Thursday, October 24, 2013

பூலித்தேவன் வரைபடத்தை கட்டபொம்மன் என்று அடையாளப்படுத்த கூடாது


இன்று சில புத்தகங்கள்(வெளியிடப்பட்டுள்ளது) மற்றும் சின்னத்திரை(மீடியா) மற்றும் பத்திரிக்கைகளிலும் பூலித்தேவனுது வரைபடத்தை கட்டபொம்ம நாயக்கன் என வெளியிடுகின்றார்கள்.

இது ஒரு பிரச்சனையா என கேட்கலாம் ஆனால் இன்று நாம் சாதாரனமாக அனுமதிக்கும் ஒரு செயல் நாளை நமக்கே வினையாகிவிடும். இந்த செயலை நாயக்க இனத்தவர்கள் செய்வது கிடையாது அவர்களுக்கு தெரியும் கட்டபொம்மன் உருவம் எது பூலித்தேவன் உருவம் எது என்று.

இன்று நாம் அனுமதிக்கு விஷயம் நாளைக்கு நம்மையே "வெட்கமில்லாமல் எங்கள் கட்டபொம்மனை பூலித்தேவன் என விளம்பரபடுத்த வெட்கமில்லையா உங்களுக்கு" என்று அந்த இனத்தவர்களும் நம்மை எந்நேரமும் விமர்சனத்துக்காக காத்திருக்கும் இழிசினர்களுக்கும் கேட்கும் நிலை எழலாம்;

இந்த படத்தை கட்டபொம்மன் என விளம்பரபடுத்திகின்றனர்.


கட்டபொம்மனின் வரைபடம்:





பூலித்தேவனின் வரைபடம்:








வரைபடம் என்பது கற்பனையான் ஒன்றாக இருந்தாளும் பூலித்தேவனது வாரிசுகளின் முகத்தோற்றத்தை மாதிரியாக வரையபட்டது தான் அந்த படம்..ஒரு தெலுங்கு இனத்தவன் தோற்றத்துக்கும் தமிழனுக்கும் கொஞ்சம் கூட வித்தியாசம் இருக்காதா.

இன்று பல பள்ளிகளிலும் தமிழர் தலைவர்கள் என்று பெரியார்,கட்டபொம்மன்,ஜான்சிரானி லட்சுமி பாய் போன்ற தலைவர்களைப் பற்றிதான் பேச்சுப்போட்டி வைக்கிறார்களே பூலித்தேவனை பற்றி யாரும் பேச அனுமதிப்பதில்லை

காரனம் பூலித்தேவன் என்ற பெயரில் "தேவர்" என்று ஜாதிப்பெயர் வருகிறதாம்.ஆனால் நாம் மேலே குறிப்பிட்டவர்கள் எல்லாம் தமிழர்களா.

தேவர் என்ற பெயர் ஜாதிய வன்மத்தை தூண்டுகிறதாம். இந்த காலத்தில் பிரதமர் மன்மோகன் சிங்,லல்லு பிரசாத் யாதவ் போன்ற தலைவர்கள் முதல் திரைக்கவர்ச்சிகலான சமீராரெட்டி,மேக்னா நாயுடு,பிரியங்கா சோப்ரா சட்ட மேதை பீமா ராவ் ராம்ஜி அம்பேத்கர் என எல்லா பெயர்களையும் உச்சரிக்கும் இந்த சமூகத்தில் நமத பட்டம் தான் இவர்களுக்கு ஜாதியத்தை தூண்டுகிறதாம்.அது எல்லாம் பேமிலி நேமாம் நாம் பயன்படுத்துவது தான் தவறா?;

ஊரே அமனமாக இருக்கும் போது கோமனம் கடியவன் தான் முட்டாள் என் கூறும் பழமொழிக்கு ஏற்ப. தேவர் என்றால் அரசன்,இறைவன் என பொருள் தரும் பட்டத்தை பயன்படுத்துவதை கண்டால் எவனுக்கும் வயிறுஎரியும்,மனமெரியும்.அப்போது இவன் தான் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

இந்த திராவிட வியாதிகளால் நமது மக்களில் இன்று தேவர் பட்டம் புனைவதேயே இன்று வெகுவாக குறைந்துள்ளது.நாம் இந்த பன்னாடைகளால் இழந்த இழப்பு அதிகம். நாம் நமது பட்டத்தை பயன்படுத்த தயங்கலாமா.

இந்த மீடியா,மற்றும் வலைதள வேசிமகன்களுக்கு நமது தேவர் என்று உச்சரிக்க தயங்கும் இவர்கள். நமது முன்னோர் படத்தை மட்டும் பயன் படுத்த அனுமதிக்கலாமா கூடாது..

நமக்கு தெரிந்த எந்த ஊடகங்களிலும்,வலைதளத்திலும் பூலித்தேவனது படத்தை வேறொருவன் பயன்படுத்த அனுமதிக்க கூடாது

Wednesday, October 23, 2013

கவுரியன்(பாண்டியன்)


சிவகங்கை ஆண்ட மன்னரும் பாண்டிய வழித்தோன்றல்கள் தான்
பாண்டியர்
-----------------
பாண்டியர் வழிதோன்றலான சின்னஞ்சாத்தேவர்(வடகரை சொக்கம்பட்டி ஜமீன்)
மறவர் பாடிகாவல் குலசேகர பாண்டியன் காலத்தில்
MARAVARS ARE KSHATHRIYAS OF STOCK OF PANDYA,CHOLA,KERALA
Narasha Nayaka Killed Manabhusha Marava the ruler of Madurai
மறவர் குல பாண்டியன் மானக்கவசன்
திருவாடானை பாண்டியர்கள்
கவுரியன்(பாண்டியன்)
பாண்டியனின் திருநாமங்களில் ஒன்றுதான் கவுரியன்.இவர்களை கவுரியர் என்று கூறுவர்.அதுவும் கவுரி சீவல்லப பாண்டியன் சடையவர்ம பாண்டியனுக்கு பின் ஆண்டுள்ளனர்.
சிவகங்கை அரசர் "கவுரி வல்லபர்" என்றும் "பாண்டிய மண்டல ஸ்தாபனாசிரியன்" என்ற பட்டம் பெற்றவர் தம்மை சந்திர வம்சம் என கூறுகிறார்.
சசிவர்ணத்தேவர் முதல் வெள்ளையர் ஆட்சிவரை சிவகங்கை ஆண்டவர்களின் பட்டியல் பின்வருமாறு, 1. 1728 - 1749 - முத்து வீஜயரகுநாதகெளரி வல்லப உ. சசிவர்ணத்தேவர்
2. 1749 - 1772 - சசிவர்ண விஜயரகுநாத கெளரி வல்லப முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர்
3. 1780 - 1783 - கெளரி வல்லப வீரமங்கை ராணி வேலு நாச்சியார் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர்
4. 1841 - 1848 - கெளரி வல்லப உடையணத்தேவர்
5. 1801 - 1829 - கெளரி வல்லப உடையணத்தேவர் மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையணத்தேவரின் உடன் பங்காளி ராணி வேலு நாச்சியாரின் தத்து மைந்தன்
6. 1829 - 1831 - கெளரி வல்லப உ.முத்துவடுகநாதத்வேர்
7. 1831 - 1841 - கெளரி வல்லப மு. போதகுருசாமித்தேவர்
8. 1841 - 1848 - கெளரி வல்லப போ. உடையணத்தேவர்
9. 1848 - 1863 -கெளரி வல்லப மு.போதகுருசாமித்தேவர்
10. 1863 - 1877 - ராணி காதம நாச்சியார் போதகுருசாமி
11. 1877 - கெளரி வல்லபமுத்துவடுகநாதத்தேவர்
12. 1878 - 1883 - கெளரி வல்லப துரைசிங்கராஜா
13. 1883 - 1898 - கெளரி வல்லப து. உடையணராஜா
எனவே கவுரியர் என்ற பட்டத்துக்கு ஏற்ப சிவகங்கை ஆண்ட மன்னரும் பாண்டிய வழித்தோன்றல்கள் தான்
I— SOURCES OF VIIAYANAGAR HISTORY.
[Price, 4 rtipes 8 annas.\
SOURCES OF VIJAYANAGAR HISTORY
SELECTED AND EDITED EOK THE
UNIVERSITY
BY
S. KRISHNASWAMI AYYANGAR, m.a.,
Professor of Indian History and Archceology and Fellow of the
University of Madras.
PUBLISHED BY THE UNIVERSITY OF MADRAS.
1919. 
https://archive.org/details/sourcesofvijayan00krisrich
அச்சுதராய அப்யுக்தம் சொல்லும் நரச நாயக்கர் மானபூசனன் என்னும் மறவனாகிய பாண்டியனை வீழ்த்தி மதுரையை கைப்பற்றிய செய்தி.

மானபூசனன் மானக்கவசன் இவை யாவும் தென்காசிப்பாண்டியரின் பெயர்கள் மற்றும் கொற்க்கை வேந்தரான பாண்டியர்கள்.

மானபூசனப் பாண்டியன் = மானத்தை அனியாக அனிந்த மறக்குல பாண்டியன்


Achyuta-Raya-abhyudayam begins with his coronation, when
that son was anointed in the Yauva-Rajya (heir apparentcy) at the
same time. This authority may be followed as being the nearest
to Narasa, among the works that describe his early career. After
the affair against the Sultan of Bidar, he is said to have carried on
the campaign against the Telugu country. This was very likely
in the company of Saluva Narasimha against the Gajapati of
Kalinga and the Bahmani Sultan in the north. Then he is said to
have gone to the south against the Chola country. It may be that
in this part of the campaign as well he accompanied his master,
but there are specific achievements ascribed to him in this
campaign which are not mentioned in the various accounts relating
to Saluva Narasimha. He is said to have marched against
Madura, defeated the Chola, perhaps killed a Pandya, who is
called Manabhusha in one, and simply Marava in anotherHe is
then said to have marched northwards to Seringapatam where he
defeated the Heuna, governor or general, at the place, and took
possession of the island, having constructed a bridge, when the
river was in floods, to cross it. He is then said to have marched
westwards from there through a few places which are not identi-
fiable, to Gokarna on the West Coast. His having gone to
Ramesvaram might have been in the company of Saluva Nara-
simha or by himself alone. According to the order of campaigns
set forth in this account he must have been on the banks of the
Godavari in 1475 with his master. It may be then that he marched
southwards in the company of his master. The circumstances
necessitating a campaign against Madura must then have arisen,
and he must have been deputed on that commission.

அச்சுதராய அப்யுகதம்
கூறும் தென்காசி பாண்டியன் மானபூசனன் என்னும் மறவனை பற்றி
"மதுரா மகேசம் மறவாய தத்வம்"


"மானபூசனன்" என்னும் ஐடிலவர்மன் பராக்கிரம பாண்டியனையே இந்த நரசநாயக்கன் வென்றான். "மானபூசன்னை" துரத்திய பிறகு நரசநாயக்கன் மதுரையை உறங்காவில்லிதான் திருமாலிஞ்சோலை வாணாதிராயருக்கு அளித்தான் என சரித்திரம் கூறுகின்றது. இதன் பிறகே மதுரை வாணாதிராயர் வசமானது.(பாண்டிய  நாட்டில் வாணாதிராயர்: தொல்லியல் துறை இயக்குனர் வெ.வேதாச்சலம்.)


எனவே மானபூசன்னன் என்னும் மறவனை வென்றே மதுரையை கைப்பற்றினான் நரசநாயக்கன். எனவே மதுரையை ஆண்டது வாணாதிராயர் அல்ல.


ஆனால் கல்தோன்றி மண்தோன்றாக்காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடி என்னும் முதுமொழிக்கு ஏற்ப பல அரசுகள் மறவரில் தோன்றின. இருக்கு வேளிர் பல கல்வெட்டு மறவர் என வந்துள்ளது. சேர அரசர் பழுவேட்டரையர், மலையமான் , தொண்டைமான்,விழுப்பேரரையர் இவர்களுடன் வாணர்களும் மறக்குடியினரே. இவர்கள் மறவரில் ஒரு அங்கமே.
பாண்டியன் செந்தமிழன் கல்வெட்டு இதோ

 பாண்டியன் செந்தமிழ் தேர் சுந்தர பாண்டியருக்கு



Of these Narasimha
was famous for his heroic deeds even from his youth. He
captured the fort of Manava (Manuva ?) Durga from its Muham-
madan ruler and gave it back to him. He laid a bridge across the
Kaveri and captured the town of Seringapatam. He then marched
against Madura and, defeating and killing its Marava ruler in a
battle, captured the place. He then defeated in battle a chief called
Konetiraja who opposed him with his elephant hordes. He made
the city of Vidyaoura his capital. He had three queens who were
called Tippamba, Nagamamba and Obamamba. Of these by his
wife Tippamba he got a son called Vlra-Narasimha, by Naga-
mamba Krishna Raya and by Obamamba, Achyuta Raya.


ACHYUTARAYABHYUDAYAM lOQ
But the Parijatapaharanam dedicated to Krishnaraya says that Narasa killed
the Chola. We cannot say which of the versions is correct.

t The ruler of Madura is according to this account said to have submitted to
Narasa without fighting and to have made him valuable presents. But the copperplates
of his successors and the Achyutarayabhyudayam give a different version. According to
the Achyutarayabhyudayam he captured Madura after killing in battle its Marava ruler.
Again inscriptions say that he captured it from a king called Manabhusha. This Mana-
bhusha has been identified with Arikesari Parakrama Pandya surnamed also as Mana-
bharana and Manakavacha of the Tenkasi Pandyas. The Achyutarayabhyudayam again
says that Narasa defeated a chief called Konetiraja who opposed him with his elephant
hordes. We do not know who this chief was. Konetiraja is perhaps a corruption of the
title Konerinmaikondan which is one of the titles of Perumal Parakrama Pandyadeva
alias Kulasekhara. (Travancore Archaeological Series I, p. 104.) But he succeeded to
power only in SS. 1464 or AD. 1542-3. Therefore the term Konetiraya of the Achyuta-
rayabhyudayam cannot refer to him. There were others that have had the same title
and the present reference might be to one of them. No. 259 of 191 1, in Kumbhakonam,
of AD. 1490-I, refers to a Konetiraja of Kanch I


Since the campaign of Kumara Kampana, Madura seems to 
have been at least nominally under the empire. The two famous 
brothers Lakkanna and Madanna were respectively governors of 
Madura and the Chola country under Dgva Raya II. The former 

10 SOURCES OF VIJAYANAGAR HISTORY had for his sphere of office ' the Lordship of the Southern Ocean * along with the governorship of Madura when he was promoted from the middle division,
Deva Raya's brother-in-law Saluva Tippa taking his place there. What happened in the Pandya country after Lakkanna left Madura to go to headquarters is not quite clear. There are inscriptions of a few chieftains whose titles were Vanadi Rayar and their inscriptions range from A.D. 1453 to 1476 or thereabouts. In all likelihood the province of Madura was organized by Lakkanna, and these Bana chieftains whose original homes should have been in the North Afcot district were put in charge of various localities as sub-governors under him. They perhaps attempted to make themselves indepen- dent when the troubles in the empire assumed great dimensions under Virupaksha. It may be something like this that called for the active intervention of the imperial general Narasa Nayaka. There is another alternative possible ; it may be that the Pandyas, who had practically retired into the Tinnevelly district by now, attempted to regain their former position in the Madura district. This would account for the defeat of the Pandya king Manabhusha as some of the inscriptions state. We have a Manabharana among the Pandyans whose descendants were associated with Tenkasi, a city founded by one of them. What provision he made for carry- ing on the administration of Madura after he left, we have no means of knowing. But obviously there was no trouble in that frontier till we come to late in the reign of Krishnadeva Raya.







Thursday, October 10, 2013

பூவாலைக்குடியில் 23 மறவர் புதிய கல்வெட்டுகள் கண்டெடுப்பு

திருச்சி, அக். 12: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பூவாலைக்குடி கிராமத்தில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 23 புதிய கல்வெட்டுகளை டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தினர் கண்டெடுத்துள்ளனர்.   
திருச்சி, அக். 12: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பூவாலைக்குடி கிராமத்தில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 23 புதிய கல்வெட்டுகளை டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தினர் கண்டெடுத்துள்ளனர்.
   இதுதொடர்பாக, அந்த மையத்தின் இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவன் கூறியது:
   புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி சாலையிலுள்ள வையாபுரிக்கு அருகேயுள்ளது பூவாலைக்குடி என்னும் சிற்றூர். இங்குள்ள புஷ்பவனேசுவரர் கோயில், கருவறை மட்டுமே கொண்ட முத்தரையர் காலக் குடைவரைக் கோயிலாகும். சோழர் காலத்தில் இக்குடைவரையின் முன் முகமண்டபம் அமைக்கப்பட்டது.
   பிற்பாண்டியர் காலத்தில் பெருமண்டபமும், விஜயநகர அரசர்களின் ஆட்சிக் காலத்தில் முன்மண்டபமும் கட்டப்பட்டன. குடைவரைக் கோயிலின் தென்புறத்தில் இரண்டாம் பாண்டியர் கால அம்மன் கோயிலும், வடபுறத்தில் முருகன், பைரவர், சண்டேசுவரர் திருமுன்களும் (சன்னதிகளும்) அமைந்துள்ளன. இக்கோயில் வளாகத்திலிருந்து பதினைந்து கல்வெட்டுகள் ஏற்கெனவே படியெடுக்கப்பட்டுள்ளன.
   சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் முனைவர் மு. நளினியின் தலைமையில் இக்குடைவரையில் ஆய்வு மேற்கொண்ட டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆர்வலர்கள் 23 புதிய கல்வெட்டுகளைக் கண்டெடுத்தனர்.
   அவற்றுள் வீரராஜேந்திர சோழர் காலக் கல்வெட்டு, கூடலூர் நாட்டுப் பூவாலைக்குடியைச் சேர்ந்த தென்னவதரையன், இக்கோயிலில் இரவும், பகலும் எரியுமாறு நந்தாவிளக்கு ஏற்றுவதற்காக இருபத்தைந்து பசுக்களைக் கோயில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்ததாகக் கூறுகிறது. அப்பசுக்களைத் தம்பொறுப்பில் ஏற்றுக் கொண்ட சுந்தரசோழக் கோன் உரிய நெய் கொண்டு தொடர்ந்து விளக்கேற்ற ஒப்புக்கொண்டார்.
   முகமண்டபத் தூண்களில் காணப்படும் கல்வெட்டுகள் அவற்றைக் கொடையளித்தவர்களாகப் பனைந்தலை மறவன் முப்பேருடையானையும், பூவாலைக்குடி மறவன் பெரியநாசி சதிராண்டியையும் அடையாளப்படுத்துகிறது.
   பெருமண்டபத் தூண்களில் காணப்படும் ஐந்து கல்வெட்டுகளுள் மூன்று, சுந்தர சோழபுரத்தைச் சேர்ந்த கண்ணனூருடையார் திருமேனியார் கொற்றப்பிள்ளை பூவனூர்க் கிழவர் அத்தூண்களைத் தந்த தகவலைச் சொல்கிறது.
   மண்டபக் கூரையின் நடுப்பகுதியில் அமைந்துள்ள நாயகப் பத்தியில் போடப்பட்டிருக்கும் கற்களுள் ஏழினையும், மண்டபத்தில் காணப்படும் போதிகையையும் இப்பூவனூர்க் கிழவரே கொடையளித்திருப்பதாக மற்றொரு கல்வெட்டுக் கூறுகிறது.
   திங்கள்தோறும் நடக்கும் கோயில் சிறப்புப் பூஜையின்போது கிழவரின் இந்த அரிய பணிகளைப் பாராட்டித் தீர்த்தமும், திருநீறும் கோயில் மரியதையுடன் அளிக்கப்பட்டன.
   மண்டபத்திலுள்ள மற்றொரு போதிகையைத் தந்தவராகச் சுந்தரசோழபுரத்துக் கண்ணனூருடையான் பொன்னாண்டான் சிவந்தெழுந்தார் அறிமுகமாகிறார். 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகக் கொள்ளத்தக்க இக்கல்வெட்டுகள் அனைத்தும் பூவாலைக்குடிக் கோயிலின் முகமண்டப, பெருமண்டபக் கட்டுமானங்களில் பங்கெடுத்துக் கொண்ட பேராளர்களை அறிமுகப்படுத்துவதுடன், கோயில் கட்டுமானம் சார்ந்த உறுப்புகளின் பெயர்களையும் தருகிறது.
   முன்மண்டபத்தில் காணப்படும் தூண் கல்வெட்டுகள் பூவாலைக்குடி அப்பபட்டர் ஆடும் பெருமாளும், முப்பிரபாலன் மனச்சாரும் இக்கோயிலில் எப்போதும் வழிபட்டிருப்பதாகக் கூறுகின்றன.

   எழுத்தமைதி அடிப்படையில் இக்கல்வெட்டுகளைப் பதினாராம் நூற்றாண்டுக்குரியனவாகக் கொள்ளலாம்.
   முகமண்டப வாயிலின் மேல்நிலையில் காணப்படும் பதினான்காம் நூற்றாண்டுக் கல்வெட்டு அத்திருநிலையைச் செய்தளித்தவராகப் பந்தனை இளமகன் குப்பை சுந்தரன் செருந்திமலை நாடாள்வானைக் குறிக்கிறது. பெருமண்டப வாயிலின் மேல்நிலையில் காணப்படும் கல்வெட்டு, கோவனூர் மறவரில் சூரியதேவர் பூவாலைக்குடி ஆண்டார் முறபாடு கொடார் என்பார் அத்திருநிலையையும் முகவணையையும் செய்தளித்தாகக் கூறுகிறது.    வாயில் முகப்பை அலங்கரிக்கும் அமைப்பையே இக்கல்வெட்டில் இடம்பெறும் முகவணை என்ற சொல் குறிக்கிறது. மிகஅரிதாகக் கல்வெட்டுகளில் காணப்படும் இச்சொல் குடுமியான்மலையில் கண்டெடுக்கப்பட்ட புதிய கல்வெட்டு ஒன்றிலும் இடம்பெற்றுள்ளது.   பூவாலைக்குடியில் கோயில் விரிவாக்கத்தில் சுற்றுப்புற மக்கள் ஆர்வத்தோடு தங்களை இணைத்துக் கொண்டமையை இப்புதிய கல்வெட்டுகள் வெளிப்படுத்துவதாகக் கூறுகிறார்

இரா. கலைக்கோவன்.

Wednesday, October 9, 2013

இந்தோனேசியாவில் பிரஹல்லாதனும், விரோசனனும்.

இனி இந்தப் பாதாளத்துக்கும் மஹாபலிக்கும் உள்ள தொடர்பைக்கொண்டுநாம் காட்டும் சுந்தாலாந்து என்னும் இந்தோனேசியப்பகுதியில்தான் பலி இருந்தானா என்பதைப் பார்த்து விட்டு  மேலே தொடர்வோம்.


மஹாபலி எனப்படும் பலி என்பவன் யார் என்பதைப் பல புராணங்களும்ஒரே மாதிரியே சொல்லுகின்றனஅவற்றில் பலி என்னும் அசுரன் மிகவும் பலம் பெற்று வந்ததாகவும், அவனை அழிக்க விஷ்ணுவே வாமன அவதாரம் எடுத்தார் என்றும் சொல்லப்பட்டுள்ளன. அவனிடம் மூன்றடி மண் கேட்டு, ஓரடியால் இந்த உலகத்தை அளந்து, இரண்டாம் அடியால், விண்ணை அளந்து, பிறகு மூன்றாமடிக்கு இடம் இல்லாததால், பலியின் தலையில் அந்த அடியை வைத்து, அவனைப் பாதாளத்தில் தள்ளினார். பாதளத்துக்குள் பலி சென்றதால், பலியின் ஆட்சி இந்திரனுக்குக் கிடைத்தது. இந்தக் கதை உயிருடன் வாழ்ந்த மனிதனைப் பற்றியும் இருக்கலாம். அல்லது ஒரு இயற்கை நிகழ்சியைக் குறிக்கும் உருவகக் கதையாகவும் இருக்கலாம்.

ஏனெனில், பல ஆயிரம் தேவ யுகங்கள் கழித்து இந்திரன் ஆட்சி முடிந்த பிறகு மீண்டும் பலியே ஆட்சிக்கு வருவான் என்று சொல்லப்பட்டுள்ளதால், இது மக்கள் பெருக்கம், அழிவு ஆகியவற்றைக் காட்டுவதாக உள்ளது. வாமன புராணம் சொல்லும் விவரத்தில் இப்படிப்பட்ட உட்பொருள்கள் புதைந்திருப்பதைக் காணலாம். மஹாபலியைக் கெட்டவனாகப் புராணங்கள் சித்தரிக்கவில்லை. அவன் மூவுலகையும் ஆண்டானென்றும், அவன் தர்மவானென்றும் அவை கூறுகின்றன. ஆனால் அவன் இந்திரனிடமிருந்து ஆட்சியைப் பிடுங்கிக் கொண்டதாகக் கூறுகின்றன.

இந்திரன் என்பவன், வடபுலத்தில் மக்கள் பெருக்கம் இருந்த காலக் கட்டத்தின் உருவகம் என்றால், அவனிடமிருந்து பலி ஆட்சியைப் பிடுங்கினான் என்பது, தென்புலத்தில் மக்கள் பெருக்கம் ஏற்பட்ட காலக் கட்டத்தைக் காட்டுகிறது. இந்த உருவகமே பலியின் கதையில் இருக்கிறது என்பதைக் காட்ட நாம் பிரஹல்லாதனைப் பற்றி மஹாபாரத்த்தில் வரும் விவரங்களை எடுத்துக் காட்டலாம். பிரஹல்லாதன் பலியின் தாத்தா. அவனை முன்னிட்டே, நரசிம்ம அவதாரம் நடந்தது. கிருஷ்ணனும், பகவத் கீதையில், தைத்தியர்களுள் தான் பிரஹல்லாதன் என்கிறான். அப்படிப்பட்ட பிரஹல்லாதன் இந்திரனிடமிருந்து  மூவுலகங்களையும் கவர்ந்து விடுகிறான். பிரஹல்லாதனுக்கும், இந்திரனுக்கும் கடுமையான சண்டை நடந்திருக்கிறது. மஹாபாரதப்போரில் இருட்டில் சண்டை தொடர்ந்த போது, அது ஆதியில் பிரஹல்லாதனுக்கும், இந்திரனுக்கும் நடந்த கடுமையான சணடையைப் போல இருந்தது என்று மஹாபாரதம் அடிக்கடி கூறுகிறது. பிரஹல்லாதன் நல்லவனாயிற்றே, அவன் ஏன் இருட்டில் இந்திரனுடன் சண்டை போட வேண்டும்?

அவன் மகன் பெயர் விரோசனன். விரோசனன் என்றால் ஒளி வீசுபவன் என்றும் நெருப்பு என்றும் பொருள். சூரிய னுக்கும் விரோசனன் என்ற பெயர் உண்டு. இதனால், பிரஹல்லாதன் காலத்தில் இந்திரனுலகமான வட புலத்தில் மக்கள் பெருக்கம் குறைந்து, தென்புலத்தில் பெருக ஆரம்பித்து விட்டது என்று தெரிகிறது. பூமியின் அச்சின் சாய்மான வேறுபாட்டால், சூரியனது தென்புல நகர்வு ஆரம்பித்த காலத்தில்பிரஹல்லாத – இந்திரன் சண்டை இருட்டில் நடந்து, முடிவில் சூரிய ஒளி அதிகரிக்க அதிகரிக்க, பிரஹல்லாதன் வென்றிருக்கிறான். அவனது மகன் பெயர் விரோசனன் என்பதால், சூரியனது ஆதிக்கம் தென் புலத்தில் இருந்த காலக் கட்டத்தை அது காட்டுகிறது. சூரியனது வெப்பம், தென் புலத்துக்கு அதிகம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. 

விரோசனன் விஷயத்தில் சொல்லப்படும் ஒரு கதை புதிர் போல சில ரகசியங்களைக் கொண்டிருகின்றன. அந்தக் கதையை மஹாபாரத்த்தில், திரௌபதியைச் சூதில் வென்று மான பங்கப்படுத்தியபின் நடந்த விவாதத்தில் விதுரர் கூறுகிறார். (ம-பா 2-66). தன்னைச் சூதில் வென்ற செயல் சரியானதுதானா என்று திரௌபதி கேட்கிறாள். அதற்கு மிகச் சரியான பதிலைச் சொல்ல வேண்டும். பிரஹல்லாதன் சொன்னதைப் போல சரியாகச் சொல்ல வேண்டும் என்கிறார் விதுரர்.
ஒரு முறை பிரஹல்லாதனது மகனான விரோசனனுக்கும், ஆங்கிரஸ்என்னும் ரிஷியின் புதல்வனான சுதன்வான் என்பவனுக்கு ஒரு பெண் விஷயமாகப் போட்டி வந்து விடுகிறது. ஒரே பெண்ணையே இருவரும் மணக்க விரும்பினார்கள். அவர்களில் எவர் அதிகத் தகுதி வாய்ந்தவரோ, அவரே அந்தப் பெண்ணை மணக்க வேண்டும் என்று ஒத்துக் கொண்டனர். யாருக்குத் தகுதி அதிகம் என்பதைக் கூறுமாறு பிரஹல்லாதனை அணுகினர். விரோசனனோ பிரஹல்லாதனது மகனாவான். அதனால் மகனுக்குச் சாதகமாகப் பாரபட்சமாக்க் கருத்து சொல்லக்கூடாது என்று பிரஹல்லாதனிடம் சுதன்வான் கூறுகிறான். பாரபட்சமாகக் கருத்து சொன்னால் பிரஹல்லாதனது தலை சுக்கு நூறாக உடைந்து விடும் என்றும் எச்சரிக்கை விடுகிறான்.

தன்னால் சரியாகப் பதில சொல்ல முடியாதோ என்ற எண்ணத்தில், பிரஹல்லாதன் காஸ்யபரை அணுகிக் கேட்கிறான். காஸ்யபர் கூறும் பதில் புதிர் போல உள்ளது. அவர் யாருக்கு அதிக தகுதி என்று சொல்லவில்லை. மாறாக, பயமும், பேராசையும், கோபமும் இல்லாமல் சரியான பதிலை ஒருவன் சொல்ல வேண்டும், அதை ஆமோதிக்கும் சாட்சியாக இருப்பவனும் அவ்வாறாகவே இருக்க வேண்டும். இல்லையென்றால் வருணன் என்னும் கடலானது தனது 1000 பாசக் கயிறுகளால் அவர்களைப் பிணைத்து விடுவான் என்கிறார். அதாவது கடல் நீர் அவர்களை முழுகடித்து விடும் என்கிறார்.
இந்த அறிவுரையை ஏற்ற பிரஹல்லாதன், சுதன்வானே, தனது மகனான விரோசனனை விட தகுதியானவன் என்கிறான். எதற்குத் தகுதியானவன்? இங்கு பெண்ணுக்குத் தகுதியானவன் என்று சொல்லவில்லை. உயிர்களுக்கு அதிபதியாக இருக்கத் தகுதியானவன் என்கிறான். அதாவது இங்கு சொல்லப்பட்ட போட்டி மணப்பெண் குறித்தல்ல. மணப்பெண் என்பவள் ஒரு உருவகமே.

சுதன்வான் எதனால் அதிகத் தகுதியானவாகிறான் என்றால், அவனது தந்தையான ஆங்கீரஸ முனிவர், விரோசனனது தந்தையான தன்னை (பிரஹல்லாதன்) விட உயர்ந்தவர். அவனது தாயும், விரோசனனது தாயை விட உயர்ந்தவள், அதனால், சுதன்வாவுக்கே, உயிர்களை ஆள அதிகத் தகுதி என்கிறான். இதைக் கேட்ட சுதன்வான் புத்திர பாசத்தை விட நேர்மைக்கே இடமளித்த்தால், பிரஹல்லாதனிடம், தான் விரோசனனுக்கு விட்டுக் கொடுப்பதாகவும், இன்னும் ஒரு 100 வருடங்கள் விரோசனனே வாழட்டும் என்றும் கூறுகிறான். 

இந்தக் கதை ஒரு உருவக்க் கதையே. விரோசனன் என்றால் சூரியன் அல்லது ஒளி என்றோம். அந்த ஒளியால் பூமி செல்வங்களை வாரிக் கொடுக்க முடிகிறது. அந்தப் பூமியே மணப்பெண் ஆவாள். அவளை வரிக்க விரோசனன் விரும்புகிறான் என்றால், சூரிய வெப்பம் இருக்கும் இடத்தில் பூமியில் பல வித உயிரினங்கள் தோன்றும். பூமியே தாய், விரோசனன் தந்தை ஆவான். எப்பொழுதுமே பூமி பெண்ணாகவும், உயிர்களைத் தாங்குவதால் தாயாகவும் வர்ணிக்கப்படுகிறாள்.

இனி சுதன்வான் என்றால் என்ன என்று பார்ப்போம். சுதனா என்றால் சிறந்த தனம் அதாவது செல்வம் என்று பொருள். அவன் ஆங்கீரஸரது புதல்வன் என்பதால், ஆங்கீரசர் யார் என்று பார்க்க வேண்டும். ஆங்கிரஸ் என்பது அதர்வண வேதத்தின் யாப்பு அமைப்பாகும். ஆங்கீரசரும், அதர்வணரும் அதர்வண வேத்த்தைத் தந்தார்கள். பொதுவாக அதர்வண வேத்த்தை மற்ற வேதங்களுடன் சேர்க்க மாட்டார்கள். ஏனெனில் மற்ற மூன்று வேதங்களும் ஆன்மீகத்துக்கு என்றால், அதர்வண வேதம் லௌகீக அதாவது உலகியல் முன்னேற்றங்களுக்காகப் பயன்படுவது. யந்திர, தந்திர மாய முறைகளில் வெற்றி பெறுதல், நோயைக் குணப்படுத்துதல் போன்றவற்றுக்கு அதர்வண வேத்த்தில் முக்கியத்துவம் உண்டு. அதனால் ஏற்படும் லாபங்கள் மனிதர்களுக்குத் தனம் அதாவது செல்வம் என்று சொல்லலாம் ஆதலால், அவரது மகன் சுதன்வான் ஆகிறான்.

அது மட்டுமல்ல, ஆங்கிரஸ் என்றால் அக்னியிலிருந்து உண்டானது என்றும் அர்த்தம். அக்னியை பலவிதமாகச் செம்மையாகப் பயன் படுத்தினால் பல உலோகப் பொருள்களைப் பெறலாம். அதுவும் மனித குலத்துக்குக் கிடைத்த பெரும் தனம்தான். அதனால் அவர் மகன் சுதன்வான் ஆகிறான்.
அது மட்டுமல்ல. இவர் பிரம்மாவின் மனதில் தோன்றிய சப்த ரிஷிகளில் ஒருவர். இதனால் இயற்கையிலேயே இந்த சுதனத்தைப் பெற முடியும் என்பது தெரிகிறது. அதை எப்படிப் பெறுவது என்பதற்கும், அவரது கதையில் க்ளூ இருக்கிறது. கர்தமப் பிரஜாபதிக்கும், தேவஹூதிக்கும்பிறந்த 9 மகள்களில் சிரத்தை என்பவளை ஆங்கிரஸ் மணக்கிறார். கர்தமரைப் பற்றி 111 ஆவது கட்டுரையில் கண்டோம். கர்தமன் என்றால் மண். அந்தக் கர்தமரது மகள் லக்ஷ்மி என்னும் செல்வம் ஆவாள். பிரஜாபதியிலிருந்து தோன்றிய முதல் தோற்றம் மண் என்னும் கர்தமர் என்று ஜடாயு சொன்னான் என்று அந்தக் கட்டுரையில் பார்த்தோம். 

அதில் அவன் மேலும் சொல்கிறான், கர்தமரைத் தொடர்ந்து, சேஷன்(நாகம் அல்லது பாம்பு) பிறந்தான். அவனைத் தொடர்ந்து சம்ஷ்ரயன் (வீடு அல்லது தங்குமிடம்) பிறந்தான் என்கிறான். (வால்மீகி ராமாயணம் 3- 14-7). அதாவது மண் தோன்றியவுடன் அங்கு நாகம் வசிக்க ஆரம்பித்து விடுகிற்து. அது வசிக்க பூமிக்குள் வளை அல்லது பொந்து ஏற்படுத்திக் கொண்டு அதில் சுகமாக வசிக்கிறது. உலகின் முதல் கட்டடக் கலையை மனிதன் நாகத்திடமிருந்துதான் கற்றுக் கொண்டிருக்கிறான் என்பதை இது காட்டுகிறது. 

கல் தோன்றி மண் தோன்றாக்காலம் என்கிறோமே, உலகம் குளிர்ந்து உறைந்த போது கல்லாலான மலைகள் உண்டாயின. காற்று, மழை ஆகியவற்றின் செயலால் மலை சரிந்தும், தேய்ந்தும், மண் உருவானது. அந்த மண்ணுக்குள் புதைந்தும், பூமிக்கடியில் இருந்த பொந்துகளிலும், நாகங்கள் வசிக்க ஆரம்பித்தன. அவை போலவே இயற்கைப் பொந்து, குகைகளிலும் வாழ்ந்த மனித நாகன் எனப்பட்டான். அந்த மனித குலத்துக்கு உருவக அதிபதியாக ஒருவனை இந்திரன் என்றும், அவன் மண்ணுக்குள் (குகை) வசித்ததால் நாகநாதன் என்று பெயர் பெற்றான். இந்த இடங்கள் இந்தியக் கடலில் தென் துருவம் வரை ஆங்காங்கே இருந்த மலைப் பகுதிகளில் தான் இருந்தன. மற்றொரு இடம்இந்தோனேசியப் பகுதி!
கர்தமன் என்னும் மண்ணைக் கொண்டு பெறப்படும் செல்வம் வீடுகள் ஆகும். அந்த்த் தொழில் நுட்பத்தை வளர்த்துக் கொண்டவர்கள் மய தானவர்கள்!

சுதன்வான் கதையில் கர்தமரது மகளான சிரத்தை என்னும் முயற்சி (அ) ஈடுபாடு என்பவள் ஆங்கீரசை மணக்கிறாள் என்றால் அக்னியால் மண்னைக் கொண்டு பொருட்களை உருவாக்கும் முயற்சியை அது காட்டுகிறது. அப்படி எழுந்த முதல் செல்வம் பானையாகும். மண்ணில் பானை வனைந்து, அதைச் சுட்டு கடினமாக்கி, உணவினைச் சமைக்க ஆரம்பித்த காலத்தை அது காட்டுகிறது. அது மட்டுமல்ல மண்ணில் மறைந்துள்ள பல கனிமப் பொருட்களையும் பிரித்தெடுக்க அக்னியின் உதவி தேவை. அந்த முயற்சிகளால் கிடைக்கும் செல்வதையே சுதன்வான் குறிக்கிறான்.

இப்பொழுது யாருக்குத் தகுதி அதிகம் என்று நாம் சொல்வோம்? சுதன்வானுக்குத்தானே அதிக தகுதி? விரோசனன் வெப்பத்தைக் கொடுத்தான். அதனால் உயிர்ப் பெருக்கம் ஏற்பட முடிந்தது. அந்த உயிர்கள் சிறப்பாக வாழ, சுதன்வான் தேவையல்லவா? 

ஆனால் சுதன்வான் விரோசனனுக்கு விட்டுக் கொடுத்து விடுகிறான். இன்னும் இந்த முயற்சிகள் ஏற்படாமையை இது காட்டுகிறது.

இதன் காலம் என்னவென்று பார்த்தால், வடக்கில் பனியுகம் வந்து, தெற்கில் சூரியன் வெப்பம் தந்த காலம். இது தோபா எரிமலை வெடித்த 70,000 ஆண்டுகளுக்கும் முன் சென்று விடுகிறது. ஒரு லக்ஷம் வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்காவிலிருந்து மனிதன் இந்தியக் கடல் நோக்கி வந்த காலம் அது. அதற்கு முன் வடக்கிலிருந்து, தெற்கு நோக்கி மனித இடப்பெயர்வு ஆகி, தென்பகுதி வெப்பம் அடைந்தும், ஆனால் மண்ணையும், அக்னியையும் பயன்படுத்தத் தெரியாத காலத்தை அது காட்டுகிறது. 

அத்தனைப் பழமையை புராணக் கதைகள் சொல்லுகின்றன. பானையும், கல் அமைப்புகளும், உலோகப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்ட விவரங்களைக் கதைகளாகச் சொல்லியிருப்பதையும் இவற்றில் நாம் காணலாம். இவை நடந்த இடம், தென்கிழக்கு ஆசியக் கடல் பகுதியே என்பதைப் புராணமும் காட்டுகிறது. பன்முனை ஆராய்ச்சிகள் வாயிலாக இதையே ஓப்பன்ஹீமரும் சொல்லியுள்ளார் என்பது, நம் புராண, இதிஹாசங்களின் நம்பகத்தன்மையை உறுதிப் படுத்துகிறது. இதில் ஆச்சரியமே இல்லை. இவை எல்லாம் எந்த சுய நோக்கும் இல்லாத ரிஷிகளால் உலக நன்மைக்குச் சொல்லப்பட்டவையே. அவை தரும் சரித்திர விவரங்களை இன்றைய ஆராய்ச்சித் துறைகளைக் கொண்டு நிரூபிக்க முடியும் என்பதையே நாம் காண்கிறோம்.

மேலே தொடர்வோம். நரசிம்ம அவதாரத்தில் கொல்லப்படும் ஹிரண்யன்ஒரு தைத்தியன்அவனது மகன்பிரஹல்லாதன்அவன் மகன்விரோசனன். அவன் மகன் பலி.

இவர்களைப் பற்றிப் பல இடங்களிலும் சொல்லப்பட்டுள்ள விவரங்கள்ஒரே சீராக இருக்கின்றனஅதாவது உண்மையாக நடந்த கதைகளாகஇருந்தால் மட்டுமே இவ்வாறு சீராகப் பல நூல்களிலும் சொல்லியிருக்கமுடியும்மஹாபாரதம்ராமாயணம்புராணங்கள் மட்டுமல்ல,உபநிஷதங்களிலும் இவர்களைப் பற்றிய கதைகள் வருகின்றன.உதாரணமாக சாந்தோக்கிய உபநிஷத்தில்தேவனான இந்திரனும்,அசுரனான விரோசனனும் 32 வருடங்கள் பிரம்மச்சரிய விரதம் இருந்து,பிரஜாபதியிடமிருந்து பாடம் கற்றனர் என்று இந்த உபநிஷத்து கூறுகிறது.

(சா – 8 -7.2 முதல் 8.5 வரை) ஆத்மாவைத் தேடிக் கண்டால்எல்லாஉலகங்களையும்எல்லா ஆசைகளையும் அடையலாம் என்பதால்,தாமும் ஆத்மாவைத் தேடிக் காண்போம் என்றுஒரே சமயத்தில்இந்திரனும்விரோசனனும் பிரஜாபதியிடம் பாடம் படிக்க வந்தனர்.அவரும் கண்ணில் காணும் புருஷன் எவனோ – எவன் நீரிலும்,கண்ணாடியிலும் என எல்லாவற்றிலும் தெரிபவனோ அவனே ஆத்மாஎன்றார்.  நகைஉடை அலங்காரம் ஆகியவற்றால் ஒருவன் தன்னைநன்கு அலங்கரித்துக் கொண்டால் அவ்வாறாகவே கண்ணாடியில்தெரியும்அதுவே ஆத்மாவின் சொரூபம் என்று விரோசனன் நினைத்துக்கொள்ளவேஅதையே உபநிஷதமாகத் தன்னைச் சேர்ந்தவர்க்ளுக்குஉபதேசித்தான்இதனால் அசுரர்கள்பொன்ரத்தினம்அவற்றால்செய்யப்பட்ட அலங்கார ஆடம்பரப் பொருட்களைச் செய்வதில்அவற்றைஅணிவதில் ஆர்வம் காட்டினர்பொருட்செல்வத்தைச் சேர்ப்பதில் ஆர்வம்காட்டினர்ஒருவர் இறந்த பின்னும் ஆத்மாவின் சொரூபம் என்றுஅவரை நன்கு அலங்கரித்து அடக்கம் செய்தனர். இதையே சாந்தோக்கியஉபநிஷத்து, "தானமின்றிசிரத்தையின்றியஜ்ஞமின்றி இருக்கும்ஒருவனைப் பார்த்து, " ஐயோஅவன் அசுரர்களைச் சேர்ந்தவன்இதுதான்அவர்களது உபநிஷத்துஅவர்கள் பிரேத சரீரத்தை அன்னத்தாலும்,ஆடையாலும்ஆபரணங்களாலும் மேன்மைப் படுத்துகின்றனர். இதனால்அவர்கள் ஜெயிக்க வேண்டிய உலகத்தை ஜெயித்து விட்டதாக்க்கருதுகின்றனர்." என்று கூறுவர்" என்கிறது(சா. 8-8.5)

பொன்னாலும்அலங்காரமாகவும்உணவுப் பொருட்களுடனும்அடக்கம்செய்யப்படும் எகிப்திய வழக்கங்களையும்வில்ட்ஷையரில்புதைக்கப்பட்ட புஷ் பாரோ ட்ரூயிட் மனிதனையும் இங்கு ஒத்துநோக்கலாம். எங்கெல்லாம் இவ்வாறாக இறந்தவர்கள் அடக்கம்செய்யப்பட்டார்களோ அவர்கள் தானவதைத்தியர்கள் என்று தெரிகிறது.

இந்த விரோசனனை இங்கு சொல்வதற்குக் காரணம் விரோசன் என்னும் பெயரை ஒட்டியே விரகோசன் (VIRACOCHA) என்பவனை சூரியக் கடவுளாகதென் அமெரிக்காவின் மேற்கில் வாழ்ந்த இன்கா மக்கள் கருதினர்இன்கா மக்கள் வாழ்ந்த பகுதியைக் கீழ்க் காணும் படத்தில் தென் அமெரிக்காவின் மேற்குக் கரையோரம் வண்ணத்தில் காணலாம்.

நன்றி:
திருமதி ஜெயஸ்ரீ (தமிழன் திராவிடனா?)