எனது நன்பர்களில் சிலர் எங்களுக்கு சங்க இலக்கியமே தலையான
ஆதாரம் தமிழிலில் சொல்லபட்ட ஆதாரங்களே எங்களுக்கு பெரிது என சொல்லி கொள்வர். அப்போது நான் கேட்பேன் சங்க இலக்கியம் படிப்பவர்கள்
என்றால் இந்த மருத நிலம் - மள்ளர் - முக்கூடற்பள்ளு இதெல்லாம் தமிழ் தானே அதை படித்து கொஞ்சம் சொல்லுங்கள் ஏன்ன எப்ப பார்த்தாலும் இந்த பள்ளுஸ் மருதநிலம் - இந்திரன் - மள்ளர்னு சொல்லிகிராங்களே அதை என்னான்னு சொல்லுங்கனு கேட்டா அவ்வளவு தான் எங்களுக்கு பாண்டியர் தான் படிப்போம்னு அப்படியே நழுவி விடுவார்கள். நானும் இதை போய் எதுக்கு படிக்கனும்னு எனக்கே அவ்வளவு சங்கட்டம். சரி சில நாள் விடுமுறை கிடைத்தது இந்த முக்கூடற் பள்ளையும் படித்தேன் சில சங்க இலக்கியங்களையும் மள்ளர் பற்றி தேடினேன் கடைசியில் பார்த்தால் இவ்வளவு பெரிய ஓட்டையை வைத்து கொண்டு இவர்கள் இவ்வளவு நாள் நம்மோடு இப்படி மல்லாடி பள்ளாடுராங்களே.... சே!!!.
முதலில் முக்கூடற் பள்ளுவில் ஆரம்பித்து பின் சங்க இலக்கியம் மள்ளர் வரை பார்ப்போம்.
முக்கூடற் பள்ளு(1680? இல்லை 1890?)
இந்த நூலின் காலம் கி.பி. 1680 என குறிப்பிடப்படுகின்றது.
(இது பொது குறிப்பு ஆனால்????)
இரண்டாம் பதிப்பிலே இதை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து இதன் காலத்தையும் இது எந்த நூலின் காப்பி என நொறுக்கிவிட்டார்.
இது ஒரு நாடக நூல். இப்படி இந்த காலத்திலும் முற்காலத்திலும் "குறவன்
குறத்தி" ஆட்டம் என்ற நையாண்டி நாடகம் போடுவார்களோ. அந்த காலத்தில்
"பள்ளன் பள்ளி ஆட்டம்" என்று இயற்றபட்ட கூத்து நாடகம் தான் இது.
எப்படி இந்த காலத்தில் அட்லியும் மற்ற இயக்குனர்களும் ஆங்கில படத்தையோ அல்லது ஏற்கனவே வந்து நொந்து அந்து ஆன படத்தையே மறுபடியும்எடுப்பது போல் இந்த முக்கூடற்பள்ளு என்னு நாடகம் ஏற்கனவே வந்த
"குற்றால குறவஞ்சி" என்ற குறவன் குறத்தி ஆட்டம் என்ற நாடக
இலக்கியத்தின் அப்பட்டமான காப்பி என கூறுகிறார் அருணாசல முதலியார்.
இன்நாளில் 'குறவன் குறத்தி' ஆட்டம் என்பது போலவே 1960 வரை "பள்ளன் பள்ளி' ஆட்டம் என அனைவரும் பார்த்த நையாண்டி நாடகம் பின்பு ஒரு கலவரத்தினால் பின்னாளில் இவர்கள் பெயரையே காலத்துக்கு ஒன்றாக பேச வைத்து விட்டது விதி!!!!!!
பள்ளு இலக்கியத்தின் காலம் என்ன?
இதன் காலம் 16 ஆம் நூற்றாண்டு ஆதாவது திருமலை நாயக்கனின் மந்திரியாகஇருந்த வடமலையப்ப பிள்ளை காலம் என சொல்லப்படுகின்றது. இதன் பின்17 ஆம் நூற்றாண்டு "குற்றால குறவஞ்சி" என்ற நாடகம் வந்ததாக கூறுவர்.
ஆனால் இது குற்றால குறவஞ்சியில் வந்த அதே கதைகளமும் மலைவளம்
நீர்வளம் என குற்றால குறவஞ்சியின் தன்மையையே இதில் அப்படியே வருகின்றது. முக்கூடற்பள்ளு தாமிரபரனி,சிற்றாறு,கயத்தாறு வளம் ஏற்கனவே
குற்றால குறவஞ்சியில் வந்த அதே மூல பாடல்கள் தான் வருகிறது என
அருணாச்சலம் முதலியார் கூறுகிறார்.
மேலும் இதில் பல கலம்பகம்,ஐம்பெரும் காப்பியங்கள்,திருக்குறள்
என பல பாடல்கள் முக்கூடற்பள்ளில் வருவதால் இது பிற்கால இலக்கியம் என
அறியலாம்.
இதன் ஆசிரியர் யார் என தெரியவில்லை என சொல்கிறார்கள் ஆனால் அருணாசல முதலியார் இதன் மூலப்பிரதியை வழங்கிய ராவ்பகதூர் வையாபுரி பிள்ளையயே இதன் ஆசிரியராக உருவகம் தோன்றுகின்றது என சொல்லாமல் சொல்லுகிறார்.
இதன் பதிப்பு விபரம் கீழே:
---------------------------------------------
முகவுரை:
இது கோவில்பட்டி,சீவலப்பேரி,கொம்பங்கிபுரம்,விசயநாராயனம்,முந்நீர்பள்ளம் என ஐந்து இடங்களில் உள்ள ஏடுகளிலுள்ள செய்திகளோடு ஓப்பு நோக்கி இருளப்ப சன்முகசுந்தரம் எழுதிய காகித பிரதிகளையும் ரா.பி.சேது பிள்ளை வரவழைத்து தந்தார்கள். நூல் அச்சாகி வந்தபோது வே.வேங்கடசாமி ரெட்டியார் அவர்கள்.சில திருத்தங்களை செய்து உதவியுள்ளார்.
இந்த ஏட்டுபிரதிகளை தந்த வையாபுரிப் பிள்ளையை அவரின் குருகூர் பள்ளின் முன்னுரை எழுதியும் தந்தமைக்கு வையாபுரியை நன்றி கூறுகின்றேன்.
இதை வெளியிடுமுன் காகித தட்டுபாடு விலையேற்றம் இதனால் தடுமாறி முதல் வெளியீடு நிகழ்ந்தது.பின்பு மதுரை தமிழ் சங்கத்தை சார்ந்த இராமானுஜ ஐயங்கார் தங்கள் ஏடுகளை வைத்து பல பிழைகளை திருத்தி தந்துள்ளார்.
இப்படி வையாபுரி பிள்ளையின் மூலப்பிரதியை எடுத்து முதலில் வீரபாகு பிள்ளைதிருத்தி பின் ரா.பி.சேதுபிள்ளை திருத்திய பின்பு இராமானுஜ ஐயங்கார் திருத்தி தந்த ஒரு பிற்கால ஏடு தான் "முக்கூடற்பள்ளு" ஏன் இத்தனை பேர் திருத்த வேண்டும் என்றால் நீங்களே என்னி பாருங்கள்.
உதாரனமாக குடும்ப பள்ளன் வசனம் "மாஸ்டர் மார்னிங்க்
டிபன் சாப்பிட்டு வண்டீங்களா!" என்ற வார்தையை கூறினால் எப்படி இருக்கும். மூத்த பள்ளி இளைய பள்ளியை பார்த்து "இரவு 9 மணியிலிருந்து பள்ளன கானல மார்னிங்க் கூட பாக்கல"என வசனம் பேசி சண்டை போட்டா எப்படி இருக்கும் அப்படி பிற்கால தமிழ் என தெரியக்கூடாதுனு தான் இத்தனை தடவை திருத்தி இருக்காங்க.
அப்படி இத்தனைபேர் திருத்தியும் பிற்கால தமிழ் சரலமா வந்து இந்த நூல் மாட்டுது ஆங்கிலம்,வடமொழி என பல மொழிகளும் வருகிறது. ஏன் இவ்வளவு தூரம்கஷ்டபட்டு திருத்தனும்? காரணம் இந்த பள்ளுகளின் ஆண்டை,பாட்டுடைதலைவன் இந்த பிள்ளைமார்கள் தான். ஒரு முதலாளிதுவ இலக்கியம் ஒன்றை உருவாக்க பிரயத்தனபட்டது தான் முக்கூடற் பள்ளு.
சங்க இலக்கியம்,ஐம்பெரும் காப்பியங்கள்,திருக்குறள்,தொல் காப்பியம் யாவும்அச்சிடபட்ட ஆண்டு 1850களிலிருந்து 1890 வரைக்கும் தான்.
அதற்கு முன் தமிழ் மக்களுக்கு கன்னகி யார் என தெரியாது,திருக்குறள் பற்றி யாருக்கும் தெரியாது தஞ்சை பெரிய கோவில் கட்டியது இராஜ இராஜன் என்பது
1878 கு பின் தான் தெரியும் 1850க்கு முன் எந்த பிற்கால இலக்கியங்களிலும்
செப்பேடுகளிலும் கல்வெட்டுகளிலும் கண்ணகி,சங்க இலக்கியம்,திருக்குறள்
யாவும் காணப்படவில்லை இவை அனைத்தும் அச்சில் வந்த பின்னால் எழுதபட்ட இலக்கியம் தான் முக்கூடற் பள்ளு.
பள்ளு இலக்கியத்தில் சங்க பாடல்கள் -அருணாசல முதலியார்
-------------------------------------------------------------------------------------------------------------
முக்கூடற் பள்ளு கதை-கரு:
முக்கூடல் ஊரில் ஒரு பண்ணையாருக்கு அடிமையாக பள்ளன் ஒருவன்
இருக்கிறான் அவனுக்கு இரு மணைவி. இருவருக்கும் சக்கலத்தி சண்டைகள்,
தங்கள் பூர்வீக பெருமை, ஆண்டை பள்ளனுக்கு தந்த தண்டனை மற்றும் அறிவுரை கடைசியில் பள்ளிகள் ஒற்றுமையாகி பள்ளனுடன் சேர்ந்து வாழ்கின்றனர்.இதில் பல செய்திகள் ஆற்று வளம்,மழைவளம்,மீன்வளம்,நெல்வளம் இவை யாவும் வருகின்றது.
முக்கூடற் பள்ளு முதல் பாடலே பட்டினபாலை மற்றும் பதிற்றுபத்து
பாடல் போல தோனுவதாக தெரிகிறது என உரையாசிரியர் கூறுகிறார்.
"பூமேவு நீலவெற்பில் பொன்னிறமுண்டன்ப்பூ
மாமேவு முக்கூடல் மால்ழகர்"
கடலுள் கலக்கும் காவிரிபூம்பட்டினத்தை பட்டினப்பாலை "தேறுநீர்ப் புணர்சில தலைமனக்கும்" என்ற வரிகளும் அதேபோல் பதிற்றுபத்துகளில் வந்த "மூன்று கூடிய கூடல்" என வந்த வரிகள் தான்.பள்ளு இலக்கியத்தில் வந்த முக்கூடல் ஊர் வர்ணனை போல தோனுவதாக தெரிகிறது என உரையாசிரியர் கூறுகிறார்.
பள்ளு இலக்கியமும் குறவஞ்சியும்:
-----------------------------------------------------------
பிற்காலத்திலே பாமரமக்கள் பாடி ஆடுவதற்கு ஏற்றனதாய் குறவஞ்சி,பள்ளு,நொண்டி நாடகம் என மூவகை பிரபந்தகளும் தோன்றின பள்ளுவில் பள்ளர்,பள்ளிகள் பண்ணைகாரனும் பிரதான கதாபாத்திரம் குறவஞ்சியில் ஒரு தலைவியும் குறவனும்,குறத்தியும்,குளுவனும் முக்கிய கதாபத்திரங்கள். நொண்டி நாடகத்தில் நொண்டி ஒருவன் தோன்றி நடிப்பான்.
நாடக இயல் பொருந்திய பிற்காலத்தில் தோன்றிய பள்ளு,குறவஞ்சி 'குறம்' என்ற சாதியும் பள்ளு எனும் சாதியும் பாடியாடும் ராகங்களில் உருவக்கியுள்ளனர்.
திருவாரூரில் கோவில் திருவிழா காலகட்டத்தில் பள்ளும் குறவஞ்சியும் பாடி நடிக்கபட்டன இன்று இருக்கிறதா என தெரியவில்லை
சிலப்பதிகார இளங்கோவடிகள் இயற்றிய காப்பியத்தில் வரும்
ஆய்ச்சி குரவை பாடல்கள் முக்கூடற்பள்ளுவில் வருகிறது
முக்கூடல் அழகரை பாடும் பாடல் ஆய்சியர் குரவையில் வந்த
மூன்று பாடல்களுள்
"பெரியவனை மாயவனை பேருலக மெல்லாம்"இதேபோல்
"வேயே திரள்மெந்தோள் வில்லே"என சீவக சிந்தாமனி வருகிறது
இது போக திருத்தனிகை புராணம் இதைபோல் வளையாபதி யாப்பருங்கல விருத்தியுரை போன்ற நூல்களில் .சில பாடல்கள் வருவது கன்கூடு.
பள்ளுவில் வரும் "ஏழ்புணர் இன்னிசை முரல்பவர் கல்லதை" என்ற் பாடல்
என சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள் வருகிறது. மருத நிலத்தை பற்றி
இளங்கோவடிகள் "கருங்கை வினைஞருங் களமரும்
கூடி....ஏரோடு நின்றோர் ஏர்மங்கலமும்" என வரும்
செய்தி சற்று மாரி வருகிறது
பள்ளுவில் திருக்குறள் வரிகளும் வருகின்றது:
-----------------------------------------------------------------
திருக்குறள் தமிழ் மக்களுக்கு தெரிந்ததே 1850களில் தான் ஆனால் 16-ஆம் நூற்றாண்டு பள்ளுவில் அந்த குறள் அப்படியே வருகிறது என்றால் இது
இயற்றபட்டது 16-ஆம் நூற்றாண்டா இல்லை 19-ஆம் நூற்றாண்டா என்பது
கேள்விகுறி.
"தீச்சுட்ட தாறும்-பழித்திடும் நாச்சுட்ட தேறும்.
"தீயினால் சுட்டபுன் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு
என்ற குறளை அப்படியே மாற்றி
எழுதியுள்ளனர்.
இதுபோக குற்றால குறவஞ்சியில் வந்த பாடலை அப்படியே எழுதியுள்ளனர்.
முக்கூடற்பள்ளுவில் “காயக் கண்டது சூரிய காந்தி” என்று தொடங்கும் பாடல் ஒன்று பார்த்தோம். அதே சந்தத்தில், பொருட் தன்மையில், குற்றாலக் குறவஞ்சியிலும் பாடல்கள் உண்டு.
நீங்கக் காண்பது சேர்ந்தவர் பாவம்;
நெருங்கக் காண்பது கன்னலில் செந்நெல்;
தூங்கக் காண்பது மாம்பழக் கொத்து;
சுழலக் காண்பது தீம் தயிர் மத்து;
வீங்கக் காண்பது மங்கையர் கொங்கை;
வெடிக்கக் காண்பது கொல்லையின் முல்லை
ஏங்கக் காண்பது மங்கல பேரிகை;
ஈசர் ஆரிய நாடு எங்கள் நாடே.
குறவஞ்சியில் காண்பது என்ற வார்த்தைக்கு பதில் முக்கூடற் பள்ளில்
கண்டது என வார்த்தை வருகிறது. முக்கூடற்பள்ளு குறவஞ்சியின் காப்பி
தான் என சொல்லாமல் சொல்லுகிறார்.
இதுபோக 16-ஆம் நூற்றாண்டில் வந்த வார்த்தைகளா அல்லது 19-ஆம் நூற்றாண்டு
வார்த்தைகளா என கவணியுங்கள்.
"கொச்சியின் மஞ்சளும்"
"கல்லுடன் கோவை தாலியும்"
"வஞ்சி மருங்கணி பூம்பட்டும்"
16-ஆம் நூற்றாண்டில் கொச்சி என்ற பெயர் வருகிறதா என்பது கேள்விகுறி
அதே போல் கோவன்புத்தூர் என்ற ஊரை கோயம்புத்தூர் என கூறிய ஆங்கிலேயர் அதை கோவை என கூறுவது பிற்கால தமிழே. புதுக்கோட்டையை
புதுகை என்பது பாண்டிசேரியை புதுவை என்பதும் வத்தலகுண்டு
என்பதை வதிலை என்பது எந்த செப்பு பட்டயம் அல்லது கல்வெட்டிலும் கிடையாது பிற்கால அழகு தமிழே கோவை என்பது பிற்கால சுருக்கல் பெயரே உறுதியாக கூறலாம்.
இதில் 'சாத்தூரில் பெரிய நம்பி ஐயங்கார்"
என ஒரு வரி வருகிறது இது 16-ஆம் நூற்றாண்டு அல்ல என கூறலாம்
சில செப்பு பட்டயம் கல்வெட்டு ஆகியவற்றில் வைணவ பிராமனரையும்
"ஸ்ரீ மத் ஐயன் வைணவ ஆச்சாரியன்" என்பதே வருகிறது இப்படி
வைணவ பிராமணர்கள் தங்களை ஐயன் என்பதை மாற்றி சைவ பிராமணருக்கு
வேறாக தங்களை ஐயங்கார் என அழைப்பது 19-ஆம் நூற்றாண்டு.
வைணவ பிராமணர்களும் தங்களை ஐயன் என அழைத்துள்ளனர்.
"இராமப்பையன் அம்மானை" என வருபவை கவணிக்கலாம்.
"ஆடிக் காலாவதி வெள்ளம் நாள் ஆச்சே ஆண்டே"
காலாவதி,வசூல்,ரசீது,சீட்டு,ஜில்லா இவை யாவும் ஆங்கிலேயர் காலத்தில்
ஹிந்தி,உருது மொழிகள் கலந்து இங்கு அதிகாரிகள் மொழியாகும்.
இதில் ரசீது,சீட்டு ஹிந்தி அல்ல அவை ஆங்கிலம். ரசீது என்பது "ரிசிப்ட்"[படிவம்] என்பது சீட்டு என்பது 'ஷீட்" [தாள்] அவை ஆங்கிலம் அது காலபோக்கில்
தமிழ் ஆனது இதுபோலதான் "காலாவதி" இதுவும் ஹிந்தி மொழியில்
முடிந்து போனது என அர்த்தம்.
"
சலுகைலாம் என்ன மருதூர் பள்ளி
சலுகை எல்லாம் பேசாதே"
சலுகை பிற்கால வார்த்தையே 16-ஆம் நூற்றாண்டு வார்த்தை அல்ல
"பள்ளராமுறவின் முறையார்க்கு பண்ணையில்
பாதி கொடுத்தான்"
இந்த உறவின்முறை என்பது நாடார் உறவின்முறை,நாயுடு உறவின்முறை,
வன்னியர் ஜாதி சங்கம், முதலியார் நல சங்கம் எல்லாம் 1850க்கு பின்னாடி
வந்ததப்ப இதையாவது கொஞ்சம் திருத்தி இருக்கலாம். எந்த சாதிக்காவது
உறவின்முறை 16-ஆம் நூற்றாண்டில் இருந்ததா? ஹா ஹா ஹா
முக்கூடற்பள்ளு பள்ளு இலக்கியத்தின் முதல் பள்ளு இதன் பின்னே சரசர
என்று கனகராயன் பள்ளு,திருக்கோஷ்டியூர் பள்ளு,திருவாரூர் பள்ளு, என அனைத்து பள்ளு நாடகங்களும் ஒரே மாதிரி தான் ஒரு பள்ளனுக்கு இரு
பொண்டாட்டிகள் இருக்கும் இரண்டுக்கும் சக்கலத்தி சண்டை. சண்டையினூடே
தங்கள் நாட்டில் வளம்,தங்கள் ஊரின் பாட்டுடை நாயகன், ஊர் பெருந்தெய்வன்என வரும்.
முக்கூடற்பள்ளுவின் ஆசிரியர் தெரியவில்லை என்பர். தெளிவாக தெரிகின்றது
இந்த பள்ளுவின் முதல் சுவடியை வழங்கிய வையாபுரி பிள்ளை தான்
இந்த முக்கூடற்பள்ளுவின் ஆசிரியர் என ஒரளவு சொல்லலாம் அதற்கு முன்
அவரை பற்றிய சிறு அறிமுகம்.
ச. வையாபுரிப் பிள்ளை (எஸ். வையாபுரிப் பிள்ளை, 12 அக்டோபர் 1891 - 17 பெப்ரவரி 1956) இருபதாம் நூற்றாண்டின் முதன்மை தமிழ் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். தமிழ் நூற்பதிப்புத் துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர். தமிழில் சிறந்த புலமை உள்ளவர்; ஆய்வுக் கட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி ஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், கதை,கவிதைகள் புனையும் திறம் படைத்தவர் எனப் பல்முகப் பரிமாணங்களைக் கொண்டவர். சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பேரகராதியின் ஆக்கக் குழுத் தலைவராகச் செயற்பட்டவர்.
வாழ்க்கைச் சுருக்கம்தொகு
வையாபுரிப்பிள்ளை, நெல்லை மாவட்டத்தில் உள்ள சிக்க நரசய்யன் கிராமம் என்ற ஊரில் 1891-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி சரவணப்பெருமாள் - பாப்பம்மாள் தம்பதிக்குப் பிறந்தார். இவர் பாளையங்கோட்டை புனித சவேரியர் பள்ளியிலும், திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியிலும் பிறகு சென்னை கிறிஸ்துவக் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்றார். அந்த ஆண்டு சென்னை மாகாணத்திலேயே தமிழில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று "சேதுபதி தங்க மெடல் (பதக்கம்)" பெற்ற பெருமைக்குரியவர் ஆனார்.
இவர் பல தமிழ் இலக்கியத்துக்கு உரையும் பல புத்தகங்களையும்
பதிப்பித்துள்ளார் அவரின் முயற்ச்சியில் உருவான புத்தகங்களையும்
உ.வே.சாமிநாதய்யருக்குப் பிறகு பின்வரும் தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து, ஆய்வுசெய்து, பதிப்பித்து வெளியிட்டார்.
மனோன்மணியம், 1922
துகில்விடு தூது, 1929
நாமதீப நிகண்டு, 1930
அரும்பொருள் விளக்க நிகண்டு, 1931
களவியற்காரிகை, 1931
கம்பராமாயணம்-யுத்த காண்ட1-3 படலம்), 1932
குருகூர் பள்ளு, 1932
திருக்குருங்குடி அழகிய நம்பி உலா, 1932
தினகர வெண்பா, 1932
நெல்விடு தூது, 1933
தொல்காப்பியம்-(பொருளதிகாரளம, இளம்பூரணம்), 1933
திருமந்திரம் (சேர்ந்து பதிப்பித்தது), 1933
திருமுருகாற்றுப்படை (சேர்ந்து பதிப்பித்தது, புதிய உரையுடன்), 1933
கம்பராமாயணம்-பால காண்டம் (1-7படலம்), 1933
பூகோள விலாசம், 1933
திருப்பணி மாலைகள் (தென்திருப்பேரை, திருக்கோளூர்),1933
மூப்பொந்தொட்டி உலா, 1934
பொதிகை நிகண்டு, 1934
இராஜராஜதேவர் உலா, 1934
தொல்காப்பியம்-பொருளதிகாரம் (நச்சினார்க்கினியம்),1934
இராமலிங்கேசர் மீது பணவிடு தூது, 1934
மதுரைக் கோவை, 1934
தெய்வச்சிலையார்விறலிவிடு தூது, 1936
புறத்திரட்டு, 1938
கயாதரம், 1939
சங்க இலக்கிய பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்), 1940
சீவக சிந்தாமணி, 1941
சாத்தூர் நொண்டி நாடகம், 1941
நவநீதப் பாட்டியல் - உரையுடன், 1943
திருமுருகாற்றுப்படை-பழைய உரை, 1943
நான்மணிக்கடிகை, 1944
இன்னா நாற்பது, 1944
திரிகடுகமும் சிறுபஞ்ச மூலமும், 1944
இனியவை நாற்பது, 1949
இராமப்பய்யன் அம்மானை, 1950
நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில்முதலாயிரம், 1955
திருவாய்மொழி
கொண்டல் விடு தூது
இவையவும் இவர் பதிப்பித்தது. இவரது இத்தனை நூல்களில் இவர் அறிந்த
பலவற்றை வைத்து இவர் படைத்த ஒன்று தான் "முக்கூடற்பள்ளு".
முக்கூடற் பள்ளு போன்ற பள்ளு உருவாக காரணம்:
இந்த முக்கூடற்பள்ளுவின் மூலச்சுவடி இதை பல தடவை திருத்தி எழுதியவர்கள்
மற்றும் சுவடிகளை சேர்த்தாக சொல்பவர்கள் அனைவரும் வையாபுரிப்பிள்ளை
வீரபாகு பிள்ளை,ரா.பி.சேதுப்பிள்ளை இவர்கள் யாவும் கோவில்பட்டி,திருநெல்வேலி,பாளையங்கோட்டை பகுதியல் வாழ்ந்த பிள்ளைமார்
சமூகத்தவர்கள் என தெரிகிறது. எனவே இவர்களின் மூதாதயர்களான
திருமலையப்ப பிள்ளை,வடமலையப்ப பிள்ளை,ஆரை அழகப்ப முதலியார் இவர்களை பாட்டுடை தலைவர்களாக பாடபட்டது தான் முக்கூடற் பள்ளு. இப்படி இவர்கள் உழவர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கினார்.
அப்போது சங்க இலக்கிய மருத நிலத்தை மூலமாக எடுத்துள்ளனர்.
மருத நிலத்தின் தலைவர்கள் மகிழ்நன்,ஊரான் என அறியப்படுகின்றனர்.
மகிழ்நன் என்னும் பட்டமோ அல்லது பெயரோ வேளாளருக்கோ அல்லது பள்ளர்களுக்கோ அல்லது எந்த சமூகத்துக்கும் கிடையாது.
ஆனால் ஊரான் என்னும் பெயர் பல சமூகங்களுக்கு இருக்கிறது ஆனால்
பள்ளர்களுக்கு கிடையாது.
எனவே ஊரான்,மகிழ்நன் குலத்தில் தோன்றி பள்ளர்கள் என்றால் பொருந்தாது
என்பதால் மருதம் என்ற தினையில் மள்ளர் எனும் இனப்பெயர் வந்துள்ளதால்
'ம'ள்ளர் என்ற பெயரில் வந்த ஒரு சொல்லை மாற்றி 'ப'ள்ளர் என மருதத்தினை
யோடு ஒப்பிட்டு எழுதியுள்ளனர் இந்த வேளான் பிள்ளைகள். இப்படி
பள்ளர்களை மள்ளர்கள் என்று கூறுவதால் இந்த பிள்ளை சமூகத்துக்கு என்ன
லாபம் என்றால் மருதத்தினையின் கடவுலான இந்திரனாக தங்களை கருதி
இதே வேளாளர்களை எழுதியுள்ளனர். இதில் வரும் பள்ளகுடும்பனும் தங்கள்
பன்னையாளரை சாமி,தேவரீர்,ஆண்டை,ஆண்டவா,பெருமாளே என அழைப்பது
தெரிகின்றது.
இதில் பாட்டுடை தலைவரான வடமலையப்பபிள்ளையை வடமலேந்திரன்,
அழகப்ப முதலியாரை அழகப்பநேந்திரன் என இந்திரனாக பாடப்பட்டவர்கள்
அனைவரும் வேளான் பிரபுக்களே. இது வேளான் சாதியை ஆதிக்க சாதியாகவும்
அதன் ஏவலர் ஜாதியை மள்ளர் இனத்தில் வந்த பள்ளர் என எழுதியுள்ளனர்.
இப்படி ஆண்டை என அழைக்கபட்ட வேளான் முதலாளிகளின் பண்ணை
அடிமைகளாக இருந்த முக்கூடற் பள்ளின் ஆய்வில் கடைநிலை மக்கள் இவர்கள் யார் என்ற கேள்விக்கு விடை காணும் முன் பள்ளு இலக்கியம் காட்டும் உற்பத்தி உறவுமுறை பற்றிக் காணலாம்.முக்கூடற்பள்ளு இரண்டு வர்க்கங்களை முதன்மைப் படுத்துகிறது. உருவமற்ற நிலப்பிரபுவான இறைவனின் பிரதிநிதியாய் இருந்து நிலத்தைக் கண்காணிக்கும் பண்ணை விசாரிப்பான்; விவசாய உற்பத்தியில் நேரடியாக ஈடுபடும் பள்ளர்கள் என்ற இரு வர்க்கத்தினர். நிலம் முக்கூடலில் கோயில் கொண்டுள்ள அழகர் ஆகிய திருமாலுக்குச் சொந்தமானது
முக்கூடல் அழகர் பண்ணை" (பா:36) "கத்தர் திருமுக்கூடல் கண்ணர் பண்ணை"(பா.91) "முக்கூடல்பரமனார் அழகர் தம் பண்ணை"(பா.113) "அடிக்குள் அடங்கும் படிக்கு முதல்வர் அழகர் முக்கூடல் வயலுள்ளே." (பா.129) ஆகிய வரிகள் இதை மெய்ப்பிக்கும் இடைக்காலங்ளில் தேவதானம் முதலான பெயர்களில் மன்னர்களால் கோயில்களுக்கு வழங்கப்பட்ட நிலவகையாக இதுவும் இருக்கலாம். இந்நிலங்களைப் பள்ளருக்குப் பிரித்துக் கொடுத்து, உற்பத்தியை மேற்பார்வையிடுபவனே பண்ணை விசாரிப்பான். இவன் கோயிலின் பிரதிநிதியாகவோ ,விசயநகரப் பேரரசுக் காலத்தில் மன்னனால் நியமிக்கப்பட்ட பாருபட்டயக் காரனாகவோ இருக்கலாம். பண்ணைகளில் நேரடியான உடலுழைப்பில் ஈடுபடுபவர்கள் பள்ளர்கள். இவர்கள் கோயில் என்னும் உருவமற்ற ஆனால் நிறுவன வடிவமான நிலப்பிரபுவுக்குச் சொந்தமான பண்ணையோடு பிணைக்கப்பட்ட பரம்பரைக் கொத்தடிமைகள். 74 "பண்ணைஏவலறும் பள்ளியர்"(பா.5) "முத்தமிழ் நாட்டழகர் கொத்தடியான்"(பா.13) என்று இவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதே இதற்குச் சான்று. இந்தக் கொத்தடிமைப் பள்ளர்களுக்குள்ளே ஒரு தலைமைப் பள்ளன். அவன் தான் முக்கூடல் பள்ளுவில் வரும் வடிவழகக் குடும்பன. இவன் பண்ணை விசாரிப்பானால தலைவனாக நியமிக்கப்படுவதாகத் தெரிகிறது.....பள்ளர்களுக்கெல்லாம் தலைமையைப் பள்ளனாக இருக்கும் வடி வழகக்குடும்பன், கோயில் நிலத்தை எல்லாம் சேரிப் பள்ளர் களுக்குப் பிரித்துக் கொடுத்துச் சாகுபடி செய்கிறான், அறுவடையில் அவரவர் செலுத்த வேண்டிய பங்கை வசூலித்துப் பண்ணைக்காரனிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பும் இவனதே. முக்கூடல் பள்ளுவில் தினச்சக்கரம், பெரிய நம்பி திருமாளிகை, ஏழு திருப்பதிக் கட்டளைகள், வடமேலந்திரன் மடம், ஆகியவற்றுக்குக் குறிப்பிட்ட நெல் அளக்கப்பட்ட செய்தியும், ஆடித்திருநாள் விழாவிற்கு 6000 கோட்டை நெல்லும், பங்குனித் திருநாள் விழாவிற்கு6000 கோட்டை நெல்லும்,மண்டகப்படி சார்த்தும் செலவிற்கு 1000 கோட்டை நெல்லும், உள்ளூர் அந்தணர்க்கு 4000 கோட்டை நெல்லும்,நாள் வழிபாட்டிற்கு 8000 கோட்டை நெல்லும் வடிவழகக் குடும்பனால் அளந்து குடுக்கப்பட்ட செய்தி வரு~ கிறது. விளைச்சலில் பள்ளர் பெறும் பங்கு எவ்வளவு என்பதற்கான சான்று இல்லை, எனினும் அவர்களுக்கு மிகக் குறைந்த அளவே கொடுக்கப்பட்டு மீதியனைத்தும் பறிக்கப்~ பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. 75 "முப்பழமும் சோறும் உண்ணவே- நடத்திக்கொண்டீர்" என இளையபள்ளி பண்ணை விசாரிப்பானை எதிர்த்துப் பேசுவது இந்த யூகத்துக்கு இடமளிக்கிறது. பள்ளர்கள் தங்களை அடிமை யென்றும், பண்ணை விசாரிப்பானை ஆண்டை என்றும் அழைக்கின்றனர். இச்சொல்லாட்சி ஆண்டான்- அடிமை யென்னும் நிலப்பிரபுத்துவ உறவுமுறையின் கொடுமையை வெளிப்படுத்துகிறது பக்கமே தூரப் போயும் தக்க சோறென வெள்ளாண்மை பள்ளா பள்ளா என்பார் மெய்கொள்ளாதவர்" என்ற குடும்பன் கூற்று பள்ளர்கள் தீண்டத்தகாதவர் ளாக நடத்தப்பட்ட சமூக நடைமுறையைப் புலப்படுத்தும். குடும்பனைச் சவுக்கினில் வைத்திடீர் ஆண்டே" என மூத்தபள்ளி பண்ணை விசாரிப்பானிடம் முறையிடுவது அடிமைகளைப் பண்ணைவிசாரிப்பான் சவுக்கால் அடிக்கும் வழமுறை நிலவியதை மெய்ப்பிக்கும். அடிமையின் காலில் மரக்கட்டையை மாட்டி அப்பால் இப்பால் நகர முடியாதபடி விலங்கிடுவது மற்றொரு வகைத் தண்டனை. கண்சிவந்து பண்ணைக்காரணங்கே வந்த பள்ளன்தன் காலில் மரக்குட்டை சேர்த்தானே " (93) முக்கூடல் பள்ளுவில் வடிவழகக் குடும்பன், பண்ணை விசாரிப்பானால் இவ்வாறு தண்டிக்கப்படுகிறான். இவ்வுறவு முறையின் கோரம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆவணங்களில் இன்னும் தெளிவாக வெளிப்படுகிறது.அதற்குமுன் வரலாற்றில் இதுவரை இலக்கியத்திலோ கல் வெட்டுக்களிலோ செப்பேடுகளிலோ சட்டப்படாத இப் 76 பள்ளர் யார் என்ற கேள்விக்கு விடை காணலாம். இது குறித்து வரலாற்று அறிஞர்களிடையே பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
அவை குறித்துக் கேசவன் விரிவாக ஆய்கிறார் நிலஉடைமையாளர்களான வேளாளர்கள் தம் பண்ணைகளில் பள்ளர்களையே கூலிக்கு அமர்த்தியிருந்தனர் என்றும் இவர்களைப் பாண்டிய மண்டலத்திற்கு வேளாளர்களே கொண்டு வந்து குடியமர்த்தினர் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இதைக் கூறுபவர் எட்கார்தர்ஸ்டன் வேளாளர்களுக்குள்ளே இழிநிலை அடைந்த ஒரு பிரிவினர் பள்ளர் என்னும் நிலைக்குத் தாழ்ந்தனர் என்பது மற்றொரு கருத்து. இக்கருத்தைத் தங்கராஜ் பின்வருமாறு விளக்குகிறார். "உத்தேசமாக 14,15 ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே பண்ணை விவசாய முறையும் பண்ணையாள் (வேலைக்காரர்) அமர்த்திச் செயல்பட்ட விவசாய முறையும் வளர்ந்திருக்க வேண்டும். தமிழ் நாட்டில் பெருமளவு நிலவுடைமையும் பண்ணைமுதலாளிகள் உருவானதும் இக்காலத்திற்குப் பின்னரே எனக் கொள்ளலாம். நிலஅபகரிப்பு, நிலம் வாங்கல் விற்றல் குத்தகை வாரம்-கடன் போன்ற நிலம் சம்பந்தப்பட்ட வழக்கங்கள் இக்காலத்திற்குப் பின்னரே உருவாகியிருக்க வேண்டும். இதனால் அதிக அளவு நிலம் சேர்த்த வேளாளர்கள் தங்களுக்குத் துணை வேலையும் பண்ணை வேலையும் செய்ய அவர்களுக்குள்ளேயே நிலம் சேர்க்க முடியாது போனவர், நிலத்தைப் பறிகொடுத்தவர், நிலத்தை அடமானம் வைத்துவிட்டுத் திருப்ப முடியாது போனவர், நிலமே இல்லாது இருந்தவர், ஏழையாயிருந்தவர் ஆகியவர்~ களைக் கூலிக்கு அமர்த்தியிருந்தனர். நிலவுடைமை வாழ்க்கையில் அபலையாகிவிட்ட வேளாளர், நிலவுடைமையில் வெற்றி பெற்ற வேளாளர்களிடமே குத்தகை-வாரம் முதலிய 77 முறையில் நிலம்பெற்று பயிர்த்தொழில் செய்திருக்கின்றனர். இவ்வகை வேளாளரே காலப் போக்கில் தனிக்குலத்தினராக அதாவது ஜாதியினராக உருவாகியுள்ளனர் இவ்விரு கருத்தையும் கேசவன் மறுக்கிறார்.
பள்ளு இலக்கியங்கள் பல
செண்பகராமன் பள்ளு, தண்டிகைக் கனகராயன் பள்ளு
முக்கூடற்பள்ளு,திருவாரூர் பள்ளு,கன்னுடை நாயகி பள்ளு
அரியநாதர் பள்ளு,இராச இராசன் பள்ளு,திருச்சிறாபள்ளி பள்ளு,
திருவாரூர் பள்ளு,குருகூர் பள்ளூ,திருக்கோடியூர் பள்ளு
மோகன பள்ளு,திருநீலகண்ட பள்ளு
இன்னும் கனக்கு வழக்கு இல்லாமல் நிறைய பள்ளு இலக்கியங்கள் உள்ளன
அவை அனைத்துக்கும் மூலம் முக்கூடற்பள்ளு தான் இதில் இருந்து தோன்றியது
தான் எல்லா பள்ளு இலக்கியங்களும் எல்ல பள்ளுவிலும் இரண்டு பள்ளி
வருவர் அவர்களுக்கு சக்கலத்தி சண்டை ரெண்டு பள்ளி சக்கலத்திகளும்
தங்கள் ஊர் பெருமை பாட்டுடை தலைவன் பெருமை ஊர் கடவுள் பெருமை
சக்கலத்திகளுக்கு இருக்கும் காமசண்டைகள் இடையில் பள்ளன் தன்
ஆண்டை மீது பயம் கடைசியில் ஒற்றுமையாகும் முடிவு என
அனைத்து பள்ளு இலக்கியமும் ஒன்றுதான்.
இதில் இந்திரன் "ஆண்டை" இனத்தினர்
வடமலையப்பபிள்ளை -வடமலேந்திரன்
அழகப்ப முதலியார் -அழகப்பநேந்திரன்
அரியநாத முதலியார் -அரியநேந்திரன்
கனகராயபிள்ளை -கனகராயேந்திரன்
சென்பகபிள்ளை - செம்பகநேந்திரன்
பிச்ச பிள்ளை - பிச்சையிந்திரன்
என இவர்கள் ஆண்டைகளான பிள்ளை,முதலிகள் தான் இந்திரனார்.
பள்ளர் பாண்டியர் என கோறுகிறார்கள் இந்த பள்ளு இலக்கியங்கள் அனைத்தையும் சமர்பித்தாலே போதும் ஆண்டையிடம் அடி வாங்கியது
கொத்தடிமை வாழ்வையே "பாண்டியர் வரலாறு" என எழுதலாம்.
இதில் முக்கூடற்பள்ளுவில் வந்த வடமலையப்பபிள்ளை தான் கடைசி
தென்காசி பாண்டியரையும் ராணியையும் பாளையங்கோட்டை சிறையில் வைத்து
கொன்றான்.
வடமலையப்பபிள்ளை திருமலை நாயக்கனின் மந்திரி இவரை இந்திரனாக
பாடிய காவியம் தான் "முக்கூடற்பள்ளு" ஆக பள்ளர்களுக்கும் பாண்டியருக்கும்
எவ்வளவு தொடர்பு பார்த்தீர்களா!! ஹா!ஹா!ஹா
மள்ளர் ஒரு ஆய்வு:
சங்க இலக்கியங்களில் குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை என
வரும் தினைகளில் மருதம் என்ற தினை பற்றி
தொல்காப்பியத்தில் "வேந்தன் மேய தீம்புனல் உலகு". இதில் வந்த வேந்தன்
இந்திரன் என்பதே ஒரு தவறு வேந்தன் என்பது சூரியனை குறிக்கிறது அதை
போல் அரசி என்பது சந்திரனை குறிக்கிறது. ஆனால் வேந்தனை சூரியனுக்கு
பதில் இந்திரன் என பல உரையாசிரியர்கள் எழுதிவிட்டனர்.
மருத தினைக்கு தலைவன் மகிழ்நன்,ஊரான் என்பது வருகிறது .
இதில் மக்களாக உழவர்,உழத்தியர் வருகின்றனர்.
மள்ளர் என்பதற்கு வீரன் என்றே பல அர்த்தங்கள் வருகிறது. மள்ளர் என்பது
பிற்காலத்தில் மல்லர் என வருவது ஒருவகையில் ஏற்புடையதே ஆனால்
மல்லன் என்ற வார்த்தையும் சங்க இலக்கியங்களில் வருகிறது.
மள்ளர் மருதத்தினை மட்டுமல்ல குறிஞ்சி,முல்லை,பாலை தினைகளிலும்
வருகிறார்கள்.
மள்ளன் என்பது எப்போதுமே போர்க்களத்தில் வரும் வீரனாக பாடல்கள்
வருகின்றனர். ஒரு இடத்திலும் மள்ளன் ஏர்பூட்டி உழுததாக ஆதாரங்களில்லை
முக்கூடற்பள்ளு இலக்கியங்களில் வரும் பள்ளர்களை மள்ளர் இனத்தவர்
என எழுதியுள்ளனர்.
இரண்டு பாடல்களில் வருகிறது,
பள்ளியர் குடித்தரம் கூறல்
"மள்ளர் குலத்தில் வரினும்
இரு பள்ளியர்க்கோர் பள்ளக்கனவனாய்"
அறுவடை நாள்
"மள்ளர் பலரும் கூடி வயலிர் நாடி"
என இரண்டு இடத்தில் வருகிறது
நாங்கள் பள்ளர் சமூகத்துக்கு ஒரு அறைகூவல் விடுக்கிறோம். சங்க
இலக்கியங்களில் எந்த ஒரு இடத்திலையாவது மள்ளன் ஏர்சுமந்து
உழுவது போல் ஆதாரங்கள் உண்டா
நிருபிக்கட்டும் பார்ப்போம். முக்கூடற்பள்ளுவில் தான் பள்ளர்கள் மள்ளர்
குலம் என கூறுகிறது அதுவே 'ம' 'ப' ஆன கதை தான்.
சங்க இலக்கிய மள்ளர்கள் எந்த இடத்திலும் உழவர்களாக சொல்லபடவில்லை
மாறாக போர்க்களத்தில் வரும் வீரர்களாக பாடியுள்ளனர்.
நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை,
மாறு ஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவையாய்த்
துளங்கு இமில் நல் ஏற்று இனம் பல - களம் புகும்
மள்ளர் வனப்பு ஒத்தன. (கலித்தொகை:106)
பொருள்:
நீர்,நிலம் இவையில் கலக்கும் தன்மை பல போர்க்களம் புகுந்த
மள்ளர் போன்ற தோன்றியது
மகளிர் மலைத்த லல்லது மள்ளர்
மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப (புற;106)
பொருள்:
மகளிர் மலைத்தல் அல்லது - பெண்டிர் முயக்கத்தால் மாறுபடுத்த
லல்லது; மள்ளர் மலைத்தல் போகிய - வீரர் போரால் மாறுபடுத்தலொழிந்
டயினியு மின்றயின் றனனே வயின்வயின்
உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை
வியந்தன்று மிழிந்தன்று மிலனே யவரை(புற:77)
பொருள்:
உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை - வெகுண்டு மேல் வந்த புதிய வீரரை;
நெடுஞ்செழியன் தகவிலாரை அவமதிப்பதும் செய்தல் மறவர்க்கும் இயல்பு; அவ்வியல்பும் இவன்பால் காணப்படவில்லை; மேல்வரும் வீரரைக் கொன்று வீழ்த்துமிடத்து எய்தும் வெற்றியால் மகிழ்தலும் இயல்பு
பொருநனு மிளையன் கொண்டியும் பெரிதென
எள்ளி வந்த வம்ப மள்ளர் புற:44
பொருள்:
என எள்ளி வந்த வம்ப மள்ளர் - என இகழ்ந்து வந்த நிலையில்லாத வீரர்
வம்ப - மள்ளர் - புதியராய் வரும் வீரர்; முன்பு வந்தோர் தோல்வியுற் றொழிதலின் புதியர் புதியராய் வந்து நீங்குதலின், "நிலையில்லாத வீரர்‘ என்றுரைத்தார்
வெம்போர்ச் செழியனும் வந்தன னெதிர்ந்த
வம்ப மள்ளரோ பலரே புற:55
பொருள்:
வெம் போர்ச் செழியனும் வந்தனன் - வெய்ய போரையுடைய நெடுஞ்செழியனும் வந்தான்; எதிர்ந்த வம்ப மள்ளர் பலர் - அவனோடு பகைத்த நிலையில்லாத மறவர் தாம் பலர்; பகல் தவச் சிறிது - பகற்பொழுது மிகச் சிறிதாதலால்;
செறியத் தொடுத்த கண்ணிக்
கவிகை மள்ளன் கைப்பட்டோரே. (புற:81)
பொருள்:
விகை மள்ளன் கைப்பட்டோர் - இடக்கவிந்த கையினையுமுடைய வீரனது கையின் கட் பட்டோராகிய; அளியர் யார்கொல் - இரங்கத்தக்கார் தாம் யார் கொல்
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்
குமணர் வெரூஉந் துறையன் னன்னே. (புற:84)
பொருள்:
தோள் வலி பேசி இன்பமுற்றுப் போந்த வீரர்க்கு உப்பு விற்பார் அஞ்சத்தக்க ஏற்றிழிவுடைய துறையை யொப்பன்.
என அகநாநூறு,புறநானூறு என அனைத்திலும் மள்ளர் என்
வீரரை தான் குறிக்கிறது. ஒரு இடத்தில் கூட மள்ளன் என்பதற்கு
உழவன் என ஒரு இடத்தில் கூட ஆதாரமில்லை.
மள்ளர் - மறவர்
-----------------------------
சங்க இலக்கியத்திற்கு உரை எழுதிய நச்சினார்கினியர்,உ.வே.சுவாமிநாதன்,
புலியூர் கேசிகன் என பலரும் மள்ளர் என வந்துள்ள வார்த்தைக்கு
மறவர் என எழுதியுள்ளனர். இது 70% மேல் அதிகம். இதன் பல தலைப்புகளில்
எருமை மறம். அஞ்சா மறம் என்ற தலைப்பிலும் மள்ளர் வருவது அதிகம்.
மள்ளர் என்பதற்கு குறிஞ்சியை சார்ந்தவன் என ஒரு பொருள் உண்டு.
ஆனால்நாங்கள் மள்ளர் தான் மறவர் என கோரப்போவதில்லை. மறவர் என்ற
பெயரே போதுமானது.
தமிழ் வீரர்களை பொதுவாக மறவர் என்றே அழைப்பர்.மறப்போர் செழியன்,
மறப்போர் செம்பியன்,மறப்போர் சேரன் என தான் அழைப்பர். அதை
விடுத்து மள்ளபாண்டியன்,மள்ளசோழன்,மள்ளசேரன் என எங்கேயும்
அழைக்க படவில்லை.
இந்த மள்ளர் மட்டுமல்ல மள்ளர்,மழவர்,கோசர்,மௌரியர்,துளுவர் என
அனைவரும் தமிழ் அரசர்கள் வேற்று நாட்டு அரசர்களிடமிருந்து
தருவித்து கொண்ட வீரர்கள் என தெரிகின்றது. இது போக யவனர்,சீனர்
போன்ற வீரர்களும் தமிழ் படைகளில் பணியாற்றியுள்ளனர்.
இந்த மள்ளரை வம்ப மள்ளர் அல்லது அழைக்கபடுகின்றனர்.
அவர்கள் புதிதாக வந்தவர்கள்/அயலவர்கள் என கூறுகிறது
சங்க இலக்கியம்
வம்பு வேந்தர், வம்பு மள்ளர், வம்பு வடுகர், வம்பு மோரியர், வம்பு பல்லவர்
------------------------------------------------------------------------------------------------------------------------------
‘வம்பு’ என்ற சொல் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளது. இச்சொல் பொதுவாக புதியது, நிலையற்றது, திடீரெனத் தோன்றியது போன்ற பல பொருள்களைக் குறிக்கிறது.
வம்பு - பல பொருள்கள்
புதியவர்/அயலவர்:
‘வம்ப மாக்கள்’ என்பது புதியவர்கள் அல்லது அந்நியர்களைக் குறிக்கும்.
”வம்ப மாக்கள் வரு_திறம் நோக்கி
செம் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர்” - நற்றிணை 298/1,2
பாலை நிலப் பாதையில் புதிதாக வரும் பயணிகளைக் கண்டு, சினம் கொண்ட வீரர் ஒருவர் கூர்மையான அம்பைத் தொடுத்த செய்தி இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், ‘வம்ப மாக்கள்’ என்பது அந்தப் பகுதிக்கு அந்நியமான, புதிய மக்களைக் குறிக்கிறது.
பருவமல்லாத மழை:
‘வம்ப மாரி’ என்பது காலம் அல்லாத நேரத்தில் திடீரெனப் பெய்யும் மழை.
”வம்ப மாரியை கார் என மதித்தே” - குறுந்தொகை 66
பிரிந்து சென்ற தலைவன் திரும்புவதாகச் சொன்ன கார் காலம் வருவதற்கு முன்பே, திடீரென ஒரு மழை பெய்தது. அதை கார் கால மழை என்று நினைத்துக் கொன்றை மரங்கள் பூத்தன. கொன்றையின் இந்த அறியாமையை இப்பாடல் சுட்டுகிறது.
‘வம்ப நாரை’ என்பது வலசை வரும் பறவைகளைக் குறிக்கிறது.
”வம்ப நாரை சேக்கும்” - குறுந்தொகை 236
நிலைகொள்ளாமல், ஒரு நிலத்திலிருந்து மற்றொரு நிலத்திற்கு இடம்பெயர்ந்து வரும் நாரையைக் குறிக்க, ‘வம்ப நாரை’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
புதிய கற்குவியல்:
போரில் இறந்த வீரர்களுக்குப் புதிதாக அமைக்கப்பட்ட கற்குவியலைக் குறிக்க, ‘வம்பப் பதுக்கை’ என்ற சொல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.
”அம்பு விட வீழ்ந்தோர் வம்ப பதுக்கை” - புறம் 3/21
இங்கு ‘வம்பு’ என்பது புதிதாக அமைக்கப்பட்ட என்பதைக் குறிக்கிறது.
வம்ப மள்ளர் நிலையான பண்பு இல்லாதோர்:
பாண்டியன் நெடுஞ்செழியனை எதிர்த்துப் போரிட்ட மள்ளர்கள், நிலையான வீரத்தன்மை இல்லாதவர்கள் என்பதால், ‘வம்ப மள்ளர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.
”எள்ளி வந்த வம்ப மள்ளர்
புல்லென் கண்ணர் புறத்தில் பெயர” - புறம் 78: 4-9
வீரத்திறன் இல்லாத அந்தப் புதிய மள்ளர்கள், பாண்டியனின் வீரத்தைக் கண்டு போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடிய செய்தி இதில் கூறப்படுகிறது.
வேற்று நாட்டினர்:
சங்க காலத்தில் வடக்கிலிருந்து வந்த மோரியர் மற்றும் வடுகர்கள், தமிழ் நிலத்தின் பூர்வகுடிகள் அல்லாதவர்கள் என்பதால், ‘வம்ப மோரியர்’ மற்றும் ‘வம்ப வடுகர்’ என்று அழைக்கப்பட்டுள்ளனர்.
வம்ப வடுகர்:
”வம்ப வடுகர் பைம் தலை சவட்டி” - அகம் 375/14
சோழன் இளம்பெருஞ்சென்னி, வடக்கிலிருந்து வந்து தமிழ் நிலத்தைக் கைப்பற்ற முயன்ற வடுகர்களைப் போரிட்டுத் துரத்திய செய்தி அகநானூற்றில் உள்ளது. அவர்கள் நிலையற்றவர்கள், புதியவர்கள் என்பதால் ‘வம்ப வடுகர்’ எனப்பட்டனர்.
வம்ப மோரியர்:
”மாகெழு தானை வம்ப மோரியர்” - அகம் 251/12
வடக்கில் இருந்து தமிழகத்தைக் கைப்பற்ற வந்த மோரியர்கள் ‘வம்ப மோரியர்’ என்று அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளனர். குறுநில மன்னன் பழையன் மாறனை எதிர்த்து, மோரியர் படை மோகூரை முற்றுகையிட்ட செய்தி இப்பாடலில் இடம்பெற்றுள்ளது.
சங்க காலப் போர்கள் பற்றிய குறிப்புகள்
பழையன் மாறன் vs மோரியர்:
அகநானூற்றின் 251ஆம் பாடல், பழையன் மற்றும் மோரியர் இடையிலான போரைக் கூறுகிறது. இப்பாடல் மோரியர் தமிழகத்துக்கு வந்ததையும், அவர்கள் தங்கள் தேர்கள் செல்ல மலைகளில் பாதை அமைத்ததையும் விவரிக்கிறது. இந்தப் பாடல், கணவனைப் பிரிந்த மனைவிக்குத் தோழி ஆறுதல் சொல்வதாக அமைந்துள்ளது. தலைவன் எவ்வளவு பெரிய செல்வத்தைப் பெற்றாலும், நிலையற்றவன் அல்ல, விரைவில் திரும்பி வருவான் என்று அவள் கூறுகிறாள்.
கோசர் பற்றிய குழப்பங்கள்:
கோசர், பழையன் அல்லது மோரியர் ஆகிய இருவரில் யாருக்கு உதவியாக இருந்தார்கள் என்பது குறித்து வரலாற்று ஆசிரியர்களிடையே முரண்பட்ட கருத்துகள் உள்ளன. சில உரையாசிரியர்கள் கோசர் பழையனுக்கு உதவியதாகக் கூறுகின்றனர், வேறு சிலர் மோரியர்களுக்கு உதவியதாகக் குறிப்பிடுகின்றனர்.
’வம்பக் கோசர்’ இல்லை:
‘வம்ப வடுகர்’, ‘வம்ப மோரியர்’ என்று வேற்றுக் குடியினர் குறிப்பிடப்பட்டாலும், ‘வம்பக் கோசர்’ என்று எங்கும் சுட்டிக்காட்டப்படாதது ஆய்வுக்குரிய ஒரு விஷயம். கோசர்கள் தமிழ் நிலத்துக்கு வந்தவர்கள் என்றாலும், அவர்கள் ஒருவேளை இங்கு அதிக காலம் தங்கி, நிலையானவர்களாக மாறியிருக்கலாம்.
தற்காலத் தமிழில் ‘வம்பு’
இன்றைய வழக்கில் ‘வம்பு’ என்ற சொல் சண்டை, தொல்லை, வீண் வம்பு போன்ற எதிர்மறையான பொருளில் பயன்படுத்தப்படுகிறது. ’வம்பு தும்பிற்குப் போகாதே’ - தேவையற்ற சண்டைக்குப் போகாதே. ’வம்படியா பேசறான்’ - வேண்டுமென்றே சண்டை போடும் நோக்கில் பேசுகிறான். ’வம்ப வெலகொடுத்து வாங்காத’ - தொல்லையை நீயே தேடிக்கொள்ளாதே.
வம்ப வேந்தர்
சங்க இலக்கியப் பாடல்களில், “வேளிர்” என்போர் தொன்மையான குடிவழி வந்த மன்னர்களாகவும், “வம்ப வேந்தர்” என்போர் புதிதாகப் போரின் மூலம் அதிகாரம் பெற்ற மன்னர்களாகவும் கருதப்படுகிறார்கள். இந்த இரு தரப்பினரும் நேரடியாக ஒரே பாடலில் குறிப்பிடப்படுவதில்லை. ஆனால், இவர்களுக்கு இடையிலான முரண்பாடுகளை விவரிக்கும் பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன.
குறிப்பாக, புறநானூற்றுப் பாடல்களில் இடம்பெறும் “மகட்பாற் காஞ்சி” என்ற துறை, இந்தப் பகைமையை விரிவாக விளக்குகிறது.
புறநானூறு: பாடல் 346
உருகெழு மரபின் அயிரை பரைஇ
வம்ப வேந்தர் அம்புடைத் திண்ணைக்
கழைமடி யிரும்புனிற் கலிப்ப வல்லோன்
குழைதார் வேந்தன் கொற்றம் பெறீஇய
எழுதணி பலவுயிர் உண்ணுநர்க்கு
வீழிலை நறும்புன் மயிர்க்கயல் போல்
அழுதகண் ணோடு அரும்பயிர் அவிப்ப
நின்றவர் நின்றனர், குன்றவர் நின்றனர்;
அவற்றுள், ஒன்று அவர்க்கு அரிதாய் நின்றது.
அவையனைத்தும் ஒன்றா யின்று.
இந்தக் கோணத்தில் புறநானூறு பாடல் 346 மிகவும் பொருத்தமானது. இப்பாடலில், ஒரு பெண்ணைக் கேட்டுப் புதிதாக வந்த வம்ப வேந்தர் (புதிய மன்னர்கள்) பலர், அப்பெண்ணின் தந்தையிடம் வந்து நிற்கின்றனர். ஆனால், அப்பெண்ணின் உடன் பிறந்தோர், அந்தப் புதிய மன்னர்களின் செல்வத்தையும் படையையும் மதிக்காமல், “குடிமை, வீரம் போன்றவற்றில் ஒவ்வாதவர்களுக்கு எங்கள் மகளைத் தருவதில்லை” என்று கூறி, அவர்களை மறுத்து போரிடத் தயாராகின்றனர்.
இந்தச் சூழலில், “வம்ப வேந்தர்” என்போர், தொன்றுதொட்டு ஆட்சி செய்துவந்த வேளிர் அல்லது முதுகுடி மன்னர்களைப் போல் பாரம்பரியப் பெருமை இல்லாதவர்கள் என்று சித்தரிக்கப்படுகிறார்கள். இவ்வாறு, வேளிரின் தொன்மையும் பெருமையும், வம்ப வேந்தரின் புது வருகையும் சங்க இலக்கியத்தில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட அம்சங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இலக்கியங்களில் குறிப்பிடப்படும் வம்ப வேந்தன், வம்ப வேந்தர், வம்ப மன்னர் போன்ற சொற்கள், புதிய அல்லது அந்நிய மன்னர்களைக் குறிக்கின்றன. இந்தப் பதங்கள், புறநானூறு பாடல்களான 287, 345, மற்றும் 78-இல் வெவ்வேறு சூழல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
புறநானூறு: பாடல் 78
இந்தப் பாடலில், சோழ மன்னன் நலங்கிள்ளியைப் பற்றிப் பாடும் கோவூர் கிழார், நலங்கிள்ளி மீது போர் தொடுக்காமல் விலகிக் கொள்ளும்படி மற்ற மன்னர்களுக்கு அறிவுறுத்துகிறார். இங்குப் பயன்படுத்தப்படும் “வம்ப வேந்தர்” என்ற சொல், சோழ மன்னனை எதிர்த்துப் போரிட வரும் புதிய மன்னர்கள் அல்லது அந்நிய மன்னர்களைக் குறிக்கிறது. அதாவது, சோழ நாட்டின் வலிமையை அறியாமல் போருக்கு வருபவர்கள் என்று இந்தப் பாடல் குறிப்பிடுகிறது.
புறநானூறு: பாடல் 287
இந்தப் பாடலில், பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடிய மாங்குடி மருதனார், பாண்டியனின் புகழ் மற்றும் வீரத்தைப் போற்றுகிறார். இந்தப் பாடலில் வரும் “வம்ப வேந்தன்” என்ற சொல், பாண்டியனின் வலிமையை எதிர்த்துப் போரிட வந்த ஒரு புதிய மன்னனைக் குறிக்கிறது. பாண்டியன் நெடுஞ்செழியன், அந்த வம்ப வேந்தனைப் போரில் எளிதாகத் தோற்கடித்தான் என்பதை இப்பாடல் விவரிக்கிறது.
புறநானூறு: பாடல் 345
இப்பாடலில், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் போர்க்களத்தில் வீரத்தோடு போரிடும் காட்சியைக் கோவூர் கிழார் பாடுகிறார். இப்பாடலில் வரும் “வம்ப மன்னர்” என்ற சொல், சோழ மன்னனோடு போரிட வந்த புதிய மன்னர்கள் அல்லது அந்நிய மன்னர்களைக் குறிக்கிறது. சோழனின் வீரத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அந்த வம்ப மன்னர்கள் பின்வாங்கியதைக் கவிஞர் எடுத்துரைக்கிறார்.
இந்தச் சொற்கள் அனைத்தும், சங்க காலத்தில் வலுமிக்க மூவேந்தர்களை (சேர, சோழ, பாண்டியர்) எதிர்த்துப் போரிட வந்த சிறு மன்னர்கள் அல்லது வலிமையில் குறைந்த புதிய மன்னர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தப் பதங்கள், போரின் சூழலையும், அரசர்களின் வீரத்தையும் விளக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
வம்ப பல்லவன்
விருதுப் பெயராக ‘வம்பு’
பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன், தனது நாணயங்களில் ‘வம்பு’ என்ற விருதுப் பெயரைப் பொறித்துள்ளார்.
திருச்சி மலைக்கோட்டை மற்றும் பல்லாவரம் குடைவரைக் கல்வெட்டுகளில் ‘வம்பு’ என்ற பெயர் காணப்படுகிறது.
இந்த நாணயங்களில் ‘வபு’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது, அது ‘வம்பு’ என்றே வாசிக்கப்படுகிறது.
’வம்பு’ என்பதற்கு ‘புதுமையைப் புகுத்தியவன்’ புதியவன் என்று பொருள் கொள்ளலாம். இது மகேந்திரவர்மன் கலையிலும், கட்டடக் கலையிலும் புதிய முயற்சிகளை மேற்கொண்டதைக் குறிக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இருப்பினும் தன்னை வம்பு என சங்க இலக்கியச் சொல்லில் பல்லவர்கள் அழைத்துள்ளனர் என்பதை அறியலாம்.
வம்பு வேந்தர், வம்பு மள்ளர், வம்பு வடுகர், வம்பு மோரியர், வம்பு பல்லவர் என நாணயங்களும் உள்ளன.
மொத்தத்தில், ‘வம்பு’ என்ற சொல் சங்க காலத்தில் அதன் மூலப் பொருளான ‘புதிய’, ‘நிலையின்மை’ போன்ற தன்மைகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
காலப்போக்கில், அதன் பொருள் சண்டை, தொல்லை என மாறி, இன்றைய பேச்சுவழக்கில் எதிர்மறையான பொருளைப் பெற்றுள்ளது.
வம்ப மோரியர் போல வம்ப பல்லவர்களும் இருந்துள்ளனர் போலும்.
மள்ளர் என்போர் தமிழரல்லர்:
Mallas
Mallas, tribal
people in the time of the Buddha (c. 6th-4th century bce), who settled in the
northern parts of modern Bihar state, India. Their two most important towns
were at Kushinagara (Kusinara) and Pava (located east of modern Gorakhpur). The
Mallas had a republican form of government, with an assembly. They lost their
independence about the time of the Buddha and were annexed by the Magadha
empire. A Malla dynasty ruled Nepal from the 10th century to 1769. The Mallas
introduced the first legal and social code influenced by contemporary Hindu
practices and were patrons of the arts and architecture.
This
article is about the kingdom of Malla in Indian epic literature. For the
historical tribe, see Malla (tribe). For the medieval Nepalese kingdom, see Khasa
Malla kingdom. For the medieval dynasty in Nepal, see Malla dynasty (Nepal).
The
Malla kingdom was situated in the Gangetic plain between the Kosala and Videha.
The epic Mahabharata speaks about a Malla conquered by the Pandava Bhima during
his military campaign through the eastern kingdoms to collect tribute for King
Yudhishthira's Rajasuya yagna.
References
in Mahabharata
Bhima's
military campaign
Bhima defeated
the virtuous and mighty king Dirghayaghna of Ayodhya. And then he subjugated
the country of Gopalakaksha and the northern Kosalas and also the king of
Mallas. And the mighty one, arriving then in the moist region at the foot of
the Himalayas soon brought the whole country under his sway. He next conquered
the country of Bhallata, as also the mountain of Suktimanta that was by the
side of Bhallata.
மள்ளர் வம்ப மள்ளர் என்பது இவர்க்ள் தமிழகத்துக்கு வந்து அவ்வபோது
தங்கிய பீகார்,நேபாளம் மற்றும் கங்கை பகுதியில் வாழ்ந்த போர் வீரர்கள் ஆவர்.
இங்கே மள்ளர் என்பதற்கு மலைவாசியர் என பொருள். மள்ளர் என்பத்
மலையவர்கள் என பொருள் கொல்லலாம். இவர்களை கூலி படைகளாக
தமிழக அரசர்கள் தருவித்து இருக்கலாம்
கோசர்:
மள்ளர்கள் போன்றே கோசர்கள் என்ற இனத்தை பற்றி சங்க இலக்கியம் கூறுகிறது
Tamil Kosar
Tribe is connected with Gujjars of rajasthan
and Gujarat.
கோசர் என்பது குஜ்ஜர் இனத்தவர் என கூறுகின்றனர்.
மழவர்:
மள்ளர் போன்றே மழவர் என்ற இனம் உள்ளது.இதுவும் ஒரு மலைவாசி இனத்தோர்கள் இவர்களும் தமிழகம் அல்லாத பகுதியை
சேர்ந்தவர்கள். இவர்கள் கர்நாடகாவில் தனி சாதியாக இன்றும் வாழ்கின்றனர்
Malavas
The Malavas ( Mālava)
or Malwas were an ancient Indian tribe and confederation. They are a federation
attested in various states in North and Central India. The modern regions of
Malwa (Punjab) and Malwa region in Madhya Pradesh and Rajasthan are eponyms
attributed to them.[2] Their power gradually declined as a result of defeats
against the Western Satraps (2nd century CE), the Gupta emperor Samudragupta
(4th century), and the Chalukya emperor Pulakeshin II (7th century).The Malava
era, which later came to be known as Vikram Samvat, may have been first used by
them.
Castes
and Tribes of Southern India (1909)
by
Edgar Thurston
Malava
Malava.-The
Malavas or Mala Bhōvis are a small cultivating caste in South Canara, "the
members of which were formerly hunters and fishermen. They profess Vaishnavism,
and employ Shivalli Brāhmans as their priests. Hanumān is their favourite
deity. Like the Bants and other castes of Tuluva, they are divided into
exogamous septs called balis, and they have the dhare form of marriage. They
speak Canarese."*[1]They are said to be really Mōgers, who have separated
from the fishing community. The term Bhōvi is used to denote Mōgers who carry
palanquins, etc.
மழவர்கள் குஜராத்தில் உள்ள மால்வா பகுதியை சார்ந்தவர்கள் என்றும்
கர்நாடகா வேடுவர்கள்/மீனவர்கள் மழவர்கள் என எட்கர் தர்ஸ்டன் குறிப்பிட்டுள்ளார் ஆக மழவர்கள் தமிழகத்தில் கலந்தவர்களே ஒழிய
மழவர்கள் குஜராத்,கர்நாடக பகுதியில் இன்றும் ஜாதிகளாக
வாழ்கின்றனர்.
மழவர்களும் தமிழக அரசர்களால் கொண்டு வரப்பட்ட ஒரு படை பிரிவாகும்.
இதை போல் மல்லன் என்னும் பெயர் கொண்ட தமிழக கிராமங்கள்,ஆந்திரவிலும்,கர்நாடகாவிலும் இருக்கின்றது.
(எ-டு)
மல்லனம்பட்டி
மல்லனம்பாடி
மல்லசேரி
மல்லகவுண்ட புதூர்
மல்லன செட்டிபட்டி
மல்லன புதூர்
என பெயரிடபட்ட இடங்களில் மிகுதியாக கன்னட கவுடர்களும்,தெலுங்கு
பலிஜா செட்டி மற்றும் தெலுங்கு செட்டியார்கள் உண்டு. மல்லனா
மல்லப்ப என கர்நாடக பெயர்கள் மலை பகுதியில் வாழ்ந்தவர்கள் என அர்த்தம்
மல்ல அல்லது மழவ இரண்டும் மலைவாசி காட்டுவாசி இனத்தவர்கள்
என்பது நிஜமாகும். இவைக்கும் பள்ளர்க்கும் என்ன சம்பந்தம் என தெரியவில்லை
பல்லவனும் வம்ப பல்லவன் எனவும் மாமல்லன் என தன்னை அழைப்பதில்
அவன் எங்கிருந்து வந்தான் என எவனுக்கும் தெரியாது.
இப்படி மள்ளர்,மழவர்,கோசர்,மௌரியர் இவர்களை பற்றி சங்க இலக்கியம்
கூறுகிறது.
சங்க இலக்கியங்களில் பள்ளர் எனும் பெயரே எந்த இடத்திலும் இல்லை
சங்க இலக்கியம் காட்டும் இழிசினர்/கடையர்/கடைஞர்:
---------------------------------------------------------------------------------------
பண்டைத் தமிழகத்தின் ஜாதி அமைப்பைக் குறித்து ஆராயப்புகும் ஒருவனுக்குக் கிடைக்கும் முதன்மை ஆதாரம் இலக்கியமே. தாழ்த்தப்பட்ட மக்கள் இலக்கியங்களில் தலை மக்களாக இடம் பெறலாகாது என்ற இலக்கிய மரபு ஒன்று இருந்து வந்த அன்றையச் சூழலில் அவர்களைப் பற்றிய செய்திகள் இலக்கியங்களிலும் மிக அரிதாகவே காணப்படுகின்றன. சிற்சில சொற்களையும் உவமைகளையும் ஆதாரமாகக் கொண்ட ஆய்வை நடத்த வேண்டியுள்ளது.தமிழ் இலக்கிய வரலாற்றின் துவக்க காலத்தில் இருப்பது தொல்காப்பியம். தொல்காப்பியத்தின் அகத்திணையியல், மரபியல் இரண்டும் ஜாதி அமைப்புக் குறித்த சில செய்தி~ களைத் தெரிவிக்கின்றன. பிரிவு பற்றிப் பேச வந்த அகத்~ திணையியல் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற நான்கு பிரிவினரைச் சுட்டுகின்றது. இந்நால்வரும் "ஏவல் மரபினர்" (தொல் அகத்திணையியல்.26) என்றும் குறிக்கப்படுகின்றனர்.
அதாவது "பிறரை ஏவிக்கொள்ளும் தொழில் தமக்குளதாகிய தன்மையை உடையவர்கள்" என்று இதற்கு நச்சினார்க்கினியர் விளக்கம் தருகிறார். இதிலிருந்து நான்கு 63 குலத்தினரின் ஏவலுக்குக் கீழ்ப்பட்டுக் குற்றேவல் செய்த ஒரு பிரிவினர் சமுதாயத்தில் இருந்தனர் என்பது புலனாகிறது. அவர் யார்?மேற்குறிப்பிட்ட நான்கு பிரிவினர்ளான மரபும் தொழிலும் வரையறுத்த மரபியல், அதனை அடுத்து, `அன்னராயினும் இழிந்தோர்க்கு இல்லை' (தொல்.மரபியல்:84) என்கிறது. இங்கு `இழிந்தோர் என்பதற்கு "நான்கு குலத்தினும் இழிந்த மாந்தர்" என இளம்பூரணர் உரை எழுதுகிறார்.
இந்த இழிந்த மக்கள் யார்?நடுவண் ஐந்திணைக்குரிய தலைமக்களைப் பற்றிக் கூறிய பிறகு, அதன் புறத்தவாகிய கைக்கிளை, பெருந்திணைக்குரிய மக்களைப் பற்றி அகத்திணையியலில் பேசப்~ படுகிறது. "அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் கடிவரையில புறத்து என்மனார் புலவர்"இதை முன்னெழுப்பிய இரு கேள்விகளுக்கான ஐயங்களுக்கான விடையாகக் கொள்வோம். இங்கு அடியோர் என்ப~ வரைப் பிறருக்குக் குற்றவேல் செய்வோர் ' எனவும், வினை ஏவலர் என்பவரைப் `பிறர் ஏவிய தொழிலைச் செய்தல் வல்லோர் எனவும் நச்சினார்க்கினியர் விளக்கி உரைக்கிறார். இவர்கள் ஏன் அதனைந்திணைக்கு உரியர் அல்லர் என்பதற்கு இளம்பூரணர் நீண்டதொரு விளக்கம் தருகிறார்; அகத்~ திணையாவன அறத்தின் வழாமலும், பொருளின் வழாமலும், இன்பத்தின் வழாமலும் இயலல்வேண்டும். அவை யெல்லாம் பிறருக்குக் குற்றேவல் செய்வார்க்குச் செய்தல் அரிதாகலானும் அவர் நாணுக்குறைபாடு உடையவர் 64 ஆகலானும், குறிப்பறியாது வேட்கை வழியே சாரக் கருதுவராகலானும், இன்பம் இனிய நடத்துவார் பிறர் ஏவல் செய்யாதார் என்பதனாலும் இவர் புறப்பொருட்டு உரியர் ஆயினார்" என்கிறார். இது பிறருக்குக் குற்றேவல் செய்வோரின் சமூகப் பொருளாதார நிலையை விளக்கு~ வதோடு அன்றைய இலக்கியங்கள் மேட்டுக்குடியினரின் இலக்கியங்களே என்ற உண்மையையும் தெளிவுபடுத்துிறது. ஆக, பொருளாதார ஆதிக்கமும் சமூக மதிப்பும் கொண்டோர் ஒரு பக்கம்;
அவர்களுக்கு அடித்தொழில் செய்தோர் ஒரு பக்கம் என்று அன்றையச்சமூகம் பிளவுபட்டுக்கிடந்தது என்பது புலனாகிறது. அடிமை, இழிந்தோர் என்ற சொற்ள் குற்றேவல் செய்தோரின் சமூக இழி~ நிலையைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.சங்க இலக்கியங்களில் துடியர் பறையர் என்போர் பேச்படு~ கின்றனர். துடி, பறை என்னும் தோல் கருவிகளை இயக்கு பவர்கள் இவர்கள். இவர்கள் "இழிசினர் "என்றும் "இழி~ பிறப்பாளர்"என்றும் இலக்கியங்களில் இழித்துரைக்கப்படு~ கின்றனர்.துடியெறியும் புலைய எறிகோல் கொள்ளும் இழிசின" (புறம்: 287)"பூக்கோல் இன்று என்று அறையும் மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே" (புறம்: 289)"இழிபிறப்பாளன் கருங்கை சிவப்ப வலிதுரந்து சிலைக்கும் வன்கண் கடுந்துடி' (புறம்:170)கட்டில் நிணக்கும் இழிசினன் கையது போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று (புறம்: 82) 65 இழிசினர் என்றும் இழிபிறப்பாளர் என்றும் அழைக்கப்படும் இவர்களின் தொழில் பறை மற்றும் துடியறைதல், தோல் பொருட்களைப் பழுதுபார்த்தல் என்று தோல்தொழிலோடு ஒட்டியதாகத் தெரிகிறது.புலையன் என்பது ஏசத்தக்க இழிசொல்லாக இலக்கியத்தில் சில இடங்களில் கையாளப்படுகிறது. (கலி:72:4; 311:2)
பறையர் துடியர் பாணர் ஆகியோரும் புலையர் என அழைக்கப்படுகின்றனர்....... புலையன் பேழ்வாய்த் தண்ணைமை இடந்தொட்டன்ன அருவி இழிதரும் பெருவரை நாடன் (நற்றிணை:
345:5-7)"மலையமா ஊர்ந்து போகிப் புலையன் பெருந்துடிகறங்கப் பிறபுலம் புக்கவர்" (நற்றிணை77:1-2)புதுவன ஈகை வளம்பாடிக் காலின் பிரியாக் கவிதைப் புலையன்தன் யாழின்" (கலித்: 95:9-10)இவர்கள் மட்டுமின்றி இழிதொழிலைச் செய்யும் வேறு சிலரும். உதாரணமாக சுடுகாடு காக்கும் வெட்டியான் துணி வெளுக்கும் வண்ணான் ஆகியோரும் புலையன் புலைத்தி என்ற பொதுப் பெயராகலேயே அழைக்கப்படுகின்றனர். "கள்ளி போகிய களரி மருங்கின வெள்ளி னிறுத்த பின்றைக் கள்ளொடு புல்லகத்திட்ட சில்லவிழ் வல்சி புலையனேவப் புல்மேல் அமர்ந்துண்டு அழல்வாய்ப் புக்க முன்னும் பலர்வாய்த்திராஅர் பகுத்துண்டோரே" (புறம்:360:16-2) 66
"அடியியல் விழவின் அழுங்கல் மூதூர் உடையோர் பான்மையின் பெருங்கை தூவா வறனில் புலைத்தி எல்லின் தோய்த்த புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கம்" (நற்.90:1-4)ஆக, அன்றைச் சமூக அமைப்பில் பறையர்,துடியர், பாணர், வண்ணார், வெட்டியான் போன்ற வேலைப் பிரிவினர் இழி~ நிலைச் சாதியினராகக் கருதப்பட்டனர் எனக்கொள்ளலாம். அன்றைய விவசாயத் தொழில் சாதியினராக விளங்கியவர் கள் இவர்களா? இது பற்றி உறுதியாகக் கூறமுடியாவிடினும் சில யூகங்களை முன்வைக்கச் சங்க இலக்கியம் இடமளிக்கிறது. நெல்கதிரை அறுவடை செய்யும் மக்கள் பறையை முழக்கிக் கொண்டே அறுவடை செய்ததாக இலக்கியங்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன.வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇக் கண்மடல் கொண்ட தீந்தேன் இரிய" (புறம்:348)வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇப் பழனப் பல்புள் இரிய" (புறம்:350)
வெண்ணெல் அரிநர் மடிவாய்த் தண்ணுமை பன்மலர்ப் பொய்கைப் படுபுள் ஓப்பும்" (அகம்: 204)வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇச் செங்கண் எருமை இனம்பிரி பொருத்தல்" (மலைபடு:471-2)ஒலிந்த பகன்றை விளைந்த கழனி வன்மைவினைநர் அரிபறை" (மதுரை.காஞ்: 261-62) பறையறைவர்கள் இழிந்தவர்கள், புலையர்கள் என்னும்~ போது, இங்கு அறுவடைத் தொழிலில் ஈடுபட்டவர்களும் இழிநிலை மக்களாக இருக்க வேண்டும். 67 மதுரைக்காஞ்சியில் வன்கைவினைஞர் (அதாவது வலிய கையினால் தொழில் செய்பவர்கள் என்ற பொருளில் ) எனச் சுட்டப்படுவது போல வேறு சில இடங்களில் நெல் வயல்களின் களை பறிப்பவர்களும் அவ்வாறே சுட்டப்படுகின்றனர். அத்தோடு கடைசியர் எனவும் அழைக்கப்படுகின்றனர்.கைவினை மாக்கள்தம் செய்வினை முடிமார் சுரும்புண மலர்ந்த வாசங் கீழ்ப்பட நீடின வரம்பின் வாடிய விடினும் கொடியரோ நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாது பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும். (குறுந்:309)
கொண்டைக் கூழைத் தண்தழைக் கடைசியர் சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும் மலங்குமிளிர் செருவில் தனம்பு தடிந்திட்ட பழன வாளைப் பரூரக்கண் துணியல் புது நெல்வெண்சோற்றுக்கண்ணுறையாக விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி நீடு கதிர்க் கழனி சூடு தடுமாறும் வன்கை வினைஞர் " கடிமலர் களைந்து முடிநாறு அழுத்தித்தீ தொடிவளைத் தோளும் ஆகமும் தோய்ந்து சேறாடு கோலமொடு வீறுபெறத் தோன்றிச் செங்கண் நெடுங்கயல் சின்மொழிக் கடைசியர் வெங்கண தொலைச்சிய விருந்தின் பாணி" (சிலம்பு10:127-131) இவை முன்குறிப்பிட்ட யூகத்தை வலியுறுத்துவனவாக அமைகின்றன. அதாவது விவசாயத் தொழிலில் நேரடி உடல் உழைப்பில் ஈடுபட்டவர்ளின் `கடைநிலை' மக்களே என்பது "கடைசியர்" என்று சொல்லால் புலனாகிறது. சங்க காலத்தில் பண்ணை அடிமைகள் இருந்தனரா என்பதற்கான 68 தற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லையெனினும், இக் கடைசியர் தங்கள் சமூக நிலையில் அடிமைகளின்று பெரிதும் வேறுபட்டிருக்கவில்லை எனக் கொள்ள இடமுண்டு" என்கிறார் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி!
இலக்கியங்கள் சுட்டும் `உழவர் ' என்ற சொல்லுக்கு உரியவர்~ களாக விவசாயத் தொழிலில் நேரடி உடல் உழைப்பில் ஈடுபடும் இக்கீழ் மக்களைக் கருத இடமில்லை. மருத நிலங்~ களில் வாழும், உழுதுண்பாராகிய சிறுநிலை உடைமையாளர்~ களே 'உழவர் ' என்று சுட்டப்படும் சொல்லுக்கு உரியவர்~ களாகத் தெரிகிறார்கள்.ஈரச் செவ்வி உதவின வாயினும் பல்லெருத்துள்ளும் நல்லேருது நோக்கி வீறுவீறாயும் உழவன் போல" (புறம்:289:1-3)வைகுபுலர் விடியல் மைபுலம் பரப்பக் கருநனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின் எரிமருள் பூஞ்சினை இனைச்சிதர் ஆர்ப்ப நெடுநெல் அடைச்சிய கழனியேர் புகுத்துக் குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர அரிகால் போழ்ந்த தெரிபகட்குழவர்" (அகம்:41:1-6)நிலம், ஏர், எருது ஆகிய உற்பத்திச் சாதனங்களை உழவர் உடைமையாகக் கொண்டிருந்தனர். இதனடிப்படையில் விவசாய உற்பத்தியல் உடல் உழைப்பில் ஈடுபட்ட `கடை~ நிலை' மக்கள் நிலஉடைமையற்றவர்களாக இருந்தனர் எனவும் கொள்ளலாம். 69 சங்க இலக்கியங்களில் புலையர், பறையர் ,கடைசியர் என்று சுட்டிச் சொல்லப்பட்டவர்கள் தாழ்ந்த சாதியினரே; நில உடைமையற்ற விவசாயக் கூலிகளே; இன்றைய பள்ளர் பறையர் சாதியினரின் முன்னோர்களே என்ற முடிவுக்கு வருவதற்கான ஆதாரங்கள் இடைக்கால இலக்கியங்களில் காணப்பெறுகின்றன.
சீவக சிந்தாமணி ஏமாங்கத நாட்டின் வளம் பற்றிக் கூறும் போது, நஞ்சை நிலத்தில் நிகழும் விவசாய உற்பத்தி பற்றி விரிவாகப் பேசப்படுகிறது. அங்கு உழவு முதல் அறுவடை ஈறாக உள்ள விவசாயத் தொழிலைச் செய்பவர்ள் `கடைசியர் ' என்றே அழைக்கப்படுகின்றனர்."சேறமை செருவினுள் செந்நெல் வான்முளை வீறொடு விளைகெனத் தொழுது வித்துவார் நாளிது பதமெனப் பறித்து நாட்செய்வார் கூறிய கடைசியர் குழாங்கொண் டேகுவார் (பா. எண் 45) கடைசியர் பெண்கள் களை பறிக்கும் தொழிலின் ஊடே மது அருந்திக் களித்தாக மற்றொரு பாடல் கூறுகிறது.வளைக்கையால் கடைசியர்(பள்ளர் ) மட்டு வாக்கலின் திளைத்தவர் பருகிய தேறல் தேங்குழிக் களிப்ப உண்டு இள அனங் கன்னி நாரையைத் திளைத்தலின் பெடைமயில் தெருட்டுஞ் செம்மற்றே" (பா.எ:50)சேக்கிழாரின் ஆதனூர் புலைப்பாடி வருணனை புலையர்~ களின் வாழ்க்கைச் சூழலை யதார்த்தமாகச் சித்திரிக்கிறது.மற்றவ்வூர்ப் புறம்பணையின் வயல்மருங்கு பெருங்குலையில் சுற்றம் விரும்பி கீழ்மைத் தொழிலுழவர் கிளைதுவன்றிப் பற்றிய கொடிச்சுரைமேல் படர்ந்த பழங்கூரையுடைப் புற்குரம்பைச் சிற்றில பல நிறைந்துளதோர் புலைப்பாடி.கூர்உகிர் மெல்லடியளகின் குறும்பார்ப்புக் குழுச்சுழலும் வார்பயில் முன்றிலினின்ற வள்ளுகிர நாய்த்துன்ற பறழ் கார் இருப்பின் சரிசெறிகைக் கருஞ்கிறார் கவர்ந்தோட ஆர்சிறுமென குரைப்படக்கு மரைக்கசைத்த விருப்புமணிவன்சிறுதோல் மிசைஉழத்தி மகஉறக்கும் நிழல்மருதுந் தன்சினைமென் படையொடுங்குந் தடங்குழிசிப் புதைநீழல் மென்சினைய வஞ்சிகளும் வசிப்பறை தூங்கின மாவும் புன்சிறுநாறுந புனிற்றுமுழைப் புடைத்தெங்கும் முடைத்தெங்கும்செறிவலித்திண் கடைஞர் வினைச்செயல்புரி வைகறையாமக் குறியளக்க அளைக்குஞ் செங்குடுமி வாரமச் சேக்கை வெறிமலர்த்தண் சினைக்காஞ்சி விரிநீழல் மருங்கெல்லாம் நெறிகுழல் புன்புலைமகளில் நெற்குறு பாட்டொலி பரக்கும்புள்ளுந்தண் புனல்கலிக்கும் பொய்கையுடையப் புடையெங்குந் தள்ளுந்தாள் நடையசையத் தளையவிழ் பூங்குவளை மது விள்ளும் பைங்குழல் கதிர்நெல் மிலைச்சி புன்புலைச்சியர்கள் கள்ளுண்டு களிதூங்கக் கறங்குபறையுங் கலிக்கும்(பா:6-10)
புலையர்கள் இங்கு`புன்புலை மகளிர்' என்றும் புன்புலைச்சி~ யர்கள் என்றும் அழைக்கப்படுவதிலிருந்து அவர்களின் சமூக இழிநிலையை உணரலாம். இவர்களே செறிவலித்திண் கடைஞர் இப்படித்தாகிய கடைஞர் இருப்பின் என்று கடைஞர், கடைசியர் எனவும் சுட்டப்படுகின்றனர். இவர்களுக்கான குடியிருப்புகள் உயர்சாதியார் இருந்த ஊருக்குப் 71 புறத்தே வயல்களுக்கு நடுவேயான மேட்டுநிலத்தே தனித்து அமைந்து இருந்தது என்பதைப் `புறம்பணையின் வயல் மருங்கு.... புற்குரம்பைச் சிற்றில் பல நிறைந்துளதோர் புலைப்பாடி' என்ற வரிகள் உணர்த்துகின்றன. உயர்சாதி நில உடைமையாளர் வீடுகளைப் `புயலடையும் மாடங்கள்' என வருணிக்கும் சேக்கிழார் புலையர்களின் குடியிருப்பைப் `பைங்கொடிச் சுரைமேல் படர்ந்த பழங்கூரையுடைப் புற் குரம்பைச் சிற்றில் ' என அதன் ஏழ்மை நிலை தோன்றச் சித்திரிக்கிறார். இது இரு வர்க்கத்திற்கும் இடையேயான ஏற்றத்தாழ்வைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. `கீழ்மைத் தொழில் உழவர்' என்பது இவர்களே விவசாயக் கூலிகளாக விளங்கியதை மெய்ப்பிக்கும். இது தவிர மாடறுக்கும் தொழிலுடைய இவர்ள் அதிலிருந்து கிடைக்கும் தோல், நரம்பு, கோரோசனை முதலாய பொருட்களை உயர்சாதி~ யார் கோயில்களுக்கு அளித்து வந்தனர். தோலும் விசிவாரும் பேரிகை முதலாய கருவிகளுக்கும் ,நரம்பு வீணைக்கும், யாழுக்கும், கோரோசனை அர்ச்சனைக்கும் பயன்படுத்தப்~ பட்டன. இவ் ஊர் கோயில் பணியைச் செய்து வருபவருக்கு ஊர்ப்போதுவிலிருந்து `பறைத்துடவை'என்னும் பறைத் தொழில் மான்யம் அளிக்கப்பட்டது.
ஊரில் விடும் பறைத்துடவை உணவு உரிமையாகக் கொண்டு சார்பில் வரும் தொழில் செய்வார் தலைநின்றார் தொண்டினால் கூரிலைய முக்குடுமிப் படையண்ணல் கோயில்தொறும் பேரிகையே முதலாய முகக்கருவி பிறவினுக்கும் போர்வைத்தோல் விசிவாரென்று இனையனவும் புகலுமிசை நேர்வைத்த வீணைக்கும் யாழுக்கும் நிலைவகையில் சேர்வுற்ற தந்திரியும் தேவர்பிரான் அர்ச்சனைகட்கு ஆர்வத்தினுடன் கோரோசனையும் இவை அளித்துள்ளார்." 72 என்ற நந்தனைக் குறித்த அறிமுக வரிகளால் அறியலாம். இவர்கள் கோயில்களுக்கு உள்ளேயும், உயர்சாதியார் குடியிருந்த ஊர்களுக்கு உள்ளேயும் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட உண்மைக்கு நந்தனே சான்று.
நந்தனார் சரித்திரக் கீர்த்தனையிலும் இப்பறையர்களின் தொழில் விரிவாக எடுத்துரைக்கப்படும்.
இப்படி சங்க இலக்கியத்தில் வந்த புலையர்,கடையர்,பறையர்,இழிசினர் என
அழைக்கபட்ட பள்ளர் என்பரை மள்ளர் என பாடியது முக்கூடற்பள்ளு
இலக்கியமாகும் அந்த மள்ளரே தமிழரா என நாம் குறிபிட்டதை ஒப்பு நோக்கினால்
தெரியும்.
நன்றி:
முக்கூடற்பள்ளு - (அருணாசலம்)
எட்கர் தர்ஸ்டன்
சங்க இலக்கியம்(மதுரை பிராஜக்ட்)






















