Monday, August 27, 2018

திரையன் தேவர்கள்-who are thirayyars?


திரையர் என்பார் இன்னொரு பழந் தமிழ் வகுப்பார். திரை கடலின்
வழியாக வந்தவராதலின் அவர் அப்பெயர் பெற்றார் என்பர். தொண்டை
நாட்டை யாண்ட பண்டை யரசன் ஒருவன் இளந்திரையன் என்று பெயர்
பெற்றான். காஞ்சி மாநகரத்தில் தொண்டைமான் என்னும் பட்டமெய்தி
அரசாண்ட இளந் திரையைனைத் தலைவனாக வைத்து உருத்திரங்
கண்ணனார் பெரும் பாணாற்றுப் படையினைப் பாடியுள்ளார்.



     இன்னும், தொண்டை நாட்டில் திரையர் குலத்தைச் சேர்ந்த ஒருவன்
பெயரால் திரையனேரி என்னும் ஊர் உண்டாயிற்று. அதுவே இப்பொழுது
செங்கற்பட்டு நாட்டில் தென்னேரியாக விளங்குகின்றது. திரையன் மரபில் வந்தோர் சோழராயினர் இவர்கள் அலைகடலில் நெடுந்தொலைவு ஆழ்கடலில் பயணம் செய்ததால் திரையர் எனப்பட்டனர்.
Tamil chamuthaya Varalaaru -page 43-44.

We cannot deny that but from “Amizhnthore” tamil evoluation is not possible.

He also says tamils were called ‘Thirai vazhi vanthavan”(a man from sea) ,Thirayan (sea man),Thirayar kudi (sea people), A child who was born for the parents of Chola Prince and naga princess was called “Thirai tharu marabin uravone Umbal” (Perumpanatruppadai) should have some meaning and this must be the cause of tamil name formation. How ?

Dr. Sothi Prakasam :

Quoting the above he says , “Thirai kadal Odiyum Thiraviyam Thedu”(at any cost make money by sea trade) was the slogan prevailed among tamils. They were top in sea trade and ruled the world before 3000 years only through sea trade. “Yathum Urae ,Yavarum Kelir”(All world people are our brethren, All world is ours) came into being only by this trading affinity.

And so world people especially meditarenian countries people called tamils as “Thirayar”and their language “Thirayer Mozhi”which turned “Thrimili” there and thramili in India turned Thramidi –dravidi- Dravida in north India and tamil in south India.

The people who migrated from meditaranien countries to Turky called themselves as “Thrimili” –Refer Dravidian India – T.N.Sesha Iyengar quoting eminent historian Sunil Kumar Chatterji.

In Greece the people called “Thriyar” lived. They were called “Throzer” in Turky.

Hence “Thirayar Mozhi” turned tamil is the correct interpretation.

Whenever we analyse tamil roots we have to travel Tamilnadu to Sumeria, Anattrolia, Persia and then Sanskrit for comparative analysis. Then we will get wonders.


தொண்டைமான் இளந்திரையன் சங்ககால அரசர்களில் ஒருவன். இவனது தலைநகர் காஞ்சி. பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலின் பாட்டுடைத் தலைவன். கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவர் இவனிடம் பரிசில் பெற்று மீண்டவர். 21 நரம்புகள் கொண்ட பேரியாழ் மீட்டும் பெரும்பாணனை இந்த அரசனிடம் சென்று பரிசில் பெறுமாறு ஆற்றுப்படுத்துகிறார்.

கடியலூரிலிருந்து காஞ்சிக்குச் செல்லும்போது நீர்ப்பெயற்று என்னும் துறைமுகத்தைக் கடந்து செல்லவேண்டும்.
இளந்திரையனின் அரண்மனை வாயில் பாணர்களுக்கும் புலவர்களுக்கும் எப்போதும் திறந்தே இருக்கும்.
மள்ளருக்கு மள்ளன் (உழவருக்கெல்லாம் உழவன்), மறவருக்கு மறவன் (வீரருக்கெல்லாம் வீரன்), செல்வருக்குச் செல்வன் (வணிகருக்கெல்லாம் வணிகன்), போரில் மேம்பட்டவன் என்றல்லாம் இவன் போற்றப்பட்டுள்ளான்.
பரிசலர்க்குப் புத்தாடை தந்து, தானே உணவு படைப்பான்.
சிறந்த பாணனுக்குப் பொன்னால் செய்த தாமரை விருது சூட்டிப் பெருமைப்படுத்துவான்.
விறலியர்க்குப் பொன்னால் செய்த மாலையை அணிவிப்பான்.
காண்க
தொண்டையர் வாழ்ந்த நாடு தொண்டைநாடு. தொண்டை நாட்டு அரசன் தொண்டைமான்.
திரையன் என்பவனின் தம்பி இளந்திரையன்.
திரையில் (கடலலையில்) வந்தவன் திரையன் எனப்பட்டான் என்னும் கருத்து உண்டு.

"மலர்தலை உலகத்து மன்னுயிர் காக்கும் முரசு முழங்கு தானை மூவருள்ளும் இலங்குநீர்ப் பரப்பின் வளை மீக்கூறும் வலம்புரி அன்ன வசை நீங்கு சிறப்பின் அல்லது கடிந்த அறம் புரி செங்கோல் பல்வேல் திரையன்" - பெரும்பாணாற்றுப்படை 37

அதர்மத்தை ஒழித்து தர்மத்தைச் செய்வதற்குத் துணைபுரிகின்றவன்; கூர்மையான வேற்படையை உடைய இளந்திரையன்.நீதிமுறையை வேண்டி வந்தோர்க்கும், தங்கள் குறை தீர்த்தலை வேண்டி வந்தோர்க்கும் அவர்கள் வேண்டுகின்றவைகளை, வேண்டுகின்றபடியே கொடுப்பவன். நடுநிலையிலிருந்து உண்மையை உணரும் உயர்ந்த அறிவுடையவன். இல்லோர்க்கும் புலவர்க்கும் எப்பொழுதும் கொடையளி செய்பவன். சோர்வற்ற உள்ளமுடையவன். கொடுமை செய்யாத நல்ல அமைச்சர்கள்-அறிஞர்கள்-நண்பர்கள்-உறவினர்கள்-ஆகிய சுற்றத்தார்களை உடையவன்". இத்தகைய பண்புள்ளவன் இளந்திரையன்.



சிறுவல்லி பாளையத்தின் தலைவன் திரைய தேவர்

சிறுவல்லி பாளையம் என்பது இன்றைய தேவகோட்டை அருகே இருக்கும் சிற்றூர் ஒருகாலத்தில் இங்கு திரையன் தேவர் என்னும்
குறுநில மன்னர் ஆட்சி செய்து வந்தார். அவர் பண்டைய திரையன் என்னும் சோழன் பெயர் தாங்கி வந்த பட்டமுடையர்.
இவரது ஆட்சி பரப்பு சேதுபதிகளின் ஆட்சிக்குள்ளது. திரையத்தேவரும் சேதுபதி பதவிகளுக்குள் ஒரு பங்காளியாக சேது அரியாசனத்துக்கு போட்டியுடையவர்.

இவரது தலைநகர் உறையூர் . இது தற்காலத்தில் ஓரியூர் என அழைக்கபடுகின்றது. அங்கு பாழடைந்த கோட்டை ஒன்று உள்ளது.

தடியத்தேவன் என தவறாக எழுதப்பட்ட திரைய தேவன்:

திரைய(தடிய) தேவன் என்றொரு பாளையக்காரன். இவன் கிழவன் சேதுபதிக்கும் உறவினன்கூட. அவனுக்கு இந்த பாதிரியார் பால் அன்பு ஏற்பட்டது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏதோவொரு வினோதமான வியாதி அவனைப் பீடித்தது. பல மருத்துவர்கள் மருந்து கொடுத்தும் சரியாகவில்லை. அப்போது செய்தியறிந்து அருளானந்த அடிகளான பாதிரியார் பிரிட்டோ திரைய(தடிய)த் தேவனைப் பார்க்க வந்தார். அவர் வந்த வேளை அந்த பாளையக்காரனின் வியாதி தீர்ந்து குணமடைந்தான். அவன் பாதிரியாரை மிகவும் மதித்து அவர் ஆலோசனைப்படி ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டு மதமாற்றம் பெற்றான்.


அவன் மதம் மாறியதில் ஓர் சிக்கல் ஏற்பட்டது. அவனுக்கு ஐந்து மனைவியர். அவன் சார்ந்த புதிய மதக் கோட்பாடுகளின்படி அவனுடைய முதல் மனைவி மட்டும்தான் மனைவியாக இருக்க முடியும். மற்ற நால்வரும் அவனுக்குச் சகோதரிகளாகி விடுகின்றனர். இந்த செய்தி அவனுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது. முதல் மனைவி நீங்கலாக மற்றவர்கள் என்ன கெஞ்சியும் அவன் அவர்களை மனைவியராக ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டான் பாதிரியாரின் அறிவுரைப்படி. அவர்கள் நால்வரும் கூடிப்பேசி, நால்வரில் இளையவளான காதலி நாச்சியார் என்பவளை அழைத்து, அவளுக்குப் பெரியப்பன் உறவான கிழவன் சேதுபதியிடம் சென்று முறையிடும்படி கேட்டுக் கொண்டனர்.

அதன்படி காதலி நாச்சியார் சென்று கிழவனிடம் முறையிட்டாள். அவனும் யோசித்தான். தன் உறவினனான தாதியாத் தேவன் மதம் மாறிவிட்டான். தன் தம்பி மகள் கணவன் உறவை இழந்து அழுகிறாள். இப்படியே போய்க்கொண்டிருந்தால் இந்த பாதிரியார் மறவர் இனமக்கள் அனைவரையும் மதம் மாற்றிவிடுவார் என்று நினைத்தார். இந்த திரைய(தடிய)த் தேவன் முன்னர் கிழவன் சேதுபதியோடு அரியணைக்குப் போட்டியிட்டவன். கிழவனுக்குப் பிறகு அரசனாக ஆகக்கூட வாய்ப்புகள் இருந்தன. மற்றவர்களை மதம் மாற்றியதைப் போல சகட்டு மேனிக்கு இந்த மறவர் பூமிக்கு உரிமையுள்ள ஒருவனையுமல்லவா இந்த பாதிரியார் மதம் மாற்றிவிட்டார் என்ற கோபம், வருத்தம். ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் நம்மையுமா? சேதுபதியால் கோபத்தை அடக்கமுடியவில்லை.

அரச குடும்பத்தில் ஒருவன் மதம் மாறினால் மக்களும் அல்லவா மதம் மாறிவிடுவார்கள்!  அப்படி மக்கள் மதம் மாறத் துணிந்தால் இந்த திரைய(தடிய)த் தேவனைத் தனக்கெதிராக ஆட்சியைப் பறிக்க போர்த்துகீசியர் தூண்டக் கூடுமல்லவா என்றெல்லாம் யோசித்தான் கிழவன் சேதுபதி. இது வெறும் மதமாற்றம் மட்டுமல்ல; போர்த்துகீசிய ஆதிக்கத்தை கடற்கரையையும் தாண்டி உள்நாட்டில் ஏற்படுத்தும் நோக்கமும் இதில் இருக்கிறது என்று சிந்தித்தார் அவர். இது அவருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இது ஏதோ கற்பனையான பயம் என்று எண்ணுவதற்கில்லை. வரலாற்று அடிப்படையில் அவ்வாறு சேதுபதி பயந்ததற்குக் காரணங்கள் இருந்தன. 1532 – 1582 காலகட்டத்திலேயே கத்தோலிக்க மதத்துக்கு மாற்றம் செய்யப்பட்ட மீனவர்களுடன் தூத்துக்குடியில் வாழ்ந்தவர்களும் போர்த்துகீசிய குடிமக்களாகக் கருதப்பட்டார்கள். இதனை ஒரு கிறிஸ்தவ பாதிரியாரே எழுதியிருக்கிறார். ஆம்! பிஷப் கால்டுவெல் கூறும் செய்தி இது.






ஐரோப்பாவிலிருந்து நாடுபிடிக்கவும், கீழை நாடுகளில் மக்களை மதமாற்றம் செய்வதற்காகவும் பல நாட்டினர் இங்கு வந்தனர். அவர்களில் டச்சுக்காரர்கள், போர்த்துகீசியர் என பலரும் அடங்குவர். என்றாலும் இங்கு எவரும் மதமாற்றம் செய்வதை கிழவன் அனுமதிக்கவில்லை. சிறையில் அடைக்கப்பட்ட பிரிட்டோ பாதிரியார்  அந்த சிறைவாசத்திலேயே இறந்து போனார். பண்பிலும், அரசாட்சியிலும் சிறந்து விளங்கிய கிழவன் சேதுபதி மற்ற வகைகளில், கடற்கரையில் முத்து எடுப்பது முதல், வியாபாரம் வரை அந்நியர்களை அனுமதித்தாலும் இதுபோன்ற மதமாற்றத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெரிகிறது.

இது குறித்து பல்வேறுபட்ட சர்ச்சைகள்  உள்ளன.  ஆனால் சில வரலாற்று உண்மைகள் கவனத்தில் கொள்ளத் தக்கவை. பாதிரியார்கள் வரிசெலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டிருந்தனர் என்பது அவர்கள் மீது கிழவன் சேதுபதி காழ்ப்புணர்வு கொண்டிருக்கவில்லை என்பதைக்காட்டுகிறது.   பாதிரியார்கள் முக்கியமான பிரபல புள்ளிகளை மதமாற்றம் செய்வதில் குறியாக இருந்தார்கள்; தாங்கள் செய்யும் ”தியாகங்களை” எல்லாம் கூறி மக்களின் அனுதாபத்தைப் பெற்று மதமாற்றம் செய்தார்கள் என்பதும் தெளிவாக பதிவு செய்யப் பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்து மதத்தின் அழிவில்தான் கிறிஸ்தவம் வளரமுடியும் என்று அவர்கள் கருதினார்கள் என்பதும் ஐயமின்றி விளங்குகிறது.



Letters of John De britto

 வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை - காட்டூர் கிழார் மகனார் கண்ணனார் பாடல் அகம் 85-9
 செல்லா நல்லிசை பொலம்பூண் திரையன் பவத்திரி அன்ன நலம் - நக்கீரர் பாடல் அகம் 340-6

அணிமை கழிந்த மெல்லிய நடை வாய்ந்த இளைய பிடியினதம் அதன் கன்றினதும் பசியைப் போக்கற்கு, பைங்கண் யானை - பசிய கண்ணினையுடைய களிறு, முற்றா மூங்கில் முளை தருபு ஊட்டும் - மூங்கிலின் முற்றா முளையினைக் கொணர்ந்து உண்பிக்கும், வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை-வெற்றி பொருந்திய வேலினையுடைய திரையனத வேங்கடமெனும் நீண்ட மலை.

For fourteen years he toiled, preaching, converting, baptizing multitudes, at the cost of privations, hardships, and persecutions. In 1683, John de Britto had to leave India but returned in 1691.
https://indiancatholicmatters.org/st-john-de-britto-the-portuguese-st-francis-xavier/
He advised Teriadeven, a Maravese to dismiss the many wives he had and keep only one. However, one of Teriadeven’s wives was the niece of the king. Due to this, John de Britto began to be persecuted. In 1693, he was taken to the capital Ramnad and from there led to Oriyur a small village in Tamil Nadu, where he was tortured and put to death by beheading.
He had wrought many conversions during his life, established many stations, and was famous for his miracles before and after his death.
There is a shrine to Britto in Oriyur, where he is a significant figure revered by the Kallar, Maravar and Agamudayar castes who together are often referred to as the Thevars.



திரைய தேவன் பரம்பரை கிருத்துவர்களாக மாறி வேறு ஊர்களுக்கு சென்றுவிட்டனர் என கூறுகின்றனர்.
இன்னும் சில இடத்தில் இருக்கின்றனர் என நம்புகின்றனர்.

Thanks:
Madurai Country Manuel-J.H.Nelson
Letters from Joe De Britto(SJ)-Latin
Catholics in south india

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.