Thursday, July 4, 2013

சேர,சோழ,பாண்டியர்கள் கொள்ளையர்களா? உழவர்களா? அறப்போராளிகளா?



தன்னைத் தானே கள்ளர்,மறவர்கள் சேர,சோழ,பாண்டியனின் வாரிசுகள் என்று சொல்லிகொள்வதால் கேட்கிறேன். அப்படினா சேர,சோழ,பாண்டியன் திருடனா?கொள்ளையனா? 
என்று கேட்ட புத்திமானுக்கு எங்கள் பதில்.

இன்று புதிதாக மூவேந்தரைக் கோரி வரும் கூட்டத்தினர் எழுப்பும் முதல் கேள்வி மூவேந்தரும் கொள்ளையரா ? திருடரா? என்பது தான்.
இவ்வாறு மதியூகமாக ஐயம் கூறி வரும் உழவர்களான பள்ளர்களும் அறப்போராளிகளான சாணார்களும் எழுப்பும் கேள்வி இது தான். 

இதுவும் அவர்கள் மேல் உள்ள தவறு இல்லை. இடைக்காலத்தில் வந்த புரட்சிமிகுந்த கலாச்சார ஒழுக்கத்தை? கட்டிக்காத்த திரைப்படங்களும் திரைப்பாடல்களும் தான் காரணம் ஏனெனில் இவர்களுக்கு வரலாறு என்பது திரையில் காட்டப்படுவது போன்ற கற்பனைகள் தான். 
எடுத்துக்காட்டாக எம்.ஜி.ஆர் தான் அதிக படங்களில் மன்னராக நடிப்பார் அவர் ஒரே மனைவியைத் தான் மணமுடிப்பார். வில்லன்(எதிரி) நாட்டு மன்னன் பொறாமை கொண்டு படை எடுத்து வருவான் அப்போது அவனை வன்முறை மிகாமல் எதிரியில் கத்தியை மட்டும் தாக்கி அவனை சிறைப்பிடிப்பாரே ஒழிய எதிரிகளை கொல்லும் வன்முறையை அவர் சினிமாவில் காட்டமாட்டார்.இவர் ஏற்று நடித்த மன்னர் கதாபாத்திரங்களைத் தான் தமிழ் மன்னர்களின் பண்பிற்கே முன்மாதிரியாக அறமும்,காதலும்,வீரமும்,இரக்கத்துக்கு எடுத்துக்காட்டாக மக்கள் நினைத்தனர். 

அதைப்போல வெள்ளாளர் இனத்தை சார்ந்த கவிஞரான பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பொதுவுடமைக் கருத்துக்கள் நிரம்பிய கருத்துக்களை தன் பாடலில் கொட்டி "உழைத்து வாழவேண்டும்,ஏர்பூட்டி உழுது வாழ வேண்டும்" போன்ற உழைப்பின் தத்துவத்தை சமுதாயத்தில் விதைத்துள்ளார்.

ஆனால் சங்காலத்தில் "கடிமலர் களைந்து முடிநாறு அழுத்தித்தீ தொடிவளைத் தோளும் ஆகமும் தோய்ந்து சேறாடு கோலமொடு வீறுபெறத் தோன்றிச் செங்கண் நெடுங்கயல் சின்மொழிக் கடைசியர் வெங்கண தொலைச்சிய விருந்தின் பாணி" (சிலம்பு10:127-131) இவை முன்குறிப்பிட்ட யூகத்தை வலியுறுத்துவனவாக அமைகின்றன. அதாவது விவசாயத் தொழிலில் நேரடி உடல் உழைப்பில் ஈடுபட்டவர்களில் `கடைநிலை' மக்களே என்பது "கடைசியர்" என்று சொல்லால் புலனாகிறது. சங்க காலத்தில் பண்ணை அடிமைகள் இருந்தனரா என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லையெனினும், இக் கடைசியர் தங்கள் சமூக நிலையில் அடிமைகளின்று பெரிதும் வேறுபட்டிருக்கவில்லை எனக் கொள்ள இடமுண்டு" என்கிறார் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி!
 இலக்கியங்கள் சுட்டும் `உழவர் (மள்ளர்) ' என்ற சொல்லுக்கு உரியவர்களாக விவசாயத் தொழிலில் நேரடி உடல் உழைப்பில் ஈடுபடும் இக்கீழ் மக்களைக்(கடையர் என்ற பள்ளர்) கருத இடமில்லை.
மருத நிலங்களில் வாழும், உழுதுண்பாராகிய சிறுநிலை உடைமையாளர்களே 'உழவர் ' என்று சுட்டப்படும் சொல்லுக்கு உரியவர்களாகத் தெரிகிறார்கள்.உழவரின்(மள்ளர்)கீழ் வேலை செய்த பள்ளர்(கடைசியர்)உழவருக்கு அடிமைகளே என்று சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்கள் வாயிலாகவும் அறியமுடிகிறது. 

இதைப்போல சாணார் சமூகத்தவர்கள் வலைதளங்களில் மூவேந்தர்கள் "அறப்போர்" முறையில் போர் செய்தவர்கள் என்றும்.மறவர்களைப்போல மறப்போர் புரிந்தவர்கள் அல்ல என கூறுகிறார்கள்.
அறப்போர் என்றால் இன்றைக்கு அன்னா ஹசாரே அன்றைய காந்தியடிகளை போல் "உண்ணாவிரதப்போராட்டம்".இதைத் தான் அறப்போராட்டம் என்பர்.இதுபோல ஒத்துழையாமை இயக்கம்,உப்புச் சத்தியாகிரகம் போன்ற போராட்டம் தான் அறப்போராட்டம்.இதைத்தான் மூவேந்தர்கள் புரிந்தனரா?
 

மேற்படி புண்ணியமான இனத்தவர்களுக்கு நாம் விளக்க கடமைபட்டுள்ளோம்.
மூவேந்தர்கள்

"அறப்போர் புரியும் சாணார்களா?" அல்லது "கொலை தவறு என மண்ணுடன் உழவை மல்லுக் கட்டும் பள்ளர்களா?" அல்லது கொலை புரிந்து கொள்ளையடிக்கும் மறவர் கள்ளர் போன்ற கொள்ளை கூட்டத்தினரா?

என சில விளக்கங்கள் மூலம் விளக்குவோம்..
நாடாளும் மன்னனுக்குத் தேவையான ஆறு உறுப்புக்களுள் முதலாவதாகப் படையைக் குறிப்பிடுவார் வள்ளுவர். பிற்காலச் சோழர் காலத்தைச் சார்ந்த சீவகசிந்தாமணிக் காப்பியம் படையினால் விளையும் நன்மைகளைப் பின்வருமாறு குறிப்பிடுகிறது. "பொன்னின் ஆகும் பொருபடை யப்படைதன்னில் ஆகுந் தரணி தரணியிற்பின்னை யாம் பெரும்பொருள் அப்பொருள்துன்னுங் காலைத் துன்னாதன இல்லையே "(செய்யுள்: 1923)பொன் இருந்தால் போரிடும் படையைத் திரட்டலாம். படை இருந்தால் ஆட்சி கிடைக்கும். ஆட்சி கிடைத்தால் கிடைக்காதன என்று எவையும் இல்லை என்பது இச்செய்யுளின் பொருளாகும். ஆட்சிப் பரப்பை விரிவுபடுத்துவதே மன்னர்களின் குறிக்கோள். இதனால்தான் இடைக்குன்றூர்க்கிழார் என்ற கவிஞர்,"ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்புதுவதன்று இவ்வுலகத்து இயற்கை" (புறம் 76: 12)என்று பாடியுள்ளார். இவ்வாறு போர் என்பது மன்னர்களுக்கிடையில் மிக இயல்பாக நடைபெறும் நிகழ்வாக இருந்தது. ஆயினும், மன்னர்கள் அவர்களது படைவீரர்கள் ஆகியோருடன் இது நின்று விடவில்லை. குடிமக்களையும் பாதிக்கும் ஒன்றாகவே போர் அமைந்தது. இதைச் சங்க நூல்கள் சுட்டுகின்றன. இத்தகையக் கொடுமைகள் தமிழ் மன்னர்களுக்கிடையில் நிகழ்ந்துள்ளன என்பதனையும் தமிழ் மக்களின் சொத்துக்களே அழிவுக்கு ஆளாயின என்பதனையும் நினைவிருத்திக் கொள்ளுவது அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாகத் தனி மனிதர்களின் நாடு விரிவாக்கும் கொள்கையால் தமிழ்ச் சமுதாயம் இருந்துள்ளது. இவையெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு நடந்த கொடுமைகள் என்றால் பதினொன்றாவது நூற்றாண்டில் படையெடுப்பின்போது நிகழ்ந்த கொடுமைகள் இவற்றை விஞ்சுவதாகவே உள்ளன.

சோழன் தமிழனே :

சில பொறம்போங்க்குகள் பாண்டியனை தவிர சோழன் தமிழன் அல்ல என கட்டுரைகள் எழுதி வருகின்றனர். அவர்கள் திராவிட மக்களும் சோழனால் ஆந்திராவில் இருந்து பிடித்துவரப்பட்ட  மக்களாகிய இவர்கள் கூறி வருகின்றனர். பாண்டியனுக்கு செந்தமிழோன் தமிழ் பாண்டியன் என்னும் பெயர் உண்டு ஆனால் சோழனுக்கு உண்டா சோழனின் தெலுங்கு சோழன் உண்டு என சப்பை கட்டு காட்டுகின்றனர். அந்நிய நிறுவனங்கள் வால்மார்ட்,கிசான் போன்ற நிறுவனங்கள் தமிழில் பெயர் வைத்தால் அது தமிழர் ஆயிடுமா. தெலுங்கு சோழன் என்பவர்கள் அப்படி சோழரின் பெயரில் ஆந்திராவை ஆண்ட  அந்த மாநில வேலைக்காரர்களே  ஒழிய அவர்கள் சோழர் கிடையாது சோழரின் கல்வெட்டுகளில் பெரும்பான்மை தமிழில் உள்ளது.

அதிலும் ஒரு கல்வெட்டு செந்தமிழ் பீடு இரட்டைபாடி கொண்ட சோழன் என சோழனை தமிழன் என பாடுகிறது சோழனை கோரும் வேறு மொழி பேசும்   மக்கள் இனி தெலுங்கு என்னும் வார்த்தை அடைமொழியாய் கொண்ட சோழனை காட்டினாள் உண்டு.

தெலுங்கர் குல காலன்  சோழனான தமிழனின்  வரி  இதோ:

"முடி கொண்ட சுந்தர சோழன் என்னும் செந்தமிழ் பீடிகை இரட்டை பாடி கொண்ட சோழனை தொல்புவியுடைய"

சேரர்களின் அறம்(மற) போர் கீர்த்திகள்:

1)நன்னன் என்ற குறுநில மன்னன் தன்னுடைய பகைவர்களை வென்ற பிறகு அவர்களின் உரிமை மகளிரின் தலையை மழித்து அக்கூந்தலைக் கயிறாகத் திரித்து, அக்கயிற்றால் அப்பகைவரின் யானையைப் பிணித்தான் (நற்றிணை 270).

2)வேல்கெழு குட்டுவன் என்ற சேர மன்னன் பழையன் என்ற மன்னனை வென்று அவன் மனைவியாரின் கூந்தலைக் கொண்டு திரிக்கப் பெற்ற கயிற்றினால் யானைகளை வண்டியில் பூட்டி
அவ்வண்டியில் வெட்டப்பட்ட பழையனது காவல் மரத்தை ஏற்றிச் சென்றான் (பதிற்றுப் பத்து 5ம் பத்து)

3)கணைக்கால் இரும்பொறை என்ற சேர மன்னன் மூவன் என்பவனைப் போரில் வென்று அவனது பற்களையெல்லாம் பிடுங்கித் தொண்டி நகர் கோட்டைக் கதவில் பதித்தான்.

சோழர்களின் அறம்(மற) போர் கீர்த்திகள்:

1) சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி பகைவரது நெல் விளையும் வயல்களைக் கொள்ளையடித்து வீடுகளைக் கொளுத்திய செயல் போற்றப்படுகின்றது.பகைவர் நாட்டை எரிக்கும் இக்கொடுஞ்செயல் அடிக்கடி நிகழ்ந்தமையால்தான் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, வற்றிய பாலை நிலத்திற்கு "செருமிகு சினவேந்தன் சிவந்திறுத்த புலம்போல" என்ற உவமையைப் பயன்படுத்துகிறார்.பகைவர் நாட்டைத் தீயிட்டு அழிக்கும் கொடுமை மட்டுமல்லாது போரில் தோற்றவர்களைக் கொடூரமாகப் பழிவாங்கும் செயல்களும் நிகழ்ந்துள்ளன.

2) ராஜ ராஜ சோழனின் மெய் கீர்த்திகளில் அவனது வெற்றிச் சிறப்புகளில் ஒன்றாக "இரட்டைபாடியும், ஏழரை இலக்கமும் வென்று" என்ற தொடர் இடம்பெறுகிறது. ராஜ ராஜன் தன் மகன் முதலாம் இராசேந்திரனை அனுப்பி இவ்வெற்றியைப் பெற்றான்.முதலாம் இராசேந்திரன் தலைமையில் சென்ற சோழர் படை சத்யாசிரையன் என்ற மேலைச் சளுக்கர் மன்னனுடன் போரிட்டு வென்று இரட்டைபாடியைக் கைப்பற்றியது இப்போரில் இராசேந்திரன் மேற்கொண்ட பழி செயல்களை சத்தியாசிரையனின் கி.பி. ஆயிரத்தி ஏழாம் ஆண்டு காலத்திய கல்வெட்டு பின்வருமாறு குறிப்பிடுகிறது. (சாஸ்திரி 1989: 23940).

3) நாட்டை சூறையாடி பாழ்படுத்தினான். நகரங்களைக் கொளுத்தினான். இளங்குழவிகள் அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக் கொன்றும் கன்னியரைக் கைப்பற்றி மனைவியராக்கினான். அந்தணச் சாதியை அழித்தும் அளவற்ற பொருள்களைக் கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத் திரும்பினான்.இவ்வாறு சூறையாடி வந்த செல்வத்தின் ஒரு பகுதியைத் தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு வழங்கினான். சத்தியாசிரயனின் கல்வெட்டுச் செய்தி குறித்து தமிழ்நாட்டின் இரு பெரும் வரலாற்றுப் பேராசிரியர்கள் பின்வருமாறு கருத்துத் தெரிவித்துள்ளனர்.(இண்) பகைவனின் கல்வெட்டில் காணப்படும் பெரும் நாச வேலைகளையும் கற்பழிப்புகளையும் சோழ இளவரசன் ராஜேந்திரன் செய்திருக்கக் கூடுமா? என்ற வினா எழுந்தாலும் . . . (நீலகண்ட சாஸ்திரி 1989: 240).(இண்) பகையரசன் நாட்டிய கல்வெட்டாகையால் இது கூறும் செய்திகளை உண்மையென்று நம்பலாகாது.

4)நீதியிலும், நேர்மையிலும் சிவத்தொண்டிலும் மேம்பட்டிருந்த சோழ மன்னனின் படைகள் இத்தகையக் கொடுமைகளை மக்களுக்கு இழைத்திருக்க முடியாது. (கே.கே. பிள்ளை 1981: 272) இராஜேந்திரன் இத்தகைய செயல்களைச் செய்திருக்கக்கூடுமா? என்று சாஸ்திரியார் ஐயப்பட, கே.கே. பிள்ளையோ அப்படிச் செய்திருக்க முடியாது என்று சான்றிதழ் வழங்கிவிடுகிறார்.இராஜேந்திரனின் கரந்தைச் செப்பேட்டின் மெய்கீர்த்திப் பகுதி " . . . யானைகள், குதிரைகள், ரத்தினங்கள், பெண்கள், குடைத் தொகுதிகள்" ஆகியனவற்றை சத்தியாசிரயனிடமிருந்து ராஜராஜன் பறித்துக் கொண்டதாகக் குறிப்பிடுகிறது (தந்தையாகிய இராஜராஜனால் அனுப்பப்பட்டமையால் இராஜேந்திரனின் வெற்றிச் சிறப்பு இராஜ இராஜனின் வெற்றிச் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது).

5) இராஜேந்திரன் பட்டத்திற்கு வந்த பிறகு (1012-1044) நிகழ்த்திய போர்களில் அவன் செயல்பாடு எத்தகையது? என்பதைக் கண்டால் மேற்கூறிய கல்வெட்டுச் செய்திகள் உண்மையா? பொய்யா? என்பது புலனாகும். கி.பி. 1017-18இல் இவன் நடத்திய ஈழப் போரில் ஈழ மன்னனை இவன் வெற்றி கண்டு கைப்பற்றிய பொருள் குறித்து இவன் வெளியிட்ட கரந்தைச் செப்பேடு (செய்யுள் 58-59) பின்வருமாறு குறிப்பிடுகிறது. "அவனுடைய நாட்டையும், அவனுடைய முடியையும், அவனுடைய அரச பத்தினியையும், அவளுடைய முடியையும், அவனுடைய மகளையும், மற்றப் பொருட் குவியல்களையும் . . . கைப்பற்றினான். "சிங்கள நூலான மகாவம்சம் சிங்கள மன்னன் காட்டுக்குள் ஓடிப்போனதாகவும், உடன்பாடு செய்து கொள்ளுவதாகச் சொல்லிய சோழப்படை அவனை உயிரோடு பிடித்துக் கொண்டு, மேற்கொண்ட செயல்களை பின்வருமாறு குறிப்பிடுகிறது."தாங்கள் பிடித்த அரசனையும் தங்கள் கைக்குள் சிக்கிய கருவூலங்களையும் உடனே சோழ மன்னனுக்கு அனுப்பி வைத்தனர்.

6) பாதுகாப்பாக பல இடங்களில் இலங்கை முழுவதும் வைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்ன அறைகளை உடைத்து அவற்றிலிருந்த பொன்னாலான உருவங்களை அவர்கள் எடுத்துச் சென்றனர். அவர்கள் கண்பட்ட இடங்களிலெல்லாம் பெளத்த சமயத்து மடங்களை அழித்து இரத்தத்தை உறிஞ்சும் அரக்கர்களைப் போல் இலங்கையின் செல்வங்கள் அனைத்தையும் கொள்ளையடித்தனர்" (சாஸ்திரி, 1989: 272). வங்காள தேசத்து மன்னன் மகிபாலனை வென்று யானைகள், பெண்கள், செல்லம் எல்லாவற்றையும் கைப்பற்றிக் கொண்டான் (மேலது: 281).


7) முதல் இராஜேந்திரனின் மூத்த மகனான ராஜாதிராஜன் (1018- 1054) இலங்கையின் மீது படையெடுத்து, வீரசாலமேகன் என்ற சிங்கள மன்னனை வென்றான். சிங்கள மன்னன் ஓடி ஒளிய அவனது தமக்கையையும், மனைவியையும் சிறை பிடித்ததுடன் அவனது தாயின் மூக்கை அறுத்தான் (ளு11 111; 5056).ராஜாதிராஜன் சாளுக்கியர்களுடன் 1048இல் நிகழ்த்திய போரில் கிருஷ்ணா ஆற்றங்கரையில் உள்ள பூண்டூர் என்ற ஊரில் குறுநில மன்னர்களுடன் எண்ணற்ற பெண்களும் சிறைபிடிக்கப்பட்டனர்.பூண்டூர் நகர் அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.கழுதைகள் பூட்டிய ஏரால் உழுது வரகு விதைக்கப்பட்டது. மாளிகை தீக்கிரையாக்கப்பட்டது. சோழர் கல்வெட்டுக்கள் கூறும் இச்செய்திகள் மிகைப்படுத்தப்பட்டன என்று கூறும் சாஸ்திரியார் (1989; 346), இத்தகைய செயல்கள் சோழர் காலக் கல்வெட்டுக்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன என்பதை மறந்துவிடுகிறார்.

8)1094ம் ஆண்டுக்கான கல்வெட்டு ஆண்டறிக்கையில் (எண். 172) ஆகவமல்லன் அனுப்பிய தூதுவர்கள் இருவரில் ஒருவனுக்கு

ஐங்குடுமி வைத்து ஆகவமல்லன்

என்று பெயரிட்டும் மற்றொரு தூதுவனுக்கு

பெண்களுக்கு உரிய ஆடையை உடுக்க வைத்து ஆகவமல்லி

என்று பெயரிட்டும்

ராஜராஜ சோழ தேவர்

அனுப்பியதாக குறிப்பிடுகிறது. (சாஸ்திரி 1989: 347).சாளுக்கியர்களின் பழமையான நகரான கல்யாணபுரத்தைக் கைப்பற்றி அதை இடித்துத் தரைமட்டமாக்கி அங்கிருந்த ஒரு தூவாரபாலகர் உருவத்தைக் கொண்டு வந்தான். தஞ்சை மாவட்டம் தாராசுரம் கோவில் இடம்பெற்ற அப்படிமத்தின் பீடத்தில்

"ஸ்ரீ விஜய ராஜேந்திரத் தேவர் கல்யாணபுரம் எரித்து கொண்டு வந்த துவார பாலர்" என்று குறிக்கப்பட்டுள்ளது.

9)மேலும், இராசேந்திரசோழன் கங்கைக்கரையிலிருந்து சைவர்கள்(கங்கை வேளாளர்) சிலரை கொண்டுவந்து காஞ்சிபுரத்தில் குடியேற்றினான்(ஆதாரம்: திரிலோசன சிவாச்சாரியார் எழுதிய சித்தாந்த சாராவளி என்னும் நூல்).கங்கைத்திருநாட்டில் வேளாண்மைத்தொழில் செய்த வேளாளர் இன்றும்தமிழகத்தில், தங்களை கங்கைக்குலத்தவர் என்றே கூறிக்கொள்கின்றனர். வேளாளர்களுக்குக் கங்கக்குலம் அல்லது கங்க வம்சம் என்ற பெயரும் உண்டு. ஏனெனில் அவர்கள் பிளினி, டாலமி ஆகியவர்களால் குறிப்பிடப்பட்ட கங்கைத்தீரத்திலுள்ள வல்லமைவாய்ந்த கங்கரிடே என்ற மாபெருங்குடி மரபிலிருந்து தங்கள் குலமரபை வரன்முறையாகக் கொண்டனர். (ஆதாரம்:ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் தமிழகம் ஊரும் பேரும் என்ற நூலில் எழுதியுள்ளது).

10).முதல் குலோத்துங்கச் சோழன் (1070---1120) இரண்டாம் கலிங்கப் போரில் (கி.பி. 1110) வென்று குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள் மற்றும் செல்வங்களுடன் மகளிரையும் கைப்பற்றி வந்தான்.

11)மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1178- 1218) மதுரையின் மீது படையெடுத்து வென்ற பின்னர் அவன் செய்த செயல்களாக அவனது மெய்கீர்த்திகள் பின்வருபவனற்றைக் குறிப்பிடுகின்றன.1. பெண்கள் அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர்.2. தோற்றவர்களின் மூக்கு அறுக்கப்பட்டது.3.

[எதிரியின் அரன்மனையை கழுதை வைத்து உழுவதைக் காட்டிலும் கேவலமான செயல் ஏதுமில்லை என."உழவுத்தொழிலை" அரன்மனையில் நிகழ்த்துவது கேவலம் என உழுதொழில் இழிசினமான செயல் என கருதினர்]. பாண்டியனின் கூட மண்டபத்தை (முடி சூட்டும் மண்டபம்) இடித்து கழுதை ஏரைப் பூட்டி உழுதனர்.

திருவாரூர்த் தலைவனாக இருந்த கங்கை கொண்டான் உத்தம சோழராயனின் படையதிகாரியான கூத்தன் கணபதி என்பவனை "பகைவர்களின் மனைவியர்க்குக் கணவன்" என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது (ARE 1913 ப. 97).

பாண்டியர்களின் அறம்(மற) போர் கீர்த்திகள்:

1) பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியின் வீரச்செயல் நெட்டிமையார் என்ற புலவரால் இவ்வாறு புகழப்படுகிறது,"பகைவர் நாட்டில் தேர் செல்லும் தெருக்களைக் கழுதை பூட்டிய ஏரால் உழுது பாழ்படுத்தினாய். பறவைகள் ஒலிக்கும் புகழமைந்த வயல்களில் குதிரைகள் பூட்டிய தேரைச் செலுத்தி விளைபயிர்களை அழித்தாய்". (புறநானூறு 15).

2)இதே மன்னனைக் காரிகிழார் என்ற புலவர் வாழ்த்தும் பொழுது,"வாடுக இறைவநின் கண்ணி யொன்னார்நாடுசுடு கமழ்புகை யெறித்தலானே" (புறம் 6)என்று வாழ்த்துகிறார். பகைவருடைய நாட்டினைச் சுட்டெரிப்பதால் எழும் புகையால் உன் தலைமலை வாடட்டும் என்பது இதன் பொருளாகும்.சோழன் கரிகால் பெருவளத்தான் பகலும் இரவும் கருதாது பகைவரது ஊரைத் தீயிட்டு அந்த ஒளியில் பகைவர்களின் புலம்பலோசையுடன் கொள்ளையிடுதலை விரும்புபவன் என்பதனை,"எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர்ஊர் சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக்கொள்ளை மேவலை யாகலின்"என்ற புறநானூற்றுப் பாடலால் (7) அறிகிறோம்.

3)கி.பி. 1219இல் சோழ நாட்டின் மீது படையெடுத்த முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216 -1238) தனது வீரச்செயல்களை, செய்யுள் வடிவிலான மெய்கீர்த்தியாக கல்வெட்டில் பொறித்துள்ளான் (I.P.S; 290, 323) புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலையில் உள்ள அக்கல்வெட்டின் உரைநடை வடிவம் வருமாறு:கொடுங் கோபமுடைய குதிரைகளையும், யானைகளையும் செலுத்திச் சென்று சோழர்களின் தஞ்சை நகரையும் செந்தழலிட்டுக் கொளுத்தினான். அழகிய குவளை மலர்களும், நீல மலர்களும் தம் அழகை இழக்கும்படி குளங்களையும் ஆறுகளையும் கலக்கினான்.கூடம், மதில், கோபுரம், ஆடல் நிகழும் அரங்கங்கள், மாட மாளிகைகள், கருவூலங்கள் ஆகியனவற்றை இடித்துத் தள்ளினான்.தன்னை வந்து அடிபணியாத பகை மன்னர்களின் மனைவியர்கள் அழுத கண்ணீர் ஆறாக ஓடும்படிச் செய்தான்.

[எதிரியின் அரன்மனையை கழுதை வைத்து உழுவதைக் காட்டிலும் கேவலமான செயல் ஏதுமில்லை என."உழவுத்தொழிலை" அரன்மனையில் நிகழ்த்துவது கேவலம் என உழுதொழில் இழிசினமான செயல் என கருதினர்].பகைவரது நிலத்தை, கழுதை பூட்டிய ஏர் கொண்டு உழுது வெள்வரகை விதைத்தான்

.

சோழர் தலைநகராக விளங்கிய முடிகொண்ட சோழபுரம் சென்று "விஜயாபிஷேகம்" எனனும் சடங்கை இவன் செய்தான். அதன் பொருட்டு சோழ அரசியும், அந்தப்புரத்துப் பெண்களும் தண்ணீர்க்குடம் முதலிய மங்கலப் பொருள்களை சுமந்து வரும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர் (சாஸ்திரி, மேலது, 579).

4) முதல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (1238-70)பல்லவ மன்னனான கோப்பெருஞ்சிங்கனை போரில் வென்று அவனது தலைநகரான சேந்தமங்கலத்தை முற்றுகையிட்டுக் கைப்பற்றினான். பல்லவ மன்னனின் யானை,குதிரை மற்றும் பிற செல்வங்கள் அனைத்தினையும் கவர்ந்து கொண்டு சேந்தமங்கலத்தினை ஆளும் பொறுப்பினை கோப்பெருஞ்சிங்கனிடமே அளித்தான். சேலம் மாவட்டத்தின கிழக்கும் தென்னார்க்காட்டின மேற்குப் பகுதிகளுமான மகத நாட்டினை வாணர்களான வாணாதிராசர், வாணகோவரையர் போன்றவர்களிடமிருந்து கைப்பற்றி ஆத்தூர் அருகில் உள்ள அகழியூர - அறகழூரினைத் தலைநகராக்கிப் பின் கொங்கு நாட்டினையும் கைப்பற்றி ஆட்சி புரிந்தான் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன். தெலுங்குச் சோழ மன்னனான விசயகண்ட கோபாலனை போரில் கொன்று காஞ்சிமாநகரைக் கைப்பற்றி விசயகண்ட கோபாலனின் தம்பிக்கு ஆட்சிப் பொறுப்பினை அளித்தான். வடநாடு சென்று காகதீய மன்னன் கணபதியைப் போரில் வென்றான். நெல்லூரைக் கைப்பற்றி வீராபிடேகம் செய்துகொண்டான்.


நாம் மேலே குறிப்பிட்ட எடுத்துக்காட்டுகளில் அவர்கள் அறப்போராளிகளா அல்லது உழவர்களா அல்லது கொள்ளையடிக்கும் கூட்டத்தினரா என விளங்கி இருக்கும். 

இன்று பள்ளர் இனத்தவர்கள் தங்களை மூவேந்தர் எனக்கூறுவதற்க்கு மூவேந்தர்களும் உழவர்களே என கூறி வருகின்றனர்.இது பலன் அளிக்காத வகையில் தமிழர்களின் அனைத்து இனத்தவர்களும் பள்ளர்கள் என கூறி வருகின்றனர்.இது பத்தாது என பள்ளர்கள் பாண்டியர்களாய் வாழ்ந்து ஐரோப்பாவை நோக்கி படையெடுத்து சென்று கிரேக்கம்,ஸ்பெயின் முதிலிய நாடுகளை வென்று "இந்திர வழிபாடு"[கிரேக்க கடவுள்:ஜியூஸ்,அதினா] ஐரோப்பாவில் பரப்பினார்கள் என கூறிவருகின்றனர்.
 உலகில் எந்த மொழியிலாவது பளா,பல்ல,பால்ல,பலாஸ்,பாலாஸ் என்பது போன்று ஏதோ ஒரு சொல் காணப்பட்டால் போச்சு.(அதன் அர்த்தம் அந்நாட்டில் மலம்,கழிவு என்ற பொருளில் கூட இருக்கலாம்)ஆனால் பள்ள அரச பரம்பரை?   வரலாற்றுத் திரிபு,புனைவுகளை எழுதும் கடும் கோல்மால் புளுகினிகள் அங்கு காணப்படும் பளா என்ற வார்த்தையில் உள்ளதும் நாங்கள் தான்..,நாங்களே தான் அதற்கு மூதாதையர் என்று உரிமைகோரி தமிழர்களையே அசிங்கப்படுத்தும்.
 இன்றைய கிரேக்கர்களும்,ஸ்பெயினியருக்கும் தமிழ்நாட்டு சேரிக்குடி பள்ளர் தான் மூதாதையர் என்று அவதூறு கூறினால் அவர்கள் தற்கொலை செய்து கொள்ளமாட்டார்களா?
.போய் வேலையை பாருங்கள் இந்த மாதிரி எல்லாம் புத்திக் கோளாறான  நகைச்சுவைகள் பேசினாலே உங்க வீட்டிலேயே முறைப்பார்கள்.(தோல் நிறமே வேறு வேறு நண்பர்களே). 

புதிதாய் சில வருடங்களாய் மூவேந்தரும் பள்ளர்கள் என்று கூறி மன்னர்களையும் அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கும் இவர்கள், ஐரோப்பியர்களும் பள்ளர்கள் என அபரிமிதமான பொய்களையும் கூட கூறுகிறார்கள்.அது போக பள்ளர்களைத் தவிர மற்ற தமிழ் ஆதிக்க சாதியினர் அனைவரும் ஆரியர்களாம்?அதற்கு வேறு கற்பனையாக புனைவு செய்து அதையும் ஆதாரங்கள் என்று கூறுகிறார்கள்.

இது பரவாயில்லை கண்டாலே தீட்டு என சில வருடங்கள் முன்பு வரைக்கும் பழிக்கப்பட்டசாணார்கள் தான்.
முன்னாள் "பெனீசியர்களாம்"[பாண்டியர்களாம்] இவர்கள் பனைமர கப்பல் ஏரி கிரேக்கம் வரை சென்று ஆண்டார்களாம்.இவர்களை பற்றிய அலெக்சாண்டர் கல்வெட்டு உள்ளதாம்?.(ஆனால் தமிழ்நாட்டில தான் ஏதும் கிடையாது போல).பாண்டியன்,சேரன்,சோழன்களும் பனை ஏறியதற்காக எந்த சான்றுகளும் கிடையாதே. 

மன்னர்களாக இருந்த இவர்கள் தாழ்ந்த சாதியினராகி முழுமையாக உடை உடுத்தாமல் புறக்கணிக்கப் பட்டார்களாம்."கேப்பையில் நெய்வடியும்","ஊர்க்குருவி பருந்தாகும்" கதைகள் சாத்தியமானால் இதுவும் உண்மையாகும். 

உலகப்பேரரசர்கள் யார்? 

1)அலெக்சாண்டர்-மசிடோனியா என்ற கிரேக்க நாடோடி மூர்க்கமான மன்னன்.(அன்றைய உலகத்தின் பாதியை பிடித்தவன்)

2)செங்கிஸ்கான்-மங்கோலிய நாடோடி மன்னன் அலக்சாண்டரின் நிலப்பகுதியை விட இருமடங்கு நிலத்தை வென்றவன்,அன்றய உலகின் கால்பங்கு மக்கள் தொகையை குறைத்தவன்.

3)ஜூலியஸ்சீசர்-இவன் ரோமில் மட்டும் முடிசூடவில்லை.உலகின்  250 மன்னர்களின் கிரிடங்களை வென்று சூடியவன்.
இன்னும் உலகத்தின் அரசர்கள்,பேரரசர்கள் என அனைவரும் போர்தொழிலைத் தவிர மற்ற எந்த தொழிலைச் செய்தவனும் அரசனான சரித்திரத்தை காட்டவே முடியாது. 

போர்தொழில் இல்லாத,மன்னராட்சி முடிவுற்ற காலத்தில் அந்த போர்தொழிலை மட்டுமே தெரிந்த மறவன் கள்ளனாக கொள்ளை,கொலை புரிந்து திரிவானே தவிர விவசாயிகளிடம் எல்லாம் மண்ணடிமையாக,மரமேறிக் கொண்டு  இருக்க மாட்டான்.இதுவே எதார்த்தம். 

எனவே உங்கள் கேலிக்கூத்துகளுக்கு திண்ணையில் இடமுண்டே தவிர மன்றத் திடலில் இடமில்லை. 

வாளெடுத்த மறவனுக்குத்தான் அரச பரம்பரை என்ற வரலாறே. கொலையும் கொள்ளையும் சேர்ந்தது தான் அரசர்களின் வாழ்க்கை முறையே தவிர,.கலப்பையை பிடித்தவனுக்கு வடித்த கஞ்சி தான் இருக்கும்.கொள்ளையர் என்ற அரசர்களின் பண்புடைய மறத் தொழில் புரிந்த வரலாறு இருக்காது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.