Monday, March 30, 2015

மறவர் குல பாண்டியன் மானக்கவசன்

(மதுரை ஆண்ட அஞ்சுக்கோட்டை நாடாள்வான் )


திருவாடானை பாண்டியன் அஞ்சுகோட்டை நாட்டு அம்பலம்

பாண்டியர்
-----------------
பாண்டியர் வழிதோன்றலான சின்னஞ்சாத்தேவர்(வடகரை சொக்கம்பட்டி ஜமீன்)
மறவர் பாடிகாவல் குலசேகர பாண்டியன் காலத்தில்
MARAVARS ARE KSHATHRIYAS OF STOCK OF PANDYA,CHOLA,KERALA
Narasha Nayaka Killed Manabhusha Marava the ruler of Madurai
மறவர் குல பாண்டியன் மானக்கவசன்
திருவாடானை பாண்டியர்கள்
கவுரியன்(பாண்டியன்)


கி.பி.12 ஆம் நூற்றாண்டின் அஞ்சுகோட்டை நாடாழ்வார் கல்வெட்டு :

இடம் –இராமனாதபுரம் மாவட்டம்,திருவாடனை வட்டம்,ஆனந்தூர் அருகில் உள்ள அருள்மிகு திருவாளுவ ஈசுவரன் கோயில் நுழைவாயில் நிலையின் மேல் இக்கல்வெட்டு காணப்படுகின்றது. 


செய்தி – 12 ஆம் நூற்றாண்டில் பாண்டிய அரியணை தொடர்பாக இலங்கை மன்ன்னுக்கும் சோழ அரசன் இரண்டாம் இராசாதிராசனுக்கும் மூண்ட பெரும்போரில் பங்கேற்ற குறுநிலத் தலைவர்களுள் குறிப்பிடப்பட்ட அஞ்சுகோட்டை நாடாழ்வார்களில் ஒருவரின் மனைவி இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார்.இக்கல்வெட்டு சிதைந்துள்ளது.

1 . சுவஸ்திஸ்ரீ திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீவீரபா[ண்டிய]தேவற்குயாண்டு......திருக்கானப்பேர்க்கூற்றத்து 
2 . சாத்தனூர் வாளுவ ஈச்வரமுடைய நாயனார்க்கு திருப்படி மாற்றுள்ளி 
3 . ட்ட நிமந்தங்களூக்குக் காவன் கங்கை கொண்டானான அஞ்சுகோட்டை நாடாழ்வார் தேவி 
4 . ...வாளுவநம்பனான மங்கையர்கரசியார் பழையனூர் நாடாழ்வார்களான அரையர்கள் பக்கல் காரா 
நன்றி-ஆவணம்-1993,ப.26

பழையனூர் நாடாழ்வார்:
மேலே சொன்ன திருக்கானப்பேர் கூற்றம் என்பது காளையார் கோவில்  அமைந்த சிவகங்கை மாவட்டம் தான். இதில் பழையனூர் என்பது திருப்புவனம் அருகே உள்ள ஒரு  ஊர். இது பழையனூர் என்பது பழைய பாண்டியனான பழையன் மாறன் என்னும் ஆதி மறவனுடைய ஊர். இன்னும் பழையன் மாறன் என்பவரின் வம்சம் இன்னும் பழையனூரில் வாழ்கின்றனர். அவர்கள் மறவர். வருட திருவிழாவில் கொடைக்கானலில் வாழும் பழியர்கள் மற்றும் வலையர்களால் இன்னும் பழையனூர் மாறன் மறவர் குலத்தினருக்கும் முதல் மரியாதை தருகின்றனர்.
பழையனூர் ஏழு அம்பலக்காரர்கள் முதல் மரியாதை வாங்கு கின்றனர். இவர்கள் அனைவரும் செம்பி நாட்டு மறவர்கள். இன்னும் அந்த ஊரில் வாழ்கின்றனர். இவர்களே அந்த கல்வெட்டில் குறிப்பிட்ட பழையனூர் நாடாழ்வார்களான அரையர்கள். இவர்களை இன்றும் கானலாம். வருட சிவராத்திரியில் அந்த பத்து நாட்டம்பலம் வாங்கும் முதல் மரியாதையை கானலாம்.

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் முதல் மரியாதை பெறும் மறவர்
நாட்டு அம்பலக்காரர்:
நரசநாயக்கனின் மதுரை படையெடுப்பை  பற்றி அச்சுதராயரின் அப்யுக்தத்தில்

"மதுரா மகேசம்  மறவாய தத்வம்" என மதுரை ஆண்ட மானக்கவசன் என்னும் அஞ்சுக்கோட்டை நாடாள்வான் என்னும்  மானக்கவசனை நரசநாயக்கன் துருக்கரின்  உதவியில் வீழ்த்தினான். 
நரச நாயக்கன் மானபூசன் என்னும் மானக்கவசனையும் பஞ்சபாண்டியரையும் வீழ்த்தினான் என குறிப்புகள் உள்ளது.

இதன் பிறகும் மானபூசன் பல சாசங்கள் வெளியிட்டன் என வரலாறு கூறுகின்றது.
சோழரின் கல்வெட்டில்:
சோழரின் கல்வெட்டிலே அஞ்சுக்கோட்டை நாடாள்வானும் கற்குடி மாறாயனும் மறவர் குலத்தை சார்ந்தவர்கள் என  கல்வெட்டில் குறித்துள்ளனர்.

"மேலும் முன்பு நமக்கு செய்த நன்மையை பாராது நம்மோடு சோர்வு பட்டு இருந்த எழகத்தாரிடமும் மறவ சாமாந்தரான இராச இராச கற்குடி மாராயன் அஞ்சுக்கோட்டை நாடாள்வானையும் வெள்ளாற்றுக்கு வடக்கே போகபன்னி" 





என குலசேகரன் கல்வெட்டு  கூறுகின்றது          S.I.I.I.Vol.3,p.212(Tamil nadu Ramanathapuram Inscriptions)
I— SOURCES OF VIIAYANAGAR HISTORY.
[Price, 4 rtipes 8 annas.\
SOURCES OF VIJAYANAGAR HISTORY
SELECTED AND EDITED EOK THE
UNIVERSITY
BY
S. KRISHNASWAMI AYYANGAR, m.a.,
Professor of Indian History and Archceology and Fellow of the
University of Madras.
PUBLISHED BY THE UNIVERSITY OF MADRAS.
1919. 
https://archive.org/details/sourcesofvijayan00krisrich
அச்சுதராய அப்யுக்தம் சொல்லும் நரச நாயக்கர் மானபூசனன் என்னும் மறவனாகிய பாண்டியனை வீழ்த்தி மதுரையை கைப்பற்றிய செய்தி.

மானபூசனன் மானக்கவசன் இவை யாவும் தென்காசிப்பாண்டியரின் பெயர்கள் மற்றும் கொற்க்கை வேந்தரான பாண்டியர்கள்.

மானபூசனப் பாண்டியன் = மானத்தை அனியாக அனிந்த மறக்குல பாண்டியன்

தின்னை கயவர்களின் கூற்றும் பொய்யாகிப்போனது.
பாண்டியன் மாணபூசனனை வாணாதிராயர் என்னும் பொ ய்யை உறைக்கும் தின்னையின் செயல்களும் பொய்யாய் போனது.
மதுரையை ஆண்ட மானபூசனன் என்னும் மறவனே அன்றி வாணாதிராயர் அல்ல. இந்த பொய்யர்களுக்கு விஜயநகர வரலாறு அச்சுதராய அப்யுக்தம் "மதுரா மகேசம் மறவாய தத்வம்" மறவனையே பாண்டியன் என்கின்றது.
Thinnai
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=80603319&format=html&edition_id=20060331
சான்றோர் சமூகமும் கோவில் நுழைவுப் போராட்டமும
எஸ். டி. நெல்லை நெடுமாறன், அ. கணேசன் 
கி.பி. 14ஆம் நூற்றாண்டிலிருந்து பாண்டிய அரச வம்சத்தவரும் அவர்களின் உடன் கூட்டத்தாரும் திருநெல்வேலிப் பகுதியை, குறிப்பாக தென்காசி, கரிவலம் வந்த நல்லூர், கயத்தாறு ஆகிய ஊர்களை மையமாக வைத்தே தமது ஆட்சியைத் தொடர்ந்தனர். 15, 16ஆம் நூற்றாண்டுகளில் மறக்குல அகம்படிய சமூகத்தவரான மாவலி வாணாதிராயர்களின் தலைநகரமாக மதுரை மாறிப் போயிற்று. இதற்கான ஆதாரம் திண்டிமகவி என்பவரால் இயற்றப்பட்ட 'அச்சுதராய அப்யுதம் ' என்ற சமஸ்கிருத நூலில் உள்ளது (மறவாய தத்வாம் மதுரான்ஸ ஷாகே). 


இது உன்மையில் எப்படி இருந்தது என்றால்,
Achyuta-Raya-abhyudayam begins with his coronation, when
that son was anointed in the Yauva-Rajya (heir apparentcy) at the
same time. This authority may be followed as being the nearest
to Narasa, among the works that describe his early career. After
the affair against the Sultan of Bidar, he is said to have carried on
the campaign against the Telugu country. This was very likely
in the company of Saluva Narasimha against the Gajapati of
Kalinga and the Bahmani Sultan in the north. Then he is said to
have gone to the south against the Chola country. It may be that
in this part of the campaign as well he accompanied his master,
but there are specific achievements ascribed to him in this
campaign which are not mentioned in the various accounts relating
to Saluva Narasimha. He is said to have marched against
Madura, defeated the Chola, perhaps killed a Pandya, who is
called Manabhusha in one, and simply Marava in anotherHe is
then said to have marched northwards to Seringapatam where he
defeated the Heuna, governor or general, at the place, and took
possession of the island, having constructed a bridge, when the
river was in floods, to cross it. He is then said to have marched
westwards from there through a few places which are not identi-
fiable, to Gokarna on the West Coast. His having gone to
Ramesvaram might have been in the company of Saluva Nara-
simha or by himself alone. According to the order of campaigns
set forth in this account he must have been on the banks of the
Godavari in 1475 with his master. It may be then that he marched
southwards in the company of his master. The circumstances
necessitating a campaign against Madura must then have arisen,
and he must have been deputed on that commission.

அச்சுதராய அப்யுகதம்
கூறும் தென்காசி பாண்டியன் மானபூசனன் என்னும் மறவனை பற்றி
"மதுரா மகேசம் மறவாய தத்வம்"

ACHYUTARAYABHYUDAYAM lOQ

"மானபூசனன்" என்னும் ஐடிலவர்மன் பராக்கிரம பாண்டியனையே இந்த நரசநாயக்கன் வென்றான். "மானபூசன்னை" துரத்திய பிறகு நரசநாயக்கன் மதுரையை உறங்காவில்லிதான் திருமாலிஞ்சோலை வாணாதிராயருக்கு அளித்தான் என சரித்திரம் கூறுகின்றது. இதன் பிறகே மதுரை வாணாதிராயர் வசமானது.(பாண்டிய  நாட்டில் வாணாதிராயர்: தொல்லியல் துறை இயக்குனர் வெ.வேதாச்சலம்.)


எனவே மானபூசன்னன் என்னும் மறவனை வென்றே மதுரையை கைப்பற்றினான் நரசநாயக்கன். எனவே மதுரையை ஆண்டது வாணாதிராயர் அல்ல.

ஆனால் கல்தோன்றி மண்தோன்றாக்காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடி என்னும் முதுமொழிக்கு ஏற்ப பல அரசுகள் மறவரில் தோன்றின. இருக்கு வேளிர் பல கல்வெட்டு மறவர் என வந்துள்ளது. சேர அரசர் பழுவேட்டரையர், மலையமான் , தொண்டைமான்,விழுப்பேரரையர் இவர்களுடன் வாணர்களும் மறக்குடியினரே. இவர்கள் மறவரில் ஒரு அங்கமே.

Of these Narasimha
was famous for his heroic deeds even from his youth. He
captured the fort of Manava (Manuva ?) Durga from its Muham-
madan ruler and gave it back to him. He laid a bridge across the
Kaveri and captured the town of Seringapatam. He then marched
against Madura and, defeating and killing its Marava ruler in a
battle, captured the place. He then defeated in battle a chief called
Konetiraja who opposed him with his elephant hordes. He made
the city of Vidyaoura his capital. He had three queens who were
called Tippamba, Nagamamba and Obamamba. Of these by his
wife Tippamba he got a son called Vlra-Narasimha, by Naga-
mamba Krishna Raya and by Obamamba, Achyuta Raya.
ACHYUTARAYABHYUDAYAM lOQ
But the Parijatapaharanam dedicated to Krishnaraya says that Narasa killed
the Chola. We cannot say which of the versions is correct.

t The ruler of Madura is according to this account said to have submitted to
Narasa without fighting and to have made him valuable presents. But the copperplates
of his successors and the Achyutarayabhyudayam give a different version. According to
the Achyutarayabhyudayam he captured Madura after killing in battle its Marava ruler.
Again inscriptions say that he captured it from a king called Manabhusha. This Mana-
bhusha has been identified with Arikesari Parakrama Pandya surnamed also as Mana-
bharana and Manakavacha of the Tenkasi Pandyas. The Achyutarayabhyudayam again
says that Narasa defeated a chief called Konetiraja who opposed him with his elephant
hordes. We do not know who this chief was. Konetiraja is perhaps a corruption of the
title Konerinmaikondan which is one of the titles of Perumal Parakrama Pandyadeva
alias Kulasekhara. (Travancore Archaeological Series I, p. 104.) But he succeeded to
power only in SS. 1464 or AD. 1542-3. Therefore the term Konetiraya of the Achyuta-
rayabhyudayam cannot refer to him. There were others that have had the same title
and the present reference might be to one of them. No. 259 of 191 1, in Kumbhakonam,
of AD. 1490-I, refers to a Konetiraja of Kanch I
இது ராபர்ட் ஸ்வெல்ஸ் மற்றும் மக்கென்சி பிரபுவால் எடுக்கப்பட்ட திருநெல்வேலி பால்வன்ன நாதஸ்வாமி கோவிலில் உள்ள கல்வெட்டு வழக்கமாக மாறவர்மன் என்றால் மாறபெருமாள் என கல்வெட்டை எளிதாக கூறிவிடுவார்கள் ஆனால் "பெருமாள்" என்னும் பெயர் முன்னாடியே வந்துவிட்டது.
கல்வெட்டு வாசகம்:
க.என்:
268/1908 வருடம்:1574 மன்னன்:கோனேரி இன்மை கொண்டான் பராக்கிறம பாண்டியன்

செய்தி:  "திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மைகொண்ட பெருமாள் சீவல மறவர்  குனராமனான பாண்டிய குலசேகர தீட்சிதர்" திருக்காலுடைய தம்பிரான் தீட்சிதருக்கு நிலங்களை அளித்தார் என வாசகம் கூறுகின்றது.


இடம்:செந்தலை தூன் கல்வெட்டு
தெற்கு தூன் முகம்:
ஆண்டு : 8-ஆம் நூற்றாண்டு
மன்னன்: பெரும்பிடுகு முத்தரையன்

செய்தி:
மறப்படை மீனவன் வல்லரன்
பல்லவன் சேனைகண்று புறப்படுமாறு
....பெருங்களிறுக்......

விளக்கம்:
மறப்படையுடைய பாண்டியனை எதிர்க்க வல்லமை கொண்ட பல்லவன் தன்
சேனைகளுடன் தன் யானை மீது அமர்ந்து செல்கிறான்.

மறப்படையுடையவனுக்கு தலைவன் யாராக இருப்பான் மறவனாகவே இருப்பான்.
இருந்தாலும் சில ஆதாரங்களை முன் வைப்போம். எனவே மறப்படைக்கு தலைவனான பாண்டியனும் மறவனே ஆவான்.

மறப்படை என்பதும் மறவர் படையே இதற்க்கும் ஆதாரம் கூறுகிறோம்.

பாண்டியன் செந்தமிழன் கல்வெட்டு இதோ

 பாண்டியன் செந்தமிழ் தேர் சுந்தர பாண்டியருக்கு



Since the campaign of Kumara Kampana, Madura seems to 
have been at least nominally under the empire. The two famous 
brothers Lakkanna and Madanna were respectively governors of 
Madura and the Chola country under Dgva Raya II. The former 



10 SOURCES OF VIJAYANAGAR HISTORY 

had for his sphere of office ' the Lordship of the Southern Ocean * 
along with the governorship of Madura when he was promoted 
from the middle division, Deva Raya's brother-in-law Saluva 
Tippa taking his place there. What happened in the Pandya 
country after Lakkanna left Madura to go to headquarters is not 
quite clear. There are inscriptions of a few chieftains whose 
titles were Vanadi Rayar and their inscriptions range from A.D. 
1453 to 1476 or thereabouts. In all likelihood the province of 
Madura was organized by Lakkanna, and these Bana chieftains 
whose original homes should have been in the North Afcot district 
were put in charge of various localities as sub-governors under 
him. They perhaps attempted to make themselves indepen- 
dent when the troubles in the empire assumed great dimensions 
under Virupaksha. It may be something like this that called for 
the active intervention of the imperial general Narasa Nayaka. 
There is another alternative possible ; it may be that the Pandyas, 
who had practically retired into the Tinnevelly district by now, 
attempted to regain their former position in the Madura district. 
This would account for the defeat of the Pandya king Manabhusha 
as some of the inscriptions state. We have a Manabharana among 
the Pandyans whose descendants were associated with Tenkasi, 
a city founded by one of them. What provision he made for carry- 
ing on the administration of Madura after he left, we have no 
means of knowing. But obviously there was no trouble in that 
frontier till we come to late in the reign of Krishnadeva Raya. 
மதுரையை வாணாதிராயனுக்கு முன்னே ஆண்ட அஞ்சுக்கோட்டை மற்றும் கொற்க்கை பாண்டியனான மானக்கவசனும் மானபூசனும் மறவனே என தெரிகின்றது.


மாறவர்மன் என்றாலும் மறவர் பெருமான் என்று தான் அர்த்தம். மறவரை தவிர பாண்டியநாட்டு பூர்வீக குடி யாருமில்லை.


Maravars are the pandiyars in Dutch Records whose dutch army face the the tenkasi pandian as the maravar king in Dutch Record



"மறப்போர் பாண்டியர் அறத்திற் காக்கும் கொற்கையம் முத்து"(அகம்:27)
"மறம்கெழு தானை அரசருள்ளும்
அறம் கடப் பிடித்த செங்கோலுடன் அமர்
மறம் சாய்ந்து எழுந்த வலன் உயர் திணிதோள் பலர்
புகழ் திருவின் பசும்பூட் பாண்டியன்"(அகம்:338)
"திருவீழ் மார்பின் தென்னவன் மறவன்"(அகம்:13:5)
"திருவீழ் நுன்பூன் பாண்டியன் மறவன்"(புறம்:179)"
"வன்கண்ணன் வாள்மாறன் மால்யானை தன்னுடன் வந்து என் கண் புகுந்தான் இரா" என்பது மன்னன் பாண்டியனை பற்றி காதலுற்ற மகளிர் பாடுவதாக "முத்தொள்ளாயிரம்" என்னும் சங்க கால நூலில் இடம்பெற்ற பாடல் வரி அது. மன்னன் பாண்டியனின் பட்டப்பெயர்கள்: *மாறன் *வழுதி *தென்னவன் *பாண்டியன்... என்பதாகும். மேலே பாடலில் "வன்கண்ணன்" என மன்னன் பாண்டியன் குறிக்கப்படுகிறான். சங்க கால நூல்களை ஆயும்பொழுது மறவன்தான் வன்கண்ணன் என புலப்படுகிறது. ஆக மன்னன் பாண்டியன் மறவன் என்பது மறைக்கவோ திரிக்கவோ முடியாத உண்மை. 'வன்கண்ணன் வாள்மாறன்' என்பதற்கு 'கொடுமையாளன் வாளேந்திய பாண்டியன்' என்பது அர்த்தம். "வலிமுன்பின், வல்லென்ற யாக்கைப், புலிநோக்கின்- சுற்றமை வில்லர், சுரிவளர் பித்தையர், அற்றம் பார்த்து அல்கும் - கடுங்கண் மறவர்" என பாலைக்கலி சொல்லும் கலித்தொகைப் பாடல் வரி அது. இக்கடுங்கண் மறவர் புறநானூற்றுப் பாடலில் "..கவிகண் நோக்கிற், செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்" (புறநானூறு, பாடல் எண்.3) என புலவர் இரும்பிடர்த் தலையாரால் மன்னன் பாண்டியனை பாடுங்கால் மறவர் குறிக்கப்படுகிறார். "உடற்கவசம் வேண்டும் என்று எண்ணாதவன்; வேலும் வாளும் ஏந்தி போர்முனையில் நிற்பவன் மறவன்" என்பதை 'பதிற்றுப்பத்து' என்ற சங்க நூலின் ஆறாம் பத்து பாடல் எண். 52-இல் புலவர் காக்கைப் பாடினியார் பாடிய வரிகள்: "மெய்புதை அரணம் எண்ணாது, எக்கு சுமந்து, முன்சமத்து எழுதரும் வன்கண் ஆடவர்". புறநானூற்றுப் பாடல் எண். 377 இல் புலவர் உலோச்சனார் வில்போர் புகழ் மறவரை "கதழிசை வன்கணினர்" என குறிப்பிடுகிறார். ஆக மறவர்  கொடுமையாளர் ¤ கொடிய பார்வை விலைவிப்பவர் என்பதாக *கொடுங்கண் மறவர் (கலித்தொகை) *வன்கண் ஆடவர் (புறநானூறு) *வன்கணினர் (புறநானூறு) *வன்கண்ணன் (முத்தொள்ளாயிரம்) என குறிக்கப்படுகிறார் மன்னன் பாண்டியன் மறவனே என்பதை சங்க நூல் முத்தொள்ளாயிரம் பாடல் "வன்கண்ணன் வாள்மாறன்" என்று மன்னன் பாண்டியன் (மாறன்) பற்றி பாடப்பட்டதின் மூலம் அறியலாம். வன்கண்ணன் மறவன் ஆவான். சங்க கால நூல் முத்தொள்ளாயிரத்தில் மன்னன் பாண்டியனை அடைமொழியிட்டு பாடியிருப்பதை ஆழ்ந்து நோக்கும்பொழுது மன்னன் மறவனே என்பது உறுதிப்படத் தெரிகின்றது. அவ்வடைமொழிப் பெயர்கள்: *மற வெம்போர் மாறன் *மறம் கனல் வேல்மாறன் *கூர் ஆர்வேல்மாறன் *கதிர்வேல் மாறன் *வேல் மாறன் *மன்பொரு வேல்மாறன் *குருதிவேல் மாறன் *புலா அல் நெடுநல்வேல் மாறன் *வன்கண்ணன் வாள்மாறன் *செங்கண் மாமாறன் *மாமாறன் *வயமாறன்... இம்மொழியில் வரும் "மாறன்" என்னும் மன்னன் பாண்டியனின் பட்டப்பெயர், "மறவன்" என்பதின் திரிபாகவே இருக்கவேண்டும் எனவே கருத முடிகின்றது! மறவர் மறவன் அதாவது மறவரின் தலைவன் எனப் பொருள்படும்படி மாமறவன் என அழைத்திருக்கலாம் என்பதையும் மாமாறன் என்னும் சொல் தெளிவு செய்கின்றது. மாமறவன் என்பதே காலப்போக்கில் மாமாறன் எனவும் மாறன் எனவும் சொல்லப்பட்டிருக்க வேண்டும். 

தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொழுத்திய மறவர் பற்றிய செய்தி பாண்டியனுக்கும் பாண்டிய மறவர்களான மறமானிக்கருக்கும் "பெருவஞ்சி" பாடிய புலவர் ஒருவருக்கு "மறச்சக்கரவர்த்தி பிள்ளை" என பட்டம் தந்துள்ளான். "சோனாடு கொண்ட சுந்தரபாண்டிய தேவன்" இங்கு மறச்சக்கரவர்த்தி என்பது சுந்தரபாண்டிய தேவனையே குறிக்கும்.
பாண்டியர் படை மறவர் படையும் ஏழகப்படையும் தான்.

மூவேந்தர்களுக்கும் மறம் பாடிய புலவர்கள். மறம்பாடுதல் யாருக்கு பாடுவார்கள் மறவேந்தருக்கு தானே.

 தமிழ்நாட்டில் முக்குலத்தோரை தவிர தேவர்மார்கள் என யாரையும் அழைக்கபடுவதில்லை எட்கர் தர்ஸ்டன் மறவர்களே தேவர்கள் என குறிப்பிடுகின்றார் இன்றைக்கும் அதுவே தொடர்கிறது இன்று வேறு சில ஈனர்கள் தங்களுக்கு பட்டம் இருக்கிறது என்று கூறுகிறார்கள் ஆனால் அந்த இனத்தவர்களை அந்த ஊர்களில் தேவமார்கள் என அழைக்கிறார்களா? என்பதே நம் கேள்வி.?


நன்றி:
ஐவர் ராசாக்கள் கதை
இராமநாதபுரம் தொல்லியல் துறை
ஆவணம்-தமிழ்நாடு தொல்லியல் துறை

Sunday, March 22, 2015

தொண்டைமான் சத்தியபுத்திரர்


(சூரைக்குடி சத்தியபுத்திரர் திரையன் வம்சம் குறித்த ஆய்வு)

தொண்டைமான்  என்ற சொல்லே அரசர்  அதிகாரம் செய்பவர் என பொருள் ஆகும் . "தோட்டி முதல் தொண்டைமான் வரை" என்ற பழமொழி வருவதை காணலாம். தமிழகத்தில் ஆர் விகுதி கூறும் மரபு தொண்டைமான் மரபேயாகும் "தொண்டைமானார்" என அம்மரபுக்கு தமிழ் மக்கள் கொடுத்த மரியாதைக்கும்
இதுவே சாண்று.

தொண்டைமான் பூர்வீகம்:

திருப்பதி பகுதியில் "தொண்டைமான் கோட்டை" என்ற இடம் உண்டு அவர்கள் பூர்வீகம் என்று கருதப்படுகின்றது. "வினைநவில் யானை விறற்போர் தொண்டைர்" என யானையை அட்க்குவதில் ஆற்றல் பெற்ற பழங்குடியினர் ஆதலில் இவர்கள் பல பேரரசர்கள் பலரிடம் பணிபுரிந்து இத்தொண்டை மான்கள் இறுதியில் புதுக்கோட்டை பகுதியில் அறந்தாங்கி,அன்பில்போன்ற இடங்களிலும் குடியேறி வாழ்ந்தவர்கள்.
பெரும்பாணாற்று பாட்டுடை தலைவனாக  தொண்டைமான் இளந்திரையன் விளங்குகிறான்.




"திரைதரு மரபின் உரவோன்"(பெரும்:31) என்னும் தொடருக்கு உரை எழுதும் நச்சினார்கினியர் தொண்டைமான் மரபின் தோற்ற செய்தியை விளக்குகிறார்.

நாகபட்டினத்து செம்பியன் ஆன சோழன் பிலாத்துவாரத்தால் நாகநாடு சென்று நாகர்குலத்தை சார்ந்த பீலிவளை என்பவர் நாகர் மகள் ஆவாள். அவன் பெற்ற மைந்தனே திரையால் கடத்தப்பட்டுக் கரை சேர்ந்த முதல் தொண்டைமான். அவன் தொண்டைக் கொடியால் உந்தப்பட்டு வந்தமையின் திரையன் என்றும் வழங்கப்பெற்றான். அவன் மரபினரே தம் தாயகம் தாங்கிப்  பெரும்பாணாற்றுப் படையில் புகழ்பெற்ற தொண்டைமான் இளந்திரையன் ஆவன்' என விளக்கியுள்ளார்.

கரிகாலன் நாகர் மகளை மணந்து பெற்ற இளந்திரையன் தொண்டை மண்டலம் ஆண்டான் என்பது ஆராய்ச்சிக்கு உரியன. மேலும், தொண்டையர், இன்ன இடத்திலுருந்து தாம் வந்ததாக ஒரு பட்டயத்திலும் கூறிற்றில்லர் என்பது கவனிக்கத்தக்கது.

தொண்டை மண்டலம்  குறும்பர்களின்  பூர்வீகமான பூமியாகும். அதனை கரிகால சோழன் வென்றான் எனவும். கரிகாலன் தொண்டை மண்டலத்தில் உள்ள ஒளியரையும் அருவாளரையும் வென்று அடக்கினான் எனவும் பட்டினப்பாலை கூறுகின்றது.தொண்டை மண்டலம் சோழர் ஆட்சிக்கு வந்தது. முதல் சோழர் மரபினர் ஒருவர் தொண்டை மண்டலத்தை ஆண்ட செய்தி சங்கநூல்களில் காணக்கிடைக்கின்றது. 'திரையன்' அருவாவடதலை நாட்டை ஆண்டபோது, 'இளந்திரையன்' அருவா நாட்டை ஆண்டனன் என்பதும் அறியக்கிடக்கிறது. தொண்டைமான் இளந்திரையன் என்பவன் காஞ்சியை ஆண்ட தமிழ் அரசனாகப் பெரும்பாணாற்றுப்படையில் சிறப்பிக்கப்படுகிறான்.

பல  யூகக்கதைகளை முடிவுக்கு கொண்டு வரும்முன் இன்னும் குழம்பி பிதற்றுகின்ற ஒரு இன ஆய்வுக்கும் முடிவு கட்டுவோம்.

நாகர் என்போர் யார்?

இதற்க்கு பல சார்பாளர்களும் சார்பற்றவர்களும் தங்களுக்கு ஏற்ற பதிலை காலம் காலமாக உமிழ்ந்து சென்றுவிட்டனர். இனியாவது உணர்வோம். நாகர் யாரென.

மனித இனங்கள் மூன்று தான் 1)நீக்ராய்டுகள்(Negroid) 2)மங்கோலாய்டுகள்(Mongoloid)3)காகேசியன்கள்(Caucasian). ஆதாவது முதல் மனித இனமான நீக்ராய்டுகள் அதிலிருந்து இடம்பெயர்ந்த சீன,மங்கோலிய முக அமைப்பை கொண்ட மங்கோலாய்டு அவர்களிலிருந்து பிரிந்த காகேசியன் அல்லது வெள்ளை இனத்தவர். இந்த மூன்று மட்டும் தான் உலகில் உள்ள அனைத்து இனங்களும் இதில் அடக்கம்.

இதில் முதல் மனிதன் அல்லது நீக்ராய்டுகள்(நாகர்) என்பவர்களே நாகர்கள் அல்லது நகுஷா அல்ல நெகோஸ்டா என்பன. இந்தியாவின் அனைத்து குடிகளும் இவர்கள் தான். ஆப்ரிக்காவில் இருந்து வந்தவர்கள் அல்ல இந்தியாவும் அப்ரிக்காவும் ஒட்டி இருந்த பகுதி கடற்கோளாள் பிரிந்தது. அதனாலே ஆப்ரிக்காவில் உள்ள சிங்கம் பாலைவனம் காடு எல்லாம் இந்தியாவில் கானலாம். இந்தியாவில் பல இனக்கலப்பு நிகழ்ந்தாழும் பலருக்கும் இருப்பது ஆப்ரிக்க மண்டை ஒடுகள் தான். எனவே இந்தியாவில் உள்ள அனைத்து அரசுகளும் கலாச்சாரங்களும் நாகரிங்களும் நாகரிலிருந்து தான் தோன்றியவை. எல்லா ஜாதியும் உட்பட செய்யும் தொழிலாலே தங்களை பிரித்து கொள்கின்றனர் நாகரே இந்தியாவை விட்டு இந்தோனேசியா,கம்போடியா,ஜப்பான் தெனமெரிக்கா முதலிய இடத்தில் சென்றனர் பின்பு மத்திய ஆசியாவிலிருந்து கிளம்பி ஐரோப்பாவிற்கு சென்று தட்பவெட்பம் காரணமாக காகேசியன்களாக மாறினர்.

பீலிவளை மட்டும் நாகர் அல்ல சோழனும் சூரியன் குலத்தையும் புலி முத்திரையும் பயன்படுத்தும் நாகன் தான்.

இப்படி சோழன் நாகநாடு சென்றான் என கூறுகின்றது. இது இலங்கையாக இருக்கலாம் அல்லது கம்போடியாவாகவும் இருக்கலாம் ஏனேனில் சோழன் திரையன் என்கின்ற கடலோடும் வம்சத்தவன் ஆதலால் தான் பிற்காலத்தில் கடாரம்,ஸ்ரீ விஜயம் என தெற்காசியாவிலே ஏன் உலகத்திலே பலம் வாய்ந்த கப்பல் படை நடத்தி வெற்றி பெற்றவன் ஆதலால் சோழனை திரையன் என்ற கடலோடி என கூறுவது சாலப்பொருத்தமாகும்.

இப்படி திரையனாகிய சோழனின் மகனே இளந்திரையன்(Junior Lineage) அல்லது இளையன் இளவரையன் கச்சி என்னும் காஞ்சிபுரத்தை நிறுவி மல்லை என்னும் பட்டினத்தை ஸ்தாபித்து அரசாண்டவேன் தொண்டைமான்.

பல்லவரும் தொண்டைமான்களும் ஒரே மரபினரா?:

பல்லவர்கள் பற்றி 5 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னே எந்த கல்வெட்டும் கிடையாது. பல ஆராய்ச்சியாளர்களிடம் பல்லவர் யாரென கேட்டால் இன்னும் புரியாத புதிர் தான். சிலர் பாரசீகர்கள் என்கின்றர்கள். சிலர் கம்போடியர்கள் என்கின்றனர். சிலர் ஆந்திரவின் சாதாவாகனர் என்கின்றனர் எனவும் கன்னடர்கள் என்றும் இல்லை தொண்டை மண்டலத்தை ஆண்ட குறும்பர்கள் எனவும் கூறுகின்றனர். மொத்தத்தில் இவர்கள் தமிழரே அல்ல எனவும் முழுக்க பிராகிருத மொழி பயன்படுத்தியுள்ளனர். சிலைகளின் அமைப்புகளின் நீண்ட தலைகளும் தொப்பிகளும் கானப்படுகின்றனர். இன்னும் இவர்கள் வாணத்தில் இருந்து குதித்தனரா என கூட பலருக்கும் புரியவில்லை.

பல்லவர்கள் பற்றிய சிறு வதந்தி:

இந்தியாவின் மீது படையெடுத்த அலெக்சாண்டரின் முக்கிய நோக்கம் பாரசீக பேரரசன் டாரியசை வீழ்த்துவது தான் கிரேக்கர்களுக்கும்-பாரசீகர்களுக்குமான போராட்டங்கள் காலம் கடந்தது. அலெக்சாண்டருக்கு பின் அவனது தளபதி செலுக்கஸ் நிகோடரை வீழ்த்திய சந்திர குப்தன் மௌரியன் பாரசீகர்களை பாதுகாத்தான் எனவும். இருந்தும் கிரேக்க-பாரசீக சண்டை ஓயவில்லை எனவும். செலுக்கசின் பரம்பரை துரத்த பாரசீகரின் ஒரு பிரிவினர் தெற்கே சென்றனர் எனவும். அவர்களை பின் தொடர்ந்த செலுக்கசின் கிரேக்கர்கள் ஸ்தாபித்தது தான் இன்றை மகாராஸ்டிரத்தில்  உருவான சளுக்க(செலுக்கஸ்) சாம்ராஜ்யம் என்றும் செலுக்கஸின் தாக்குதலில் சென்ற பாரசீகர்கள் உருவாக்கியது தான் பல்லவ(தாரியஸ்) சாம்ராஜ்ஜயம் எனவும் ஒரு கருத்து உண்டு. சளுக்கருக்கும் பல்லவருக்குமான சண்டை பழைய கிரேக்க-பாரசீக போராட்டம் எனவும். சளுக்கர்கள் வைனவர்கள் எனவும் அதனாலே வராகம்(பன்றி=யூனிக்காரன்) கொடி பயன்படுத்துகின்றனர்  எனவும்.
பல்லவர்கள் சைவர்கள் எனவும் அதனாலே நந்தி(பசு=ஆக்சன்) பயன்படுத்தினர்  எனவும்  ஒரு நிலைப்படு   உண்டு. இவர்கள் தங்களை காப்பாற்றிய மௌரிய பேரரசுக்கு கட்டுபட்டு இருந்தனர் எனவும் கூறுகின்றனர்.
இறுதியில் தங்களை துரத்திய சளுக்கர்களின் நகரத்தை  கொளுத்தி "வாதாபி கொண்டான்" என பட்டத்தை பல்லவர் சூடினர் எனவும் நம்புவோர் உண்டு.

பல்லவரும் தொண்டை மானும் வேறு என்றே தோன்றுகின்றது:

பல்லவரை பற்றி சங்க இலக்கியத்தில் எந்த இடத்திலும் குறிப்பிட படாததால் அவர்கள் ஆண்ட பிரதேசமான தொண்டைமண்டலத்தை சங்க காலத்தில் ஆண்ட தொண்டைமான் மரபினர் என சிலர் பொருத்தி பார்க்கின்றனர். ஆனால் பல்லவர் தன்னை பற்றி எந்த இடத்திலும் திரையன் மரபினன் என்றோ அல்லது சோழரின் வழிவந்தவர் என்றோ நாககன்னிகைக்கு பிறந்தவர் என்றோ சூரிய குலத்தில் தோன்றியவர்கள் என்றோ குறிப்பிடவில்லை. பல்லவர் தம்மை சந்திர  குலத்தினர் என கூறுகின்றதாக அதியமான் கல்வெட்டு ஒன்று கூறுகின்றது. பல்லவர் தம்மை "பாரத்துவாச" கோத்திரத்தினர் எனவும் "பிரம்ம சத்திரியர்கள்" என கூறுகின்றனர்.

காஞ்சிபுரமாவட்ட கல்வெட்டுகள் 80% பிராமனர்களை சுட்டுகின்றது இதில் அதிகமாக "பாரத்துவாச" கோத்திர பிராமனர்கள் அதிகமாக வருகின்றனர். மேலும் "பிரம்ம சத்திரியர்கள்" என்பதற்கு ஆயுதம் ஏந்திய பிராமனர்கள் என ஒரு அர்த்தம் உண்டாம்[ரிஷி பரசுராமரை] போல. எனவே இவர்கள் பிராமனரா அல்லது பாரசீக சத்திரய வம்சத்தை சார்ந்தவர்களாக இருக்குமோ என தோன்றுகின்றது. பிற்காலத்தில் மதுரை பகுதியில் கண்ட கல்வெட்டு ஒன்று "பல்லவர் வம்ச வந்த காடுவெட்டிகள்" என காடுவெட்டிகள் என பல்லவர் தம்மை  தம்மை குறித்துள்ள்னர்.

ஆனால் 12-ஆம் நூற்றாண்டுக்கு பின் தோன்றிய அறந்தாங்கி தொண்டைமான்கள் தம்மை "பாரத்துவாச கோத்திரத்தினர்" என எந்த இடத்திலும் கூறியது கிடையாது. அறந்தாங்கி தொண்டைமான்கள் தம்மை "கச்சியாண்டவன்" "மல்லைபுரிநாயகன்" என கூறுகின்றனரே பல்லவர் குலத்தை சார்ந்தவன் என கூறியது கிடையாது. மேலும் தம்மை "சூரிய குலத்தில் தோன்றியவன்,புறாவிற்க்கு சதை கொடுத்தவன்,நாககன்னிகை வங்கிசேர்ப்பவன், புலிக்கொடியை மேருவில் பொரித்தவன்,கலிங்கம் வென்ற கருனாகரன் என சோழரோடே" தம்மை இனைத்து  கூறிக்கொள்கின்றனர். மேலும் தொண்டைமான்கள் தம்மை காடுவெட்டிகள் என எந்த பட்டயத்தில் கூறியது கிடையாது.

இதெல்லாம் விட பல்லவரின் உயர்ந்த கீர்த்தியான "வாதாபியை வென்ற நரசிங்க போத்தரையன்" என்ற ஒரு அடைமொழியையும் பயன்படுத்தியது கிடையாது.

"கலிங்கம் வென்ற கருனாகரன்" என்றுதான் கூறுகின்றனர்.

இதற்க்கும் எல்லாம் வேறு ஆதாரமான மெக்கன்சி கையெழுத்து பிரதியென்றில்.


'தொண்டைமான் சக்கரவர்த்திக்கும் விசுவாவசுராசனுக்கும் போர் நடந்தது' என்னும் செவிமரபுச் செய்தி ஒன்று கர்னெல் மக்கென்சி எழுதியுள்ள குறிப்புகளில் காணப்படுகிறது. விசுவாவசுரனே தொண்டை மண்டலத்தை வென்ற முதல் பல்லவனோ என்பது விளங்கவில்லை. எனினும், இச்செய்தி பல்லவரது தொண்டை மண்டலப் படையெடுப்பைக் குறிப்பதென்பதில் ஐயமில்லை.
இப்படி தொண்டமண்டல்த்தை கைப்பற்றிய பல்லவன் தன்னை "தொண்டயர் கோன்  பல்லவன்" என்றும் சோழரின் எழுச்சிக்கு பின் வீழ்ச்சி அடைந்த பல்லவர் பகுதியான வண்டை நகரை ஆண்டதான் "வண்டை வேந்தன் பல்லவராய தொண்டைமான்" எனவும் கூறிக்கொண்டுள்ள்னர்.
எனவே தொண்டையர் கோன் என  பல்லவரும் பல்லவராஜன் என தொண்டைமானும் தம் அடைமொழியாக பயன்படுத்தியுள்ளனர்.
எனவே இருவரும் ஒருவரல்ல பல்லவர் வேறு தொண்டைமான் வேறு எனறே தோன்றுகின்றது.

பின்பு சத்தியபுத்திரர்கள் யார்?

கி.பி.2 ஆன் நூற்றாண்டில் அசோகனின் இரண்டாம் கல்வெட்டு Shabhazgarhi (S), Khalsi (K), Girnar (G), Dhauli (D), Jaugarh (J) ஆகிய ஐந்து இடங்களில் காணப்படுகிறது. அந்தக் கல்வெட்டுகளில் இரண்டாம் வரியில் சோழ, பாண்டிய, சதியபுத்ர, கேதலபுதோ ஆகிய அரசுகளைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இவற்றில் சில கல்வெட்டுகள் சிதைந்து காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டின் ஆங்கில எழுத்துப்பெயர்ப்பு இவ்வாறு அமைகிறது.
Everywhere within Beloved-of-the-Gods, King Piyadasi’s domain, and among the people beyond the borders, the Cholas, the Pandyas, the Satiyaputras, the Keralaputras, as far as Tamraparni and where the Greek King Antiochos rules, and among the kings who are neighbors of Antiochos, …
(Available here : http://www.cs.colostate.edu/~malaiya/ashoka.html)
இவற்றில்Girnar (G) என்ற இடத்தில் உள்ள கல்வெட்டில் இரண்டாம் கல்வெட்டில் இப்பகுதி இடம்பெற்றுள்ளதைப் பிராமி எழுத்துகளில் இங்கு காணலாம். சிவப்பு மையினால் அடிக்கோடிடப்பட்டுள்ள நான்கு சொற்களும் முறையே சேட(chEda), பண்டியா(paNdiyA), ஸதியபுதோ(sathiyaputhO), கேதலபுதோ (kEdhalaputhO) என சில எழுத்துப்பிழைகளுடன் இருப்பதைக் காணலாம்.
இதில் முக்கியமான விஷயம் கேரளபுத்திரன் என்று எங்கும் குறிப்பிடவில்லை. கேதலபுதோ , அதாவது கேதலன் மகன் என்று குறிபிட்டுள்ளது. இது சேரலனின் திரிபே ஆகும்.

இதில் ஸ்திய புதோ என்பது அதியமான் என இன்று நிறுவுகின்றனர். ஆனால் அதியாமானின் ஆட்சி அவ்வளாவு பரந்து இருந்துள்ளதா என கேள்வி குறி? ஆக அதியமானை குறிக்காது.
"ஸ்தியபுதோ அதியமான் நெடுமான் அஞ்சி"
ஸதியபுதோ = அதியபுதோ ஆதாவது ஸ என்பது துனையெழுத்து என்பதும்
சமனம்=அமனம்
சதிய=அதிய என சொல்லாறிய்ச்சியில் ஈடுபடுகின்றனர். இது மாதிரி சொல்லாறாய்ச்சியில் ஈடுபட்டு தான் மள்ளர் என்பது பள்ளர் என வந்து நிற்கின்றது. அப்போது மற்ற வார்தைகள் மலம்=பலம்,மனம்=பனம்,மன்னர்=பன்னர் என மற்ற வார்தைகள் ஏன் மாறாமல் போனது. என்ன சொல்ல.
அதியமானும் மலையமானும் சேரரின் கிளைக்குடியினராயினும் அதியமானும் ஸதியபுதோ என குறிக்க பட்டார். என ஸதியபுதோ என்பது அதியபுதோ அல்ல அதிய சத்தியபுத்திரர் என்னும் வார்த்தையை தான் குறிக்கும்

மூவாயிர பேரரையன் 

சோழர் கால மறவர் நிறுவிய அய்யனார் சிலை கண்டுபிடிப்பு

கோவனூர் கிராமத்தில் சோழர் கால சிலை  கண்டுபிடிப்பு --தினத்தந்தி செய்தி

ஜூன்-29

பொன்னமராவதி அருகே கோவணிக்கடன் அய்யனார் கோவிலில் திருப்பணி செய்த போது அதில் எழுத்துக்கள் இருப்பதாக தெரியவந்தது. இது குறித்து திருப்பணி குழு தெரிவித்த செய்தியை தொடர்ந்து மேலப்பனைய்யூர்  தொல்லியல் ஆய்வாளர் ராஜேந்தித்திறன் கள ஆய்வில் இறக்கின்றார்

அப்போது அய்யனார் சிலையடியில்
"இச் சிலை கோவனூர் மறவன் தர்மன் குரலான மூவாயிர பேரரையன் தன்மம்"

 என பொறிக்கப்பட்டிருந்தது சோழர் கால கலைவடிவில் இது 900 ஆண்டு பழைமையான ஒன்றாக
கருதப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.


நன்றி: தினதந்தி

சத்தியபுத்திரர் = கலியுக மெய்யனான அய்யனார்:


சத்தியபுத்திரர் என அதியமான் மட்டுமில்லை மலையமானும் தொண்டைமானும் அழைக்கபட்டனர். எனவே அசோகர் கல்வெட்டில் கூறியிருப்பது தொண்டைமான் சக்கரவர்த்தியும் மலையமானும் அதியமானும் சேர்த்து தான்.
ஐயனார் வழிபாடு என்பது சாஸ்தா என அழைக்கபட்ட சாத்தன் வழிபாடுதான். சாஸ்தா(சத்தியபுத்திரர் என்ற மெய்யுடை தேவன்). சாத்தன் வழிபாடு சமணர்களோடு தொடர்புடையது. சாத்து என்னும் வணிககுழு பல இடங்களுக்கு செல்லுகையில் அவர்களை பாதுகாக்கும் போர்குடி தலைவனையே சாத்தன் என  அழைக்கின்றது.ஐயனாரைத் தொண்ணூற்றறு வகைப் பாசண்டச் சாத்தன் எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. பைரவரைச் சிவபெருமானின் பிள்ளை எனப் பெரியபுராணம் குறிப்பிடுவது போன்றே சிவபிரான், “சாத்தனை மகனா வைத்தார்” என அப்பர் பெருமான் தமது தேவாரத்தில் குறிப்பிடுகிறார். இத்தகைய ஒப்புமைகள் காணப்பட்டாலும், ஐயனார் அல்லது ஐயப்பன் என்ற பெயர் தகப்பனைக் குறிக்குமே தவிரப் பிள்ளையைக் குறிக்காது. கூற்று வழிபாடு என்பது பைரவ வடிவம், யமன் என்ற தென்புலக் காவல்காரன் வடிவம் ஆகியவற்றோடுதான் நெருக்கமுடையதாகும். யமன் என்பது இறந்து, மீண்டும் பிறக்கும் தன்மையின் உருவகமே. ஆனால், ஐயன் (பித்ரு) என்பதோ சிவபதம் என்றும், சாயுஜ்யம் என்றும் பிற்காலச் சைவ சித்தாந்தத்தில் குறிப்பிடப்படுவது போன்று, மீண்டும் பிறவாத உலகுக்குச் சென்றுவிட்ட தென்புலத் தலைவன் வடிவமாகும். தென்புலத் தெய்வம் என்பது netherworld எனக்குறிப்பிடப்பட்ட நெய்தல் உலகின் தலைவனாகிய வருணனையே குறிக்கும்.

மண மதத்தின் மகாவீரர்(சாஸ்தா) வழிபாடு வனிகர்களும் வனிகர்களை பாதுகாக்கும் போர்குடியினரான மறவர்களை குறித்த வழிபாடு தான். இன்றைய அய்யனார் வழிபாடு என்பது மகாவீரர் வழிபாட்டின் மீட்சியே.



சமண மதத்துக்கு  பிறகு பௌத்தத்தில் சாத்தனாக புத்தரான போதி சத்துவர் குறிக்கபடுகிறார். நாகர் தலையுடன் புத்தரின் சிலை நாகர்களுக்கு அபையம் அளித்த போதி சத்துவர் வழிபாடாக மாறியது.

சபரிமலையில் வன்புலி வாகனனாகக் காட்சியளிக்கும் ஐயன், பெளத்த சமயத்தவரின் தர்மசாஸ்தாவாக உருவெடுக்கும் முன்னர், கூற்றுத் தெய்வத்தின் தன்மைகள் கொண்ட காரியாகவே இருந்திருக்க வேண்டும் என நாம் முடிவு செய்யலாம். காரி(மலையமான்?) என்ற பெயர் சாத்தனுக்கும் உரியதென்றும் தமிழ் நிகண்டுகள் குறிப்பிடுகின்றன.



சமணம்,பௌத்தம் ஆகிய வீழ்ச்சிக்கு பின் சமணர் கோவில்கள் சிவன் கோவிலாகவும் பௌத்த கோவில் விஷ்னுகிரகங்களாக மாறின. நாகர் தலையுடன் இருக்கும் புத்தர் விஷ்னு கடவுளாக மாற்றினர் என்றும்.
இது ஐயனார் கடவுளின் இருதேவியர் புத்தரின் காலத்தில் இரு இயக்கியர்களாகவும் பின்பு வைனவத்தில் ஸ்ரீதேவி பூதேவி வடிவத்தில் உருபெற்றது. இப்படி தான்
ஐயனார் = மகாவீரர்  =  போதி சத்துவர்   = மகாவிஷ்னு 
வாக சிலை மாறிய கதைகளும். பல கோயில்களிலும் இந்த கதை உண்டு.
எனவே பிற்காலத்தில் சத்தியபுத்திரர் என்னும் பெயர் மெய்யனான பெருமாள் என விஷ்னுவின் திருநாமமங்களிலும் மாறிப்போனது காலத்தின் மாற்றம்.
அதியமானின் குனசீலம்,நாமக்கலில் கானப்படும் மெய்ய பெருமாள்(விஷ்னு) மற்றும் திருமெய்யம்,திருப்பதியில் கானப்படுவது சத்தியபுத்திரரே.
சத்தியபுத்திரர் என்ற பெயர் சாத்து வணிகர்களின் காவலன் என்பதே உன்மை.
தொண்டைமான் மன்னனும் சத்தியபுத்திரன் என வணிகர்களின் காவலனாக கச்சியில் சக்கரவர்த்தியாக வீற்று இருந்தான் பின்பு சோழநாடு பெயர்ந்து புதுக்கோட்டை பகுதிக்கு பெயர்ந்த பின்பும் வணிகர்  காவலனாக மாறினான்.
தொண்டைமான் தன்னை விஷ்னு  குலத்தவன் என்றும். இரட்டை சங்கு ஏந்தியவன் எனவும்.மெய்நின்றபெருமாள் என(க.ஆ227,1942) குறிப்பிடுகிறான்.
திருமெய்யம் தொடர்பு:
திருமெய்யம் என்ற பெயரே 'திருமையம்' என்று அழைக்கப்டுகின்றது. திருமய்யம் 'சத்யம்' என காணப்படுவது.'மெய்நின்றபெருமாள்' என்ற அறந்தாங்கி தொண்டைமான் ஒருவன் காணப்ப்டுகின்றான்.'கலியுக மெய்யன் காலிங்கராயர்' என   ஒரு கல்வெட்டு உ ள்ளது.
நகரத்தார்கள்:

நாட்டு கோட்டை செட்டிகள் என்று அழைக்கபடும் நகரத்தார்கள் கல்வெட்டுகளில் 'ஐநூற்றுவர்' என கல்வெட்டுகளில் கானப்படுகின்றனர். இசுலாமியரில் 'அஞ்சுவண்ணத்தார்கள்' என்பவர்களும் 'ஐநூற்றுவர்கள்' தான். இவர்கள் ஆரம்ப காலத்தில் காஞ்சிபுரத்தில் உப்பு வணிகர்களாக இருந்தவர்கள் என்றும் அங்கிருந்து பூம்புகாருக்கு பெயர்ந்து பின்பு பாண்டியன் ஒருவன் வேண்டுகோளுக்கு இனங்க பாண்டிய நாட்டில் குடிபெயர்ந்தனர் எனவும் வரலாறு வருகின்றனர். செட்டி என தமிழ்குடியினர் இவர்களே அன்றி வேறொருவர் இல்லை. ஐநூற்றுவர் சுவடுகள் இந்தியா முழுவதும் உள்ளது. இந்தியா மட்டுமல்ல கிழக்காசியா,இலங்கை என ஐநூற்றுவர் கோலோச்சாத இடமேயில்லை. இலங்கை வரலாற்றில் ஐநூற்றுவர் வணிகர் கணங்களின் வீரர்களை சோழர்,பாண்டியர்களின் போர் படை வீரகளாக இருந்துள்ளனர்.
வணிகர்கள் அரசர்களுக்கு இணையாக இயங்கியுள்ளனர் என்பதற்குச் சான்றாக அவர்கள் தங்களை வீரகொடியார், வீரர், எரிவீரர், முனைவீரர், முனை வீரகொடியார், கொங்கவாளர், இளஞ்சிங்க வீரர், வில்லிகள் என்று அழைத்துக்கொண்டனர்.  இது ஒருபுறமிருக்க - வணிகச் சமூகமும்,நிலவுடைமைச் சமூகமும் ஒரே மாதிரியான அரசியல் போக்குகளைக் கொண்டிருந்தன என்பதற்கு இரு கல்வெட்டுகளை ஆசிரியர் ஒப்பாய்ந்துள்ளார்.

கி.பி.1050-இல் அய் நூற்றுவர் கல்வெட்டில் தங்கள் சமயதர்மம் செங் கோலினை முன்வைத்து - அதாவது, அரசாதிகாரத் தினை முன்வைத்து இயங்கும் என்பதனை வெளிப் படுத்தியுள்ளனர்.  சித்திரமேழிப்பெருமக்களார் 1062 -இல் வெளியிட்ட கல்வெட்டில் தங்கள் சித்திர மேழிதர்மம் செங்கோலினைத் தெய்வமாக வைத்து -அதாவது,அரசின் செங்கோலினை முன்வைத்து இயங்கும் என்று வெளிப்படுத்தியுள்ளார்.

சில கல்வெட்டுகளில் இவ்வணிகர்கள் விற்ற பொருள்களைப்பட்டியலிட்டுள்ளனர். அவை: மிளகு, பாக்கு, துணிகள், குதிரை, ஒட்டகம், மருத்துவப்பொருள்கள், மணப்பொருள்கள், சந்தனம், சூடம், எருமைமயிர், பசு, காளை, கன்று, எருமை, பட்டுத்துணி, காண்டாமிருகத்தின் கொம்பு, கஸ்தூரி, இரும்புப் பாளங்கள், நெல், வைக்கோல், தானியங்கள், சங்கு, உலர்கோதுமை, அவரை, கடுகு, புளி, இலவங்கம், மாலை, யானைத்தந்தம் இன்ன பிற.இப்பட்டியலில் சுட்டப்பட்டுள்ள பொருள்களின் ஒருவகை மேற்குக் கடற்கரைக்கும்,பிறிதொரு வகைப் பொருள்கள் கிழக்குக் கடற்கரைக்கும் வந்து இறங்கியிருக்க வேண்டும்.

வணிகர்கள் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு வகையில் தங்களை அழைத்துக் கொண்டு உள்ளனர். தமிழகத்தில்தம்மை நாட்டுச் செட்டிகள்,தளச்செட்டிகள்,செட்டி வீரப்புத்திரர்கள்,மலைமண்டலத்து பலநகரங்கள்,முனைவீரகொடியார், அறுபத்துநான்குமுனை என்றும், இலங்கையில் தம்மை தவலத்துச் செட்டி, செட்டிபுத்திரன், கவரை, காத்திரிபன், ஓட்டன், உள்பசும்பைக்காரன், அங்ககாரன், ஆவணகாரன் ,பாவாடை வீரன் என்றும் அழைத்துக்கொண்டனர். கர்நாடகப் பகுதியில் இவர்கள் தம்மை எம்துநாட பதினறுவர்,ஐநூற்றுவ ஸ்வாமிகளு, செட்டிகுத்தாரு, கவுண்ட சாமி, பிரான், அம்மகாரன், பாரிகான், கவரே, நகர, காத்திரிகாரு, வீரவணிகரு, வீரர், அக்காலே, கழனை, பணிசெய்மக்கள் என்றும் அழைத்துக் கொள்கின்றனர்.
சத்தியபுத்திரர் என்னும் பெயரை நாட்டுகோட்டை செட்டியார்கள் "மெய்யன்" "மெய்யப்பன்" ஏவிஎம் தலைவர் மெய்யப்பசெட்டியார் என்ற பெயர் கூட இதன் தாக்கம் தான்.

சாத்தன் என்னும் ஐநூற்றுவரின் காவல் வீரர்களும் தலைவர்களும் யார்?
சாத்து வணிகர்கள் என ஐநூற்றுவரின் தளங்களாக புதுக்கோட்டை பகுதியில் உள்ள வீராச்சிலை,திருமெய்யம்,சிவகங்கை,காரைக்குடி,தேவகோட்டை,காணாடுகாத்தான் போன்ற இடத்தில் வணிக தளங்கள் அமைத்தனர். இவர்களின் காவலர்களாக பாண்டியர்கள்,சோழர்களும் படைப்பற்றை நிறுவி வீரர்களை நியமித்திருந்தனர்.
படைப்பற்று குடியிருப்புகள் படையினருக்கு வழங்கப்பட்ட நிலக்கொடையாகும்.பெருவேந்தரின் மோதற்களமாகப் பயன்படுத்தப்பட்ட இப்பகுதியில் மறவர் மக்களுக்கு மட்டும் வேந்தர்கள் வழங்கிய படைப்பற்று கல்வெட்டுகள் விரையாச்சிலை,குருந்தன்பிறை க.என்க.என்(354,727,743),மலையாலங்குடி க.என்(402,403),பெருங்குடி க.என்(364,712).இளஞ்சார்,புலிவலம் க.என்(648,792).படைப்பற்றின் மக்களாக மறவர்களே அரையர்களாகவும்,ஊரவர்களாகவும் செயல்பட்டனர் க.என்(393).இது இரண்டாம் இராஜாதிராஜன் காலத்திய கல்வெட்டு செய்தி (1926:257) உறுதிப்படுத்திகிறது.
புதுக்கோட்டை கல்வெட்டுகளில் கானப்படும் கல்வெட்டுகளில் படைப்பற்றுகளை பாண்டிய நாட்டு எல்லைக்கு உட்பட்ட படைப்பற்று என்றும் சோழ நாட்டு படைப்பற்று என்றும் இருவகை படுத்தலாம்.

பாண்டிய எல்லை படைப்பற்று:
1.குருந்தன் பிறை கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
2.விரையாச்சிலை கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
3.கோட்டூர் இலம்பலக்குடி கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
4. தெக்காடூர்(ஐந்தூர் படை பற்று) கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
5.அமாந்தூர் கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
சோழர் எல்லை படைப்பற்று:
1.சிங்கமங்கலம் கவி நாடு சோழராட்சிப்பகுதி
2.சீரனூர் வட சிறுவாயில் நாடு சோழராட்சிப்பகுதி
3.மேலப்புதுவயல் வடகோனாடு சோழராட்சிப்பகுதி
4.கீழப்புதுவயல் வடகோனாடு சோழராட்சிப்பகுதி
பெருமான்= பெரியோர்+மகன்= வர்மா
இந்த பெயர் அரையன் அல்லது ராஜா எனும் போது அது வர்ம ராஜா அல்லது பெருமாள் அரசர் என பொருள் படும். இதற்க்கு நிகரான பட்டம் தான் பேரரையர்.
வணிகர் குழுவுக்கான தலைவன் யார்?
காலம் 13 ஆம்நூற்றாண்டு(கி.பி.1266)
 I.P.S.(346)
மேற்படி தாலுகா விரையாச்சிலை பில்லவனேசர் கோவில் சுவாமி கோவில் தென்புரம் சுவரில்
நம்பி ஐநூற்றுவ பெரியான்
ஸ்வஸ்தி ஸ்ரீ கோச்சடை பன்மரான திரியுவன சக்கரவர்த்தி ஸ்ரீ சுந்தரபாண்டியத்தேவர்......................குடுத்த பரிசாவது..... முன்னால் குலசேகர தேவருக்கு இவ்வூர் மறவன் நம்பியான் ஐநூற்றுவ பெரியான் உள்ளிட்டார் பக்கல் விலை கொண்டு உடையார்............... இவ்வூர் மறவரில் மாலையிட்டான் மக்கள் தற்குரியும்..............................
 I.P.S.(376)
புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் தாலுகா விரையாச்சிலை தேவவயல் தென்னி வயலுக்கு பொதுவான ஆலமரத்து தெற்கு வரப்பிற்கு பகுதியிலுள்ள கல்வெட்டு
ஸ்ரீ குலசேகர தேவர்க்கு ஸ்வஸ்தி ஸ்ரீ கல்வாயில் நாட்டு சுந்தர பாண்டிய புரத்து அரவத்துடைய பிள்ளை திருமாலிஞ்சோலை தாதர் சோதியர் மூவர்க்கு விரையாச்சிலை மறவன் நம்பி ஐநூற்றுவ பேரரையர் உள்ளிட்டார் பக்கல் விலை கொண்ட தேவர் குளமும்...............

எட்டி(செட்டி) பொன்னான சுந்தரபாண்டிய பேரரையன்

மேறபடி கோவிலில் மண்டபத்தில் உள்ள நடுத்தூனில் உள்ள கல்வெட்டு
இந்த தூன் இவ்வூர் மறவரில் எட்டி பொன்னான சுந்தரபாண்டிய பேரரையன் தன்மம்

எனவே ஐநூற்றுவர் குழுவுக்கு தலைமை தாங்கியவர்கள் மறவர்களை. இவர்களே இலங்கையில் கொங்கவாளர்,கத்திரியர்,முனைவீரர்,எறிவீரர் முதலிய படைகளாக பணியாற்றினர்.

இந்த சத்தியபுத்திரர்(சத்தியமூர்த்தி) என்னும் அவையன் சாத்தன் எனும் தொண்டைமான் யார்?

சூரைக்குடி அரையன் அவையன் சாத்தன்(அதளையூர் நாடாள்வான்):
சூரைக்குடியை ஆண்ட இனத்தார் யார்?
திருமெய்யம் என்னும் கோவிலை கட்டி அதில் மெய்நின்றபெருமாள் என்னும் சத்தியமூர்த்தி விஷ்னுகோயிலை கட்டியவனான சத்தியபுத்திரனான சாத்தன் என்பவனை பற்றிய கல்வெட்டு:
ஆதளையூர் நாடாள்வான் பொன்னனான விஜாயலயத்தேவர் கி.பி(1219)
I.P.S.(505) குளத்தூர் தாலுகா அரியூர் ஈஸ்வரன் கோவில் வாசற்படிக்கு தென்புறம்
ஸ்வஸ்தி ஸ்ரீ சோனாடு கொண்ட சுந்தரபாண்டியத் தேவர்க்கு யாண்டு.......திருவகந்தீஸ்வரமுடைய நாயனர் திருக்கோவில் மகாதேவரையும் நாச்சியாரையும் எழுந்தருவித்தால் மாங்குடி மறவனான அவையன் சாத்தன் அதளையூர் நாட்டுப் பேரரையன்............................

சூரைக்குடி அரையன் விஜயாலயத்தேவன் விஜயாலயன் என்னும் பெயர் சோழர்களை நினைவுபடுத்துவதால் சோழர் எனவே கருதுவோம். விஜயத்தேவன் என்பதும் விஜயராயர் என்பது வணிக குழுவை தலைமை தாங்குபவன் என பொருள் படும். மேலும் அவையன் சாத்தன் நாட்டான் என்பது சாத்து வணிகர் தலைவன் என்பதேயாகும். மேலும் விஜாயலத்தேவனை பற்றி மறைக்கப்பட்ட கல்வெட்டும் அவன் வம்சமும் இது தான்.
I.P.S.(452) திருமய்யம்,நெய்வாசல் அகஸ்தீஸ்வரமுடையார் கோவில் வீரபாண்டியத் தேவரின் கல்வெட்டு:
"தேனாற்று போக்கு ஆதளையூர் நாட்டு சூரைக்குடி அரையன் பெரியனான "

நன்றி:
அறந்தாங்கி தொண்டைமான் செப்பேடுகள்: புலவர் செ.இராசு
புதுக்கோட்டை வரலாறு: உயர்.திரு.ஐயா.வீ.மாணிக்கம் அவர்கள்
இதில் சூரைக்குடி அரையனான பெரியனான தொண்டைமானாருக்கு பாண்டியன் காவல் பொருப்புகளும் சில வரிகளையும் நிமித்தகளையும் வழங்குகிறார்.


அறந்தாங்கி தொண்டைமானும்,அன்பில் தொண்டைமானும் சூரைக்குடி தொண்டைமானும் மறவர்களே.

தொண்டைமானை புகழும் பெரும்பாணாற்றுபடை
"மறவர் மறவ தொண்டையோர் மருக".
திரையனாகிய சோழரின் இளவலான தொண்டை வேந்தன் மறவனே.

திரையன் மரபினரை கோரும் தகுதிகள் என்ன?


திரையன் என்றால் கடலால் கடலில் வந்த கடலோடிகள் என அர்த்தம்.
சோழரின் முதல் நகரம் உருவாண இடம் பூம்புகார். இது கடலில் அமைந்த காவிரி பூம்பட்டினம்.

கரிகால் சோழரின் புகழ்பாடுவது "பட்டிணப்பாலை". மருதனிலமோ வேறு எந்த பகுதியும் கிடையாது.


பட்டினம் என்றால் கடலை  ஒட்டி அமைந்த நகரம். பாலை நிலம் என்றால் என்ன? குறிஞ்சியும் முல்லையும்  திரிந்த நிலம்  பாலை என்பர். அது தவறு. கடலால் தீண்டபட்டு விவசாயத்துக்கு தகுதியற்ற நிலமே பாலை.
பாலை என்பது கடல் அருகே இருக்கும் வறண்ட நிலம் தான். அதனால் தான் நாகபட்டினம்,பூம்புகார்,வஞ்சி(கொச்சி),மணலூர்,கொற்கை,இரமநாதபுரம் எல்லம் கடற்கரையை ஒட்டிய வறண்ட நிலம் தான்.

முதல் பாண்டியன் அமைத்த தலைநகர் "மணலூர்" என இராமநாதபுரத்தில் தான் உள்ளது. வறண்ட பாலை நிலத்தில் இருந்து தோன்றியது தான் அரசுகள். சோழன் திரையனே ஆகு. அதன் பின்னே தான் மேற்கே தஞ்சை பகுதிக்கு வந்து வளங்களை பெருக்கி "வளவன்" ஆனான்.  வேறு எங்கும் இல்லை அதற்க்கு மேலே சந்தேகம் இருந்தால் புறநானூறு பாடல்,
கரிகாலன் தம்பி மாவளத்தான். மறவர் பெருமான் என்றால் மறவரில் பெரியோர் மகன் என அர்த்தம்.
43. பிறப்பும் சிறப்பும்!
பாடியவர்: தாமப்பல் கண்ணனார்,
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்.
திணை : வாகை. துறை: அரசவாகை.
குறிப்பு : புலவரும் அரச குமரனும் வட்டுப் பொருவுழிக் கைகரப்ப, வெகுண்டு, வட்டுக் கொண்டு எறிந்தானைச் , 'சோழன் மகன்
அல்லை' என, நாணியுருந்தானை அவர் பாடியது.
"தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி யஞ்சிச் சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக!
நேரார்க் கடந்த முரண்மிகு திருவின்
தேர்வண் கிள்ளி தம்பி! வார் கோல்,
கொடுமர மறவர் பெரும! கடுமான்
கைவண் தோன்றல்! ஐயம் உடையேன்:"
பொருள்:
புறாவுக்கு சதை ஈன்ற வள்ளல்  குலத்தோன். நல்ல தேர் செலுத்தும் கிள்ளி தம்பி. மறவர் குலத்தின் பெரியோர் மகன். வெற்றி உடையோன். புலிக் குல தோன்றல்.

சூரைக்குடி தொண்டைமானே அந்த மறவர்களின் படைபற்றுக்கு தலைவன்
திருமய்யம் விராச்சிலை என்பது தொண்டைமானின் வீரர்களின் சாலையே.
விராச்சிலையிலிருப்பது தொண்டைமானின் வீரகள் தான் இவர்கள் சூடும் ஒவ்வொர் பட்டத்திலும் அறந்தாங்கி தொண்டைமான் பெயர் இருக்கும்.
அறந்தாங்கி தொண்டைமான்களின் பெயர்கள்:
1.அழகிய மணவாள பெருமாள் தொண்டைமானார்
2.திருநெல்வேலி பெருமாள் தொண்டைமானார்.
3.இன்பவணப்பெருமாள் தொண்டைமானார்.
4. அழகிய பெருமாள் தொண்டைமானார்.
5. நயினான் பொன்னம்பலநாத தொண்டைமானார்

இதே பெயரில் சூரைக்குடி அவையன் சாத்தன் தொண்டைமான்

அழகிய நயினார்

விஷ்ணுகோயில் வளாகத்திலிருந்து முப்பது கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பதினான்கு கல்வெட்டுகள் புதுக்கோட்டை மாநிலக் கல்வெட்டுகள் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. அதில் இடம்பெறாத ஒரு கல்வெட்டு தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 22ன் இரண்டாம் பிரிவில் பதிவாகியுள்ளது. நான்கு கல்வெட்டுகள் திருமதி நா. வள்ளியால் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பதினொரு கல்வெட்டுகள் கள ஆய்வின்போது இக்கட்டுரையாசிரியர்களால் கண்டறியப்பட்டவை. சுப்புராயுலு 36 திருமையம் கல்வெட்டுகளை கண்டுபிடித்துள்ளார்.

இதே கோயில் வளாகத்திலிருந்து புதிதாகக் கண்டறியப்பட்ட வீரவிருப்பண்ண உடையாரின் கி. பி. 1399ம் ஆண்டுக் கல்வெட்டு28 சூரைக்குடித் திருமேனி அழகியாரான நாயினார் விசையாலயதேவர், இவ்வளாகத்தில் பெருமாளைப் புதிதாக எழுந்தருளச் செய்தமை பற்றிக் குறிப்பிடுவதால், அக்கால கட்டத்தில் நின்றருளியதேவரின் திருமுன் படிக்கட்டின் புறச்சுவராக இருந்த பெருந்தேவிக் கல்வெட்டு அகற்றப்பட்டிருக்கலாம் என்று கருத இடமுண்டு.

அதே சுவரிலிருந்து கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டு, சொக்கநாராயண நல்லூர் எனும் பெயரிலமைந்த ஊரைச் சொக்க நாராயணரான விசையாலயதேவர் மெய்யத்து இறைவனுக்குத் தேவதானத் திருவிடையாட்டமாகத் தந்ததாகக் கூறுகிறது. பெருமளவிற்குச் சிதைந்தும் தொடர்பற்றும் காணப்படும் இக்கல்வெட்டின் காலத்தைப் பதினைந்தாம் நூற்றாண்டாகக் கொள்ளலாம்.30

மண்டபத்தின் மேற்குச் சுவரில் வீரவிருப்பண்ண உடையார் ஆட்சிக்காலத்தே விபவ ஆண்டில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு,34 கானநாட்டு நாட்டார், கேரளசிங்க வளநாட்டு அதலையூர் நாட்டுத் தேனாற்றுப்போக்குச் சூரைக்குடியைச் சேர்ந்த திருமேனியழகியாரான விசையாலைய தேவரிடம் ஐந்தாயிரம் பணம் பெற்றுக்கொண்டு நிலம் விற்ற தகவலைத் தருகிறது. 'மாக்கல விலைப் பிரமாணம்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆவணத்தின் கையெழுத்தாளர்களின் ஊர்களாகக் கோட்டையூர், மேலூர், கண்ணனூர், தெற்காட்டூர் ஆகிய ஊர்களின் பெயர்கள் கிடைக்கின்றன. கானநாட்டுப் படைப்பற்றுகளுள் ஒன்றாகச் செங்குன்றநாடு விளங்கியதையும் நாட்டு மரியாதி எனும் வரியினத்தையும் இவ்ஆவணம் வழி அறியமுடிகிறது.


அறந்தாங்கி தொண்டைமான் பட்டயத்தில் 
"மழவரை வென்றோன் "
"சேமனை வென்ற செயதுங்கன்"

என செயதுங்க வம்சத்துவன் என கூறியுள்ளான்.

சேதுபதிகள் எல்லா பட்டயத்திலும் தன்னை ஜெயதுங்க ராய வந்கிசாதிபதி என குறிப்பிட்டுள்ளார்.

செய்துங்க வம்சம் என உள்ளவன் எவன் வேண்டுமானாலும் அறந்தாங்கி தொண்டைமானை கோரலாம்.

பொன் நயினார் பராக்கிரம பாண்டியன்:



அதே சுவரில் கி. பி. 1452ல் வெட்டப்பட்டுள்ள அரசர் பெயரற்ற கல்வெட்டினால்35 கேரளசிங்க வளநாட்டு அதலையூர் நாட்டுச் சூரைக்குடிச் செண்பகப் பொன்னாயினாரான பராக்கிரம பாண்டிய விசையாலையதேவர், மெய்யத்து மலையாளரான விஷ்ணு பெருமானுக்குச் செண்பகப் பொன்னாயன் சந்தி அமைக்க வாய்ப்பாகப் புலிவலத்திருந்த தம் வயலான செண்பகப் பொன்னாயநல்லூரில், ஏற்கனவே தரப்பட்டிருந்த தேவதானத் திருவிடையாட்ட இறையிலி போக எஞ்சியிருந்த நிலப்பகுதியைக் கோயிலுக்குக் கொடையாகத் தந்த தகவலை அறியமுடிகிறது.



கல்வெட்டு சகாப்தம் 1313க்கு (கி. பி. 1391) உரியது.39 பிரமாதி ஆண்டுக் கணக்குப்படி மெய்யம் கல்வெட்டு கி. பி. 1399ல் பொறிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தலாம். இக்கல்வெட்டு, சூரைக்குடித் திருமேனி அழகியாரான நாயினார் விசையாலயதேவரின் அறச்செயல்களைப் படம்பிடிக்கிறது. மெய்யம் சத்தியமூர்த்திப் பெருமாள் திருக்கோயிலில் கண் நிறைந்த பெருமாளைப் புதிதாக எழுந்தருளுவித்து மகிழ்ந்த விசையாலயதேவர், கோயில் சுற்றில் சர்வமான்ய அகரமாக, 'ஓ ங்காரநாதத்து வேதமங்கலம்' என்னும் அகரத்தை அமைத்தார்.



கல்வெட்டு சகாப்தம் 1313க்கு (கி. பி. 1391) உரியது.39 பிரமாதி ஆண்டுக் கணக்குப்படி மெய்யம் கல்வெட்டு கி. பி. 1399ல் பொறிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தலாம். இக்கல்வெட்டு, சூரைக்குடித் திருமேனி அழகியாரான நாயினார் விசையாலயதேவரின் அறச்செயல்களைப் படம்பிடிக்கிறது. மெய்யம் சத்தியமூர்த்திப் பெருமாள் திருக்கோயிலில் கண் நிறைந்த பெருமாளைப் புதிதாக எழுந்தருளுவித்து மகிழ்ந்த விசையாலயதேவர், கோயில் சுற்றில் சர்வமான்ய அகரமாக, 'ஓ ங்காரநாதத்து வேதமங்கலம்' என்னும் அகரத்தை அமைத்தார்.
இவர்களுடன் ஊர்க் கணக்குகளாக, விரையாச்சிலை ஊர்க் கணக்கு வைரக்கொழுந்து, செங்குன்றூர் நாட்டுக்குச் சமைந்த ஊர்க் கணக்குக் கானநாட்டுக் கணக்கு அழகியநாயன், மற்றோர் ஊர்க் கணக்கு அடைக்கலங்காத்தான் ஆகிய மூவர் கையெழுத்திட்டுள்ளனர். திருவரங்கம் கோயிலைச் சுற்றிப் பல அகரங்கள் உருவானமையைக் கல்வெட்டுகளால் அறிகிறோம். அது போல் மெய்யத்து வளாகத்தில் கி. பி. 1399ல் ஓங்காரநாதத்து வேத மங்கலம் என்ற அகரம் சூரைக்குடித் திருமேனி அழகியாரான நாயினார் விசையாலயதேவரால் பன்னிருவரைக் கொண்டு உருவாக்கப்பட்டமை வரலாற்றிற்குப் புதிய வரவு.

புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டுகளைக் கண்ணுற்றபோது, வீரவிருப்பண்ண உடையாரின் கல்வெட்டுகள் இந்தப் பகுதியில் பரவலாகக் காணப்படுவதை அறியமுடிந்தது. திருவிளாங்குடிக் கல்வெட்டில் அரியண உடையாரின் மகனாகக் குறிக்கப்படும் வீரவிருப்பண்ணரின் கி. பி. 1417ம் ஆண்டுக் கல்வெட்டு, மேலப்பனையூர் ஞானபுரீசுவரர் கோயிலில் உள்ளது.40 சூரைக்குடி விசையாலயதேவர் வீரவிருப்பண்ணரின் ஆட்சிக்குட்பட்ட சிற்றரசர் போலும்! மெய்யத்திலேயே அவரது வழித்தோன்றலான சொக்கநாராயண விசையாலயரின் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன.41 அவற்றுள் ஒன்று புதிதாகக் கண்டறியப்பட்டதாகும்

சுந்தரபாண்டியன் மண்டபத் தூணொன்றிலிருந்து படியெடுக்கப்பட்ட புதிய கல்வெட்டு, பாடல் கல்வெட்டாக அமைந்துள்ளது. இறைவனை, 'மெய்யம் அமர்ந்த பெருமாள்' என்றும் 'மணஞ்சொல் செண்பக மெய்யர்' என்றும் கொண்டாடும் இக்கல்வெட்டின் முழுப் பொருளை அறியக்கூடவில்லை. மண்டபத்தின் கிழக்குப் படிக்கட்டுகளுக்கான தென்புறப் பிடிச்சுவரில் உள்ள கல்வெட்டு, 'இ ந்தப் படியும் சுருளும் வீரபாண்டியதரையர் தன்மம்' என்கிறது. எழுத்தமைதி கொண்டு இக்கல்வெட்டுகளைப் பதினான்காம் நூற்றாண்டினவாகக் கொள்ளலாம்.42

திருநெலவேலி பெருமாள் சொக்க நாராயணன்:

கோயில் வளாகத்தின் கிழக்குச் சுற்றிலுள்ள சேனைமுதலியார் திருமுன்னில் இடம்பெற்றுள்ள கல்வெட்டுகளுள் ஒன்று, கேரளசிங்க வளநாட்டுச் சூரைக்குடிச் சொக்க நாராயணரான விசையாலயதேவரும் திருநெல்வேலிப் பெருமாளான சுந்தரபாண்டிய விசையாலயதேவரும் கானநாட்டுத் தேவதான பிரமதேயமான திருமெய்யத்தில் எழுந்தருளியிருக்கும் மெய்யத்து மலையாளரின் திருவிழாவிற்கு முதலாகப் 'பச்சை வினியோகம்' எனும் வரியினமாய் வந்த பணம் முந்நூற்று முப்பத்துமூன்றையும் வழங்கிய தகவலைத் தருகிறது.43

அதே சுவரில் கி. பி. 1461ல் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டொன்றால்,44 அதலையூர் நாட்டு நியமப்பற்றுச் சூரைக்குடி அவையாண்டாரான சுந்தரபாண்டிய விசையாலய தேவர், மெய்யத்து மலையாளருக்கு, தம்முடைய பெயரால், தம்முடைய பிறந்த நாளில், 'சுந்தரபாண்டிய விசையாலய தேவன் சந்தி' என ஒன்றமைத்து, அது போழ்து தளிகை படைக்கவும் திருமாலை, திருப்பரிவட்டம் முதலாயின சாத்தவும் வாய்ப்பாக, கானநாட்டுப் படைப்பற்றான இளஞ்சார்ப் புரவில், சுந்தரபாண்டிய நல்லூரைத் திருவிடையாட்டமாக்கிக் கோயிலுக்கு சர்வமானியமாக அளித்த செய்தியைப் பெறமுடிகிறது.

திருமுன்னின் முகமண்டப உட்சுவரில் காணப்படும் பராக்கிரம பாண்டியரின் ஏழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு அவருடைய மெய்க்கீர்த்தியைத் தருவதுடன், இக்கோயிலில் அவர் பெயரால் உருவாக்கப்பட்ட பராக்கிரம பாண்டியன் சந்தியை வெளிச்சப்படுத்துகிறது. 'திருமெய்ய மலையாளன்' என்றழைக்கப்பட்ட நின்றருளிய தேவருக்கான சிறப்புப் பூசையாக அமைக்கப்பட்ட இச்சந்தியை நிறைவேற்ற வாய்ப்பாக மஞ்சக்குடிப் பற்றிலிருந்த சாத்தனூர், கோயிலுக்குக் கொடையாகத் தரப்பட்டது

சூரைக்குடி தொண்டைமான் விஜயாலயத்தேவரின் கீர்த்திகள்:
"இராவுத்த மிண்டான் பதினெட்டு வன்னியரை புறமுதுகு கண்டான்"
"வன்னியநார் அடைக்கலம் காத்த நாடு மதித்தி விஜயாலயத்தேவன்"
"பாண்டியன் படி அமுக்க பரி ஏறும் பெருமாள்"
"காங்கேயனை வெட்டி மாவலிக்கு விருந்து படைத்தான்"
"வாளால் வழிதிறந்தான் மெய்யத்து பள்ளி கொண்ட பெருமாள் விசயாலயன்"
சூரைக்குடி விசயாலயன் "வைத்தூர் பல்லவராயர்கள்" என்னும் அரசர்களை அழித்துள்ளார்.
சூரைக்குடி அரசு விசயாலத்தேவர்:

நேம நாட்டு கொண்டையன் கோட்டை மறவர் பேரவை
=========================================================
https://www.youtube.com/watch?v=g5nqnU6-Iqk&feature=share


கொண்டையன் கோட்டை தலைவன் வம்சம் திருநெல்வேலியில் காணும் தலைவனார் வம்சத்தோடு தொடர்புடையவர்கள் வாலும்,வேலும் கொண்டு
வீரம் மனதில் கொண்டு
சிரம் நிமிர்ந்து நின்று
எதிர்த்து நிற்கும் எப்படையும் அழித்து நிற்கும் இப்படையும் கொண்ட எம்குடி கேரள சிங்கவள  மது நேம நாட்டு கொண்டையன் கோட்டை தலவான்களே ....
அவ்வுலகமானாலும் இக்கலியுகம் ஆனால் நம் வீரம் மாறாது... நம் சிறப்பு அழிந்து போகாது...
எத்தொழிநுட்பம் வந்தாலும் அதிலும் நம் பெயர் பொறிக்கபட வேண்டும் என்பதற்காக நம் நாட்டிற்காக நான் உருவாக்கி ஒரு சிறு காட்சி தொகுப்பு











அதலையூர் நாட்டு சூரைக்குடி அரசு விஜயாலயத்தேவர்கள் அகஸ்தீஸ்வரர் கோவில் கல்வெட்டில் சூரைக்குடி தொண்டைமானார் என தன்னை குறிப்பிட்டுள்ளான். இவன் ஆண்ட பிரதேசம் அதலையூர் நாடு சூரைக்குடி பின்னாளில் வன்னியன் சூரைக்குடி என பெயர் வந்தது. மேலும் இவரது இனத்தை பற்றிய குறிப்புகளில்:

" மாங்குடி மறவன் அவையன் சாத்தன் அதலையூர் நாட்டு பெரைய்நு(பேரரையன்" என குறித்துள்ளான் அதலையூர் நாடாள்வான்(நாட்டுபேரரயன்).

மேலும் அறந்தாங்கி தொண்டைமான்,அன்பில் அஞ்சுகுடி அரையர்,சூரைக்குடி அரையர் இம்மூவருமே தொண்டைமான் வம்சமே.

சொரி வன்னிய சூரியன்: விஜயாலயன் தன்னை கடம்பன் எட்டி(வியாபாரி) எனவும் சாத்தன் எனவும் குறிப்பிட்டு கொள்கிறான். மேலும் சொரி வன்னிய சூரியன் என பெயர் கொண்டுள்ளான். பதினெட்டு வன்னியரை புறம் கண்டான் எனவும் பட்டம் உள்ளது.

"சொரி வன்னிய சூரியன்" என்ற இதே பட்டம் "சொரி முத்து வன்னியன்" என்ற பட்டம் சேதுபதிகளுக்கும் உள்ளது. 
இதற்க்கு இராகவ அய்யங்கார் "சொரி முத்து வன்னியர்" என்றால் கடலில் தோன்றும் சூரியன் என திரையன் என அர்த்தம்.

இப்போது புதிதாக விஜயாலையனை கோறும் கூட்டத்தினர் வன்னியர் என்ற வார்த்தை வைத்து கோறுகின்றனர். அவர்களுக்கு ஒரே ஒரு ஆதாரம் மட்டும் கேட்கிறோம். "சொரி வன்னியன்" என்ற பெயர் அவர்களிடம் எந்த பட்டயத்திலாவது அல்லது கல்வெட்டுகளில் இருந்தால் நாங்கள் விஜயாலத்தேவரை கோரவே இல்லை. நெடு நாளைக்கு முன்னரே இந்த கருத்தை எதிர்பார்த்தோம் அப்போது வைத்தூர் பல்லவராயரை கோரி விஜயாலத்தேவனின் மீது பழியை போட்டு பல்லவராயரை கோரிய கூட்டம் இன்று சூரைக்குடி அரையனை கோறுவது வினோதம்.


சொரிமுத்து வன்னியர்,18 வன்னியர் கண்டன் என்னும் பெயர் சேதுபதிகள்,விஜயாலயத் தேவர்,அறந்தாங்கி தொண்டைமான் மூவருக்குமே இந்த பட்டம் உள்ளது. அறந்தாங்கி தொண்டைமானும் தங்களை செயதுங்கராயன் என குறிப்பிடுகிறார் ஆக சேதுபதி விஜ்யாலயத் தேவர் தொண்டைமான் மூவரும் மறவரே.
அதற்க்காக விராய்சிலை மறவர்களும்  சூரைக்குடி அரையரும் மதுரை நாயக்கருக்கு அபராதம் செலுத்திய நெல்வாசல் கோவிலில் பொரித்தது.ஹிஜிரா கல்வெட்டு எண் : 771(கிபி 1300 இல் இருந்து 1330 க்குள்)
இடம் : கண்டதேவி படி எடுக்கப்பட்ட ஆண்டு அல்லது பதியப்பட்ட ஆண்டு -1921
மதுரையில் பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சி 1290 களில் துவங்குகிறது.(சுந்தர பாண்டிய தேவர்) சுல்தான்கள் மதுரையை தாக்கி பாமினி ஆட்சியை நிறுவுகிறார்கள்.பாண்டிய மன்னர்கள் தென்காசியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்ய துவங்கிறார்கள். ஆனாலும் காரைக்குடி,திருப்பத்தூர்,தேவகோட்டை பகுதி காரணவர்களில் சிலர் , ஆங்காங்கே சுல்தான்களின் படையை தாக்கியும்,சூறையாடியும் பெரும் சேதம் விளைவிக்கிறார்கள். கோபம் கொண்ட சுல்தான் மறவர் படைகள் வாழ்ந்த கண்டதேவியை ஆண்ட சூரைக்குடி என்னும் விஜயாலயத்தேவரின் வன்னிய சூரைக்குடியை தாக்கி பெரும் சேதம் விளைவிக்கிறார்கள். கத்தி முனையில் இனிமேல் சுல்தான் ஆட்சியை எதிர்த்து தாக்குதல்,சூறையாடல் நடத்த மாட்டோம் என்று கள்ளர், கருமார்,உள்ளிட்டோர் முன்னிலையில் ஒப்பந்தம் கல்வெட்டாக பெறப்படுகிறது.அப்படி ஒப்பந்தத்தை மீறினால் கீழ்காணும் தண்டனையை ஏற்றுக்கொள்கிறோம் என்பது தான் கல்வெட்டு. 1) எங்கள் மீசையை மற்றும் தாடியை மழித்து கொள்கிறோம். 2) எங்கள் மனைவியை ஒப்படைக்கிறோம். 3) புலையர்,பள்ளர் உள்ளிட்ட
கீழ்சாதியினர் எங்களை பெண் ஓவியமாக வரைந்து அவர்களின் குழந்தைகளின் காலில் கட்டி சுத்தட்டும். என கல்வெட்டு முடிகிறது.
இதில் கள்ளர் கருமார் புறத்தார் மற்றும் பொன்னமராவதி ஊராவர்களுக்கும் சுல்த்தானுக்குமான உடன்படிக்கையில் காரணவர்கள் உடன்படிக்கை செய்து கொள்கின்றனர்.
என கல்வெட்டு முடிகின்றது.
“கள்ளர் கருமர் புறத்தார் பட்டர்கள் வித்துவான்கள் பாடகர்கள்
எங்களுக்கு சத்ருக்கலான அறந்தாங்கியார் ”









சிறுகுடி வெள்ளாளரின் செப்பு பட்டயம்  கூறும் தொண்டைமான் கீர்த்திகள்:
"ஈழம் திறைகொண்ட இலங்காபுரிக் காவலன்" என்றும், " தாசப்படை வெட்டி இரட்டைச் சங்கு பிடித்தவன்" என்றும், "செட்டி தோள் மீது ஏறும் காட்டாரிராயன்" என்றும், "மதுரையை ஆளும் பாண்டியன், சேர அரசன், சோழனுக்கு வாள் தொழில் பயிற்றுவோன்" என்றும் குறிப்பிட்டுக் கொள்கின்றனர்.

இதில்
1"ஈழம் திறைகொண்ட இலங்காபுரிக் காவலன்":
இது அறந்தாங்கி தொண்டைமான் சேதுபதி மற்றும் ஆரியசக்கரவர்த்திகளுக்கு மட்டுமே உரியது
சேதுபதி செப்புபட்டயம்"
"ஈழமும் கொங்கும் யாழ்பாணமும் கஜவேட்டை கொண்டருளியவன்"
2." தாசப்படை வெட்டி இரட்டைச் சங்கு பிடித்தவன்"
மட்டகளப்பு மறவர் குடி:
சங்குபத்தன் குடி, கோப்பிகுடி,கச்சிலாகுடி,சட்டிகுடி,மாளவண்குடி,முண்டன் குடி,முறண்டன் குடி.
இது  இலங்கை மன்னை வெட்டி சங்கனாக்கி இரட்டை சங்கு பிடித்தவன் என அத்னால் சங்குபயத்தன் குடி என பெயர் எடுத்தவர்கள்
3."செட்டி தோள் மீது ஏறும் காட்டாரிராயன்"
கட்டாரிராயன் என ஈழத்தில் கத்திரியன் என வாளரசு வென்ற மறவர்களான வாள்கோட்டைராயர்களை குறிக்கிறது.இது ஈழத்தில் ஐநூற்றுவர் படையில் உள்ள கொற்றவாளர்,கத்திரியர்,முனைவீரர்,எறிவீரர் இவர்களில் பங்கெடுத்து அதற்க்கு தலைமை தாங்கிய பெருமாளான "ஐநூற்றுவ பேரரையன்". செட்டிமார்களின் காவலன்.
காலம் 13 ஆம்நூற்றாண்டு(கி.பி.1266)
 I.P.S.(346)
மேற்படி தாலுகா விரையாச்சிலை பில்லவனேசர் கோவில் சுவாமி கோவில் தென்புரம் சுவரில்
நம்பி ஐநூற்றுவ பெரியான்
ஸ்வஸ்தி ஸ்ரீ கோச்சடை பன்மரான திரியுவன சக்கரவர்த்தி ஸ்ரீ சுந்தரபாண்டியத்தேவர்......................குடுத்த பரிசாவது..... முன்னால் குலசேகர தேவருக்கு இவ்வூர் மறவன் நம்பியான் ஐநூற்றுவ பெரியான் உள்ளிட்டார் பக்கல் விலை கொண்டு உடையார்............... இவ்வூர் மறவரில் மாலையிட்டான் மக்கள் தற்குரியும்..............................
4."மதுரையை ஆளும் பாண்டியன், சேர அரசன், சோழனுக்கு வாள் தொழில் பயிற்றுவோன்"
தொண்டைமான் தமிழ் மன்னன் என்பதிலிருந்தே சேரனும்,பாண்டியனும் யாராக இருப்பர் என யோசிக்க தேவையில்லை.

சுல்த்தான் தாக்கியபின் சூரைக்குடி அரையர்கள் சென்று அமைத்த பாளையங்களே
சேத்தூர் - வணங்காமுடி பண்டாறர்
சிவகிரி  -சங்கிலி வன்னியர்
கொல்லங்கொண்டான்  -வாண்டாயத் தேவன்
அழகாபுரி -  கட்டாரிராயன்
ஏழாயிரம்பன்னை  - பொன்னம்பலநாதர்
த்லைவன்கோட்டை- இந்திரதலைவன்

என வணங்காமுடியர்,வாண்டாயத் தேவர்,கட்டாரிராயன்,பொன்னம்பலநாதர்,இந்திரதலைவன் என இவர்கள் அனைவரும் விஜயாலயத் தேவரின் வாரிசுகளே

எனவே சத்தியபுத்திரர் என்னும் அய்யனார் வழிபாடு மறவரில் 70% மக்களுக்கு அய்யனாரே குலதெய்வமாக உள்ளது. எனவே சத்திய புத்திரர் என்னும் தொண்டைமான் மன்னரின் வம்சம் மறவர்களிடமே உள்ளனர்.
சத்தியபுத்திரர் கலியுகமெய்யன் அய்யனாரே.








சிறப்பு நன்றி:
அறந்தாங்கி தொண்டைமான் செப்பேடுகள்: புலவர் செ.இராசு
புதுக்கோட்டை வரலாறு: உயர்.திரு.ஐயா.வீ.மாணிக்கம் அவர்கள்


குறிப்புகள் 27. கே. வி. செளந்தரராஜன், மு. கு. நூல், ப. 103; பெரும்பிடுகுப் பெருந்தேவி, கோயிலைப் புதுப்பித்துக் கொடையளித்த செய்திகளைக் குறிப்பிடும் கல்வெட்டு, என்று எழுதும் ஜெ. ராஜாமுகமது, அக்கல்வெட்டின் அடிப்படையில், 'குகை இக்காலத்திற்கு முன்பே இருந்திருக்கவேண்டும்' என்றும் எழுதியுள்ளார். மு. கு. நூல், ப. 240. சு. இராசவேல், அ. கி. சேஷாத்திரி இவர்கள் இக்கல்வெட்டு குடைவரைக் கோயிலிலேயே இருப்பதாகவும் பெருந்தேவியே குடைவரையைக் குடைந்து அமைத்ததாகவும் எழுதியுள்ளனர். மு. கு. நூல், ப. 186. 28. New Indian Eகpress, 30. 5. 2006. 29. IPS: 439; என். சேதுராமன், பாண்டியர் வரலாறு, ப. 154. 30. The Hindu, 17. 8. 2003. 31. IPS: 735. 32. IPS: 459; என். சேதுராமன், மு. கு. நூல், ப. 194. 33. IPS: 460. 34. IPS: 685. 35. IPS: 792. 36. IPS: 872. 37. IPS: 873. 38. IPS: 967. 39. IPS: 687. 40. IPS: 692. 41. IPS: 764. 42. தினமணி, 5. 8. 2003. 43. IPS: 764. 44. IPS: 800. 45. IPS: 893. 46. IPS: 923. 47. தினமணி, 5. 8. 2003. 48. The Hindu, 17. 8. 2003. 49. தினமணி, 5. 8. 2003. 50. மேற்படி. 51. இது திருமங்கையாழ்வாரின் பாடல் பெற்ற தலம் என்று குறிப்பிடும் ஜெ. ராஜாமுகமது, அடைப்புக்குறிகளுக்குள் பெரிய திருமொழி என்று வேறு எழுதியுள்ளார். மு. கு. நூல், ப. 240. திருமங்கையாழ்வார் தம் பெரிய திருமடலிலும் ஓரிடத்தில் இத்தலத்தைக் குறிப்பிடுவது இங்குக் கருதத்தக்கது. சு. இராசவேல், அ. கி. சேஷாத்திரி, ஆகியோர், 'இ ச்சிற்பக் காட்சி இக்குடைவரையைப் பெரிதும் அழகு செய்கின்றது. இதனைத் திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளார். இவ்விறைவனைத் 'திருமேய மலையாளன் எனக் குறிக்கிறார்' என்றெல்லாம் எழுதியுள்ளனர். மு. கு. நூல். ப. 240. 52. திருமங்கையாழ்வார் 1206, 1524, 1660, 1760, 1852, 2016, 2674 (126) நாலாயிர திவ்யப் பிரபந்தம், ப