவும் கேவலமான நிலைக்கு உள்ளாக்கிக் கொண்டிருந்தனர்.


 தங்கள் இன்னல்களுக்கு ஓர் விடிவெள்ளி என்று தோன்றும் என்று அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில்தான் அய்யா வைகுண்டர் உதித்தார். தனது ஆன்மீக சமுதாய சீர்திருத்தப் போராட்டத்தால் கீழ்த்தட்டு மக்களை ஒன்றிணைத்துப் போராடினார். அவரைப் பற்றித்தான் நாம் இங்கே காணவிருக்கின்றோம். அதற்கு முன்னால் கீழ்ச்சாதியினர் அனுபவித்த இன்னல்களை சிறிது பார்த்து விடலாம்.திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாதிகள் இருந்தன. நம்பூதீரிகள்தான் சமுதாயத்தின் மிக உயர்ந்த சாதியினராகக் கருதப்பட்டனர். அவர்களுக்குத் துணையாக நாயர்களும், வேளாளர்களும் மற்ற சாதியினரும் இருந்தனர். அவர்களால் ஒடுக்கப்பட்ட சாதியினராக 18 சாதிகள் அறிவிக்கப் பட்டிருந்தன. அந்த சாதிகளை அய்யா அவர்களே தனது பாடலால் பட்டியலிடுகின்றார்.

"சாணார் இடையர் சாதி வணிகருடன்
நாணாத காவேரி நல்ல துலுக்கப்பட்டர் முதல்
சூத்திரர் பிரமார் தோல் வாணியர் பறையர்
கம்மாளர் ஈழர் கருமறவர் பரவர்
வெம்மா நசுராணி, வேகாவண்டர் இடையர்
சக்கிலியரோடு சாதி பதினெட்டும்...” 
என சொல்லுகின்றது அய்யாவின் அகிலத்திரட்டு அம்மானை.

இவர்கள் எல்லோரும் உயர்சாதியினர் வசிக்கும் பகுதிக்குச் செல்லும் போது எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று விதிமுறைகள் விதிக்கப் பட்டன. அத்தனையும் கொடூரமானவை. அவற்றுள் சில.
1. உயர் சாதியினர் வசிக்கும் தெருக்களில் இவர்கள் நடமாடக் கூடாது
2. இவர்கள் காலணி அணியக் கூடாது
3. குடை பிடித்துக் கொள்ளக் கூடாது.
4. வேட்டித் துண்டைக் கை இடுக்குகளில் வைத்துக் கொண்டுதான் நடமாட வேண்டும்.
5. உயர்சாதியினரை (சிறு குழந்தைகள் என்றாலும்) சாமி என்றோ, அய்யா என்றோதான் அழைக்க வேண்டும்.

ஆக "அகிலதிரட்டு அம்மானை" வைகுண்ட நாடார் என்பவரால் பாடப்பட்டது என கூறுகின்றனர். இது அப்பட்டமான இடைசொருகல்



இப்படி வைகுண்ட நாடார் என்பவர் திருவிதாங்கூர் சமஸ்தானமான குமரி மாவட்டத்தில் இருந்தார் என்பதற்க்கோ அல்லது அய்யாவழி மதம் என ஒரு மதம் இருந்ததற்க்கோ திருவிதாங்கூர் மானுவல் என்னும் புத்தகத்தில் இருந்ததற்க்கு எந்த ஆதாரமும் கிடையாது.








திருவிதாங்கூர் மானுவலில் "தோள்சீலை கலகம்" எனும் தலைப்பில் அதை எதிர்த்து போராடியதற்கு ஈழவர் வகுப்பு பெரியவர் நாராயணகுரு என்பதற்க்கு மட்டுமே ஆதாரம் உண்டு.

 அப்படி இருக்க இந்த வைகுண்ட நாடார் என்பவரால் பாடப்பட்டதாக அகிலதிரட்டு அம்மானை
என்னும் பாடலில் வரும்ஒடுக்கப்பட்ட சாதியினராக 18 சாதிகள் அறிவிக்கப் பட்டிருந்தன. அந்த சாதிகளை அய்யா அவர்களே தனது பாடலால் பட்டியலிடுகின்றார்.
"சாணார் இடையர் சாதி வணிகருடன்
நாணாத காவேரி நல்ல துலுக்கப்பட்டர் முதல்
சூத்திரர் பிரமார் தோல் வாணியர் பறையர்
கம்மாளர் ஈழர் கருமறவர் பரவர்
வெம்மா நசுராணி, வேகாவண்டர் இடையர்
சக்கிலியரோடு சாதி பதினெட்டும்...”
என சொல்லுகின்றது அய்யாவின் அகிலத்திரட்டு அம்மானை

இதையே ஆதாரமாக அய்யாவழி என்னும் மதம் வந்த நாடார் பத்திரிக்கையான தினத்தந்தி
ஒரு கட்டுரை இட்டு அதில் பின் வந்த 
சாதியாக சாணார்(நாடார்? மரியாதையாம்),கருமறவர்,பரவர்,இடையர்......என பட்டியலிட்ட கட்டுரை அப்பட்டமாக சாணார்களால் ஜோடிக்கபட்ட ஒன்றாகும்.


இதில் வரும் மறவர்,பரதவர்,இடையர்,நஸ்ரானி என்பவர் வருகின்றனரா திருவிதாங்கூர் மானுவல் என்ன சொல்கிறது...............

இதில் சமூக புரட்சி செய்து மறுமலர்ச்சியாலர்களாக திரு.நாராயனகுரு அவர்களை கூறுகிறது
Image result for sri narayana guru quotes

இதில் ஈழவர்(நாடார்) வகுப்பார் மேல் ஜாதியரால் ஒடுக்கப்பட்டு அவர்கள் பட்ட துயருக்கு எதிராக போராடினார் என்ற குறிப்பு வருகின்றது.தீண்டாமை, காணாமை, நடவாமை போன்ற கோட்பாடுகள் ஆழமாக பதிந்திருந்த நாடு இந்தியாவில் திருவிதாங்கூர் மட்டும் தான் என்பதை இவர்கள் உணர வேண்டும்.“நாடார் அல்லது ஈழவ இனத்தைச் சார்ந்த ஒருவன் பிராமனிடமிருந்து 36 அடி தூரத்திற்கப்பாலும், நாயரிடமிருந்து 12 அடி தூரத்திற்கப்பாலுமே நிற்க முடியும். புலையர் இனத்தைச் சார்ந்த ஒருவனுக்கும், பிராமணனுக்குமிடையில் இருக்க வேண்டிய குறைந்த அளவு தூரம் 96 அடியாகும்.  புலையன் ஒருவன் நாயர் இனத்தைச் சேர்ந்தவனிடமிருந்து 60 அடி அகன்று நிற்க வேண்டும்.  நாயடி அல்லது புலையன் ஒருவனை ஒரு பிராமணன் பார்க்க நேரிட்டால் அவன் தீட்டுப்பட்டவனாகக் கருதப்படுவான்.  இங்ஙனம் தீட்டுப்பட்டவன் ஆற்றிலோ, குளத்திலோ மூழ்கி நீராடி தன்னைச் சுத்தீகரிக்க வேண்டும்”.


இதில் 1823 ல் நாடார்கள் முலைவரி என்னும் கொடுமையான வரிக்கு எதிராக போராட்டங்க்ளில் ஈடுபட்டனர். இதில் மிஷினரிகள் பங்கு முக்கியமானவை.

இதில் புராட்டஸ்டண்ட் மிஷினரிகள் நாடார்களை வழிநடத்தினர். இதன்மூலம் நாடார்கள் திருவிதாங்கூர் ஆளுமைக்கு எதிராக போராடினார்கள்.

இதில் தாழ்த்தபட்ட வகுப்பாக கூறப்படுவது சாணார்,ஈழவர்,பறையர்,புலையர் ஆகும்.

தவிர இதில் மறவரோ அல்லது இடையரோ இருந்ததற்க்கு எந்த ஆதாரமும் கிடையாது.


இதனாலே நாடார் குலப்பெண்கள் மேல்ஜாதி சூத்திரர்களால் தாக்கபட்டனர்.

நாடார்களை திருவிதாங்கூரில் கூறும் புகழ்மொழிகள் உங்கள் பார்வைகக்கு.


. ஆதாவது கீழ் சாதி பெண்கள் மார்புக்கு மேல் அனியக்கூடாது என்று நாயர் நம்பூதிரி போன்ற மேல் சாதியால் அடக்குமுறைக்கு ஆளாக்கபட்ட சாணார்,ஈழவர் பெண்களுக்கு ஆதரவாக விக்டோரிய மிஷினரிகள் 1829ல் செயல்பட்டது காரணம் சிரிய கிருத்துவ பெண்கள் மேலாடை அனிந்து இருந்தனர். அதைப்போன்றே மதம் மாறிய சாணார்கள் மற்றும் கீழ்சாதி பெண்கள் அனிய அனுமதி கேட்டனர். இந்த கொடுமையை ஆங்கிலேய பிரபுவான சர் சார்ல்ஸ் ட்ரவ்லின் 1858ல் இந்த கொடுமையை ஒழித்து திருவிதாங்கூரிலும் அதன் மாகானத்தில் அனைவரும் அனிய சட்டம் இயற்றி சாணார்கள் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு பெற்று தந்தார்.

ஆனால் மறவர் பெண்களை பற்றி குறிப்பிடாத திருவிதாங்கூர் மானுவல் தோள் சீலை கலவரம்தினத்தந்தியும்,நாடார் புத்தகங்களுமே தவராக குறிக்கிறது.

ஆனால் உண்மையில் மறவர்  இனப்பெண்கள் 20 அடிக்குமேலே உள்ள சீலையை அனிந்திருந்தனர் என 1820 களில் எழுதிய மெக்கன்சி, மற்றும் மறவர் ஜாதி வர்ணம்போன்ற ஆங்கிலே ஏடுகள் கூற சாணாரும் இதர சாதியரும் தவராக பரப்பி வருகின்றனர்


ஆனால் உண்மையில் மறவர்  இனப்பெண்கள் 20 அடிக்குமேலே உள்ள சீலையை அனிந்திருந்தனர் என 1820 களில் எழுதிய மெக்கன்சி, மற்றும் மறவர் ஜாதி வர்ணம்போன்ற ஆங்கிலே ஏடுகள் கூற சாணாரும் இதர சாதியரும் தவராக பரப்பி வருகின்றனர்







இப்படி நாடார்கள் துன்பத்திற்கு ஆளக்கபட்ட  ஒரு  போரட்டத்தை மறவர் மற்றும் இதர சாதிகளுக்கு  சேர்த்து பட்டியலிடலாமா?

அய்யாவழி மதம்:

அகிலதிரட்டு அம்மானை என்னும் அய்யா வழி மதம் எனும்  பிரிவு திருவிதாங்கூர் தோள்சீலைபோராட்ட காலகட்டத்தில் இருந்ததா என்று பார்த்தால் அது நிச்சயம் கிடையாது.



நாடார்கள் எனும் சாணார்களை கட்டுபடுத்தும் கிருத்துவ மிஷனரிகள் அவர்களை
கிருத்துவ நாடார் என்று ஒரு பிரிவிலும் இந்து நாடார் என்னும் ஒரு  பிரிவிலும்காட்டினர். அவர்களுக்கு வியாபாரத்தை அளித்து மொத்த வணிகத்தையும் கட்டுபடுத்துவது இந்த மிஷினரிகள் தான்.

அதில் இந்த அய்யாவழி என்பது ஒரு கிருத்துவ பிரிவான (Lotus Cross) சிலுவை தாமரை என்னும் புரோட்டஸ்டாண்ட் பிரிவு கிருத்துவர்களே இந்துக்களாக காட்டபட்டனர்.

இந்த அய்யாவழி மதம் கிருத்துவமே என கிருத்துவ நாடார்களை ஒரு கட்டுரையில் குறிப்பிடுகின்றனர்.

 ST.Thomas Christian Cross or Lotus CrossImage result for st thomas cross



திருவிதாங்கூர் தோள் சீலைக் கலகம் எது உண்மை? எது பொய்?

https://marshalnesamony.wordpress.com/2012/09/06/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AF%88/?relatedposts_hit=1&relatedposts_origin=31&relatedposts_position=0

வேதத்தில் சேராதே
வேதக்காரன் மாதிரியே
நிமிர்ந்து நில்லு : சீர்திருத்த கிறிஸ்தவத்தில் சேராதே என்று பொருள்.
ஆனால் சீர்திருத்த கிறிஸ்தவன் மாதிரியே,
சவர்ணர்களால் உருவாக்கி மக்களை வருத்தி வந்த
சமுதாய சீர்கேடுகளை எதிர்க்கின்ற கிறிஸ்தவனைப்
போன்று நீயும் தைரியமாக அவர்களை எதிர்த்து நில்
என்பதாகும்.  இவர் இவ்வாறு சொல்வதற்கு முன்பே
பல்வேறு சீர்கேடுகளை கிறிஸ்தவர்கள் எதிர்த்து
களைந்து விட்டனர். அவைகளில் ஒன்றுதான்
பெண்களின் மார்பகங்களை குப்பாயத்தால் மூடி
மறைப்பது.

இந்த அறிவுரையை ஐயா 1840-க்கு முன்பே கூறியதால், கிறிஸ்தவத்தின் நற்பண்புகளுடன் அவருக்கு அபிமானம் இருந்தது என்பது வெளியாகிறது.

அய்யா முத்துக்குட்டியாரின் மதக்கோட்பாடு முற்றிலும் சீர்திருத்தக் கோட்பாடு என்று சொல்வதற்கு இல்லை என்றாலும், நிச்சயமாக அது சனாதன ஆகம கோட்பாடு முறை இல்லை என்று முடிவாகக் கூறலாம்.  அவரது பல போதனைகள் சீர்திருத்தக் கிறிஸ்தவக் கொள்கை போன்று உள்ளது.  இத்துடன் இந்து சமய நெறிமுறைகளையும் கலந்து அவரது போதனைகளை வகுத்துள்ளார் என்பது தெள்ள தெளிவு

முதல்நிலைச் சான்றாக அவர் சிலை வழிபாட்டைத் தவிர்த்ததிலிருந்து சீர்திருத்த கிறிஸ்தவத்தை அவர் முன் மாதிரியாக எடுத்துள்ளார் என்று காணலாம். அடுத்தது பூசை முறைகளில் அவர் செய்த இந்து முறைத் தவிர்ப்பு.  சிகப்புப் பூக்கள், சிகப்பு ஆடைகள் தவிர்ப்பு, திருநீற்றால் சைவக் குறியிடுதல், சாமி வலம் போன்றவைகளைத் தவிர்த்ததும், கிறிஸ்தவ முறைதான்,

“பொன்னுமக்கா எத்தனை தடவை சொல்லியிருக்கேன்.  தாலி அறுக்காதே, கோலம் குலைக்காதே எண்ணு.  அவன் செத்ததுக்கு நீயா பொறுப்பு… எல்லோரும் கேட்டுக்கிடுங்க. புருஷனைப் பறிகொடுத்தது சங்கடம்தான். அதுக்காக பொம்பளையள அலங்கோலப்படுத்தியது கடவுளுக்கு ஏற்காத கொடுமை.  பூட்டிய தாலியை நீக்கக்கூடாது.  கேக்குவு.
(பொன்னீலன் – மறுபக்கம் – இரண்டாம் பதிப்பு – 2010 – பக்கம் – 233).

இதுவும் கிறிஸ்தவர்களின் கோட்பாடு அல்லாமல் சனாதன கோட்பாடா?

அய்யாவழித் திருமணத்தில் கூட ஆகம முறைகளை களைந்துவிட்டு சீர்திருத்த முறைகளை புகுத்தியுள்ளார் அய்யா.  மாப்பிளையும் பொண்ணும் கீழ்திசை நோக்கி உட்காருவதை தவிர்த்துவிட்டு தென்திசை நோக்கி உட்காருவது சீர்திருத்த முறைதானே?  மணமேடையில் மந்திரம் ஓதுவதற்குப் பதிலாக :

“விவிலியம் நூலை வைத்து வழிபடும் முறையைப் பின்பற்றி, அய்யா வழியினர் ‘அகிலத்திரட்டினை’ வைத்து வழிபடத் துவங்கினர் என்றே எனக்குத் தோன்றுகிறது.  அய்யாவழித் திருமண முறையில் பாடப்படும் பாடல்முறைகள் எல்லாமே கிறிஸ்தவ முறையின் தாக்கம் என்றே கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை”.
(தமிழ்த்துறைப் பேராசிரியர் இரா. ஆண்டி – என் அனுபவங்கள் – 2002, பக்கம் – 50)

இதற்கு மேலும் சான்று தேவையா ஐயர் அவர்களே*  மேலும் கேளும்,

“என்னை யீடேற்றி இரட்சிக்கும் பெம்மானே
மன்னே பிதாவே மாதாவே யென்தாயே”       (அகிலம் 10 – 409 – 410)

“இன்றுமுதலெ ல்லோரும் இகபரா தஞ்சமென்று
ஒன்று போ  லெல்லோரும் ஒரு புத்தியாயிருங்கோ
காணிக்கையிடாதுங்கோ காவடி தூக்காதுங்கோ…”
(அகிலம் 12,519, 521)

தவிரவும் பிராமண சமயத்தில் காணப்படுகின்ற திருநீறு பூசுதல், குங்குமப் பொட்டு வைத்தல் போன்ற சம்பிரதாயங்களையும் இவர் களைந்தார்.  இவைகள் அனைத்தும் சீர்திருத்த கிறிஸ்தவத்தின் எச்சங்கள்தனே? ஆகையால் அய்யாவழியை சீர்திருத்த இந்து சமயம் என்று கருதுவதிலும் தவறில்லை.

அது போன்ற காயாமொழி நாடார்களுக்கு கிறிஸ்தவம்பால் ஈர்ப்பு இருந்தமையால்தான் மேற்கத்திய உடையான ‘கோட்டை’ திரு. ஆதித்திய நாடான் அணிவதற்கு முதற்காரணம்.  அதை நிச்சியமாக கிறிஸ்தவ மினறிமார்கள்தான் இவருக்கு அளித்திருப்பர்.  ஒருவேளை அன்பளிக்காக.

மேற்பட்ட ஒன்று நாடார்களே அய்யாவழி மதம் கிருத்துவ மதமே என்பதற்கு ஒப்பாகும்..


அய்யாவழி மதம் சின்னம்? தாமரை ஜோதி(சிலுவை தாமரை)
 (Lotus Cross)-A branch of christianity



மேலும் அய்யாவழி மதத்தின் சின்னமானது தாமரையில் ஒரு ஜோதி தோன்றுவதாக கூறப்படுவது ஒரு  அப்பட்டமான கிருத்துவ குறியீடே.

எகிப்தியத்தில் தோன்றிய கிருத்துவத்தில் தாமரை என்பது பென்னின் யோனியையும், ஜோதி என்பது பெண்ணுக்கு வரும் பூப்பு இரத்தத்தையும் குறிக்கும். இதையேகன்னி மேரி மற்றும் அவளுக்கு பிறந்த இயேசு கிருஸ்து வை குறிக்கும்.கன்னி  பெண்ணால் பிரசவிப்பது குழந்தை அல்ல மாதவிடாய் பூப்புரத்தம். இதை தான் புனித தீ என்றும் சூரியன் என்றும் எகிப்தில் கூறுவர். இது தான்பின்பு கிருத்துவமாக பரினமித்தது.

அக்னி குலம் என சிலர் கூறுவர் அது இந்த தாமரையில் தோன்றிய நெருப்பை தான்குறிக்கும் அப்படிப்பட்ட தீ உன்மையில் பெண்களுக்கு வரும் பூப்புரத்தமே. இதை தான் பிராமணர்களும் மேலும் சிலரும் அக்னி குலம் என கூறிக்கொள்கின்றனர்.

இதைப்போல் சிலர் யாகத்தில் தோன்றிய அக்னி குலம் என கூறுவர்கள். ஆதாவது
மகரிஷிகள் யாகத்தில் தோற்றுவித்ததாக கதை கூறுவதும் பொய் அல்ல அதுவும் உண்மையானது ஆனால் அது பெருமைக்குறியதா? என்பதே கேள்வி?

யாக குண்டம் என்பது ஒரு பெண். அதில் என்னையை ஊற்றுவது மகரிஷிகள். இதில் நெருப்பாய் வளர்வது  காமம். இதில் பிறப்பது ஒரு குழந்தை. யாக குண்ட்த்தில் பத்துக்கும்
மேற்பட்ட ரிஷிகள் என்னைய ஊற்ற அந்த யாக பெண்னில் பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் என நீங்களாக யோசித்து பாருங்கள்.
யாககுண்டம், ..........எண்ணை.................நெருப்பு............   அது கலவிதான் பின் என்ன?

நெருப்புடா! செத்தாலும் ஷெத்திரியன் ஷெத்திர்யண்டா என சொல்லிவிட்டு நகள்வோம்..........

இது மாதிரி ஒரு புரோட்டஸ்டண்ட் கிருத்துவ தாமரைசிலுவை(Lotus Cross)-A branch of christianity
பிரிவுதான் அய்யாவழி மதம் எனவே இது புது கோட்பாடுதான்.

இவர்கள் திருநீறை நாமமாக
பூசுவது புதிய பழக்கவழக்கம்தான். இது பல வேறு ஜாதிக்காரர்களால்  திருநெல்வேலியில்
பின்பற்றப்படுகின்றது. இவர்கள் ஸ்ரீ நாராயனகுரு காலத்தில் இருந்ததற்க்கு எந்த ஆதாரமும்
கிடையாது.

 இதில் கிளம்பிய பலர் தான் சென்னை வணிகம் மற்றும் தமிழக வணிக வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கின்றர். இவர்கள் வணிகம்,கல்வி,பத்திரிக்கை என்ற சகலதுறையிலும்சிறந்து விளங்க காரணம் காமராஜ நாடார் என கூறுவர் அது அப்பட்டமான தவறு.அவருக்கு முன்னே தமிழகத்தில் காலுன்றிய கிருத்துவ மிஷினரிகளாகும். இவர்களேஇன்றை உணவு,கல்வி இன்னும் பல துறையில் இவர்கள் ரகசியமாக முன்னேற முக்கிய காரணமாகும்.







இப்படி அய்யாவழி எனும் புது மதத்தால் உயர்ந்த நாடார்கள் தாங்கள் ஒடுக்கபட்டவரலாறை மறைக்க ஷத்திரியர் என கூறிக்கொள்கின்றனர்.
தன்னை விட மரியாதையில் உயர்ந்த சாதியினரை இப்படி பத்திரிக்கையிலும் நிறைய புத்தகங்களை எழுதியும் தாழ்ந்த சாதியரான பள்ளர் பறையரை தூண்டிவிட்டும்திரை மறைவில் கைங்கரியம் சாதிக்கின்றனர்.


இப்படி வைகுண்ட நாடார் என வரலாற்றில் இல்லாத ஒரு மறுமலர்ச்சியாளரை உருவாக்கி
அவர் பாடியதாக கூறும் பாடல் மிகப்பெரிய பித்தலாட்டமாகும்.




"சாணார் இடையர் சாதி வணிகருடன்
நாணாத காவேரி நல்ல துலுக்கப்பட்டர் முதல்
சூத்திரர் பிரமார் தோல் வாணியர் பறையர்
கம்மாளர் ஈழர் கருமறவர் பரவர்
வெம்மா நசுராணி, வேகாவண்டர் இடையர்
சக்கிலியரோடு சாதி பதினெட்டும்...”
என சொல்லுகின்றது அய்யாவின் அகிலத்திரட்டு அம்மானை

கருமறவர் என்னும் ஜாதி செங்கோட்டையில் கிடையாது. 

அப்படியிருக்க கருமறவர்செங்கோட்டை வட்டம் என்பது அப்பட்டமான பொய்

திருவிதாங்கூரில் மறவரின் நிலை என்ன?

திருவிதாங்கூரில் மார்த்தாண்ட வர்மரின் குடும்பம் அவருக்கு தளபதியாக இருந்த
பொன் பாண்டிய தேவர் என்னும் திருநெல்வேலி மறவர் தலைவருக்கு "அயினூட்டு
தம்புரான்" என்று கோவில் கட்டி வழிபடுகின்றனர்.







(பொன் பாண்டி தேவர் இன்றும் மக்களால் வழிபடப்பட்டு வருகிறார்கடுக்கரை என்னும் ஊரில்அவருக்கு கோவில் உள்ளது. அயினூட்டு தம்புரான் சுவாமியாக காட்சியளிக்கிறார்? ( இது குறித்தகூடுதல் விவரம் தேடப்பட்டு வருகிறது)


திருவிதாங்கூர் மறவர் படை


https://thevar-mukkulator.blogspot.com/2018/06/blog-post.html


இதையே தினத்தந்தி பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. தான்  கேவலப்பட்டதை மறைக்க நாடார்கள் இப்படி மறவரை நகையாட பத்திரிக்கையில் வெளியிட்டு அதை தன் சகாக்கலானமற்ற சாதிகளான பள்ளர்,பறையர்,வன்னியர் போன்றோரை பயன்படுத்துகின்றனர்.

இதில் அகில திரட்டு அம்மானை எனும் நாடார் பாடலில் மட்டும் தான் கருமறவர் என்ற ஜாதி வருகிறதே ஒழிய திருவிதாங்கூர் மானுவலிலோ இல்லை வேறு எந்த குறிப்பிலோ இடம் பெறவில்லை.

இன்று முக்குலத்தோர் மட்டுமல்ல நாடார்,பள்ளர்,பறையர்,பள்ளி,சக்கிலியர்,வன்னார்,அம்பட்டர்
என்னும் அனைத்து சாதியினரும் இராஜ இராஜ சோழனை கோறுகின்றனர்.
அதனால் முக்குலத்தோருக்கும் மட்டும் தான் இந்த ஆதிக்க சாதி ஆண்ட வெறி என இல்லைஇராஜ இராஜ சோழ பறையர்,இராஜ இராஜ சோழ மள்ளர்,இராஜ இராஜ சோழ அருந்ததியர்,இராஜ இராஜ சோழ அம்பட்டர்,இராஜ இராஜ சோழ பள்ளி, இராஜ இராஜ சோழ வண்ணார்
.........என அனைத்து சாதியினர் அர்சகர் ஆகும் தகுதி இருப்பது போல்
இந்த பேணர்களையும் வைக்கின்றனர். ஆக இதில் சாதி வெறி என தேவர் சாதியை
மட்டும் கூற முடியாது.

எந்த ஜாதியினரும் எந்த மன்னரையும் எந்த வரலாறையும் கோரலாம். ஆனால் ஜாதியை தவராக சித்தரிக்க பத்திரிக்கைகளை,புத்தகங்களை பயன்படுத்துவது கண்டிக்கதக்கதாகும்

நன்றி:
திருவிதாங்கூர் மேனுவல்

Monday, October 15, 2018

திருமலை நாயக்கருகும் சடையக்க சேதுபதிக்கும் நடந்த மறவர் நாட்டு யுத்தம்(பகுதி -3)


முதல் பகுதி:



http://thevar-mukkulator.blogspot.com/2018/08/1.html )

இரண்டாம்  பகுதி: 2

https://thevar-mukkulator.blogspot.com/2018/09/2.html


"மற்றொரு நாள் தானும் மன்னன் புலிராமன்
அரியாண்டிபுரக்கோட்டை அடுத்து வளைத்து கொண்டான்
கோட்டைக்குள்ளிருந்து குறும்படித்த மறவனுந்தான்
இனியிருந்தால் மோசமென்று யெல்லோரும் கிலேசமுற்று
போராது புகுந்தாற்போல் போகவென்று தான் துணிந்து
கச்சை கட்டி யெல்லோரும் கனத்தவெடி தானெடுத்து
காடந்தக் குடியிடையே கடுகியே ஓடிவந்தான்" -ரா.அ

இராமபய்யன் படையினர் மறுநாள் அரியாண்டிபுரம் கோட்டையை வளைத்து கொண்டனர்.கோட்டையில் இருந்த மறவர்
நிலைமை மோசமானதை உணர்ந்து அங்கிருந்து பொழுது சாயும் போது காரடர்ந்தகுடிக்கு சென்று விட்டனர்.

"வண்ட மறக்கொடுக்கை வளைத்து பிடிக்க வென்று
தொடர்ந்து பிடிக்க வென்று சொல்லிரிய மன்னரெல்லாம்
கூடாரத் தானெடுத்து கொலுவிட்டுத் தானடந்தான்"
" வாழை படர்ந்திருக்கும் வைகை நதிகடந்து
ஆற்றங்கரை தனிலே அடித்தானே கூடாரம்" -ரா.அ

தொடர்ந்து பிடிக்க இராமப்பய்யன் படையினர் காரடர்ந்தாகுடிதை கடந்து வைகை நதிக்கரையில் கூடாரம் அடித்தனர்.

அந்தியுத்தி கோட்டை போர்

"மற்றநாள் சென்று மன்னன் புலிராமன் மடைபடை
அந்தியுத்தி கோட்டையிலே அவனிருப்ப தறியாமல்
பாம்பாற்றங் கரைதனிலே பாங்காய்ப் போயிறங்கி
கூடாரந்தாண்டிதான் கோலாகல ராமன்படை
அந்த விசயம் அறிந்த சடையக்கனுந்தான்
கடவை மறித்து கலந்து போர்செய்தான்காண்
பாதை மறித்து பாங்காகக் கொள்ளையிட்டான்
இருவர் படை மூண்டு எரித்துப் புடைத்தார்கள்
அப்போது சடையக்கன் ஆர்பரித்து கொக்கரித்து
நாடுகலக்கியெனும் நல்லதொரு வான் பரிமேல்
ஏறிச் சடையக்கன் எல்லையற்ற சேனை முன்னே
ஊடுருவிச்சென்றான் உலகங்கிடுகிடென" -ரா.அ







அடுத்த நாள் அந்தியுத்தி கோட்டையில் சேதுபதி சடையக்க தேவர் இருப்பதை அறியாமல் இராமபய்யர் படையினர் பாம்பாற்றங்கரையிலே இறங்கினர். செய்தி அறிந்த சேதுபதி சடையக்க தேவர் நாடுகலக்கி என்னும் குதிரை மேல் ஏறி அவர்கள் பாதையை மறித்து ராமபய்யர் படை மேலே ஊடுருவித்தாக்கினார்.

"மன்னன் புலிராமன் மட்டில்லாச்சேனையின்மேல்
கோலாக்கொண்டையன் கூட்டப்புரவிகளும்
ஆயிரம் புரவி ஆர்பரித்து தான் பெருத்தனர்"-ரா.அ

"பட்டாணி வாளெடுத்து பருந்து போல பறந்து
ஊடுழக்க வெட்டினான் உலகங்கிடுகிடென
தீரன் சடையக்கனையும் திரமாக வெட்டலுற்றார்"-ரா.அ





இருவர் படைகளும் பலமாக மோதினர். இராமப்பய்யர் வீரர்கள் சடையக்கதேவனை குறிவைத்து சூழ்ந்து கொண்டனர். பட்டாண் (இசுலாமியன்) ஒருவன் வாளோடு சடையக்கனை வெட்டினான்.

" காயமது பட்டுக் கலங்கியே சடையக்கனுந்தான்
என்மருகா வன்னி யினிவந்து கூடுமென்றன்"
"அப்போது வன்னி அவ்வசனந் தான் கேட்டு"
"வெட்டின பட்டாணியை விருதுசொல்லி தான் பிளந்தான்
பெட்டியுமூடியுமாய் பிளந்தெடுத்தான் வன்னியுந்தான்
இடதுசாரி வலதுசாரி எதிர்த்து பொருதலுற்றர்
முன்னூறு பட்டாணி முழுதுமங்கே தான்மடிந்தார்
ஐயாயிரம் பேர் அக்களத்தில் தான்மடிந்தார்" -ரா.அ
"மன்னன் புலிராமன் மட்டில்லாச்சேனை வெள்ளம்
தட்டழிந்து கெட்டுத் தறுகாமல் ஓடிவிட்டனர்"- ரா.அ

காயமடைந்த சடையக்கன் வன்னியரை உதவிக்கு அழைக்க விரைந்து வந்த வன்னியதேவர் வெட்டிய பட்டாணை இரண்டாக பிளந்தார். இடது பக்கம் வலது பக்கம் என தாக்கினார். முன்னூறு பட்டாண்கள் மடிந்தனர். அத்தோடு நாயக்கர் படையில் ஐயாயிரம் பேர் மடிந்தனர். மற்றும் ஒரு பெருந்தோல்வியுடன் திரும்பினர் ராமபய்யர் படையினர்.

" மற்றநாள் தானும் மதச்சடையக்கன் வன்னியுந்தான்
அம்மான் முகம்பார்த்து அழுதமுகமும் கலங்கி
காயமது கட்டிகலங்கி முகம்பார்த்து"
"புலம்பி வன்னி எழுந்திருந்து போகலுற்றர்
மற்றநாள் தானும் மதச்சடையக்கன் வன்னியுந்தான்
இராமநாத சுவாமி நல்லதுணை யென்றுசொல்லி
அம்மானே நீருப்போது ஆனைபரி யேறுமென்றர்
அத்திக்கோட்டைவிட்டு ஆன பெருந்தளந்தான்"
"படைத்தலைவரெல்லோரும் படகிலே ஏறுமென்றர்
தண்டிகை பல்லாக்கு சகலமும் ஏற்றலுற்றர்
ஆனை குதிரை அடங்கலும் ஏத்துமென்றர்
எல்லோரையுமனுப்பி எதிரில்லா வன்னியுந்தான்
பொண்டுனச்சியெனும் பெரியதொரு வான்பரியும்
நாடு கலக்கியெனும் நல்லதொரு வான்பரியும்"
"கப்பலிலே தானேறி கார்த்தச் சடைக்கனுந்தான்
இராமநாத சுவாமி நல்லதுணை என்று சொல்லி
உன்பாதம் நம்பிவந்தேன் உலகளந்த மாயவனே
மன்னன் புலுவன்னி மாதுக்கப்பட்டு நின்று
என்னசெய்யவோ மென்று வன்னி இருந்து கிலேசமுடன்"-ரா.அ








மறுநாள் வன்னியத்தேவன் காயம் பட்ட சடையக்கன் முகம் பார்த்து புலம்பினான். அடுத்த நாள் ராமநாத சுவாமி நல்ல துணை என்று சொல்லி சேதுபதியை ஆனைமேல் ஏற்றி அந்தியுந்தி கோட்டையிலிருந்து ஆனை, குதிரை , மறவர் படையுடன் , படைத்தலைவர்களுடன், பொக்கிஷங்களுடன் ராமேஸ்வரம் தீவுக்கு பின் வாங்னினார் வன்னியதேவர். பொண்டு நாச்சி, நாடு கலக்கி என்னும் குதிரைகளை கப்பலில் ஏற்ற முடியாமல் போக ஒரு படைத்தலைவர் சொன்னபடி
கண்கள் கட்டப்பட்டு கப்பலில் ஏற்றப்பட்டன.சேனைகள் ராமேஸ்வரம் தீவில் வந்து இறங்கினர். வன்னியத்தேவர் மிகவும் கவலையுற்றார்.

"போனான் மறவனென்று பொருமி மிகச்சினந்து
எங்கேதான் போனலும் இனிவிடப்போறோமோ
கடலேறி போனேமென்று கனவிருது கூறினன்"
"அந்திபுத்திக் கோட்டை அவனிருந்த போனதல்லோ
பள்ளியறை மாளிகையும் மொத்த உண்டாம்
படைத்தலைவர் திறத்திருக்கும் பண்ணக சாலையுண்டாம்
என்று படைத்தலைவர் எல்லோரும் தாமுறைத்தார்"
"இருந்தானே ராமய்யனும் இருபதுநாள ரமனையில்
கோலாகல ராமன் கொலுவி லிருக்கையிலே
மதுரைதனிலிருந்து வந்தானே ஒட்டனுந்தான்" -ரா.அ

மறவர்கள் ராமேஸ்வரம் சென்று விட்டதை அறிந்து பொருமி இனி கடல் தாண்டி போனாலும் விடப்போவதில்லை என சினந்து கூறினார் ராமபய்யர். அங்கிருந்த படைத்தலைவர் அந்தியுத்தி கோட்டையில் தங்கி ஓய்வு எடுக்கும் படி கூறினர். இருபது நாள் கோட்டையில் உள்ள அரண்மனையில் தங்கினார் ராமப்பய்யர். இருபதாம் நாள் திருமலை நாயக்கரிடம் இருந்து ஓலையுடன் ஒற்றன் ஒருவன் வருகிறான்.

"இராயரிட காயிதமும் நலமுடனே தானெழுதி
முகிலருடன் பாட்சா முப்பதின யிரங்குதிரை
கனவாயை வந்து கட்டிக் கொண்டா ரென்றுசொல்லி
கோலக்கொண்டா யாம்குதிரை கூட்டப்பெருதளமும்
இராயரிட சீமையெல்லாம் நாலுதிகுங்க் கொள்ளையிட்டு
விசையபுரமும் வேலூருங் கொள்ளையிட்டு
கணவாய்க் கோட்டையெல்லாம் கட்டிக்கொண்டானென்று
இங்குவர பயணமாயிருக்கிற பெற்றுசொல்லி
மன்னன் புலிராமனையும் வரவழைக்க வேன்றுமென்று
கர்த்தனிட காயிதமும் கடுகியே தான் கொடுத்து"-ரா.அ

மதுரையில் இருந்த வந்த ஒற்றன் திருமலை நாயக்கரின் ஓலையை கொடுத்தான். முகிலர்களுடைய பாச்சா (இசுலாமியர்) முப்பதாயிரம் குதிரை வீரர்கள் உடன் வந்து ராயருடைய சீமையையான கோல்கொண்டா, வேலூர், விஜயபுரம் ஆகிய இடங்களை கொள்ளையிட்டு உள்ளனர். அடுத்து மதுரைவர ஆயத்தமாக உள்ளனர் அதனால் உடனே மதுரைக்கு வருமாறு ஓலையில் எழுதப்பட்டு இருந்தாது.
(பீஜப்பூர் சுல்தான் 1639 ஆண்டு விஜய நகர அரசர் பெட வெங்கட ராயர் காலத்தில் ஒரு பெரும் படை எடுப்பு நடத்தினார். நாயக்க மன்னர் துணை கொண்டு விஜயநகர ராயர் அதை தடுத்தார் என்ற விஜயநகர அரசின் ஆவணம் ஒன்று அதை உறுதி செய்கிறது)

"எல்லோரையும் தானழைத்து இதமாய் புத்திசொல்லி
இன்று முதலோடே யிங்கே வருவானென்று
ஆற்றங்கரையும் ஆன துறைமுகமும்
புகழ் பெரிய போகலூர் கோட்டையும் பதமென்று"
"திருபுவணங் கடந்து மதுரை தெரு வீதியிலே வந்தார்கள் ராமய்யனும்"
"மற்றநாள் தானும் மன்னன் புலிராமய்யனும்
மன்னன் திருமலேந்திரனை வந்து கண்டு சந்தித்து
ஆண்டவனே யிப்போது அழைந்து பணிவிடை யென" -ரா.அ

திருமலை நாயக்கரின் ஓலையை படித்த ராமபய்யர் தன்னுடைய படைத்தலைவர் அனைவரையும் அழைத்து ஆற்றங்கரையையும்,துறைமுகத்தையும், புகழ் வாய்ந்த போகலூர் கோட்டையையும் பத்திரமாக பார்த்து கொள்ளும் படி அறிவுரை சொல்லிவிட்டு. திருப்புவனம் தாண்டி மதுரையை அடைகிறார். அடுத்த நாள் திருமலை நாயக்கரை சந்திக்கிறார்.
"என் வார்த்தைதனை யினிகேளும் ராமாநீ
கோலக் கொண்டையனும் குதிரை பெருந்தளமும்
கணவாயின் கோட்டையெலாம் கட்டிகொண்டாரென்று"
"விசயபுரமும் வேலுருங் கொள்ளையிட்டு
யிங்குவரப்பயனமாயிருக்கிற னென்றுசொல்லி
இயாதாத்து நமக்கொழுதி வந்துதுகாண்
அது கண்டு நாமள் படித்தோம் ராமய்யனே"
"வெட்டி துரத்தி வேலுரைக் கைப்பிடித்து
ஆயிரம் குதிரை அன்பாகத் தான் சேர்த்து
வாரேனைய்யா யென்றுசொல்லுனன் மன்னன் புலிராமய்யனும்" - ரா.அ

மன்னர் திருமலை நாயக்கரிடன் விடை பெற்ற ராமப்பய்யர் எதிரிகளை வெட்டி துரத்தி வேலூரை மீட்டு வருவேன் ஆயிரம் குதிரைகள் உடம் விஜய நகர ராயரை காண செல்கிறார்.

"வடமதுரை தன்னில் வளமுடன் சென்றிறங்கி
திண்டுக்கல் கடந்து தேக்கமலை தன்னில்வந்து"
"மணப்பாறை தன்னில் மன்னவனும் சென்றிறங்கி"
"திருச்சிராப்பள்ளி கடந்து சீரங்கம் தன்னில் வந்து"
"சமயபுரம் கண்ணனூர் தன்னிலே வந்திரங்கி"
"ஊட்டத்தூர் தன்னிலொரு நொடியில் போயிறங்கி"
"வலிகண்டபுரத்தில் வந்திருந்த ரெல்லோரும்"
"ஆயினையான் வீரதிவக்கும் ஆரணியுந்தான் கடங்கி"
"வெங்களூர் தன்னில் விரையவே சென்றிறங்கி"
"இராயனுட சமூகந்தனை நன்றாக வந்து கண்டு
ஆண்டவனே யிப்போ அழைத்த பணிவிடை" -ரா.அ

திருமலை நாயக்கரிடம் விடைபெற்ற ராமப்பய்யர் வடமதுரை,திண்டுக்கல், மணப்பாறை, திருச்சிராப்பள்ளி,ஸ்ரீரங்கம்,சமையபுரம்,கண்ணனூர்,ஊட்டதூர், வாலிகண்டபுரம், ஆரணி, வேலூர் ஆகிய ஊர்களை கடந்து வெங்களூரில் ராயரை காண்கிறார்.




"குதிரை தளத்தை வென்று குஞ்சரமும் கொள்ளைகொண்டு
வெட்டி விரட்டி விருதுகளும் தான் பறித்து
வெற்றி கொண்டு வாரேனென்று வண்ணபஞ்சொல்லலுற்றான்
அடைகாயும் வெற்றிலையும் அன்பாகத் தான் கொடுத்து
வெற்றிகொண்டு வாவென்று விருதுகள் கொடுத்து
போய்வாருமென்று பொருத்தி மனமகிழ்ந்தார்" -ரா.அ

போர் நிலையை அறிந்த ராமபய்யர் துலுக்கர் படையை வெட்டி சூரையிட்டு வருவதாக உறுதிபட செல்கிறார்.ராயர் அடைக்காயும் வெற்றிலையும் கொடுத்து வழியனுப்பி வைக்கிறார்.



"இக்கரை வெங்கடகிருஷ்னனுக்கு எழுதினர் ஓலைதன்னை
ஓலைதனை வாங்கி ஓடினான் ஒட்டனுந்தான்"
"வாசித்து பார்த்து மனமகிழ்ந்து கொண்டாட"
"துலுக்கர் பெரும்படையும் தோறத வான்படையும்
கணவாயை வந்து கட்டிகொண்டா ரென்றுசொல்லி
இராயரதற்க்கு நமக்கோலை வர விடுத்தார்
துலுக்கர் பெரும்படையை தூளிபடவே துரத்தி
ஆறு கடக்க ஆலைகுலையத் தான் துரத்தி
யிக்கரை வெங்கடகிருஷ்ணய்யா எழுந்திரு வென்று சொல்லி
யெல்லோரும் போய் எதிர்த்து போர் செய்தார்கள்
இக்கரை வெங்கடகிருஷ்ணய்யன் எதிர்த்து துரத்திவிட்டான்"
"துலுக்கர் பெரும்படையைச் சூறையிட்டுத்தான்விரட்டி
ஆறு கடக்க அலைகுலைய தான் துறத்தி
வெட்டி விருதறுத்தான் வேந்தன் புலிராமய்யனும்
வெற்றிகொண்டு ராமய்யனு வீரியங்கள் பேசிவந்தான்
ஆயிரம் குதிரை அன்பாகத்தான் மடிந்து
அறுறு குஞ்சரமும் ஐம்பது ஒட்டகமும்
ஆயிரங்குதிரையும் அன்பாகத்தான் சேர்த்து
பிடித்து அனுபினர் போர் வீரன் ராமய்யனும்" - ரா.அ

ராமபய்யர் பின் வெங்கட கிருஷ்ணய்யர் உதவி நாடி ஓலை எழுதினார். அவரிடம் இருந்து உதவி வரவே இருவர் படையும் சேர்ந்து துலுக்கர் படையை வெட்டி சூறையிட்டனர். அறுகடந்து ஓடும்படி ஆலையத் துரத்தி வெற்றி பெற்றன. அயிரம் குதிரைகள் போரில் மறைந்தன. ஐம்பது ஒட்டகமும் , ஆயிரம் குதிரைகளும், அறுபது யானையும் எதிரியிடம் கைப்பற்றப்பட்டன.

"இராயரிட சமூகத்தின் நன்மையுடன் வந்து கண்டான்
வந்துகண்ட ராமய்யனை மார்போடு தானணைத்து"
"என்னருகே ராமய்யனே யிரு மென்று தானுரைத்தார்"
"கச்சித்திருமலௌ யேந்திரனை காணாமல் நானிருந்தால்
கண்கள் புகையகுமைய்யா கர்த்தனே யென்றுரைத்தான்"
"எங்கே யிருந்தாலும் எப்போதும் நான் வருவேன்"
"நின்றனுப்பிக்கொண்டு நீதியுடன் கையெழுத்து
நடந்தான் புலிராமன் நல்லபெருஞ்சேனையுடன்"-ரா.அ

வெற்றியுடன் திரும்பிய ராமபய்யனை ராயர் மார்போடனைத்து. இங்கேயே இருக்குமடி சொல்ல.தான் திருமலை நாயக்கருக்கு கட்டுபட்டவர் என சொல்லி எங்கே இருந்தாலும் கட்டளையிட்டால் உடனே வருவதாக சொல்லி எங்கிருந்து விடை பெற்றார் ராமப்பய்யர். தெற்கு நோக்கி மீண்டும் பயணப்பட்டார். வழியில் ஸ்ரீரங்கனாதருக்கு சிறப்பு செய்தார். திருச்சிராப்பள்ளி, மணப்பாறை, சோழவந்தான், துவரிமான் ஆகிய ஊர்களை கடந்து பிள்ளையார் பாளையம் வந்து சேர்ந்தார்.

" அந்நேரத்தில் அதி வீரமாய் நடந்து
வந்து கண்டு இராமய்யனை வாகாய் மிகத்தழுவி
கர்த்தனென்று மிராசன் கச்சித் திருமாலேந்திரன்
கனகந்தான் சொரியக் கடுக அழைக்கச்சென்றனர்
சொன்ன உடனே தோற்றமுள்ள ராமய்யனும்
என்ன வெற்றிகண்டேன் எனக்கு கனகஞ்சொரிய
சேதுமறவனைத்தான் சென்று பிடித்து வந்தால்
கனகமுடனே அப்போது கருதலாம் தானமெலாம்" - ரா.அ

வெற்றியோடு திரும்பிய ராமப்பயனுக்கு திருமலை நாய்க்கர் கனகபிஷேகம் செய்ய விரும்புவதாக தெரிவிக்கவே. சேது மறவனை பிடித்த பின்
தான் கனகபிஷேகத்துக்கு தகுதியானவன் என சொல்லி மறுக்கிறார் ராமப்பய்யர்.திருபுவனம் தாண்டி போகலூர் வந்தடைகிறார்.
"இத்தனை நாளிக்கோட்டை வாங்காதிருப்லதேனே
நாளை பகல் நாலு நாழிகைக்குள்ளாக
கோட்டைதனை வாங்காவிட்டால் கொன்றிடுவே னுங்களையும்
வைகைக்கரைதீரம் வாகாய் கழுவில் வைப்பேன்
என்று சொல்லி ஓலையெழுதிட்டார் ராணுவத்திற்கு
வாசித்து பார்த்து வயிறேரிந்த மன்னவர்கள்
அங்கேபொய் சாதிறது எங்கே மடிவோமென்று
நாலுதிக்கும் ஏணிவைத்து ராணுவத்தா ரெல்லோரும்
கோட்டையுன் கொத்தளமும் கோம்பையும் மிடித்தார்கள்" - ரா.அ

போகாலூர் கோட்டை அன்று வரை மறவர் கைவிட்டு போகவில்லை என்பதை உணர்ந்து. நாளை பகல் நான்கு நாழிகைக்குள் கோட்டையை பிடிக்காவிட்டால் வைகைக்கரையில் அத்தனை நபரையும் கழுவில் ஏற்றிவிடுவேன் என்று தன் ராணுவத்திற்கு ஓலை அனுப்புகிறார் ராமபய்யர். பாளையக்காரர் அனைவரும் ராமபய்யர் கையால் சாவதைவிட போரிலே சாகலம் என வீரியத்துடன் கோட்டையை தாக்கினர்.

"குஞ்சரத்தை விட்டு கோட்டையை தகர்த்திட்டு
கோட்டைதனைப் பிடித்தார் கொடுங்கோபங்கொண்டு டெழுந்து
கோட்டைக்குள்ளிருந்து குறும்படித்த மறவனுந்தான்
வெட்டி விரட்டி வென்று வீரியங்கள் தான் பேசி
குமார னழகனும் கூட்டப்பெரும் படையும்
குத்தி விரட்டி கொல்லையிட்டு உள்ளியத்தார்"
"குமாரனழகனையும் கூட்டப்படை யத்தனையும்
கைப்பிடியாய்த் தான்பிடித்துகட்டி இறுக்கலுற்றர்"
"மதியானழகனையுன் மன்னன் குமாரனையும்
கொண்டுவந்து விட்டார்கள் கோலாகல ராமன் முன்னே
பெண்ணை சிறை பிடித்து ஆணை அறிந்துவெட்டி
ஐந்நூறு பெண்சிறையும் ஆணை அறிந்து வெட்டி
ஐந்நூறு பெண் சிறையும் அந்நேரம் கூட்டிவந்தனர்
மெய்க்காவலாக விடுதி விட்டு வைக்கசொன்னர்" -ரா.அ

கோட்டைச்சுவர் யானையை விட்டு இடித்து தகர்க்கப்பட்டது.போகாலூர் கோட்டை கைப்பற்றபட்டது. குமார அழகனையும், மதியானழகனையும் இறுக்க கட்டி ராமப்பய்யர் முன் வந்து விட்டனர். ஆண்கள் அனைவரையும் வெட்டினர். பெண்கள் அனைவரையும் சிறை படுத்தினர். ஐநூறு பெண்களையும் மெய்கவல் வைக்கச்சொன்னார் ராமப்பய்யர்.

"குமாரனழகனை கூபிட்டு முன்னே விட்டு
என்னோடு நீயும் எதிர்த்துப் போர் செய்வாயாடா
என்று சொல்லு அய்யன் இருகண்ணும் நெருபென்ன"
"தச்சனை அழைக்கச்சொன்னன் தார்வேந்தன் ராமய்யனும்
கூட்டிவந்து விட்டார்கள் கோலாகலன் கொலுவில்
மதியானழகனையும் மன்னன் குமாரனையும்
குப்புரவேதான் கிடத்தி கூறி மன்னர் பார்த்து இறுக்கி
முதுகு தோல்தன்னை முரமுரவே செதுக்கசொன்னன்"
"முட்டு முட்டாக முழுயெழும்பை தான் தரித்தான்"
"மதியானழகன் றேவி மன்னன் குமாரந்தேவி
கூட்டி வரச்சொன்னான் கோலாகல ரானய்யனும்"
"இருவர் தலையிலேயும் எடுத்துவை என்றன் கூடைதனை
பாளையத்தை சுற்றி பறையடித்து வரச்சொன்னன்காண்"- ரா.அ

குமாரழகனை அழைத்து என்னை எதிர்த்து போர் செய்வாயோட என சொல்லி. மதியாரழகன் மற்றும் குமாரழகன் ஆகிய இருவரையும் குப்புற படுக்கவைத்து ஒரு தச்சனை அழைத்து அவர்கள் முதுகுத்தோலை உரிக்கச்செய்தார் ராமபய்யர்.
அவர்கள் எலும்பை முட்டு முட்டாக தறிக்கசெய்தார். தறித்த உறுப்புகளை இரண்டு கூடையில் போட்டு குமாரன் தேவி (மனைவி), மதியாரழகன் தேவி ஆகியோர் தலையில் ஏற்றி பாளையத்தை சுற்றி பறையடித்து பவனிவரச்செய்தார் ராமபய்யர்.

"சடையக்காரரை விட்டு கையை பிடிக்கச்சொன்னன்
மறவன் பிடிபானென்று பார்த்த மென்கொடியாள்
விடுத்தாளவளுயிரை விண்ணுலகம் போய் சேர்ந்தாள்"
"வாய்த்ததொரு பொண்கொடியை மனமகிழ்ந்து கொண்டாடி
பச்சை வடங்கொடுத்து பாங்குடனே அடக்கச்சொன்னான்" - ரா.அ

மேலும் ஒரு கபாடக்காரரை கூப்பிட்டு கையைபிடித்து இழுக்க சொன்னார். மாற்றான் ஒருவன் கையை பிடிக்க வருகிறான் என்பதை உணர்ந்த தேவி தன் உயிரை மாய்த்து கொள்கிறாள். செய்தி கேட்ட ராமப்பய்யர் பச்சைவடங்கொடுத்து மரியாதை உடன் தேவியை அடக்கம் செய்கிறார்.

தொடரும்....
நன்றி:
கட்டுரை வழங்கியவர்,
கார்த்திக் தேவர்

Wednesday, September 12, 2018

திருமலை நாயக்கருகும் சடையக்க சேதுபதிக்கும் நடந்த மறவர் நாட்டு யுத்தம்(பகுதி -2) :

முதல் பகுதி:
(https://m.facebook.com/story.php?story_fbid=165516364341156&id=100026483794321

http://thevar-mukkulator.blogspot.com/2018/08/1.html )

(இந்த பதிவை படிக்கும் முன்பு முதல் பகுதியை படித்து விடுங்கள்.)

முதல் நாள் போர்:
போர் நடந்த இடம் மறவர் கோட்டைகளின் ஒன்றான அரியாண்டிபுரம் கோட்டைக்கு அருகில்.

"பார்ப்பான் படைமேலே பாருலகு தான்றிய
எறிந்தனர் எரிவாணம் எல்லையற்ற சேனையின் மேல"
"குத்தி விரட்டிக் கூடாரங் கொள்ளையிட்டார்"
"மன்னன் புலிவன்னியன் வாகாகவே திரும்பி
வெற்றிச்சங்கூதினர் விருது சடைக்கனவன்
பார்ப்பான் பெரும்படையில் பட்டார்கள் முன்னூறு
மறவர் அறுபதுபேர் மாண்டார்கள் களத்தில்"- ரா.அ

முதல் நாள் மறவர்கள் ராமப்பய்யர் படை மீது மூர்கத்தனமான தாக்குதல் நடத்தினர்.
முதல் நாள் வெற்றி மறவர் பக்கம்.இந்த நாளில் வடுகர் படையில் முன்னூறு நபர்களும் மறவரில் அறுபது நபர்களும் களத்தில் மாண்டனர்.

"அஞ்சாமல்தான் மறவன் நெஞ்செதிரே வந்தானே
மாப்பிள்ளை கொண்டையா மன்னவனே வாருமென்று
திருமலை கொண்டபையா தீரனே வருமான்று
சத்துருகாளப்பா தார்வேந்தே வாருமென்று
பென்னமராயா போர் வேந்தே வாருமென்று
மண்டூறு பாப்பயனே மன்னவனே வாருமென்று"-ரா.அ

கொண்டைய்யர்,திருமலை கொண்டபையர்,சத்துருக்களப்பையர், பொன்னமராய்யர்,பாப்பையர் ஆகிய மற்ற பிராமணர் தளபதிகளை ராமப்பய்யன் அழைக்கிறார்.

அழைப்பு விடுக்கப்பட்ட பாளையக்காரர் பெரும்படை அறியாண்டிபுரம் கோட்டையை நெருங்கி வந்து கூடாரமடித்தது. 
இதில் நத்தம் நிங்கம நாயக்கர், தொட்டப்ப நாயக்கர்,இருவப்ப நாயக்கர்,பூச்சி நாயக்கர், முத்தைய்ய நாயக்கர்,சிவிலி மாறன், முருக்கு நாட்டு மூவரையன்,குற்றாலத்தேவன், தென்மலை வன்னியர், சின்னனைஞ்ச்ச தேவன், கட்டபொம்ம நாயக்கன், ஊற்றுமலையான்,தம்பிச்சி நாயக்கன்,வென்ன நாயக்கர், பெம்ம நாயக்கர், அப்பாச்சி கவுண்டர், ஏழாயிரம் பண்ணை எதிரில்லார், கனக்கதிகாரி கவுண்டர்,முத்தப்ப நாயக்கர்,காமாட்சி நாயக்கர்,ஆயக்குழக்கொண்டையர்,விருப்பச்சி நாயக்கர், கன்னிவாடி நாயக்கர், லிங்கம்ம நாயக்கர், பெத்தன நாயக்கர், செல்வபெட்டி நாயக்கர், திருமலை பூச்சியனும்,சொக்கலிங்க நாயக்கர், விசுவப்ப நாயக்கர், மணலூறு நாயக்கர்,வேலப்ப நாயக்கர், கொடாங்கொப்ரெட்டி, அரியலூரார், மறுநூற்று நாயக்கர்,வால் சமூத்திர மன்னன்,குன்னத்து ரெட்டி,நாஞ்சி நாட்டு துரை,மலையாள ராஜா ,கொங்கு மன்னர்,கரட்டுமலை நாயக்கன், காமய நாயக்கர்,நாகம நாயக்கர்,பெருந்திகிரி பொம்மணன்,சிங்கமலத்தாபிள்ளை,சிலுப்பெட்டி நாயக்கர் ஆகியோரின் பெரும் படை ராமப்பய்யர் படையில் சேர்கிறது.

இது தவிர வாய்பூசகான், வாவுகான், சின்ன ராவுத்தர், முசெகான்,காதுறு சாய்பு, சுரனு தாதத்தராவுத்தர்,மீற சாயுபு,அதிரி சாயுபு, முகமது சாயுபு,முகமது கான், எலிசுக்கான் ஆகிய இசுலாமியரின் பெரும் குதிரைகளும் படையும் ராமபய்யர் படையில் சேர்கிறது.

இரண்டாம் நாள் போர்:
"இன்றைக்கு இலக்காக எதிர்த்த மறவனையும் சென்று பிடிக்கவென்று சீறி விடிவாளெடுத்தய்
மாப்பிள்ளை கொண்டையான் மதயானைபோல் சீறி
பாளையக்காரர் பல்பேரை தானழைத்து
பதினெட்டு வகையான பாங்குடனே தான்பிரித்து
எட்டப்பனயக்கன் எதிரில்லான் தன்படையும்
ஏரப்பனயக்கன் எதிரில்லான் தன்படையும்
எர்ப்பனயக்கன் யெல்லையற்ற காலளும்
பூச்சினயக்கன் போர்வேந்தன் தன்படையும்
கட்டபெம்மனாயக்கன் கன்னன் பெரும் படையும்"- ரா.அ

ராமப்பய்யரின் பெரும்படை பதினெட்டாக பிரிக்கப்படுகிறது

"அஞ்சு வகையாய்த்தான் பிரித்து அடர்ந்த பெருக்க
கறுத்த உடைவாள் கன்னன் ஒரு கையிலே
வீசு கொடைத்தேவன் வீமனொரு கையிலே
பொத்தை யுடையான் போர் வேந்தனொரு கையிலே
மதுரை கடைவழி மாதத்தேவனொரு கையிலே
றவுத்தர் கூத்தன் நல்ல படையொரு கையிலே
அஞ்சு வகையாய்தான் பிரித்து அடர்ந்து சமர்" - ரா.அ

கருத்தவுடையான்,வீசுகொண்டைத்தேவன், பொத்தவுடையான்,மாதத்தேவன், ராவுயத்தர் காத்தான் ஆகிய மறவர் தளபதிகள் கீழ் மறவர் படை ஐந்தாக பிரிக்கப்படுகிறது.

"யெறிந்த ரெரிவாணம் யெல்லையற்ற சேனையின்மேல்"
"வாளோடு வாள்முறிய மஷம் பெருத்தார்கள்"
"ஆனைகுத்திச்சேர்ந்து அலறி விழ்ய்வாரும்"
"இருபடையு முன்னு மெதிர்த்து சமர் பொருத்தனர்"
"வாணமடிபட்டு மண்மேல் கிடப்பாரும்
குத்துண்டு போர்களத்தில் கொலவியிட்டு நிற்பாரும்
குறை பிணமாய் நின்று கூத்தாடி நிறபாரும்
வேல் குத்துபட்டு விராண்டோடி போவாரும்"
"காலற்று வீழ்வாரும் கையற்று வீழ்வாரும்"- ரா.அ

நாயக்கர் படையும் மறவர் படையும் முட்டி கைகளத்தனர்,வலைத்து எதிர்த்து போர் செய்தனர்,எரிவாணம் எறிந்தனர்.வாளோடு வாள் வீரியமாக மோதின.

குத்து பட்டு நின்றர் சிலர், குறை பிணமாய் நின்றர் சிலர்,வேலால் குத்துபட்டு ஓடினர் சிலர், காலற்று வீழ்ந்தனர் சிலர், கையற்று வீழ்ந்தனர் சிலர்.

"வலங்கையிலே நின்றபடை வளர்த்துப்போர் செய்தார்கள்
இடங்கையிலே நின்ற படை எதிர்த்துப் போர் செய்தார்கள்
தேக்கிலையில் நீரதுபோல் தியங்கிவே தான் மறவன்
மன்னன் புலிராமன் மறித்தான் மறவரைத்தான்
மன்னன் புலி வன்னி வாகாகத்தான் திருப்பி
யெதிர்த்துப் போர்செய்தான் யெதிரில்ல வன்னியும்தான்
பார்ப்பான் பெரும்படையும் பறந்து கொலவியிட்டுக்
குத்தி விரட்டிக் கூடாரங் கொள்ளையிட்டு
மதச்சடைக்கன் தான் வளைத்து வன்னிக்கு வாய்த்ததென்று
ஊடுருவிச்சென்றான் உலகங்கிடுகிடென"
"வெட்டித்துரத்தி வன்னி விருதுகளுந் தான்பேசி
மன்னன் புலிராமன் படை மட்டில்லாச் சேனைவெள்ளம்
தட்டழிந்து கெட்டது போல் தலைகெட்ட நூலது போல்"
"மூவாயிரம் பேர் முழுது மங்கேதாப் மடிந்தார்கள்
மறவர் படையில் மடிந்தார்கள் முன்னூறு
வெற்றிச்சங்கூதி விருதுகளும் பேசிவந்தார்"

ராமப்பய்யர் படை மறவர்களை மறித்தது. தேக்கிலையில் நீரைப்போல மறவர்கள் தயங்கி நின்றனர்.இதைக்கண்ட வன்னியதேவர் உலகம் கிடுகிடன ராமப்பய்யர் படையை ஊடுருவிச்சென்றார். 

வன்னியரும் அவர் வீரர்களும் எதிரியை வெட்டு துரத்தினர். ராமப்பய்யர் படை தலைகெட்ட நூலது போல் சிதறியது. நாயக்கர் படையில் மூவாயிரம் பேர் மாண்டனர். மறவர்கள் முன்னூறு பேர் மடிந்தார்கள். வன்னியத்தேவர் இன்றும் வெற்றிச்சங்கூதினார்.

"மறவனே ஆண்பிள்ளை காண் மண்டலத்தி லுள்ளோரே
பெண்களோவென்று பெருமூச்சுத் தானெருந்து"
"மாப்பிள்ளை கொண்டையன் மாகோபங் கொண்டெழுந்து
வெங்கடகிருஷ்ணய்யன் வீமனே வாருமென்று"
"இன்றைக்கு இலக்காக யெதிர்த்த மறவனைத்தான் 
சென்று பிடித்து திசை நாலுங் கொள்ளை யிட்டு
கைபிடியாய்த்தான் பிடித்து கட்டிகொண்டு வரட்டால்
என்பேரோ ராமன் எடுத்துதவும் ஆயுதமோ" -ரா.அ

"மறவர் மட்டுமே ஆண் பிள்ளையா உலகத்தில் மற்றவர் அனைவரும் பெண்களா" என பொருமிய ராமப்பய்யர் 
தன் படைத்தலைவர் கொண்டய்யர், வெங்கடகிருஷ்னப்பய்யர் என அனைவரையும் அழைத்து என்று சேதுபதியை பிடித்து திசை நாலும் கொள்ளையிட்டுப்வருவேன் என் சூளுரைக்கிறார்.

மறுநாள் ஒற்றன் மூலம் வன்னியர் சடையக்கனுக்கு போர் விபரங்கள் மற்றும் வெற்றி குறித்த ஓலை அனுப்புகிறார்.
"இந்த வெற்றி போதாது என் மருகா வன்னியனே"-ரா.அ

"மண்டலத்திலுள்ள மகாசேனை அத்தனையும்
கூட்டிவந்து ராமய்யனும் கூடாரந்தானடித்தான்
என்னை யெடுக்க எவரால் முடியுமோடா
இராமநாதர் பாதம் நமக்குதவியாயிருக்க
முக்கோடி தீர்த்தம் முழுதுமங்கே தானிருக்க
வாமஞ் செகநாதர் வாய்த்த துணை யிங்கிருக்க
பார்பா நெருபொருட்டோ பாருலகில் மன்னவனே
யெதிர்த்து வந்த பார்பானை யினிவிடப் போறோமோ"

"பார்ப்பானைக்கொன்றால் பாவம் வந்து சூழுமென்று
பின் குடுமிதன்னிலே பேருலகம் தான்றிய
தேங்காயைக்கட்டி சிதற வடிப்பேனன்
கண்ணை பிடுங்கி காட்டிலே ஓட்டிடுவோம்
என்று சொல்லி ஓலையெழுது" -ரா.அ

ராமநாதர் பாதன் நமக்கு உதவியாய் இருக்க, மலைவளர் கதலி இருக்க, திருபுல்லானி ஜகன்னாதர் துணை இருக்க பார்ப்பான் ஒரு பொருட்டா.பார்ப்பன் குடுமியில் தேங்காயைன்கட்டி அடிப்பேன். கண்ணை பிடுங்கி கட்டிலோ ஓடவிடுவேன் என சேதுபதி ராமபய்யருக்கு ஓலை அனுப்புகிறார்.

ஓலையை பார்த்து மிகவும் கோபன் கொண்ட ராமப்பய்யன்
"சதுரகிரி பறுவதத்தை தான் பார்த்து நாய்குலைத்தால் சேதமுண்டோ" என சிரிக்கிறார்.
"சடையக்கனுட பெண்டின் தாலி தனையறுத்து
அரண்மனை தோறும் ஆசார வாசலல்லாம்
எருக்கும் குறுக்கும் இனிவிரைப்பேன்"- ராமபய்யர் (ரா.அ)
என பதில் ஓலை ராமப்பய்யர் அனுபுகிறார்.

" என் மருகா வன்னி இவ்வசனம் கேட்கிலையோ
பார்ப்பான்னகைத்து பகடி பண்ணி பேய்விட்டான்" -சடையக்கர் (ரா.அ)
"மாதச்சடையக்கன் தான் வளர்த்த வன்னிக்கு வாய்த்ததொன்று
போத்தை யுடையான் போர் வேந்த னொருகையிலே
வீசுகொண்டைதேவன் வீமனொரு கையிலே
கறுத்த உடையான் கன்னன் ஒருகையிலே
மதிரை வழிகண்ட மதத்தேவன் ஒருகையிலே
ரவுத்தன் கூத்தன் நல்ல படை ஒரு கையிலே
ஆறு வைகையாய் தான் பிரித்து அடர்ந்து போர் செய்யவென்று"

வன்னியன்,வேந்தன் பொத்தையுடையான், வீமன் வீசுகொண்டைத்தேவன், கறுத்தவுடையான்,மதுரை வழி கண்ட மாதத்தேவன் ராவுத்தர் கர்த்தன் என சேனை ஆறாக பிரிக்கப்படுகிறது.

"மன்னன் புலிராமன் மட்டில்லா சேனை வெள்ளம்"
"வெங்கடகிருஷ்ணய்யன் வெகுளியாய் தானெழுந்து"
"மண்ணூறு பாப்பைய்யனும் மாகோபாங் கொண்டெழுந்து
சற்றுரு கையன் தார்வேந்தன் தானெழுந்து
பாளையக்காரர் படைத்தலைரெல்லாரும்"
"போகலூர் வெளியில் போருக்கு வந்தார் கள்"-ரா.அ
ராமப்பய்யர், வெங்கடகிருஷ்ணய்யர், பாப்பையர் மற்றும் பாளையக்காரர் தலைவர் அனைவரும் போகலூர் கோட்டைக்கு வெளியில் போருக்கு வந்தார்கள்.

போகலூர் போர்.
"இருவர் படை முன் எதிர்த்து போர் செய்தார்கள்
வன்னி யொருபுறமாய் மார்க்கமாய் வந்து நின்று
மாபோகி யென்றுமொரு வான்பரிமேல் தானேறி
ஊடுருவி சென்றன் உலகங் கிடுகிடென
இடதுசாரி வலசாரி யெய்யாமல் ஊடருத்தான்" -ரா.அ

இரு தரப்பு சேனையும் எதிரெதிராக நின்றார்கள் 
போர் செய்ய. வன்னியர் மாபோகி என்ற குதிரை மேல் ஏறி நாயக்கர் படையில் ஊடுருவிச்சென்றார்.

"மன்னன் புலிராமன் மட்டில்லாச்சேனை வெள்ளம்
தட்டழிந்து கெட்டது காண் தலைகெட்ட நூலதுபோல்
மாப்பிள்ளை கொண்டையன் மதயானை போல் சீறி
யெதிர்த்த மறவனை யினிவிடப் போறேமோ
என்று சொல்லி அய்யன் எல்லோரையுஞ் சினந்து
தொட்டிய கம்பளத்தார் துடிகாரரையுஞ் சினந்து
பல்கடித்துச் சீறிவிழ ஏகினர் காணம்மனை
மறவர் படை மேல் மண்டிப் பெருத்தார்கள்"-ரா.அ

வன்னியர் ஊடுருவலால் ராமபய்யர் சேனை தட்டழிந்தது. இதனை கண்ட கொண்டைய்யர் மதயானை போல் சீறி தொட்டிய கம்பளத்தார் துடிக்காரர் ஆகியோர் துனையுடன் மறவர் படை மேல் பொருத்தார்.

" புலியை நரிபாய்ந்து போகுமோவம்வென்று சொல்லி"
"வன்னியவர் துணிந்து மசைப்போர் செய்தார்கள்
அரியாசை புரத்தார் அதிசீக்கிரம் வந்துதவ
கடந்தகுடி கோட்டையார் கடுகித்தான் வந்தார்கள்
எல்லோரும் வந்து இனிவிடப் போறோமோ
என்று சொல்லி மறவர் எதிர்த்து போர் செய்தார்கள்
மன்னன் புலிராமன் மட்டில்லா சேனை வெள்ளம்
கட்டவிழ்ந்த மான்போல கதறிதே ஓடலுற்றர்"
"வெட்டி கருவறுத்தான் விருதுபுகழ் வன்னியுந்தான்"-ரா.அ

மறவர் வெகுண்டு ஓடியதை பார்த்த வன்னியத்தேவர் நரி பாய்ந்து புலி ஓடுமோ என சொல்லிப்பாய்ந்தார்.
அம்பட்டு சேர்ந்து அலறி விழுந்தனர் சிலர், வானமடிபட்டு மன்மேல் கிடந்தனர் சிலர், வேலவனே என்றனர் சிலர், விதி வசமோ என்றனர் சிலர்,கையிழந்து நின்றனர் சிலர்.தவித்து கொண்டிருந்த மறவர்களுக்கு
அரியாண்டிபுரம் மற்றும்
கடரந்தக்குடி கோட்டைகளில் இருந்து உதவிக்கு வீரர்கள் வந்தனர். இனி விடப்போகிறோமா என்று சொல்லி மறவர்கள் எதிர்த்து வீரியமாய் போர் செய்தார்கள். ராமப்பயர் சேனை கதறி ஓடியது.விருது புகழ் வன்னியர் வெட்டி கருவறுத்தார்.

" குதிரை யிறுநூறு குண்டுபட்டு தான் விழுந்து
ஆனையுமோ பத்து அம்புடனே தான் சோர்ந்து
கூடாரங் கொள்ளை யிட்டு குடல் பிடுங்கி மாலையிட்டு
விருப்பாட்சினயக்கன் விருது சொல்லு ஒடிவ்ந்தான்
காமாட்சினயக்கன் கழுத்தை யறுக்கலுற்றன்
வெங்கமனயக்கன் வெட்டிப் பிளந்ததெரிந்தான்
பாளையக்காரரை தான் பார்த்து கழுத்தறுத்தான்" -ரா.அ

இருநூறு குதிரைகள் குண்டு பட்டு விழுந்தன. பத்து யானைகள் அம்புக்கு இரையாகின.
விருபாச்சி நாயக்கர் குடல் பிடுங்கபட்டது, காமாட்சி நாயக்கர் கழுத்து துண்டிக்கப்பட்டது. வெங்கம நாயக்கர் வெட்டி பிளக்கப்பட்டார். நாயக்கர் பாளையக்காரர் பலர் கொடுரமாக கொலை செய்யப்பட்டனர்.















"மன்னன் புலிராமன் மட்டில்லாச்சம்சேனையிலே
மூவாயிரம் பேர்முழுது மங்கேதான் மடிந்தார்கள்
மறவரிட படையிலுமே மடிந்தார்கள் பலபோர்கள்"
நாயக்கர் படையிலே மூவாயிரம் நபர்கள் மடிந்தார்கள்.மறவர் படையில் ஐநூறு நபர்கள் மடிந்தார்கள். இந்த நாலும் வெற்றி மறவர் பக்கம்.

அடுத்த நாள் வெற்றியொடு வன்னியதேவர் சேதுபதியை காணசெல்கிறார்.வந்து வணங்கிய வருமகனை கட்டித்தழுவி திருஷ்டி கழிய ஆயிரம் ஆலாத்தி எடுக்கசெய்கிறார்.

"இந்த வெற்றி போதாதோ யென்மருகா வன்னியென்றார்
கேட்ட படைத்தலைவர் கெடிகலங்கி போவார்கள்
இனி இளப்பமில்லை யென்மருகா வன்னி"

அடுத்த நாள்...

தொடரும்...

நன்றி:
கட்டுரை வழங்கியவர்,
கார்த்திக் தேவர்