ஆளுடைய காமகோட்டத்து நாச்சியார் கோவில் மறவர் கல்வெட்டுகள்
https://thevar-mukkulator.blogspot.com/2023/02/blog-post_23.html
மறவர் கல்வெட்டுகள் சில தொகுப்புகள்-1
https://thevar-mukkulator.blogspot.com/2021/08/blog-post.html
அரிய மறவர் கல்வெட்டுகள் சில....
https://thevar-mukkulator.blogspot.com/2019/04/blog-post.html
மறவரையர்கள்(அரசுமக்கள்) மறமுதலிகள்(தலைவர்கள்)
https://thevar-mukkulator.blogspot.com/2016/04/blog-post.html
மறவர் பாடிகாவல் குலசேகர பாண்டியன் காலத்தில்
https://thevar-mukkulator.blogspot.com/2015/10/blog-post.html
புதுக்கோட்டை மறவர்களின் பட்டங்கள் கல்வெட்டு ஆதாரங்களுடன்
https://thevar-mukkulator.blogspot.com/2014/05/blog-post_4546.html
https://thevar-mukkulator.blogspot.com/2013/08/blog-post_13.html
https://thevar-mukkulator.blogspot.com/2016/03/blog-post_19.html
காலம்: இரண்டாம் குலோத்துங்க சோழன் கி.பி(1136)
செய்தி:இராஜ இராஜன் கலிங்கு செய்வித்தை இரும்பாழியை சேர்ந்த மறவன் அனபாய நாடாழ்வானுக்கு தென்கவி நாட்டார் நெல் கொடுத்தமை
ஸ்வஸ்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு 3ராவது ஜெயசிங்க குல காள வளநாடாய் தென்கவி நாட்டுக்கு இசைந்த நாட்டோம் இராஜ இராஜன் கலிங்கு செய்வித்த இரும்பாழி மறவன் அரசன் தேவனான அனபாய நாடாழ்வானுக்கு இருப்பாக மாத்தல்.

கல்வெட்டு என்:14:2
இடம்:திருமையம் வட்டம் அரசு விநாயகர் கோவிலில் உள்ள கல்தூன் கல்வெட்டு
காலம்: மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி(13 ஆம் நூற்றாண்டு)
செய்தி:கூடலூர் நாட்டை சேர்ந்த பெருங்கூற்குடி மறவர் பன்மன் என்ற நிலைமை அழகிய நாடாழ்வான் அரசுமலையில் விநாயகரை பிரதிட்டை செய்து அதற்க்கு தன் தாய் தந்தையரின் பெயரை சாற்றியுள்ளார்.. இதற்காக கீழ் வயலிலும் சோழன் குடிகாட்டிலும் நிலம் வழங்கியமை
கோமாறவர்மரான திரிபுவன சக்கரவர்த்தி குலசேகர தேவர்க்கு யாண்டு 3ராவது இரட்டைபாடி கொண்ட சோழவழனாட்டு பெருங்கூற்குடி மறவ பமன் தென்னன் நிலைமை அழகிய நாடாழ்வான்(ஒல்லையூர்) கூற்றத்து அரசுமீகாமையில் விநாயக் பிள்ளையாரை பிரதிட்டை செய்து மறக்குல விநாயக பிள்ளைக்கு மாதாபிதாக்களை சாற்றி..............

NO.15.AR.NO.137 of 1908 Tirupattur,Ramanathapuram district
Inscriptions of Varaguna Maharaja a pandya king
"கோவரகுணமாராயர்க்கு யாண்டு ....நந்தா விளக்கு எரிய முத்தூர் கூற்றத்து
பெருமாத்தூர் மறவன் அணுக்க பேரரையன் கடம்ப வேளாண்
வைத்த பழங்காசு பதினைந்து

கல்வெட்டு முதலாம் மாறவர்மன் குலசேகரனின் வேந்தோனி கல்வெட்டு:
கல்வெட்டு
இடம்:இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலிருந்து 2கிமி தொலைவில் உள்ள வேந்தோனி என்னும் ஊரில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள 1 1/2 உயர கல்லில் உள்ள செய்தி
காலம்: முத்லாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி(1296)
செய்தி:அகரமாகிய(அஹ்ரஹாரம்) மதிதுங்க சதுர்வேதிமங்கலத்தை காளைய கண்டன் கோட்டை ஊராரும் குண்டையங்கோட்டை ஊராரும் காக்கவேண்டும் என அறிவுருத்துகிரது.

முதலாம் மாறவர்ம சுந்தர பாண்டியன் நிறுவிய மறமானிக்க ஈஸ்வர நாயனார் ஆலையம்
ஸ்வஸ்திஸ்ரீ கோமாறவர்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் எம்மமண்டலமும் கொண்ட குலசேகர தேவர்க்கு யாண்டு 28வது வடதலை செம்பியன் நாட்டு காளையக்கண்டன் கோட்டை ஊரார் நோக்கி கொள்க. சுபஸ்மஸ்து மதிதுங்க சதுர்வேதி மங்கல குளமும் குண்டையங்கோட்டை ஊரார் நோக்கி கொள்க...............

இதில் வரும் காளையக்கண்டன் கோட்டை ஊரார் செம்பி நாட்டு மறவர்களும் குண்டையங்கோட்டை ஊரார் குண்டையங்கோட்டை மறவர்களும் என தெரிகின்றது.
இடம்:மறவமதுரை அகளங்கீஸ்வரர் கோவில்
காலம்:1449(கி.பி.127)
செய்தி: மறவமதுரையிருக்கும் சோழகோன் சிலருகு நிலம் வழங்கியது.

சகாத்தம் 1449...........மறவன் மதிரை ஊரவரில் இம்பன் சோழகோன் உள்ளிட்டாரும்
க/எண்:ஐ.பி.எஸ் 681
இடம்:திருவேங்கைவாசல்,குளத்தூர் தாலுகா,புதுக்கோட்டை
வயக்ஹ்ரபுரிஸ்வரர் கோவில்
அரசர்:விஜயநகர கம்பன்ன உடையார்
காலம்:கிபி.1374
கல்வெட்டு:
ஸ்ரீ மது கம்பண உடையார்க்கு....திருவேங்கைவயல் தானத்தாரும் ஊரவரும் பாடிகாவல் சுவந்திரம்...............பெருஞ்சுனையூர் வயல் மறவன் காலி வயல் வட மயிலாப்பூர்..........
செய்தி:
பாடிகாவலுக்கு வழங்கிய நிலங்களில் மறவன் காலி வயல் செய்தி
க/எண்:ஐ.பி.எஸ் 639
இடம்:திருவேங்கைவாசல்,குளத்தூர் தாலுகா,புதுக்கோட்டை
வயக்ஹ்ரபுரிஸ்வரர் கோவில்
அரசர்:சடையவர்மன் சீவல்லப பாண்டிய தேவர்
காலம்:கிபி.14 ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு:
ஸ்ரீ கோச்சடைபன்மரான திரிபுவனசக்கரவர்த்திகள் ஸ்ரீ சீவலதேவர்க்கு யாண்டு...ஆடி... பெருவாநாட்டு மடமயிலாப்பூர் மறவரில் திருவேங்கை வாசல் உடையார் வேங்கை வந்த பெருமாள் கோயில் தேவதான..
கணக்கு... சீகார்யம் செய்வோர்களும் இந்நாட்டு மடமயிலாபூர் மறவரில் மகள் நாயநான...தாய்க்கு பிரமானம்...
செய்தி:
திருவேங்கை வாசல் கோவிலுக்கு மடமயிலாப்பூர் மறவன் திருவேங்கை வாசல் உடையான்
அதே ஊரில் இருக்கும் மறவரான மக்கள்நாயனின் நிலங்களை தேவதானமாக தந்துள்ளார்......
க/எண்:ஐ.பி.எஸ் 504
இடம்:திருவரங்குளம் ஆலங்குடி தாலுகா,புதுக்கோட்டை
ஹரதீஸ்வரர் கோவில்
அரசர்:குலசேகர பாண்டிய தேவர்
காலம்:கிபி.12 ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு:
ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனசக்கரவர்த்திகள் ஸ்ரீ குலைசேகரதேவர்க்கு யாண்டு...இரண்டாவது கானநாட்டு பெருங்கரைக்குடியான திருவரங்குள நல்லூர் ஊராயிசைந்த ஊரோம் நாங்கள் பெருங்குடி மறவரையர்கள் பக்கல் விலையும் ஒற்றியும் கொண்டுடைய வயல்...
செய்தி:
திருவரங்குளம் கோவிலுக்கு தேவதானமாக மறவர்குல பெருங்குடி அரையர்கள் நிலத்தை கொடுத்த
செய்தி.பெருங்குடி என்ற பெயரே மறவர்கள் ஆளும் வர்க்கம் என அடையாளபடுத்துகிறது.
க/எண்:ஐ.பி.எஸ் 527
இடம்:செம்பாடு ஆலங்குடி தாலுகா,புதுக்கோட்டை
திருவையாருடைய நாயனார் கோவில்
அரசர்: சுந்தர பாண்டிய தேவர்
காலம்:கிபி.13 ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு:
ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனசக்கரவர்த்திகள் ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவர்க்கு யாண்டு....ஜயசிங்க குலகால வளநாட்டு..........உட்பட மறவாகலும் மறவன் வயக்கல் கினற்றின்
செய்தி:
மறவன் வாகல் மற்றும் மறவன் வயக்கல் வந்த செய்தி
ஆண்டு:கி.பி 1317
அரசர்:முதலாம் மாறவர்மர்
குலசேகரபாண்டியன்
கல்வெட்டு:
ஸ்ரீ கோமாறபன்மரான...
குலசேகரதேவர்க்கு யாண்டு..
...புறமலைநாட்டு திருக்கோளக்குடி மறமுதலிகளில் கன்னிமலை நாடாழ்வான் உள்ளிட்டோரோம்
எங்களூர்க்கு பொது கானிஇராசேந்திர சோழன் குடிகாடும் செழியன் ஏம்பலும்..ஆக இக்குடிக்காடு......
செய்தி:
திருக்கோளக்குடி மறமுதலிகளில் கன்னிமலைநாடழ்வான் ஊர் பொதுக்கானியான இராசேந்திரசோழன் குடிக்காடு
செழியன் ஏம்பல் ஆகியவற்றை இறைவனுக்குஇறையலி. சோழன்,செழியன் பெயரில் குடிக்காடு உள்ள
கன்னிமலை நாடாழ்வான் திருக்கோளக்குடி மறவன்.
க/எண்: ஐ.பி.எஸ் 181
ஆண்டு:கி.பி 1146-74
அரசர்:இரண்டாம் இராஜ
இராஜ சோழர்
கல்வெட்டு:
தன்னன் எதிரிலி பெருமாள் அகம்படிய மறமுதலிகளில் நற்றான் பெரியன் வீரமழகிய பல்லவராயன்.
செய்தி:
புல்வயல் அரசன் கடம்பராயனிடம் அகம்படியராக பனியாற்றிய வீரமழகிய பல்லவராயன்.
Note:
Ahambadiya Mara mudhali- A Maravan worked as Ahambadiya sect for the pulvayal
க/எண்: ஏ.அர்.ஈ 81/1916
ஆண்டு:கி.பி 1290
அரசர்:முதலாம் மாறவர்மர்
குலசேகர பாண்டியர்
கல்வெட்டு:
ஸ்வஸ்திஸ்ரீ...குலசேகர தேவர்க்கு யாண்டு...... விரையாச்சிலை..... ....அரைசமக்களும் மறமுதலிகளும் ஊராக
இசைஞ்ச ஊரோம்.... விரையாச்சிலை அரைசமக்களும் மறமுதலிகளும் இசைந்த ஊரோம்.......
செய்தி:
திருக்கோளக்குடி இறைவனுக்கு விரையாச்சிலை அரசமக்களும்
மறமுதலிகளும் விற்றுதந்த நில ஆவணம்.விரையாச்சிலை படைபற்றில் உள்ள அரசமக்களும் மறமுதலிகளும்
மறவர்களே இதில் அரையர் காமபோதராயர் உள்ளிட்ட சிலர் வாங்கியது..........
க/எண்: ஏ.ஆர்.ஈ 86-1916
ஆண்டு:கி.பி 1283
அரசர்:முதலாம் மாறவர்மர்
குலசேகரபாண்டியன்
கல்வெட்டு:
ஸ்ரீ கோமாறபன்மரான... குலசேகரதேவர்க்கு யாண்டு.. விருதராஜபயங்கர வளநாட்டு அரைசமக்களும் மறமுதலிகளும் எங்களூர் அரசுமக்களில் நாட்டான்..போதராயர்
செய்தி:
வீரையாச்சிலை அரசர் மக்கள்
மறமுதலிகளும் இறைவனுக்கு வழங்கிய இறையிலி....
விரையாச்சிலை அரையர்கள் பற்றிய செய்தி.
பாண்டியர் ஏழகப்படையும் மறவர் படையும் இருந்த ஆதாரம்
ஆண்டு:கி.பி பதிமூன்றாம் நூற்றாண்டு
அரசர்:முதலாம் சுந்தர பாண்டியன்
கல்வெட்டு:
ஸ்ரீ திரிபுவனசக்கரவர்த்தி கோனேரி கொண்டான்...பொன்னமராவதி......
கோயில் தானத்தார்க்கு இவ்வூர் மறவரும்,இடையரும்,வலையரும் உட்பட்ட குடியர்களும் இவ்வூர்
செய்தி:
திருக்கோளக்குடி வாழ் மறவர்,இடையர்,வலையர் உட்பட்ட குடிகள் ஆகியவற்றிற்குத் தந்த அரசுசார் வரியினங்கள்...
ஆண்டு:கி.பி 1249
அரசர்:முதலாம் மாறவர்மர்
சுந்தர பாண்டியன்
கல்வெட்டு:
ஸ்ரீ கோமாறபன்மரான...
சுந்தரபாண்டிய தேவர்க்கு யாண்டு.....
...பூங்குன்ற நாட்டு வேலங்குடி மறவர் பக்கல்...
செய்தி:
பூங்குன்ற நாட்டு வேலங்குடி மறவர் இறையிலி செய்தி..
அடிகள் என்ற மரியாதைக்குரிய கல்வெட்டு : சில கல்வெட்டுகளில் தமிழ் மன்னர்களும் மக்களும் தன வயதை பொறுத்து அடிகளார்,சிறுவன்,பெரியார் போன்று கல்வெட்டு பொறித்துள்ளனர். அம்பாசமுத்திரம் சுந்தர சோழ பாண்டியன் கல்வெட்டுகளில் "பராந்தகன் மறவநடிகள் மதுராந்தகனான சோழ பாண்டிய மாராயன் " என ஒரு கல்வெட்டு வந்துள்ளது. இதே போல் "மாதவன் மறவடிகள் மதுராந்தகனான சோழ பாண்டிய மகாராயர்" என ஒரு கல்வெட்டும் வந்துள்ளது. அதே ஊரில் வேறொரு இடத்த்தில் கிடைத்த கல்வெட்டுகளில் "வீதி விடங்க வெள்ளாளன் அடிகள் தேவன் இத்தயவர்க்கு" என ஒரு கல்வெட்டு வந்துள்ளது பழுவூர் கல்வெட்டு "அடிகள் பழுவேட்டரையன் கண்டான் மறவனார் பெருந்தேவியார்" என அடிகள் என பழு வேட்டரையன் கல்வெட்டும் வந்துள்ளது பரிசை கிழான் செம்பியன் ஆற்காட்டு வேளாண் மறவன்"கோவனூர் மறவன் தர்மன் குரலான மூவாயிர பேரரையன் தன்மம்"
இடம்:அரியலூர் தட்சனாமூர்த்தி மண்டபம்
காலம்::இராசகேசரிவர்மன் சுந்தரசோழன் கிபி(968)
செய்தி:வன்னாடு(வாணர் நாடு) பகுதியை ஆண்ட சிற்றரசனான மறவன் தூங்கான் பராந்தக வன்னாடுடையான் வரி அளவை நிர்மானம்
இடம்:அரியலூர் தட்சனாமூர்த்தி மண்டபம்
காலம்::இராசகேசரிவர்மன் சுந்தரசோழன் கிபி(968)
செய்தி:வன்னாடு(வாணர் நாடு) பகுதியை ஆண்ட சிற்றரசனான மறவன் தூங்கான் பராந்தக வன்னாடுடையான் மனைவி தன் குலதெய்வமான பகவதிக்கு நந்தா விளக்கு வைத்தல்.

குறிப்பு: இதே கன்னி பகவதி பாண்டியர்களுக்கும் குல தெய்வம்
சிங்கம்புனரி இளமக்கள் என்னும் இளமறவர்கள் கல்வெட்டு:
இடம்:திருமையம் திருவுடைய நாயனார் கோவில்
காலம்::மாறவர்மன் சுந்தர பாண்டியன்(1308)
செய்தி:கடம்பராயன் எரிச்ச்லூர் உடையார்க்கு நிலம் வழங்கியது.
ஸ்வஸ்திஸ்ரீ கோமாரபன்மரான திரிபுவன சக்கரவர்திகள்............மடப்புறமாக இளமக்கள் பற்றில் கொனர்ந்தது.
காலம்::மாறவர்மன் சுந்தர பாண்டியன்(1308)
செய்தி:சுந்தரபாண்டியன் தன் பெயரால் சந்ததி எடுத்ததில் இளமக்கள் நன்கொடை வழங்கியது.
மறவன் வயக்கால்
மன்னன்:முதலாம் இராஜேந்திர தேவர்
காலம்:1010
"ஸ்வஸ்திஸ்ரீ கொவிராஜகேசர்............. மறவன் வயக்காலும்
மறவன் ஈஸ்வர கிரகஹம் மன்னன்:முத்லாம் இராஜேந்திர தேவர் காலம்:1010 "மறவனீன்வர பெருமானடிகள் இவ்வூர்........"
அரசு:
ஆண்டு:14-ஆம் நூற்றாண்டு
செய்தி :
ஸ்வஸ்திஸ்ரீ பனைந்தலை மறவன் சோலை உடையான் முப்பேருடையான் தன்மம்........
அரசு:
ஆண்டு:14-ஆம் நூற்றாண்டு
செய்தி :
ஸ்வஸ்திஸ்ரீ பூபாலகுடி மறவன் பெரியநாசி சதிராண்டி தன்மம்........
அரசு:
ஆண்டு:15-ஆம் நூற்றாண்டு
செய்தி :
இந்த முகவனையும் திருநிலைகாலும் கொவனூர் மறவரில் சூரியதேவர் பூவாலைகுடி ஆண்டார் முற்பாடு கொடாதார் தன்மம்........
காலம் :15 ஆம் நூற்றாண்டு
இடம்:பனையூர் -காணாடு
செய்தி :
பனையூர் மறவன் நயினான் எழுந்திர வென்றான் என்ற போர் வென்ற தேவன் வைத்தாய் திரு-நிலை கால்
கல்வெட்டு:
இத்திரு நிலைக்கால் இரண்டுமே கீழ் படியும் உட்பட இவ்வூர் மறவரில் நயினான் எழுந்திர வென்றான் போரில் வென்ற தேவன் தன்மம்

ஸ்வஸ்திஸ்ரீ கோமாரபன்மரான திரிபுவன சக்கரவர்திகள்............இளமக்களான தேவன் திருவாலவாயுடையான் குலோத்துங்க சோழ நாடாழ்வார்க்கும் இவன் தம்பியான உத்தமசோழ நாடாழ்வார்க்கும் பிள்ளான் பெருமா....................
நன்றி:ஆவணம் இதழ்
உயர் திரு.அமரர் மாணிக்கம் அவர்கள்






































No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.