Monday, March 18, 2024

மறக்குல வல்லப மகாபலி குல சத்திரிய வாணர்கள்

 


வாணர் என்றாலே மாவலி வம்சத்தோர் என்றே பொருள்.மாவலியின் குரு சுக்கிரச்சாரியர் என்னும் பார்க்கவரே ஆவார்.மாவலி சேர அரசர்.அசுரனாக அவரைக் கூறுதல் கட்டுக்கதையே.திராவிட அரசர்களையே புராணங்கள் அசுரன் எனக்கூறுகிறது. மாவலி வழி வந்த சேர வம்சமே வாணர்கள்.ஆதலால் தான் இன்றைக்கும் மாவலியின்பேரன் வாணன் தங்களை வாணாதிராயன் என்றும் சேரர்கள் வானவன் அல்லது வாணர். வான வரம்பன் = மலைகளை எல்லைகளாக உள்ள சேரன்r வானவர் குலத்து குறுநில மன்னர்களாக பிற்கால மலையமான்கள்.வானாதிராயர் வானராயர்-மலைராயர் வானகோவரையர்-மலை கோமான் வானவிச்சாதிர நாடாழ்வான் போன்ற மலையர் குலத்து பிற்கால மக்கள் மகதை என்கின்ற ஆத்தூர் பகுதியே ஆண்டனர்.சேலம் மாவட்டத்தின கிழக்கும் தென்னார்க்காட்டின மேற்குப் பகுதிகளுமான மகத நாட்டினை வாணர்களான வாணாதிராசர், வாணகோவரையர் போன்றவர்கள் ஆத்தூர் அருகில் உள்ள அகழியூரைத் தலை நகரமாகக் கொண்டு ஆண்டனர். சேரர் நாடு என்று அழைக்கபடும் கேரளாவில் ஓனம் நன்னாளில் சேர அரசன் மாவலி என்ற மகாபலி மக்களை கான வருவதாக நம்பிக்கை. அதன் திருவிழாவே திருவோணம். பிற்கால வாணர்கள் பலர் தங்களை வேட்வதிரையர்,குறும்பகோலர்,மறவர்,மலையமான்,சுருதிமான்,வன்னியன்,முத்தரையர் என்ற பல பெயரில் அழைக்கபட்டனர். வாணர் என்ற அரசர்கள் ஒரே சாதியர் அல்லர்.ஒரு காலத்தில் சோழரையும்,கங்கரையும்,பாண்டியரையும் வாணர் வீழ்தினர் என சிலர் கூறுவர். தென்காசி பாண்டியன் இறந்தவுடன் மாவலிக்கு பாண்டிய பட்டம் கட்டினர் என்றும் கயத்தாறு வெட்டும் பெருமாள் "வெட்டு மாவலி" வம்சத்தினர் என்பது ஒரு சிலரின் கருத்து. ஒரு காலத்தில் கங்க மன்னனுக்கு கட்டுபட்டு வாழ்ந்த வாணர் தங்களை "மகாபலிகுல சத்திரியர்" என கூறுவதாக கங்க மன்ன செப்பேடு கூறுகிறது.

சேனை தழையாக்கி செங்குருதி நீர்தேக்கி

ஆனை மிதித்த அடிச்சேற்றில் மானபவன்
மாவேந்தர் வேந்தன் பறித்து நட்டான் ஏகம்பன்
மூவேந்தர் தங்கள் முடி"
இங்ஙனம் மாவலி மரபு வாண கோவரையர் வரை, தொடர்ந்து வந்த தூய தமிழ்க் குடியாயிருக்க அவனையும் அவன் மகனையும் அசுரன் எனக் கூறுவது எவ்வாறு பொருந்தும்?
இனி அசுரர் தமிழர் அல்லது திராவிடர் என்பதற்கு வேறுமொரு சான்றுண்டு. வடநூல்கள் கூறும் எண்வகை மணங்களுள் ஒன்றான ஆசுரம், மறச் செயல் புரிந்த மகட் கோடலாம். ஆசுரமாவது, கொல்லேறு கோடல், திரிபின்றி செய்தல், வில்லேற்றுதல், முதலியன செய்து கோடல் என்பர் நச்சினார்க்கினியர் (தொல். பொருள் சூ. 92 உரை) பண்டைத் தமிழகத்து முல்லை நிலத்தில் ஒரு பெண் பிறந்தபோதே ஒருசேங்கன்றிற்கு அவள் பெயர் குறித்து அதை கொல்லேறாக வளர்ப்பதும், அவள் பூப்படைந்தபின் அக் கொல்லேற்றை அடக்குபவனுக்கே அவளைக் கொடுப்பதும் வழக்கம்.
"கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்."
(கலித். 103)

கன்று, காலி வளர்த்து நெய், பால் விற்கும் இளச் செய்தி இஃதாயின் போரையே தொழிலாகக்கொண்ட பாலை மறவரும் மூவேந்தரும் எத்துணைத் தறுகணாளரும் துணிசெயலாளருமா யிருந்திருப்பார். இதனாலேயே செயற்கருஞ் செயலை அசுர நிருத்தியம் என்றும், அறுவை மருத்துவத்தை (surgery) அசுர வைத்தியம் என்றும் வடநூல் கூறும்.


எண்: 1972/16
ஆண்டு: 8- ஆம் நூற்றாண்டு
அரசு மண்ணன் : கொங்கணி சிவமாறன்
இடம்: தர்மபுரி ஊத்தங்கரை

செய்தி:
மாவலி வாணராயரான மறவனார் சேவகன்
கமியதழுமன் போரில் இறந்தது.

கல்வெட்டு: 
சிவமாறவர்மருக்கு யாண்டு
மாவலி வாணராயர் கங்கநாடாள
இந்திரன் தகடூர் மேல் வந்து
மறவனார்
சேவகன் .........



வாணர்கள் என்ற மகாபலிகுல மறக்குல மன்னர்கள் கல்வெட்டு: மன்னன்: முதலாம் இராஜ இராஜசோழன் ஆண்டு:10-ஆம் நூற்றாண்டு இடம்: ஜம்பை,தர்மபுரி மாவட்டம்,சிவண் கோவில் என்:589.305/1903 கல்வெட்டு: ஸ்வஸ்தி ஸ்ரீ திருமகள் போல பெரு நிலச்செல்வம் கொண்டு காந்தலூர் சாலை கலமறித்து.....ஈழமும் இரட்டைபாடி கொண்ட......செழியரை தெசு கொல் வன்மரான உடையார் ராஜ ராஜ தேவர்க்கு யாண்டு.....ஸ்ரீ ராஜ ராஜ தேவர் ............. மூண்று சன்னிதிகலைம் திருவமுது படைக்க............மறவன் நரசிங்க பன்மனான இராஜ இராஜ வாணகோவரையர்............. செய்தி: ஜம்பை பகுதியை ஆண்ட மன்னன் மறவன் நரசிங்க பன்மனான இராஜ இராஜ வாணகோவரையன் ஜம்பை சிவன் கோவிலில் திருவமுது படைக்க நிவதனம்............ இவருக்கு விஜய மனோஹரி வல்லப மகராஜ பலி குல திலகம் என பெயர் உள்ளது.