Monday, April 22, 2013

காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம்

காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம்

(எழுத்தாளர் S.ராமகிருஸ்னன்)
சர்வதாரி வருடம் தை 30.  ஹிஜ்ரி 1430 ஸபர் ரபிஉல் அவ்வல். பிப்ரவரி 2009. நேரம் இரவு. 10.37 சென்னை. ( பழைய பெயர் மதராஸ் அதற்கு முந்திய பெயர் மதராபட்டினம் ) தமிழ்நாடு. பழைய பெயர் ( சென்னை ராஜஸ்தானி ) தென்னிந்தியா. இந்தியா.
( சரித்திர நாவலை விமர்சனம் பண்ண வேண்டும் என்பதால் இவ்வளவு துல்லியமாக நாள் நேரம் போன்ற விபரங்களை எழுதி தொலைக்க வேண்டியுள்ளது. )

பூர்வாங்கம்

சு. வெங்கடேசனின் காவல்கோட்டம் என்ற ஆயிரத்து நாற்பத்தியேழு பக்கமே உள்ள சிறிய நாவலை பனிரெண்டு நாட்கள் தொடர்ச்சியாக வாசித்தேன். இருபத்தி மூணு வருட அனுபவத்தில் ஒரு நாவலை வாசித்து முடிப்பதற்கு இவ்வளவு சிரமமும் அலுப்பும் அடைந்தது இந்த  நாவலில் மட்டும் தான்.
சாலையோரம் சவுக்கால் தன்னைத் தானே அடித்துக் கொள்பவனைப்  பார்த்திருக்கிறீர்களா. சுளீர் சுளீர் என சாட்டை உடலில் பட்டாலும் விடாமல் அடித்து கொள்வானே  கிட்டதட்ட அப்படியொரு தண்டனை போலதானிருந்தது இந்த நாவலை  வாசித்தது. இவ்வளவு மெனக்கெட்டு எதற்காக படிக்க வேண்டும் என்று கேள்வி எழலாம்.
நாவலைப் பற்றிய பேசுவதாக ஏதோவொரு குருட்டு தைரியத்தில் ஒத்துக் கொண்டுவிட்டேன். படிக்க ஆரம்பித்த பிறகு தான் அதன் வண்டவாளம் தெரிய ஆரம்பித்தது. என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தபோது என்னுடன் கூட்டத்தில் பேச வேண்டிய இன்னொரு நண்பர் போன் செய்து படித்துவிட்டீர்களா என்று துக்கம் விசாரிப்பது போலக் கேட்டார்.
நீங்கள் என்று எதிர் கேள்வி போட்டதும் பரிட்சைக்கு கூட இப்படி படிச்சதில்லை சார். எப்படி  படித்தாலும் நகர மாட்டேன் என்கிறது, ரோடு ரோலர் மாதிரி என்றார். எனக்கு அவரது உவமை பிடித்திருந்தது. மெதுவாக நகட்டி நகட்டி படித்துவிடுங்கள். நாவலை பற்றி பேச வேண்டும் அல்லவா என்று சொன்னேன். உடனே அவர் இப்படி போய் மாட்டிக்கிட்டனே என்று புலம்பி கொண்டு போனைத் துண்டித்தார்.
அது இன்னமும் நாவலை படிக்க விடாமல் தடுக்க ஆரம்பித்தது. மனதைரியத்துடன் இதை படித்தவர் எவராவது இருப்பார்களா என்று நண்பர்கள் வட்டாரத்தில் தேடத் துவங்கினேன். பெயரை கேட்டவுடன் மௌனமாகி விட்டார்கள்.
எழுத்தாளர் தமிழ்செல்வன் இந்த நாவலை மூன்று முறை படித்துவிட்டார் என்றார்கள். அவர் மிலிட்டரியில் வேலை செய்த அனுபவம் உள்ளவர் ,அதனால் எவ்வளவு கடினமான வேலையும்   செய்துவிட முடியும், நிச்சயம் அவர் படித்திருப்பார் என்று தோன்றியது. சாமான்ய மனுசன் எவராவது படித்திருக்கிறார்களா என்று கேட்டேன். பதிலே இல்லை.
சரி விதி வலியது, எப்படியாவது படித்து முடித்துவிடலாம் என்று நாளைக்கு மூணு நாலுமணி நேரம் வீதம் படித்து ஒருவழியாக நாவலை முடித்து கிழே வைத்த போது நூற்றாண்டுகளாக ஒரே புத்தகத்தை படித்தால் ஒருவன் எவ்வளவு அலுப்பும் சலிப்பும் அடைவானோ அப்படியொரு சோர்வு பற்றிக் கொண்டது.
இந்த லட்சணத்தில் காய்ச்சலும் சேர்ந்து கொள்ள நாலைந்து நாள் படுக்கையிலே கிடந்தேன். தூக்கத்தில் கூட நாவலின் பக்கங்கள் புரண்டு கொண்டேயிருந்தன. புதைசேறில் மாட்டிக் கொண்டது போன்ற அனுபவம். நல்லவேளையாக வெளியீட்டு விழாவிற்குப் போகவில்லை. சென்றவர்கள் அங்கு பாடப்பட்ட புகழாரங்களைக் கண்டு தலை கவிழ்ந்து வந்தார்கள் என்று கேள்விபட்டேன்.

ஒரு மனிதனை தண்டிக்க வேண்டும் என்று விரும்பினால் எளிய வழி அவனுக்கு ஒரு காவல் கோட்டம் நாவலை வாங்கி தந்துவிட வேண்டியது தான். புத்தக சைஸ பார்த்தால் போதும்  சப்தநாடியும் அடங்கிவிடுவான்.

மதுரையில் சில கடைகளில் விளம்பரங்களுக்காக ஆள் உயர சைஸ் பனியன்   அல்லது  மிகப்பெரிய செருப்பை வைத்திருப்பார்கள். இதை எல்லாம் யார் போடுவார்கள் என்று பயத்துடன் பார்த்து கொண்டிருந்திருக்கிறேன்.
இந்த நாவலை படிக்க ஆரம்பித்தவுடன் அந்த எக்ஸ்ட்ரா லார்ஜ் XXXX  சைஸ் சு. வெங்கடேசன் போன்றவர்களுக்காக மட்டுமே தயாரிக்கிறார்கள் போலும் என்பதை உணர்ந்தேன். இவ்வளவு பெரிய எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸ் நாவலை எழுதுவது என்றால் சாமான்ய வேலையான என்ன?
டால்ஸ்டாய் ஆயிரம் பக்கத்திற்கு மேல் எழுத வில்லையா என்று கேட்கலாம். உண்மை தான் ஆனால் டால்ஸ்டாய் ஒன்றும் பந்தல் போடும் வேலை செய்யவில்லையே. சின்னஞ்சிறிய வீடு கட்டுவதற்கு ஆறு மாசமாகிறது. ஆனால் ஊரையே வளைத்து கீற்று பந்தல் போடுவதற்கு இரண்டு நாள் போதும் ,சர்வ அலங்காரத்துடன் போட்டுவிடலாம்.
பந்தலைக் காட்டி இதுவும் பல்லாயிரம் பேர் தங்கும்படியாக தானே அமைக்கபட்டிருக்கிறது அதை ஏன் கட்டிடகலையின் உச்சம் என்று ஒத்துக் கொள்ள மறுக்கிறீர்கள் என்று கேட்க முடியாது இல்லையா? அப்படி இந்த நாவலும் ஒரு பெரிய மாநாட்டு பந்தல் தான். கீற்று தெரியாமல் வேஷ்டி விரித்து ஒப்பனை செய்யப்பட்டிருக்கிறது, மற்றபடி உள்ளே அத்தனையும் பொத்தல்.
காவல்கோட்டம் நாவல் வெளியான சில தினங்களில் ஆண்டின் சிறந்த நாவல் என்று விருதுக்கு அடையாளம் காட்டப்படுவதும். வெளியான நாளில் இருந்து சென்னை ,மதுரை, பாண்டிச்சேரி, கோவை என்று ஒவ்வொரு ஊரிலும் அவர்களாகவே வெளியீட்டு விழா நடத்தி அரசு உயர் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பேராசிரியர்களின் புகழாரங்களை அவசர அவசரமாக சூட்டி கொள்வதும் எதற்காக  என்று தான் புரியவில்லை.  
ஒரு நாவலுக்கு ஒரு வெளியீட்டுவிழா நடத்ததுவது தான் மரபு.  ஆனால் வெங்கடேசன்  ஊருக்கு ஒரு வெளியீட்டுவிழா செய்வதை காணும் போது நாவல் விற்று தீருமளவு தொடர்ந்து பல நூறு வெளியீட்டு விழா நடந்தாலும் ஆச்சரியப்பட போவதில்லை.
தமிழ் இலக்கிய சூழலில் என்ன அபத்தம் வேண்டுமானலும் நடக்கலாம். அதை யார் தடுக்க முடியும்.

**

நாவலை முன் வைத்து சில பார்வைகள் :
இதை ஒரு சரித்திர நாவல் என்கிறார்கள். ஆனால் நாவலில் சரித்திரமும் இல்லை நாவலும் இல்லை. இரண்டும் கெட்டான் வகை.

முதல் பகுதி நாயக்க மன்னர்களின் வரலாறு இரண்டாம் பகுதி கள்ளர் சீமை. இரண்டுக்கும் உள்ள ஒரே சம்பந்தம் கள்ளர்கள் மதுரையை காவல் செய்தார்கள் என்பதை தவிர வேறு ஒன்றுமேயில்லை.

சரி, இதில்  எதற்கு நாயக்கர் வரலாறு.?
நேரடியாக கள்ளர்கள் மதுரை காவலுக்கு நியமிக்கபட்டதில் இருந்து நாவலை துவக்கினால் எப்படி ஆயிரம் பக்கத்திற்கு இழுப்பது.
இவ்வளவு நீட்டி முழக்கி சொல்லும் நாயக்கர் வரலாற்றில் அப்படி என்ன புதிய விஷயமிருக்கிறது. கம்மவாருகளை விடவும் கொல்லவாருகளே வீரமானவர்கள். கம்மவார்கள் ஒன்றும் பெரிய வீரர்கள் இல்லை என்று ஜாதிஉட்பிரிவு குழப்பத்தை உருவாக்கும் முயற்சியை தவிர பெரிதாக நாயக்கர் வரலாற்றில் எந்த வெளிச்சத்தையும் நாவல் உருவாக்கி சாதித்துவிடவில்லை.
மதுரையின் வரலாற்றை எதற்காக நாயக்கர் காலத்திலிருந்து எழுதத் துவங்க வேண்டும். அது சங்க காலத்திலிருந்து இருக்கிறதே என்றால் நாயக்கர் காலத்தில் இருந்து தான் ரிக்கார்ட்ஸ் கிடைக்கிறது. அதற்கு முன்பு உள்ளதை எழுத கற்பனை வேண்டுமே என்று வெங்கடேசன் சொல்லக்கூடும்.
நாவலின் முதல் பகுதி முடிஅரசு. இரண்டாம் பகுதி குடிமக்கள். முதல் பகுதி 376 பக்கம். மாலிக்கபூர் மதுரைக்கு படை எடுத்து வருவதில் துவங்கி மதுரை கலெக்டராக பிளாக்பெர்ன் வந்து சேர்ந்து மதுரையின் சுற்று கோட்டையை இடிப்பது வரையிலான சரித்திர காலம் . அதன் பிறகு மதுரையை சுற்றிய கள்ளர்களை பற்றியது. குறிப்பாக தாதனூர் என்ற ஊரின் வாழும் கள்ளர்களை பற்றிய எண்ணிக்கையற்ற தகவல்கள். உதிரி சம்பவங்கள். போன்றவற்றால் நிரப்பட்டுள்ளது.
ஹிண்டு பேப்பர் செய்தி முதல் பழைய சர்வே ரிக்கார்டு, போலீஸ் எப்ஐஆர் வரையான ஆயிரக்கணக்கான தகவல்கள் ஒன்றோடு ஒன்று  திணிக்கப்பட்டு மாபெரும் வைக்கோல் போர்  போல நாவல் காட்சியளிக்கிறது.
சரித்திரம் என்பதே பெரிதும் கற்பனையானது. அது அதிகாரத்தில் இருப்பவன் தன்னை காத்து கொள்ள உருவாக்கிய ஒரு புனைகட்டு. மன்னர்களின் வாழ்க்கையும் அதிகார கைமாறுதல்களும் மட்டுமே சரித்திரமில்லை. மக்கள் வாழ்வு, சமூக கலாச்சார அரசியல் தளங்களில் ஏற்படும் மாறுதல்களும் நெருக்கடியும் விடுபடலும் மோதுதலும் புதுவரவும் இணைந்ததே சரித்திரம். பாடப்புத்தங்களுக்கு வெளியில் தான் சரித்திரம் ஒரளவு உண்மையாக இருக்கிறது என்கிறார்கள் இன்றைய வரலாற்று ஆய்வாளர்கள்.
நாவல் போன்ற இலக்கிய வடிவங்கள் சரித்திரத்தை அணுகும் போது முதலாக கவனிக்கவேண்டியது. சரித்திரத்தினை எப்படி உள்வாங்கியிருக்கிறோம். எப்படி கற்பனை செய்கிறோம் என்பதே.  முன்பு எழுதப்பட்ட  சரித்திர குப்பைகளை விலக்கி உண்மையை அறிய முயற்சிப்பதே இலக்கியத்தின் பிரதான நோக்கம். சரித்திரம் என்பது முடிந்து போன கடந்தகாலமல்ல. அது முடிவில்லாத காலத்தொடர்ச்சி என்ற பிரக்ஞையே இலக்கியத்தின் பிரதான பணி.
வரலாற்றை மீள் ஆய்வு செய்யும் வரலாற்று அறிஞர்கள்  சரித்திரச் சான்றுகள், கல்வெட்டுகள், ஆவணகாப்பக தகவல்கள், நேரடி ஆய்வுகள் போன்றவற்றின் வழியே சரித்திரம் உருவான சரித்திரத்தை ஆராய்கிறார்கள். அதில் மறைக்கபட்டதும் தவிர்க்கபட்டதையும் வெளிச்சமிட்டு காட்டுகிறார்கள். அத்துடன் சரித்திரத்தை எப்படி பார்க்க வேண்டும் என்ற புதிய பார்வையை வெளிப்படுத்துகிறார்கள். 
ஆனால் நாவலாசிரியன் சரித்திரத்தின் ஒற்றை வரியிலிருந்து தன் கற்பனையை உருவாக்க துவங்குகிறான். அவன் வரலாற்றை அதன் பெருமிதங்களுக்காக இன்றி சிதைவுகளுக்காக வாசிக்கிறான். வரலாற்றில் மறைக்ககபட்ட பகுதிகளை, இடைவெளிகளை அடையாளம் கண்டு கொள்கிறான்.
நாவல் எழுதுவதற்கு களஆய்வு செய்வது அவசியம் தான். ஆனால் அப்படி எவரெவரோ தந்த  செய்திகள், தகவல்கள், சம்பவங்கள், ஆய்வை அப்படியோ போட்டு நிரப்பி அதற்கு நாவல் என்று பெயர் சூட்டினால் என்ன செய்வது. அந்த கொடுமை தான் காவல்கோட்டமாக உருக் கொண்டிருக்கிறது.
டாக்டர் ஆனந்த் பாண்டியன் என்ற தமிழகத்தை சேர்ந்த மானுடவியல் பேராசிரியர். கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைகழகத்தில் பணியாற்றுகிறார். அவர் சிறப்புநிதி நல்கை பெற்று கள்ளர் பற்றிய ஆய்வினை தொடர்ந்து பல காலமாக மேற்கொண்டு வருகிறார். அவரது கட்டுரைகளும் ஆய்வும் உலக அரங்கில் மிகுந்த கவனம் பெற்றவை. குறிப்பாக Securing the Rural Citizen: The Anti-Kallar Movement of 1896, "An Ode to an Engineer" in Waterlines: The Penguin Anthology of River Writing in India. Race, Nature, and the Politics of Difference போன்றவை கள்ளர் வாழ்வியல் ஆய்வில் மிக முக்கியமானவை.

வெங்கடேசனின் கள்ளர் விவரணைகளில்  பெரும்பான்மை இவரது ஆய்வின் ஆதார தரவுகளே. ஆனந்த் பாண்டியனின் பல ஆண்டுகால உழைப்பும் தனித்த பார்வைகளும் எவ்விதமாக நன்றி தெரிவித்தலும் இன்றி இந்த நாவலில் பல இடங்களில் அப்படியே பயன்படுத்தபட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம். லு�யிஸ் டுமாண்ட் என்ற பிரெஞ்சு மானுடவியல் ஆய்வாளர் (Louis Dumont - A south Indian subcaste, Social organization and religion of the Pramalai Kallar 1986:OUP) பிரன்மலை கள்ளர்களை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்து எழுதிய நூலில்  முத்துசாமி தேவர் என்பவரை பற்றி குறிப்பிட்டு, அவர் இந்த நூலின் இணையாசிரியர் போன்றவர் என்று நேர்மையாக பதிவு செய்திருக்கிறார். காரணம் உள்ளுர் தரவிபரங்கள் அறிந்தவர்கள் உதவியால் மட்டுமே ஒரு ஆய்வு முழுமையடடைகிறது. வெங்கடேசன் லு�யிஸ் டுமாண்டிலிருந்தும் பல தகவல்களை நாவலுக்காக எடுத்திருக்கிறார். அதற்கும் சிறு நன்றி கூட கிடையாது.

டால்ஸ்டாய் போரும் வாழ்வும் எழுதும் போது நெப்போலியன் படையெடுப்பை தன் நாவலின் பின்புலமாக கொண்டிருக்கிறார். ஆனால் எந்த சரித்திர புத்தகத்திலிருந்தும் நெப்போலியன் பற்றிய சரித்திர விபரங்களை  தொகுத்து தன் நாவலுக்கு எடையை அதிகமாக்கவில்லை. மாறாக அவர் படைகள் வருவதை மிகுந்த கற்பனை உணர்வோடு காட்சிபடுத்தியிருக்கிறார். நெப்போலியன் வருகை என்பது அவருக்கு ஒரு குறியீடு. நாவலின் கதையோட்டத்திலிருந்து சரித்திரத்தை தனித்து பிரித்து எடுத்துவிட முடியாது.

சரித்திர பிரக்ஞை ஒரு நாவலில் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு  இரண்டு சிறந்த உதாரணங்களை தர முடியும். ஒன்று குர்அதுல்துன் ஹைதர் எழுதி அக்னி நதி என்ற நாவல். இது இந்திய சமூகத்தின். புத்தர் காலம் துவங்கி சுதந்திர போராட்ட காலம் வரையான பல நூறு வருட வாழ்க்கையை விவரிக்கிறது. ஆனால் ஒரு இடத்தில் கூட சரித்திரம் அப்படியே நகலெடுக்கபடவில்லை. மாறாக வற்றாது ஒடும் ஆறென காலம் ஒடிக் கொண்டேயிருக்கிறது. அதன் சுழிப்பில் மனிதர்கள் தோன்றுகிறார்கள். மறைகிறார்கள்.
இன்னொரு நாவல் அதின் பந்தோபாத்யாயா எழுதிய நீலகண்ட பறவையைத்தேடி.  இதுவும் சுதந்திர போராட்ட காலத்து நாவல் தான். ஆனால் ஒரு இடத்தில் கூட ஆவணகாப்பகத்தில் இருந்த தகவல்களை தொகுத்து பண்டல் கட்ட முயற்சிக்கவேயில்லை. இரண்டுமே தமிழில் வெளியாகி உள்ளது.
குற்றப்பரம்பரை  எனப்படும்  கள்ளர் பற்றி முதன்முதலாக காவல் கோட்டம் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறதே என்று ஒரு கேள்வி எழுகிறது. அதுவும் பொய்யே. கோணங்கி, தமிழ்செல்வன், வேல.ராமமூர்த்தி, நான் உள்ளிட்ட பலரும் குற்றபரம்பரை பற்றி அவரவர் அளவில் எழுதியிருக்கிறோம்.
வழிப்பறி கள்ளர்கள் குறித்து பஞ்சாபி மொழியில் வெளியாகி உள்ள சோரட் உனது பெருகும் வெள்ளம் மற்றும் சமீபத்தில் மராத்தியில் வெளியான உபரா, உச்சாலியா போன்ற நாவல்களை படித்த எவருக்கும் இந்த நாவல் எவ்வளவு அபத்தம் என்று சொல்லாமலே புரிந்துவிடும். நான் குறிப்பிட்ட இந்த நாவல்கள் அத்தனையும் தமிழிலே வாசிக்க கிடைக்கின்றது
பொன்னியின் செல்வன், யவனராணி போன்ற சரித்திர கதைகளில் படிக்க சுவாரஸ்யமான கற்பனையாவது இருக்கும். இதில் அதுவும் கிடையாது. என்றால் இந்த நாவல் எப்படி இவ்வளவு பெரிசாக உருண்டு திரண்டிருக்கிறது.
அங்கே தான் இருக்கிறது வெங்கடேசனின் சாமர்த்தியம்.
நாலு பக்கம் கள்ளர் கதை, அடுத்து நாற்பது பக்கம் நாயக்கர் வரலாறு என்று டிவி சீரியல் போல இழுத்திருக்கிறார். ஒருவேளை நாயக்கர் வரலாறும் உபரி தகவல்களும் நீக்கப்பட்டால் நாவல் இருநூறு பக்கத்திற்குள் முடிந்து போயிருக்கும்.
குளறுபடி 1 :
நாவலின் ஆரம்பம் மதுரையைத் தாக்க மாலிக்கபூர் வருவதை எழுதிவிட்டால்  ஒரு நூற்று ஐம்பது வருசங்களை முன்னாடி சேர்த்து கொள்ளலாமே என்று வெங்கடேசன் நினைத்திருக்க கூடும். ஆகவே முதல் இரண்டு பக்கங்கள் மாலிக் கபூருக்கு.

சரித்திரத்தை மீள்வாசிப்பு செய்கின்ற எவருக்கும் தெரியும் மாலிக் கபூர் என்பது ஒரு அரவாணி. அவனது பெயர் ஹசர் தினார்.  என்றால் ஆயிரம் தினார் கொடுத்து வாங்கபட்டவன் என்று பொருள். கில்ஜியின் பாலுறவு துணையாக இருந்தவன். அதனால் அதிகாரம் வழங்கபட்டு மற்றவர்கள் கேலி செய்யப்படக்கூடாதே என்று எஜமானனுக்கு உரியவர் என்ற பெயரில் மாலிக் கபூர் என்று அடையாளம் தரப்பட்டவன்.

மாலிக்கபூர் தமிழகத்திற்கு படையெடுத்து வந்தது குறித்து இன்றுவரை தெளிவான காரணங்கள் இல்லை. அவன் உட்பகையை பயன்படுத்தியே உள்ளே நுழைந்தான் என்று வரலாற்று புத்தகங்கள் கூறுகின்றன. இந்த நாவல் திரும்பவும் பழைய குருடி போலவே மதுரையை தாக்க வந்தான் மாலிக்கபூர். தங்கம் வைரம் வெள்ளி என எண்ணிக்கையற்ற பொருட்களை கொள்ளையடித்தான் என்று அரைத்த வரலாற்று ரிக்கார்ட்டையே அரைக்கத் துவங்குகிறது.
ஒரு லட்சம் வீரர்களுடன் வந்தான் என்று மிகையாக உருவாக்கபடும் மாலிக் கபூர் படையெடுப்பையாவது  எழுத்தாளரால் கற்பனை செய்ய முடிகிறதா என்றால் அதுவும் இயலவில்லை.
குளறுபடி 2 :
இந்த நாவலின் முதல் முந்நூறு பக்கங்கள் நாயக்க மன்னர்கள் வரலாற்றை விவரிக்கிறது. இந்த வரலாற்றை பாடப்புத்தகங்களில் உள்ளதிலிருந்து ஒரு மாற்றமும் இல்லாமல் அப்படியே நகலெடுத்திருக்கிறது நாவல்.
குறிப்பாக 1) Edgar Thurston, " The castes and Tribes of south India ,2) The Madura Country -A manual  - J..H..Nelson .Asian Educational Services New Delhi, Madras. 3) History Of The Nayaks Of Madura- R Sathianathaier, 4) The History of Tinnevelly by Rev R Caldwell,5)  History of Military transactions - R Orme  இந்த ஐந்திலும் உள்ள தகவல்கள் அப்படி அப்படியே காவல் கோட்டம் நாவலில் பிரதியெடுக்கபட்டிருக்கின்றன.
குறிப்பாக சத்தியநாத ஐயரின் மதுரை நாயக்கர் வரலாறு புத்தகத்தின் பல பக்கங்கள் தமிழாக்கபட்டு அப்படியே முழுமையாக நாவலில் கோர்க்கபட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு சத்தியநாத ஐயரின் புத்தகத்தில் மதுரையை ஆண்ட ராணி மீனாட்சி பற்றிய பகுதியிது.

 

Minakshi negotiated with the latter with a view to nullifying the  arrangements agreed upon, in return for, it is said, one crore of rupees. Chanda Sahib consented to her terms, and is said to have sworn by the Koran to safeguard her  interests at any cost. He did not  scruple to break his solemn vow, and imprison Mlnakshi in her palace. The latter's miseries overwhelmed her, and she put an end to her own life by taking poison.
Page 254
வெங்கடேசன் நாவலின் முப்பதாவது அத்யாயம் பக்கம் 255 ல் இதே விஷயம் எப்படியிருக்கிறது பாருங்கள்
மீனாட்சி ஒப்புக் கொண்டாள். ஆனால் பங்காரு ஒப்புக் கொள்ளாமல் திருச்சியின் மீது படை எடுத்தார். சாந்தா சாகிப்பின் உதவியை நாடி பணம் கொடுத்தார். அதை விட அதிகமான பணத்தை மீனாட்சி தந்த போது மீனாட்சியை அரசியாக ஏற்பதாகவும் படை உதவி செய்வதாகவும் குரானின் மீது சத்தியம் செய்துதந்தார்.  1736 ல்  சந்தா சாகிப் தனது படையை வலிமை படுத்தி கொண்டு மீண்டும் திருச்சி வந்தார். நேசசக்தி என்பதால் வழிவிட்ட கோட்டைக்குள் புகுந்த பின்பு அரசி மீனாட்சியை சிறைபடுத்திவிட்டு நிர்வாகத்தை கவனிக்க துவங்கினார். மீனாட்சி நஞ்சு குப்பியை எடுத்து திறந்து அப்படியே வாயில் கவிழ்த்துவிட்டாள். (பக்கம் 255.)
வரலாற்று பாடபுத்தகத்தில் உள்ளதை நகல் எடுத்திருப்பதை தவிர   இந்த நாவலில் புதிதாக என்ன மாற்றத்தை  எழுத்தாளர் உருவாக்கியிருக்கிறார் என்று புரியவில்லை.
ராணி மீனாட்சி  விஷம் குடித்த நெருக்கடியை, என்ன விஷம் அது . அப்போது  அவளுடன் யார் இருந்தார்கள். அவளுக்கு என்ன வயதானது.  சாவு ஏன் தவிர்க்கபடவில்லை.  சாந்தா சாகிப் எதற்காக துரோகம் செய்தான்  என்று கற்பனை செய்ய செய்ய சாதாரண மனிதன் கூட ஒரு கதையை புனைந்துவிடுவானே, ஏன் ஆயிரம்பக்கம் எழுத முடிந்த ஆளால் இது சாத்தியமாகமால் போனது. ஒரே காரணம். சரித்திர புத்தகத்தில் இருக்கிறது அப்படியே எடுத்து பைண்டிங் செய்துவிடலாம் என்று ஆசை மட்டும் தான். மீனாட்சி ஊர்வலம் போனதை எழுதியவர் அவள்  சிறைப்பட்ட நெருக்கடியான மனநிலையை ஏன் கவனம் கொள்ள இயலவில்லை.
உப்புசப்பற்ற தகவல்களை தானே இத்தனை வருசமாக சரித்திரம் என்ற பெயரில் நாம் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறோம். நாவலும் அதே குப்பையை அழகாக பாலீதின் பையில் அடைத்து கையில் கொடுப்பது தான் சாதனையா?
இப்படியான தகவல்கள் பக்கம் 36,37, 39, 47, 89,140,152,213 215, 218 229, 246, 256, 259, 314, 279, பக்கங்களில் சரித்திர பாட புத்தகங்களில் இருந்து கட்டிங் பேஸ்டிங் வேலைகள் செய்து நிரப்பட்டுள்ளன. அதை விரிவாக எழுதினால் விமர்சனம் நூறு பக்கம் மேலாகிவிடும் அபாயமிருக்கிறது
குளறுபடி 3 :  திருமலை நாயக்கர் ஒரு இத்தாலிய பொறியாளரின் உதவியால் நாயக்கர் மஹாலை கட்டினார் என்ற தகவலை பல காலமாக கேட்டு வருகிறோம். அந்த இத்தாலியர் யார். அவர் எதற்காக மதுரைக்கு வந்தார். எப்படி இது போன்ற கட்டிட வடிவம் ஒன்றை தேர்வு செய்தார். அதை எப்படி திருமலை நாயக்கர் ஒத்துக் கொண்டார். இப்படி எண்ணிக்கையற்ற கேள்விகள் அதன் பின்னால் இருக்கின்றன. பிரிட்டீஷ் ரிக்காடு வரை தேடிய ஆள் ஆயிற்றே என்று இவரது நாவலில் தேடினால் அவரும் நாயக்கர் ஒரு இத்தாலியரின் உதவியால் மஹாலை கட்டினார் என்று பள்ளிபாடப்புத்தக வரிகளையே திரும்பவும் ஒப்பிக்கிறார். யார் அந்த இத்தாலியர் என்பதை பற்றிய துளி விபரமும் இல்லை. இது தான் பத்தாண்டு ஆய்வு செய்து எழுதியவரின் லட்சணம்.

குளறுபடி 4 : 


பாளையப்பட்டு வம்சாவழி வரலாறு என்று கீழைத்தேய சுவடி வெளியீடுகளின் இரண்டு நூல்கள் உள்ளன. அந்த நூலில் உள்ள தகவல்கள் மற்றும் பத்திகள் அத்தியாயத்திற்கு ஏற்றார் போல இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு அத்தியாயம் 36 பக்கம் 280யை படித்து பார்க்கவும்.

இது போலவே இரவெல்லாம் மழை பெய்யும் நாளில் குளிர் இருக்காது என்று கிராமத்து மனிதர்கள் கூட அறிவார்கள். வெங்கடேசனோ  ஒரு வாரமாக பகலிரம் இரவும் விடாத மழை. உயிரை உறைய வைக்கும் குளிர் - பக் 210 என்று எழுதியிருக்கிறார். இதே போல இயற்கையின் எளிய நுட்பமறியாத வரிகள் நாவலில் நிறைய இடங்களில் துருத்திக் கொண்டு நிற்கின்றன.
குளறுபடி 5 : நாவலில் மருந்துக்கு கூட கதைசொல்லும் போக்கிலோ, உரையாடல்களிலோ சரித்திர பிரக்ஞையே கிடையாது. மதுரை ரீகல் தியேட்டர் முன்புள்ள இட்லி கடையில் கேட்க கூடிய சரளமான மதுரை தமிழ் தான் முந்நூறு வருசத்தின் முன்னுள்ள நாயக்கர் காலத்திலும் ஒலிக்கிறது. ஒன்றிரண்டு உதாரணங்கள்.

 பிறகு தம்மையாவை பார்த்து நாகம்மா நாயக்கர் வாடா என்று சொல்லிவிட்டு திருநீற்றை எடுத்து பூசினார். எங்கே வந்த என்று கடுத்த குரலில் கேட்டார். ( பக் 43 )

ஏண்டா இப்போ தான் வழி தெரிஞ்சதாக்கும். இத்தனை வருசமா எங்கடா போய் தொலைஞ்சே
அக்கா நல்ல பசி சோத்தை  போடு  பக்.195

விடு மாப்ள, உள்ளபடி நடக்கட்டும்.  பக்.201

எவன்டி அந்த எடுபட்ட பய  பக் 221
ஙோத்தாலோக்க.. எழவுவிழுந்துருச்சிடா..
குளறுபடி 6 :
நாவலில் பழமையான மதுரை நகரின் முழுமையான தோற்றம் வரவேயில்லை. திருப்பரங்குன்றமும் மீனாட்சி கோவிலும் அதை சுற்றிய சாவடி தெருக்களும் நாயக்கர் மண்டபமும், புது மண்படமும் வருகின்றதேயன்றி முந்நூறு ஆண்டுகளுக்கு முந்தைய மதுரையின் பகலிரவுகள். அங்கு வந்து போன வணிகர்கள். ஊரின் செம்மையான பழஞ்சடங்குகள். விழாக்கள். குடியிருப்புகள், மின்சாரம் வந்து சேராத நாட்களில்  பந்த வெளிச்சத்தில் பாதி இருளில் அவிழ்ந்த இரவு பொழுதுகள் எதுவும் நாவலில் தெளிவாக இல்லை.

சிலப்பதிகாரத்தில் மதுரை விவரிக்கபடுகிறது. கோவலன் மதுரையை காண்பதை பற்றிய பகுதியது. எவ்வளவு துல்லியமாகவும், விரிவாகவும் அது மதுரையை காட்டுகிறது. பரிபாடல் நமக்கு ஒரு மதுரையை நமக்கு காட்டுகிறது. வைகை ஆற்றின் வெள்ளமும் நகரமும் வியப்பாக காட்சி தருகின்றன. நெல்சன் தனது மதுரை பற்றிய நூலில் எவ்வளவு விபரங்களை தொகுத்திருக்கிறார்.

வெங்கடேசன் மனதில் மதுரையின் பழமையான பிம்பம் எதுவுமில்லை. அவர் திரும்ப திரும்ப இன்றைய வாழ்க்கையிலிருந்து கடந்த காலத்தை கட்ட முயற்சிக்கிறார். அதுவும் அவருக்கு பழக்கமாக வீதிகள், இடங்கள், அதில் மட்டுமே அவரது கவனம் குவிந்திருக்கிறது.
அல்லி அரசாணி மாலை, மதுரைவீரன் கதை பாடல் போன்ற பெரிய எழுத்துகதைகளில் கூட மதுரையை பற்றிய விசித்திரமான சித்திரங்கள் விவரிக்கபடுகின்றன. இந்தநாவலில் மதுரை என்பது பெயராக வருகின்றதேயன்றி அதன் சொல்லி தீராத நினைவுகள் பகிர்ந்து கொள்ளபடவேயில்லை. 
ஒரேயொரு சம்பவம் ,மதுரை கோட்டை கட்டப்பட்டதும் அது இடிக்கபட்டதும் அலுப்பூட்டும் அளவு திரும்ப திரும்ப சொல்லப்படுவதை தவிர்த்து மதுரையின் ஏதாவது ஒரு வீதியின் நூற்றாண்டு நினைவு இதில் விவரிக்கபட்டிருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்வேன்.
கோணங்கியின் மதுரைக்கு வந்த ஒப்பனைகாரன் சிறுகதையிலும் மதுரகவி பாஸ்கர தாஸ் நாட்குறிப்பிலும்  மதுரையை பற்றிய எத்தனையோ செய்திகள் உள்ளன. சிங்காரமும், நாகராஜனும் கூட மதுரையின் தொல் நினைவுகளை சரியான இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
தொ.பரமசிவத்தின் அழகர் கோவில் ஒரு ஆய்வு வெளிப்படுத்திய கடந்த காலச்சித்திரத்திற்கு இணையாக இதில் ஒருபக்கம் கூட இல்லை. மாறாக தொ.பரமசிவத்தின் நுட்பமான பதிவுகள் அப்படியே உருமாற்றம் பெற்று நாவலில் ஆங்காங்கே பொருத்தபட்டிருக்கின்றன என்பது தான் கொடுமை.
குளறுபடி 7 :
மனோகரா படத்தில் ஆண்வேடம் இட்டு வரும் சோழ நாட்டு ராஜகுமாரி மனோகராவோடு சண்டை போடுவாள். முடிவில் அவள் வேஷம் கலைந்து போகும். அவள் தன்னோடு சண்டை போடும்படியாக வாளை உயர்த்தும் போது என் வாள் பெண்களுடன் சண்டையிடாது என்று காதல் மொழி பேசுவான் மனோகரா. இந்த காட்சி அப்படியே சற்று உல்டா செய்யப்பட்டு பக்கம் 62ல் விஸ்வநாத நாயக்கருக்கும் துக்காதேவிக்குமாக நடக்கிறது.

இப்படி முடி அரசு  பகுதி முழுவதும் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஒடிய அரசகட்டளை, அரசிங்குளமரி, மனோகரா, மகாதேவி, வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கை சீமை, நீரும் நெருப்பும் போன்ற படங்களின் சரித்திர காட்சிகளை நினைவூட்டும் அத்யாயங்கள் நிரம்பி வழிகின்றன.

குளறுபடி 8 :  மதுரைக்கு கோட்டை கட்டியதால் மதுரை வாழ் மக்களுக்கு என்ன நல்லது கிடைத்தது. கோட்டைகள் அரசர்கள் தங்கள் பாதுகாப்பிற்கு ஏற்படுத்திக் கொண்ட கவசம். அது மக்கள் வரிபணத்தில் தங்களை பாதுகாக்க செய்து கொண்ட ஏற்பாடு. அப்படி தான் விஸ்வநாத நாயக்கர் காலத்தில் மதுரையை சுற்றி கோட்டை கட்டப்படுகிறது.
சிலப்பதிகார காலத்தில் இருந்த மதுரையிலும் சுற்று கோட்டையிருந்தது. மதுரை நகரம் தாமரைபூ வடிவத்தில் இருப்பதாகவும் அதற்கு உள்கோட்டை வெளிக்கோட்டை உண்டு என்று சாமிசிதம்பரானர் தன் நூலில் குறிப்பிடுகிறார். ஆகவே விஸ்வநாதன் கோட்டை கட்டியதில் ஒரு பெருமையும் இல்லை.
பராமரிக்கபடாத மதுரை கோட்டையை மாவட்ட கலெக்டர் பிளாக்பெர்ன் இடிக்க முடிவு செய்தவுடன் கோட்டை சுவரில் இருந்த 21 துடியான சாமிகளையும் வெளியேற்ற முயற்சிப்பதாக மக்கள் கொதித்து எழுந்தார்கள். அதற்கு பரிகார பூஜை நடந்தது என்று விரிவாக வெங்கடேசன் எழுதி போகிறார்
சமகாலத்தில் நடக்கும் சேது பாலம் விஷயத்தில் இப்படியான கடவுளின் சக்தி தான் தடையாக உள்ளது. அதை எதிர்த்து இடது சாரிகள் சூப்ரிம் கோர்ட் வரை போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த  இடது சாரி எழுத்தாளரோ மதவாத சக்திகளை விடவும் மோசமாக போய் கோட்டை சுவரில் உள்ள மொட்டை கோபுர முனியை இறக்கினால் நகரம் அழிந்துவிடும் என்பதற்கு வக்காலத்து வாங்கி முப்பது பக்கம் எழுதியிருக்கிறார். இது இடதுசாரி எண்ணங்களுக்கு எதிரானது மட்டுமில்லாது. பச்சையான மதவாதம்.
செவ்வியல் தெய்வங்களை உயர்த்தி பிடித்து உருவாகும் மதவாதம் எவ்வளவு மோசமானதோ அதே அளவே நாட்டார் தெய்வங்களை முன்னிறுத்தி அதன் நம்பிக்கைகளை கொண்டாடும் தெய்வபற்றும் கண்டிக்க வேண்டியதே.
நாட்டார் தெய்வங்களின் பின்னால் தான் சாதியின் வேர் ஆழமாக புதையுண்டிருக்கிறது. சாதியை காப்பாற்றி வைத்திருக்கும் பெரும்பலம் நாட்டார் கடவுள்களே. கவனிப்பார் இல்லாமல் கிடக்கும் காட்டு கோவில் தானே என்று கூட ஒரு சாதி வழிபடும் சாமியை இன்னொரு சாதியினர் கும்பிட்டுவிட முடியாது என்பது தான் தென்தமிழ்நாடு அறிந்த உண்மை.
வெங்கடேசனின் துடியான தெய்வங்கள் வெறும் தெய்வங்கள் மட்டுமில்லை. அவை சாதியின் பாதுகாவலர்கள். அதன் வழியே தான் சாதி ஒன்றிணைக்கபடுகிறது. இதை  விமர்சகர்கள் எப்படி சுலபமாக மறந்து வெங்கடேசனை பாராட்டுகிறார்கள் என்று தான் புரியவில்லை.
குளறுபடி 9 :
இன்னொரு பக்கம் பிளாக்பெர்ன் மதுரை கோட்டையை இடிப்பதற்கு முடிவு எடுத்த நாட்களில் மதுரை கோட்டை எப்படியிருந்தது.

Madura town, they found  it to be rectangular in outline with  its sides presented to the cardinal points. Its fortifications,  which were formerly extensive, were then much dilapidated ;  but it was still defended by a fort, and surrounded by a broad  ditch, and a double wall that originally had 72 bastions.  Each side was about three-quarters of a mile in length,

The streets were narrow, irregular, and dirty, and the houses of the  most miserable description. Large herds of cattle were often found  within the precincts of the town, and mephitic miasmata were exhaled from the stagnant basins in the vicinity of the fort.
Fullarton s Gazetteer
-
அதாவது இடிந்து  குப்பையாக இருந்தது. இந்த நிலையில் காலரா நோய் வேறு மதுரையில் பரவ துவங்கவே பிளாக்பெர்ன். கோட்டை வாசலை ஆறு இடங்களில் இடித்துவிட முடிவு செய்கிறார். இந்த வேலைக்கு குற்றவாளிகளை பயன்படுத்திக் கொள்வதற்கு நீதிமன்றத்தில் அனுமதி கேட்கிறார். மக்கள் காலராவிற்கு மருத்துவம் பார்க்க மறுத்து குலசாமிகளுக்கு வேண்டுதல் போடுகிறார்கள். இந்த நிலையில் அவர் மதுரை வீதிகளில் பாதி ஆக்ரமிப்பிற்கு உள்ளாகி இருப்பதை காண்கிறார். அதன்பிறகே கோட்டை இடிப்பது என்று முடிவு செய்கிறார்.

கோட்டை இடிப்பதற்கு முன்பு முப்பத்தியெட்டாயிரம் மக்கள் மதுரை நகரினுள் இருந்தார்கள். கோட்டை இடித்த பிறகு எட்டாயிரம் பேர் புதிதாக நகரினுள் வசிக்க வந்திருந்தார்கள்.  இதில் 1200 பேர் குயவர்கள் மற்றும் நெசவாளிகள், சாயம் போடுகின்றவர்கள் என்று ராயல் ஆசியாடிக் சொசைட்டியின் ரிக்கார்ட் வால்யூம் மூன்று  கூறுகிறது.
இன்னொரு பக்கம் கோட்டை இடித்த நாட்களில் கிழக்கிந்திய கம்பெனி அதுவரை இந்து கோவில்களுக்கு அளித்து வந்த மான்யத்தை நிறுத்தி கொண்டதாக அறிவித்தது. அதை கோட்டை இடிந்ததோடு சேர்ந்து கலெக்டர் இந்துகளின் மனதை புண்படுத்திவிட்டார் என்ற பிரச்சாரம் மேற்கொள்ளபட்டது. அதனால் பிளாக்பெர்ன் சில நாட்கள் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். பின்பு அவர் மீதான குற்றம் நிருபிக்க படவில்லை என்றும் மதுரை மாவட்ட மிஷினரி வரலாறு கூறுகிறது.
வெங்கடேசனின் நாவல் இந்த வெள்ளை அதிகார சரித்திரத்தின் பின்உள்ள உண்மைகளை நோக்கி ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை. மாறாக கோட்டையில் இருந்த முனிகள், காவல் தெய்வங்களை எப்படி சாந்திபடுத்தினார்கள் எப்படி உடுக்கு அடித்தார்கள், என்ன பலி கொடுத்தார்கள் என்று உணர்ச்சி பெருக்கெடுத்து எழுதுகிறார்.
சுயலாபங்களை நோக்கி வெள்ளை அதிகாரத்தின் சூழ்ச்சிகளை அவர் வெளிச்சமிட்டு காட்டவேயில்லை. அதே நேரம் கோட்டை இடிக்கபட்டதன் வழியே மதுரைக்குள் வசிக்க துவங்கிய அடித்தட்டு மக்களின் புது வாழ்க்கையை  பற்றிய  எவ்விதமான தெளிவும் அக்கறையும் வெங்கடேசனுக்கு இல்லை.

குளறுபடி 10 : நாவலின் உப தலைப்புகளாக  முதல் அத்யாயம் மதுரா விஜயம், ஆறாவது அத்யாயம் பாளையப்பட்டு அப்புறம்  37 வது அத்யாயம் யூனியக் ஜாக் என்று முதல் பகுதி பிரிக்கபட்டிருக்கிறது. இந்த தலைப்புகளுக்கும் உள்ளே உள்ள விஷயங்களுக்கும் ஒரு சம்பந்தமில்லை. எந்த எடிட்டர் இப்படி பகுப்பு செய்தது என்று தெரியவில்லை.
இதில் குடிமக்கள் பகுதி துவங்கியதும் உள்ள இருளெனும் கருநாகம் என்ற தலைப்பு காணப்படுகிறது. இது பி.டி.சாமி எழுதிய பேய்கதையின் தலைப்பு.
அதனால் என்ன?
சரித்திரம் எதையும் தாங்கும் தானே.

நாவலின் பிரதான கதைக்குள் போவதற்கு முந்தைய சரித்திரத்திலே இவ்வளவு தடுமாற்றங்கள். தள்ளாட்டங்கள். இதைத் தாண்டி நாவலின் கதை எதைச் சொல்கிறது என்பதை அறிந்து கொள்வது அடுத்த பகிரதப் பிரயத்தனம்.

நாயக்கர் வரலாற்றை முந்நூற்றி ஐம்பது பக்கம் எழுத தெரிந்த வெங்கடேசனுக்கு கள்ளர் வரலாற்றினை பூர்வீகத்திலிருந்து எழுத பத்து பக்கம் ஒதுக்க கூட முடியவில்லை.

நாயக்கர்களின் பூர்வீகம் பற்றி இத்தனை விபரமாக பெருமையுடன் சொல்ல முடிந்தவர் மதுரையை சுற்றியும் தமிழகம் எங்கும் உள்ள கள்ளர்களின் தாய்நிலம் எது? வறண்ட பகுதிகளில் ஏன் தங்கள் வாழ்க்கையை அமைத்து கொண்டார்கள். சங்க இலக்கியத்தில் வரும் ஆறலை கள்ளர்களும் இன்றுள்ள கள்ளர்களும் ஒன்றா? கள்ளர்களின் பூர்வீக தொழில் திருடுதல் என்பது எவ்வளவு பெரிய பொய். ஏன் கள்ளர்கள் ஒடுக்கப்பட்டார்கள் என்ற வரலாற்று உண்மைகளின் மீது அக்கறை கொள்ளவேயில்லை

அவருக்கு கள்ளர்களின் வாழ்க்கை அவலங்களை விடவும் அவர்கள் இரவில் களவு செய்யப்போவதில் தான் அதிகமான சுவராஸ்யமிருக்கிறது. இதை தான் காலம்காலமாக தமிழ் சினிமா காட்டி வருகிறது. திருடன் எப்பேர்பட்ட காவலையும் மீறி திருடிவிடுவான். அவனை போலீஸôல் ஒருநாளும் பிடிக்கவே முடியாது. திருடன் அதி புத்திசாலி. இருட்டிலும் அவனுக்கு கண் தெரியும் , அவன் ஒரு மாயாவி என்று தமிழ் சினிமா கட்டிய பிம்பத்திற்கும் அசலான கள்ளர்களின் வாழ்க்கைக்கு எவ்வளவோ வேறுபாடு இருக்கிறது.

மதுரையை சுற்றிய கள்ளர் கிராமங்களில் வாழ்ந்து வருபவர்களிடம் பேசிப்பாருங்கள். எவ்வளவு வாழ்க்கை அவலங்களை அவர்கள் கடந்து வந்திருக்கிறார்கள். எத்தனை ரணங்கள், வலிகள் அவர்களிடம் மறைந்திருக்கின்றன என்று புரியும்.

வெங்கடேசன் கள்ளர்களின் அந்த வலியை வாசகனுக்கு பகிர்ந்து தரவில்லை. தகவலாக திரட்டி நிரப்பியிருக்கிறார். வேல ராமமூர்த்தியின் எழுத்தில் வெளிப்படும் கள்ளர் வாழ்க்கையின் ரணமும் ஆற்றாமையும் உக்கிரமான கோபமும் வெங்கடேசனின் நாவலில் துளியுமில்லை.

கள்ளர் வாழ்வியல் பகுதி முழுவதும் திருடன் என்ற சினிமா பிம்பத்தை இன்னும் ஊதி பெருக்கியிருக்கிறார். மாடு திருடுதல், தானியக்கொள்ளைக்காக ரயிலில்  திருடுவது. வீடு புகுந்து கன்னம் வைப்பது என்று களவினை கொண்டாடுகிறார். ஜல்லிகட்டில்மாடு பிடிப்பதையும், பார வண்டி திருட்டையும் சிலாக்கிறார்.  இந்தக் கொண்டாட்டத்தில் அடிபட்டு போய்விடுவது அவர்களின் நிம்மதியற்ற அன்றாட வாழ்க்கை மற்றும் கள்ளர் குடும்ப பெண்களின் அல்லல்படும் பிழைப்பு.  குற்றாவளிகளாக அடையாளம் காணப்பட்டு சிறை சென்று திரும்பியவர்களை சமூகம் நடத்தும் புறக்கணிப்பு போன்றவை இந்த நாவலில் விரிவாக அடையாளம் காட்டப்படவேயில்லை.

கள்ளர் வீடுகளுக்கும் கதவிருக்கிறது. அதை பூட்டிக் கொண்டு தான் உறங்குகிறார்கள். கள்ளர் வீட்டு பெண்களின் தாலியும் தங்கம் தான் என்ற உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது. வாழ்க்கை நெருக்கடி தான் மனிதனை திருடனாக்குகிறது. எவனும் பிறப்பால் திருடன் இல்லை.

பழங்கதைகளில் வரும் திருடர்களை போல  மதுரைக்கள்ளர்கள் எப்படி திருட போனார்கள். எப்படி கன்னம் வைத்தார்கள். அதில் எந்த கோஷ்டி பிரபலமானது என்பதை இருநூறு பக்கங்களுக்கு விளக்கியிருக்கிறார். அதிலாவது ஏதாவது புதிய விஷயங்கள் இருக்கிறதா என்றால் அதுவுமில்லை

சிறுவயதில் கால் திருடன் அரை திருடன் முக்கால் திருடன் முழு திருடன் என்று நாலு திருடர்களை பற்றிய கதை ஒன்றை கேட்டிருக்கிறேன். இதில் முழுதிருடன் அப்பா, மற்ற மூவரும் பிள்ளைகள். கால் திருடன் உடைந்த மண்பானை ஒட்டை காலணா என நம்ப வைத்து ஏமாற்றுவான். அரை திருடன் ஒரு ஆளை துணைக்கு கூட்டி போய் ஜவுளிகடையில் உட்கார வைத்துவிட்டு தேவையான பொருளை வாங்கி வந்துவிடுவான். திருடன் கூட்டி போன ஆள் மாட்டிக் கொள்வான்.

முக்கால் திருடன் இதில் என்ன சவால் இருக்கிறது என்று அரண்மனைக்குள் உடும்பை போட்டு ஏறி அத்தனை காவலையும் மீறி ராணியின் கழுத்து மாலையை திருடி வருவான். இது எல்லாம் திருட்டா என்று முழுத்திருடன் திருடர்களை பிடிக்க மாறுவேஷத்தில் வந்த ராஜாவை மடக்கி, தான் உதவி செய்தவாக அவர் முத்திரை மோதிரத்தை வாங்கி கொண்டு அவரை ஒரு சாக்கில் கட்டி வைத்துவிட்டு அரண்மனைக்கு போய் முத்திரை மோதிரத்தை காட்டி வேண்டிய தங்கம் அள்ளி கொண்டு வந்துவிடுவான்.

இந்தக் கதை வேடிக்கைக்காக சொல்லப்படுகிறது. இதை சரித்திர உண்மையாக்கியிருக்கிறார் வெங்கடேசன்.

யாரும் நுழைய முடியாத திருமலை நாயக்க மன்னரின் அரண்மனைக்குள் இரண்டு கள்ளர்கள் கன்னம் வைத்து போய் ராஜ முத்திரையை திருடி வந்த காரணத்தால் அவர்களை பிடித்து வர  ஆணையிட்டு  சபைக்கு கொண்டு வந்ததும் திருடியவனுக்கு மூன்று சவுக்கடி தந்து  இனிமேல் நீங்கள் தான் மதுரை நகரை காவல் காக்க வேண்டும் என்று பட்டயம் தருகிறார். திருடனை அரசன் முன் கொண்டுவந்தவனுக்கு கள்ளநாட்டில் நீதி பரிபாலனம் செய்யும் உரிமை தருகிறார்.

திருடனும் தான் அரண்மனையில் கன்னம் வைத்த ஒட்டை அப்படியே இருக்கட்டும் என்று பணிவாக வேண்டுகோள் விடுக்கிறான். திருமலை நாயக்கரும் அதற்கும் சம்மதிக்கிறார். எவ்வளவு அப்பாவியான ராஜா. எவ்வளவு அப்பாவியான மக்கள். திருடன் கையில் கஜானா சாவியை ஒப்படைத்து விடுவது என்பது எவ்வளவு பெரிய ராஜதந்திரம் .

இதுதான் கள்ளர்களின் வீரபரம்பரை சான்று என்று நாவலின் இரண்டாம் பகுதி கூறுகிறது.

கள்ளர்கள் மதுரையை காவல் புரிந்தார்கள் என்று புகழாரம் சூட்டுகிறது. சரி காவல் புரிந்தார்கள். யாருக்கு. எதற்காக, யாரிடமிருந்து ? சம்பளத்திற்காக செய்த வேலை தானே அது. அவர்கள் வாழ்க்கை அப்போது எப்படியிருந்தது. மதுரை நகரையே காவல் காக்கின்றவன் என்பதற்காக மாநகரில் அவர்கள் தங்கி கொள்ள வசதி செய்யபட்டிருந்தா? இல்லை அவர்கள் மனைவி மக்கள் அரசு அதிகாரத்தில் பங்கு பெற அனுமதிக்கபட்டார்களா, இல்லையே? மீனாட்சி அம்மன் கோவிலில் கள்ளர்களுக்கு என்ன மரியாதை தரப்பட்டது.? கள்ளழகர் உருவான கதை அறிந்தவர்கள் அதன் பின் உள்ள புறக்கணிப்பின் வலியை அறியாமலா இருப்பார்கள்?

கள்ளர்களை ஒடுக்குவதற்கு நாயக்கர் செய்த தந்திரமே இந்தக் காவல் முறை. தன் கையை வைத்து தன் கண்ணைக் குத்தி கொள்ள வைப்பது போன்றது.
மதுரை வீரன் கதையில் கள்ளர்கூட்டத்தை ஒடுக்குவதற்காக மதுரை வீரன் வந்தான். ஒடுக்கினான் என்று நாட்டார் கதை பேசுகிறதே. அது நாயக்கர் காலத்தில் தானே நடந்தது. ராமேஸ்வரம் போகின்ற யாத்ரீகர்களை கொன்று வழிப்பறி செய்தார்கள் என்ற குற்றசாட்டுகள் லண்டன் நீதிமன்றம் வரை சென்ற வழக்குகளை இன்றைக்கும் வாசிக்க முடிகிறதே?


கள்ளர்கள் கிராமங்களில் காவல் பணி புரிவதும், வரி வசூலில் ஈடுபட்டு வந்ததிற்கும் நாயக்கர் காலத்திற்கு முன்பே நிறைய சான்றுகள் இருக்கின்றன. வெங்கடேசன் நாயக்கர்களால் தான் கள்ளர்கள் நல்வாழ்வு பெற்றார்கள் என்று நாயக்கர் பெருமையை உயர்த்தி பிடிக்கவே மறைமுகமாக முயற்சித்திருக்கிறார்.

மதுரை மாநகர் காவல் தான் கள்ளர்களுக்கு கிடைத்த பெரிய பேறு என்று வைத்துக் கொண்டாலும் காவல் பணிக்கு எத்தனை பேர் போயிருப்பார்கள். அதிகம் சென்றால் நூறு பேர் போயிருக்க கூடும். மற்றவர்கள். தாதனூரை தவிர மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் வாழ்ந்த கள்ளர்கள் எதை நம்பி வாழ்ந்தார்கள். மதுரை ஏன் அவர்களை உள்வாங்கிக் கொள்ளவில்லை. எது அவர்களை தொடர்ந்து இருண்ட மூலைகளில் குற்றசமூகமாகவே வைத்திருந்தது.

மதுரையின் மேற்கில் உள்ள கீழக்குயில்குடி கிராமத்தை தான் வெங்கடேசன் உருமாற்றி புனைஉருவம் தந்திருக்கிறார். இந்த கிராமம் குற்றபரம்பரை சட்டத்தில் பாதிப்பு அடைந்த கிராமம். ஊரின் வடபுறத்தில் சமண மலை ஒன்றும் சமண பிரதிமைகளும் காணப்படுகின்றன. மலையின் உச்சியில் ஆடுஉறிச்சான் பாறை என்று ஒன்று காணப்படுகிறது. அங்கே திருடி கொண்டு போன ஆட்டை உறிப்பார்கள். இந்த ஊர் பற்றிய ரிக்காடுகளே அவரது நாவலின் முக்கிய அம்சம்.

அந்த ஊரின் துயர்படிந்த வரலாற்றையாவது  முழுமையாக சித்திரிக்க முடிந்திருக்கிறதா என்றால் அதிலும் தோல்வியே. தரவுகள், தகவல்கள் கையில் இருந்த போதும் கதையாக்க முடியாத அவரது எழுத்து தோல்வியே பக்கம் பக்கமாக பிரசங்கம் போல நீட்டி செல்கிறது.

திருடுவது, பிடிபடுவது, விசாரணை, தண்டனை, மறுபடியும் அதன் தொடர்ச்சியான வன்கொலை என்று சலிப்பூட்டுகின்றன சம்பவங்கள். அதை தினுசு தினுசாக மாற்றி சொல்லிபார்த்திருக்கிறார்.

தேர்தல் சுற்றுபயணம் போகின்றவர்கள் ஒரு நாளில் எண்பது கிராமங்களை வட்டமடித்து வருவதை போல தான் நாவலும் மாறிமாறி வட்டமடிக்கிறது. தாதனூர் . பிறகு உசிலம்பட்டி , பிறகு கம்பம் .அதற்குள்  பெரியார் அணைகட்டு. இடையிடையில் மதுரை.

பெரியார் அணை கட்டுவதில் ஈடுபட்ட கள்ளர் இன மக்களின் வம்பாடுகளை, உயிரிழப்பை பற்றி நிறைய நானே கேள்விபட்டிருக்கிறேன். அணைக்கட்டு வேலையில் இறந்து போனவர்களின் கல்லறைகளை நேரில் பார்த்திருக்கிறேன். கொட்டும் மழையும் நோயும் விஷக்கொசுக்கடியும் உள்ள சூழலில் அவர்கள் ஒன்றிணைந்து அணையை உருவாக்கிய அந்த பிரம்மாண்ட கனவு நாவலில் காற்றில் பறக்கும் இலவம்பஞ்சு போல போய்விடுகிறது. பென்னி குக்கின் வருகையும் அவரது அணைக்கட்டு முயற்சிகளும் தனித்து விரிவாக எழுதப்பட வேண்டிய நாவலது.

பெரியார்அணை முடிந்தவுடன் நீர்பங்கீடு அடுத்தது சிடி ஆக்ட் எனப்படும் குற்றப்பரம்பரை சட்டத்திற்கு தாவி செல்கிறார்..

குற்றபரம்பரை சட்டம் கள்ளர்களை ஒடுக்குவதற்காக மட்டும் போடப்பட்ட சட்டமல்ல. மாறாக இந்த சட்டம் கொண்டு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் உப்புக் குறவர்கள்.அவர்கள் ஊர் ஊராக போய் உப்பு விற்றார்கள். வெள்ளை அரசாங்கம் உப்பை தாங்களே வாங்கி விற்க துவங்கிய பிறகு இவர்களை ஒடுக்க நினைத்தது. ஆனால் அவர்களை கட்டுபடுத்த முடியவில்லை.

இந்த நேரம் இந்தியாவில் ரயில் போக்குவரத்து துவங்கவே உப்பு குறவர்களை ஒடுக்குவதற்காக அந்த இனமே திருடர்கள் என்று அறிவித்து அவர்களை குற்றவாளிகள் ஆக்கியது. அப்போது தான் இந்த சட்டம் மறுஉயிர்ப்புபெற்றது.

உடனே இந்த சட்டத்தை பயன்படுத்தி தொல்லை தரும் நபர்களை ஒடுக்கிவிடலாம் என்று காவல் உயரதிகாரிகள் சொன்ன ஆலோசனை படியே பல்வேறு மாநிலங்களிலும் உள்ள ஆதிவாசிகள், அடித்தட்டு இனங்களை, குற்றக்குழுக்களை ஒன்றிணைத்து குற்றபரம்பரை சட்டம்  (The Criminal Tribes Act  ) 1871 அமுலுக்கு வந்தது. அதன் திருத்தபட்ட வடிவம் 1911ல் ஏற்றுக் கொள்ளபட்டு நடை முறைபடுத்தபட்டது.



இந்த நடைமுறைபடுத்தலுக்கான வழிகாட்டும் குழுவில் ராமானுஜம் அய்யங்கார் என்ற தமிழ் காவல் துறை அதிகாரிசெயல்பட்டிருக்கிறார். வங்காளத்தில் இருந்த நதிக் கொள்ளையர்கள் மற்றும் வடமாநிலங்களில் இருந்த நாடோடி வழிப்பறி கொள்ளைகளையும் தடுக்க இந்த முயற்சி தீவிரப்படுத்தபட்டது.



இந்தியா முழுவதும் 160 சாதிகளின் மீது இந்த சட்டம் பாய்ந்திருக்கிறது. இதில் சில இன்றும் நடைமுறையில் இருக்கிறது. வங்காள எழுத்தாளர் மகேஸ்வததா தேவி குற்றப்பரம்பரையான ஆதிவாசிகளின் உரிமைக்காக இன்றும் போராடிவருகிறார்.


தமிழ்நாட்டில் இந்த சட்டம் பெரிதும் அதிகார வர்க்கத்தின் நலனுக்ககாவே நடைமுறைபடுத்தபட்டது. அதை எதிர்த்து பெருங்காமநல்லூரில் போலீஸôருடன் துப்பாக்கி சூடு நடந்து பலர் உயிர்பலியானர்கள். எதிர்ப்பு வலுத்தது.  முத்துராமலிங்க தேவருடன் பி. ராமமூர்த்தி  ஜீவானந்தம் போன்ற தலைவர்கள் போராடி அந்த சட்டத்தை ரத்து செய்தார்கள் என்பதே வரலாறு.


குற்றபரம்பரை சடடம் பற்றி பேசும் போது அதில் விவசாய நிலம் கொண்டவர்கள். நில வரி கட்டுபவர் விதி விலக்கு பெற்றதும், தஞ்சாவூர் பகுதியில் வாழ்ந்த கள்ளர் இன மக்கள் மீது இந்த சட்டம் தீவிரமாக பாயவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.


ஏன் மதுரையின் மேற்கில் உள்ள கள்ளர் கிராமங்கள் அடைந்த பாதிப்பை ஆற்று பாசனம் சார்ந்த கிராமம் அடையவில்லை, கிழக்கே  ராமநாதபுர பகுதி அதிகம் பாதிப்பு கொள்ளவில்லை. ஆகவே இது முழுமையான அரசு அதிகாரத்தின் ஒடுக்குமுறை சட்டமாகவே அமுல்படுத்தபட்டிருக்கிறது


வெங்கடேசன் மேடை பேச்சை போல குற்றபரம்பரை தரவுகளை  அடுக்கி கட்டியிருக்கிறார். சிடி ஆக்டின் பாதிப்போ. மறுவாழ்வு தருகிறோம் என்ற பெயரில் நடைபெற்ற அதிகார கூத்துகளோ மனதை பாதிப்பதாக அமையவில்லை.


குற்றபரம்பரை சட்டம் ஒழிக்கபடுவதன் முன்பே நாவல் முடிந்து போய்விடுகிறது. எப்படி இதிலிருந்து மக்கள் விடுதலை ஆனார்கள் என்பதில் தான் ஒன்றுபட்ட மக்களின் முயற்சியும் ஆவேசமும் உள்ளது. அதை நாவல் கவனம் கொள்ளவேயில்லை.


அதே நேரம் இவ்வளவு அரும்பாடுபட்டு தங்கள் உரிமைகளை பாதுகாத்துகொண்ட மக்கள் இன்று தனது சகமனிதர்களான தலித் மக்களை தேர்தலில் நிற்கவிடாமல் தடுப்பதும் அவர்கள் அடிப்படை உரிமையை பறித்து வன்கொலை செய்வதும் அதே மதுரை பகுதியில் தான் நடந்துவருகிறது என்ற சமூக உண்மையை மறந்து இந்த நாவலை வாசிக்க முடியவில்லை.


நாவல் சிடி ஆக்ட் பற்றிய நிறைய ஆவணங்களை ஒன்று சேர்த்திருக்கிறது. அவை எல்லாம் கீழக்குயில் குடி ஆவணங்கள் தான். அந்த  ஆவணங்களின் உதவியால் மட்டும் மனித அவமானத்தின் வலியை எழுத்தில் கொண்டுவர இயலவில்லை.


ரயில் வருகை, பள்ளிகளின் வருகை, போலீஸ் ஸ்டேஷன் அமைக்கபட்டது என்று தனிதனி அத்யாயம் போட்டு பிரித்து எழுதிய வெங்கடேசன் கண்டு கொள்ளாமல் விட்டு போன முக்கிய விஷயம் கிறிஸ்துவத்தின் வருகைûயும் அது மதுரை சீமையில் ஏற்படுத்திய உள்ளார்ந்த கொந்தளிப்பும்.
பசுமலையில் உள்ள மதுரை மிஷினரி பற்றி ஏற்படுத்தி பள்ளி ,போதகர்கள் சேவை பற்றி போகிற போக்கில் சொல்லி போக தெரிந்தவருக்கு மதுரை மிஷனரியின்  75 ஆண்டுகால வரலாற்றின் இருண்ட பக்கங்களை புரட்டி  எழுத வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை .



நாயக்க மன்னர்களின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக இருந்தது கிறிஸ்துவரின் வருகையும் அதை தொடர்ந்த மதமாற்றங்களும். அவர்களை ஏற்றுக் கொள்வதாக அல்லது ஒதுக்கி வைப்பதா என்று தெரியாத குழப்பம் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் மறவர் நாட்டில் கிறிஸ்துவம் நுழைவதற்கு வெளிப்படையான எதிர்ப்பு இருந்தது. பிரசங்கிகள் தாக்கபட்டார்கள். அடித்து காயப்படுத்தபட்டார்கள்.


ஜெசுவிட் பாதிரி ஒருவர் தனது சபைக்கு எழுதிய கடிதம் ஒன்றில் பிரசங்கம் செய்ய போகின்றவர்களின் பல்லை உடைக்கிறார்கள். அதையும் மீறி சென்றால் பிடித்து சிறையில் இடுகிறார்கள். திரும்பவும் அந்த பகுதிக்கு போனால் தலையை துண்டித்துவிடுகிறார்கள் என்று புகார் சொல்கிறார்.


உடனே திருச்சபை வெளிநாட்டிலிருந்து வரும் பாதிரிகள் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து இதற்காக இன்றுள்ள களியக்காவிளை பகுதியில் தமிழ் கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்கிறது.
அங்கே பயின்று பிரசங்கத்திற்கு வந்தவர்கள் தங்களை ஐயர் என்று சொல்லிக் கொண்டுவேஷ்டி அணிந்திருந்தார்கள். சைவம் மட்டுமே சாப்பிட்டார்கள். அப்படியும் அவர்களால் தங்கள் மத நம்பிக்கையை மக்களிடம் சுலபமாக கொண்டு போக முடியவில்லை என்று ஜெசுவிட் மிஷனரி ஏடுகள் தெரிவிக்கின்றன.



இன்னொரு பக்கம் கடற்கரை பகுதியில் உள்ள மீனவ மக்கள் கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொண்டனர். போர்த்துகீசியர் அதற்கு நிதி நல்கை தந்தனர் என்பதால் போர்த்துகீசிய வணிகர்கள் அந்த பகுதிகளில் வரிவிலக்கோடு வணிகம் செய்ய அனுமதிக்கட்டனர். அது நிர்வாக குழப்பத்தை ஏற்படுத்தியது.


ஒவ்வொரு நாயக்க மன்னிரின் முன்னாலும் இருந்த முக்கிய கேள்வி கிறிஸ்துவ போதகர்களை என்ன செய்வது. எப்படி நடத்துவது என்பதே. ஆராய்ந்து பார்த்தால் பல அரசியல் மாற்றங்களின் பின்னே இந்த காரணம் ஆழமாக வேரோடியிருக்கிறது.

மறவர் இந்திர மரபினரா?

(போட்டு உடைக்கபடவேண்டிய கட்டுக்கதை)


கள்ளர், மறவர், அகமுடையார் இந்திர மரபினர் என இகழ்ந்து கூறி வருகின்றனர்.இவர்கள் இந்திர மரபினரா அல்லது இவர்களை அப்படி கூற காரனம் என்ன.இந்த பொய்மையை போட்டுடைக்கவே இந்தக்கட்டுரை.

அகலிகை-இந்திரன் புரட்டுக்கதை:

இப்பெயர் வர காரணம் பற்றி எட்கர் தார்ஸ்டன் கருத்துப்படி ஒரு காலத்தில் கௌதமரிஷி என்பவர் தன்னுடைய மனைவியை தனியாக விட்டுவிட்டு வெளிய10ர் சென்றுவிட்டார். அப்போது இந்திரன் வீட்டினுள் நுழைந்து கௌதம முனிவருடைய மனைவியின் அழகில் மயங்கி அவளோடு உறவு கொண்டதால் மூன்று குழந்தைகள் பிறந்தன. முனிவர் திரும்பி வந்தபோது ஒரு குழந்தை கதவுக்கு பின்னால் கள்ளத்தனமாக ஒளிந்து இருந்ததால் கள்ளன் என்றும் மற்றொருவன் மரக்கிளையின் மீது அமர்ந்து இருந்ததால் மறவன் என்றும், மற்றொருவன் தைரியமாக வீட்டின் முன்புறம் நின்று கொண்டு இருந்ததால் அகமுடையான் (அகந்தை) என்றும் அழைக்கப்பட்டார்கள்.இவ்வாறு எட்கர் தார்ஸ்டன் செவிவழிச் செய்தியைக் கேட்டு தன்னுடைய புத்தகத்தில் எழுதியிருந்தாலும் வரலாற்று நோக்குடன் பார்க்கும் பொழுது இக்கொள்கை ஏற்புடையது அல்ல.மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டான் என்ற வார்த்தையில் மரம் என்ற சொல்லில் ரகரம் இடையினம். ஆனால் மறவன் என்ற சொல்லில் உள்ள எழுத்து வல்லின றகரமாக இருப்பதால் இவ்வொப்புமை ஏற்புடையதல்ல. மரம் என்பதன் பொருள் மறம் என்பதோடு எவ்வகையிலும் தொடர்பு இல்லாதது. ஏற்றுக் கொள்ள முடியாதது என்பது திண்ணம்.

வம்சாவளிகளும்-சாதிய புராணநூலகளும் உருவாக காரனம் என்ன?

1850-ஆம் ஆண்டு ஆங்கில அரசு ஒவ்வொரு பளையங்ககளின் மரபு,உரிமை மற்று ஆதரத்தை சமர்பிக்குமறு ஆனயிட்டது முறையில்லாத,வம்சமழிந்த அரசுகளை தன் அரசாங்கத்தில் சேர்க்குமாரு ஆனையிட்டனர். எனவே அனைத்துப் பளையங்களும் தனித்தனியே வம்சாவளிகளை எழுதிக்கொண்டனர். இதில் புரானம்,இதிகாசம் முதலிய நிழ்வுகளை தம்முடன் இனைத்து எழுதினர் ராமயன,மஹாபாரத கதைகளை தம்முடன் இனைத்து எழுதினர். நாயக்க பளையங்களின் கதைகள் முகமதியருக்கு பெண்தர மறுத்து நாட்டை விட்டு புதிய நாட்டிற்கு இடம் பெயர்ந்ததை குறிப்பிட்டு இருந்ததன. இதற்கு அடுத்து பெரும்பான்மையான் மறவர் பாளயபட்டுகள் அனைத்தும் திருவிளையாடற்புரானம் மற்றும் பெரியபுரான நிகழ்வுகளில் தம் வம்சாவளியில் இனைத்து எழுதின. இக்காலகட்டத்தில் சாதியையும் தொழிலையும் நியாயப் படுத்தி சாதி நூல்கள் எழுதப்பட்டன.
1. சிலை எழுபது – கம்பர்
2. ஏரெழுபது – கம்பர்
3. ஈட்டி எழுபது – ஒட்டக்கூத்தர்
இம்மூன்று நூல்களும் ஒவ்வொரு சாதியைப் பற்றியும் பேசுகிறது. சிலை எழுபது என்ற நூல் வன்னிய சாதி பற்றியது. இந்நூலில் `சாதியில் உயர்ந்த வன்னியர்கள், அக்கினியில் உதித்த வன்னியர்கள் என்றெல்லாம் வன்னியர்கள் உயர்வாக குறிப்பிடப் படுகின்றனர். மற்றொரு நூலான ஏரெழுபதில் வேளாளர்கள் உயர்வாகக் குறிப்பிடப்படுகின்றனர். `செல்வம் பெருகுதலைக் கொண்ட வேளாளர்கள் என்று வேளாளர்கள் சிறப்பாகப் பேசப்படுகின்றனர். வேளாளரை சிறப்பிக்கும் ஒரு பாடலின் கருத்து வருமாறு : `பிறரால் வணங்கப்படும் அந்தணர் குடியில் பிறப்பதால் என்ன பயன்? ஒளிவீசும் மணி முடியை அணிந்த சிறப்புப் பெறுகின்ற அரசர் குலத்தில் பிறப்பதால் என்ன பயன்? அந்தணர், அரசர் என்னும் குலங்களை விடுத்து வணிகத் தொழில் புரியும் செல்வவளம் மிக்கவர்களின் குலத்தில் பிறப்பதால் என்ன பயன்? அத்தகைய சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் என்ன? உழவுத்தொழில் செய்யும் குலமாகிய வேளாளர் குலத்தில் பிறந்தவர்களே உலக உயிர்களைப் பசியாகிய நோயில் இருந்து காப்பதற்காகப் பிறந்தவர்களாவர். (ஏரெழுபது. பாடல் எண்.8, 2007:9) வேளாளர்கள் இல்லையெனில் விவசாயம் நடைபெறாது என்றும் தொழில் அடிப்படையில் வேளாளர்கள் உயர்ந்தவர்கள் என்றும் இந்நூல் கட்டமைக்கிறது. இவ்விரண்டு நூல்களையும் எழுதியது கம்பர். இவர் கம்பராமாயணத்தை எழுதிய கம்பரா? அல்லது பிற்காலத்தைச் சேர்ந்த வேறு கம்பரா? என்ற விவாதம் ஆய்வாளர்களிடம் உள்ளது. ஒரே ஆசிரியரே ஏன் இருவேறு சாதிகளைப் பற்றி நூல் எழுத வேண்டும்? என்ற கேள்வியும் எழுகிறது. ஒவ்வொரு சாதியினரும் தங்கள் சாதி வரலாற்றை எழுதும்படி பாண்டித்தியம் உள்ள புலவர் மரபினரிடம் கேட்க அதனை அவர்கள் ஏற்று எழுதிக் கொடுத்துள்ளனர் என்பதை இதனூடாக அறிய முடிகிறது. இதுபோல் ஒட்டக்கூத்தரால் எழுதப்பட்ட `ஈட்டி எழுபது என்ற சாதி நூல் செங்குந்தர்களைப் பற்றி பேசுகிறது. இதில் சிவபெருமான் வழியில் வந்தவர்களாக செங்குந்தர்களின் பெருமை கூறப்படுகிறது. மேற்கண்ட இம்மூன்று சாதி நூல்களும் பிற சாதியினரைப் பற்றி குறைத்துக் கூறவில்லை. மாறாக தம் சாதிப் பெருமையை எடுத்துக் கூறுவதற்காகவே உருவாக்கப்பட்டவை.

உனமையில் சிலைஎழுபதோ,ஏரெழுபதோ அல்லது ஈட்டி எழுபதோ கம்பரோ அல்லது ஒட்டக்கூத்தரோ எழுதவில்லை கம்பராமயனம் எழுதிய கம்பரோ,விக்கிரம்சோழனுலா எழுதிய ஒட்டக்கூத்தரோ இந்த நூல்களை எழுதவில்லை அவர்களின் கவிதையின் தமிழ்ந்டைக்கு முற்றிலும் புரம்பாக எழுதபட்டது.இது கம்பர்,ஒட்டக்கூத்தர் பெயரில் 18-ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் எழுதபட்டது என்பதே வரலாற்று உனமை.

புதுக்கோட்டை தெலுங்கு புலவர் வெங்கண்ணாவால் வந்த வினை:
இதைப்போலவே புதுக்கோட்டை தொண்டைமான் மன்னரும் தம் சம்ஸ்தானத்துக்கான வம்சாவளி கதையினை கற்பனை கலந்து எழுத முனைந்தனர்.புதுக்கோட்டை சம்ஸ்தான புலவர் வெங்கண்ணா கள்ளகேசரி,பூவிந்திரபுராணம்,தொண்டைமான் வம்சாவளி போன்ற சாதிய நூல்களை எழுதியவர் .இவர் கட்டவிழ்த்து விட்ட கட்டுக்கதை தான் இந்திரன்-அகலிகை கதை.

சங்க கால தொண்டைமான் இளந்திரையன் சோழ மன்னன் நலங்கிள்ளிக்கும் நாககன்னிகைக்கும் பிறந்தவன் என மனிமேகலையும்,பதிற்றுபத்தும் கூறுகின்றது.இந்த தொண்டைமான் இளந்திரையனை தான் இந்திரன் என தவராக கருதி.தொண்டைமான் இந்திரன் வம்சாவளியில் அந்த கதையை எழுதிவிட்டனர். அது அந்த காலக்கட்டத்தில் ஓலைசுவட்யில் ஏற்பட்ட பிழையா அல்லது புனைவா என தெரியவில்லை.இளந்திரையன் தான் வெங்கண்ணாவால் இந்திரன் ஆனார்.

இந்த கருமத்தை தவராக பொருள் கொண்டுதான் ராஜாளியர் "இந்திர குலாதிபர் சங்கம்" என்று முக்குலத்தோர் சங்கத்தை தொடங்கினார்.இந்த ஆதாரத்தை கொண்டு தான் வேங்கடசாமி நாட்டார் முக்குலத்தோரை இந்திரமரபினர் என 'கள்ளர் சரித்திரம்' எழுதினார்.

எட்கர் தர்ஸ்டனும் இந்த ஆதாரத்தை வைத்து தான் முக்குலத்தோர் அகலிகை கதையை ஆராய்ந்தார்.
இதனால் தான் பல பேரின் கேவல தூற்றுதலுக்கு ஆளானோம்.

இந்திரன் தமிழ் கடவுளா?

முதலில் இந்திரன் தமிழ் கடவுளா.தமிழக புராணங்களும் இந்திய இதிகாசங்களும் கூறும் இந்திரன் நம் நாட்டின் கடவுளே அல்ல அது ஆரியரால் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட கிரேக்க கடவுள் ஜீயுஸ்(zEUS).இந்திரன் மழைக்கான கடவுளாக பார்க்கபட்டான்.அதனால் வேளாளர்கள் இந்திரனை தெய்வமாக வனங்கினர்.வேளாளரின் கொத்தடிமைகளான் ஜாதிகளும் வணங்கி தங்கள் குல தலைவனாக இந்திரனை கூறுகின்றனர்.இது நமக்கு எந்த வகையில் பொருந்தும் நாம் என்ன உழுகுடியா.

முக்குலத்தோர் இந்திர மரபினர் என்பது கட்டுக்கதையே:

மேலும் மறவர்கள் திராவிட இனத்தைச் சேர்ந்த முதல் குடிமக்கள் என்று எட்கர் தார்ஸ்டன் கூறியுள்ளார். ஆனால் இந்திரன், அகலிகை ஆகிய ஆரியர் இருவர் சேர்க்கையால் தோன்றிய இனம் (கள்ளர்,மறவர்,அகமுடையர்) என்று சொல்வது இவர்களை இழிவுபடுத்துவதற்காகவே சொல்லப்பட்டதாக எடுத்துக் கொள்ளலாம்.
மறவர் மூவேந்தருக்குமான முதல் படைவீரராய் திகழ்ந்து அந்த வேந்தர் சூடிய பட்டங்களை சூடுவது இயற்கையே.ஆனால் இவர்களை இந்திர மரபினர் என்று கூற எந்த இதிகாச ஆதாரமோ அல்லது இலக்கிய அதாரமோ கிடையாது.

முக்குலத்தோரை இந்திர மரபினர் என கூறுவது கிராமத்தில் கானப்படும் நையாண்டி கதைப்போல

"மலடி மகன் முயல் கொம்பேறி சந்திர மண்டலத்துக்கு தாவினான்"


என்ற கதையில் எந்த அளவு உன்மையையோ அந்த அளவு தான் இந்த உன்மையும்.நம்மை கேலிப்பேச்சுக்கும்,வக்கிரப்பேச்சுக்கும் ஆளாக்கும் இது போல கதைகளை பொய்யாக்க வேண்டும்.சங்க இலக்கியங்களிலும் வரலாறுகளிலும் நம் புகழ் எவ்வளவோ இருக்கும் பொழுது இந்த மாதிரி அர்த்தம் பொருத்தமற்ற கட்டுக்கதைகளை உடைத்து நம் இனத்தின் மரியாதையை காப்பாற்றவேண்டும்.

சேரமான் பெருமாள் சுருதிமான் குலசேகரர் பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள்.



சேரர்களின் வம்சமான மலையமான்களின் பார்க்கவ வம்சத்தில் மலையமான்,நத்தமான்,சுருதிமான் என்று மூன்று பகுப்புகள் உள்ளது.குல முதல்வராக தெய்வீகனின் புராணம் கூறப்படுகிறது.பாரி மகளிரை தெய்வீகன் மணந்ததாக கூறப்படுவதற்கு ஆதாரங்கள் அநேகம் இருந்தாலும் அதே தெய்வீகனது மக்களாக கூறப்படும் நரசிங்க முனையரையர்,மெய்ப்பொருள் நாயனார்,சுருதிமான் குலசேகரன் இவர்களின் காலம் கி.பி ஏழு முதல் எட்டாம் நூற்றாண்டுகளுக்குள் உள்ளது.
மேலும் இம்மூவரும் சகோதரர் என்று கூறப்பட்டுள்ளது.சகோதரர் என்னும் போது மூவரும் ஒரே சேர வம்சத்தை சேர்ந்த மன்னர்கள் என்பதே உண்மையாகும்.தெய்வீக ராஜனின் காலமும் இவர்களின் காலமும் வேறுபட்டாலும்  தெய்வீகன் மலையமான்  நரசிம்ம உடையானின் பார்க்கவ வம்சத்தின் வம்சாவழியில் வந்தவர்கள் தான் இவர்கள் மூவரும் என்ற தகவலை பனிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தெய்வீக ராஜன் பற்றிய செப்பேடு உறுதி செய்கிறது.

மேலும் நாயன்மார் இருவர் சேதிநாட்டில் ஒரே கால கட்டத்தில் ஆண்டதனாலும் சைவ சமயம் சிறந்து விளங்கிய கால கட்டத்தில் மெய்ப்பொருள் மன்னர்,நரசிங்க முனையரையர் இருவரது பெருமையும் கொண்டாடப்பட்டது.சுருதிமான் குலசேகரர் பற்றிய தகவல்கள் ஓரளவு  காணப்படும்.
அதில் அவர் சுருதிகள்(வேதங்கள்)பல கற்றவர்,பாண்டியன் மகளை மணந்தவர், எல்லா வித்தைகளிலும் சிறந்தவர்.பக்தியின் பாற்பட்டு நாட்டைத் துறந்து தேசாந்திரம் சென்றவர்.என்பன போன்ற குறிப்புகள் காணப்படும்.
சுருதி என்பது வேதத்தை மட்டுமல்லாது ஆதி,பண்டைய,மூலம்   என்ற பொருளும் உடையது.ஆகவே தான் சுருதிமான்கள்  இக்குலத்தின் ஆதி மூலமான முதன்மையானவர் என்ற பொருளுடைய மூப்பனார் என்ற பட்டம் உடையோர் ஆனார்கள்.
மெய்ப்பொருளார் மற்றும் நரசிங்க முனையரையர் பற்றிய குறிப்புகள் பெரிய புராணம் வாயிலாக கிடைத்துள்ள நமக்கு குலசேகரர் பற்றி ஏதும் குறிப்புகள் இல்லாமல் போகவில்லை.சைவ மதப்பற்றால் மறைக்கப்பட்டுள்ளது.சைவம் ஓங்கியிருந்த அக்காலத்தே வைணவ ஆழ்வாரான குலசேகரர் அடையாளம் காட்டப்படாமல் பொதுவாக சுருதிமான் குலசேகரர் என குறிக்கப்பட்டுள்ளார்.
கருவூர் கொல்லி மாநகரை தலைநகராக கொண்ட சேர மன்னனான குலசேகரர் கொங்கர் கோமான் என்று அழைக்கப்பட்டார்.பார்க்கவ குலத்தவர்களும் கொங்கராயர் என்ற பட்டம் உடையோர்.
சுருதிமான் என்பதன் முழுமையான அர்த்தம் எல்லாவற்றிலும் சிறந்தவர் என்பதே.சுருதிகளில்,போர் பயிற்சிகளில் தேர்ந்தவர்.

அதே போல் குலசேகர ஆழ்வாரும் சுருதிகளில் தேர்ந்தவராயும்,போர் செய்வதில் வல்லமை உடையவராயும் காணப்படுகிறார். 
ராம காதையால் ஈர்க்கப்பட்டு திருவாய் திருமொழி என்ற பாடல்களை ஆழ்வார் பாடியுள்ளார்.இவரின் வீரத்தை கண்டு பாண்டியன் தன் மகளை இவர்க்கு மணம் செய்வித்ததாக அறிய முடிகிறது.ஆழ்வாரது பாடல்கள் பெருமாள் திருமொழி என்று அழைக்கப்படும்.
சுருதிமான் குலசேகரரும் பாண்டியன் மகளை மணந்ததாக உள்ளது. 
எல்லாவற்றிற்கும் மேலாக குலசேகர ஆழ்வார் பக்தி காரணமாக
 "ஆனான செல்வத்துஅரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்” என்று கூறி நாடு துறந்து துறவு பூண்டு திருவரங்கம் சென்றார்.
சுருதிமான் குலசேகரரும் பக்தி காரணமாக நாடு துறந்து துறவறம் பூண்டு திருக்கோவில்களுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அநேக ஒற்றுமை உள்ள இருவரது வரலாறும் இருவரும் ஒருவரே என்பதை  தெளிவாக உணர்த்தும்.
பார்க்கவ வம்சத்தில் சைவ மதம் வலிமை பெற்று விளங்கிய காரணத்தாலும் அனைவரும் தீவிர சைவர்கள் ஆக இருந்ததாலும் சுருதிமான் குலசேகரனே  குலசேகர ஆழ்வார் என்ற தகவல் வெளிப்படுத்தப்படவில்லை.தலையாய காரணமாக வன்னியப் பட்டம் கொண்டதால் வேறு ஒரு இனக்குழுவிலும் இணைக்கப்பட்ட நம் மக்களின் சிலரது உரிமையைக் கொண்டே சேரமான் குலசேகரரை வேறு ஒரு இனத்தோர் உரிமைகொள்ளும் படி ஆனது.அன்றைக்கு சூழலில் அந்நியரின் அரசியல் வழி நடத்தலால் பார்க்கவர்களும் குலப்பெருமை கோராது அறியாமையாக வாளாதிருந்திருக்கின்றனர். குலசேகரர் என்றால் குலத்தின் சிகரமானவர் என்று பொருள் உண்டு.குலத்தின் சிகரமான ஆழ்வாரை,நம்  மலையமான்கள் அருமை உணராது உரிமைகோராது இருந்து கொண்டனர்.அதே வேளையில் (வன்னியர் பட்டத்தால்)வேற்று இனக்குழுவில் அறியாமையால் இணைந்த நம் உடையார் இன மக்களின் மூலமாக குலசேகர ஆழ்வாரை குல உயர்வு செய்தே ஆக வேண்டிய நிலையில் அன்றைக்கு இருந்தோர் சத்திரிய பெருமை வேண்டி தமது இனம் என்று உரிமை கூறிக் கொண்டனர்.ஏனெனில் நம் பார்க்கவ குல அரசர்களை உரிமை கோரினால் மட்டுமே சத்திரியர் என்று பட்டம் பெற முடியும்.

இவர்கள் அனைவரும் காட்டும் ஜாதி நூல்கள் எல்லாம் பொதுவில் சமர்ப்பிக்க ஆதாரம் வேண்டி தந்திரமாக புனைவாக  பிற்காலத்தில் எழுதிக்கொண்டவையே. 

இவர்கள் காட்டிய பாதையில் போய் சத்திரியர் என்று கூறிக்கொள்ள தந்திரம் பல செய்தனர் மற்றொரு பிரிவினர்.காரணம் பின்னாளில் இவர்களின் முந்நாளைய ஒடுக்கப்பட்ட வரலாற்றை கூறி யாரேனும் இழிவுண்டாக்க முனைந்தால் அப்போது உள்ள இவர்களின்  சந்ததிகள் மனம் உட்கி வருந்த நேரிடுமே  என்ற வருத்தத்தாலும்,அக்கறையாலும் இவர்கள் இவ்வாறு போலி கதைகள் பல செய்கின்றனர் என்பதே வெட்டவெளிச்சம்.இதனால் இதை ஒரு  குறையாகக் கருத வேண்டியதில்லை."பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்குமெனின்"'..

மனிதரில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் எங்கும் இல்லை.சாதி இரண்டொழிய வேறில்லை.

இட்டார் பெரியார் ,இடாதோர் இழி குலத்தார்.

சேரமான் பெருமாள் அனைவருக்கும் பொதுவானவரே.
ஆனால் சுருதிமான் குலசேகர ஆழ்வாரே  நம் குல முதல்வர் என்பதை சேரமான் மலையமானின் பார்க்கவ குல மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.


இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே 
தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் 
எங்கள் குலசே கரனென்றே கூறு.

ஆரம் கெடப்பர னன்பர்கொள் ளாரென்று அவர்களுக்கே 
வாரங் கொடுகுடப் பாம்பில்கை யிட்டவன் மாற்றலரை 
வீரங் கெடுத்தசெங் கோல் கொல்லி காவலன் வில்லவர்கோன்
சேரன் குலசே கரன்முடி வேந்தர் சிகாமணியே.

Sunday, April 21, 2013

மறவர் இனமே தொல்குடி

மறவர் இனமே தொல்குடி



"கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி" என்று புறநானூற்றில் தமிழ்குடியின் தொன்மை இவ்விழக்கியங்கள் கூறுகின்றது.இந்த மூத்த தமிழ்குடிகளில் முதன்மையான குடியினரில் மறவர்குடி மிக தொன்மையானது. இந்த இனத்தின் புகழை தமிழின் முதல் இலக்கியமான தொல்காப்பியத்திலிருந்து உலகில் விவிலியத்துக்கு அடுத்து அதிகமாக அச்சிட்ட திருக்குறள் வரை இக்குடியின் மேன்மையை புகழ்கின்றது. ஆனால் சில அறிவு ஜீவிகளும் இது வீரரை மட்டும் குறிக்கும் பொதுவான் சொல் என்றும் சில இழிசின ஜாதியர் இது தங்கள் இனத்தை தான் இவ்வாறு சங்க இலக்கியங்கள் கூறுகின்றது என நா கூசாமல் பேசுவது இவ்வினத்தின் புகழின் மீது உள்ள பொறாமையே.எனவே மறவரின் தொன்மை கூறுகள் சிலவற்றை இங்கு சுட்டி காட்டுவோம்.

மறவர்-பெயர்க்காரனம் :


தமிழில்:
மறவன்-வீரன்,கொலை செய்தவன்

 மறம்-வீரம்
மறக்கருனை-கொலை (மறவனின் கருனையே கொலை தான்)
மறத்தொழில்-கொலை
மறலி-எமன்,கொற்றவை
சம்ஸ்கிருதம்:
மாறோ(MARO)-கொலை
மாறவா(MARAVA)-கொலைகாரன்,வீரன்
ஆங்கிலம்:
மற்டர்(MURDER)-கொலை
மற்டரர்(MURDERER)-கொலைகாரன்.
மார்ஸ்(MAARS)-ரோமானிய போர்தெய்வம்

இவ்வாறு தமிழ்,சமஸ்கிருதம்,ஆங்கிலம் முதலிய பல மொழிகளிலும் மறம் என்றால் வீரம் மறவன் என்றால் மறத்தொழில் புரிபவனான வீரன் என்று தான் பொருள்.சங்க இலக்கியத்தில் மறவர்கள் பாலை நிலத்தையே சார்ந்தவர்கள் ஆவார்.இங்கு விவசாயத்திற்கோ அல்லது கால்நடை மேய்ப்பதற்க்கோ வழியில்லை. எனவே இம்மக்கள் ஆறலையும், வழிப்பறியும்,போரையும் தவிர வேறொன்றையும் அறியாதவர்கள்.இவர்கள் முழுநேர மறத்தொழிலான ஆநிரை கவர்தலையும் போரையும் ஆங்கிலேய அட்சி வரை செய்து வந்துள்ளனர்.
இவர்கள் விவசாயமோ அல்லது வேறு தொழிலோ அறியாது மறத்தொழில் மட்டும் புரிந்து வந்த காரணத்தால் தான் இவர்களை மூவேந்தர்கள்(சேர,சோழ,பாண்டிய) மன்னர்கள் தமது படையில் முதல் படைவீரர்களாய் அமர்த்தியியும்.இவர்களை சேர மறவன்,சோழ மறவன் மற்றும் பாண்டிய மறவன் என்று பெருமை படுத்தியும்.இவர்களுக்கு மூவேந்தர்களே தலைவர்களாய் மறவர் பெருமான்,மறவர் செம்மல் என்று பூண்ட சங்க பாடல்களின் ஆதாரமாய் நாம் காண்கின்றோம்.

கொற்றவை(ஐயை) என்ற மறவரின் முதன்மையான் போர்தெய்வம்:


மறவர்கள் கையில் வில்லை ஏந்தி, பறவைகள் தம்மைத் தொடர்ந்துவர, பகைவரது ஆநிரயைக் கவரப் போகும்போது, தான்கைக்கொண்ட சிங்கக் கொடியினை எடுத்து உயர்த்திக் கொற்றவையும் அவன் வில்லின் முன்னே செல்வாள் போலும்” என்றும் வேட்டுவரி படைத்துக்காட்டும் கொற்றவை பழைய வேட்டைச் சமூகக் கொற்றவையாய் வில்லுக்கு வெற்றி தருபவளாயும், ஆநிரை கவரச் செல்லும் வீரர்களுக்கு உடன்சென்று நிரைகவரத் துணைநிற்பவளாயும் சித்தரிக்கப் பட்டுள்ளாள். இப்படி வேட்டுவவரி முழுவதிலும் பழைய வேட்டைக் கொற்றவை, வெட்சிக் கொற்றவை, புதிய வைதீக் கொற்றவை என்ற மூன்று வௌ;வேறு சமூக அடுக்குகளின் தாய்த்தெய்வ வழிபாடு மற்றும் நம்பிக்கைகள் கொற்றவை வழிபாடு என்ற ஒரே தளத்தில் காட்டப்பட்டுள்ளன. மறவர் மறக்குணம் வாய்ந்தவராகவும், அவர்கள் ஆநிரை கவர்ந்துவரக் கொற்றவையை வழிபட்டதாகவும் ஆநிரை கவர்ந்து வந்தபின் தம்மைக் கொற்றவைக்குப் பலியிட்டுக் கொண்டதாகவும் வேட்டவவரி விவரிக்கிறது. ஆநிரை கவர்தல் போரில் மறவர்க்கு வெற்றி தருபவள் கொற்றவை என்ற குறிப்பு வேட்டுவவரியின் மையப்பொருளாகும். இவர்களுக்கோர் பிள்ளை பிறந்து முப்பத்தொராம் நாள் சடங்கு நடைபெறும் பொழுது அப்பிள்ளையை வளர்த்து மிடத்தில் சிங்கரூபங்கீறி, அதன் மேல் பிள்ளையைக் கிடத்தித் தாலாட்டுப்பாடுவது வழக்கம். சிங்கம் மறவர்களின் குலதெய்வமான துர்க்கையின் வாகனமாகும். இதனாலேயே சிங்கரூபம்கீறுவதென எண்ண இடமுண்டு.

மறவரின் முதல் போர் ஆயுதம்-வளரி(Boomerang) :


மனிதனின் முதல் வேட்டை ஆயுதம் ஈட்டி இரண்டாவது ஆயுதம் அஸ்திரேலிய பழங்குடியினர் பயன்படுத்தும் பூமராங். மறவரின் மரபனு ஆப்பிரிக்க நைஜிரிய,எத்தியியொப்பிய மக்கள் மற்றும் அஸ்திரேலிய பழங்குடியினரிடம் மட்டுமே கானப்படுகின்றது.சங்ககாலம் தொட்டு ஆங்கிலேயர் ஆட்சி காலம் வரை மறவரிடம் மட்டுமே இந்த பூமரங்(Boomerang) ஆயுதம் கானப்படுகின்றது.இது வேறு இனத்துக்கோ அல்லது வேறு மாநில மக்களிடமோ கானப்படவில்லை. வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்றும் அழைத்தனர். மறவர்களின் முதன்மையான போர்க்கருவி என்று இலக்கியங்களும் பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற வளைதடி (வளரி(Boomerang) )யே திகிரி என்று இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது. வைகை அணைக்கட்டுக்கு அருகிலுள்ள கூடலூர்ப் பகுதியில் ஆனிரை கவரும் மறவர், எயினர் போன்ற குலத்தவர்கள் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வந்துள்ளனர். சங்க இலக்கியமாகிய 347ஆம் பாடலில் "மணம் நாறு மார்பின் மறப்போர் அகுதை குண்டு நீர் வரைப்பின் கூடல்" என்ற ஒரு குறிப்பு உள்ளது. அகுதை என்ற குறுநிலத் தலைவன் ஒருவன் "பொன்புனை திகிரி (உலோகத்தாலான சக்ராயுதம்) "என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன் என்று புறநானூறு 233-ஆம் பாடலில் (அகுதைக் கண் தோன்றிய "பொன்புனை திகிரியிற் பொய்யாகியரோ").மறவருள் ஒரு பிரிவினராகிய அகத்தா மறவர் பிரிவினரின் மூதாதையாக இந்த அகுதையைக் கருதுவதில் தவறில்லை. அகத்தா மறவர்களின் மண்டபம் திருப்பரங்குன்றம் கோயில் அருகில் உள்ளது.அகத்தா மறவர்கள் திருப்பரங்க்குன்றம்,திருச்சுழி,வருசநாடு,வத்திரயிருப்பு,அருப்புக்கோட்டை பகுதியில் கானப்படுகின்றனர். கூறப்பட்டுள்ளது. வளரி வேட்டையின் போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகும். பண்டைய போர் வகைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது மற்றும் தற்போதைய சில பகுதிகளில் பாவிக்கப்பட்டிருக்கின்றது. வளரி எறிதல் போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன. இராமநாதபுரம் சேதுபதி,புலித்தேவர்,சிவகெங்கையில் ஆட்சியிலிருந்த மருது சகோதரர்கள் மற்றும் அவர்களது படைத்தளபதிகளான வைத்திலிங்க தொண்டைமான் ஆகியோர் வளரியையே ஆயுதமாகப் பாவித்து சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது. இத்தகைய வீரம் நிறைந்த மறக்குல மக்கள் தம் குலக் கருவியாக வேட்டையாடவும்,போருக்காகவும் இளம்பிறை(Boomerang) வடிவமுள்ள் தாக்கி திரும்பக் கூடிய வளைதடியை பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.  


"படிகாக்கும் தனிக் கவிகை பார்வேந்தர் தங்கமனி முடிகாக்கும் செங்க்கோன்மை முரைக்ககும் படிபாதிக் குடிக்காக்கும் வழுதி தனிக் கொடியை அடல் கெருண்டா வடமேரிற் கயல் காக்கும் மறவர் கையில் வளைதடியே" -தருமபுத்திரர்(வாளெழுபது).

இதில் பாண்டிய மன்னனின் திருமுடியையும் பாண்டிய நாட்டையும் காக்கும் மறவர்களின் முதன்மையான ஆயுதமாக வளரியை கூறுகின்றது.

" Boomerangs," Dr. G. Oppert writes,* " are used by the Maravans and Kalians when hunting deer. The Madras Museum collection contains three (two ivory, one wooden) from the Tanjore armoury. In the arsenal of the Pudukottai Raja a stock of wooden boomerangs is always kept. Their name in Tamil is valai tade (bent stick)." To Mr. R. Bruce Foote, I am indebted for the following note on the use of the boomerang in the Madura district. " A very favourite weapon of the Madura country is a kind of curved throwing-stick, having a general likeness to the boomerang of the Australian aborigines. I have in my collection two of these Maravar weapons obtained from near Sivaganga. The larger measures 241" along the outer curve, and the chord of the arc 17!". At the handle end is a rather ovate knob 2%" long and i-J-" in its maximum thickness. The thinnest and smallest part of the weapon is just beyond the knob, and measures -J-J-" in diameter by i-J." in width. From that point onwards its width increases very gradually to the distal end, where it measures 2-f-" across and is squarely truncated. The lateral diameter is greatest three or four inches before the truncated end, where it measures i". My second specimen is a little smaller than the above, and is also rather less curved. Both are made of hard heavy wood, dark reddish brown in colour as seen through the (CASTES AND TRIBES OF SOUTHERN INDIA EDGAR THURSTON, C.I.E., )
* Madras Journ. Lit. Science, XXV. 47 MARAVAN

ஐந்து தினைகளிலும் மிஞ்சிய தமிழ் தொல்குடிகள்:


ஐந்து தினை மக்கள்:

குறிஞ்சி:
குறவர் ,குறத்தியர்.

முல்லை:
இடையர்,இடைச்சியர்.

மருதம்:
உழவர்,உழுத்தியர்.

நெய்தல்:
பரதவர்,பரத்தியார்

பாலை:
மறவர்,மறத்தியார்,எயினர்,எயிற்றியர்.

நாம் மேலே குறிப்பிட்டுள்ள இனமே சங்க காலம் முதல் வாழ்ந்து வந்த குடியினர் ஆவர்.இதில் குறவர்,பரதவர்,மறவர் தான் இன்று தமிழக ஜாதிய பட்டியலில் அச்சு அசலாக கானப்படுகின்றனர்.இன்று தமிழ கெஜட்ட்டிலும் இதே பெயரில் தான் கானப்படுகின்றனர்.
மற்ற இனங்கள் இண்க்கலப்பாகி வழக்கொழிந்து விட்டனர்.இன்று 300க்கும் மேற்ப்பட்ட ஜாதியினரும் பல மொழிகளும் பேசப்பட்டாலும் இந்த நாண்கு ஜாதியினர் மட்டுமே சங்க காலத்துக்கும் முந்தி இன்று வரை வாழ்கின்றனர்.

மறவரும் பரதவருமே பாலை நெய்தல் குடிகளாகும்:



மறவரும் பரதவரும் தான் இன்றும் பண்டைய காலம் தொட்டு அருகருகே வாழ்ந்து வருகின்றனர். இருவரும் ஒரு மூலக்குடியில் தோன்றியவர்கள் என சிலர் கூறுகின்றனர்.இருவரும் நாகர் என்ற இனத்தில் இருந்து பிரிந்தவர்கள் என மனிமேகலை கூறுகின்றது.மனிமேகலையில் நாகர் என்ற இனத்தை பற்றியும் அதன் பிரிவுகளாக மறவர்,எயினர்,பரதவர்,ஒளியர்,ஓவியர்,அருவாளர் என கூருகின்றது.இருவரும் சிற்சில இடத்தில் கரையாளர்,தலைவன் என்ற பட்டங்களுடனும்.கிளை முறைகள் மறவரிடத்திலும் பரதவரிடத்திலும் மட்டுமே கானப்படுகின்றது.

மறவரின் மாறா தொன்மை:

தமிழ் தொல்குடியினரை ஆரிய புராணங்கள் பல்வேறு பெயர்களில் இதிகாசங்கள் கூறுகின்றது.யக்ஷர்,கிராதர்,நாகர்,கருடர்,அசுரர்,வானரர்,நிஷாதர்,சபரர் என பல்வேறு இனங்களாக புராணங்கள் கூறுகின்றது.ஏனெனில் வரலாற்றுக்கும் முந்தைய காலகட்டத்தில் இங்கு விவசாயம் கிடையாது.இங்கு வனங்களே கானப்பட்டிருக்கும் அந்த இடத்தில் இருக்கும் நபர்களைத்தான் வானரர்,அசுரர் என இதிகாசகாலம் கூறுகின்றது.இன்னும் துல்லியமாக கூறினால் குறவரைத்தான் புரானங்களில்(யக்ஷர்,கிராதர்[குண்றவர்],அசுரர்) என கூறுகிறது.மறவரையும் பரதவரையும் மனிமேகலையில் நாகர் என குறிப்பிட்டாலும். மறவரை சில புராங்கள்சபரர் எனவும்  வானரர்,வனவாசி என கூறுகின்றது. எனவே நம் குலப்பெருமை. காக்க மறைத்துவைக்கப்பட்டுள்ள அருமை பெருமைகளை மீட்டுவர முயற்சி செய்யவேண்டும். தமிழ் இலக்கியங்கள் கூறும் புறப்பொருள் நம் குலத்திற்குரியது என்பதை மனதில் கொள்ளவேண்டும். பழம்பெருமை எதற்கு என்று நீங்கள் நினைக்க்க்கூடாது. பழம்பெருமையைமீட்டு நாம் முன்னோர்களைப்போல் புகழ்பட வாழவேண்டும். பிறந்த மண்ணின்மீதும், தாய்த்திருநாட்டின்மீதும், தன் உடல்,பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்தவர்கள் நம்முன்னோர்கள். அதனால்தான், அவர்களைப்பற்றி கல்வெட்டுக்கள் பேசுகின்றன. செப்புப்பட்டயங்கள் சான்று கூறுகின்றன. இலக்கியங்கள் புகழ்மாலை சூட்டுகின்றன. நாமும் அவர்களின் அடிச்சுவட்டை பிறழாது பின்பற்றவேண்டும். இது மறவர் பூமி என்றால், பகைவனும் இடியோசைகேட்ட நாகம்போல், நடுங்கி ஒடுங்கி ஓடிவிடுவான். நாட்டை நாசப்படுத்தும் நாசகார சக்திகள் சூரியனைக்கண்ட பனிபோல் விலகிஓடிவிடும்,. வாழ்வதும், வீழ்வதும் தாய்மண்ணுக்காக என்பதே நம் முன்னோர்களின் தாரக மந்திரம். அதுவே நம்முடைய வழி.! பிறந்த மண்ணையும் பெற்றதாயையும் காப்பது நம் கடமை!!

Saturday, April 20, 2013

பள்ளர்(Mallas),பறையர்(Holeyas ),சக்கிலியர்(Madigas)

பள்ளர் பறையர் மற்றும் சக்கிலியர் இனத்தவர்கள் கர்நாடகாவிலும் கன்னடத்தை தாய்மொழியாய் பேசும் குடிமக்களாய் வாழ்கின்றனர் இதில் பறையரின் பிரிவினராக மளாஸ் மற்றும் கோலியாஸ் என்று கூறுகின்றனர். 
The Mālas,” Mr. H. A. Stuart writes,23 “are the Pariahs of the Telugu country. Dr. Oppert [330]derives the word from a Dravidian root meaning a mountain, which is represented by the Tamil malai, Telugu māla, etc., so that Māla is the equivalent of Paraiyan, and also of Mar or Mhar and the Māl of Western and Central Bengal. 

Ancestors of Pallars and Paraiyars?




இங்கு மைசூருக்கு அருகில் உள்ள மேலக்கோட்டை சாளுவ நாராயனர் ஆலயத்தில் அரிஜனங்கள்[பள்ளர்(Mallas),பறையர்(Holeyas ),சக்கிலியர்(Madigas)] ஆலய பிரவேசம் செய்வதை மைசூரை ஆண்ட கிருஷ்ன ராஜ உடையார் தாழ்த்த பட்டவரை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டார்.
"தெலுங்கு பறையர் கதை "

Melukote Chaluva Narayana Templethe right of the outcastes (Mallas, Holeyas and Madigas) to enter the temple was stopped at the dhvaja stambham, the consecrated monolithic column, from which point alone can they now obtain a view of the god.


>இதைத்தான் தமிழில் மள்ளர்(பள்ளர்(அ)உழுகுடியினர்),கோலியர் (அ) கோலியப்பறையராகும்.சக்கிலியர்கள் இங்கு மதிகா அல்லது மாத்தேரி என்று அழைக்கபடுகின்றனர்.ஆக பள்ளரும் பறையரும் சக்கிலியரும் தென்மாநிலமெங்கும் தாழ்த்தபட்டவர்களாக வாழ்கின்றனர் என்பது உன்மை.இங்கு பள்ளர்,பறையர் ஒரே பிரிவினராக உள்ளனர்.இவர்களின் தாய்மொழி கன்னடம்.இவர்கள் இங்கிருந்தே தமிழ்நாட்டுக்கு அனுப்ப,வொக்காலிக கவுடரால் நாயக்கர் ஆட்சியில் உழுகுடிகளாக குடியேற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதே தின்னம்.
பள்ளரும் பறையரும் வேளான் கூலிகள் மட்டுமல்ல ஆங்கிலேயர் காலத்தில் குற்றபரம்பரையாக இருந்துள்ளனர் இதில் பள்ளு காலாடிகளும் பறையரும் இராமநாதபுர மாவட்டத்தில் குற்றப்பரம்பரையாக இருந்துள்ளனர்.


சிங்கள பறையர்கள்

https://en.m.wikipedia.org/wiki/Berava_(caste)

"தெலுங்கு பறையர் கதை "
https://archive.org/…/w…/whilesewingsanda00rausrich_djvu.txt
https://archive.org/details/whilesewingsanda00rausrich
http://www.amazon.in/While-Sewing-Sandals-Telu…/…/1178215172


சில நரபலிகள் வேறு பள்ளுபறையர் மக்களை கோட்டை கட்டுவதற்கும்,கட்டிடம்,அனை,மடை கட்டுவதற்கும் பல்வேறு காலகட்டத்தில் பயன்படுத்தியுள்ளனர். திருமயம் கோட்டை கட்ட பறையர் இருவரையும் Madurai மாரியம்மன் தெப்பகுளம் வெட்டுவதற்கு பள்ளரையும் நரபலிகளாக குடுத்துள்ளனர்.



The Holeyas (Mallas) suffered until their importance was realized by the Krisna Raja Wodeyar. But an irreproachable damage was done to the pride and prestige of the Mallas by then. The benevolent Wodeyar to mitigate the sour memories of the Holeyas constructed the Modern English School in Malavally; in the place where the battle took place and predominantly habited by the Mallas, the Holeyas were preferentially employed by his government; in his factories and offices and Malavally got hydro power stations and electricity.

The Holeya Keris ( Areas Principally habited by Holeyas) got the first electrified houses and electrical street lights even prior to the Mysore Palace. Thus modern education and modern life style creeped into the houses of Holeyas and they contributed to the first batch of modern medicine doctors, engineers, civil servants, and teachers of Mysore Kingdom. The reasons mentioned here explain enough about the high academic, finanacial, political and social levels achieved by the Holeyas of Malavally in particular and those of Old Mysore region of Karnataka in general.

A few such acts of generosity shown by the King have brought back the confidence among the Holeyas in Malavally. Today they can be seen in all the walks of life. They don’t forget the King. One can see the photographs of both Sri Kisna Raja Wodeyar as well as Tipu Sultan in the Houses of Holeyas on par with their god Malle Madappa (Malai Madeshwara) and their ancestors






•நாட்டரசன்கோட்டை செப்பேடு 1•
மாட்சிமை தாங்கிய, சிவகங்கை சமஸ்தானம் - தேவஸ்தானம் மேதகு DSK. மதுராந்தகி நாச்சியார் அவர்களின் ஆளுமையில் உள்ள நாட்டரசன் கோட்டை அருள்மிகு கண்ணுடைய நாயகி அம்மன் ஆலயத்தைச் சேர்ந்த ஊழியர்கள் சிலரிடம் அவர்களின் உரிமைகளைப் பேசும் மூன்று பட்டயங்கள் உள்ளன.
அவற்றில் இதுவும் ஒன்றாகும். இவை வரலாற்றிற்கு புதிய வரவுகளாகும்.
இந்த பட்டயம், நாட்டரசன் கோட்டையில் வசிக்கும் பறையர் சமூகத்தைச் சேர்ந்த திரு.முத்துக்குமார் அவர்களிடம் உள்ளது. பட்டயத்தில் குறிக்கப்படும் " சின்னான்" வழியில் வந்தவர்கள் இந்த குடும்பத்தினர்.
இவர்கள் இன்று வரை கண்ணாத்தாள் கோயிலின் வெளிமண்டபத்தில் மேளம் அடிப்பது, தேருக்குத் தைலங்கொடி வெட்டி வந்து கட்டி வைப்பது, ஆலய வளாகத்தைச் சுத்தமாகப் பராமரிப்பு செய்வது ஆகிய பணிகளைச் செய்து வருகின்றனர். இதற்காக இவர்களுக்கு மானிய ஊழியத்துடன், திருவிழாக் காலங்களில் ஆட்டுத்தலை இரண்டும், காளாஞ்சியும் தரப்படுகிறது. பட்டயத்தில் இவர்களுக்கு ஆட்டுக் கால்கள் தரப்பட்டுள்ள செய்தி வருகிறது.
•செப்பேட்டின் காலம் •
சிவகங்கை மன்னர் சசிவர்ணத் தேவரின் தகப்பனார் கன்று மேய்க்கி பெரிய உடையாத் தேவரவர்கள் ஆவார், அவருடைய பெயரே சசிவர்ணத் தேவருக்கும் இந்த பட்டயத்தில் பயின்று வந்துள்ளதாக அறிகிறேன். ஏனெனில் , " தாண்டறாய பிள்ளை பிறதானிக்க நாளையில்" என்று செப்பேட்டில் வாக்கியம் வருகிறது. தாண்டவராயப் பிள்ளை சசிவர்ணத் தேவரின் காலத்தில் தொடங்கி முத்துவடுகநாதத் தேவர் காலம் முடிய சிவகங்கைப் பிரதானியாக இருந்தவர். ஆகவே இதன் காலம் 18 ம் நூற்றாண்டு. இது மன்மத வருடம், மாசி மாதம் 22 ம் தேதி எழுதப்பட்டுள்ளது.
• பட்டயம் சொல்லும் செய்திகள் •
18 ம் நூற்றாண்டின் சமூகநிலையை இந்தப் பட்டயம் படம்பிடித்துக் காட்டுகிறது. வளநாடு எனும் நிர்வாகப்பிரிவுகள் சுட்டிக்காட்டப் பெறுகிறது. தேவர் - செட்டியார் முதலியோர் நீதியும் நிதியும் தரும் இடத்திலும், பள்ளர் - பறையர் - சக்கிலியர் முதலியோர் அதை மேற்கண்டோரிடம் பெறுபவராகவும் இருந்துள்ளனர்.
மேளம் அடிக்கும் தொழில் பறையர்களுக்கானதாக அறியப்படும் நிலையில், இந்த பட்டயத்தில் பள்ளருக்கும் அது உரித்தான தொழில் எனும் செய்தியை ,...
" பறையங்கள் யிப்போது கொட்ட தப்பு கிடையாது யென்று சொன்னான் அதற்கு உள்ளூற் பள்ளனை மேளங் குடுக்க சொன்னாற்கள் யென்னிடத்தில் மண் மேளந்தானிருக்குது யென்று சொன்னாற்கள் மேற்படி மேளம் உடைந்து போனால் போன மேளந் தாரேன் யென்று பறையங்கள் சொன்னாற்கள் " - (வரிகள் 22 லிருந்து 28 முடிய)
- எனப் பயின்று வரும் வரிகள் தெளிவுபடுத்துகின்றன. இவர்கள் தங்கள் சமூகக் கடமைகளில் இருந்து தவறும்போது, அவர்களுக்கு அபராதம் விதித்தல், கொடுத்த காணியைத் திரும்பப் பெற்றுக் கொள்ளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்துள்ளதை அறிய முடிகிறது.
• பட்டய வரிகளின் விளக்கம் •
சிவகங்கை மன்னர் சசிவர்ணத் தேவர் அரசாள, அவரது பிரதானியாக தாண்டவராயப் பிள்ளை இருக்கும் காலத்தில்,.. ஆனக்கன் சேனை வளநாட்டைச் சேர்ந்த சேவளத்தூர் முத்தண்ணத்தேவர் மற்றும் மன்னமுடித் தேவர் ஆகியோரது இல்லங்களில் முறையே வெள்ளையன், மசறவெட்டி மற்றும் நத்தான் வீமன் ஆகிய பறையர்கள் வேலைசெய்து வரும்போது மாடு காணாமல் போக விட்டு விடுகின்றனர்.
இதனால் அவ் வீட்டார்கள் இவர்களை ஒரு கூடத்தில் அடைத்து வைத்து, மிளகாய் மீது முட்டியிட வைத்து, சித்ரவதை செய்து இனி உங்களுக்கு உழுவதற்கு நிலம் கிடையாது என்று கூற, விஷயம் உள்ளூர் பெரிய மனிதர்களின் காதுக்குப் போகிறது. அவர்கள் எல்லோரும் சேர்ந்து அப்படிச் செய்ய வேண்டாம் என்று தண்டனையை நிறுத்தி, மேற்கண்ட பறையர்களுக்கு அபராதம் போட்டு, வெள்ளிக்கிழமை அன்று ஐயனார் கோயிலுக்கு மேளம் அடித்து வணங்க வேண்டும் என்று கூற, அந்த அபராதத்தை நத்தை பொறுக்கிக் குடும்பன், இருளக் குடும்பன், சிலம்பக் குடும்பன், மானம்பாக்கிக் குடும்பன் ஆகிய நால்வர் பறையர்களுக்காக முன்நின்று ஏற்றுக் கொள்கின்றனர்.
மேற்கண்ட நான்கு பறையர்கள் மேளங்கள் எங்களிடம் இல்லை கொடுத்தால் அடிக்கிறோம் என்று கூற, பறையர் மேளம் கொட்ட பள்ளர்கள் தங்களின் மேளங்களைத் தரட்டும் என்று பஞ்சாயத்தில் சொல்லப்படுகிறது. உள்ளூர் பள்ளர்களான மேற்கண்ட நால்வர் எங்களிடம் மண்ணால் செய்யப்பட்ட மேளங்களே உள்ளன என்று கூறி, அது உடைந்து போனால் யார் தருவது என்று கேட்கின்றனர். அவ்விதம் மேளம் உடைந்து போனால் அதற்குப் பதிலாக வேறு மேளங்களைத் தருகிறோம் என்று பறையர்கள் உறுதியளிக்கின்றனர். ஆனால்.. மழையில் மேளங்கள் கரைந்து விடுகிறது, பள்ளர்கள் வாங்கிய மேளத்தைத் தருமாறு கேட்க, மாலையில் தருகிறோம் என்று கூறிய பறையர்கள் நால்வரும் அதற்குப் பிணையாக 'சோனை' எனும் சக்கிலியரை வைக்கின்றனர்.
பிறகு சொல்லாமல் கொள்ளாமல் இரவோடு இரவாக காட்டுக்குள் ஓடிவிட்டனர். இவர்களைக் காட்டிலுள்ள ஊருணி அருகே கண்டுபிடித்து வளச்செட்டி கண்டன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் செட்டி ஆகியோரிடம் சென்று வழக்கு கேட்க அவர்கள் உங்கள் உள்ளூரில் கொடுத்த தீர்ப்பே போதும் அதன்படி நடந்து கொள்ளவும் என்று கூற, உள்ளூர் அளித்த தீர்ப்பின்படி இன்னும் இவர்கள் 30 பொன் தரவில்லை என்று பள்ளர்கள் முறையிட்டனர். இதனால் அந்த தீர்ப்பை ஒரு ஓலையில் எழுதி பறையர்களுக்குத் தந்துவிட்டு, அதன் ஒரு நகலை பள்ளர்களிடம் அளிக்கின்றனர்.
இதை ஒப்புக் கொண்ட பறையர்கள் மீண்டும் சாத்தரசன்கோட்டை எனும் ஊருக்கு ஓடிப்போய்விட்டனர். மீண்டும் அவர்களைக் கண்டுபிடித்த பள்ளர்கள் அவர்களை அவ்வூரிலிருந்த சாத்தரசன் - தெத்தரசன் - மூவரசன் ஆகியோரிடம் கூட்டிச் சென்று நியாயம் கேட்கின்றனர். அவர்கள் மூவரும் முன் அளித்த தீர்ப்பின்படி மீண்டும் நடந்து கொள்ளப் பணிக்க, அதை மறுத்து பறையர்கள், நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்த கனகசெட்டித் தேவன் - நாட்டரசத் தேவன் - கரியாங்குடியான் - சினகராயன், வடகளவழி நாட்டார் காளைப் பட்டாராசன் - முகநாராயணப் பிள்ளை - பேயி வெட்டிக்காளை ஆகியோரிடம் சென்று தக்க நீதி கேட்கிறார்கள். இருவரிடமும் விசாரணை செய்து முன் அளித்த தீர்ப்பிற்கு ஏதும் ஆதாரம் இருக்கிறதா என்று கேட்க, பறையர்கள் இல்லை என்றனர். ஆனால் பள்ளர்கள் தங்களிடம் இருந்த தீர்ப்பு நகலைக் கொடுத்தனர். பள்ளர்களின் பக்கம் நியாயம் இருப்பதை அறிந்த மேற்கண்ட நாட்டார்கள் பறையருக்கு நூறு பொன் அபராதம் விதித்தனர். பறையர்களால் இந்த அபராதம் கட்ட முடியாத வகையில், நாட்டரச முதலி அந்த அபராதத்தை நான் கட்டுகிறேன் அதற்குப் பதிலாக மேற்கண்ட பறையர்கள் என்னிடம் வேலை செய்ய வேண்டும் என்று கூறி, அவர்களுக்கு உழுநிலம், குடிக்க கஞ்சி, அவர்களுக்கு நேரும் நன்மை - தீமைகள் அனைத்தும் பார்த்துக் கொள்வதாகக் கூற, பறையர்கள் ஒப்புக் கொண்டு அதன்படி நடக்கின்றனர்.
சிசம்பன் எனும் ஆசாரி எழுத, பட்டயத்தில் பறையர்கள் நால்வரும் ஒப்பமிட்டுள்ளனர்.
• செப்பேடு வரிகள் •
1. உ ஸ்ரீ ராமஜெயம்
2. மன்மத ௵ மாசி ௴ உ൰ ௳ கண்ணுமேக்கி உடை-
3. யதேவற் விசையரெகுநாதத்தேவன் றாச்சியத்தில் தா-
4. ண்டறாயபிள்ளை பிறதானிக்க நாளையில் ஆனக்கந்
5. சேனைவளநாடு சேகறம் சேவளதூற் முத்தண் –
6. தேவற் வீட்டில் வெள்ளையனும் மஸறவெட்டியும் நத்-
7. தானும் வீமனும் மன்னமுடி தேவற்வீட்டிலும் ௸(மேற்படி) முத்-
8. தண் தேவற்வீட்டிலும் துறசன வேலை செயிதும் மாட்-
9. டைகானாமல் பிடித்தும் யிப்படி செயிதபடியால் கண்டு பி-
10. டித்து உண்ணிகூடத்தில் அடைத்துவையித்து மொள-
11. காயை புதைத்து தொந்தறவு செயிது காணிகறையில்-
12. லை யென்று சொன்னார்கள் அதற்கு உள்ளுற் பரிதி
13. சொ[ன்]னா[ற்]கள் அப்படி சொல்லுவது சறியில்லை
14. காணிபூமி குடுக்க வேணுமென்று சொன்னார்கள்
15. யின்னைக்கி வெள்ளிக்கிளமை அய்யனாற் கோவி-
16. லுக்கு நாள் வைக்கப் போறொம் தப்புகொம்புயெ-
17. டுத்துச் செவிக்க சொல்லுங்கள் யென்று சொ-
18. ன்னா[ர்]கள் அதுக்கு நத்தைபுறக்கி குடும்பனையும் சே-
19. வளற்தூற் யிருளக்குடும்பனையும் சிலம்பக்குடும்பனையும்
20. மானம்பாக்கி குடும்பனையும் நாலு பேறையும் நெதையி-
21. ல் வைக்க அவதாறத்தை யேத்துக்கொள்ள சொன்னாற்-
22. கள் அது போலெ யேத்துக்கொண்டான் ௸(மேற்படி) பறை-
23. யங்கள் யிப்பொது கொட்ட தப்பு கெடையாது யெந்
24. று சொன்னான் அதற்க்கு உள்ளுற் பள்ளனை மோள-
25. ங் குடுக்கச் சொன்னாற்கள் யென்னிடத்தில் மண் மோள-
26. ந்தானிருக்குது யென்று சொன்னாற்கள் ௸(மேற்படி) மே-
27. ளம் உடைந்து போனால் போன மோளந்தாரென்
28. யென்று பறையங்கள் சொன்னாங்கள் அதற்க்-
29. கு கோவிலுக்குப் போயிட்டு வரும் போது மளைபெயிந்து
30. மோளம் உடைஞ்சு போச்சுது உடைஞ்சு போன சே-
31. தி கேட்டு பள்ளன் மோளம் கொண்டு வா வென்று சொ-
32. ன்னான் சாயந்திறம் தாறொமென்றான் அதுக்கு சாமி-
33. ந் கேட்டான் சக்கிலியசோனை யெத்துக்கொண்டா-
34. ன் அண்ணைக்கு [றா]த்திறியில் புறப்பட்டு காட்டு ஊறணி-
35. க்கி ஓடிப்போயிட்டான் தடத்தைப் பக்கிபிடித்து வள-
36. ச்செட்டி கண்டணிக்கி கூட்டி போயி வளக்கு கேட்டாற்க-
37. ள் முத்துகிஷ்ட்டணன் செட்டிவகையாற் பேற்களும்
38. கூடி கெள்க்கும் போது உள்ளுற்தி கேத்து சறியென்று -
39. (சொ)ன்னாற்கள் யினிமேல் பேசியபடிகித் தருவான்
40. யென்று சொன்னாற்கள் உள்ளுற் அவதாறம்
41. போட்ட முப்பது பொன் யின்னும் தறவில்லை யென்-
42. றான் தேசத்தாற் நாளை கேட்டுத்தரனு மென்று சொன் –
43. னாற்கள் தீருப்பு நகுலை பள்ளன் வாங்கிக் கொண்டா-
44. ன் பறையன் ராத்திறியில்ப் புறப்பட்டு சாத்தறசன் கோ-
45. ட்டைக்கி ஓடிப்போயிட்டான் தடத்து வளியெ பொயி-
46. கண்டுபிடித்து சாத்தரசன் தெத்தரசன் மூவரசனிடத்தி-
47. ல் கூட்டிக்கொண்டு நாயம் கேட்டாற்கள் முன் திற்ப்-
48. பு சறியென்று சொன்னாற்கள் அதுக்குச் சம்மதியா-
49. மல் மேலேறிய நாட்டறசம்பத்துக்குப் போனான் அங்-
50. கே கண்டுபிடித்து நாட்டிலெ கொண்டு போயி ஞாயம்
51. சொல்லும் போது நகுலை யிருக்குதாவென்று கேட்டாற்-
52. கள் பரையன் யில்லை யென்றான் பள்ளன் குடுத்தான்
53. ௸ (மேற்படி) நகுலை பாற்க்கும் போது பறையன் செயிதது தப்புதா-
54. மென்று மோளத்துக்கு வேலை ௬௰(60) பொன் அவதாறம்
55. ௰ (10) பொன் ஆக பொன் யெளுவதும் குடுக்க சொன்னாற்க-
56. ள் யிந்த தீற்ப்பு கனகசெட்டி தேவனும் நாட்டரச-
57. தேவனும் கறியான்குடியானும் சிணகறாயனு-
58. ம் வடகறை வெளுவநாட்டாற் காளைபட்டாறசன் மு-
59. கநாறாயனபிள்ளையும் பேயிவெட்டிகாளையும் வலை-
60. சட்டியாற் முத்துபணிக்கன் பூவூணடியெ காளிஅ-
61. ளகன் பரிசாரி நெவளி அஞ்சுவகை தொள்ளாளி
62. கத்தாபட்டு சொடாலையிளெ அ (😎 பெரும் கூடி ௸ (மேற்படி) நாட்ட-
63. ரச முதலி ௸ பொன் ௱ (100) குடுக்க சொன்னாற்கள் நா-
64. ன் குடுத்தால் யெனக்கு பறையன் யென்ன உபகா-
65. றம் (செ)யிவான் யென்று கேட்டான் நீ சொல்லுறபடி
66. கேள்க்கச் சொல்லுரோமென்று சொன்னாற்கள் -
67. யெனக்கு கொட்டாறக் காற்க்க வேனுமென்று சொன்னா-
68. ற்கள் அதுக்கு யென்ன சம்பளம் குடுக்குறதென்று கே-
69. ட்டான் ஒரு சட்டி கஞ்சியும் ஒரு வேட்டியும் நாதரக்காலு நா-
70. லுகாலும் சிருகுடல் அஞ்சிலெ ஒருபங்கும் தங்குலா வே-
71. லைக்கி நன்மை தின்மைக்கி ஒரு பணமும் ஒரு பானை சாதம் ந-
72. ன்மை தின்மைக்கி தப்புகொட்டாவும் யிஷ்பறன் கோவில்
73. தேற் அடிவிட்டு யிருக்குது நானுனக்கு காணியில் அறைபங்-
74. கும் தருகிறேன் ஆவுடையான்னுக்கு அறைபங்கு விட்டு முன் பொ-
75. ன்னும் தந்து யிருக்குறென் யென மலைபோலெ வேலை-
76. பாற்த்தார் தபோனாய் ௸ பொன் நூறு குடுத்து விட்ட காணியும் இளந்து
77. பொக வெணுமென்று சொன்னான் அந்தபடிக்கி சரியென்று ஒ-
78. ப்புகொண்டான் முன்பாலை முன்சந்தணம் முதலி நாட்டறசன் வா-
79. ங்கி பொறகு பளிகாணி சின்னான் வாங்கிறது அப்பால் அவறவற்
80. சேற்ந்த பேற்கள் வாங்கி கொள்கிறது
81. இந்த படிக்கிறவ – வெள்ளையன்
82. இந்த [படி]க்கிறவ- மஸறவெட்டி
83. இந்த- நத்தான்
84. இந்த – வீமன்
85. இந்தபடிக்கி கல்லுகாவேரி புல்லுபூமி சந்திறன்
86. சூரியாள்(ன்) உள்ள வரைக்கி ஆண்டு அனுபவித்து கொள்வாறாகவும்
87. இந்த பட்டையம் எளுதினது சி சம்பனு ஆசாறி
நன்றி!



காலாடி என்ற பட்டம் கொண்ட பள்ளர் பறையர் இங்கு குலவாடி(தோட்டி):



காலாடி என்ற பட்டம் கொண்ட பள்ளர் பறையர் தமிழ்நாட்டில் கானப்படுகின்றனர்.(எ-டு) வென்னிக்காலாடி என்ற பள்ளர்களின் சுதந்திர போராளி. இங்கு காலாடியை குலவாடி (அ) தோட்டி வேலை செய்பவராக அறியப்படுகின்ரார். கர்நாடகாவில் பள்ளர்,பறையருக்கு குலவாடி என்ற வேலை இறப்புகிரியம் செய்பவர் என்பது இதன் அர்த்தம் குலவாடி ஆனால் கர்நாடகாவில் இவர்கள் கிரமத்தால் நியமிக்க படுகின்றனர்.


The Toti or Kulavadi (he who directs the ryots), always a Holaya, is a recognized and indispensable member of every village corporation. In his official position he the village policeman, the beadle of the village community, the headman’s henchman: but in the rights and privileges which yet cling to him we get glimpses of his former estate, and find proofs that the Hoilayar were first to establish villages. All the castes unhesitatingly admit that the Kulavadi is (de jure) the owner of the village. If there is a dispute as to the village boundaries, the Kulavadi is the only one competent to take the oath as to how the boundary ought to run and to this day a village boundary dispute is often decided by this one fact- if the Kulavadis agree, the other inhabitants of the village can say no more. Formerly when village was first established, a large stone, called Karukallu*, was set up within it. To such stones the Patel** once a year makes an offering, but the Kulavadi, after the ceremony is over, is entitled to carry off the rice, &c., offered, and in cases where there is no Patel, the Kulavadi performs the ceremony.

“In a note on the Kulwadis, Kulvadis or Chalavadis of the Hassan district in Mysore, Captain J.S.F. Mackenzie writes, all the thousand-and- one castes, whose members find a home in the village, unhesitatingly admit that the Kulwadi is de jure the rightful owner of the village. He who was is still, in a limited sense, ‘lord of the village manor.’ If there is a dispute as to the village boundaries, the Kulwadi is the only one competent to take the oath as to how the boundary ought to run. The old custom for setting such disputes was as follows. The Kulwadi, carrying on his head a ball made of the village earth, in the centre of which is placed some water, passes along the boundary. If he has kept the proper line, everything goes well; but should he, by accident, even go beyond his own proper boundary, then the ball of earth, of its own accord, goes to pieces, the Kulwadi dies within fifteen days, and his house becomes a ruin. Such is the popular belief. Again, the skins of all animals dying within the village boundaries are the property of the Kulwadi, and a good income he makes from this source. To this day village boundary dispute is often decided by this one fact. If The Kulawadis agree, the other inhabitants of the villagers can say no more. When-in our forefathers’ days, as the natives say-a village was first established, as stone called ‘karu kallu’ is set up. To this stone the Patel once a year makes an offering. The Kulwadi, after the ceremony is over, is entitled to carry off the rice, etc., offered. In cases where there is no Patel, the Kulwadi goes through the yearly ceremony. But what I think proves strongly that the Holia was the first to take possession of the soil is that the Kulwadi receives, and is entitled to receive, from the friends of any person who dies in the village, a certain fee or as my informant forcibly put it, ‘they buy from him the ground for the dead.’ This fee is still called in Canarese nela haga, from nela earth, and haga, a coin worth 1 anna 2 pies. In Munzerabad the Kulwadi does not receive this fee from those ryots who are related to the headman. Here the Kulwadi occupies a higher position. He has, in fact, been adopted into the Patel’s family, for, on a death occurring in such family, the Kulwadi goes into mourning by shaving his head. He always receives from the friends the clothes the deceased wore, and a brass basin. The Kulwadi, however, owns a superior in the matter of burial fees. He pays yearly a fowl, one hana (4annas 8 pies), and a handful of rice to the agent of the Sudgadu Sidha, or lord of the burning ground.”

In the Thiruthuraipoondi inscription No.204, (Tamil Nadu Archaeology Department) pertaining to cholas period says as follows :-

"வண்ணார் பள்ளர் பறையர் உள்ளிட்டாரும்"

In the Madurai, Melur (keeranur) inscription (S.I.I. Vol-V, No.273) pertaining to Kulotunga chola-III says as follows :-

" இட்ட நிலம் கொங்கூர் குளத்துக் கிழைத்தூம்பில் எல்லைகளில் 
பள்ளக் கவருக்கு தெற்கும் மன்றாடி சோழ கொந் செய்க்கு வடக்கும்" 

In the Thiruthuraipoondi inscription No.1, (Tamil Nadu Archaeology Department) pertaining to pandiyas period says as follows :-

"வடபாற் எல்லை பள்ளன் ஓடை"

During the Kulasekara Pandiya period of 13th century, the inscriptions says as follows :

"இவ்வூர் குடும்பரில் பெரிய தேவப் பள்ளன்"

(Seminar on Hero-stones, Editor R. Nagaswamy (page-77) published by the State Department of Archaeology, Govt of Tamil Nadu - 1974).

In 1229 A.D., (Maravarman Sundara Pandya) the Nadu of Kana-nadu, the Nagaram, the Grama, Vanniyar and the Padaipparru's agreed to levy per capita on all the land holders as given below :-

For Brahmins, Chettis, Vellalas 1/2 Panam
for Minors 1/4 Panam
for Garrisons 1/4 Panam
for Parayars & Pallars 1/8 Panam 

It shows Brahmins, Chettis and Vellalas were held equals and from the manual labourers like Pallas and Paraiyas 1/4 of what was levied from others (Kudumiyamalai) was collected.

"பறையர் பள்ளர் பெர் ஒன்றுக்கு பணம் அரைக்காலும்"

(Tamil Coins a study, Dr. R Nagaswamy, Page - 107 & 108. Published by Institute of Epigraphy, Tamil Nadu State Department of Archaeology - 1981) &
Inscriptions of the Pudukottai State (I.P.S), Inscription No.561. (Kudumiyanmalai Inscription).

In the Thiruvallur District, Kuvam thirupuranthaka Eswarar koil inscription (1296 A.D), pertaining to "Thiribuvana Vira Ganda Gopala Devar (Telugu Chola) says as follows :-

"வைத்தாந் பள்ளநும்"
"இவை பள்ளன் எழுத்து" (S.I.I. Vol-XXVI, No.354).

In the Trichirapalli District Tiruppalatturai inscription says as follows :-

"புலை அடியாரில் முன்னால் நங்கைபுரத்தில் பாட்டத்தில் நின்ற 
புலை அடியாராய் உடையார் கம்பண உடையார் காரியப்பெர் 
சந்த்ரசர் விற்க நான் கொண்டு உடையெனான சாதனப்படியால் 
உள்ள பள்ளன் பிறவியும் இவன் பள்ளி அழகியாளும் இவன் மகன் நம்பாளும் இவன் தம்பி 
வளத்தானும் இவன் தம்பி தாழியும்" (S.I.I. Vol-VIII, No.590). 


In the Pudukkottai Thirumayam, Karaiyur Sundara Raja Perumal koil inscription pertaining to the king "Virupakshirayar" of 14-15th century A.D says as follows :-

"வலையர் ஆடிக்கு ஒரு கூடு முசலும் காத்திகைக்கு 
ஒரு கூடு முசலும் இடையர் பால் நெய்யும் பறையர் 
ஆடிக்கு இரண்டு கொழியும் காத்திகைக்கு இரண்டு 
கொழியும் பள்ளர் ஆடிக்கு இரண்டு கொழியும் 
காத்திகைக்கு இரண்டு கொழியும்" (I.P.S. Ins. No. 715)

In the Pudukkottai Thirumayam, Ilambalakudi Madavira Vinayagar koil inscription of 16th century says as follows :-

"இலம்பலக்குடியில் பள்ளற்கும் பறையற்கும் 
விருது சண்டையாக காஞ்சிபுரத்துக்குப் போய்
கல்வெட்டுப்"

"இலம்பலக் குடியில் பறையற்கும் 
பள்ளற்கும் சண்டை" (Avanam-15, July-2004, Page-31&32)

In the Pudukkottai Thirumayam, Karaiyur Thirumanganeeswarar koil inscription of 16th century says as follows :-

"காத்திகைக்கு இடையன் ப.ல் நெய்யும் ..
வலையன் முசலும் பள்ளன் கொழியும்
பரையன் கொழியும் ஆக இந்த சுவந்திரம்" (I.P.S. Ins. No.843)

In the Pudukkottai Thirumayam, Thekkattur Agatheeswarar koil inscription of 16th century says as follows :-

"தெற்காட்டூராக அமைந்த ஊரவரொம்
மேற்படியூற் பள்ளற்கும் பறையற்கும் 
பள்ளற்கு தவிலும் முரெசும் செமக்கலமும் 
நன்மை தின்மை பெருவினைக்குங்கொட்டி 
பொக கடவராகவும் பறையர் அஞ்சு கா" (I.P.S. Ins. No. 956)


In the Pudukkottai Thirumayam, Mellathanayam Mariamman koil inscription of 16th century says as follows :-

"வீர சின்னு நாயக்கரவர்கள் பள்ளருக் குச்சிலா 
சாதனங்கட்டளையிடப்படி பள்ளர் பறையர் 
இருவகைப் பெருக்கும் வெள்ளானை 
வாழை கரும்பு உண்டில்லை யென்று
விபகாரம் நடக்குமிடத்தில் பள்ளர் இந்த 
விருது தங்களுக் யெல்லாமல் பறையருக்கு 
இல்லை யென்று நெய்யிலெ க்கை பொடுமிடதில்
பள்ளருக்கு க்கைக்கு சுடாமல் வெற்றியான 
படியினாலெ" (I.P.S. Ins. No. 929)

In the above said inscriptions, the "Pallar Community people" and "Paraiyar Community People" were placed together. In one of the inscription, the "Pallar Community People" referred as "Pulai Adiyars"

கோலியாஸ் என்பர்கள் கோலியப்பறையர்களே கன்னட ஆதாரம்:



கோலியாஸ் என்ற பறையரும் மள்ளர் என்ற பள்ளரும் ஒன்றே.பள்ளரும் பறையரும் அங்கு உழுகுடிகளாக வாழ்கின்றனர்.கோலியாஸ் என்பது தமிழில் கோலியப் பறையன் என்றும் மலையாளத்தில் புலையன் என்று அறியப்படுகின்றது.

“Holeyas are the field labourers, and former agrestic serfs of South Canara, Pulayan being the Malayalam and Paraiyan the Tamil form of the same word. The name is derived by Brahmins from hole, pollution, and by others from hola, land or soil, in recognition of the fact that, as in the case of the Paraiyan, there are coustoms remaining which seem to indicate that the Holeyas were once masters of the land; but, whatever the derivation may be, it is no doubt the same as that of Paraiyan and Pulayan. The Holeyas are divided into many sub-divisions, but the most important are Mari, Mera, and Mundala or Bakuda. . .”

புலையர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் புலையர் எனும் பழங்குடியின மக்கள் வாழுகின்றனர். இவர்கள் வேட்டையில் கிடைக்கும் இறைச்சி, மற்றும் காய், கனி, கிழங்கு வகைகளை உண்பர். புலையரது தலைவனுக்கு கணியன் என்று பெயர். இவர்களிடையே குடும்பி, குள்ளன், மல்லன், குடியன் என்னும் பிரிவுகளும் உள்ளன. சித்திரை மாத முழுநிலவு நாளில் விழா கொண்டாடுகின்றனர். திருமணவிழாவில் கற்பூரவல்லி என்று வாசமுள்ள செடிக்கொத்தொன்று மணமகள் கழுத்தில் அணிவிக்கப்படுகிறது. பெண்களிடம் பித்தளை மோதிரமும், கண்ணாடி வளையல்களும் அணியும் வழக்கம் பரவலாக உள்ளது

பள்ளரின் பட்டங்கள்:குடும்பன் இங்கே குடும்பி என்றுள்ளது.
மல்லன் மள்ளன் என்ற பட்டமும் பள்ளரிடம் உள்ளது அதையும் அறிவோம்.குடியன் குடி அடிமை என்றும் அறிவோம்.ஆனால் இந்த குள்ளன் யார்?
குள்ளன்=பள்ள்ன்??கணியர் என்பது பறையரில்  வள்ளுவரைக் குறிக்கும்.

பள்ளர்கள் ஆந்திராவில் இருந்து வந்த மலாஸ் சாதியர் என்றும் பள்நாடு என்ற பள்ளர் நாடு இன்னும் ஆந்திராவில் உள்ளது.








மள்ளர் என்ற பள்ளர்வெளி கர்நாடகாவில் தான் உள்ளது:



மள்ளர் என்ற பள்ளர்கள் கர்நாடகாவில் தான் உள்ளார்கள் இவர்கள் கர்நாடக பூர்வ குடியினர்.பள்ளர்கள் கர்நாடகாவில் உள்ள கோலியாஸ்(பறையர்)ரில் உட்பிரிவினராக வாழ்கிறார்கள்.எனவே வலைதளத்தில் பள்ளர்கள் கூறும் காவிரியில் அமைந்த மருத நிலம் கர்நாடகாவில் தான் உள்லது.இவர்கள் கன்னடகுடியினர் என்பதே உன்மை.இவர்கள் திப்பு சுல்தான் காலத்தில் மள்ளர் போர்வீரர்களாக இருந்தனர்.பின்பு வந்த கிருஷ்ன ராஜ உடையாரால் படையில் இருந்து மறுக்க பட்ட்னர். The Mallas in the battle

The Malas or Holeyas who were called Malloyis by Tolemy and also called Mallas by the British in their writings were the major antagonists of the British in the battle. Tipu sultan trusted the Malla soldiers more than any of his other soldiers for their bravery, obedience, and battle worthiness. It was one of the reasons why the battle took place in Mallavelly; the present Malavally in the Mandya district of Karnataka. The Malla soldiers attacking the Colonel Arthur Wellesley ’s British army can be seen in the painting shown at the top of the article. The Holeyas of Malavally have a sour memory of the battle even now. In their tongue you can hear the idiom Mir Sadiq for any one who betrays the master. One notable military advance championed by Tipu Sultan was the use of mass attacks with iron -cased rocket brigades in the army. The effect of these weapons on the British during the Third and Fourth Mysore Wars was sufficiently impressive to inspire William Congreve to develop the Congreve rockets . This was the last of the four Anglo-Mysore Wars . The Holeyas used the gun powder and the rocket technology to defend their Mysore Kingdom. The reminiscence of the battle and the rocket technology can be seen even today in the use of gun powder in the temples controlled by the Holeyas of Malavally Taluq.
In the Mane Manchi (Mancheshwari) temple in Halasally Village no festivity goes without the sound of the gunpowder and the rockets launched by the Ur Yajaman (the leader of the Village). The puppet government of the British which took over the reins of the administration of the Mysore kingdom under the instructions of the British commissioner who was posted to Mysore to advise the King on all issues led by the Diwan Poornaiah issued orders to the Mallas not to use rockets, gunpowder, their traditional Bichchugatti (Open sword), Choori (a bent knife), Kathari (Battle Worthy Knife), Beesu Kodli( Axe used in the Battles) and Eradu Nalage Machchu ( Double edged machete). Apart from these military restrictions the Holeyas suffered at the hands of the British puppet government and lost several religious and traditional privileges enjoyed in the first grade temples of the Mysore Kingdom. To quote here the words of Mr. Edgar Thurston “In 1799 (after the battle of Mallavelly), however, when the the Dewan (prime minister) Purnaiya visited the holy place, (Melukote Chaluva Narayana Temple), the right of the outcastes (Mallas, Holeyas and Madigas) to enter the temple was stopped at the dhvaja stambham, the consecrated monolithic column, from which point alone can they now obtain a view of the god.” The Holeyas (Mallas) suffered until their importance was realized by the Krisna Raja Wodeyar. But an irreproachable damage was done to the pride and prestige of the Mallas by then. The benevolent Wodeyar to mitigate the sour memories of the Holeyas constructed the Modern English School in Malavally; in the place where the battle took place and predominantly habited by the Mallas, the Holeyas were preferentially employed by his government; in his factories and offices and Malavally got hydro power stations and electricity. The Holeya Keris ( Areas Principally habited by Holeyas) got the first electrified houses and electrical street lights even prior to the Mysore Palace. Thus modern education and modern life style creeped into the houses of Holeyas and they contributed to the first batch of modern medicine doctors, engineers, civil servants, and teachers of Mysore Kingdom. The reasons mentioned here explain enough about the high academic, finanacial, political and social levels achieved by the Holeyas of Malavally in particular and those of Old Mysore region of Karnataka in general. A few such acts of generosity shown by the King have brought back the confidence among the Holeyas in Malavally. Today they can be seen in all the walks of life. They don’t forget the King. One can see the photographs of both Sri Kisna Raja Wodeyar as well as Tipu Sultan in the Houses of Holeyas on par with their god Malle Madappa (Malai Madeshwara) and their ancestors.
இலங்கையை பொருத்தவரை பள்ளர்கள் சிங்களர்களின் உட்பிரிவாகவும் பிரதேமெடுத்தல்,பாணிய வழங்குதல் போன்ற கரும காரியங்களை செய்வதாகவும் இந்திரனான சிங்கள விஜயனை மூதாதயராக கூறும் இவர்களை பாவணர் போன்ற (பாதிபள்ளர்) இணத்தவரின் முயற்சியில் தான் இன்று தமிழர் என கூறிவருகின்றனர் என்பது தமிழ் ஈழ கருத்து.

இலங்கையை சார்ந்த வேத்தா எனும் வேட்டுவர் மக்களின் உட்பிரிவே பள்ளர்களும் சாணார்களும் என ஸ்ரீனிவாச அய்யங்கார் கூறுகிறார். இந்த வேதா மக்களின் மூதாதையன் இராவணன் ஆவான். அவனின் மகனே இந்திரா சித்தி. சாணார்கள் இறைவனின் அமைச்சர் ஒருவரை  மூதாயர் 
என கூறுகின்றனர் பள்ளர்கள் இந்திரன் என இந்திரசித்துவை கோருகின்றனர்.

பள்ளரும் சாணாரும் இலங்கை பூர்வீகமும் ஒரு வாய்ப்பு உள்ளது.





இடங்கை வலங்கை சாதி மக்கள் தத்தம் பூர்வீகத்தை தேடவும் முனைப்பாக செயல்பட்டனர்.  இடக்கையை சார்ந்த பள்ளிகள்,பள்ளர்கள் தங்களின் பூர்வீகம் ஆந்திரா,ஒரிசா என பல்லவ,பாண்டிய நாட்டுக்கு வெளியே தேடினர். ஆனால்

பறையர்,நத்தமான்,வேடன்,மலையமான் போனற மக்கள் சோழநாடே தங்களின் பூர்வீகம் என கூறுகின்றனர்

பள்ளர்கள் காஞ்சிபுரம்க இடங்கை வலங்கை கல்வெட்டு படி அவர்கள் பொஊர்வீகம் ஆந்திராவோ,கலிங்கமோ அந்நிய தேசம் எனவும் அவர்கள் இந்த நாட்டு குடிகளில் தங்களை அடிமகர்களாக சோழர்கள் பிடித்து வந்தனர் என இடங்கை வலங்கை வரலாறு கூறுகிறது. 
இடங்கை-வலங்கை 

ஸ்ரீனிவாச அய்யங்கார்.

The Mysore system fully permits the Holeyas and Madigs to hold land in their own right, and as sub-tenants they are to be found almost everywhere. The highest amount of land assessment paid by a single Holeya is Rs.279 in the Bangalore district, and the lowest six pies in the Kolar and Mysore districts. The quota paid by the outcastes towards the land revenue of the country aggregates no less than three lakhs of rupees; more than two-thirds were being paid by the Holeyas, and the remainder by the Madigs. These facts speak of themselves, and afford a reliable index to the comparative well-being of these people. Instances may also be readily quoted, in which individual Holeyas, etc., have risen to be money-lenders, and enjoy comparative affluence.”


"ஏவல் மரபினர்" சரித்திரம்

பா.நீலகண்டன்

(Article in communist website)

பண்டைத் தமிழகத்தின் ஜாதி அமைப்பைக் குறித்து ஆராயப்புகும் ஒருவனுக்குக் கிடைக்கும் முதன்மை ஆதாரம் இலக்கியமே. தாழ்த்தப்பட்ட மக்கள் இலக்கியங்களில் தலை மக்களாக இடம் பெறலாகாது என்ற இலக்கிய மரபு ஒன்று இருந்து வந்த அன்றையச் சூழலில் அவர்களைப் ஫ற்றிய செய்திகள் இலக்கியங்களிலும் மிக அரிதாகவே காணப்படு~ கின்றன. சிற்சில சொற்களையும் உவமைகளையும் ஆதார~ மாகக் கொண்ட ஆய்வை நடத்த வேண்டியுள்ளது.தமிழ் இலக்கிய வரலாற்றின் துவக்க காலத்தில் இருப்பது தொல்காப்பியம். தொல்காப்பியத்தின் அகத்திணையியல், மரபியல் இரண்டும் ஜாதி அமைப்புக் குறித்த சில செய்தி~ களைத் தெரிவிக்கின்றன. பிரிவு பற்றிப் பேச வந்த அகத்~ திணையியல் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற நான்கு பிரிவினரைச் சுட்டுகின்றது. இந்நால்வரும் "ஏவல் மரபினர்" (தொல் அகத்திணையியல்.26) எ஁ன்றும் குறிக்கப்~ படுகின்றனர். 



அதாவது "பிறரை ஏவிக்கொள்ளும் தொழில் தமக்குளதாகிய தன்மையை உடையவர்கள்" என்று இதற்கு நச்சினார்க்கினியர் விளக்கம் தருகிறார். இதிலிருந்து நான்கு 63 குலத்தினரின் ஏவலுக்குக் கீழ்ப்பட்டுக் குற்றேவல் செய்த ஒரு பிரிவினர் சமுதாயத்தில் இருந்தனர் என்பது புலனா~ கிறது. அவர் யார்?மேற்குறிப்பிட்ட நான்கு பிரிவினர்஖்஖ான மரபும் தொழி~ லும் வரையறுத்த மரபியல், அதனை அடுத்து, `அன்னராயினும் இழிந்தோர்க்கு இல்லை' (தொல்.மரபியல்:84) என்கிறது. இங்கு `இழிந்தோர் என்பதற்கு "நான்கு குலத்தினும் இழிந்த மாந்தர்" என இளம்பூரணர் உரை எழுதுகிறார். 

இந்த இழிந்த மக்கள் யார்?நடுவண் ஐந்திணைக்குரிய தலைமக்களைப் பற்றிக் கூறிய பிறகு, அதன் புறத்தவாகிய கைக்கிளை, பெருந்~ திணைக்குரிய மக்களைப் பற்றி அகத்திணையியலில் பேசப்~ படுகிறது. "அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் கடிவரையில புறத்து என்மனார் புலவர்"இதை முன்னெழுப்பிய இரு கேள்விகளுக்கான ஐயங்களுக்~ கான விடையாக஼க் கொள்வோம். இங்கு அடியோர் என்ப~ வரைப் பிறருக்குக் குற்றவேல் செய்வோர் ' எனவும், வினை~ வலர் என்பவரைப் `பிறர் ஏவிய தொழிலைச் செய்தல் வல்லோர் எனவும் நச்சினார்க்கினியர் விளக்கி உரைக்கிறார். இவர்கள் ஏன் அதனைந்திணைக்கு உரியர் அல்லர் என்பதற்கு இளம்பூரணர் நீண்டதொரு விளக்கம் தருகிறார்; அகத்~ திணையாவன அறத்தின் வழாமலும், பொருளின் வழாம~ லும், இன்பத்தின் வழாமலும் இயலல்வேண்டும். அவை~ யெல்லாம் பிறருக்குக் குற்றேவல் செய்வார்க்குச் செய்தல் அரிதாகலானும் அவர் நாணுக்குறைபாடு உடையவர் 64 ஆகலானும், குறிப்பறியாது வேட்கை வழியே சாரக் கருது~ வராகலானும், இன்பம் இனிய நடத்துவார் பிறர் ஏவல் செய்யாதார் என்பதனாலும் இவர் புறப்பொருட்டு உரியர் ஆயினார்" என்கிறார். இது பிறருக்குக் குற்றேவல் செய்வோரின் சமூகப் பொருளாதார நிலையை விளக்கு~ வதோடு அன்றைய இலக்கியங்கள் மேட்டுக்குடியினரின் இலக்கியங்களே என்ற உண்மையையும் தெளிவுபடுத்து஖ிறது. ஆக, பொருளாதார ஆதிக்கமும் சமூக மதிப்பும் கொண்டோர் ஒரு பக்கம்; 


அவர்களுக்கு அடித்தொழில் செய்தோர் ஒரு பக்கம் என்஼்று அன்றையச்சமூகம் பிளவு~ பட்டுக்கிடந்த஼து என்பது புலனாகிறது. அடிமை, இழிந்தோர் என்ற சொற்஖ள் குற்றேவல் செய்தோரின் சமூக இழி~ நிலையைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.சங்க இலக்கியங்களில் துடியர் பறையர் என்போர் பேச஬்படு~ கின்றனர். துடி, பறை என்னும் தோல் கருவிகளை இயக்கு~ பவர்கள் இவர்கள். இவர்கள் "இழிசினர் "என்றும் "இழி~ பிறப்பாளர்"என்றும் இலக்கியங்களில் இழித்துரைக்கப்படு~ கின்றனர்.துடியெறியும் புலைய எறிகோல் கொள்ளும் இழிசின" (புறம்: 287)"பூக்கோல் இன்று என்று அறையும் மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே" (புறம்: 289)"இழிபிறப்பாளன் கருங்கை சிவப்ப வலிதுரந்து சிலைக்கும் வன்கண் கடுந்துடி' (புறம்:170)கட்டில் நிணக்கும் இழிசினன் கையது போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று (புறம்: 82) 65 இழிசினர் என்றும் இழிபிறப்பாளர் என்றும் அழைக்கப்படும் இவர்களின் தொழில் பறை மற்றும் துடியறைதல், தோல் பொருட்களைப் பழுதுபார்த்தல் என்று தோல்தொழிலோடு ஒட்டியதாகத் தெரிகிறது.புலையன் என்பது ஏசத்தக்க இழிசொல்லாக இலக்கியத்தில் சில இடங்களில் கையாளப்படுகிறது. (கலி:72:4; 311:2) 


பறையர் துடியர் பாணர் ஆகியோரும் புலையர் என அழைக்கப்படுகின்றனர்....... புலையன் பேழ்வாய்த் தண்ணைமை இடந்தொட்டன்ன அருவி இழிதரும் பெருவரை நாடன் (நற்றிணை: 345:5-7)"மலையமா ஊர்ந்து போகிப் புலையன் பெருந்துடி கறங்கப் பிறபுலம் புக்கவர்" (நற்றிணை77:1-2)புதுவன ஈகை வளம்பாடிக் காலின் பிரியாக் கவிதைப் புலையன்தன் யாழின்" (கலித்: 95:9-10)இவர்கள் மட்டுமின்றி இழிதொழிலைச் செய்யும் வேறு சிலரும். உதாரணமாக சுடுகாடு காக்கும் வெட்டியான் துணி வெளுக்கும் வண்ணான் ஆகியோரும் புலையன் புலைத்தி என்ற பொதுப் பெயராகலேயே அழைக்கப்படுகின்றனர். "கள்ளி போகிய களரி மருங்கின வெள்ளி னிறுத்த பின்றைக் கள்ளொடு புல்லகத்திட்ட சில்லவிழ் வல்சி புலையனேவப் புல்மேல் அமர்ந்துண்டு அழல்வாய்ப் புக்க முன்னும் பலர்வாய்த்திராஅர் பகுத்துண்டோரே" (஫ுறம்:360:16-2) 66 "அடியியல் விழவின் அழுங்கல் மூதூர் உடையோர் பான்மையின் பெருங்கை தூவா வறனில் புலைத்தி எல்லின் தோய்த்த புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கம்" (நற்.90:1-4)ஆக, அன்றை௟ச் சமூக அமைப்பில் பறையர்,துடியர், பாணர், வண்ணார், வெட்டியான் போன்ற வேலைப் பிரிவினர் இழி~ நிலைச் சாதியினராகக் கருதப்பட்டனர் எனக்கொள்ளலாம். அன்றைய விவசாயத் தொழில் சாதியினராக விளங்கியவர்~ கள் இவர்களா? இது பற்றி உறுதியாக஼க் கூறமுடியாவிடினும் சில யூகங்களை முன்வைக்கச் சங்க இலக்கியம் இடமளிக்கிறது. நெல்கதிரை அறுவடை செய்யும் மக்கள் பறையை முழக்கிக் கொண்டே அறுவடை செய்ததாக இலக்கியங்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன.வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇக் கண்மடல் கொண்ட தீந்தேன் இரிய" (புறம்:348)வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇப் பழனப் பல்புள் இரிய" (புறம்:350)


வெண்ணெல் அரிநர் மடிவாய்த் தண்ணுமை பன்மலர்ப் பொய்கைப் படுபுள் ஓப்பும்" (அகம்: 204)வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇச் செங்கண் எருமை இனம்பிரி பொருத்தல்" (மலைபடு:471-2)ஒலிந்த பகன்றை விளைந்த கழனி வன்மைவினைநர் அரிபறை" (மதுரை.காஞ்: 261-62) பறையறைவர்கள் இழிந்தவர்கள், புலையர்கள் என்னும்~ போது, இங்கு அறுவடைத் தொழிலில் ஈடுபட்டவர்களும் இழிநிலை மக்களாக இருக்க வேண்டும். 67 மதுரைக்காஞ்சியில் வன்கைவினைஞர் (அதாவது வலிய கை~ யினால் தொழில் செய்பவர்கள் என்ற பொருளில் ) எனச் சுட்டப்படுவது போல வேறு சில இடங்களில் நெல் வயல்~ களின் களை பறிப்பவர்களும் அவ்வாறே சுட்டப்படுகின்றனர். அத்தோடு கடைசியர் எனவும் அழைக்கப்படுகின்றனர்.கைவினை மாக்கள்தம் செய்வினை முடிமார் சுரும்புண மலர்ந்த வாசங் கீழ்ப்பட நீடின வரம்பின் வாடிய விடினும் கொடியரோ நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாது பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும். (குறுந்:309)



கொண்டைக் கூழைத் ண்தழைக் கடைசியர்(பள்ளர் )  சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும் மலங்குமிளிர் செருவில் தனம்பு தடிந்திட்ட பழன வாளைப் பரூரக்கண் துணியல் புது நெல்வெண்சோற்றுக்கண்ணுறையாக விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி நீடு கதிர்க் கழனி சூடு தடுமாறும் வன்கை வினைஞர் " கடிமலர் களைந்து முடிநாறு அழுத்தித்தீ தொடிவளைத் தோளும் ஆகமும் தோய்ந்து சேறாடு கோலமொடு வீறுபெறத் தோன்றிச் செங்கண் நெடுங்கயல் சின்மொழிக் கடைசியர் வெங்கண தொலைச்சிய விருந்தின் பாணி" (சிலம்பு10:127-131) இவை முன்குறிப்பிட்ட யூகத்தை வலியுறுத்துவனவாக அமைகின்றன. அதாவது விவசாயத் தொழிலில் நேரடி உடல் உழைப்பில் ஈடுபட்டவர்஖ளின் `கடைநிலை' மக்களே என்பது "கடைசியர்"(பள்ளர் ) என்று சொல்லால் புலனாகிறது. சங்க காலத்தில் பண்ணை அடிமைகள் இருந்தனரா என்ப஼தற்கான 68 தற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லையெனினும், இக்~ கடைசியர் தங்கள் சமூக நிலையில் அடிமைகளின்று பெரிதும் வேறுபட்டிருக்கவில்லை எனக் கொள்ள இட~ முண்டு" என்கிறார் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி!


இலக்கியங்கள் சுட்டும் `உழவர் ' என்ற சொல்லுக்கு உரியவர்~ களாக விவசாயத் தொழிலில் நேரடி உடல் உழைப்பில் ஈடுபடும் இக்கீழ் மக்களைக் கருத இடமில்லை. மருத நிலங்~ களில் வாழும், உழுதுண்பாராகிய சிறுநிலை உடைமையாளர்~ களே 'உழவர் ' என்று சுட்டப்படும் சொல்லுக்கு உரியவர்~ களாகத் தெரிகிறார்கள்.ஈரச் செவ்வி உதவின வாயினும் பல்லெருத்துள்ளும் நல்லேருது நோக்கி வீறுவீறாயும் உழவன் போல" (புறம்:289:1-3)வைகுபுலர் விடியல் மைபுலம் பரப்பக் கருநனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின் எரிமருள் பூஞ்சினை இனைச்சிதர் ஆர்ப்ப நெடுநெல் அடைச்சிய கழனியேர் புகுத்துக் குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர அரிகால் போழ்ந்த தெரிபகட்குழவர்" (அகம்:41:1-6)நிலம், ஏர், எருது ஆகிய உற்பத்திச் சாதனங்க஼ளை உழவர் உடைமையாகக் கொண்டிருந்தனர். இதனடிப்படையில் விவசாய உற்பத்தியல் உடல் உழைப்பில் ஈடுபட்ட `கடை~ நிலை' மக்கள் நிலஉடைமையற்றவர்களாக இருந்தனர் எனவும் கொள்ளலாம். 69 சங்க இலக்கியங்களில் புலையர், பறையர் ,கடைசியர் என்று சுட்டிச் சொல்லப்பட்டவர்கள் தாழ்ந்த சாதியினரே; நில உடைமையற்ற விவசாயக் கூலிகளே; இன்றைய பள்ளர் பறையர் சாதியினரின் முன்னோர்களே என்ற முடிவுக்கு வருவதற்கான ஆதாரங்கள் இடைக்கால இலக்கியங்களில் காணப்பெறுகின்றன.



சீவக சிந்தாமணி ஏமாங்க஼த நாட்டின் வளம் பற்றிக் கூறும் போது, நஞ்சை நிலத்தில் நிகழும் விவசாய உற்பத்தி பற்றி விரிவாகப் பேசப்படுகிறது. அங்கு உழவு முதல் அறு~ வடை ஈறாக உள்ள விவசாயத் தொழிலைச் செய்பவர்஖ள் `கடைசியர் ' என்றே அழைக்கப்படுகின்றனர்."சேறமை செருவினுள் செந்நெல் வான்முளை வீறொடு விளைகெனத் தொழுது வித்துவார் நாளிது பதமெனப் பறித்து நாட்செய்வார் கூறிய கடைசியர் குழாங்கொண் டேகுவார் (பா. எண் 45) கடைசியர் பெண்கள் களை பறிக்கும் தொழிலின் ஊடே மது அருந்திக் களித்தாக மற்றொரு பாடல் கூறுகிறது.வளைக்கையால் கடைசியர்(பள்ளர் )  மட்டு வாக்கலின் திளைத்தவர் பருகிய தேறல் தேங்குழிக் களிப்ப உண்டு இள அனங் கன்னி நாரையைத் திளைத்தலின் பெடைமயில் தெருட்டுஞ் செம்மற்றே" (பா.எ:50)சேக்கிழாரின் ஆதனூர் புலைப்பாடி வருணனை புலையர்~ களின் வாழ்க்கைச் சூழலை யதார்த்தமாகச் சித்திரிக்கிறது.மற்றவ்வூர்ப் புறம்பணையின் வயல்மருங்கு பெருங்குலையில் சுற்றம் விரும்பி கீழ்மைத் தொழிலுழவர் கிளைதுவன்றிப் பற்றிய கொடிச்சுரைமேல் படர்ந்த பழங்கூரையுடைப் புற்குரம்பைச் சிற்றில பல நிறைந்துளதோர் புலைப்பாடி.கூர்உகிர் மெல்லடியளகின் குறும்பார்ப்புக் குழுச்சுழலும் வார்பயில் முன்றிலினின்ற வள்ளுகிர நாய்த்துன்ற பறழ் கார் இருப்பின் சரிசெறிகைக் கருஞ்கிறார் கவர்ந்தோட ஆர்சிறுமென குரைப்படக்கு மரைக்கசைத்த விருப்புமணிவன்சிறுதோல் மிசைஉழத்தி மக஼உறக்கும் நிழல்மருதுந் தன்சினைமென் படையொடுங்குந் தடங்குழிசிப் புதைநீழல் மென்சினைய வஞ்சிகளும் வசிப்பறை தூங்கின மாவும் புன்சிறுநா௟்ப் புனிற்றுமுழைப் புடைத்தெங்கும் முடைத்தெங்கும்செறிவலித்திண் கடைஞர் வினைச்செயல்புரி வைகறையாமக் குறியளக்க அளைக்குஞ் செங்குடுமி வாரமச் சேக்கை வெறிமலர்த்தண் சினைக்காஞ்சி விரிநீழல் மருங்கெல்லாம் நெறிகுழல் புன்புலைமகளில் நெற்குறு பாட்டொலி பரக்கும்புள்ளுந்த஼ண் புனல்கலிக்கும் பொய்கையுடையப் புடையெங்குந் தள்ளுந்தாள் நடையசையத் தளையவிழ் பூங்குவளை மது விள்ளும் பைங்குழல் கதிர்நெல் மிலைச்சி புன்புலைச்சியர்கள் கள்ளுண்டு களிதூங்கக் கறங்குபறையுங் கலிக்கும்(பா:6-10)


புலையர்கள் இங்கு`புன்புலை மகளிர்' என்றும் புன்புலைச்சி~ யர்கள் என்றும் அழைக்கப்படுவதிலிருந்து அவர்களின் சமூக இழிநிலையை உணரலாம். இவர்களே செறிவலித்திண் கடைஞர் இப்படித்தாகிய கடைஞர் இருப்பின் என்று கடைஞர், கடைசியர் எனவும் சுட்டப்படுகின்றனர். இவர்~ களுக்கான குடியிருப்புகள் உயர்சாதியார் இருந்த ஊருக்குப் 71 புறத்தே வயல்களுக்கு நடுவேயான மேட்டுநிலத்தே தனித்து அமைந்து இருந்தது என்பதைப் `புறம்பணையின் வயல் மருங்கு.... புற்குரம்பைச் சிற்றில் பல நிறைந்துளதோர் புலைப்பாடி' என்ற வரிகள் உணர்த்துகின்றன. உயர்சாதி நில உடைமையாளர் வீடுகளைப் `புயலடையும் மாடங்கள்' என வருணிக்கும் சேக்கிழார் புலையர்களின் குடியிருப்பைப் `பைங்கொடிச் சுரைமேல் படர்ந்த பழங்கூரையுடைப் புற் குரம்பைச் சிற்றில் ' என அதன் ஏழ்மை நிலை தோன்றச் சித்திரிக்கிறார். இது இரு வர்க்கத்திற்கும் இடையேயான ஏற்றத்தாழ்வைத் தெளிவாக வெளிப்படுத்து஖ிறது. `கீழ்மைத் தொழில் உழவர்' என்பது இவர்களே விவசாயக் கூலிகளாக விளங்கியதை மெய்ப்பிக்கும். இது தவிர மாடறுக்கும் தொழிலுடைய இவர்஖ள் அதிலிருந்து கிடைக்கும் தோல், நரம்பு, கோரோசனை முதலாய பொருட்களை உயர்சாதி~ யார் கோயில்களுக்கு அளித்து வந்தனர். தோலும் விசிவாரும் பேரிகை முதலாய கருவிகளுக்கும் ,நரம்பு வீணைக்கும், யாழுக்கும், கோரோசனை அர்ச்சனைக்கும் பயன்படுத்தப்~ பட்டன. இவ் ஊர் கோயில் பணியைச் செய்து வருபவருக்கு ஊர்ப்போதுவிலிருந்து `பறைத்துடவை'என்னும் பறைத் தொழில் மான்யம் அளிக்கப்பட்டது.



ஊரில் விடும் பறைத்துடவை உணவு உரிமையாகக் கொண்டு சார்பில் வரும் தொழில் செய்வார் தலைநின்றார் தொண்டினால் கூரிலைய முக்குடுமிப் படையண்ணல் கோயில்தொறும் பேரிகையே முதலாய முகக்கருவி பிறவினுக்கும் போர்வைத்தோல் விசிவாரென்று இனையனவும் புகலுமிசை நேர்வைத்த வீணைக்கும் யாழுக்கும் நிலைவகையில் சேர்வுற்ற தந்திரியும் தேவர்பிரான் அர்ச்சனைகட்கு ஆர்வத்தினுடன் கோரோசனையும் இவை அளித்துள்ளார்." 72 என்ற நந்தனைக் குறித்த அறிமுக வரிகளால் அறியலாம். இவர்஖ள் கோயில்களுக்கு உள்ளேயும், உயர்சாதியார் குடி~ யிருந்த ஊர்களுக்கு உள்ளேயும் செல்ல அனுமதி மறுக்கப்~ பட்ட உண்மைக்கு நந்தனே சான்று.
நந்தனார் சரித்திரக் கீர்த்தனையிலும் இப்பறையர்களின் தொழில் விரிவாக எடுத்துரைக்கப்படும்.

"நாத்து நரம்புகளைச்-சுமப்பதும் உழுவதும் நஞ்சை வயலைச் சுற்றி-வருவதும் வளம்பெறப் பாத்திகட்டி விதை-தெளிப்பதும் பறிப்பதும் பாயுமடையைத் திறந்து- விடுவதும் அன்றியில்....


சேரியண்டையில் குடியிருப்பதும் பதறுகள் சிதறித் தூற்றி நெல்-அளப்பதும் பார்ப்பதும் ஊரை வளைத்துத் தமுக-கடிப்பதும் மதுக்குடம் உண்டு களித்துநா-முறங்குவது அன்றியில்.....ஆண்டைமார்களிடும்-பணிவிடை செய்வதும், 

அருகில் நின்றுகும்பிடுவதும் நடுவதும் தாண்டி நடந்து கோல்-பிடிப்பதும் அளப்பதும் தனித்துச் சுடலைதினம்-காப்பதும் அன்றியில்.... இது பறையர் வகுப்பாரின் தொழிலையும் சமூகக் கடமை~ யையும் தெளிவாக விவரிக்கிறது.

இதுவரை இலக்கியத்திலோ பிறவற்றிலோ இடம்பெறாத `பள்ளர்' என்ற வகுப்பாரைப் பற்றிப் பள்ளு இலக்கியங்கள் பேசுகின்றன. பள்ளு இலக்கியங்கள் கி.பி.பதினேழாம் நூற்~ றாண்டுக்குப் பிற்பட்டவைகள். இவைகளில் காலத்தால் முந்திய஦ுó முக்கூடற்஫ள்ளு, இப்பள்ளு இலக்கியங்களில் பேசப்~ படும் பள்ளர்கள் விவசாயத் தொழிலாளர்கள்; கடைநிலை 73 மக்கள் இவர்கள் யார் என்ற கேள்விக்கு விடை காணும் முன் பள்ளு இலக்கியம் காட்டும் உற்஫த்தி உறவுமுறை ஫ற்றிக் காணலாம்.முக்கூடற்பள்ளு இரண்டு வர்க்கங்களை முதன்மைப் படுத்து~ கிறது. உருவமற்ற நிலப்பிரபுவான இறைவனின் பிரதிநிதி~ யாய் இருந்து நிலத்தைக் கண்காணிக்கும் பண்ணை விசாரிப்~ பான்; விவசாய உற்பத்தியில் நேரடியாக ஈடுபடும் பள்ளர்~ கள் என்ற இரு வர்க்கத்தினர். நிலம் முக்கூடலில் கோயில் கொண்டுள்ள அழகர் ஆகிய திருமாலுக்குச் சொந்தமானது

முக்கூடல் அழகர் பண்ணை" (பா:36) "கத்தர் திருமுக்கூடல் கண்ணர் பண்ணை"(பா.91) "முக்கூடல்பரமனார் அழகர் தம் பண்ணை"(பா.113) "அடிக்குள் அடங்கும் படிக்கு முதல்வர் அழகர் முக்கூடல் வயலுள்ளே." (பா.129) ஆகிய வரிகள் இதை மெய்ப்பிக்கும் இடைக்காலங்஖ளில் தேவதானம் முதலான பெயர்களில் மன்னர்களால் கோயில்~ களுக்கு வழங்கப்பட்ட நிலவகையாக இதுவும் இருக்கலாம். இந்நிலங்களைப் பள்ளருக்குப் பிரித்துக் கொடுத்து, உற்~ பத்தியை மேற்பார்வையிடுபவனே பண்ணை விசாரிப்பான். இவன் கோயிலின் பிரதிநிதியாகவோ ,விசயநகரப் பேரரசுக் காலத்தில் மன்னனால் நியமிக்கப்பட்ட பாருபட்டயக் கார~ னாகவோ இருக்கலாம். பண்ணைகளில் நேரடியான உடலுழைப்பில் ஈடுபடுபவர்கள் பள்ளர்கள். இவர்கள் கோயில் என்னும் உருவமற்ற ஆனால் நிறுவன வடிவமான நிலப்பிரபுவுக்குச் சொந்தமான பண்ணையோடு பிணைக்கப்பட்ட பரம்பரைக் கொத்~ தடிமைகள். 74 "பண்ணைஏவலறும் பள்ளியர்"(பா.5) "முத்தமிழ் நாட்டழகர் கொத்தடியான்"(பா.13) என்று இவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதே இதற்குச் சான்று. இந்தக் கொத்தடிமைப் ஫ள்ளர்களுக்~ குள்ளே ஒரு தலைமைப் பள்ளன். அவன்஼தான் முக்கூடல் பள்ளுவில் வரும் வடிவழகக் குடும்பன. இவன் பண்ணை விசாரிப்பானால தலைவனாக நியமிக்கப்படுவதாகத் தெரி~ கிறது.....பள்ளர்்களுக்கெல்லாம் தலைமையைப் பள்ளனாக இருக்கும் வடி வழகக்குடும்பன், கோயில் நிலத்தை எல்லாம் சேரிப் பள்ளர்~ களுக்குப் பிரித்துக் கொடுத்துச் சாகுபடி செய்஖ிறான், அறு~ வடையில் அவரவர் செலுத்த வேண்டிய பங்கை வசூலித்துப் பண்ணைக்காரனிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பும் இவனதே. முக்கூடல் பள்ளுவில் தினச்சக்கரம், பெரிய நம்பி திருமாளிகை, ஏழு திருப்பதிக் கட்டளைகள், வடமேலந்திரன் மடம், ஆகியவற்றுக்குக் குறிப்பிட்ட நெல் அளக்கப்பட்ட செய்தியும், ஆடித்திருநாள் விழாவிற்கு 6000 கோட்டை நெல்லும், பங்குனித் திருநாள் விழாவிற்கு6000 கோட்டை நெல்லும்,மண்டகப்படி சார்த்தும் செலவிற்கு 1000 கோட்டை நெல்லும், உள்ளூர் அந்தணர்க்கு 4000 கோட்டை நெல்லும்,நாள் வழிபாட்டிற்கு 8000 கோட்டை நெல்லும் வடிவழகக் குடும்பனால் அளந்து குடுக்கப்பட்ட செய்தி வரு~ கிறது. விளைச்சலில் பள்ளர் பெறும் பங்கு எவ்வளவு என்ப~ தற்கான சான்று இல்லை, எனினும் அவர்களுக்கு மிகக் குறைந்த அளவே கொடுக்கப்பட்டு மீதியனைத்தும் பறிக்கப்~ பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. 75 "முப்பழமும் சோறும் உண்ணவே- நடத்திக்கொண்டீர்" என இளையபள்ளி பண்ணை விசாரிப்பானை எதிர்த்துப் பேசுவது இந்த யூகத்துக்கு இடமளிக்கிறது. பள்ளர்கள் தங்களை அடிமை யென்றும், பண்ணை விசாரிப்~ பானை ஆண்டை என்றும் அழைக்கின்றனர். இச்சொல்லாட்சி ஆண்டான்- அடிமை யென்னும் நிலப்பிரபுத்துவ உறவுமுறை~ யின் கொடுமையை வெளிப்படுத்துகிறது பக்கமே தூரப் போயும் தக்க சோறென வெள்ளாண்மை பள்ளா பள்ளா என்பார் மெய்கொள்ளாதவர்" என்ற குடும்பன் கூற்று பள்ளர்கள் தீண்டத்தகாதவர்஖ளாக நடத்தப்பட்ட சமூக நடைமுறையைப் புலப்படுத்தும். குடும்பனைச் சவுக்கினில் வைத்திடீர் ஆண்டே" என மூத்தபள்ளி பண்ணை விசாரிப்பானிடம் முறையிடுவது அடிமைகளைப் பண்ணைவிசாரிப்பான் சவுக்கால் அடிக்கும் வழமுறை நிலவியதை மெய்ப்பிக்கும். அடிமையின் காலில் மரக்கட்டையை மாட்டி அப்பால் இப்பால் நகர முடியாதபடி விலங்கிடுவது மற்றொரு வகைத் தண்டனை. கண்சிவந்து பண்ணைக்காரணங்கே வந்த பள்ளன்தன் காலில் மரக்குட்டை சேர்த்தானே " (93) முக்கூடல் பள்ளுவில் வடிவழகக் குடும்பன், பண்ணை விசாரிப்~ பானால் இவ்வாறு தண்டிக்கப்படுகிறான். இவ்வுறவு முறை~ யின் கோரம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆவணங்களில் இன்னும் தெளிவாக வெளிப்படுகிறது.அதற்குமுன் வரலாற்றில் இதுவரை இலக்கியத்திலோ கல் வெட்டுக்களிலோ செப்பேடுகளிலோ சட்டப்படாத இப் 76 பள்ளர் யார் என்ற கேள்விக்கு விடை காணலாம். இது குறித்து வரலாற்று அறிஞர்களிடையே பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. 

அவை குறித்துக் கேசவன் விரி~ வாக ஆய்கிறார் நிலஉடைமையாளர்களான வேளாளர்கள் தம் பண்ணைகளில் பள்ளர்களையே கூலிக்கு அமர்த்தியிருந்~ தனர் என்றும் இவர்஖ளைப் பாண்டிய மண்டலத்திற்கு வேளாளர்களே கொண்டு வந்து குடியமர்த்தினர் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இதைக் கூறுபவர் எட்கார்தர்ஸ்டன் வேளாளர்களுக்குள்ளே இழிநிலை அடைந்த ஒரு பிரிவினர் பள்ளர் என்னும் நிலைக்குத் தாழ்ந்தனர் என்பது மற்றொரு கருத்து. இக்கருத்தைத் தங்கராஜ் பின்வருமாறு விளக்கு~ கிறார். "உத்தேசமாக 14,15 ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே பண்ணை விவசாய முறையும் பண்ணையாள் (வேலைக்காரர்) அமர்த்திச் செயல்பட்ட விவசாய முறையும் வளர்ந்திருக்க வேண்டும். தமிழ் நாட்டில் பெருமளவு நிலவுடைமையும் பண்ணைமுதலாளிகள் உருவானதும் இக்காலத்திற்குப் பின்னரே எனக் க஼ொள்ளலாம். நிலஅபகரிப்பு, நிலம் வாங்கல் விற்றல் குத்தகை வாரம்-கடன் போன்ற நிலம் சம்பந்தப்~ பட்ட வழக்கங்கள் இக்காலத்திற்஖ுப் பின்னரே உருவாகி~ யிருக்க வேண்டும். இதனால் அதிக அளவு நிலம் சேர்த்த வேளாளர்கள் தங்களுக்குத் துணை வேலையும் பண்ணை வேலையும் செய்ய அவர்஖ளுக்குள்ளேயே நிலம் சேர்க்க முடியாது போனவர், நிலத்தைப் ஫றிகொடுத்தவர், நிலத்தை அடமானம் வைத்துவிட்டுத் திருப்ப முடியாது போனவர், நிலமே இல்லாது இருந்தவர், ஏழையாயிருந்தவர் ஆகியவர்~ களைக் கூலிக்கு அமர்த்தியிருந்தனர். நிலவுடைமை வாழ்க்~ கையில் அபலையாகிவிட்ட வேளாளர், நிலவுடைமையில் வெற்றி பெற்ற வேளாளர்களிடமே குத்தகை-வாரம் முதலிய 77 முறையில் நிலம்பெற்று பயிர்த்தொழில் செய்திருக்கின்~ றனர். இவ்வகை வேளாளரே காலப் போக்கில் தனிக்குலத்~ தினராக அதாவது ஜாதியினராக உருவாகியுள்ளனர் இவ்விரு கருத்தையும் கேசவன் மறுக்கிறார்.

"பள்ளர்கள் ஒரு குடியேற்றம் பிரிவினர் என்்று கூறும் தர்ஸ்டன் எந்தக் காலத்~ தில் இக்குடியேற்றம் நடந்தது என்றும், எந்த இடத்திலிருந்து இவர்கள் குடியேற்றப்பட்டனர். என்றும் விளக்கவில்லை. மேலும் தமிழகத்தில் குறிப்பாகத் தஞ்சை மதுரை நெல்லை மண்டலங்களில் பல்வேறு ஜாதியினரின் குடியேற்றங்஖ள் நடந்ததற்கு ஆதாரங்கள் இருக்கின்றனவே தவிர பள்ளர் சாதியினரின் குடியேற்றத்திற்கு வரலாற்று ஆதாரம் இல்லை. தங்கராஜ் கூறுவதைப் போல கி.பி.14,15 ஆம் நூற்றாண்டு~ களுக்குப் பின்தான் தமிழகத்தில் வாங்கல் ,விற்றல், குத்தகை வாரம்,கடன் போன்ற நிலம் தொடர்பான வழக்கங்கள் உருவானவை என்றில்லை. அதற்கும் முந்தைய காலங்களி~ லேயே நாம் இவற்றைக் காண்கிறோம். வாரம், காட்டுக்குத்~ தகை, மேல்வாரம், கீழ்வாரம் எனும் சொற்கள் குத்தகை~ யைத் தெரிவிக்க஼ின்றன. நிலம் விற்பனைக்கும் வாங்கலுக்கும் கல்வெட்டுச் செய்திகள் ஆதாரமாக உள்ளன. எனவே கி.பி. 14,15 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னரே இத்தகைய வழக்கங்கள் நடந்தேறின் என்றறிகிறோம் மேலும் அக்காலத்தில் பள்ளர்கள் குத்தகை பெறும் உழவர்~ களாக இருந்ததே இல்லை. பள்ளுப் பாடல்களில் வரும் பள்ளர்கள் குத்தகை பெறுபவர்஖ள் அல்லர்;

 பண்ணை அடிமைகளே. கி.பி. 1843 க்கு முன் ஫ள்ளர்கள் மேல்ஜாதி நிலவுடைமை மக்களுக்குப் பண்ணை அடிமைகளாகவே இருந்~ தனர்."பள்ளர்கள் எவ்வித விதிவிலக்கும் இன்றி விவசா௟த்~ தொழிலிலேயே ஈடுபட்டுள்ளனர். இதற்கு முந்திய காலங்஼களில் 78 எவ்்வித ஐயத்துக்கும் இடமின்றி இவர்கள் நிலமற்ற கட்டுண்ட அடிமைகளாகவே இருந்தனர். எனினும் இன்று அவர்களின் 22 சத௉வீதம் பேர் பண்ணையாட்஖ளாக உள்ளனர். 38 சதவீதம் பேர் கடந்த 10 ஆண்டுகளாகத்தான் குத்தகை~ யாளர்களாக உள்ளனர். 39 சதவீதத்தினர் நாட்கூலியாக உள்ளனர். ஒரே ஒரு நபர் மட்டுமே மிகச் சிறிய நிலத்தை உடைமையாக்கி விவசாயம் செய்்கிறார்" என்஖ிறார் த஼ஞ்சை மாவட்டம் கும்பா பேட்டை கிராமத்தை ஆய்வு செய்தசமூக~ வியலறிஞர் கத்லீன் கஃப். இது தஞ்சைக்கு மட்டுமின்றித் தமிழகத்திற்கே பொருந்தும் எனலாம். எனவே அண்மைக் காலத்திய சமூக வரலாற்று நிகழ்வுகளை 3,4 நூற்றாண்டு~ களுக்கு முந்தைய சமூக நிகழ்வு஖ளோடு அப்படியே பொருத்த முடியாது. எனவே, குத்தகைதாரர்களான வேளாளர்஖ள் இழிநிலை யடைந்து பள்ளர்களாக உருவாகியிருக்க வாய்ப்~ பில்லை என்கிறார் கேசவன். கி.பி. 1500 வரை வரலாற்று ரீதியாகத் தீண்டாமை குறித்து ஆராய்ந்த டாக்டர் அனுமந்தன் பள்ளர்களின் தோற்றம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கிறார்: கி.பி. 9 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொண்டை மண்டலத்தை வேளாளர்கள் தாக்கி அங்கே குடியமர்ந்த போது பல்லவர்~ களை ஒடுக்கினர். அந்நேரத்தில் வேளாளர்களின் மேலா~ திக்கத்தை ஏற்றுக்கொண்ட உயர்வகுப்புப் பல்லவர்கள் சோழர் படையில் சேர்ந்து படையாச்சி என்றழைக்கப்~ பட்டனர் என்றும், தாழ்நிலைப் பல்லவர்கள் அடிமையாக மாறிப் பள்ளர்களாக உருமாறினர் என்றும் இவர் கருத்துத் தெரிவிக்கிறார்.ஆனால் பிற்காலச் சோழர் காலத்தில் எழுந்த மெய்க்கீர்த்தி~ கள், கல்வெட்டுகள் ஆகியவற்றில் பள்ளர் என்ற சமூகப் பிரி~ வினர் காணப்படவில்லை. 

ஜாதி முறைகளைச் சொல்லும் கல் 79 வெட்டுகூட அந்தணரிலிருந்து புல்லுப்பறிக்கிற பறமன்வரை என்றுதான் கூறுகிறதே தவிர பள்ளர் இனத்தைக் குறிப்பிட~ வில்லை. நிகண்டுகளிலும் இலக்கியங்களிலும்கூட குறிப்புக்~ கள் இல்லை. எனவே டாக்டர் அனுமந்தன் கருத்தை ஏற்றுக் கொள்வதற்கில்லை என மறுக்கும் கேசவன் முடிவில் தமது கருத்தை முன் வைக்கிறார்.கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் விசயநகரப் நகரப் பேரரசின் ஒரு பகுதியாக மாறிய தமிழகத்திற்குள் ஏராளமான குடியேற்றங்஖ள் நடந்தேறின. கம்மவார்களும், நாயக்கர்களும் ரெட்டியார்களும் , நிலஉரிமை பெற்றுச் சிற்~ சில பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். இவர்களில் சிலர் ஆயக்கார அமைப்பின் அதிகாரிகளாகவும் ஆனார்கள். இவர்~ கள் மட்டுமின்றி கைவினைஞர்களும் ,பணியாளர்களும் குடிய~ மர்த்தப்பட்டனர்... கைவினைஞர்களாகவும், பணியாளர்~ களாகவும் இருந்த சேணியர், சாலியர், வண்ணார்,ஒட்டர் தொம்பரவர், சக்கிலியர் ஆகியோரின் குடியேற்றத்தினால் ஏற்கனவே இவர்களது தொழில்களைச் செய்து வந்த மக்கள் மத்தியில் ஒருவித வேலைப்பிரிவினை தொடங்கியிருக்கலாம். முந்தைய குடிமக்கள் தம் தொழிலை முழுவதும் கைவிட்டு, வேறு தொழிலைச் செய்திருக்கலாம். அல்லது தம் தொழில்~ களில் ஏதாவது ஒன்றை மட்டும் ஖ுறிப்பாக எடுத்துக்கொண்டு ஏனைய தொழில்களை விட்டிருக்கலாம். அன்றைய தமிழகத்தில் தோல்தொழில், சங்கு ஊதுதல் மாடு , அறுத்தல், பண்ணை அடிமை வேலை செய்தல் போன்ற~ வற்றைப் பறையரே செய்தனர். குடியேற்றப்பட்ட தெலுங்குச் சக்கிலியர்கள் பிணம் எடுத்தல், மாடு அறுத்தல் தோல், செருப்பு தைத்தல் போன்ற தொழில்களைச் செய்~ தனர். சக்கிலியர் விவசாயத் தொழிலில் ஈடுபட்டதற்கான சான்று இல்லை. ஆயினும் சக்கிலியர் தொழில்களுக்கும் 80 பறையர் தொழில்களுக்கும் சில ஒற்றுமைத் தன்மைகள் உண்஼டு. மாடறுத்தல், தோல்தொழில் போன்றன இவ்விரு ஜாதியினருக்கும் பொதுவான தொழில்களாக இருந்த஼ன. இத்தன்மை பறையர்஖ளுக்குள்ளே ஒருவித வேலைப் பிரிவினையை உண்டுபண்ணியிருக்கலாம் அதாவது சக்கிலியர் குடியேற்றத்திற்குப் பின்னால் பறையரில் ஒரு பிரிவினர், இருவருக்கும் இடையே இருந்த பொதுவான தொழிலைக் கைவிட்டு, இருவரையும் வேறுபடுத்தும் தொழி~ லான பண்ணை அடிமைத்தொழிலில் மட்டுமே ஈடுபட்டிருக்~ கலாம். காலம் செல்லச் செல்லப் பண்ணை அடிமைத் ~ தனத்திலேயே இருந்து, பண்ணைத் தொழிலை மட்டுமே கவனிக்கக்கூடிய சாதியினராக உருவெடுக்கக் காரணமா~ யிருந்தது எனலாம். 

வேறு தொழில்களையும் விட்டு விடாது செய்து கொண்டிருந்தவர்கள் பறையர்களாகவே இருந்தனர். வயல்களில்- பள்ளஙகளில் மட்டுமே தொழில் செய்த வேலைப் பிரிவினர் பள்ளர் எனப்பட்டனர் எனலாம் என்கிறார் கேசவன்ஆக பள்ளர்கள் கி.பி. 14,15 ஆம் நூற்றாண்டு கால அளவில் தமிழகத்தில் அன்றிருந்த பறையர் இனத்தில் இருந்து பிரிந்த ஜாதியினர் என்ற முடிவை ஒப்புக்கொண்டால், இடைக் காலத்திலும், பண்டைக்காலத்திலும் தமிழ்ச் சமூகத்தின் கடைநிலையிலிருந்த ,இழிநிலையிலிருந்த, மக்கட் பிரிவின~ ரான கடைசியர், இழிசினர், புலையர் பறையர் ஆகியோரின் வாரிசுகளே இவர்களும் என்பது தெளிவாகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய காலத்திலிருந்து மக்கள் தொகை அறிக்கைகள் தொடர்ச்சியாக வெளிவரத் தொடங்குகின்றன. இவைகள் பள்ளர்-பறையர் ஜாதியர் பற்றிய பல தெளிவான செய்திகளைத் தருகின்றன. அப்஼~ 81 போதைய தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் பள்ளர் பறையர் வகுப்பார் 16 சதவீதத்தினர்; இவர்களில் 642 சதவீதத்தினர் விவ஼சாயத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். தமிழகத்தில் பள்ளர் பறையர் ஜாதியார் பெற்றிருந்த இடத்தை மலையாள நாட்டில் செருமர்களும் கன்னட நாட்டில் கோலேயாஸ்களும் தெலுங்கு நாட்டில் மலாஸ்களும் வகித்து வந்தனர். செருமர்களில் 93.5 சதவீதத்தினரும்,கோலேயாஸ்களில் 65.7 சதவீதத்தினரும் மலாஸ்களில் 75.5 சதவீதத்தினரும் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.இப்புள்ளி விவரங்஖ளில் இருந்து சில உண்மை஖஼ளை அறிய~ லாம்.i.தமிழகத்தின் மொத்த மக்கட் தொகையில் பள்ளர் பறையர் வகுப்பார் ஒரு கணிசமான அளவில் இருந்துவந்துள்~ ளனர். ii. விவசாய உற்பத்தியில் நேரடி உடல் உழைப்பில் ஈடுபட்டவர்கள் இத்தாழ்த்தப்பட்ட மக்களே, 

iii. தமிழகத்~ தில் மட்டுமின்றித் தென்னிந்தியா முழுவதிலுமே தாழ்த்தப்~ பட்ட மக்களே விவசாய உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளனர் iv. ஜாதிக்கும் தொழிலுக்கும் இடையே ஒரு பிரிக்கமுடியாத பிணைப்பு இருந்து வந்துள்ளது என்பன போன்ற உண்மை~ கள் இப்புள்ளி விபரங்களிலிருந்து பெறப்படுகின்றன. இதனாலேயே பள்ளர்-பறையர் வகுப்பார் `விவசாயத் தொழிற் சாதியினர் என்று சமூகவியலாளர்களால் அழைக்கப்படுகின்றனர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் சமூக அமைப்பின் உற்஫த்தி உறவில் இவர்களுடைய இடம் என்ன? `பண்ணையாள்' என்று அழைக்கப்பட்ட இவர்கள் சமூகமாகவோ தனிப்பட்ட நிலையிலோ நிலத்தோடு பிணைக்கப்பட்டிருந்தானர். நில~ வுடைமையாளரின் குடும்பம் முழுவதும் அழிந்தால் ஒழிய இவர்களுக்கு விடுதலை கிடையாது. அப்போதும் ஏழ்மை 82 விரட்ட ஓரிடத்திலிருந்து விடுபட்டு மற்றோர் இடத்தில் கொத்தடிமையாயினர். அப்படியானவர்கள் நிலவுடைய~ யாளிரின் தனிச்சொத்தாகக் கருதப்பட்டனர். இவர்஖ளை விற்கவோ அடகுவைக்கவோ வாடகைக்கு விடவோ நில~ வுடையமையாளருக்கு உரிமை உண்டு. நிலத்தோடு சேர்த்தும் தனியாகவும் இவர்கள் விற்கப்பட்டனர். ஒரு அடிமை 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை மாவட்டத்திற்கு ஏற்ப விலை போனதாகத் தெரிகிறது.நிலவரி ஒன்றே அரசாங்கத்தின் முக்கிய வருவாயாக அமைந்~ திருந்த ஆரம்ப காலக்கட்டங்களில் பண்ணைகளை விட்டுத் தப்பியோடிய கொத்தடிமைகளை பண்ணையார்஖ளுக்கு மீட்டுத்தரும் முயற்சியில் மாவட்டக் கலெக்டர்களே ஈடு~ பட்டனர். 1830 இல் திருச்சி மாவட்டக் கலெக்டர் சேலம் மாவட்டக் கலெக்டருக்கு நிலத்திலிருந்து தப்பியோடிய பத்துப் பள்ளர்களை மீட்டுத்தரக் கோரி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது; பள்ளர்கள் நிலத்தின் அடிமை஖ள் ; நிலத்தைவிட்டு வெளியேறும் உரிமை அவர்களுக்கு கிடை~ யாது நிலவுடைமையாளரான பிராமணர் அவர்களுடைய உதவியின்றி நிலத்தைச் சாகுபடி செய்ய இயலாது. அவருக்கு அடிமைகளை மீட்டுத் தராவிடில் நிலமும் பாழாகும். அரசாங்கமும் நஶ்டமடையும்" என்று குறிப்பிட்டுள்ளார். நீதி மன்றங்களும்கூட, அடிமைமுறை மரபுவழிப்பட்ட நடை~ முறை என்று பண்ணையாட்களை விற்கும் அடகுவைக்கும் பண்ணையார் உரிமைக்குச் சாதகமாகவே ஆரம்பக்காலங்~ களில் தீப்பளித்தன.அடிமைகள் அவர்கள் செய்த சிறுசிறு தவறுகளுக்குக் கூடக் கடுமையாக஼த் தண்டிக்கப்பட்டனர். தாமஸ்பாபர் என்பவர் 1823 இல் சென்னையிலிருந்த கம்பெனியின் தலைமை நீதி மன்றத்திற்குச் சமர்ப்பித்த அறிக்கையில் 83 அடிமைகள் அவர்஖ள் செய்த சிறு தவறுகளுக்குத் தண்டனை~ யாக மூக்கறுக்கப்படுவது வழக்கமாக இருந்தது எனக் குறிப்~ பிடுகிறார்.தவறு செய்த, தப்பியோட முயன்ற அடிமைகள் கட்டி வைத்துச் சவுக்கால் அடிக்கப்பட்டனர். விலங்கிடப்பட்டனர். விலங்கு பூட்டப்பட்ட நிலையிலேயே வேலையும் வாங்கப்~ பட்டனர். சில இடங்஖ளில் மாட்டுச் சாணத்தையும் மாட்டு மூத்திரத்தையும் குடிக்கச் செய்தனர். இத்~ தண்஼டனை முறைகள் இவர்கள் கால்நடைகளுக்கு நிகராக்க கருதப்பட்ட உண்மையைப் புலப்படுத்தும் தீண்டத்தகாத இம்மக்கள் கொடுமையான சமூக இழிவு~ களுக்கும் உள்ளாக்கப்பட்டிருந்தனர். இவர்கள் உயர்சாதி~ யாரைத் தொடக்கூடாது; உயர்சாதியார் தெருவழியே நடக்கக்கூடாது; மண்பாத்திரங்களையன்றிப் பிற பாத்திரங்~ களை உபயோகிக்கக்கூடாது; காலில் செருப்பணியக்கூடாது: ஆண்கள் மட்டுமின்றிப் பெண்களும் கூட தங்஖ள் மார்புப் பகுதியை மறைக்கும் வண்ணம் ஆடை எதுவும் அணியக்~ கூடாது என்பன போன்ற சமூகக் கட்டுப்பாடுகள் சாதியின் பெயரால் இவர்கள் மேல் திணிக்கப்பட்டிருந்தன பள்ளர் பறையர் இங்கு எந்த அளவுக்குக் கொடுமையாக இழிவாக நடத்தப்பட்டனர் என்பதற்கு 32 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்து இந்துக்களின் நடைமுறை, வழக்கம் மற்றும் சடங்குகள் குறித்து ஆராய்ந்துள்ள `டூபோய்ஸ்' என்ற ஆங்கிலேயரின் கூற்றை இங்கு நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்; 


பறையர்கள் எங்கும் சொந்தச் சாகுபடி செய்ய அனுமதிக்கப்படுவது இல்லை. பிற சாதி~ யாருக்குத் தங்கள் உழைப்பை விற்பதே அவர்களுக்கு விதிக்கப்பட்டது. தங்கள் கடுமையான உழைப்புக்குப்பதிலாக மிகச் சிறிய அளவு கூலியையே அவர்கள் பெற்றனர். இவர்஼களின் 84 முதலாளிகள் தங்கள் சந்தோஶத்திற்காகக்கூட இவர்களை அடிக்கலாம்; அல்லது வேறு வகைத் துன்பங்களை அளிக்கலாம். இந்த அப்பிராணிகளுக்கு அதை எதிர்த்து முறையிடவோ பரிகாரம் தேடவோ உரிமை கிடையாது. பறையர்கள் இந்தியாவின் பிறவி அடிமை஖ள், நம் காலனி நாடுகள் ஒன்றில் அடிமையாக இருப்பதா அல்லது இங்கு பறையனாக இருப்பதா என்ற இரு சோகமான நிலைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்பட்டால் நான் தயக்க~ மின்றி முந்தியதையே தேர்ந்தெடுப்பேன்" என்கிறார் அவர்.பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து இ஼இந் நிலைமைகள் சிதையத் துவங்குகின்றன. 1843 இல் `அடிமை ஒழிப்புச் சட்டம்'வந்தது. இச்சட்டத்தின் மூலம் `சுதந்திரம்' அடைந்த அடிமைகள் மலேசியா, இலங்கை என்று ரப்பர்த் தோட்டங்களிலும், தேயிலைத் தோட்ட஛ங்களிலும் மாற்று வேலை பெற்றுச் சென்றனர். அங்கு ஓரளவு சேமித்த பணத்~ துடன் சொந்த ஊர் திரும்பியவர்கள் சிறு நிலத்தை உடைமையாக்கிச் சொந்த விவசாயம் செய்தனர் பொருளாதார நிலையில் போலவே, சமூக நிலையிலும் பல மாற்றப் போக்குகள் நிகழ்ந்தன. `தீண்டமை ஒழிப்புச் சட்டம்' வந்தது. கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சட்டங்கள் இயற்றப்பட்டன. பழைய புதிய சமூக அமைப்புச் சிதைந்து, அச்சிதைவிலிருந்து உருவாகி வந்த சமூக அமைப்பில் இவர்~ களும், சமூக விழிப்புணர்வும் எழுச்சியும் கொண்ட புதிய சக்தியாக உருவாகி வந்தனர். இதன் உச்சக்கட்ட வெளிப்~ பாடுகளாக தமிழ்நாட்டில் தஞ்சாவூரிலும் (1948), ஆந்திர நாட்டில் தெலிங்கானாவிலும் போராட்டங்கள் வெடித்தன. சமூக நிலையிலும் பொருளாதாரர நிலையிலும் தங்களை 85 அடிமைப்படுத்திய உயர்சாதி நில உடைமையாளர்களை எதிர்த்துத் தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்திய ஆயுதந்~ தாங்கிய போராட்டங்கள் இவை. நில உடைமையாளர்~ களை நிலத்திலிருந்து விரட்டியடித்துவிட்டு, அநேக கிராமங்~ களை இவர்கள் கைப்பற்றி `சோசலிச' அடிப்படையிலான நிர்வாகம் செய்தனர். இப்போராட்டங்களில் பங்கேற்றவர்~ களில், தலைமையேற்று நடத்தியவர்களில் பெரும்பாலோர் அரிசனங்஖ளே கிராமப்புற மக்கட்தொகையிலும், கிராம விவசாய உற்பத்தி~ யிலும் இன்றளவும் பிரதான அங்கம் வகிப்பவர்கள் இப்~ பள்ளர்- பறையர் சாதி௟ினரே. வரலாறு நெடுக அரக்கத்தன~ மான சமூக இழிவுகளுக்கும் பொருளாதாரச் சுரண்்டலுக்~ கும் ஆளாகி வந்துள்ள இம்மக்களே கிராமப்புற பாட்டாளி வர்க்க சக்தியின் ஆணி வேராக இருக்கமுடியும் இவர்களை இவர்களின் தலைமையைப் புறக்கணித்துவிட்டு இங்கு எந்தவொரு சமூக மாற்றத்தையும் நிகழ்த்திவிட முடியாது.  

References 1. Mysorean Military Commanders and Officials at Sedaseer and Seringapatam in 1799 2. Castes and Tribes of Southern India by Edgar Thurston