Tuesday, April 9, 2013

குகமுனிவர் கூறும் தெய்வீக வம்சத்தின் உடையார் பட்டம்.

குகமுனிவர் கூறும் தெய்வீக வம்சத்தின் உடையார் பட்டம்.

யார் பட்டம்.

குகமுனிவராகிய பார்க்கவர் தெய்வீகன் நரசிங்க உடையானை இந்திரன்,பிரம்மன்,திருமால் ஆகியோருக்கு இணையாக ஒப்பிடுகிறார்.
தெய்வீகனுக்கு மூவேந்தராலும் முடி சூட்டப்பட்ட பிறகு தெய்வீக உடையான் எதுவெல்லாம் உடையான் என்று  வகைப்படுத்தி குகமுனிவர் பாடியுள்ளார்.

இனுஞ்கேண் மினித்தவத்தெம் பிறையருளின் மலிவாலே
முன்மிவன் மஞ்சரியுடையான் முடிவிலருட் கடனுடையா
டனை மகனாய்ப் பெறவுடையான் சங்கரன் கைக்கீவுடையான்
வினமலிற் பிறப்புடையான் பின்னடையு மியற்கேற்ப.

பன்னிரு மாலை களுடையான் பதினெட்டுக் கொடியுடையான்
மின்னுவா வுடையான் மேழிபைம்பொன் முடியுடையான்
மன்னு பச்சைப் பரியுடையான் மார்பிடை முந்நூலுடையான்
தன்னு மறை கலையுடையான் சோதியருள் பெயருடையான்.

வழுதி முதன் மூவரவர் வழங்குமுடி நாடுடன்சீர்
முழுதுநிறை கன்னியர்கள் மும்மூன்றாய்க் கொளுமுடையான்
பழுதுவீந்தி ராசியர்கள் பயிமிரி வெற்றியுடையான்
மழவிடை நம் பரனில்லாம் வந்திரப்ப வீவுடையான்.

சத்தபுரி வேட்டுடையான் தனி அவ்வைப் பாட்டுடையான்
நத்தமெனும் நாடுடையான் நவினாங்கு முடியுடையான்
பத்தொடிரு மலையுடையான் பாடை பதினெட்டுடையான்  
முத்தெறி பெண்ணையுடையான் மூவாறு புவியுடையான்.

பேருடையான் புகழுடையான் பெரியோர் கடகவுடையான்
காடுடைய காமுடையான் கதியுடையான் நிதிவுடையான்
தாருடைய யாளைவில் விஞ்சை தமையுடைய னமையுடையான்
சீருடையான் திருவண்ணாமலை முதல திகழுவுடையான்.

எக்குலமும் தொழஉடையான் எவ்விருது களுமுடையான்
திக்கு விசையமும் உடையான் நிகழ் சைவ நெறியுடையான்
முக்குல காரணமுடையான் முடிவிறவ வலியுடையான்
மைக்குழலெம் பெரிய நாயகியருளின் மைந்துடையான்.

பெருமைக்குரியவர்களுக்கு உடையார்  என்ற சிறப்பு பெயர் வர

சிறப்பினர்கிய பெயர் நிலைக் கிளவிக்கும்
இயற்பெயர்க் கிளவி.
என்ற தொல்காப்பிய விதி காரணம்.

பார்க்கவ குல மக்களுக்கு உடையார் என்ற பட்டம் ஆதியில் இருந்தே  வருகிறது.இடைப்பட்ட காலத்தே வந்ததல்ல.பல பாடல்களிலும் பெயருக்கு பின்னால் உடையான் என்றோ உடையார் என்றோ சேர்க்கப்பட்டிருக்கிறது.
கல்வெட்டுகள்,செப்புப்பட்டயங்கள்,முறிகள்,முச்சலிக்கா இவற்றிலும் உடையார் உடையான் என்றே உள்ளது.

பார்க்கவ குலத்தார் சேர நாட்டு எல்லைகளில் மலைநாடுகளில் வாழ்ந்து வந்தவர்கள் என்றும் சமவெளிபகுதிக்குப் பரவியவர்கள் என்றும் சரித்திரச் சான்றுகள் உள்ளன.மேலும்  பண்டைகாலத்தில் இருந்தே  இந்த இனத்திற்குள் மொழிக்கலப்பு,கலாச்சார ஊடுருவல்,இனக்கலப்பு,பிரதேசக்கலப்பு ஏற்பட்டதில்லை.
இன்றைக்கு ஐந்து வருடம் முன்வரைக்கும்  மலையமான் குடியினர் மூவரும் அவரவர் பட்டத்திற்குள்ளேயே திருமணம் செய்வர்.அதாவது சுருதிமான் சுருதிமானிலும்,மலையமான் மலையமானிலும்,நத்தமான் நத்தமானிலும் மட்டுமே மணம் புரிவர்.தற்போது தான் மூவருக்குள்ளும் மணம் செய்கின்றன

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.