Tuesday, April 7, 2015

வலங்கை இடங்கை போராட்டம் பற்றிய ஒரு பார்வை

          இடங்கை-வலங்கை போராட்டம் கி.பி.11 -ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.19 -ஆம் நூற்றாண்டு வரையில் நடந்ததாக தமிழகத்தில் காணக்கிடைக்கும்  பல  கல்வெட்டுகளும்,செப்பேடுகளும் குறிப்பிடுகின்றன. எனவே, இந்த போராட்டத்தின் தொடக்க காலம் எனபது  கி.பி.பத்தாம் நூற்றாண்டு என்பதை அறிய முடிகிறது!
                           
பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்த்த உழைக்கும் மக்களின், தமிழகத்தின் கீழ்தட்டு மக்களின் போராட்டமாக  இடங்கை-வலங்கைப் போராட்டத்தை சொல்லலாம்!   

         'இடங்கை-வலங்கை சாதி வரலாறு ' எனும் தலைப்பிட்ட கையெழுத்துச் சுவடி ஒன்று சென்னை பல்கலைக்கழக  நூலகத்தின் பலன்சுவடிகள் பிரிவில் காணப்படுகிறது!  இச்சுவடியானது,இடங்கை-வலங்கை பிரிவுகளைச் சேர்ந்த,  98  சாதிகள்  கரிகால சோழன் காலத்தில் ஏற்பட்டன என்றும் வெள்ளாளரும் அவர்களது ஆதரவாளர்களும் இடங்கை சாதியினர் என்று கருதப்பட்டார்கள் என்று கூறுகிறது.(ஆதாரம்: தமிழ்நாட்டு வரலாறு,சோழப் பெருவேந்தர் காலம்).      தென்னிந்திய வரலாறு என்ற நூலில்,  ஆசிரியர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார்  அவர்கள், "இடங்கை-வலங்கைப் பாகுபாடு  எவ்வாறு தொடங்கியது  எனபது மர்மமாக  இருக்கிறது என்றும் பழைய காலத்தில் இருந்தே  இப் போராட்டம் இருந்தது" எனவும் குறிபிடுகிறார்!  நடக்காத,நம்ப இயலாத  கதைகளை,புராணங்களை,   உண்மையாக நடந்த வரலாறுகள் போலவும்,நடந்த உண்மையான வரலாற்றை,உண்மைகளை புராணங்கள்,என்றும் திரித்து கூறுவதும்  பிராமணீயத்தின்  செயல்பாடுகளில் ஒன்றாக இருக்கிறது !
      ஆகவே, கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார் சொல்வதில் இருந்து  இடங்கை-வலங்கைப் போராட்டம்  கி.பி.பத்தாம் நூற்றாண்டில், ஆதித்ய கரிகாலன் காலத்தில், ஆதித்ய கரிகாலன் பிராமண அதிகாரிகளால் கொல்லப்பட்டு, இயற்கை நீதிக்கு  எதிராக, உத்தம சோழன் அரசனாகப்பட்ட  சூழ்நிலையில் தொடங்கியது என்பது விளங்குகிறது!
உத்தம சோழன் அரசன் ஆக்கப்பட்ட முறையை  எதிர்த்த,   அதனை ஏற்க இயலாத, உழைக்கும் மக்கள், ஆதித்ய கரிகாலன்ஆதரவுப்  படைகளுக்கும், உத்தம சோழனின் ஆட்சியை ஏற்றுகொண்ட  பிராமணர்கள், அவர்களது ஆதரவாளர்களுக்கும்  இடையில் ஏற்பட்ட மோதல்கள்,போராட்டங்களே..  இடங்கை-வலங்கைப் போராட்டத்தின்  தொடக்கம் எனபது இதனால்  எளிதாக  விளங்குகிறது!


வலங்கை இடங்கை தோன்ற காரணம் என்ன?    

            கோயில்கள்  அந்தணர்கள் என்னும் பிராமணர்களின் கட்டுப்பாட்டில், ஆதிக்கத்தில்  வந்துவிட்டப் பிறகு, பிராமணர்கள் தங்களது ஆதிக்கம்,மற்றும் தங்கள்  இன நலத்தை  தொடர்ந்து  தக்கவைத்துக் கொள்ள எண்ணி, பிற சமுதாயத்து மக்களை, குறிப்பாக உழைக்கும்     கீழ்தட்டு  மக்களை அடக்கி  ஆளாவும், அடிமைப் படுத்தவும்  தங்களது அதிகாரத்தை  பயன்படுத்தி வந்துள்ளார்கள் !

மனுதர்மத்தின் பஞ்சகாலத்தில் சண்டாளன் என கருதபட்ட ஒருவன் செத்த நாயை உனவாக கொள்வான். பறையன் செத்த பசுவையும்  உட்கொள்வான். பிராமணன் என்னும் பார்ப்பானன் தன் மலத்தை உண்டு வறுமையை எதிர்கொள்வான்( கோசம்பி ஆய்வுகள்,விடுதலை"மாத இதழ்"- தந்தை "பெரியார்").

ஆதாவது பெரிய கோவில்களையும் தேவதானங்களையும் பிராமனர்களிடம் வயல்வெளிகளை நிழக்கிழார் மற்றும் வேளாளர்களிடம் இழந்த வணிகர்களும் ஆசாரிமார்களும் பூசகர் என்னும் அந்தஸ்தை அடைய இதர சிறு கோவில்களையும் வனிகதளங்களையும் கைப்பற்ற நடந்த இன மோதலே இந்த வலங்கை இடங்கை சண்டை.

லங்கை-இடங்கை சண்டை என்பது போர்க்களம் கண்ட சண்டை கிடையாது தெருவிலே முட்டி மோதிக்கொண்ட செட்டிமார்களும் அவர்களுகுட்பட்ட உழைக்கும் வர்க்கத்தினரும்  மற்றும் ஆசாரிமார்களும் அவர்களுக்குட்பட்ட  சமூகத்தவரும் கொண்ட மோதலே இந்த இடங்கை வலங்கை சண்டைஇது அன்றாடம் வேர்வை சிந்தி உழைக்கும் மக்களுக்கே.

 இந்த போராட்டத்தில் பங்கு கொள்வர் தவிர வேறு 
பிராமணர்களும்,வேளாளர்களும் அரையர்களும் நாட்டான்மைக்காரகளான கள்ளர்,மறவர்,அகமுடையார்,உடையார்கள் போன்ற இதர வர்க்கத்தினர்கள் இப்போராட்டத்திலும் இந்த பகுப்பியலிலும் கிடையாது.

சோழர்காலத்தில் இடங்கை-வலங்கை படைகள் யார்?

சோழரின் முதன்மையான படையினராக கொற்றவாளர்,வில்லிகள்,முனைவீரர்,எறிவீரர்,கடற்படையினர் மற்றும் இளமகன் போன்ற வீரர் படையினர் போர்களத்தில் மோதும் வீரபெருமக்கள் முதன்மை பெற்றிருந்தனர். இவர்கள் போக..........

சோழரின் காலத்திலே இடங்கை-வலங்கை என்னும் பிரிவுகள் இருந்தன என்றும் அவர்கள் வேளக்காரர் படை கைக்கோளர் படைகள் இருந்ததாகவும் நமக்கு வரலாறுகள் கூறுகின்றது. இதில் வலங்கை-இடங்கை வேளக்காரர் மற்றும் வலங்கை-இடங்கை கைக்கோளர் என  பிரித்து இருந்தனர் என்றும். இதில் "தெரிஞ்ச" கைக்கோளர் அல்லது "தெரிஞ்ச"வேளக்காரர் என்னும் படையினர் நிரந்திர படையினர்(Permanant post) என்றும் இதர படையினர் தற்காலிக படையினர்(Temporary post) என குறிப்பிட படுகின்றனர்.




வலங்கை இடங்கை பிரிவுகளின் தலைமை இடம் காஞ்சிபுரமாகும் இங்கேயே வலங்கை இடங்கை கல்வெட்டுகளை அதிகம் காண முடிகின்றன.1449 படைவீடு ராஜ்ஜியம்(சாம்புவராயன் ஆட்சியின் கல்வெட்டுகளிலே முதன் முதலில் வலங்கை இடங்கை மகாஜன்ம  என்ற வாக்கியம் பதிவாகி இருந்தது.

வலங்கை மற்றும் இடங்கை வணிகர்கள்,நெசவாளர்கள்,கொல்லர்கள், தோல் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் அடிமைகளான கூலித்தொழிலாளர்களும் இவர்கள் மட்டுமே
வன்னிய பள்ளிகள் தங்களை சத்திரியனாக காட்ட பழைய தொழிலை மறைத்தது.

கைக்கோளர் இறைவனுக்காக தன்னையே அர்ப்பந்தித்தது இடக்கையில் முக்கிய செய்தியாக சொல்லப்படுகின்றது.
வலங்கை இடங்கை இந்த இருபிரிவினருக்கும் காஞ்சிபுரம் காளியே முதன்மையான தெய்வமாக சொல்லப்படுகின்றது. காளியின் புத்திரரான வலங்கை இடங்கையினர்கல்.


இடங்கை வலங்கை சாதி மக்கள் தத்தம் பூர்வீகத்தை தேடவும் முனைப்பாக செயல்பட்டனர்.  இடக்கையை சார்ந்த பள்ளிகள்,பள்ளர்கள் தங்களின் பூர்வீகம் ஆந்திரா,ஒரிசா என பல்லவ,பாண்டிய நாட்டுக்கு வெளியே தேடினர். ஆனால்

பறையர்,நத்தமான்,வேடன்,மலையமான் போனற மக்கள் சோழநாடே தங்களின் பூர்வீகம் என கூறுகின்றனர்.

வலங்கை படையினர்(வலங்கை வேளைக்கார்கள் ):

இவர்கள் மட்டுமே வலங்கை பழம் படையினர் என தங்களை குறிப்பிட்டு கொள்கின்றனர்.
இவர்களுள் பறையர்,நத்தமான்,வேடன்,மலையன் போன்றவர்கள் தங்களை வலங்கை வேலைக்காரர் என்றும் புது படைகளை சேர்க்கும் போது அதற்க்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

இடங்கை படையினர்(இடங்கை வேளைக்காரர் ):

பள்ளிகள்,பள்ளர்கள்,சக்கிலியர்,கன்னட வேட்டுவர்கள் அனைவரும் தங்களை இடங்கை வேலைக்காரர்கள் என குறிப்பிட்டு கொள்கின்றனர்.

இதில் பள்ளி,சக்கிலியர் பெண்கள் வலக்கையை சார்ந்ததாக கூறப்படுகின்றது.

இடக்கையை சார்ந்தவர்கள் சோழர் கலிங்கத்தை வெல்லும்போது அங்கிருந்து தமிழ் நாட்டுக்கு பிடித்து வரப்பட்டவைகள் எனவும் கருத்த்தும் வலுப்படுத்துகிறது.

இவர்கள் தவிர வேறு வலங்கை இடங்கையினர் யாரும் இல்லை 








வேளக்காரர் படை:

"வேளம்" என்ற அமைப்பு அரசாங்கத்தால் உருவாக்கபட்டு இருந்தனர். என்றும் அதை சார்ந்த வீரர்கள் "வேளக்காரர் படை" என்கின்றனர் என்றும். "வேளக்காரர்" என்பதை நாம் "வேலைக்காரர்" என்றே கருதலாம். சில இடத்தில் "ல" கர பயன்பாடு மாறுவதால் "ள" கல்வெட்டில் வேலைக்காரர் என்றே கருத வேண்டியுள்ளது. காரணம் வேளக்காரர் படை போர்களில் அதிகமாக பயன்பட்டது கிடையாது. அரசரின் பாதுகாவல், கோவில்களின் பாதுகாவல், தானியபண்டாற பாதுகாவல் போன்று நாட்டை காக்கும் காவல் அதிகாரிகளாகவே இந்த வேளக்கார படையினர் கானப்படுகின்றனர். ஆகவே 'காவல்" வேலைக்காரர்களாகவே இந்த வேளக்கார படையினர் கானப்பட்டனர். இதில் வலங்கை-இடங்கை பிரிவு இருந்துள்ளது."தெரிஞ்ச" என்னும் தகுதி அடைமொழியும் இருந்துள்ளது. இந்த வேளக்காரர்கள் 'அகப்பரிவாரத்தினர்' ஆகிய அகப்படையினர் என இவர்கள் போர் அல்லாது காவல் தொழிலே பிராதனமாக கொண்டிருந்தனர் எனலாம்.


கைக்கோளர் படை:

பிற்கால கைக்கோளர்கள் நெசவாளர்கள் எனவும் இவர்களுக்கும் சோழர் படையில் வந்த கைக்கோளர்களுக்கும் சம்பந்தம் உண்டா என பலர் கேள்வி. ஆனால் கைக்கோளர் என்னும் படையினர் படைதொழிலுடன் நெசவுதொழிலையும் மேற்கொண்டனர் என சிலர் கருதுகின்றார்கள்.

கைக்கோளப்படையினர் "நவகாண்டம்" "நரபலி" குடுத்ததாக கல்வெட்டு உள்ளதே தவிர பிறமன்னரின் கீர்த்தியிலும் கைக்கோள படையினரை வீழ்த்தியதாகவோ கைக்கோள தளபதிகளோ சாமந்தர்களோ இருந்ததற்க்கு எந்த ஆதாரமும் இல்லை!

எனவே வேளக்காரர் படையினரைப்போல் கைக்கோளர் படையினர் போர்களில் பயன்படுத்தாது போர்வீரகள் கவச உடைகளை தைப்பத்தற்க்கும் உடைகள்,கூடாரம்,பந்தல் அமைப்பதற்க்கு போர்களில் அழைத்து சென்றதாக கருதலாம். மேலும் இசை நடனத்திலும் கைக்கோளர் கைதேர்ந்தவர்களாக இருந்தனர்.

எனவே நெசவுக்கும் நவகாண்டம் போன்ற பலிகளிலே கைக்கோளர் பயன்படுத்த பட்டதாக கருதலாம்.

இந்த வேளக்காரர் படை மற்றும் கைக்கோளர் படைகளில் இடங்கை மற்றும் வலங்கை பிரிவினரை கானலாம்.



சோழரின் போர்களிலே நேரடி போர் செயத வாளர் படை,வில்லிகள் முனைவீரர் எறிவீரர் இளமகன் போன்ற வீரரின் பங்களிப்பே போர்களில் ஆதிக்கம் பெற முடிந்ததை உனரலாம். இவர்கள் சிந்திய இரத்தத்தில் உருவானது தான் சோழ சாம்ராஜ்யம்.

மறவர்கள் இடங்கை பிரிவுளும் கிடையாது வலங்கை பிரிவிளும் கிடையாது. மறவர்களை இவ்விரண்டிலும் இல்லாத பக்கங்களை நிரப்பி எழுதியவர்கல் சௌந்திர பாண்டிய நாடாரும் அன்றைய தமிழக தொல்லியல் துறை தலைவருமான பள்ளி சாதி நடன.காசிநாத பள்ளியாரும் தான்.

மெக்கன்சி கையெழுத்து பிரதியில் முதல் 5 பக்கம் சேதமானதை சரி செய்துள்ளனர் காசியும் சௌந்திரமும்.

18 சாதி வெள்ளாளர் தான் வலங்கை இடங்கை இரண்டிலும் இருந்தது.

மெக்கன்சி கையெழுத்து பிரதியில் உள்ள வலங்கை இடங்கை ஆங்கிலேயர்
(துரைகள் குறிப்பில்)
வலங்கை சாதி:
வெள்ளாளர்,அகமுடையார்,இடையர்,கவரைகோமுட்டி,கைக்கோளர்,சேடர்,சேனியர்,வன்னார்,அம்பட்டர்,பறையர்.

இடங்கை சாதி:
பஞ்சாளத்தார் என்ற ஆசாரி,தட்டான்,தச்சன்,கொல்லன்,சிற்பி..


வலங்கை-இடங்கை சாதிகள் யார்?
இந்த வலங்கை இடங்கை சாதியர் என்போர் பிராமண-வெள்ளாளரின் எதிர்ப்பாளர்களாக இருந்தனர் எனவும் இவர்கள் உழைக்கும் மக்கள் சாதியரான செட்டியார்கள் மற்றும் ஆசாரிமார்களும் ஆவர்.

வலங்கை சாதி:
செட்டியார்களை தலைவனாக கொண்ட கூட்டத்தரும் உழைக்கும் இதர சாதியினரும்.(1) பட்டன செட்டி (2) தேவாங்க செட்டி (4) குலால செட்டி (5) பறையர் (6) சேணயர் (7) இடையர் (8) சாலியர் (9)) கோமுட்டி (10) உப்பிலியன் (11) சாணான் (12) சுண்ணாம்புக்காரன் (13) வலையர் (12) அம்பட்டன் (13) வண்ணான் (14) வாணியன் போன்ற உழைக்கும் மக்கள்.

இடங்கை சாதி:

இது ஆசாரிமார்களை தலைவர்களாக கொண்ட கூட்டத்தினரான 1)பஞ்ச கம்மாளர் 2)பள்ளர் 3)கைக்கோளர் 4)மேளக்காரர் போன்ற கூட்டத்தினர்கள்.

நாயக்கர் கால வலங்கை-இடங்கை சண்டைகளும் சுரண்டல்களும்:
சௌந்திர பாண்டிய நாடார் என்பவரால் எழுதபட்ட இடங்கை-வலங்கை சரித்திரம் என்றும் பின்பு வலங்கை மாலை என எழுதிய பெருமைக்குரிய சரித்திரத்தை ஒரு மூதேவி ஆவனம் என்ற பெயரில் யாரும் கண்டுபிடிக்க முடியாது என பெரும்புத்திசாலித்தனமாக வலைதளம் ஒன்று எழுதியுள்ளது. இந்த வலங்கை சரித்திரமும் சானார்களால் எழுதப்பட்டது அல்ல அது இராமநாயக்கன் என்பவர் மெக்கன்சி பிரபுவால் எழுதப்பட்டது. இதை டிங்கரிங்க்,பட்டி கொஞ்சம் பெயிண்ட் அடித்து இன்று ஒரு பிராமண பரதேசியும் சேர்த்து எழுதிக்கொள்ளும் புத்திசாலிகள். இதில் என்ன சொல்ல பட்டுள்ளது என கவனிக்கவும். வலங்கை ஜாதிகளின் தலைவனும் முதல்வனும் பறையரே இவர்கள் வழிவந்தவர்கள் தான் மற்றவர்களும். ஆதி என்னும் பறையர் குல பெண்னுக்கு பிறந்ததாக எட்கர் தர்ஸ்டனும் குறிப்பிட்ட வழிதோன்றல்கள் யாரென எட்கர்தர்சடன் எழுதியுள்ளதில் தெரியும்.



இதற்க்கு கல்வெட்டும் எந்த ஆவணங்களும் கிடையாது இந்த பனை ஒலையை தவிர இதுவும் இராமநாயக்கன் என்பவரால் எழுதபட்டது. பறையர் குல தலைவர்களும் அவர்களுக்கும் கம்மாளர்களுக்கும் சண்டையாம் பறையரில் ஒருவர் நந்த சோழன் என சோழனுக்கும் பறையர் குல பென்னுக்கும் பிறந்த ஒருவன் கம்மாளரால் கொள்ளபடுகிறான் அவ்வளவுதான் இந்த கதை. இது கதை தான். இதை வைத்து தென்னக வரலாறே மாறியதாக கதைவிடும் பலசரக்கு கூட்டங்களின் இனைப்புக்கள் அதிகம்.

இதற்க்குமேல் இதில் எந்த ஆதாரமும் கிடையாது. இடங்கை வலங்கை ஜாதி இரண்டும் உழைக்கும் உழைப்பளிகளே அதிகம். வேறு எவறும் இல்லை. இவர்களை பாதுகாத்த காவல்காரர்கள் இவர்களிடம் சுரண்டிய கொடுமை அதிகம்.





சோழர் பாண்டியரின் காலத்தின் பின்னே இந்த இடங்கை-வலங்கை சண்டை அரசர்களும் பாளையபட்டுகளின் சுரண்டல்களுக்காகவே பல சண்டைகள் அரங்கேற்றினர். இதனால் அரசுகளுக்கும் அதிகாரிகளும் இதனால் பலன் பெற்றனர். நிதி பற்றாக்குறையை சமாளிப்பதற்கு இந்த சண்டைகள் அரங்கேற்றப்பட்டனர். இதில் திருப்பரங்குன்றம் கோவில் பாடிகாப்பாளரான கள்ளர் சமூகத்தை சார்ந்த தூங்கா பின்னத்தேவன் என்பவர்க்கு சோழவந்தான் கோவில் வலங்கைமான் மக்கள் தலைவரான செட்டியார்களும் திருமலை நாயக்கரவர்கள் கொடுத்த செப்பு பட்டயம். இதில் எந்த எந்த சாதியனர் வந்தனர் அவர்கள் பின்புலம் என்ன என பார்ப்போம்
வலங்கை குழுவினர்:

1. பட்டன செட்டியார் என்ற பெருமாள் செட்டியார்.
பட்டனச்செட்டியார்:

இவர்களே வலங்கையின் தலைவர்கள். இவர்கள் பலிஜா என்னும் கன்னட தெலுங்கு வகுப்பினர். இவர்கள் போயர் என்னும் வேட்டை சமூகத்திலிருந்து உயர்ந்து அந்தஸ்தை பெற்றவர்கள் பல இடத்தில் செட்டியார்,நாயக்கர்,ரெட்டி எனும் பட்டம் பூண்ட இவர்கள் வலங்கையை தலைமையேற்பவர்கள்.

2.தெலிங்கர் குல சங்கர செட்டியார்
3.நெசவுக்குடையார் என்ற தேவாங்கர் செட்டியார்.
தேவாங்கர்:
இவர்கள் சாலியர்,கைக்கோளரின் தெலுங்கு பிரிவினர் செட்டி என அழைத்து கொள்ளும் இவர்கள் இரண்டாவது இடத்திலே அங்கம் வகிப்பர்.

4. குலாலர் குல திருமலை செட்டியார்,நாராயன செட்டியார்:
குலாலர்:
இவர்கள் குயவர்கள் என்னும் குலால செட்டியார்கள் மன்பிசைந்த மன்பாண்ட வனிகர்கள்

செட்டியமார்களான இவர்களுக்கு கீழே தமிழகத்தில் வாழ்ந்த 18 சாதியை சார்ந்த கைவினை தொழிலாளர்கள் இவர்களுக்கு சேவகராக பணிபுரிந்தனர். அவர்கள்

5.மதுரை காளி பிரசாதம் அருளிய மலையப்ப நாடார்

சாணார்:
சாணார் என்னும் பணை கள் மற்றும் சாராயம் காச்சும் தொழிலாளர்கள் வலங்கையில் வாழவந்தவர்கள் என சோழனுக்கு அடிமையாக அனைகட்ட மாட்டோம் என வலங்கையிலே தன்னை கூறிகொண்டவர்கள்.

6. மூப்பர் குலத்தில் தீ வேட்டை மூப்பர் கருப்பனன் மற்றும் இராமசாமி மூப்பர்

வேட்டை மூப்பர்:
போயர் என அந்திரத்திலும் வலையர் என தமிழகத்திலும் அழைப்பவர்கள். தீ அடையாளத்தை தெய்வமாக வனங்கி வருபவர்கள்.

7. நீரில் அனல் கொண்ட அருளிய ஏகாளியர்:

வன்னார்:
இவர்கள் நீரையும் வெள்ளாவி வெலுக்க உதவும் அனலையும் வனங்கும் சலவைதொழிலாளர்.

8. கத்தி சவலை பண்டிதன்:

அம்பட்டர்:
இவர்கள் மருத்துவர் என்னும் தொழிலை கொண்டவர்கள்

9.சாம்பான் குலத்தில் சன்னாசி சாம்பான்
பறையர்:
இவர்கள் சாம்பான் என அழைக்கும் வெட்டியான தொழிலை மேற்கொள்பவர்கள்.

10.நெசவுகுடை மூப்பரன அருணகிரிமூப்பர்
நெசவுக்குடை மூப்பர்"
இவர்கள் இலை வாணியரான ஈழவர்கள் என கருதலாம்.

11.வன்னியர் குலத்தில் இராமசாமி சேர்வை

வன்னிய செட்டியார் என்னும் ஆயிர வைசியர்:
வடதமிழகத்தில் இடங்கை என வழங்கும் வன்னியர் இங்கு வலங்கையில் வருவது  புதிது ஆனால் இவர்கள் ஆயிரவைசியர் என்னும் நகை வணிகர்கள். மதுரையில் பாதி நகை கடையின் அதிபர்கலாகவும் " கெட்டி வம்ச மஞ்சபுத்தூர் ஆயிர வைசியர் செட்டியார்" என்போர்.


இவர்கள் அனைவோரும் கள்ளர் குலத்தை சார்ந்த "வலங்கை ஆண்டவன்" என பெயர் கொடுத்த தூங்கா தேவனுக்கு கொடுத்த செப்பு பட்டயம். கள்ளர் குலத்தை சார்ந்தவர்கள் இந்த சண்டையை நடத்துபவராக பலர் இருந்துள்ளனர். பல கள்ளர் குலத்தவர்கள் "இடங்கையை ஆண்டவன்" என இடங்கை சார்ந்தவர்க்கும் பாடிகாப்போனாகவும் இருந்துள்ளனர்.

மறவர் குலத்தை சார்ந்த பல பாளையப்பட்டின் ஜமீந்தார்கள் இந்த இடங்கை-வலங்கையை நடத்துபவராக இருந்துள்ளனர். சொக்கம்பட்டி பாளையத்தை சார்ந்தவர்  5 சண்டைகளை நடத்தியதாக வரலாறு வருகின்றது. நாயக்கர் ஆட்சிக்கு முன் சில கல்வெட்டுகள் பனையூரில் இருக்கும் கோவில் ஒன்றில்" இந்த கால் மறவரில் ஸ்ரீ உத்தமரான வலங்கை ஆண்டான் தன்மம்" என வலங்கை ஆண்ட மக்களாகவும் இருந்துள்ளனர். இதுபோக வலங்க-இடங்கை சண்டையில் இருபக்கமும் செம்மயிர் விரோதம் காரணமாக மறவராயர்கள் சண்டையிட்டதாக ஒரு கல்வெட்டு கூறுகின்றது. எனவே  மறவர்,கள்ளர் நாட்டான்மைகாரர்கள் மற்றும் மனியகாரர்கள் இந்த வலங்கை-இடங்கை சண்டையே நடத்துபவர்களாக இருந்துள்ளனர்.


வலங்கை உய்யகொண்ட சத்திரியர் இருந்தனரா?

சூத்திரர்கள்
===========
இந்திய அரசாங்கத்தின் புதுக்கோட்டை மானுவலில் சொல்லப்பட்டது யாதெனில் வலங்கை மற்றும் இடங்கையை சார்ந்த தொழிலாலர்கள் மற்றும் கைவினைகலைஞர் என்ற இடங்கை வலங்கை பிரிவுகளில் உள்ளவர்களே சூத்திரர் என குறிப்பிடுகின்றது. வலங்கை இடங்கை பிரிவு இரண்டுமே சூத்திரர் தானாம் அரசாங்க அறிக்கை.
இந்த இடங்கை வலங்கை பிரிவுகளில் வீரர்கள் இல்லை ஆனால் இன்றை நாளில் பூஸ்ட்,ஹார்லிக்ஸ்,பெப்சி முதலிய வணிக மையங்கள் விளையாட்டு வீரர்களுக்கு ஸ்பான்சர் செய்வது போல் தான் இந்த இடங்கையை சார்ந்த கம்மாளர்களும் வலங்கையை சார்ந்த செட்டியார்களும் வீரர்களுக்கு ஸ்பான்சர் செய்வர். அதையே இடங்கை படைவீரர்கள் வலங்கை படைவீரர்கள் எனப்படுவர். அந்த இரு வீரர்களும் சூத்திரர் அல்ல. சூத்திரரின் ஸ்பான்சரில் அரசருக்கு  பனி புரியும் வீரர்கள்.

வலங்கை இடங்கை பிரிவு இரண்டுமே சூத்திரர் என்கையில் வலங்கையைசத்திரியர் நாங்க வலங்கையில்  குடி சத்திரியர்னு சொல்லிகிட்டு திரிந்தால் அது அறியாமை.


sishri.org என்னும் வலை தளத்தில்  தெலுங்கு பிராமனர் வலங்கை உய்யகொண்ட சத்திரியர் எனும் சொல்லாடலை கையாள்கிறார். இவர்கள் கூறுவது போல் வலங்கை என்னும் தொழிலாளர்களான செட்டியார்கள் மத்தியில் இப்படி ஒரு சத்திரியர் இருந்தனரா?


வலங்கையோ இடங்கையோ உழைக்கும் தொழில் செய்த சூத்திர வைசிய பிரிவினரே இருந்த நிலையில் வலங்கையில் ஏனையே செட்டியார்களை விட கீழ்பட்ட மக்களாக திருவிதாங்கூரிலும்,கன்யாகுமரியிலும் பறையர்,பள்ளரை விட வன்கொடுமைக்கு ஆளான சாணார்கள் எனப்பட்ட கள் இறக்கும் தொழிலாளர்கள் சத்திரியராக இருந்ததாகவும் சோழரும் பாண்டியரும் இந்த வலங்கையை சார்ந்தவர் என்னும் வாதத்தை வைக்கிறார்.

வலங்கையிலே செட்டியார்களுக்கு கிழே  உள்ள மக்கள் எப்படி சத்திரியர் ஆனர்.

இலங்கையில் உள்ள துருவர் என்ற சிங்கள இனத்தவர்கள் உள்ளனர்
http://thesamnet.co.uk/
http://thesamnet.co.uk/

கோவியர் நளவர் சாண்டார் என்கிற சாதிகள் தமிழ் நாட்டில் கிடயாது./
சாண்டார் சிங்களவர்தான்.சாண்டார் (சான்றார்/சாணார் இப்பொழுது நாடார்) தமிழ்நாட்டில் அதிகளவில் மரமேறுகிறார்கள். கோவியர் சவம் காவுவதற்கு ஆந்திரக்காரர்ளால் கொண்டு வரப்பட்டவர்கள்.
சோழமன்னன் இலங்கையை வெற்றி கொண்டபோது 12000 சாண்டார்களைச் சிறைப்பிடித்து அவர்களைக்கொண்டு தமிழ்நாட்டில் காவிரி அணையைச் செப்பனிட்டான்.
துட்ட கைமுனுவின் மகன் சாலியா சண்டாள(චණ්ඩාල) பெண் மீது காதல் கொண்டதும் பின்னர் மணம் முடித்ததும் அதனால் துட்டகைமுனு “சண்டாள” என்பவர்களை அனுராதபுரியிலிருந்து துரத்தியதாகவும் மகா வம்சம் கூறுகிறது. அந்த சண்டாளர்கள் வளமில்லாத வடக்கு நோக்கி வந்து குடியேறியிருக்கலாம் என்பதே தற்போதுள்ள அனுமானம்
சண்டாளனாக பிறந்த ஒருவன் ஏழுபிரவிகளை கடந்தாலொழிய அவன் வீடுபேறு இயலாது என்கின்றது வேதம்.


Saliya – Asokamala

King Dutugamunu had a son named Saliya Raja Kumara. He was an intelligent Prince and conducted many meritorious deeds. This young Prince, fell in love with a beautiful Chandala girl named Asokamala. Prince Saliya was told that he would not be able to become the King, if he continues his love affair with Asokamala. Prince Saliya’s love for Asokamala was greater than his desire for the kingdom. Against the wishes of the country, he married Asokamala without any regard to the throne.

(Author’s Note: Mahavamsa Tika gives a greater description of Saliya-Asokamala love story. According to Tika, Saliya and Asokamala were husband and wife in a previous life. During King Dutugamunu’s time, Saliya was born as son of King Dutugamunu while Asokamala was born as a Chandala girl in the city. One day while Prince Saliya was walking in a forest of Asoka trees, he heard a song sung by a beautiful voice. When he followed the voice, he saw a pretty damsel plucking Asoka flowers. Saliya Raja Kumara fell in love with the girl immediately, [not knowing that she was her wife in a previous life] and they got married. Some consider the rock statue in Isurumuniya depicting lovers, known as “Isurumuni lovers” to be of Saliya Raja Kumara and Asokamala). Author’s Note: Mahavamsa account of Saliya-Asokamala story was extremely brief, probably was a distraction for Mahathera Mahanama. (Author of this portion of Mahavamsa).

வரிசை எண் 1.

கல்வெட்டு அமைந்துள்ள இடம்:
 விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், கல்லுமடை கிராமம் திருநாகேசுவரமுடையர் கோயில் தென்புறக் கல்.

கல்வெட்டு :
* ஸ்ரீ கோனோற்றமை கொண்டான் பருத்திக்கு
டிநாட்டு பாப்பார சான்றார்க்கும் பாற்குடி
களுக்கும் பிரமதேய கிழவர்க்கும்

‘கேரள சிங்க முத்தரைய’னாயின ‘மகாதேவன் மரு
தன்’ சாழ நாட்டு திருப்பாலை ஊர் தேவருக்கும்....”

The Durave or toddy tapper castes are related to the Ezhavas of Kerala or the Nadar or Tamil Nadu. Mangala Samaraweera, former Minister of Foreign Affairs, one time member of the ruling Sri Lanka Freedom Party and fired by President Rajapakse belongs to the Durave caste.

Caste And Exclusion In Sinhala Buddhism

மங்கல சமரவீரா என்னும் வெளியுறவுதுறை சிங்கள அமைச்சர் துருவர் சமூகத்தினர் என கூறுகின்றது கொழும்பு. இவர் தமிழகத்தில் நாடார் மற்றும் ஈழவர் வகுப்பர் என கூறுகின்றனர்.

http://www.infolanka.com/org/srilanka/cult/54.htm

துருவர் சமூகம் என்ற இலங்கை சாதியரில் சாணார் ,பணிக்கர் என்ற பெயர் உள்ளது 
ஆனால் துருவர் இலங்கை "தொல்லை காது" என சொல்லும் இனமாகவும் உள்ளனர்.
துருவர் சாணாரை போல் இலங்கையை ஆண்ட சாதி என சொல்கின்றனர்  

The Durava - toddy tappers or royalty?

Another important Durava name Nanayakkara could also be said to mean 'Chief of the elephants'. Other hereditary Durava names connected to the elephant include Alige, Kandege and Panikkalage. Be as it may, the contentions of Nevill regarding the connection of the Durava to the Nagas have been supported by a number of Durava scholars including James Bastian Perera, the author of the Nitiratnavali (1914), Richard De Silva, the author of Lamani Raja Kulaya (1995) and more recently Nandanapala Cumaranatunga, the author of Indo- Lanka Ethnic Affinities (2001). Perera even went on to claim that the Nagas were in Kelaniya in the time of Totagamuve Sri Rahula as evident in the following stanza from the Selalihini Sandeshaya.

Caste And Exclusion In Sinhala Buddhism

மங்கல சமரவீரா என்னும் வெளியுறவுதுறை சிங்கள அமைச்சர் துருவர் சமூகத்தினர் என கூறுகின்றது கொழும்பு. இவர் தமிழகத்தில் நாடார் மற்றும் ஈழவர் வகுப்பர் என கூறுகின்றனர்.

ஆதாவது சாணார் இனத்தவர் கத்தியை வைத்திருப்பர் அது சத்திரியர் பாரம்பர்யம் என்கின்றார் அந்த தெலுங்கு பிராமனர்.
சாணார் என்பது நட்டாச்சி செய்த நாடார்களாம் ஆனால் 14-ஆம் நூற்றாண்டு சங்கரங்கோவில் பராக்கிறம பாண்டிய தேவர் கல்வெட்டில் நாடார் என குறிப்பிடாது சாணார் எனவே குறிப்பிடுகின்றது. இதில் சாணாருக்கும் பறையருக்குமான சண்டையில் பாண்டியர் அழித்த தீர்ப்பை பற்றிய கல்வெட்டு. 

சாணார் கத்தி என்பது சாணார் வைத்திருக்கும் கத்தி. சவளக்கத்தி என்பது அம்பட்டர் வைத்திருக்கும் கத்தி. சானார் கத்தியால் ஓலை நறுக்கலாம் பாளை சீவலாம் போருக்கு பயன்படுத்த முடியாது. இந்த கத்தியை வைத்தேல்லாம் சத்திரியர் என கூறமுடியாது. சாணாரை காட்டிலும் அம்பட்டர் அதிக நேரம் கத்தியை வைத்திருப்பர் சாணாரைக்காட்டிலும் அம்பட்டரை கூட சத்திரியன் எனலாம்.
சாணார் கத்தியை வைத்தெல்லாம் சத்திரியர் என கூற முடியாது.
வலங்கை மகாசேனை இருந்ததா?
சாணாரே வலங்கை மகாசேனையில் உள்ள ரத,கஜ,குதிரை,தேர் மற்றும் சேனைகளின் தலைவர் என கூறுகின்றார். அப்படி ஒரு சேனை இருந்ததா?
1350-ல் சுல்தான்கள் படையெடுப்பு
1400-ல் நாயக்கர் படையெடுப்பு
1600-ல் போர்த்துகீசியர் படையெடுப்பு
1650-ல் பிரெஞ்சுப் படையெடுப்பு
1750-ல் ஆங்கில படையெடுப்பு
இந்த படையெடுப்பில் எந்த ஒரு குறிப்புகளிலும் இப்படி பட்ட படை இருந்ததற்க்கும் எதிர்கொண்டதற்க்கும் எந்த ஆதாரமும் இல்லை . இந்த  பூலோகத்திலே இல்லாத கற்பனை படையா அது?.
மேலும் சாணான் என்னும் வார்த்தை "உழச்சாணான் பிராமன பட்டன்"  எனும்  " நாராயன் பட்டனான சாணான்" என ஒரு இடத்திலும் உள்ளதால் சாணான் என்னும் இனக்குழு யார் என தெரியவில்லை.

ஈழவர் என்போர் இயக்கர் எனும் மூலம் கொண்ட ஈழவ வெள்ளாளர் மற்றும் ஈழவ பிள்ளைமார்கள் என அடையாளபடுத்துகின்றனர். தாங்கள் சாணார் அல்ல என்கின்றனர்.

வலங்கை-இடங்கை சண்டை எப்படி நடந்தது?

வலங்கை-இடங்கை சண்டை என்பது தெலுங்கு பிராமனர்(sishri.org) கூறுவதுபோல் அது  போர்க்களம் கொண்ட சண்டை கிடையாது. தெருக்களிலும் முச்சந்தியிலும் பெரிய கோவில்கள் பிராமணர் கைவசம் சென்றதால் சிறு கோவில்களான மாரியம்மன் கோவில்கள் பத்திரகாளியம்மன் கோவில்களுக்கு பண்டாற பூசைக்கு முதன்மை பெற நடந்தது தான் இந்த வலங்கை இடங்கை சண்டை.
இதில் ஆயுதங்களை பயன்படுத்தினர் என்பது நகைச்சுவையே. இந்த சண்டையில் மலங்களை வாரி இறைத்தும். சாணிகளை பூசியும் மன்னை வாரி தூத்தியும் சண்டையிடுவர். இந்த சண்டை அதிகமானால் தடிகள் மற்றும் சில ஆயுதங்களை பயன்படுத்துவர். வலங்கை இடங்கையை சார்ந்த பென்களை சிறையெடுத்தும் அட்டகாசம் செய்வார்கள்.
பென்களை சிறையெடுப்பது தான் இதிலே மிகப்பெரிய வெற்றி.
இது தான் வலங்கை இடங்கை சண்டை. சண்டை முத்தினால் பாடிக்காப்பளர்கள் நாட்டாமைக்காரர்கள் காவலர்கள் சண்டையை தடுப்பர். முடிவில் இரு பிரிவினரிடமும் பணம் வசூலிப்பர். இது தான் காலம் காலமாக நடந்தது. இந்த லட்சனத்தில் எங்கு ரத,கஜ,துரக,பதாகை நால்வகை படையினர் ஏது.
நாயக்க ஆட்சியர்கள் பெரும்பாலும் வலங்கையை ஆதரிப்பர் காரனம் தெலுங்கு செட்டியார் தலைமைக்கு ஆதரவாக் சில இடங்கலில் தெலுங்கு கம்மாளர்கலும் ஆதரவு தருவர்.
கம்பம் பகுதியில் வலங்கையினரிடமிருந்து இடங்கை ஆசாரிகள் குடும்பர்களின் பென்களை பாதுகாத்த இசுலாமிய பெரியவருக்கு இடங்கை செய்த மரியாதை பற்றி ஒரு செப்பு பட்டயம் கூறுகின்றது.

இந்த லெட்சனம் தான் வலங்கை இடங்கை சண்டை. இது ஒரு ஆய்வாம் இதற்கு ஆதாரமாக sishri.org நிறை செப்பு பட்டயம் அடித்து(மன்னிக்கவும்). கண்டுபிடித்துள்ளனராம்.ஈழத்து சாண்டார் என்ற சண்டாளர்களும் இராமானுஜர் காலத்தில் பறையரில் பிராமணராக உயர்ந்த வடுகர் வழிவந்த திருக்குளத்து பிராமணர்களும் பல கதைகளையும் செப்பேடுகளையும் சொந்தமாக செய்து கொள்கிறார்களாம் இது sishri.org போன்ற தலங்களில் பார்த்தால் தெரியும். வலங்கை பறைய சாண்றோரை மூதாதயராக கூறும் கூட்டத்தினர்கள் ஏதோ திரிவிக்கிரமன் அவதாரக்கதைகள் என கதைவிடவும் தங்களுக்கு தெரிந்த கைக்கூலிகளுக்கு செப்பேடுகளையும் தருகின்றது.

 இதற்க்கு பதிலாக அந்த தெலுங்கு பிராமனர்(sishri.org)சேரி என்னும் ஈழவசேரி,பார்ப்பாணசேரி,பறைசேரி,தீண்டாசேரி,கம்மாளசேரி,வலசேரி,இடைசேரி முதலிய சேரிகளின் உள்ளவர்களின் ஒற்றுமை வேற்றுமையை அறியலாம்.உண்மை என்னவெனில் சேரி என்னும் இடத்தில் வாழும் மக்கள் அனைவரும் ஒரு மூலமே அதுவே திர்மூலமான உன்மை.

மேலும் தமிழ்மனத்தின் தொடர்ச்சி...............
கிராமங்களில் அன்றாடச் செயல்பாட்டில் தலையீடு செய்தும், அதன் செயல்முறைகளை  தங்களுக்குச் சாதகமாக ஒழுங்கு படுத்தினர். கோயில்களிலும்,கோயில்களில் இருந்த கருவூலங்களையும்  தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த  நிலையை பிராமணர்கள் அடைந்ததும், தங்களை நிலச்சுவான்தார்கள் போல எண்ணிக்கொண்டு,அரசின் பெயராலும் ஆலயத்தின் பெயராலும் கிராம மக்களிடம் இருந்து, நிலவரி,வீட்டுவரி ஆகியவற்றைப்  பிரித்தனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் காணப்பட்ட குடிமக்களை  அரசின் பெயராலும்,சமயத்தின் பெயராலும் ஒடுக்க முற்பட்டனர். இவ்வாறு, ஒடுக்கப்பட்ட மக்களை இடங்கையினர் என முத்திரைக்  குத்தினர். நிலமைக் கட்டுக்கடங்காமல் போகவே, புறக்கணிக்கப்பட்ட இடங்கைப் படையினர் சமயத்தின் பெயராலும்,அரசின் பெயராலும் ஏகபோக வாழ்க்கை வாழ்ந்த  பிராமணர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர்.பிராமணர்களுக்குப் பாதுகாப்பு அளித்த ஆலயங்களை  இடித்து தள்ளியதோடு,பண்டாரங்களையும் (கருவூலங்களையும்) சூறையாடினர். நில உடமையை எதிர்த்த இவர்கள் வரி கட்ட மறுத்தனர். பிராமணர்கள் தங்கிய இடங்களும் நிர்மூலமாக்கப் பட்டன." என்று  வலங்கை-இடங்கைப் போராட்டம் குறித்து டாக்டர்.அ.தேவநேசன் தனது 'தமிழக வரலாறு' நூலில்( பக்கம்-266 ,267 )கூறுகிறார்!

       "முதலாம் குலோத்துங்கன்(கி.பி.1070 -1120 )  சோழ அரசனாக  இருந்தபோது, கி.பி.1071 -யில் இடங்கை-வலங்கைப் போராட்டம் மிகக்கொடூரமாக நடந்தது.பிராமணர்கள் தங்கிய சதுர்வேதி மங்கலத்தை மக்கள் தீகிரையாக்கியதாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. பிராமணர்கள் ஆலயங்களைத் தவறான முறையில் தங்களுக்கு  சாதகமாகப் பயன்படுத்தியதால் சமூகத்தில் விரிசல்கள் ஏற்பட்டன" (ஆதாரம்:தமிழக வரலாறு,டாக்டர்.அ தேவநேசன்)

இடங்கை வலங்கைப்  போராட்டம் குறித்த பொதுவான தகவல்கள்:
       போராட்டம் குறித்த செய்திகள்  பொதுவாக ஏதாவது ஒரு கோயிலை மையமாக கொண்டே  குறிக்கப்பட்டு  இருக்கும்.
 on the Pariah caste in Travancore, the Rev. Mateer narrates a legend that the Shanans are descended from Adi, the daughter of a Pariah woman at Karuvur, who taught them to climb the palm tree, and S. prepared a medicine which would protect them from The squirrels also ate some falling from the high trees. of it, and enjoy a similar immunity. It is recorded, that in the Gazetteer of " the Madura Shanan toddy-drawers employ Pallans, Paraiyans, and other low castes to help them transport the liquor, but Musalmans and Brahmans have, in district, several cases, sufficiently set aside the scruples enjoined by their respective to liquor own Musalmans at least) to serve their customers with their own hands." In a recent note,t it has been stated that " against dealings in potent retail shops, and (in the case of some faiths 

   அரசனுடைய அதிகாரிகள்,படைவீரர்கள் பற்றிய குறிப்புகளாக இருக்கும்.
         பெரும்பாலும்  உழைக்கும்,உரிமைகோரும் மக்களின் பிரிவான இடங்கைப் பிரிவினர் பாதிக்கப்பட்டதாக  செய்திகள் இருக்கும்.
          இவர்களைத் துன்புறுத்துபவர்களாக பிராமணர்கள்,வெள்ளாளர் போன்றவர்களைப் பற்றி மிகுதியாகவும்,மற்ற உயர்சாதி நில உடமையாளர்களைப்  பற்றி ஓரளவும் குறிப்புகள்  இருக்கும்.


       சில கல்வெட்டுகளில் இடங்கை,வலங்கை இரு பிரிவினரும் இணைந்து, பிராமண,வெள்ளாள  நில உடமையாளர்களை  எதிர்த்ததாக  இருக்கும்.
           பிராமணர்களின் ஆதிக்க மனப்பான்மை, அவர்களது  இன நலனும் ,சமய வெறியும்,காரணமாக  நடந்த இடங்கை-வழங்கிப்  போராட்டத்தில்  தமிழக அரசர் பலரும்  பிராமண ஆதரவாளர்களாகவே  செயல்பட்டு, உரிமை கோரிப் போராடிய, இழந்த உரிமையை கேட்ட  உழைக்கும் மக்களின்  போராட்டத்திற்கு எதிராக  நடந்துகொண்டும், பிராமணர்கள்,  நில உடமையாளர்களுக்கு  ஆதரவாக  செயல்பட்டும்வந்துள்ளார்கள். !
       உழைக்கும் மக்களை  அடக்கி, ஒடுக்கி,அடிமைப்படுத்தும்  செயல்களுக்கு  ஆதரவாக இருந்துள்ளதை  இடங்கை-வலங்கைப் போராட்டம்  உணர்த்துகிறது!

நன்றி:
சோழவந்தான் மாரியம்மன் கோவில்திருமலை நாயக்கர் செப்புபட்டயம்
தேசம்:ஈழத்தின் குரல்
கொழும்பு டெலகிராப்
பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்த்த மக்கள் போராட்டம்!
தமிழ்மனம்:http://generationneeds.blogspot.in/