Friday, July 19, 2013

மலையமான் என்னும் மன்னிய சேர குலத்தோன்றல்-2


மாட்சி மிகு சேர மலையரின் நேரடி வழித்தோன்றல்கள் யார்? 

மூவேந்தரின் சதியால் ஏற்பட்ட பாரியின் மறைவிற்கு பின்,தந்தையை இழந்து நின்ற பாரிமகளிரை,புலவர் கபிலர் பெருமான் தனது முயற்சியின் மூலமாக மலையமான் திருக்கோவிலூரையாண்ட மலையமான் தெய்வீகன் என்ற அரசனுக்கு சங்கவை,அங்கவை இருவரையும் மணம் செய்விக்க முனைந்து;பாரியை சதியால் கொன்ற மூவேந்தரையுமே ஔவையாரின் உதவியுடன் அழைத்து, அவர்களின் முன்னிலையிலேயே பாரிமகளிருக்கும் மலையமான் தெய்வீகனுக்கும் திருமணம் செய்வித்தார். இவ்வாறு மூவேந்தர் முன்னிலையில் ஏற்பட்ட மண உறவின் காரணமாகவும், மூவேந்தரின் மக்களுடனும் உண்டான மண உறவின் காரணமாகவும் மலையமான் தெய்வீக ராஜனின் சந்ததியினர் பார்கவ குலம்,பாரியின் வம்சம் எனவும் அழைக்கப்படுகின்றனர்.தெய்வீகராஜனின் மக்கள் மலையமன்னர் நரசிங்க முனையரையர் ,நத்தமன்னர் மெய்ப்பொருள் நாயனார்,சுருதிமன்னர் குலசேகரன் என்ற மூவர்.அதில் மலையை ஆட்சி செய்பவர் மலையமான் எனவும் சமதளத்தை ஆட்சி செய்தவர் நத்தமான் எனவும்,மண்ணும்,மலையும் ஆள்பவர்,கல்வி,கேள்விகளில் தேர்ந்தவர் சுருதிமான் எனவும் வழங்கப்பட்டார்கள்.மேற்படி பட்டங்களைக்கொண்ட மலையமான்களாகிய தண்ணிழல் வாழ்நர் (சேர அரச குலத்தார்)என்று அழைக்கப்பட்ட இவர்களின் இனத்தார் பதினெட்டாம் நூற்றாண்டு வரைக்குமே மலையமன்னர்,நத்தமன்னர் என்ற குறுநிலமன்னர்களாக,பாளையக்காரர்களாக நாட்டார், உடையார்,நயினார்,மூப்பனார் என கிராம நிர்வாகிகளாக தலைவர்களாக இருந்தனர். அவர்களின் வம்சாவழியினர் இன்றைக்கும் அதே பட்டங்களுடனேயே அழைக்கப்படுகின்றனர். குல முதல்வராக குலசேகரன் சுருதிமன்னர் அறியப்படும் காரணத்தால் அவர்தம் வம்சத்தினர் மூப்பனார் ஆவார்.குலசேகரன் சுருதிமானை,குலசேகர ஆழ்வாராகவே கருத வேண்டியுள்ளது. மலையமான்களின் நேரடி மரபு வழி வந்தோர் பாரியின் வம்சமான பார்க்கவ குலத்தார் மட்டுமே.

இதை அன்றைய ஆங்கிலே அரசும் தென்-இந்திய சாதிகளை ஆராய்ந்த எட்கர் தர்ஸ்டனும் பார்க்கவ குல உடையார்களே சேரர் வழித்தோன்றல்கள் என அறிவித்துள்ளனர்.

Tradition traces the descent of the udayans from a certain Deva Raja, a Chera king, who had three wives, by each of whom he had a son, and these were the ancestors of the three castes(Nattamaan,sudermaan,malaiyamaan). There are other stories, but all agree in ascribing the origin of the castes to a single progenitor of the Chera dynasty. It seems probable that they are descendants of the Vedar soldiers of the Kongu country, who were induced to settle in the eastern districts of the Chera kingdom.-udayans- Edgar Thurston. Castes and tribes of southern India (Volume 7)

சேரனின் நேரடி வாரிசாகவும்,சோழர்களின் கிளைக்குடியாகவும் உள்ள மலையர் குல அரச குடும்பமாகிய இவர்களுக்கு இரண்டாயிரம் வருடத்திற்கு முற்பட்ட பாரம்பரியம் உண்டு.மலையமான் வம்சத்தவர்கள் சூரிய குலமாக அறியப்படுகின்றனர்.


சோழரின் கிளை குலத்தவர்களும் பார்க்கவர்கள் தான். 

பார்கவ குலத்தோர் சோழனுக்கு பெண் கொடுக்கும் உயர் நிலையில் இருந்த அரச குடும்பத்தார். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள சோழ பாண்டியபுரம் என்ற ஊரில் ஆண்டிமலை என்ற இடத்தில் உள்ள பாறையில் கி.பி.953 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டில் உள்ள செய்தி, "பாரிமகளிரின் பைந்தொடி முன்கை பிடித்தோர் வழி வரு குரிசில் சித்தவடவன்" என்பதாக அமைகிறது,பாரி மகளிரை மணம் செய்தவர்களின் வழி வந்த அரசன் சித்தவடவன் என்கிறது செய்தி. இவரது மகளான வானவன் மாதேவி என்பவர் தான் தஞ்சையை ஆண்ட சுந்தர சோழனின் மனைவி,ராஜராஜ சோழனின் தாயார். என்றைக்கும் பாரியின் வம்சமாக கல்வெட்டு கூறும் பாரிமகளிரின் பைந்தொடி முன்கை பிடித்தோர் வழி வரு வம்சத்தோர் பார்கவ குல சத்திரியர்கள் மட்டுமே. மேலும் “ தெய்வக்கவிதைச்செஞ்சொற்கபிலன் மூரிவண்தடக்கை பாரிதனடைக்கலப் பெண்ணைமலையற் குதவிப்பெண்ணை அலைபுனல்அழுவத்து அந்தரிட்சம்செல மினல்புகும்விசும்பின் வீடுபேறெண்ணி கனல்புகும் கபிலக்கல்லது*. ” –என இராசராச சோழன் கல்வெட்டும் மலையமான் பாரி வம்ச உறவினை மெய்ப்படுத்தும் கல்வெட்டு மூலமும் இவ்விரு வேளிர் வம்சமாக அறியப்படுபவர்கள் பார்கவ குல சத்திரியர்கள் மட்டுமே.. சுந்தர சோழன் இறந்தவுடன் அவரோடு சேர்ந்து உடன்கட்டை ஏறியவர் பார்கவ குல மலையமானின் மகளான வானவன் மாதேவி.க்ஷத்ரியப்பெண்கள் மட்டுமே உடன் கட்டை ஏறுதல் வழக்கம்.இன்றைக்கும் நத்தமான்,சுருதிமான்,மலையமான் பரம்பரையினர் பார்க்கவ குல க்ஷத்ரியர் என்று அழைக்கப்படுகின்றனர்.சோழனின் கிளைக்குடியாகவும் பார்க்கவ குலத்தார் வரலாற்றாளர்களால் கூறப்படுகின்றனர்.ஆனால் பெரும்பாலும் இவர்கள் தனித்தே பார்கவ குல க்ஷத்ரியர் என இயங்குகின்றனர்.சோழர்களில் சுந்தர சோழனுக்கும் இரண்டாம் ராஜராஜனுக்கும்(மலையமான் மகள் அவனிமுழுதுடையாள்)பெண் கொடுத்த இவர்கள் மூவேந்தரோடும்,வேளிர்களோடு மண உறவு கொண்டுள்ளனர்.பார்கவ குலத்தார் வானவன்,சேரன்,மலையன் என்னும் குடிப்பெயருடைய மலையமான்களின் நேரடி வம்சத்தாராகவும் பாரி மற்றும் மூவேந்தரின் பெண்ணடி வாரிசாகவும் உள்ள குடும்பத்தினர்கள். .

கரிகாலச்சோழன் காலத்திலிருந்தே மலையமானும் சோழனும் உறவினர் ஆவார்கள்: .

உடையார் ராஜராஜ சோழத்தேவர் என்ற பெயரில் உள்ள உடையார் என்ற பட்டம் ராஜராஜனின் தாய் வழிப்பட்டம் என்றும் வேறு எந்த சோழனுக்கும் உடையார் பட்டம் கிடையாது,என்று கூறுபவர்கள் உணரட்டும்,கண்டராதித்த சோழன் தொண்டை மானாற்று துஞ்சின உடையார்,ஆனை மேற்றுஞ்சின உடையார் என்று குறிப்பிடப்பட்டுள்ளார். கண்டராதித்தனின் மனைவி செம்பியன் மாதேவியார் மலைநாட்டு மழவராயர் மகள்.மழவர்=மலவர்(மலையர்).

கரிகாலனும் மலையமான் மன்னவனும்.
அபிதான சிந்தாமணி என்னும் நூலில் கரிகாலனும் மலையமானும் நண்பர்கள் என்று கூறியுள்ளது. கரிகாலன் சிறுவனாய் இருந்தபோது அவனது உறவினர்கள் அரியணைக்கு போட்டியிட்டு அதற்கு உரிமையான கரிகாலனை பொய் வழக்கிட்டு சிறையில் அடைத்தனர்.சிறையிலிருந்து தப்பிய கரிகாலன் மலையமான் பாதுகாப்பில் தான் வளர்ந்துள்ளார். கரிகாலன் தந்தை இளஞ்சேட் சென்னி வடுகரை வென்று பாழி அரணை அழிக்க மலையமான் பெரும் படைகள் கொடுத்து உதவியுள்ளார்.இளஞ்சேட் சென்னியால் வெல்லப்பட்ட பாழியின் மகன் பதினோரு வேளிர்களை சேர்த்துக் கொண்டு போர்த் தொடுத்துள்ளான். இங்கு மலையமான் வேளிர்களில் சேர்க்கப்படவில்லை.கரிகாலனின் பெயரர்களாக அறியப்படும் கிள்ளிவளவன்,நலங்கிள்ளி,நெடுங்கிள்ளி ஆகியோரின் காலத்தில் சோழநாடு மூன்றாய்ப் பிரிந்தது.அதே சமயம் தான் மலையமான் திருமுடிக்காரி வேந்தனுக்கு பாதுகாப்பும் படை பலமும் அளிக்கக்கூடிய வலிமை பொருந்திய தனி முடி சூடிய சிற்றரசராக இருந்தார். மலையமான் மகள் வானவன் மாதேவி இக்குலமே.ஆதாரமும் வலுவாக உண்டு. டாக்டர்.ராசமாணிக்கனார் ஒரு கட்டுரையில் திருமுனைப்பாடி நரசிங்க முனையரையர் என்ற மலையமான் தான் சுந்தர சோழனை வளர்த்து பாதுகாத்தும் வந்துள்ளார்,என்று கூறியுள்ளார். ஏன் சோழர்கள் மீது மலையமான்களுக்கு இவ்வளவு அக்கறை?காரணம் மிகவும் வலுவானதே. சோழனின் கிளைக்குடி என்று வரலாற்றில் கூறப்படும் குடிகளில் பாதி மலையமான்களின் குடி பட்டங்களே,அவையாவன மலையமான்,சேதிராயர்,கொங்குராயர்,முனையரையர்,மழவரையர் ஆகும். சேதிராயர் என்பதை சூரிய குலத்தின் கிளைக்குடி என்றே கூறியுள்ளனர். உண்மை இவ்வாறு இருக்க சோழராக உரிமை கொள்ளும் முழு தகுதியும் பார்க்கவ குலத்திற்கு உள்ளது எனவும் சோழர்களுக்கு முன்பிருந்தே உடையார் பட்டமுள்ளதையும் சுட்டிக் காட்டியாயிற்று.இவ்வளவு ஏன் சோழர்களின் ஊர் பெயர் உடையார் குடி. உடையாளூர்,உடையார்கள் இன்றைக்கும் அதிகமாக வசிக்கும் ஊர் இங்குதான் ராஜராஜனின் சமாதியும் உண்டு.ராஜராஜனுக்கு உடையார் பட்டமும் உண்டு.

மலையமான்கள் பார்க்கவ குலத்தார் எனக்கூறும் கல்வெட்டுகள் ஆதாரம். 

மலையமான்கள் தங்கள் இனம் என்று பல்வேறு இனத்தினரும் உரிமை கோரும் போது மலையமான் மன்னர்களே தங்களை பார்க்கவ குலத்தவர் எனக்கூறும் ஆதாரங்களில் முதன்மையானது...........
திருக்கோவிலூர் திருமால் கோவிலில் உள்ள கல்வெட்டு செய்தி:

"'மிலாடான ஜனநாத வள நாட்டுக் குறுக்கைக் கூற்றத்துப் பிரமதேயம் திருக்கோவலூரான ஸ்ரீ மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்து திரு விடைக் கழி ஆழ்வார் ஸ்ரீ விமானம் முன்பு இட்டிகை படையாய்ப் பலகை பிளந்தமை கண்டு பார்க்கவ வம்சத்து மிலாடுடையார் இரண கேசரி இராமரான நரசிங்க வர்மர் கோயிலை இழிச்சி கற்கொண்டு ஸ்ரீ விமானமும் மண்டபமும் எடுப்பித்து முத்துப் பந்தலுங் கொடுத்து முன்பு கல்வெட்டுப் படியுள்ள நிபந்தங்கள் எல்லாம் ஸ்ரீ விமானத்தே கல்லுவெட்டு வித்தார் நரசிங்க வர்ம ரென்று அபிஷேகம் பண்ணி முடிகவித்து மிலாடு இரண்டாயிரம் பூமியும் ஆண்ட மிலாடுடையார் நரசிங்க வர்மர். சந்திராதித்த வல் எரிக்க வைத்தா திரு நந்தா விளக்கு இரண்டு இவைக்கு விளக்கெரிக்க கொடுத்த சாவா மூவாயப் பெரும்பசு அறுபத்து நாலு."

திருக்கோவிலூரிலுள்ள திருமால் கோவிலில் திரு விடைக்கழி ஆழ்வார் சன்னதி ஸ்ரீ விமானம் பழுது பட்டதைக்கண்டு... பார்க்கவ வம்சத்தைச் சேர்ந்த மிலாடுடையார் இரண கேசரி இராமரான நரசிங்க வர்மர் செங்கலால் கட்டப்பட்ட கோயிலை புதிப்பித்து கருங்கற்களால் ஸ்ரீ விமானமும் மண்டபமும் எடுப்பித்து,ஐந்து ஸ்தூபியும் எடுத்து,உட்பிரகாரத்தையும் ஒருமண்டபத்தையும் கட்டி,முத்துக்கள் பதித்த விதானத்தையும் கொடுத்து,சூரிய சந்திரர் உள்ளவரை விளக்கெரிக்க இரண்டு நந்தாவிளக்குகளும் கொடுத்து (விளக்கு நெய்க்காக)அறுபத்து நான்கு பெரிய பசுக்களும் கொடுத்து இத்தகவலை கல்வெட்டில் வெட்டுவிக்கவும் செய்துள்ளார், நரசிங்க வர்மர் என்ற பட்டாபிஷேக பெயர் கொண்ட மிலாடு இரண்டாயிரம் பூமியும் ஆண்டவரான பார்க்கவ வம்சத்தை சேர்ந்த மிலாடு உடையார் நரசிங்க வர்மர். கல்வெட்டு கூறும் உண்மைகள் என்ற நூலில் தி.வை.சதாசிவ பண்டாரத்தார் மேற்கண்ட கல்வெட்டைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இன்னொரு காலம் அறியப்படாத கல்வெட்டில் பார்க்கவ வம்சத்து மிலாடுடையார் நரசிங்க வர்மர் பொன்னாலான ஸ்தூபி ஒன்றைக் கொடுத்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது. மலையமான் மன்னர்களில் ஒருவரான வாணகோவரையன் என்பவர் இந்த கோவிலில் நந்தா விளக்கெரிக்க வேண்டி நிலங்களை தானமளித்துள்ளார் என்று கோவில் வெளிச்சுற்று வடக்குபுறச் சுவரில் ராஜராஜ சோழன் கால கல்வெட்டு கூறுகிறது. அதே பகுதியில் மலையமான் பெரிய உடையான் என்ற மன்னர் கிராம சபையிடமிருந்து வரி விலக்கு பெற்ற நிலத்தினை வாங்கி இறைவனுக்கு தினசரி பூஜை,நைவேத்தியம் செய்விக்க தேவதானமாக வழங்கியுள்ளார் என்றொரு செய்தியும் காணப்படுகிறது. அதே கோவிலில் வேணு கோபாலசுவாமி சன்னதிக்கு செல்லும் படிக்கட்டுகளில் உடையார் பாளையத்தை ஆண்ட உடையார்கள் சில கட்டிடங்களை எழுப்பியதாக கல்வெட்டு செய்தி காணப்படுகிறது.

சேலம் கல்வெட்டு:
சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் பேளூர் தான் தோன்றியவார் கோயில் முன் புதைந்து கிடந்த தூண் கல்வெட்டு ஒன்று கல்வெட்டு ஆய்வாளர் புலவர் துரைசாமி அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது,அதில் பார்க்கவ கோத்திரத்து மிலாடுடையார் செம்பியன் மிலாடுடையார் என்ற மன்னர் பற்றிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தென்னார்க்காடு மாவட்டம் எலவானச்சூர் சிவன் கோவில் கல்வெட்டு,மற்றும் திருக்கோவில் வீரட்டானேஸ்வரர் கோவில் கல்வெட்டு.
முதலாம் ராஜேந்திர சோழரது ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட மேற்கண்ட இடங்களில் உள்ள கல்வெட்டுகளில் பார்க்கவ கோத்திரத்து ஆதவ வீமனை உத்தம சோழ மிலாடுடையான். என்ற மன்னன் இருந்ததான குறிப்புகள் காணப்படுகிறது

பார்க்கவ குலத்தாருக்கும் கள்ளர்,மறவர் இனத்திற்குமான ஒற்றுமை ஆதாரங்கள்: 

கள்ளர்களுக்கும் பார்க்கவகுல சகோதர கூறுகள்:
இன்றைய பார்க்கவ குலத்தவர்கள் தஞ்சை கள்ளர்களின் உட்பிரிவினரே என்று வரலாற்று ஆய்வாளர் கூறுகின்றனர்.ஆனால் பார்க்கவர்கள் தனித்தே இயங்கு கின்றனர். பாரி மற்றும் மலையமான்களின் வம்சத்தினராகவே வரலாற்று ஆய்வுகள் இவர்களைக் கூறுகின்றன .தற்காலத்தே இவர்கள் பார்கவ குல மூப்பனார், பார்கவ குல உடையார் என்ற பட்டங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். மூப்பனார் என்பது ஜாதிப்பெயர் கிடையாது.இனத்தின் மூத்த குடியினர் எனப்பொருள்படும் .(மைசூர் உடையார்கள் வேறு இனத்தவர்கள்.) உடையார் என்பதின் உட்பிரிவு பட்டங்களே மூப்பனார்,நயினார்,என்பதாகு தஞ்சைக்.கள்ளர்குல அரசவம்சமாக பழங்காலம் முதலே அறியப்பட்டவர்களான பார்க்கவ குல மூப்பனார்,பார்க்கவ குல உடையார் என்ற சேதிராயர்களான பார்கவ குலத்தினர் மற்றும் தஞ்சைக்கள்ளர்களான சோழர்கள் இருவரைப்பற்றிய கல்வெட்டு இலக்கிய வரலாற்று ஆதாரங்கள் அனைத்துமே சோழர்கள் கள்ளர் மரபினரே என உறுதிப்படுத்துகின்றன. பார்க்கவ குலத்தாரின் பட்டங்கள் தஞ்சை கள்ளரில் சில: 1758 வாணாதிராயர் 762 வாணரையர் 1875 , 1765 வாண்டையார் முனையரையர்,1580 மலையமான் 1581 மலையராயர் ,கொங்கராயர்,சேதிராயன்,535 கிளிநாடர் 683 537 கிளியாண்டார், 390 க686 கத்தரியாளியார் 539 கிளிப்பாண்டார் 2342மிலாடுடையார்,1535 மலாடுடையார்,735 நத்தமான்,347உடையான், 1234சேதியராயன்,432வன்னிய நாயகன்,2342பண்டரையர், 454கோவலராயர்,786வாணகோவரையன்,138வாணராயர்6,வாணவிச்சாதிரன், 454காடவராயன்,(காடவர்களை ஆண்டவன்)612பல்லவராயர்,533அரையதேவன்,1487நாடாழ்வான் 


தற்போது அழைக்கப்படும் பிரான்மலையை(இம்மலைப்பகுதியில் இருந்து தான் புகழ் பெற்ற பிறமலைக்கள்ளர் என்ற வகுப்பினரும் மதுரை நோக்கி வந்ததாக கூறப்படுகிறது).ஆண்ட பாரி மன்னனுக்கும் மலையமான் திருமுடிக்காரிக்கும் ஏற்பட்டுள்ள மணஉறவு வரலாறு கல்வெட்டில் உறுதி செய்து அறியப்பட்ட ஒரு சம்பவமாகும். வள்ளல் பாரி ஓரியக்குலத்தை சேர்ந்தவன். ஓரியர்=சக்கரவாள சக்கரவர்த்திகள்=நாகவம்சத்தினரின் தலைவர்கள்.பாரிவேள் இந்த வம்சத்தில் வந்தவன்.(உபரிசர வசு என்னும் சோழ மன்னனும் இவ்வம்சத்தவன்). நாகர்கள் என்று அழைக்கப்படும் மரபினரின் தலைவன். (விச்சாதரர்=வானவர்).கள்ளர் என்பார் வீரம் நிறைந்த நாகர்களே என்று கூறப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் 13-ஆம் நூற்றாண்டு சுந்தரப்பாண்டியத்தேவன் கல்வெட்டுகளில் ஒருபாடிக்காப்போன் மழவராயர் என்பவரைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 'மழவர்' என்பது மலைக்கோவலராகியபிரமலைக்கள்ளரைக் குறிக்கும் பெயர் என்பது மீண்டும் இவ்விடத்து நினைத்தற்குரியதாகும். திருமலை நாயக்கர் காலத்திலும் திருப்பரங்குன்றம் கோயிலின் அறங்காவலர் உரிமை 'காரி பின்னத்தேவன்' என்பவருக்கு 'திருமலைக்காரி பின்னத்தேவன் என பட்டம்கட்டி அவருக்கே உரிமையும் செப்புப்பட்டயமும் தரப்பட்டுள்ளது.எனவே காரி பின்னத்தேவன் என்பவர் திருக்கோவிலூர் மலையமான்.திருமுடிக்காரியின் மரபில் பின் வந்தவன் என்று பொருள் கொள்கிறார்.இவர்களுக்கு முற்காலத்தில் மழவராயர் என்று பட்டம் இருந்துள்ளது.மலையமான்களின் நேரடி மரபு வழி வந்தோர் பாரியின் வம்சமான மலையமான் குலத்தார் மட்டுமே.இன்றைக்கும் சிய்யான்(ஸ்ரீஆயன்) என்ற சொல் வழக்கும் மாயாண்டி,மலைச்சாமி(மலையமான்) போன்ற பெயர்கள் பிரமலைக்கள்ளர் மரபுப் பெயராய்க் காணலாம். இவர்களைத்தான் திருப்பரங்குன்றம் கோயில் கல்வெட்டு மழவராயர் என குறிப்பிடுகின்றது.

மறவர்களுக்கும் பார்க்கவ மலையமான் குலத்தவருக்குமான இன ஒற்றுமைகள்: 

சேதுபதி(செம்பியன்) மன்னர்களும் சிவகங்கை(கௌரி வல்லபர்) மன்னர்களும் பார்க்கவ குலத்தாரைப் போல் உடையார்தேவர் என்று பட்டம் உடையவர்கள் .இந்த பட்டம் எந்த வேறு குலத்தாரிடமும் கிடையாது.பாரி ஆண்ட பிரான்மலையை ஆண்ட அழகன் குமரன் நம்பிராஜன் உடையநயினார்(வீர கேரளன்) பட்டம் உடையவர்.

பண்டாரத்தார்:

பண்டாரத்தார் பட்டம் பார்க்கவ குல உடையாரிடம் உண்டு. சேத்தூர் ஜமீன்-சேவுக பாண்டியத்தேவரும்,கொல்லம்கொண்டான் ஜமீன்-வாண்டாய தேவரும் "வணங்காமுடி பண்டாற மறவர்" என்ற உட்பிரிவை சார்ந்தவர்கள்.

அணஞ்சான்:

பார்க்கவ குலத்தாரிடம் அணஞ்சான் பட்டம் உண்டு: (எ-டு)நுணாங்குறிச்சி சுருதிமான் அணஞ்சா ஆனைவிடப்பாடி       இது போன்று 
 சொக்கம்பட்டி ஜமீன் - "செம்புலி" சின்ன அணைஞ்சா தேவர் என்ற பட்டம் உடையவர்.






மறவர்குலத்தவரான அழகு முத்து சேர்வையின் முன்னோராக "உத்தம சோழ கோன் மிலாடுடையார்" என்ற பட்டம் உடையவர். தம் முன்னோரின் பட்டமான சோழ கோன் தான் அழகு முத்து கோனாக மருவியுள்ளது. பார்க்கவ குலத்தில் உத்தம சோழ மிலாடுடையான் என்ற மன்னர் இருந்துள்ளார்.

கொண்டையம் கோட்டை மறவரின் வெட்டுவான்,சேதியர் கிளைகள் சேதியராயரை குறிக்கும். பார்க்கவ குல கத்திக்காரர்கள் வாள்வீமன் கிளையை சார்ந்தவர்கள்.

திருமுடிக்காரியின் நாணயத்தில் பச்சைக் குதிரை முத்திரை உண்டு.சிவகிரி ஜமீனின் சின்னம் குதிரையாகும். மலையமான் வம்சத்தவரிடம் வன்னியநாயகன்,வன்னியர் பட்டம் உண்டு.இது போல் சிவகிரி வன்னிய மறவர்களுக்கு வன்னியர் பட்டம் உண்டு.

இதையெல்லாம் விட மலையமானை சங்க இலக்கியத்தில் "மறப்போர் மலையன்" என்றும் "கூர்வேல் மலையன்","ஒரிவாள் மலையர்" என்றும் கூறுவர்.இது மறவர்களை"நீலக் கச்சைப் பூவார் ஆடைப், பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன் மேல்வரும் களிற்றொடு வேல்துரந்து ; இனியே, தன்னும் துரக்குவன் போலும்-ஒன்னலர் எ·குடை வலத்தர் மாவொடு பரத்தரக்(புறம்)" ஆதாவது வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்தது கிடையாது என்று கூறுவர்.

இதையெல்லாம் விட மலையமானை திருக்கோவிலூர் சித்தலிங்கமடம் "உத்தம சோழன்" கல்வெட்டில்"சூரியன் மறவனான மலையகுலராஜன்" என கூறியுள்ளது.

ஆதாரம்:
சதிரன் மறவனான ராசேந்திர சோழ மலையமான், சூரியன் சாவன சகாயனான மலையகுலராசன், 
சூரியன் மறவனான மலையகுலராசன்,
சூரியன் பிரமன சகாயனான மலையகுலராசன், 

About 4 records of this volume assigned to Uttamachola have been published in S. I. I., Volume III (Nos. 130, 147, 151 and 151-A). About 22 inscriptions in this collection are assignable to Rajaraja I. No. 412 from Siddhalingamadam dated in the 4th year records a gift made by Maladudaiyan . . . . . . It is not impossible that this Sadiran alias Rajendrasola Malaiyaman is identical with a chief of the same name on whose behalfMalaiyaman Suriyan [Ma]ravan Suriyan alias Malaiyakula-rajaan of Kiliyurincluded in the same division is stated to have made a gift of 192 cows for two perpetual lamps, to god Tiruvidaikalivalvar of Tirukkovalur in Kurukkaik-kurram in Jananatha-valanadu. It appears as though these two chief were brothers, the former being elder of the two on whose behalf the gift was made, and it might not be wrong to suggest that this chief was a father of Sadiran Suriyan [Ma]ravan Suriyan alias Malaiyakularajan (S.I.I., Vol. VII, No. 133). 

எனவே நாம் மேலே குறிப்பிட்ட கள்ளர்,மறவர்,பார்க்கவகுல உடையார்கள் இவர்கள் யாவரும் இம் மண்ணையாண்ட சேர,சோழ,பாண்டியர் என்னும் மன்னாதி மன்னர் வழி வந்த போர்க்குலத்தவர்களான வீரமரபினரேயாகும்.பார்க்கவ குலத்தார்கள்,கள்ளர்,மறவர்,அகமுடையர் இவர் யாவரும் ஆதி மறக்குடிகளே.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.