Saturday, February 9, 2013

ஊற்றுமலை வம்சாவளி

ஊத்துமலை ஜமீனை இப்போது பலரும்  இன்னும் எத்தனையோ சாதிகளும் கிண்டலடிக்கும் ஊத்துமலை ஜமீன் தன்னை "கண்ணப்பர் குலத்தில் வந்த மருதப்ப தேவன்" என குறிப்பிட்டுள்ளாரா இல்லை கண்ணப்பர் குலத்தில் தோன்றிய முனையதரையர் முத்தரையர் என்ற பட்டம் கொண்ட திருமங்கை ஆழ்வார் குலத்தில் தோன்றியவரா என பார்ப்போம். 

எங்கள் ஊத்துமலை மன்னர் "மறவர் குல மாணிக்கம்" அவரை போலியாக வகையாடி உள்ளனர்.

 பாளையபட்டு வம்சாவளிகள் என மெக்கன்சி கையெழுத்து பிரதிகள் என்ற ஆங்கிலேய ஆவணத்திலும் அவர் கையெழுத்து இட்ட மூலப்பிரதியில் என்ன சொல்லபட்டது. அதே நேரம் அந்த ஓலையை எழுதிய புள்ளிகள் அவரது தகவலை தவிர இனைப்பாக சேர்த்து விட்ட "பெரியபுராணம்" மற்றும் "நாலாயிரம்திவ்வியபிரபந்தம்" உள்ள செய்திகள் ஊத்துமலை வம்சாவளியில் இருந்ததா என்று பார்ப்போம்.

 பாளையபட்டு வம்சாவளியிலே "கண்ணப்பர் குலத்தில் தோன்றிய மருத்தப்பன்" என்றோ "கள்ளதிருமங்கை மன்னன் குலத்தில் தோன்றிய மருதப்பன்" என ஒரு இடத்தில் கூட சொல்லவில்லையே. 

மாறாக "மரவங்கிசத்திலே தோன்றிய நாகராஜா மகன் தின்னராசா" என பொதுவாக சொல்லி இருந்தது அந்த ஒலை. அது மெக்கன்சி உதவியாக இருந்த தெலுங்கு பிராமணர் ஒருவர் "பெரியபுராணம்" என்ற செய்யுளில் உள்ள கண்ணப்பன் மறவன் என வந்ததை வைத்து இதில் சேர்த்து விட்டுள்ளார். 

இதேபோல் கள்ளர் திருமங்கை மன்னனையும் மறவர் என சேர்த்துள்ளார் இது அவரின் சேர்க்கை. பாளையபட்டு வம்சாவளியில் "மீனாட்சி அம்மன் விலாப்புரத்தில் தோன்றி மறத்தன்மை கொண்டதால் மறவர்கள் என்றும் திக்கு விசயத்துக்கு மறவ வீரர்கள் சூழ சென்றார்" என வந்துள்ளது. 

அடுத்து கண்ணப்பர் பற்றி, "அப்படிபட்ட மறவங்கிஷத்திலே நாகராசா மகன் தின்னராசா ராச்சிய பரிபாலன் செய்யும் நாளில்" என  கண்ணப்பர் கதை மொத்த மறவருக்கும் பொதுவாக சொன்னது. இதை 12 ஆம் நூற்றாண்டுக்கு முன் எந்த பெரியபுராண பெயரை பார்க்கவே முடியாது. 12 ஆம் நூற்றாண்டுக்கு முன்னே மறவர் கல்வெட்டுகள் 50க்கு மேல் உள்ளது. அப்பிடி இருக்க கன்னப்பர் பற்றி 12-நூற்றாண்டுக்கு முன் எந்த இடத்திலும் இல்லையே. பெரியபுராணம் என்பதே ஒரு வெள்ளாளன் என்ற சாதியை சேர்ந்த சேக்கிழான் என்பவராலே எழுதப்பட்டது. இதை பின்னால் பார்ப்போம்.

 பாளையபட்டு வம்சாவளியில் 2-ஆம் பக்கம் "பெரியபுராண கவிதை என்னவென்றால் 'என் மரக்குலத்து வந்த வேட்டுவ சாதியால் கரடி,வேங்கை......' என இது பெரியபுராணத்தில் உள்ள கதை என தெளிவாக கூறுகிறார்கள் .

கன்ணப்பரை ஊத்துமலை மன்னர் தன் குல முன்னோர் என சொல்லவில்லை ஆனால் அந்த வம்சவளி எழுதியுள்ளவர் சேர்த்துள்ளார். இது போக வடமொழி சமஸ்கிருத ஸ்லோகங்களை சேர்த்துள்ளார் அந்த பிராமணர். இது ஊத்துமலை மன்னர் அறியாதது. ஆக கன்னப்பர் கதையை மருதப்ப தேவர் கோரவில்லை அந்த பிராமணர் சொருகியுள்ளார். 

இதேபோல் 3-ஆம் பக்கத்தில் அந்த பிராமணரே எழுதியுள்ளார் என அவரின் மொழிநடை "பிராமண பாஷை" வருகிறது.........."பெரியாவாள் தோத்திரம் செய்ய" "ஜந்துக்கள் முதல்" "ஷேமம் கொண்டு" என வார்த்தை வருகிறது.

 3-ஆம் பக்கத்தில் "அப்படிப்பட்ட மரக்குலத்தில் கவியராஜா ஸ்ரீ ரங்கநாதருக்கு திருப்பனி" என கலியன் என்ற பெயரை கவிராஜ என சொல்கிறார் அந்த பிராமணர்.பின் திருமங்கை ஆழ்வார் கதை வருகிறது. இங்கேயும் "திருமங்கை மன்னன் வழி வந்த மருதப்பன்" என சொல்லவே இல்லை.


6-ம் பக்கதிலே கண்ணப்பநாயனார்,திருமங்கைமன்னன் கதை எங்கிருந்து எடுக்கபட்டது என தெளிவாக சொல்கிறார் அந்த பிராமணர் "யிப்படி எல்லார் பேர்பெற்ற மரக்குல சரித்திரங்கள் மதுராபுரியில் சங்கத்தார் செய்யுளிலும் சொல்லியிருக்கிறது. சந்த சங்க செய்யுள் காரிகை உதாரணத்திலிருப்பது என்னவென்றால்............... "யிப்படி புராணங்கள்,கலம்பகங்கள்,கம்பராமாயணம் மற்ற பிரபந்தங்களில்லும் சொல்லியிருக்கிறார்கள்" என தெளிவாக இது அனைத்தும் புராணத்திலிருந்து தான் சொல்லபட்டது. மருதப்ப தேவன் வம்சாவளியில் இல்லை என தெளிவாக சொல்கிறார். 

இதன் பின்னே தான் ஊத்துமலை ஜமீன் கையெழுத்திட்ட சுயசரிதை தொடங்கு கிறது.... அப்படிப்பட்ட மரக்குல பரம்பரையாயிருக்கிற வங்கிஷத்திலே எங்கள் முன்னோர் கிளுவை கொண்டையங்கோட்டை பிரிவு என தொடங்குகிறார். 

ஆக கண்ணப்பன் கதையும்,திருமங்கை மன்னன் கதையும் ஊத்துமலை வம்சாவளியின் பிரதியில் இல்லை.

 இதே கொண்டயங்கோட்டை மறவரில் தான் நெற்கட்டான்செவ்வல்,சுரண்டை,நடுவகுறிச்சி அனைவரும் ஒரே பிரிவுதான். அதில் எதிலும் கண்ணப்பன் கதையும் திருமங்கை மன்னன் கதையும் குறிப்பிடபடவே இல்லை.

 இதன் பின் பாளையபட்டு வம்சாவளியில் .......... ஒரு பிரிவினர் இடப்பெயர்ச்சி ஏற்படும் போது பொதுவாக சொல்லும் "மகட்கொடை மறுப்பு கதை" தான் சொல்லபட்டுள்ளது. மகட்கொடை மறுப்பு கதை மறவர்,கள்ளர்,நாயக்கர், நாடார்,வலையர்,வெள்ளாளர்,நாட்டுகோட்டை செட்டி என பல சாதிகளிலும் உள்ளது. ஆதாவது நாங்கள் பிழைக்க வரவில்லை மன்னனை பகைத்து வந்தோம் என சொல்வதில் உயர்வு கருதி சொல்லபடுகிறது. குறிப்பாக தெலுங்க நாயக்கர்கள் "ஆந்திராவில் இசுலாமியன் பெண் கேட்க இராவில் கிளம்பி வந்தோம்" எனவும் நாடார் sishri.org ஒரு கட்டுரையில் "கொச்சி ராசா பென் கேட்டான் கொழும்பு மன்னன் பெண் கேட்டான் கிளம்பி வந்தோம்" நாட்டுகோட்டை செட்டி காவிரிபூம்பட்டினதின் சோழ மன்னன் பெண்கேட்டதால் கிளம்பி காரைக்குடி வந்ததாக ஆயிரம் கதைகள் உள்ளது. என கூறும் இந்த கதைகள் பொதுவானவை.


 மறவர் வரலாறு என்றும் "பெரியபுரானம்" "அக்கினிபுராணம்" போல் கற்பனை இருக்காது யதார்த்த நேர்மையே இருக்கும் கண்ணப்பன் கதை நம்பமுடிகிறதா? திருமங்கை மன்னன் கதை நம்பமுடிகிறதா? ஆனல் பக்தியை கிண்டல் பன்னவில்லை. ஊத்துமலை ஜமீன் வரலாறு- ந.ராசையா எழுதியுள்ளார் அதில் வருவதை கவணியுங்கள் அதுவே ஊத்துமலை நிஜ வம்சாவளி, 


தமிழகத்தின் தென்பகுதிகளில் குறுநில மன்னர்கள் ஆண்டு வந்தனர். அவர்களைப் பாளையக்காரர்கள் என்று அழைத்தனர் பாளையக்காரர்களில் மறவர் மேற்கு பகுதி பாளையங்களாகவும் நாயக்கர் கிழக்கு பகுதி பாளையங்களாகவும் திருநெல்வேலி சிமையுள்ள அவனைவரும் இராமநாதபுரம் பகுதியில் உள்ள "கிழுவை"[ஆனால் கிழுவை நாடு தென்காசி பகுதியில் உள்ள கேரள குற்றால பகுதி என தெரியாது]" நாட்டிலிருந்த வந்தவர்களேன "வாள் எழுபது" என்னும் நூலில் ஆசீர்வாததேவர் பக்கம் 16ல் கூறுகிறார் அவ்வாறு வந்த பாளையங்களில் ஒன்றுதான் ஊத்துமலை பாளையமாகும்.


 ஊர்க்காடு,சுரண்டை,நடுவக்கு|றிச்சி,தலைவங்கோட்டை,சொக்கம்பட்டி நெற்கட்டுஞ்செவ்வல்,அழகாபுரி,தென்மலை,சிவகிரி,சேத்தூர்,கொல்லங்கொண்டான் குருக்கள்பட்டி,சிங்கம்பட்டி,மனியாச்சி,கடம்பூர்,ஊத்துமலை ஆகியவை மறவர் பாளையமாகும். 

பாண்டிய மன்னனுக்கு சகல உதவிகளும் செய்து நாட்டில் அமைதி ஏற்படக்காரணமாக இருந்த மறவர்களுக்கெல்லாம் பட்டங்களும்,பதவிகளும் வழங்கபட்டன. ஊத்துமலை ஜமீந்தார்க்கு விஜயகுனராம பாண்டியன் என்ற பட்டமும் உபய சாமரம் பல விருதுகளுடன் கொடிகளுடன் வழங்கினான்

 பாண்டியன் உக்கிரன்கோட்டையில் அரசு செலுத்தும்போது குறும்பர்களின் தொல்லைகளை ஒழித்ததால் இப்பகுதி "ஊத்துமலை" வழங்கியதாக வரலாறு கூறுகிறது. 

வேறு ஒரு ஆய்வின்படி ஊத்துமலை மன்னர் சேரநாட்டிலிருந்து பிரிந்து கிழக்கே வந்து அரசு ஏற்படுத்தியதாகவும் அதனாலேதான் மறவர் பாளையத்தில் ஊத்துமலை மட்டும் வைணவ மதத்தை சார்ந்தவர் என தெரிகிறது. இதுவே உண்மையாக இருக்ககூடும் காரணம் இவர்கள் தலைநகரம் "வீரகேரளம்புதூர்". மற்றும் கொண்டையங்கோட்டை மறவர்கள் பற்றிய கயத்தாறு வெட்டும் பெருமாள் பாண்டியன் கல்வெட்டில் "குண்டையம் கோட்டை மறவரில்" என வருகிறது. இந்த குண்டையம் என்னும் இடம் இன்றய கேரளாவில் இருக்கிறது. 

ஆதாவது தென்காசியிலிருந்து 80கி.மி தொலைவில் இருக்கிறது. அதுவே கிளுவை நாடு அங்கு "குண்டையம்" இடத்தில் இருந்த கோட்டையை தான் "குண்டையங்கோட்டை" என கூறுகிறார்கள். மேலும் பாண்டியன் நடத்தி வந்த தசரா திருவிலாவை தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் விழவை இன்று ஊத்துமலை ஜமீனே நடத்துகின்றனர்.

 பாண்டியருக்கு பின் நாயக்கர் ஆட்சியில் 72 பாளையத்தில் ஒன்றானது ஊத்துமலை. மதுரை நாயக்கர் ஆட்சியை ஒழித்து விட்டு பாண்டியர் ஆட்சியை மீண்டும் நிலை நிறுத்த மாவீரன் பூலித்தேவன் தலைமையில் ஐந்து கோட்டைகள் எழுந்தன. அதில் முக்கியமான ஒன்று ஊத்துமலையாகும். ஊத்துமலையில் பஞ்சபாண்டியர்களில் ஒருவரான "மாறவர்மன் கோட்டை" என்னும் பெயர் சூட்டபட்டது பூலித்தேவனால்..


 மேலும் இன்றைய ஊத்துமலை மன்னரே பூலித்தேவனின் பெண்ணடி வாரிசு.பூலித்தேவன் ஆண்வாரிசு இல்லாமல் இறந்தார். அவரின் பெண் ஊத்துமலையில் வந்த மருமகளாவர். 


பாண்டியன் வீரகேரளவர்மன் என்பவனின் பேரே வீரகேரளம்புதூர் என சதாசிவபண்டாரத்தார் "பாண்டியர் வரலாறு" நூலில் கூறுகிறார்.. தென்காசி பராக்கிரம பாண்டியன் மன்னுக்கு ஊத்துமலை பாளையக்காரர் உதவி செய்த்தாக "இராசசேகர தங்கமனி" பாண்டியர் வரலாற்றில் கூறியுள்ளார்.

 கொண்டையங்கோட்டை மறவர்களும் சேரநாட்டில் இருந்து வந்து பாண்டியர் பட்டங்களை அனிந்த சேர பாண்டியரே ஆவர். வெட்டும் பெருமாள் கல்வெட்டில் கொண்டையங்கோட்டை மறவருக்கு அஞ்சாத கண்டன்,சீவலவன்,வென்றுமுடிகொண்ட பாண்டியதேவன்,தொண்டைமான்,இராமகுட்டி(இது சேர பெயரே),ஆள்புலி தேவன், என சேரன் பாண்டியன் பெயர்களே வந்துள்ளது. ஊத்துமலை வம்சாவளி பிரதி பற்றியும் இந்த நூலில் வருகிறது. 


இப்படி யதார்தமான வரலாறு கொண்ட ஊத்துமலை எந்த இடத்திலும் கண்ணப்பர் வம்சம் என்றோ இல்லை திருமங்கை மன்னன் வம்சமோ கூறவில்லை. 



இப்போது ஊத்துமலை ஜமீன் தோன்றும் பல நூறு வருடங்களுக்கும் முன்னே கண்ணப்பனை கோரிய ஜாதிகள் யாவை என பார்ப்போம். 

இவர்கள் கல்வெட்டுகளிலே கண்ணப்பன் பெயரை கொண்டுள்ளனர்.


 "பெரியபுராணம்" என்ற கற்பனை தமிழ்நாட்டில் 12-ஆம் நூற்றாண்டுக்கு முன் கிடையவே கிடையாது. அதை எழுதிய சூத்திரனும் ஒரு வெள்ளாளன் தான். "கண்ணப்ப நாயனார்" பாடல்களிலே கண்ணப்ப நாயனாரை வேடர்,மறவர்,மழவர்,எயினர் மள்ளர்,மலையர்,குறவர்[இது அத்தனையும் ஒரே ஜாதியா?] என விதவிதமாக பாடியுள்ளார். 

இதைப்போல் இராமாயன குகனை மறவர் என குறித்து இத்தனை வருட வரலாற்றில் மறவரின் மீது பழிபோட்டது தொண்டை மண்டல வேளாளர் ஓலை சுவடிதான்.

https://thevar-mukkulator.blogspot.com/2022/11/blog-post_27.html


 இது வெள்ளாளர்கள் மறவர் சாதி மீது கொண்ட காழ்ப்புனர்ச்சி காரணமாக ஆந்திர பகுதி வேட்டுவனை மறவர் என எழுதியுள்ளனர். பெரியபுராணத்தில் பிராமணன் மன்னன் சூத்திரன் என மூனு பிரிவு மக்களை தான் குறித்துள்ளனர். அதில் பிராமணன்,மன்னனை தவிர மித்த அனைத்து நாயன்மாரும் வெள்ளாளர் என கல்வெட்டுகளில் வந்துள்ளனர். 





கீழ்வருகின்ற சேக்கிழார் வரலாறு சேக்கிழார் புராணம் எனும் உமாபதி சிவாச்சாரியாரால் எழுதப்பெற்ற நூலை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்நூலில் வருகின்ற சில செய்திகளையும், இந்த நூலின் ஆசிரியர் உமாபதி சிவாச்சாரியார் என்பதையும், மா. இராசமாணிக்கனார் எனும் ஆய்வாளர் மறுத்துள்ளார்.

பிறப்பு

பொ.ஊ. 12-ஆம் நூற்றாண்டில் தொண்டை நாட்டைச் சேர்ந்த புலியூர்க் கோட்டத்தில் உள்ள குன்றத்தூர் என்னும் ஊரில் வேளாளர்[1] மரபில் வெள்ளியங்கிரி மற்றும் அழகாம்பிகை ஆகியோருக்கு முதல் மகனாகச் சேக்கிழார் பிறந்தார்

சேக்கிழார் வரலாறு குறித்தும், அவருடைய காலம் குறித்தும் பல்வேறு அறிஞர்கள் ஆய்வு செய்துள்ளார்கள். மா. இராசமாணிக்கனார் அவரது பெரியபுராண ஆய்வு நூலில் பல்வேறு ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார்.[2]

அதன்படி சேக்கிழாரின் இயற்பெயர் இராமதேவன் என இருக்கலாம் என்று கூறுகிறார்.[2] மேலும் சேக்கிழார் வரலாற்றில் கூறப்படும் அரசன் சீவக சிந்தாமணியைப் படித்ததும், அதற்குச் சேக்கிழார் மறுப்பு தெரிவித்து பெரியபுராணம் இயற்றியது குறித்தான கருத்துரு தவறானது என்றும், சேக்கிழார் சீவக சிந்தாமணியைப் படித்து, அதிலிருக்கும் கருத்துகளைப் பெரியபுராணத்தில் எடுத்தாண்டுள்ளார் என்றும் கூறுகிறார்.[2]

சேக்கிழார் பெரிய புராணம் எனும் திருத்தொண்டர் புராணத்தினை இரண்டாம் இராசராசன் காலத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவில் திருவொற்றியூர்க் கோயிலில் இயற்றியுள்ளார்.[2] இக்காலம் பொ.ஊ. 1174 ஆக இருக்கலாம் என்பது அவரது ஆய்வு



முதலில் கோரிய ஜாதி பள்ளி என்ற வன்னிய சாதியர், 

கல்வெட்டுகளில், சம்புவரையர் திருக்கன்னப்பன் பாதம் தொட்டு வில் கோர்ப்போம். இல்லை எனில் "வேட்டை விச்சாதரோம் திருகண்ணப்பவம்சம் அல்லாதோர்" என சம்புவரையர் கண்ணப்பன் வம்சம் என சம்புவரையர் கூறியுள்ளார். 

ஆணால் கல்வெட்டுகள் படி திருகண்ணப்ப வம்சம் என கல்வெட்டு பொரித்திருப்பது மறவர்கள் அல்ல அது தொண்டைமண்டல பகுதியை சார்ந்த சம்புவரையர். என்பவர்
"சம்புவரையர்களுக்கு இதற்கு விட்டோம் இதற்க்கு கழிவு சொல்லுவோர் வேட்டைகாரர் வம்சமும் திருக்கண்ணப்ப வம்சமும் அல்லோம்" என அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்பநாயனார் வழி வந்ததாக சம்புராயர்கள் கூறுகின்றனர். 


இதே போல் பள்ளிகள் என்னும் இனக்குழுவினர் வேட்டையில் வரும் விலங்குகளை விற்று பிளைக்கும் ஜாதி
என கூறுகின்றனர். 

 வன்னியர் வரலாறு எனும் நூலை நடன,காசிநாதன் எழுதியுள்ளார்.

 "வன்னியர் வரலாறு" எனும் நூலில் வன்னியன் என பெயரில் வந்த கல்வெட்டுகளில் வன்னியர்கள் நாயன் கண்ணப்பன் என நிருபனமாகிறது.

"நீலாங்கரையன் வன்னிய நாயனான உத்தம நீதி கண்ணப்பன்"

"இவன் வன்னிய நாயனாரான உத்தம நீதி கண்ணப்பன் பாக்கல் வேண்டு"
பள்ளி சாதி தான் கண்ணப்ப நாயனார் சாதி என உறுதியான கல்வெட்டு


வன்னிய வேட்டைக்காரன்

In the Pudukkottai District, kalappur Mayilapatti inscription pertaining to Sundara Pandiya says the following :-
"மஹாபிரதானி மண்டலிக குமாரர் வன்னிய வேட்டைக்காரன்
மல்லைய தொண்ட நாயக்கர் மருமகனார்
" (Avanam-13, Year-2002, Page-23)
"வேட்டைக்காரன் அத்தி மல்லன் விளக்கநேன்
களமிருதூர்ப் பள்ளி பெருமான் 
தொண்டநைச்
சாத்தி வைத்த விளக்கு"
(A.R.E No.365 of 1902)





வன்னியநாயன்<=>வன்னியர்கள் தலைவன்.
வன்னியநாயன் கண்ணப்பன் என வன்னியர்களின் நாயகன் கண்ணப்பன் என்பதை நினைக்க உள்ளம் பூரிக்கிறது. உவகை கொள்கிறது. 

 மலைமான் ஒருவனும் தன்னை கண்ணப்பன் என கூறியுள்ளான். 

இராஜமானிக்கனார் "சோழர் வரலாறு" 71 க.என்.1919 "அருளாள பெருமாளான இராச இராச மலையமான் மகனான கண்ண்பன் மலையமான்". 

கண்ணப்பன் மலையமான் என்றால் என்ன பெயருக்கு முன்னே இன்ஷியல் வைப்பதன் அர்த்தம் என்ன. பின்ன வன்னியர் என ஆந்திர காளஹஸ்தி,காஞ்சிபுரம் என்ற பல்லவ நாட்டில் இருப்பவர்கள் யாரப்பா? இவங்க தான் சொல்லனும்.




இனி கண்ணப்பர் வம்ஸம் பற்றி யாருக்கும் கருத்து இருக்காது .

சிலை எழுபதையும் வன்னியபுராணத்தையும் பனையோளை கோமாளிகள் என்றும் உண்மையல்ல என அரசாங்க நடுவர்களே தீர்ப்பிட்டதை வெளியே சொல்லாமல் வெளியிடுகள் மூலம் விளம்பரம் செய்கின்றனர்.



கொங்கு நாட்டு பட்டயக்காரர்களிலே தாராபுரம் பட்டகாரர்,கோபன் மன்றாடி என்ற இரு கொங்கு வேட்டுவர் கண்ணப்ப வம்சத்தில் தோன்றி சேரன் வேண்டுகோளில் கொங்கு பகுதியில் குடியேறிதாக கூறுகின்றனர். சில பட்டயங்களில் வேட்டுவர், முத்தரையரின் வழித்தோன்றல்கள் என்று செப்புகின்றன. வேட்டுவர் முத்தரையரும் கண்ணப்ப நாயனாரைத் தமது குல தெய்வமாகக் கொண்டு வழி படுகின்றனர். எட்கார் ஃதர்ஸ்ட்டன் (Edgar Thurston) அவர்கள் முத்தரையர், வேட்டுவர், வலையர் ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறியுள்ளார்.அங்கிருந்த வேட்டுவ வேந்தனிடம் படை உதவி பெறுவதுண்டு. ஒருகால கட்டத்தில் காளஹஸ்தியில் இருந்த வேட்டுவர் கொங்கு நாட்டில் குடியேறியுள்ளனர். இதனால், வேட்டுவர் காளஹஸ்தி வேந்தரிடையே சுமுகமான உறவும் இருந்தது. இதனை வைத்துக்கொண்டு வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம் காளஹஸ்தி எனக் கூறுதல் தவறாகும்.பழைய கோட்டைப்பட்டக்காரர் செப்பேடுகளில் வேட்டுவ முத்திரைக்காரர் ஒருவர் குறிக்கப்பெறுகிறார். வேட்டுவ கவுண்டப் பட்டக்காரருள் ஒருவரான தலைய நாட்டுவள்ளல் கவுண்டர் என்பார் சுந்தரபாண்டிய தண்டெறி முத்துராஜா என்று மெக்கன்ஸியால் குறிக்கப்பெறுகிறார். வேட்டுவ கவுண்டருள் கொங்கர் செல்வ முத்தரையன், சோழ முத்தரையன், சிய முத்தரையன், சேந்த முத்தரையன் முதலானோர் குறிக்கப்படுகின்றனர். கோபி வட்டம் கொங்கர் பாளையத்தில் இன்றும் பெரும் அளவில் முத்தரையர் வசிக்கின்றனர். திருச்சி மாவட்டம், திருச்சி வட்டத்திலும் (குறிப்பாக வடசேரிப் பகுதி) குளித்தலை வட்டத்திலும் வாழ்ந்து வருகின்ற ஊராளிக் கவுணடர்கள் முத்தரையர், கண்ணப்பர் குலவலையர் என அழைக்க்படுகின்றனர். கொங்கு நாட்டின் பல பகுதிகளில் கண்ணப்பருக்கு வழிபாடு நிகழுங்கால் முத்தரையரி முதலுரிமை பெறுகின்றனர். இவற்றை நுண்ணிதின் ஆராய்ந்து பார்க்குங்கால் வேட்டுவர்க்கும், முத்தரையர்க்கும் ஏதோ ஒருவிதமான நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதனை ஊகிக்கலாம். 


தென்பகுதிகளில் மறவருக்கு அருகே வாழும் 
வலையர் சமூகத்தார்களே தங்களை கண்ணப்பர் கோத்திரத்தார் என குறிப்பிடுகிறார்கள். ஆனால் ஒரு மறவன் கூட தன்னை கண்ணப்பர் வழி வந்தவன் என குறிப்பிட படவில்லை 

இராமநாதபுரம் ஜாதிகளிலும் கண்ணப்ப கோத்திர வலையர் எனவே குறித்துள்ளனர் 




இதைப்போல் 12 ஆழ்வார்களில் ஒருவரான "திருமங்கை ஆழ்வார்" அவரை எந்த பிரபந்தம் மறவர் என குறிப்பிட்டது தெரியவில்லை அவரை ஒருவராக கோரினார். அதனாலே தாம் வைனவராக உள்ளதாக கூறியுள்ளார். நாம் கேட்பதல்லாம் கன்னப்பநாயனார் காலம் எது கன்னப்பநாயனாரை பெரியபுராணம் கூறும் காளஹஸ்தியில் இன்று மறவர் இருக்கின்றனரா? அல்லது மறவர்கள் இருந்த சுவடு உள்ளதா? கன்னப்பநாயனார் வழி வந்தவர் திருமங்கை ஆழ்வார் என ஏதும் ஆதாரமுள்ளதா என கேட்டால் கிடையாது என்றே பதில் வரும்.


முத்திரையர் முனையத்தரையரான திருமங்கை  மன்னரை கள்ளர் என்றும் காரளர் என்றும் கோரி வருகின்றனர் 


 புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களின் கல்வெட்டில் 


கல்வெட்டுகளில் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள் தங்களை கள்ள திருமங்கையாழ்வார் மந்திரியினுடைய (சோழனின் மந்திரியாகிய) வங்குஷம் என்றும், இந்திர குல வங்குஷம் என்று கூறுகின்றனர்.


சோழர் கல்வெட்டில் 

1235  ஆம் ஆண்டு திருப்பதியை அடுத்த திருச்சானூர் எனும் அலர் மேல் மங்கைபுரக் கோவில் சோழர் காலத்தில் ‘இளங்கோவில் எனப்பட்டது. அதனில் பெரிய நாட்டவர்’ கார்த்திகை மாதத்திற் கூடிக் கோவில் சம்பந்தமான காரியங்களைக் கவனித்தனர் ; காராளர் கற்பகம்’ எனப் பட்ட திருமங்கையாழ்வார்க்கு நாட்பூசை செய்ய ஏற் பாடு செய்தனர் என்று மூன்றாம் இராஜராஜ சோழன் காலத்து (19-ஆம் ஆட்சி ஆண்டு)க் கல்வெட்டுக் கூறு கிறது. இந்த பகுதியானது புதுக்கோட்டை தொண்டைமான்களின் பூர்விக பகுதியாகும்.

இதனால் காராளர் என்று வருவதால், அது வெள்ளார் சாதியை குறிக்கும் என்று கூறுகின்றனர். ஆனால் காராளர் என்பதற்கு பல விளக்கங்கள் அகராதியில் உள்ளது. தமிழ் இலக்கியங்களில் பல்வேறு பொருளில் ஆளப்பட்டுள்ளது. இதை வள்ளல் தன்மையைக் குறிக்கும் சொல்லாகவும், மழையால் பயன் விளைப்போர், முற்காலத்திருந்தஒரு முருட்டுச்சாதியாரையும், சூத்திரர் என்றும் குறிப்படப்படுகிறது. 

மிலேச்சர், காராளர், நான்காவது வருணம் என்பதற்கு பல பொருள் உள்ளன. மிலேச்சர், காராளர், நான்காவது வருணம் என்று வருவதால் இவரை வெளியில் இருந்து வந்தவர் என்றும், காராளர் என்பதால் வெள்ளாளர் என்றும் எழுதிவருகின்றனர். ஆனால் திருமங்கையாழ்வார் கள்ளர் மரபில் வந்தவர் என்று தெளிவாகவே குறிக்கப்பட்டுள்ளது.

 காராளர் கற்பகமான திருமங்கையாழ்வார்க்கு என்ற வரி உணர்த்துவது என்ன வென்றால் கற்பகம் : கற்பகம்" என்றால் கேட்பதெல்லாம் கொடுப்பது. கற்பக விநாயகர் என்றால், வேண்டியதை தரக்கூடியவர். காராளர் கற்பகமான திருமங்கையாழ்வார்க்கு, அதாவது காராளர் வேண்டியதை தரக்கூடிய திருமங்கையாழ்வார்க்கு என்பதே பொருள். இதையே கல்வெட்டில் தொல்லியல் துறையும் குறிப்பிட்டுள்ளது. இதில் காராளர் என்பவர்களின் வணங்கும் தெய்வம் திருமங்கையாழ்வார். இந்த காராளர் என்பது வெள்ளார் என்பவர்களை மட்டுமே குறிக்காது என்பதற்கு பல தரவுகள் உள்ளன. மேலும் காராளர் என்ற பட்டமுடைய கள்ளர்களும் உள்ளனர் சோழமண்டலத்தில் இன்று.



தொண்டை மண்டல கல்வெட்டுகளில் அதாவது காடவராயன்  கல்வெட்டில் ,
வெள்ளாளரில் கண்ணப்பன் முதலியன  என வருகிறது இதுபோல் சிறுத்தொண்ட வெள்ளாளன் என 
அதே பெரியபுராணம் கூறும் நாயன்மார் அனைவரும் வெள்ளாளர் என வருகின்றனர்.

வெள்ளாளன் கண்ணப்பன் என வந்துள்ள  கல்வெட்டை விரைவில் 
இணைக்கிறேன் .







இப்படி மறவரை தவிர பள்ளி,மலையர்,சம்புவரையர்,வேட்டுவர்,வலையர்,நாயக்கர் என 
பலரும் தன்னை கண்ணப்பன் என சொல்லும் போது  கண்ணப்பர் மறவர் என்று கல்வெட்டு வராதபோது ஏன் மறவரை அதுவும் ஊத்துமலை ஜமீனை கூறுகின்றனர் 

இல்லை மேலே குறிப்பிட்ட பள்ளி ஜாதியை போல் அஞ்சு நாள் பள்ளி ,பண்டமுத்து  பள்ளி ,ஓலை நாகவடம்  என்ற பிரிவு மறவரில் உள்ளதா 

இல்லை வலையரை போல் முத்தரைய வலையர்,சரகு வலையர்,கண்ணனப்ப முத்தரையர் என பிரிவு உள்ளதா 

இல்லை கொங்கு வேட்டுவ வெள்ளாளரை  போல் ஆந்தை,காடை,பட்டாலி குருவி,கண்ணர் குருவி,
கரடி,வெள்ளை  என பறவை,விலங்கு கூட்ட பெயர்கள் உள்ளதா? இத்தனைக்கும் கொங்கு வேட்டுவரும் வெள்ளாளரும் வெள்ளாளர் வேட்டுவர் என கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளனர்.

இல்லை காளகஸ்தியில் மறவர் உள்ளனரா ? இதல்லெலாம் கொடுமை .

மறவர் கண்ணப்பர் வழியினர் என ஆதாரபூர்வமாக கல்வெட்டு இல்லாத போது  வெள்ளாள சாதி சேக்கிழான் எழுதியது போல் 12 ஆம் நூற்றாண்டு ஓலை  எப்படி  ஆதாரமாகும்.

ஊத்துமலை மன்னரும் மற்ற மறவரும் கல்வெட்டு  மற்றும் வம்சாவளிகளில் எந்த இடத்திலும் தன்னை கண்ணப்பன் எனவும் குகன் எனவும் சொன்னதில்லை இதெல்லாம் வெள்ளாளரின் மெக்கன்சி ஓலையால் வந்த வினை.

ஊத்துமலை மன்னர் மறவர் குல மாணிக்கமே.அவரை நான் கூட ஊத்துமலை ஒன்றை வைத்து மொத்த மற்றவரையும்  கண்ணப்பர் குலம்  என கூறவேண்டாம். என்று நானே எழுதியுள்ளேன் 
அது தவறு அதற்க்கு வருந்துகிறேன்

.



நன்றி: ஊத்துமலை ஜமீன் வரலாறு 
தென் இந்திய கல்வெடுகள்
 பாளையபட்டு கைபீது
 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.