Thursday, June 27, 2013

பார்க்கவ குல மக்கள்.மலாடர்=மலையர்=சேதியர்.

பார்க்கவ குல மக்கள் வேளாண்மையில் ஈடுபடுவதால் வெள்ளாளர் போன்ற ஒரு ஜாதியாக பொதுவான அறியாமையால் கருதப்படுகின்றனர்.ஆனாலும் உண்மையில் மலையர்,மலாடர்,சேதியர் என்ற சத்திரிய சமூகமான இவர்கள் எவ்வாறு எப்போது நில உடைமையாளர்களாக வேளாண்மைத் தொழிலில் இறங்கினர் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கொடுத்த விளக்கம் .....


      LITERATURE CASTE AND SOCIETY.(REFERENCE BOOK)

TAMIL SOCIETY AND THE MILITARY IN THE AGE OF THE MEDIEVAL CHOLAS.

                                              WARFARE AND SOLDIERS.

Noboru karashima examined seven inscriptions from uttathur which belongs to the periods of the RAJARAJA 3rd.

These inscriptions all recorded within three years of the reign of RAJARAJA3rd show land transaction (selling and buying) by several suruthimans fellows in the Thiruchchirapalli district.
The suruthimans seem to be closely related to the palli, vanniya or agambadiyar castes and claimed kshathriya origin.

we find the earliest reference of the surutiman community in an inscription dated 1015 AD where a suruthiman lays down his life as a vanguard soldier in the battle of katakkam.
Another suruthiman referred to in 1141AD as a member of the urattur nadu and as landholding was an important qualification for being a nattar,we can presume that this person was a kani-holder.in the next one referred to in 1150AD we find the person mentioned as a land holder(UDAIYAN) Natalvan.
so here we find an erstwhile non-peasant martial community slowly transforming itself and becoming substantial landlords in the lower cauvery basin in the thirteenth century.

சேர வம்சத்தின் மலையர் மழவர் வம்சத்தைச் சேர்ந்த மக்களான இவர்கள்...

"கள்ளர் மறவர் கனத்ததோர் அகமுடையர் மெல்ல மெல்லவே வந்து வெள்ளாளர் ஆனாரே"

என்ற பழமொழிக்கு ஏற்ப மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆயினர். அதாவது பனிரெண்டாம் நூற்றாண்டு காலத்தில் நில உடைமை சமூகமாகி உடையார்,நாட்டார்,நாடாள்வார்,
கிழார்(மூப்பனார்),வேளாளர் என்ற அந்தஸ்துகளில் இருந்து கால மாற்றத்தின் போது உண்டாகும் பல்வேறு அரசியல் காரணங்களால் பதினெட்டாம் நூற்றாண்டு முதலாய் பார்க்கவ குலத்தாரில் பலரும் முழுமையான விவசாயிகளாக மாறினார்கள்.

ஆனாலும் என்றைக்கும் தம்மை வெள்ளாளர் என்று கூறிக் கொண்டதும் கிடையாது. வெள்ளாளர்களோடு மண உறவு கொண்டதும் கிடையாது.
சித்திர மேழி பெரியநாட்டார் என்ற அமைப்பில் நாட்டார் பதவியில் இருந்த இவர்கள் வெள்ளாளர்களில் இருந்து தம்மை வேறுபடுத்திக்காட்டவே பதினைந்தாம் நூற்றாண்டிலேயே தம்மை பார்க்கவ குல சத்திரியர் என்று அழைத்துக் கொண்டனர்.
ஏனெனில் மன்னராட்சிக் காலந்தொட்டே வெள்ளாளரிடம் வரிவசூல் செய்யும் கடமை கொண்ட பண்டாரத்தார், பண்டரையர்,பாளையத்தார் போன்ற பதவிகளைக் கொண்டவர்கள் பார்க்கவ குல சமூகத்தவர்.பார்க்கவ வம்சத்து மலையமான் மக்கள் அனைவரும் மழவர்,மலையர் மலாடர் என்று வழங்கப்படும் ஒரு மரபைச் சேர்ந்தவர்கள்.சேதியர் என்றும் பொதுப் பெயரால் அழைக்கப்படுபவர்கள்.
எட்கர் தர்ஸ்டன் பார்க்கவர்களைப் பற்றிய குறிப்புகளில் சேர மறவர்கள் என்கிறார்.இது மழவர்களை நேரடியாக சுட்டுகிறது. .Tradition traces the descent of the three castes from a certain Deva Raja, a Chera king, who had
three wives, by each of whom he had a son, and these
were the ancestors of the three castes. There are other
stories, but all agree in ascribing the origin of the castes
to a single progenitor of the Chera dynasty.
 It seems
probable that they are descendants of the Vedar soldiers
of the Kongu country,
 who were induced to settle in the
eastern districts of the Chera kingdom.

மேலும் வன்னியரான சதாசிவ பண்டாரத்தார் கூட அதியர் மரபையும், மழவராயர் மரபையும் மலாடு நாடு (பார்க்கவ குலம்)மலையர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறார்.
மேலும் போரின் போது ஆநிரைகளை கவர்தல் என்பது மலாடர்களின் முக்கிய தொழிலாக இருந்துள்ளது.
தஞ்சைக்கள்ளர்,மறவர் ஆகியோர் பார்க்கவ குலத்தாருக்கு உடன் பிறப்பு போன்றோரே.
பார்க்கவ குல மக்களின் முன்னோர் என்பவர்கள் தமிழ் நாட்டின் சிறந்த போர்க்குடியான சேதியர்களே.
சேதியன் எனில் வெட்டுபவன்,அழிப்பவன்=மறவன் எனப்பொருள் வரும்.
(சேதித்தல் என்பது வெட்டுதலை,அழித்தலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.)

எடுத்துக்காட்டு..
தாதை தனைத் தாளிரண்டுஞ் சேதிப்ப... (திருவாசகம்-15, 7) 2. அழித்தலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல். மேலுலகுஞ் சேதித்தீர்... (உபதேசகாண்டம்-சூராதி., 50) 3. "'அவர்களை சேதித்தனர்"" என்பது உறுப்புச் சேதித்தலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.

(வெட்டுதல் அழித்தல்)பகைவரை சேதிக்கும் தொழிலே மறவனின் வாளின் வேலை.ஆகவே மறக்குல மலையர்கள் சேதியர்களாக ஆண்ட நாடு சேதிநாடு எனப்பட்டது.
சேதியன் என்ற கத்தி கொண்ட மறவர்களே பார்க்கவ குலத்தில் சுருதிமான் (மூப்பனார்=கிழார்) பட்டம் கொண்டு கத்திரியர் என்ற கத்திக்காரர்கள், சவளக்காரர்கள் என்று போர்க்கருவிகளின் பெயரினையே பட்டப்பெயராகக் கொண்டு இன்றைக்கும் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களில் சவளக்காரர் என்போரில் சிலர் மட்டும் கால ஓட்டத்தில் ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக வேறு சில இனக்குழுக்களில் குறிப்பாக மீனவரோடும்,அண்ணாவி என்ற ஏதோ ஒரு தெலுங்கு சாதியினரோடும் கலந்து விட்டாலும்,இன்றைக்கும் தன் இன மரபு மாறாமல் பார்க்கவ குலத்தில் சுருதிமான்(மூப்பனார்) பட்டம் கொண்டு நெல்லைச்சீமையில் சில சவளக்காரர்கள் மட்டுமே பார்க்கவ குல மூப்பனார் என்று தனித்து விளங்குகின்றனர்.இவர்கள் எல்லாம் மலையமான் வழிவந்த சேதியர் என்பது அவர்களுக்கே தெரியாது.
ஆனாலும் தம் முன்னோர்கள் சவளம் என்னும் வளையும் கத்தி பிடித்து போர் செய்தவர்கள்,பாரி மன்னரின் பார்க்கவ குல வம்சம் என்று மட்டுமே இன்றைக்கும் மறவாமல் கூறுவார்கள்.

சேதியர்களாய் பாண்டிய நாடு சென்று கத்திக்காரர்களும், சவளக்காரர்களுமாக போர்களின் போதெல்லாம் முன்னணி சிப்பாய்களாக பணியாற்றியவர்கள்.முன்னணிப் படையினர் என்பவர்களே வாளும்,கத்தியும்,வேல் என்ற ஈட்டியும் கொண்டு போரின் போது முதல் வரிசையில் களம் இறங்குபவர்கள்.படைக்கு முன் வரிசைத் தலைவன் என்ற பொருளில்
 HEAD MAN மூப்பனார் என்று இருந்து, பின்னாளில் விவசாயத்திற்கு திரும்பிய குழுக்களான சேதியர்கள் இவர்களே.(அநேகமாக ஆயிரம் ஆண்டுக்கு முன்னர் வன்னியர் என வழங்கப்பட்டவர்களும் இவர்களே)

இன்றைக்கும் பாரியின் வம்சம் நாங்கள் என்று மட்டுமே மார் தட்டிச் சொல்லத் தெரிந்த மழவர்,சேதியர் இனமான பார்க்கவ குலத்தோரே நீங்கள் வேள் பாரி மட்டுமல்லாது மலையமான்கள்,அதியமான்கள் என்ற வேளிர்களின் குலத்தில் வந்தவர்கள்.
நீங்கள் அனைவரும் மலாடர்,மலையர்,சேதியர் என்றழைக்கப்படும் மறக்குலத்தை சேர்ந்தவர்கள்.
கத்திரியர்,கத்திக்காரர்,சவளக்காரர் என்று வாள் பிடித்து போரிட்ட சத்திரிய குல சேதியர் சமூகம் நீங்கள்.
பார்க்கவ குலத்தோரே இவ்வாறு ஆண்ட வரலாறு கூறுவது உங்களை சிறப்பாக உயர்த்திக் காட்ட வேண்டி மட்டுமல்ல.

ஈகையும்,வீரமும் சமதர்ம நோக்கமும்,நல்லொழுக்கங்களும் நமது வேளிர் குலச் சிறப்பு என்பதையும் அதனை எல்லாம் பின்பற்ற வேண்டிய கடமையையும் உங்களுக்கு உண்டென்பதை உணர்ந்த வேண்டியும் தான் நம்மவர்களாலேயே தற்பெருமை கூடாது என்று கருதி சொல்லாமல் விடப்பட்ட நம் குல வரலாற்று உண்மைகள் இன்றைக்கு பொதுவில் உங்களுக்காக வெளிப்படுத்தப் படுகின்றது.

நன்றி:
செய்தி வழங்கியவர்:
சேரமான் பெருமாள்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.