Wednesday, July 23, 2014

செம்பி வளநாடன் ரவிகுலசேகர ரகுநாத சேதுபதிகள் செப்பேடுகள்


சேதுபதியின் கல்வெட்டுகள்

https://thevar-mukkulator.blogspot.com/2014/05/blog-post_26.html

செம்பி வளநாடன் ரவிகுலசேகர ரகுநாத சேதுபதிகள் செப்பேடுகள்

https://thevar-mukkulator.blogspot.com/2014/07/blog-post_23.html

சேதுபதிகள் நானயங்களில் வரும் செய்தி

https://thevar-mukkulator.blogspot.com/2017/09/blog-post.html

சேது காவலர்களும் மட்டகளப்பு வன்னிபங்களும்

https://thevar-mukkulator.blogspot.com/2015/02/blog-post.html

இரகுநாதசேதுபதி ஒருதுறைக்கோவை


"போரெனிற் புகலும் புனைகழல் மறவர்"
"பூட்பகைக்கே வாளகலிற் சாவோம் யாமென நீங்கா மறவர்"


போரில் ஈடுபட்டுத் தம் வீரத்தை காட்டியும்,போர்க்களத்தில் இறத்தலையும் உயர்வாக கொண்டவர்கள் மறவர்கள் .போர்த் தொழிலையே குலத் தொழிலாக கொண்டதால் "மறவர்கள்" என அழைக்கபட்டனர்.


மறவர்களைத் "தேவர்" என்று அழைப்பது சங்க காலத்திலிருந்து வழக்கமாக இருந்துள்ளது. அதன்படி சோழநாட்டின் அரசர்களுள் இராசராசசோழத் தேவர்,இராசேந்திர சோழத் தேவர் என பெயர் வைக்கப்பட்டு இருந்தன.

அத்துடன் இராமநாதபுரம் மறவர்களுக்கு 'செம்பியன்' என்ற பெயரும் உண்டு. 'செம்பியன்' என்றால் 'சோழன்' என்பது பொருள்.அதனாலேயே இச் செம்பிநாட்டு மறவர்கள் ஆதியில் சோழநாட்டை சேர்ந்தவர்கள் என்று 'அபிதான சிந்தாமணி' கூறுகின்றது.

சோழநாட்டிலிருந்து பாண்டிய நாட்டுக்கு வந்து குடியேறிய மறவர்கள் 'செம்பிய நாட்டு மறவர்கள்'. என்று அழைக்கப்பட்டனர்.


இவர்களில் சேதுபதி மன்னர்கள் செம்பி நாட்டு பிரிவை சார்ந்தவர்கள். இவர்களின் நாடு 'கீழ் செம்பி நாடு' என்றும் 'வடதலை செம்பி நாடு' என்றும் கல்வெட்டுகளில் குறிக்கபட்டுள்ளனர்.

இராமநாதபுரம் வரும் முன் சேதுபதிகளின் முன்னோர் துகவூர் கூற்றத்துக் காத்தூரான குலோத்துங்க சோழ நல்லூர் கீழ்ப்பால் விரையாத கண்டனில் இருந்தனர் எனச் செப்பேடுகள் கூறுகின்றன.


சாத்தாங்குடிச் செப்பேடு:

1. ஸ்வஸ்திஸ்ரீ சாலி வாகன சகாப்தம் 1637 இதன்மேல்ச் செல்ல நின்ற ஜெய நாம சம்வத்சரத்து
2. உத்தராயணமும் ஹேமந்தரிதுவம் மகா மாசமும் கிருஷனபஷத்து அமாவாசை ஆதித்த
3. வாரமும் உத்திராட பஷத்து சுபயோக சுபரணமும் பெற்ற மஹா உதைய புன்ய கால்த்தில்
4.தேவைநகராதிபன் சேது மூலாரஷா துரந்திரன் ராமநாதசுவாமி காரிய துரந்திரன்
5. சிவபூசாதுரந்திரன் பரராசசேகரன் பரராச கஜ சிம்மம் ஸ்வஸ்தி ஸ்ரீமன் மகா
6. மண்டலேசுவரன் கண்டநாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான்
7. ரவி வர்ம ரவி மார்த்தாண்டன் ரவிகுலசேகரன் ஈழமும் கொங்கும்

8.யாழ்பாணமும் கெசவேட்டை கண்டு அருளிய ராசாதிராசன் ராச பரமேசுரன் ராசமார்த்தாண்ட

9.ராசம்கா கொம்பீரன் உரிகோல் சுரதாணன் புவனேகவீரன் வீரகஞ்சுகன் சொரிமுத்து வந்நியன் அரச
10. ராவண வத ராமனின் வேளக்காரன் வீர வெண்பாமாலை இளஞ்சிங்கம் தளசிங்கம்
11.பகைமன்னர் சிங்கம் ஆற்றுபாச்சி கடலிற்பாச்சி மதப்புலி அடைக்கலங்காத்தான் மேவலர்கள்
12.கோளரி மேவலர்கள் வணங்குமிரு தாளினன் கீர்த்தி பிறதாபன் கொட்டமடக்கி
13. வையாளி நாராயணன் காவிக் குடையான் கருணா கடாஷ காமினி காந்தற்பன் கலை தெரியும்
14. விற்பன்னன் சந்திய பாஷா அரிசந்திரன் கொடைக்கு கர்ணன் வில்லுக்கு விஜயன்
15. பரிக்கு நகுலன் குன்றினுயர் மேருவிற் குண்றா வளைகுணில் பொறித்தவன்
16. திலதநுதல் மடவார்கள் மடலெழுத வருகமுன் துஷ்டநிற்கிரஹ சிஷ்ட பரிபாலன் வீரதண்டை
17. சேமத்தலை விழங்குமிருதாளினன் அனுமகேதன் சகலகுணாபி ராமன் சங்கீத சாயுத்திய
18. வித்தியா வினோதன் அஸ்டதிக்கு மனோபயங்கரன் மதுரையார் மானங்ககாத்தான்
19. தொண்டியந்துறை காவலன் துர்கரேபந்தன் வைகை வளநாடன் வன்னியராட்டந்தவிர்த்தான்
20.அந்தம்பர கண்டன் சாடிக்காறர்கள் மிண்டன் ஸ்வாமிதுரோகிகள
கண்டன் பஞ்சவன்ன ராய ராவுத்தன்
21.பனுவார் கண்டன் இவுளிபாவடி மிதிதேறுவார் கண்டன் தளங்கொண்டு தத்தளீய்ப்பார் மிண்டன்
22.பட்டர்மாணங்காத்தான் துஸ்டாயிர கண்டன் தாலிக்கு வேலி சத்துருவாதியள் மிண்டன் வேதியர்
23. காவலன் சித்தித்த காரியம் ஜெயம்பன்னும் மனோகரன் வீரலட்சுமி காந்தன் விசையலட்சுமி
24.சம்பன்ன ஸ்கல சாம்ராஜ்ஜிய லட்சுமி நிவாசன் துகவூர் கூற்றத்து காத்த ஊரான குலோத்துங்க
24.சோழநல்லூர் கீழ்பால் விரையாத கண்டனலிருக்கும் சேதுபதி வங்கிஷாதிபனான
25.ஸ்ரீஹிரண்ய கர்ப்பயா ரவி குலசேகர குனாத சேதுபதி காத்த தேவர்கள் தம் முகவைபுரியான
26.ராமநாதபுரத்தில் ஸ்ரீ கோதண்டராமநாத சுவாமிக்கு தாமிற சாசன பட்டயங் கொடுத்த படி நாம் இப்போது
27.கோதண்ட ராம சுவாமிக்கு தாமிற பட்டயங்கொடுத்தாவது நித்தீயியக் கட்டளை அபிசேக நெய்வேத்தியம் திருமாலை திருவிளக்கு கட்டளை முதலானதுக்கு நிலவரம் பண்ணி...................................


சிவகங்கை செப்பேடு:


1.ஸ்ரீ சுபமஸ்து சாலிவாகன சகாப்தம் 1655 கலியுக சகாப்தம் 4834 இதின் செல்ல நின்ற பிரமாதீச ஸ்ரீ
2. சித்திரை 21ந் தேதி புதன் கிழமையும் பவுர்ணமியும் சுவாதி நட்சத்திரமும் விருச
3. பலக்கினமும் கூடிய சுபயோக சுபதினத்தில் ஸ்ரீமன் மகா மண்டலேஸ்வரன் தள்விபாட
4. தப்புவராய கண்டன் மூவராய கண்டன் கண்டநாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான்
பாண்டிய 5.மண்டல ஸ்தாபனாசிரியன் சோழ மண்டல சண்டபிரசண்டன்
ஈழமும் கொங்கும் யாழ்பானராயன்
6. பட்டனமும் கெசவேட்டை கண்டருளிய ராசதிராசன் ராச பரமேஸ்வரன் ராச மார்தாண்டன் ராசாக்கள்
7.தம்பிரான் ரவிகுலசேகரன் தொட்டியர் தளவிபாடன் ஒட்டியர் மோகம் தவிர்த்தான் துலுக்க தளவிபாடன்
8.சம்மட்டிராயன் இவுளி பாவடி மிதித் தேருவார் கண்டன் அசுபதி கெஜபதி நரபதி

பிரித்திவராஜ்ஜியம்
9. அருளா நின்ற சேதுகாவலன் சேது மூல துரந்திரன் ராமநாத சாமி காரிய துரந்திரன் இளம் சிங்கம்
10.தளசிங்கம் சொரிமுத்து வன்னியன் தொண்டியன் துறைகாவலன்
வைகை வளநாடன் தாலிக்கு வேலி
11.குறும்பர் கொட்டமடக்கி அரசராவனவத ராமனை எதிர்ப்பவர்கள் மார்பில் ஆணி சிவபூசை

துரந்திரன் 12.செம்பி வளநாடன் காத்தூரான குலோத்துங்க சோழ நல்லூர் கீழ்பால் விரையாத
கண்டனிலிருக்கும்
13. ஹிரண்யகர்ப்ப அரசுபதி ரகுநாத சேதுபதி புத்திரன் விஜய ரகுநாத சேதுபதி அவர்கள் மருமன்
குளந்தை
14.நகராதிபதியின் பெரிய உடையார் தேவரவர்கள் புத்திரன் ஸ்ரீமது அரசுநிலையிட்ட முத்து விஜய
ரகுநாத 15.சசிவர்ண பெரிய உடையார் தேவரவர்கள் நாலு கோட்டையிலிருக்கும் வேட்டைக்கு வந்த இடத்தில் 16.கோவனூர் அகம்பாடிய தாரான வீரப்பன் சேருவை மகன் சாத்தப்ப ஞானி வெள்ள
நாவலடி..........................

இளையாங்குடிசெப்பேடு:

1."பாண்டிய மண்டல ஸ்தாபனாசிரியன் சோழ மண்டல ஸ்தாபனாசிரியன் தொண்டைமண்டல
2.பிரசண்டன் ஈழமும் கொங்கும் யாளபான பட்டனமும் கேயு மண்டலமும் அளித்து
3.கெஜவேட்டை கண்டருளிய ராசாதிராசன் ராசபரமேசுபரன் ராசகெம்பீரன் ராசகுலசேகரன் இவுடி
4.பாவடி மிதித்தேறுவார் கண்டன் சாவக்காற மிண்டன் சாமித்துரோகி மிண்டன் பஞ்சவர்ன ராய
5.ராவுத்த பனுகுவார் கண்டன் சொரிமுத்து வந்நியன் திலதனுதல் மடல் மாதர்
6.மடலெழுதும் வருசுகன் காமிகா கந்தப்பன் சங்கீத சாயுத்திய வித்தியா வினோதன்
7. வீரதண்டை சேமத்தலை விளங்கு மிறுதாளினான் வில்லுக்கு வீமர் பரிக்கு நகுலன்
8.பரதநாடகப் பிறவீணன் வலியச்சருவி வளியிடக்கால் நீட்டி தாலிக்கு வேலி தத்துராதியள்
9.மிண்டன் இளஞ்ச்சிங்கம் தளசிங்கம் ஆத்துபாச்சி கடல்பாச்சி மதப்புலி
10.அடைக்கலங்காத்தான் துலுக்கர் மோகந்தவிர்த்தான் துலுக்கர் தளவிபாடன் ஒட்டியர்
11.தளவிபாடன் ஒட்டியர் மோகந்தவர்த்தான் வீரலட்சுமி விசைய லெட்சுமி காந்தன்
12.அனுமக்கொடி கெருடக் கொடி விளக்கும் விருதாளினான் செங்காவி குடையோன் கயனாத
13.சுவாமி காரியர் துரந்தரன் காளை நாயகர் துரந்திரீகன் சேது மூலதராதரீகாரன் சேது லட்ச
14.துரந்தரீகன் துஸ்ட நிக்க் சிஷ்ட பர்பாலகன் அறிவுக்கு அகத்தியன் பொறுமைக்கு தர்மர்
வில்லுக்கு விஜயன் பகை மன்னர் கேசரி இரணியகர்ப்பயாஜி சேது வம்ச துரந்தரீகறன்
பிரித்திவிராஜ்ஜியம் பரிபாலன்ம் பன்னியருளிய ஸ்வஸ்தி ஸ்ரீ...........

இயமனீஸ்வரம் செப்பேடு:

1."பாண்டிய மண்டல ஸ்தாபனாசிரியன் சோழ மண்டல ஸ்தாபனாசிரியன் தொண்டைமண்டல
2.சண்ட பிரசண்டன் ஈழமும் கொங்கும் யாழ்பாண ராயன் பட்டனம் எட்டு திசையும்
3.வேட்டை கண்டுருளிய ராச ராசன் ராச ப்ரமேஸ்வரன் ராச மார்தாண்டன் ராச
4.கம்பீரன் எம்மண்டலம் கொண்டருளியவன் ஒட்டியர் தளவிபாடன் ஒட்டியர் மோகம் தவிர்த்தான்
5.மலைகலங்கினும் மனங்கலங்காதான் மறைபுத்திரர் காவலன்
6.குறும்பர் கொட்டமடக்கிய ராச குலதிலகன் ராசாக்கள் தம்பிரான்
7.அரசாரவண ராமன் அதம பிரகண்டன் தாலிக்கு வேலி தரியலர்கள் சிங்கம்
8.வடகரைப்புலி வைகை வளநாடன் தேவை நகராதிபன் சேதுகாவலன்
9.சேது ராச்சிய துரந்திரன் சேமத்தலை விளங்குந்தாளினன். செங்காவிக்கொடி செங்காவிக்குடை
10.செங்காவி சிவிகை யாளிக்கொடி அன்னக்கொடி கருடக்கொடி புலிக்கொடி மகரக்கோடி
11.சிங்கக் கொடியுடையோன் இவுளிபாவடி மிதிதேறுவார் கண்டன் மும்முரசு அதிரும்
12.விருதுடையான் முல்லை மாளிகையியானான ரவிகுலசேகரன் பஞ்சகால பயங்கரன்
13.பரதேசிகாவலன் தடாதகைநாட்டில் செம்பிவள கரதலநகராதிபதிபன் சிவபூசை குருபூசை
மகேசுவர பூசை மறவாத சாதிபன் அசுபதி கெஜபதி நரபதி இரனியகெற்ப விஜய ரகுநாத சேதுபதி...."

பெருவயள் செப்பேடு:

1. "பாண்டிய மண்டல ஸ்தாபனாசிரியன் சோழ மண்டல ஸ்தாபனாசிரியன் தொண்டைமண்டல
2. சண்ட பிரசண்டன் ஈழமும் கொங்கும் யாழ்பாண ராயன் பட்டனம் எட்டு திசையும்
கஜ வேட்டை கண்டுருளிய ராச ராசன் ராச ப்ரமேஸ்வரன் ராச மார்தாண்டன் ராச கம்பீரன் எம்மண்டலம் கொண்டருளியவன் சொரிமுத்து வந்நியன் கொடைக்கு கர்ணன் பரிக்கு
நகுலன் வில்லுக்கு
3. விஜையன் இவுளி பாவடி மிதித்து ஏறுவார் கண்டன் குறும்பர் கொட்டமடக்கி
வையாளி
4. நாராயணன் உருகோல் சுரதான்பகை. மன்னர்சிங்கம் பகைமன்னர் கேசரி துஷ்டநிக்கரக
சிஷ்ட பரிபாலன் வீரகஞ்சுகன் வீரவளநாடன் சிவபூசாதுரந்திரன் மன்னரில் மன்னன் மறுமன்னர்
5. காவலன் வேதியர் காவலன் அரசராவண ராமன் அடியார் வேலைக்காரன் பாதளவிபாடன்
6. சாடிக்காரர் கண்டன் சாமித்துரோகியார் மிண்டான் பஞ்சவர்ண ராய ராவுத்தன்
7. வீரவென்பாமாலை இளஞ்சிங்கம் தளசிங்கம் பகைமன்னர் சிங்கம் மதப்புலி
8. அடைக்கலங்காத்தான் தாலிக்கு வேலி மனுகுல வங்கிசாபதி சத்திராதியள் மிண்டன்
9. வன்னியர் ஆட்டம் தவிர்த்தான் மேவலர் கோளரி வணங்கும் இருதாளினான் துரகபந்தன்
10. அனுமகேதன் கருடகேதனன் பரதநாடக பிரவீனன் கருணாகடாட்சகம்
11. குண்றுயர் மேருவில் குன்றார் வளை பொரித்தவன்
12. திலக நுதல் மடமாதர் மடல் எழுத வருசுமுகன் விஜயலெட்சுமி காந்தன்
13. கலை தெரியம் விற்பனன் காமின்".............

சேதுபதிகளின் ஆட்சியில் இருந்த குடிகள்:

சேதுபதிகளின் ஆட்சியில் பிள்ளைமார்கள் அமைச்சர்களாகவும் சேருவைகாரர்கள் தளபதிகளாகவும் பண்டாற நில உடைமை அதிகாரத்தில் இவ்விருவர்களும் இருந்தனர்.

இவர்கள் போக...
சாக்காங்குடி செப்பேடு:

நம்முடைய இராச்சியத்தில் இருக்கிற பிரம்ம சத்திரிய வைசியருக்கு முதலான இராசாக்கள் ராசபுத்திறாள் குரு சூத்திரர் கருனாடகத்தார் கவரைகள் வெலமா,துழுவர்,மல்லக செட்டியர் எழு கூற்றம் பதினெட்டு நாடு அஞ்சு நத்த முதலான கிராமத்து வெள்ளாள கெட்டியளில் மதுரை செட்டிகளில் மஞ்சப்புத்தூர் செட்டியாள் கோமுட்டி பட்டுனூல் செட்டியார் சலூப்ப இடையர் வலசை இடையர் சிவியார் இடையர் போயிண்டமார் தொட்டிய கம்பளத்தார் நாட்டு இடையர் வடுககுசவர் நம் நகரில் உள்ள பேற்கேல்லாம் வருஷக் கட்டளை வருஷக் கட்டளைக்கு மகமை ஒரு பனமும் கோபால கட்டளை இடையர் பெண்கோண்ட பனமும் இதுபோம் நம் நகரில்....... பள்ளுபறை சகலமும் சர்வமானியாக இராமநாத பண்டார பாரிசமாக கட்டளை.

பிரம்ம சத்திரிய வைசிய செட்டியார்,இராசாக்கள் இராசபுத்திரர்(ராஜூஸ்),குரு சூத்திர கருனாடகத்தார்(லிங்காயத்துகள்),(கவரைகள்,வெலமா,துழுவர்,மல்லு) செட்டியார்,வெள்ளாள கட்டியர்களான ஆயிரவைசிய செட்டியார்,கோமுட்டி பட்னூல் செட்டியார்,சலுப்ப இடையர்,வலசை இடையர்,சிவிகை இடையர்(கோவிலில் சிவிகை தூக்குபவர்),போயர்,தொட்டிய கம்பளத்தார்,நாட்டு இடையர்,வடுக குசவர்,பள்ளர்,பறையர்...............முதலான குடிகள்.

சேதுபதிகளின் செப்பு பட்டயங்களில் வரும் சில விருதுகள் நாயக்க மன்னர்களின் விருதுகளை உனர்த்தும் (எ-டு)ஸ்வஸ்திஸரீ ஸரீமன் மகாமண்டலேசுவரன் அரிராய விபாடன் பாஷைக்குத் தப்புவ ராய கண்டன் முவராயர கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு விடாதான் நாயக்கர் மன்னர்களுக்கு மட்டுமே உரியது.

இது போக

தொண்டை மண்டில சண்ட பிரசண்டன் சோழ மண்டில சண்டபிரசண்டன் பாண்டி மண்டிலத்துப் பதுமனா சாரியன்



மன்னர் சேதுபதி ஆட்சிக்கு
உட்பட்ட அறந்தாங்கி அரசு தொண்டைமானார்கள்
பற்றிய செப்பேடுகள் !






பாண்டியருக்கும் சேதுபதிகளுக்கும் உரியதாக இருந்து பிற்பாடு நாயக்க மன்னர்களும் சூடிய பட்டங்கள்.
வன்னியராட்டம் தவிர்த்தான்(இந்த பட்டம் நாயக்க மன்னர்களின் பட்டம் தொண்டை மண்டல குடிகள் வனப்பகுதிகளில் வாழ்வதால் வன்னிமைக் குடிகள் என பெயர் பெற்ற 18 வகை தொண்டை மண்டல சாதியினருக்கும் இருந்துள்ள காரனப் பெயராகும். மேலும் நாயக்க மன்னர்கள் கச்சி தேவ மகாராய திருமலேந்திரன் என பட்டம் பெற்றவர்கள் ஆதனால் இந்த 18 வகை சாதியினர்களை வீழ்த்தியதால் நாயக்க மன்னர்களும்(18 வன்னியரை புறம் கண்டான் என பெயர் பெற்றனர்) அவர்களின் ஆட்சிக்குட்பட்ட குறுநில மன்னர்களான சேதுபதி,அறந்தாங்கி தொண்டைமான்,பல்லவராயர்,நரசிங்க தேவர்,வானாதிராயர் முதலான மன்னர்கள் சூடிய பட்டமாகும்)

இது போக சேதுபதிகளுக்க் மட்டுமே உரிய பட்டங்கள்:




சேதுபதிகளின் பட்டங்களும் விளக்கங்களும்:

1.செம்பி வளநாடன் - இந்த பட்டம் சேதுபதிகளுக்கு மட்டுமே உடையது."தடாதகை நாட்டில் செம்பிவள கரதல நகரதிபன்" மீனாட்சி ஆளும் பாண்டிய நாட்டின் செம்பியர் தளத்தின் தலைவன்.
விக்கிரமசோழனுலா வில் திருப்புல்லானி [ஆதி ஜெகநாதபெருமாளுக்கும்] சோழ மன்னர்களையும் சேது காத்த தேவர்களையும் செம்பி நாட்டான் என கூறுகின்றது.
2.ஈழமும் கொங்கும் யாழ்பானராயன் பட்டனமும் கேயு மண்டலமும் அளித்து கஜவேட்டை அருளியவன்" இதற்க்கு ஈழத்தையும் கொங்கையும் யாழாபான பட்டனத்தையும் யானை படையுடன் சென்று வென்று அவர்களுக்கே அளித்தவன் என பொருள் கொல்லலாம்.
3.சாவக்காற கண்டன்
4.இவுளி பாவடி மிதித்தேறுவார் கண்டன்(குதிரை ஏறும் கண்டன்)
5.சாமி துரோகிகள் மிண்டன்
6.மதுரையார் மானங்ககாத்தான்
7.ஒட்டியர் மோகந்தவிர்தான்(ஒட்டியர் என்னும் ஒரிசாவின் படை தலைவர்களினை வீழ்த்தியதால் வந்தது)
8.அரசு ராவன வத ராமனின் வேலைக்காரன்
9.வீர வென்பாமாலை
10.ரவி மார்தாண்டன்
11.ரவி குலசேகரன்( சூரிய குலத்தை சார்ந்தவன்).
12.வேதியர் காவலன்
13.இரன்ய கர்பயாஜி(ஹிரன்ப கர்ப்பயாகம் செய்தவன்)[சோழர்கள்,திருவிதாங்கூர் மன்னருக்கு பின் சேதுபதிகள் மட்டுமே செய்யக்கூடிய யாகம்].
14.வீரலட்சுமி காந்தன்
15.விசையலெட்சும் சாம்ராச்சிய லட்சுமி நிவாசன்
16.குலோத்துங்க சோழநல்லூரில் விரையாத கண்டனில் வாசம் செய்பவன்
17.வைகை வளாநாடன்
18.குறும்பர் கொட்டமடக்கி( குறும்பர் கொட்டமடக்கியைதான் வைகைவளநாடன் கொட்டமடக்கி என பலர் திரித்து வருகின்றனர்)
19.அதி ஜெகநாத ரகுநாத வங்கிசாதிபதி
20.இளசிங்கம் தளசிங்கம் பகைமன்னர் சிங்கம்
21.ஆத்துபாச்சி கடல்பாச்சி மதப்புலி
22.துளுக்கர் தளவிபாடன்
23.சேதுமூல துரதாரீகன் சேது வம்மிசன்
24.வடகரை புலி
25.மலை கலங்கினும் மனங்கலங்காத கண்டன்
26.தேவை நகராதிபன்
27.கோளரி மேவலர்கள் வனங்கும் இருதாளிநன்(மேலுலகத்தினர் வனங்கும் இருதாள் உடையவன் )
28.அடைக்கலம் காத்தான்
29.குன்றுயர் மேருவில் குன்றா வளை பொரித்தவன்( இமயமலையான மேருவில் வளை(வளரி) பொரித்தவன்).
30.தாலிக்கு வேலி
31.ராசாக்கள் தம்பிரான்(அரசர்களின் கடவுள் (அ) சக்கரவர்த்தி).
32.கஜபதி,நரபதி,செம்பிவள நாட்டுடை சேதுபதி.
சேதுபதிகளுக்கு உரிய விருது அனிகலன்:

வீரதண்டை சேமத்தலை விளங்கும் இருதாளினன்,செங்காவி குடையன்,செங்காவி சிவிகை,முல்லை மாளிகையுடையான்.













சேதுபதி எந்த வம்சத்தவர்:

சேதுபதியின் செப்புபட்டயங்களில் செயதுங்கராயர் வங்கிஷம் என்ற வார்த்தை வருகிறது.
கல்வெடுகளிலும் செப்பேடுகளிலும் செம்பிவளநாடன்,பரராஜகேசரி,அகளங்கன்,ரவிகுலசேகரன்,வைகைவளநாடன்,மனுநீதி மன்னன், 
சேது காவலன் என பல என பல சோழனை சார்ந்த பட்டங்களும் பாண்டியரை சார்ந்த பட்டங்களும் வந்தாலும்.செம்பி வளநாடன் என்ற பட்டம் சோழனை சார்ந்தது என்ற
முடிவுக்கு வந்தாலும் இந்த செயதுங்கராயர் வங்கிஷம் என்பதி பொருள் முழுமையாக
புரியவில்லை.

வங்கிஷம் என்றால் என்ன?
வங்கிஷம் என்ற வார்த்தைக்கு "வம்சம்" என்று பொருள். பாண்டியர் தங்களை
"சந்திர குல வங்கிஷம்". மதுரை நாயக்கர் "துளுவ வங்கிஷம்". சேரர் தங்களை "சேரமான்
வங்கிஷம்" என கூறுவதில் வங்கிஷம் என்றால் வம்சம் என்று பொருள்.

திருமலை நாயக்கருக்கு முந்த சேதுபதி:

திருமலை நாயக்கன் பாட்டன் முத்துவீரகிருஷ்ன நாயக்கன் உடையான் சேதுபதி என்பவரை
நியமித்தாக கூறும் நாயக்கர் வரலாறு. "அச்சுதராயர் அப்யுக்தம்" என்னும் விஜயநகர
வரலாறு. கிருஷ்ண தேவராயர் தளபதி விசுவநாத நாயக்கன் "சயதுங்க தேவன்" என்ற
சடைக்க தேவனை கொன்று சேதுவை கைப்பற்றினான் என கூறுகிறது. இதை
மறவர் ஜாதி வர்ணம் என்னும் சுவடியும் உறுதிசெய்கிறது. இதை ஆராய்ந்த
வில்லியம் டெய்லர் மற்றும் மெக்கன்சி கையெழுத்து பிரதியும் உறுதி செய்து
இதையே "மதுரா மானுவல்" என்னும் புத்தகத்தில் ஜே.எச்.நெல்சன் மதுரை வரலாறு
புத்தகத்தில் கூறுகிறார். 



அந்த "ஜெயதுங்க தேவன்" பேரனையே முத்துவீரப்ப நாயக்கன் சேதுபதியாக அமர்த்தினான் என்கிறது. இவனே சடையக்க உடையான் சேதுபதி. தன் மூதாதயரான "சயதுங்க" தேவரை ஒவ்வொரு முறையும் செப்புபட்டயத்தில் "செயதுங்கராய வங்கிஷம்" என குறிப்பிட்டனர் சேதுபதிகள். சேதுபதியின் செப்பு பட்டங்கள் 250 க்கும் மேல் உள்ளது திருமலை நாயக்கரை விட அதிகம். அத்தனையும் ஆங்கிலேயரே பதிவு செய்து தமிழக ஆவணங்களில் ஊர்ஜிதபடுத்தபட்டு ஆவனமாக உள்ளது. செப்பு பட்டயம் மட்டுமல்ல கல்வெட்டுகளும் 70 க்கு மேல் இன்றும் கண்டுபிடிக்க பட்டுள்ளது. இவை கடந்த 500 வருடமாக கல்வெட்டுகளும் செப்பேடுகளும் பழமை என ஊர்ஜிதபடுத்த பட்டுள்ளது. இப்போது சேதுபதியின் மூதாதயன் செயதுங்கன் யார்? வரலாற்றில் செயதுங்கன் யார்? பாண்டியர் காலத்திலும் செயதுங்கநல்லூர் செயதுங்க பாண்டியன் என சில பெயர்கள் வருகின்றனர். இதைப்போல் செயதுங்க பல்லவராயன், செயதுங்க தொண்டைமான் என சில பெயர்கள் சோழர் காலத்திலும் வருகிறது. இந்த துனைப்பெயரின் மூலவன் யார். குலோதுங்க சோழன்: இராஜேந்திர சோழன் 1070களில் இறந்தார். அவருக்கு பின் ராஜாதித்தர் போன்றோர் அரியனை ஏறி இறந்தனர். இந்நிலையில் சோழ சிம்மாசனம் வாரிசற்று போனது. இராஜேந்திர சோழன் மகள் அம்மங்கையின் பேரன் இராஜேந்திர நரேந்திரன் என்னும் மதுராந்தக தேவன் சோனாட்டின் வாரிசாக அமர்ந்தான் அவந்தான் "கலிங்க போர்" கொண்ட குலோத்துங்க சோழன். குலோத்துங்க சோழன் -சளுக்க வாரிசா? இவனை விஷ்னுவர்தன் என்னும் கீழை சளுக்கர் அரியனைக்குரிவன் என உரைநடை எழுதுகின்றனர். ஆனால் குலோத்துங்கன் கல்வெட்டுகளில் எந்த இடத்திலும் தன்னை சளூக்கன் என கூறியதில்லை. மேலும் இராஜ இராஜனுக்கு பின் "தெலிங்கர் குல காலன்" என்ற பட்டம் புனைந்துள்ளான். மேலும் தமிழிலே இன்றைய கர்நாடகா,ஆந்திரா பகுதிகளில் கல்வெட்டு கிடைக்கிறது. ஆந்திரத்தில் சில கல்வெட்டு பகுதி அறிவிப்புக்காக தெலுங்கில் உள்ளது. மேலும் குலோத்துங்கனால் பரிசு பெற்ற செயங்கொண்டார்,ஒட்டக்கூத்தர்,கம்பர் இவனை சோழன் மனுநீதி சோழன்,செம்பியன் வழியே உதித்த சோழ குல திருமால் என கூறுகின்றனர். குலோத்துங்க சோழன் சளுக்கன் என்பது உறைநடை மட்டுமே யார் வேனாலும் கருத்து எழுதலாம் ஆனால் கல்வெட்டுகளில் இல்லை. இராஜேந்திரனுக்கு பின் கிழக்கு ஆசியா முழுவதும் கலிங்கம் முதல் இலங்கை பாண்டியநாடு சேரநாடு வரை குலோத்துங்கன் கொடி பறந்தது. பாண்டியனை அரியனையில் தூக்கி அதற்க்கு பதில் தன் மகன் ஒருவனை சோழபாண்டியன் என்றோரு மன்னனை அமர்த்தினான். இவன் மறத்தமிழனே அன்றி வேறில்லை. சுருக்கமாக சொன்னால் இராஜேந்திரருக்கு பின் அரியனைக்கு வந்தவன் என்ற ஆதாரத்தை தவிர உறுதியான கல்வெட்டு சான்று சளுக்கன் என கிடையாது. முதலாம் இராஜ இராஜ சோழனும் தன்னை தெலிங்கர் குல காலன் என குறிப்பிட்டுள்ளான்.

குலோத்துங்கன் பல கல்வெட்டுகளில் "தெலிங்கர் குல காலன்" என வந்துள்ளது.

நார்த்தமலை கடம்பர் கோவில் கல்வெட்டு 12-ஆம் நூற்றாண்டு "ஸ்வஸ்திஸ்ரீ ராஜகேசரி திரிபுவனசக்கரவர்த்திகள் மதுரையும் ஈழமும் கொண்டு...;... .......ஸ்ரீ திரிபுவன தேவர்க்கு யாண்டு... இரட்டபாடி கொண்ட சோழ வள நாட்டு தெலிங்ககுலகாலபுரமான குலோத்துங்க சோழ பட்டினத்து நகரத்தோரொம்"

அதே கோவிலில் வேறோரு கல்வெட்டு... "ஸ்வஸ்திஸ்ரீ ராஜகேசரி திரிபுவனசக்கரவர்த்திகள் மருதையும் கருவூரும் பாண்டியன் கொண்டு...;... .......ஸ்ரீ திரிபுவன தேவர்க்கு யாண்டு... இரட்டபாடி கொண்ட சோழ வள நாட்டு தெலிங்ககுலகாலபுரமான குலோத்துங்க சோழ பட்டினத்து நகரத்தோரொம்"

அருமைகுளம் கல்வெட்டு 13-ஆம் நூற்றாண்டு. "ஸ்வஸ்திஸ்ரீ நகர கோயிலோம் இரட்டபாடி கொண்ட சோழ வள நாட்டு தெலிங்ககுலகாலபுரமான குலோத்துங்க சோழ பட்டினத்து திருமேற்கோயிலாம்." ஆக ஒரு தமிழ் மன்னனை திரிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். குலோத்துங்கனின் விருதுபெயர்கள்: டி.வி.சதாசிவ பண்டாரத்தார் எழுதிய குலோத்துங்க சோழன் என்னும் நூலில், 1070ல் அரசாட்சி ஏகிய குலோத்துங்க சோழன் என்ற பெயரில் அரியனை ஏறிய இவனுக்கு அதுவே வானால் பெயராணது.. நாமும் குலோத்துங்கன் என்றே அழைப்போம். இப்பெயரன்றி இவனுக்கு அபயன்,சயதுங்கன்,விருதராஜபயங்கரன் கரிகாலன்,இராஜநாராயனன்,உலகுய்யவந்தோன் என பல பெயர்கள் உள்ளது. இது கல்வெட்டுகளிலும் கலிங்கத்துபரணியிலும் உறுதிசெய்யபட்டுள்ளது.

குலோத்துங்க சோழன் காலத்தில் எழுதபட்ட கலிங்கத்து பரணியில், முதலி வரும் சூரியன் துதியில், சூரியன் துதி: 7. பேராழி யுலகனைத்தும் பிறங்கவள ரிருணீங்க ஓராழி தனைநடத்து மொண்சுடரைப் பரவுதுமே. 8. பனியாழி யுலகனைத்தும் பரந்தகலி யிருணீங்கத் தனியாழி தனைநடத்துஞ் சயதுங்கன் வாழ்கவென்றே. உரை: சூரியின் உல்கிருள் நீங்க ஒராழி நடத்துதல் போல்,முதற் குலோத்துங்கன் கலியிருள் நீங்கி தனியாழி நடத்துகின்றான்.

காளி வாழ்த்தும் செயதுங்கன் மரபு: காளி மகிழ்தல் 210 வையகமாங் குலமடந்தை மன்னபயன் தன்னுடைய மரபு கேட்டே ஐயனையான் பெற்றெடுத்த வப்பொழுதும் இப்பொழுதொத் திருந்த தில்லை. காளி புகழ்தல் 211 உலகையெலாங் கவிக்கின்ற ஒருகவிகைச் சயதுங்கன் மரபு கீர்த்தி அலகையெலாங் காக்கின்ற அம்மைபூ தலங்காப்பா னவனே யென்ன. 34 உரை: சோழனின் வரலாறை கேட்ட தில்லை காளி இனி குலோத்துங்கன்(செயதுங்கன்) உலகை காப்பான் என வாழ்த்தினாள்.

ஒடனே கேப்பாங்க மறவர்கள் கலிங்க போரில் உண்டா: அதுவும் இருக்கு.

தொடை அறுந்த வீரர் செயல் 438 இருதொடையற் றிருக்கு மறவர்கள் எதிர்பொருகைக் களிற்றின் வலிகெட ஒருதொடையைச் சுழற்றி யெறிவர்கள் ஒருதொடையிட் டுவைப்ப ரெறியவே. பானையை அடுப்பில் ஏற்றல் 518 கொற்றவாண் மறவ ரோச்சக் குடரொடு தலையுங் காலும் அற்றுவீ ழானைப் பானை அடுப்பினி லேற்று மம்மா. 47 உரை: மறவர்கள் இரு கால்,தொடை அறுந்தும் போரிட்டனர் சோழனுக்காக. போரில் வாள் மறவரால் கொள்ளபட்ட யானைகளை பானைகளில் ஏற்றுங்கள் என பேய்கள்...ஒலம்.

மறவன் என்பது பன்பு பெயர் தானே......அப்படியா...பாண்டியர் கல்வெட்டுகளில் "மறத்தி வயல்" என்ற மறவனின் பெண்பாலும் வந்துள்ளது. இனி மறவன் என்பது இனப்பெயரே ஒழிய பன்புபெயர் கிடையாது புதுக்கோட்டை குளத்தூர் வட்ட பாண்டியர் கல்வெட்டு: "ஸ்வஸ்திஸ்ரீ குலசேகர தேவர்க்கு யாண்டு.......... மறத்தி வயக்காலுடனு ம்......சத்ருகாலன் வகையும்...... விக்கிரமசோழன் என்ற "செயதுங்கன்": குலோத்துங்கனுக்கு பிறகு இரண்டாம் குலோத்துங்கன் அதன் பின் வந்த விக்கிரமசோழ்னை ஒட்டகூத்தர் செயதுங்கன் என அழைக்கபடுகிறார். விக்கிரமசோழனுலாவில், மனுநீதி சோழனையே மறவன் என்கிறார் ஒட்டக்கூத்தர், தீட்டுங் கிழியிற் பகற்கண் டிரவெல்லாம் காட்டுங் கனவு தரக்கண்டு -நாட்டங்கொண் 167 சிந்தனை யாவிற்கு முற்றத் திருத்தேரில் மைந்தனை யூர்ந்த மறவோனும் - பைந்தடத் 4 உரை கன்றை இழந்து அழுத பசுவிற்காக தன் மகனை திருத்தேரில் ஏற்றி கொன்ற மறவன் என மனுநீதி சோழனை புகழ்கிறார் ஒட்டகூத்தர்.

இதன் பின் விக்கிரமசோழனை சயதுங்கன் என பாடிய ஒட்டகூத்தர். டியாதொன்றுங் காணா திருப்பாள் பொருகளிற்றுத் தாதொன்றுந் தொங்கற் சயதுங்கன் - வீதி 168 உரை: போர் யானை மீதி ஆத்தி மாலை அனிந்த விக்கிரம சோழன்.(சயதுங்கன்).

தாமக் கவிகை நிழற்றச் சயதுங்கன் நாமக் கடாக்களிற்று நண்ணுதலும் - தேமொழியும் 323 உரை: யானை மீதி வந்த விகிகிரம சோழனை கண்டதும் கெட்டேன்.

543 தாளிரண்டா னிலவேந்தர் தலைதாங்குஞ் சயதுங்கன் தோளிரண்டால் வாணனைமுன் துணித்ததோ ளாயிரமே. 7 உரை: தன் இரு கால்களினால் நிலவேந்தர் முடிகளை காக்கும் சோழன் ஒரு காலத்தில் அசுரனை வீழ்த்தினான் அவன் வழி வந்த விக்கிரம சோழன் 100 ஆயிரம் ஆண்டுகள் வாழ்க.

குலோத்துங்கன்,விக்கிரமசோழனுக்கு பிறகு "செயதுங்க" என்ற விருதுபெயர் பலருக்கும் பல இடங்களுக்கும் உள்ள்து,


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரின் பெயர், செயதுங்க நல்லூர், செயதுங்க பாண்டியமண்டலம், செயதுங்க பல்லவராயர் என குலோத்துங்க பெயர் பலருக்கும் அடைமொழியாக இருந்துள்ளது.

முதலாம் சுந்தரபாண்டியன் காலத்திலே வாழ்ந்த சேதுபதி


16 ஆம் நூற்றாண்டுக்கு முன்னே சேதுபதி மன்னர்கள் கிடையாது என்ற வாதங்கள் புதுக்கோட்டை கல்வெட்டுகளில் 

தவிடுபொடியானது. முதலாம் சுந்தர பாண்டியன் காலத்திலே சேதுபதி மன்னர்களின் முன்னோர் ஆன் ஜயதுங்கராயன்

கல்வெட்டு கிடைத்துள்ளது.

காலம் :12-ஆம் நூற்றாண்டு

மன்னன் : ஜயதுங்கராயன்,பாண்டியன்

இடம்:குளத்தூர் குடுமியான்மலை கோவில்


செய்தி:

ஸ்வஸ்தி ஸ்ரீ அருளிசெயல் உடையநாயனான ஜயதுங்கரயனுக்கு

விழுமியான புவனமுழுதுடைய பல்லவராயன் கோனாட்டில் விலைகொண்ட

...........காங்கேயராயன் எழுத்து.



பாண்டியனுக்கு கீழ் சுயாட்சி புரிந்துள்ளார். சேதுபதிக்கு கீழ் காங்கேயர்,வழுத்தூர்

பல்லவராயன் 16-ஆம் நூற்றாண்டுக்கு பின் அறந்தாங்கி தொண்டைமான்

என அனைவரும் இருந்துள்ளனர்.


இதே ஜயதுங்கராயன் கீழ்கொடுமாளூரான வடதலை செம்பி நாடு உடையான்,இளையான்குடி உடையான் என பல பெயரில் வந்தவரை பற்றி இன்னும் விபரங்கள் வரும்

சேதுபதி கல்வெட்டுகளிலும் செப்பேட்டிலும் வரும் செய்தி: சேதுபதியின் 200,250 செப்பேட்டில் வரும் செய்தி......... "செயதுங்கராயன் வங்கிசாதிபன் துகவூர் கூற்றத்தில் குலோத்துங்க சோழ நல்லூர் கீழ்பால் இருக்கும் விரையாத கண்டனில் இருக்கும் இரன்யகர்ப்பயாஜி ரகுநாத சேதுபதி"






செயதுங்கராயன் வங்கிசாதிபன் துகவூர் கூற்றத்தில் குலோத்துங்க சோழ
நல்லூர் கீழ்பால் இருக்கும் விரையாத கண்டனில் இருக்கும்
உடையான் சேதுபதி காத்த தேவர்கள்"

செயதுங்கராயன் வங்கிசாதிபன் துகவூர் கூற்றத்தில் குலோத்துங்க சோழ நல்லூர் கீழ்பால் இருக்கும் விரையாத கண்டனில் இருக்கும் தளவாய் சேதுபதி காத்த தேவர் அவர்கள்" என பல செப்பேட்டில் வரும் செயதுங்கராயன் யார் என்பது ஊர்ஜிதமாகும் நாயக்கர் காலத்துக்கு பின்னும் வந்த இந்த செப்பேட்டில் குலோத்துங்க சோழநல்லூர் என்ற விரையாத கண்டன் இன்றைய இளையங்குடி - இராமநாதபுரம் சாலையில் குலோத்துங்க சோழ நல்லூர் மற்றும் விரையாத கண்டனும் உள்ளது.
இத்தனைக்கும் அறந்தாங்கி தொண்டைமான், வைத்தூர் பல்லவராயன், காங்கேயன் முதலியா தலைவர்கள் சேதுபதிக்கு சேவகர்களாக இருந்துள்ளனர்.

நாயக்கர் காலத்திலே குலோத்துங்கன் பெயர் ஏன் தாங்கி வந்தது என்பது
புரியாமல் நெடுநாள் இருந்தது இன்றே புரிந்தது.

சேதுபதிக்கு அகளங்கன்,செம்பிவளநாடன்,இரவிகுலசேகரன்,பரராஜகேசரி,
வைகைவளநாடன்,தேவைநகராதிபன்,மனுநீதிமன்னன் என சோழனின்
பல பெயர்கள் வந்தாலும் இந்த செயதுங்கராயன் என்பவர் யார்
என இப்போதே தெரிந்தது.
மேலும் கீழசெம்பி நாடு வடதலை செம்பி நாடு எழுர் செம்பி நாடு ராமன்னாதபுரத்திலே தான் உண்டு அதனாலே சேது காவலன் என்பர் இதை ஆண்ட ஸ்ரீ ராமனும் செம்பி நாட்டான் என்றும் இம்மறவர் செம்பி நாட்டு மறவர் என அழைக்க பாடலாயினர்.

இது நாயக்கர் காலத்திலே சோழனை குறிப்பிட்ட எந்த ஒரு ஆதாரங்களையும்
எங்கேயும் பார்க்க முடியாது.

சேதுபதியின் மூதாதயனாக குறிப்பிட்ட செயதுங்கராயன் என்ற பெயர்
குலோத்துங்க சோழனையும் விக்கிரம சோழனையும் குறிக்கும் செயதுங்கன்
என்பது நிருபனமாகிறது.
குலோத்துங்கணை தமிழன் அல்ல என சிலர் கூறுவது நகைப்பிற்குரியது.
புதுக்கோட்டை சாசனத்தில் வரும் ஜெயதுங்கராயன் என்னும் பெயர் சடைக்கன் சேதுபதியின் முன்னோன் என்பதில் அய்யமில்லை.
சேதுபதிகளுக்கு உரிய கொடிகள்:

அனுமக் கொடி,கருடக்கொடி,புலிக்கொடி,மகரக்கொடி,யாளிக்கொடி,அன்னக்கொடி,சிங்கக் கொடி,செங்காவிக்கொடி,. என பல கொடிகளை விருதுகளாக கொண்டவர். இதைக் காட்டிலும் திருவிதாங்கூர் மன்னர் இராமேஸ்வரம் வருகையில் திருவிதாங்கூர் மன்னரே வணங்கும் "திருவுடைய மன்னரை கண்டால் திருமாலை கண்டோம்" என திருமாலாக கருதும் புகழும் பெருமைக்கும் உரியவர் சேதுபதி.