Monday, September 12, 2016

கானாடு கோனாடு மறவர் ஆதிக்கம்


ஆளுடைய காமகோட்டத்து நாச்சியார் கோவில் மறவர் கல்வெட்டுகள்

https://thevar-mukkulator.blogspot.com/2023/02/blog-post_23.html

மறவர் கல்வெட்டுகள் சில தொகுப்புகள்-1

https://thevar-mukkulator.blogspot.com/2021/08/blog-post.html

அரிய மறவர் கல்வெட்டுகள் சில....

https://thevar-mukkulator.blogspot.com/2019/04/blog-post.html

மறவரையர்கள்(அரசுமக்கள்) மறமுதலிகள்(தலைவர்கள்)

https://thevar-mukkulator.blogspot.com/2016/04/blog-post.html

மறவர் பாடிகாவல் குலசேகர பாண்டியன் காலத்தில்

https://thevar-mukkulator.blogspot.com/2015/10/blog-post.html

புதுக்கோட்டை மறவர்களின் பட்டங்கள் கல்வெட்டு ஆதாரங்களுடன்

https://thevar-mukkulator.blogspot.com/2014/05/blog-post_4546.html

https://thevar-mukkulator.blogspot.com/2013/08/blog-post_13.html

https://thevar-mukkulator.blogspot.com/2016/03/blog-post_19.html


டைப்பற்று குடியிருப்புகள் படையினருக்கு வழங்கப்பட்ட நிலக்கொடையாகும்.பெருவேந்தரின் மோதற்களமாகப் பயன்படுத்தப்பட்ட இப்பகுதியில் மறவர் மக்களுக்கு மட்டும் வேந்தர்கள் வழங்கிய படைப்பற்று கல்வெட்டுகள் விரையாச்சிலை,குருந்தன்பிறை,குழிபிறை,கோவனூர்,செவலூர்,பென்னமராவதி,பூலாங்குறிச்சி,ராங்கியம்.



கோனாடு:

சோழர் எல்லை படைப்பற்று:
1.குருந்தன் பிறை கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
2.விரையாச்சிலை கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
3.கோட்டூர் இலம்பலக்குடி கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
4. தெக்காடூர்(ஐந்தூர் படை பற்று) கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
5.அமாந்தூர் கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
புதுக்கோட்டை மறவர்கள் சேதுபதி மறவர் என்ற வாள்கோட்டை மறவர் என்று திருச்சி மானுவேல் hemmingway கூறுகிறார் ஆக செம்பி நாட்டு மறவர்கள்
ஏழு கிளைகளில் பிச்சா மரக்கால் கிளை மட்டும் உண்டாம்


B




கானாடு:
பாண்டிய எல்லை படைப்பற்று:
1.சிங்கமங்கலம் கவி நாடு சோழராட்சிப்பகுதி
2.சீரனூர் வட சிறுவாயில் நாடு சோழராட்சிப்பகுதி
3.மேலப்புதுவயல் வடகோனாடு சோழராட்சிப்பகுதி
4.கீழப்புதுவயல் வடகோனாடு சோழராட்சிப்பகுதி

NO.15.AR.NO.137 of 1908 Tirupattur,Ramanathapuram district
Inscriptions of Varaguna Maharaja a pandya king

"கோவரகுணமாராயர்க்கு யாண்டு ....நந்தா விளக்கு எரிய முத்தூர் கூற்றத்து 
பெருமாத்தூர் மறவன் அணுக்க பேரரையன் கடம்ப வேளாண்
வைத்த பழங்காசு பதினைந்து "




மேலைப்பனையூர் கல்வெட்டுகள்:

புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் வட்டம் ,அகிலாண்டேஸ்வரி கோவில் அர்த்தமண்டபம்,பாக்கற்கல்,தூன்கள் நிலைப்படி உள்ள கல்வெட்டுகள்.

காலம்: பாண்டியராட்சி 13 ஆம் நூற்றாண்டு

செய்தி:
இம்மண்டபத்தில் அர்த்தமண்டபம்,பாக்கற்கல்,தூன்கள் நிலைப்படிகள் செய்து கொடுத்தவர்களின் விபரம் கிழே:


1.குன்றாண்டார்.
2.தேசி மாதாக்கள்

மாதன் மக்கள்:

கல்வெட்டு என்: 33:2
"இப்பாக்கல் பனையூர் மறவரில் மாதன் மக்கள் தன்மம்"

"மாதன் மக்கள் என்பது  மாத்தாண்டன்(சூரியன்) மக்கள் அல்லது கொற்றவை மாதாவின்(அகிலாண்டேஸ்வரி) மக்கள் என்ற கூட்டம் கொண்ட மறவர்கள்  பாற்கல் செய்து கொத்துள்ளனர்.


சுந்தரபாண்டிய பேரரையன்:
கல்வெட்டு என்: 33:12
""இக்கால் பனையூர் மறவரில் எட்டி பொன்னனான சுந்தர பாண்டிய பேரரையன் தன்மம்"

பனையூர் மறவரில் பேரரையன் ஒருவன் கொடுத்த தூன் கால் ஒன்று கோவிலுக்கு செய்து கொடுத்தமை.

கோனாட்டு பேரரையன்:
கல்வெட்டு என்: 33:13
""இத்திருநிலைக்கால் இவ்வூர் மறவரில் கோனாட்டு பேரரையர் ஆதனமான சோழகோன் தன்மம்"

பனையூர் மறவரில் கோனாட்டு பேரரையன் சோழகோன் ஒருவன் கொடுத்த நிலைக் கால் ஒன்று கோவிலுக்கு செய்து கொடுத்தமை.


சூட்டத்தேவன் வன்னிமிண்ட்ன்:
கல்வெட்டு என்: 33:34
"இப்பாக்கல்லு இவ்வூர் மறவரில் சூட்டத்தேவன் வன்னிமிண்டன் தன்மம்"

பனையூர் மறவரில் இக்கோவிலுக்கு பாற்கல்லு செய்து கொடுத்தவன் சூட்டத்தேவன் வன்னிமிண்டன் ஆகும்.
வன்னிய பெயர் கொண்ட மறவர் இருந்தவைக்கு இது ஒன்று ஆதாரமாகும்.

சாமந்தார்:
கல்வெட்டு என்: 33:27
""இப்பாக்கல்லு இவ்வூர் மறவரில் சாமந்தார் கருத்தாண்டானான ஒற்றையில் வெட்டி தன்மம்"

சாமந்தார் என்பது தளபதி என்னும் பதவி. கருத்தாண்டான் என்னும் சாமந்தார் செய்த பாக்கல்லு செய்து கொடுத்தமை.


வாள்வீசிகாட்டினான்:
கல்வெட்டு என்: 33:32
""இந்த உத்திரம் மேற்படி கலத்து மறவரில் அடைக்கலங்காத்தனான வாள்வீசி காட்டினான் தன்மம்"

குலமங்கலத்து மறவரில் கோவிலுக்கு உத்திரம் கட்டியவன் அடைக்கலங்காத்தனான வாள்வீசி காட்டினான் குடுத்த தன்மம்..


சோழசிங்கபேரரையன்,மழவராயன்,மாளுவசக்கரவர்த்தி:

கல்வெட்டு என்: 33:34
"இந்த உத்திரம் மேற்படி குலமங்கலத்து மறவரில் அவையன் சோழசிங்க பேரரையன் உள்ளிட்டாரும் இரங்கல்மீட்ட மழவராயன் உள்ளிட்டாரும் பாதிமேற்படி வளத்தான் மாளுவசக்கரவர்த்தி பாதி ஆக தன்மம்"

குலமங்கலத்து மறவரில் கோவிலுக்கு உத்திரம் கட்டியவன் அவையன் சோழ சிங்க பேரரையனும் இரங்கல்மீட்ட மழவராயனும் மேற்படி பாதியை கட்டி கொடுத்தவன் வளத்தான் மாளுவசக்கரவர்த்தி என்னும் மறவனும் குடுத்த தன்மம்.

"கோவனூர் மறவன் தர்மன் குரலான மூவாயிர பேரரையன் தன்மம்"

இந்த கல்வெட்டுகள் யாவும் ஆவணம் 19 என்னும் கல்வெட்டு இதழில் 2008 ஆம் ஆண்டு வெளி வந்தவை ஆகும்.
இந்த கல்வெட்டுகள் யாவும் A.R.E இல் பதிவு செய்யபட்டும் புதுக்கோட்டை கல்வெட்டுகளின்(P.I) பதிவு செய்யபட்ட என்கள் கொண்டவை. இது இன்றும் பனையூர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் உள்ளது.


க/எண்:ஐ.பி.எஸ் 681

இடம்:திருவேங்கைவாசல்,குளத்தூர் தாலுகா,புதுக்கோட்டை

வயக்ஹ்ரபுரிஸ்வரர் கோவில்

அரசர்:விஜயநகர கம்பன்ன உடையார்

காலம்:கிபி.1374

கல்வெட்டு:

ஸ்ரீ மது கம்பண உடையார்க்கு....திருவேங்கைவயல் தானத்தாரும் ஊரவரும்  பாடிகாவல் சுவந்திரம்...............பெருஞ்சுனையூர் வயல் மறவன் காலி வயல் வட மயிலாப்பூர்..........

செய்தி:

பாடிகாவலுக்கு வழங்கிய நிலங்களில் மறவன் காலி வயல் செய்தி




க/எண்:ஐ.பி.எஸ் 639

இடம்:திருவேங்கைவாசல்,குளத்தூர் தாலுகா,புதுக்கோட்டை

வயக்ஹ்ரபுரிஸ்வரர் கோவில்

அரசர்:சடையவர்மன் சீவல்லப பாண்டிய தேவர்

காலம்:கிபி.14 ஆம் நூற்றாண்டு

கல்வெட்டு:

ஸ்ரீ கோச்சடைபன்மரான திரிபுவனசக்கரவர்த்திகள் ஸ்ரீ சீவலதேவர்க்கு யாண்டு...ஆடி... பெருவாநாட்டு மடமயிலாப்பூர் மறவரில் திருவேங்கை வாசல் உடையார் வேங்கை வந்த பெருமாள் கோயில் தேவதான..

கணக்கு... சீகார்யம் செய்வோர்களும் இந்நாட்டு மடமயிலாபூர் மறவரில் மகள் நாயநான...தாய்க்கு பிரமானம்...

செய்தி:

திருவேங்கை வாசல் கோவிலுக்கு மடமயிலாப்பூர் மறவன் திருவேங்கை வாசல் உடையான்

அதே ஊரில் இருக்கும் மறவரான மக்கள்நாயனின் நிலங்களை தேவதானமாக தந்துள்ளார்......



க/எண்:ஐ.பி.எஸ் 504

இடம்:திருவரங்குளம் ஆலங்குடி தாலுகா,புதுக்கோட்டை

ஹரதீஸ்வரர் கோவில்

அரசர்:குலசேகர பாண்டிய தேவர்

காலம்:கிபி.12 ஆம் நூற்றாண்டு

கல்வெட்டு:

ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனசக்கரவர்த்திகள் ஸ்ரீ குலைசேகரதேவர்க்கு யாண்டு...இரண்டாவது கானநாட்டு பெருங்கரைக்குடியான திருவரங்குள நல்லூர் ஊராயிசைந்த ஊரோம் நாங்கள் பெருங்குடி மறவரையர்கள் பக்கல் விலையும் ஒற்றியும் கொண்டுடைய வயல்...

செய்தி:

திருவரங்குளம் கோவிலுக்கு தேவதானமாக மறவர்குல பெருங்குடி அரையர்கள் நிலத்தை கொடுத்த

செய்தி.பெருங்குடி என்ற பெயரே மறவர்கள் ஆளும் வர்க்கம் என அடையாளபடுத்துகிறது.



க/எண்:ஐ.பி.எஸ் 527

இடம்:செம்பாடு ஆலங்குடி தாலுகா,புதுக்கோட்டை

திருவையாருடைய நாயனார் கோவில்

அரசர்: சுந்தர பாண்டிய தேவர்

காலம்:கிபி.13 ஆம் நூற்றாண்டு

கல்வெட்டு:

ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனசக்கரவர்த்திகள் ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவர்க்கு யாண்டு....ஜயசிங்க குலகால வளநாட்டு..........உட்பட மறவாகலும் மறவன் வயக்கல் கினற்றின்

செய்தி:

மறவன் வாகல் மற்றும் மறவன் வயக்கல் வந்த செய்தி


ஆண்டு:கி.பி 1317

அரசர்:முதலாம் மாறவர்மர்

குலசேகரபாண்டியன்

கல்வெட்டு:

ஸ்ரீ கோமாறபன்மரான...

குலசேகரதேவர்க்கு யாண்டு..

...புறமலைநாட்டு திருக்கோளக்குடி றமுதலிகளில் கன்னிமலை நாடாழ்வான் உள்ளிட்டோரோம் 

எங்களூர்க்கு பொது கானிஇராசேந்திர சோழன் குடிகாடும் செழியன் ஏம்பலும்..ஆக இக்குடிக்காடு......

செய்தி:

திருக்கோளக்குடி மறமுதலிகளில் கன்னிமலைநாடழ்வான் ஊர் பொதுக்கானியான இராசேந்திரசோழன் குடிக்காடு

செழியன் ஏம்பல் ஆகியவற்றை இறைவனுக்குஇறையலி. சோழன்,செழியன் பெயரில் குடிக்காடு உள்ள

கன்னிமலை நாடாழ்வான் திருக்கோளக்குடி மறவன்.





க/எண்: ஐ.பி.எஸ் 181

ஆண்டு:கி.பி 1146-74

அரசர்:இரண்டாம் இராஜ

இராஜ சோழர்

கல்வெட்டு:

தன்னன் எதிரிலி பெருமாள் அகம்படிய மறமுதலிகளில் நற்றான் பெரியன் வீரமழகிய பல்லவராயன்.

செய்தி:

புல்வயல் அரசன் கடம்பராயனிடம் அகம்படியராக பனியாற்றிய வீரமழகிய பல்லவராயன்.

Note:

Ahambadiya Mara mudhali- A Maravan worked as Ahambadiya sect for the pulvayal



க/எண்: ஏ.அர்.ஈ 81/1916

ஆண்டு:கி.பி 1290

அரசர்:முதலாம் மாறவர்மர்

குலசேகர பாண்டியர்

கல்வெட்டு:

ஸ்வஸ்திஸ்ரீ...குலசேகர தேவர்க்கு யாண்டு...... விரையாச்சிலை..... ....அரைசமக்களும் மறமுதலிகளும் ஊராக 

இசைஞ்ச ஊரோம்.... விரையாச்சிலை அரைசமக்களும் மறமுதலிகளும் இசைந்த ஊரோம்.......

செய்தி:

திருக்கோளக்குடி இறைவனுக்கு விரையாச்சிலை அரசமக்களும்

மறமுதலிகளும் விற்றுதந்த நில ஆவணம்.விரையாச்சிலை படைபற்றில் உள்ள அரசமக்களும் மறமுதலிகளும் 

மறவர்களே இதில் அரையர் காமபோதராயர் உள்ளிட்ட சிலர் வாங்கியது..........





க/எண்: ஏ.ஆர்.ஈ 86-1916

ஆண்டு:கி.பி 1283

அரசர்:முதலாம் மாறவர்மர்

குலசேகரபாண்டியன்

கல்வெட்டு:

ஸ்ரீ கோமாறபன்மரான... குலசேகரதேவர்க்கு யாண்டு.. விருதராஜபயங்கர வளநாட்டு அரைசமக்களும் மறமுதலிகளும் எங்களூர் அரசுமக்களில் நாட்டான்..போதராயர்


செய்தி:

வீரையாச்சிலை அரசர் மக்கள்

மறமுதலிகளும் இறைவனுக்கு வழங்கிய இறையிலி....





விரையாச்சிலை அரையர்கள் பற்றிய செய்தி.




பாண்டியர் ஏழகப்படையும் மறவர் படையும் இருந்த ஆதாரம்


ஆண்டு:கி.பி பதிமூன்றாம் நூற்றாண்டு

அரசர்:முதலாம் சுந்தர பாண்டியன்

கல்வெட்டு:

ஸ்ரீ திரிபுவனசக்கரவர்த்தி கோனேரி கொண்டான்...பொன்னமராவதி......

கோயில் தானத்தார்க்கு இவ்வூர் மறவரும்,இடையரும்,வலையரும் உட்பட்ட குடியர்களும் இவ்வூர்



செய்தி:

திருக்கோளக்குடி வாழ் மறவர்,இடையர்,வலையர் உட்பட்ட குடிகள் ஆகியவற்றிற்குத் தந்த அரசுசார் வரியினங்கள்...



ஆண்டு:கி.பி 1249

அரசர்:முதலாம் மாறவர்மர்

சுந்தர பாண்டியன்

கல்வெட்டு:

ஸ்ரீ கோமாறபன்மரான...

சுந்தரபாண்டிய தேவர்க்கு யாண்டு.....




...பூங்குன்ற நாட்டு வேலங்குடி மறவர் பக்கல்...


செய்தி:

பூங்குன்ற நாட்டு வேலங்குடி மறவர் இறையிலி செய்தி..




நற்றான் பெரியான் என்னும் வீரமழகிய பல்லவராயன் குலோத்துங்க சோழ கடம்பராயன் என்னும் தானவ பெருமாளின் அகம்படிய மறமுதலியாக வேலை பார்த்துள்ளான். அகம்படிய மறமுதலி என்பது மறவர் தலைவர் ஒருவர் அகம்படித்தொழில் செய்தமையாகும்







































நன்றி:
திரு.கார்த்திக் தேவர் அவர்கள்.
ஆவணம் 19,2008 இதழ்
புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகள்