Monday, April 24, 2017

மறக்குல அரசமகளிர் தீப்பாய்தல்(ஜௌஹர்)


இராமநாதபுரத்து மறக்குல அரசியார் பின்பற்றிய தீப்பாய்தல்

Jauhar and Sati practice in Tamilnadu Kindom of Ramanathapuram Sethupathi.Maravar queens and princess perform Hindu custom of mass self-immolation by women in parts of the Ramanathapuram, to avoid capture,enslavement and rape by invaders, when facing certain defeat during a war.





"கற்பென்னும் திண்மையைக் குலதனமாக பெற்ற பழந்தமிழர்
மன்னர் வம்சத்து குல மாதரில் சில கணவனுடன் உடன்கட்டை
ஏறியதுண்டு. பதியின் உடலை எரித்த தீயைக் குளிர்ந்த நிலவென்று
தீண்டியவரும் உண்டு எதிரிகளிடம் வீழ்ந்த பின் தங்கள் கற்புக்கு
ஆபத்து வரும் என கருதி வீர அரச மகளிர் அனைவரும்
குளிர் தென்றலென அக்கினியில் குளித்த கதையும் உண்டு"





வடக்கே ராஜஸ்தானில் பின்பற்றும் சதி(இறந்த கணவனுடன் தீப்பாய்தலும்)எதிரிகளிடம் வீழ்ந்த பின் அவர்களிடம் சிக்காமல் இருக்க ஜௌஹர்( மொத்த மகளிரும் தீப்பாய்தல்).உள்ள பழக்கவழக்கங்கள் தென் தமிழ் நாட்டில் மறவர்,கள்ளர் குல அரசியாரிடம் இடம்பெற்ற பழக்கவழக்கங்களை பார்ப்போம்.
Jauhar, sometimes spelled Johar or Juhar,[1][2] was the Hindu custom of mass self-immolation by women in parts of the Indian subcontinent, to avoid capture, enslavement and rape by invaders, when facing certain defeat during a war.[3][4][5] This practice was historically observed in northwest regions of India, with most famous Jauhars in recorded history occurring during wars between Hindu Rajput kingdoms in Rajasthan and the Muslim armies.[6][7][8] Jauhar is related to sati, and sometimes referred in scholarly literature as jauhar sati.[4]According to Veena Oldenburg, the roots of this practice "almost certainly" lie in the internecine warfare among different Rajput kingdoms.[9] In contrast, according to Kaushik Roy, the jauhar custom was observed only during Hindu-Muslim wars, but not during internecine Hindu-Hindu wars among the Rajputs.[10]

The term jauhar sometimes connotes both jauhar-immolation and saka ritual. During the Jauhar, Rajput women committed suicide with their children and valuables in massive fire, to avoid capture and abuse in the face of inescapable military defeat and capture.[4][11] Simultaneously or thereafter, the men would ritually march to the battlefield expecting certain death, which in the regional tradition is called saka.[1]

தன்னுடைய பழமையான அடையாளங்களையும், பொக்கிஷங்களையும் போற்றி பாதுகாப்பதில் இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களை காட்டிலும் ராஜஸ்தான் ஒருபடி மேலே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இம்மாநிலத்தின் பெரும்பகுதி பாலைவன பிரதேசமாக இருந்தாலும் ராஜாக்கள் காலத்தில் மிகவும் செல்வசெழிப்பு மிக்க இடமாக ராஜஸ்தான் இருந்திருக்கிறது.
அந்த செல்வம் வரலாற்று காலம் நெடுகவும் ராஜஸ்தான் ஏராளமான படையெடுப்புகளுக்கு ஆளாகவும் காரணமாக அமைந்திருக்கிறது. வீரம் பொருந்திய இராஜபுத்திர வீரர்களாலும், மார்வார் வீரர்களாலும் ஆட்சி செய்யப்பட்ட ராஜஸ்தானில் வாழ்ந்த மக்கள் எக்காரணம் கொண்டும் போரில் எதிரிகளின் கைகளில் சிக்கி மானமிழக்க கூடாது என்பதை கொள்கையாக கொண்டிருந்திருக்கின்றனர்.
இவ்வளவு வீரம் கொண்ட அந்த ஊர் மக்கள் தற்கொலை செய்து கொள்ள என்ன காரணம். அப்படி 24000 பேரும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்துகொள்ள என்ன கொடுமை நடந்திருக்கிரது.
Jauhar-like suicide of Agalassoi: Alexander the Great
The mass self-immolation by Agalassoi tribe of northwest India is mentioned in Book 6 of the The Anabasis of Alexander, written in the 2nd century CE by Arrian, on the military history of Alexander the Great between 336 and 323 BCE. Arrian mentions Alexander's army conquering and enslaving people of northwest Indian subcontinent. During a war that killed many in the Macedonian and Agalossoi armies, the civilians despaired of defeat. Some 20,000 men, women and children of an Agalossoi town set fire to the town and cast themselves into it.[29][30]

Jauhar of Sindh: Muhammad bin Qasim[edit]
In 712, Muhammed bin Qasim with his army attacked kingdoms of western regions of the Indian subcontinent. He lay siege to the capital of Dahir, then the Hindu king in a part of Sind. After Dahir had been killed, the queen coordinated the defense of the capital over several months. As the food supplies ran out, she and the women of the capital refused to surrender, lit pyres and committed jauhar. The remaining men walked out to their deaths by the invading army.[31][32]

Jauhar of Jaisalmer: Alauddin Khilji[edit]

Sultan Alau'd Din put to Flight; Women of Ranthambhor commit Jauhar. Indian, Pahari style painting from c. 1825
Bhatnair, Tanot and Jaisalmer, capitals of Bhati Rajputs, witnessed the scene of Jauhar thrice, the last time men did not have enough time to build the pyre and hence slit the throats of women, and hence, it is considered half Jauhar.[33] In the time of Maharawal Jait Singh, Alauddin Khilji besieged the fort of Jaisalmer, and after seven months, 24,000[34] women committed Jauhar.[33]

அந்த இராஜஸ்தானத்தில் பல வகை இசுலாமிய மன்னர்கள் ஆப்கானிய துருக்கிய டில்லி சுல்தான் முதல் முகலாயர் காலம் வரை பலதரப்பட்ட படையெடுப்புகள் நிகழ்ந்திருக்கின்றன அந்த காலகட்டத்தில் இராஜபுத்திர அரண்மனையில் உணவு பற்றாக்குறை, அரசரின் இழப்பு ஆகிய காரணங்களினால் ஒரு கட்டத்தில் தோல்வி உறுதி என்பதை உணர்ந்த கோட்டையினுள் இருந்த பட்டி வம்ச பெண்கள் 'ஜௌஹர்' என்ற சடங்கை மேற்கொள்ள துணிகின்றனர். போரில் தோல்வி உறுதியான பின்பு எதிரி படை வீரர்களின் கைகளில் சிக்கி தங்களின் மானத்தை இழக்காமல் இருக்க இராஜபுத்திர அரசியும், பெண்களும் தங்களை தாங்களே நெருப்பிட்டு உயிர் மாய்த்துக்கொள்ளும் சடங்கே ஜௌஹர் ஆகும்.

அதேபோல் கணவன் உயிரிழந்தால் அவருடன் சொர்க்கத்துக்கு செல்ல வேறு எவரையும் மணக்க விருப்பம் இல்லாத கற்புக்கரசிகள் தங்களை செந்தழல் தீண்டி கணவருடன் உயிர் துறக்கும் சடங்குக்கு சதி எனப்படும்.

இதேபோன்ற் நிகழ்ச்சிகளும் பழக்கவழக்கங்களும் தமிழ் நாட்டிலும் நடந்துள்ளன.அவை,

இராமநாதபுரம் சேது அரசகுல மாதர்கள் செய்த ஜௌஹர்:

Jauhar practise of Ramnad is Witness in
Military Country Correspondence,vol IX(10-2-1771)
St.George Fort Documents about Arcot Nawab wars.

இராமநாதபுரம் சேதுச்சீமை வீரத்திற்கும் பராக்கிரமத்திற்கும் மாணத்திற்கும் பேர் போன சீமை சேதுபதிகள் ஆரம்ப காலகட்டத்தில் நாயக்கர் பின்  மராத்தியர்களை தொடர்ந்து போர்களில் சந்தித்து வீழ்த்தி அவர்களே சேது வடவெல்லையை தாண்ட அனுமதித்ததில்லை. பின்னால் சிவகங்கை பிரிந்த
பின் ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சிகளினால் சேதுச்சீமையை வளைக்க மராத்தியரும் ஆற்காடு நவாப்பும் கூட்டனி அமைத்து போரிட்டபோது அவ்வபோது வெற்றி தோல்விகள் மாறி மாறி வந்ததுண்டு.

அந்த காலகட்டத்தில் இராம்நாதபுரம் கோட்டைக்கும் முன் ஆறுமுக கோட்டை என்று ஒன்று உண்டு.
இந்த கோட்டை வீழ்ந்தால் அடுத்து இராமலிங்க விலாசம் எனும் அரண்மனை கோட்டை தான் என்பதால் அந்த கோட்டை வீழ்ந்தால் பகைவர்கள் உள்ளே நுழைந்து விடுவார்கள் என அரண்மனை மறக்குல மாதரசிகளுக்காக அரண்மனை மையபகுதிகளில் மொத்தமாக விறக்குகட்டைகள் அடுக்கி அதில் நெருப்பு வளர்த்து எரியவிடுவது வழக்கம். எதிரிகள் உள்ளே நுழைந்தால் வெடுமருந்துகளுடன் அரசிமாரும் இளவரசிகளும் நெருப்பில் பாய்வதென தயார் நிலையில் இருந்தன.

இதைப்பற்றி மிலிட்டரி கண்டரி கரஸ்பாண்டென்ஸ் என்ற ஜார்ஜ்கோட்டை ஆங்கிலேய ஆவனத்தில் ஆற்காடு நவாப் மராத்தியருக்கு வழங்கிய படைகான செலவுகள் பற்றிய ஆவணத்தில் காணப்படுகின்றது.

அப்போது  இராமநாதபுரம் சேதுகோட்டையை பற்றிய குறிப்புகள் (Military Country Correspondence,vol IX(10-2-1771)
பக்கம் 36-38ல்

"இந்த கோட்டை அரணில் நாற்பத்தி நான்கு அலங்கங்கள் இருக்கின்றன. அதனை சூழ்ந்து அகழியும் உள்ளது
ஆனால் தண்ணீர் இல்லை. மழைக்காலத்தில்தான் இங்கு நீர் மிகுந்து இருக்கும்.கோட்டையின் நாலாபுறத்திலும் பரந்த மைதானம்.கோட்டை மீது பெரிதும் சிறிதுமான பீரங்கிகள் ஏற்றி வைக்கபட்டுள்ளன. இவை தவிர்த்து நான்கு பெரிய பெங்காசிப் பீரங்கிகளும் உண்டு. அவை வெடிக்கின்ற குண்டுகளை சுமார் இரண்டு மைல் தொலைவு வரையில் எறிய முடியும் மற்றும்  இன்னும் ஐம்பது பீரங்கிகள்,கோட்டைகுள் உள்ளன. இந்த கோட்டைக்கு கிழக்கே ஒரு பேட்டையும் அதனையடுத்து ஒரு  கோவிலும் உளமும் உள்ளன.
வடக்கே ஏராளமான விளை நிலங்கள் இருந்தது........."

மராத்தியர் ஆற்காடு நவாப் உதவியில் படையெடுத்து ஆறுமுக கோட்டை முற்றுகையும் இராமலிங்க விலாசம் முற்றுகயில் ஈடுபட்ட போது (Military Country Correspondence,vol I9(09-3-1771)
பக்கம் 114ல்

"கீழக்கரையில் சேதுபதிகளின் ஆதரவில் பண்டகசாலைகள் ந்டத்தி வந்த டச்சுக்காரர்கள் பரங்கி அணி ஒன்று தயார் நிலையில் பிரதானி பிச்சை பிள்ளை அவர்களின் தலைமையில் தயார் நிலையில் இருந்தது.
இந்த இறுதி ஏற்பாடுகலையும் கடந்து இராமநாதபுரம் கோட்டை எதிரிகள் கையில் சிக்கிவிட்டால்......
மானம் இழந்தபின் வாழாமை இனிதல்லவா?.........அரசியரும் கோட்டையில் உள்ள மகளிரும் அக்கினி புகுவதற்க்கு ஆயத்தமாக வெடிமருந்துகளை பொதிகளில் கொண்டு அமைத்த மேடை ஒன்றில் தயாராக இருந்தன"

இது இராமநாதபுரம் கோட்டை முற்றுகையின் போது ஆங்கிலேயரால் குறிக்கபடுகின்றது(Military Country Correspondence,vol I9(09-3-1771).

இதுவே ஜௌகர் எனப்படும் அரசமகளிர் தீப்பாய்தலாகும். இந்த பழக்கவழக்கங்கள் சோழர்,பாண்டியர் கால்த்தில் இருந்தது. அரசமகளிர் கணவன் இறந்தவுடனோ இல்லை எதிரிகள் தங்கள் கோட்டையை கைப்பற்றியவுடன் அவர்கள் கைகளில் சிக்கி மானத்தை இழக்க மனமில்லாத மாதரசிகள் தம்மை தீக்குளித்து உயிர் நீத்த புகழை அடைவதாகும்.

இந்த பழக்கவழக்கங்கள் அப்படியே இராஜஸ்தான சத்திரிய ராஜபுத்திர பெண்களிடமும் காணப்படுகின்றது.

இதை கடைபிடித்தவர்கள் சேதுச்சீமை செம்பிநாட்டு மறத்தியரும் அரசிகளும் என ஆங்கிலேய ஆவணங்கள் நமக்கு பறைசாற்றுகின்றன. இன்னும் ராஜபுத்திரர்கள் போல் தலைப்பாகை போர் நீதிகள் செம்பிநாட்டு மறவர்களிடம் மட்டுமே காணப்பட்டது.


There are seven major groups of Maravars the text noted four families were related to the king of ramnad.
The royal family as well as list of particular customs that were attached to this status(including,for example,the practice of sati).
This "ethnographic" text asserted.
Castes of Mind:Colonialism
and making of Modern India
By Nicholas B.Dirkes

இராமநாதபுரம் சம்ஸ்தானம் தென் இந்தியாவில் வலிமையான மறவர் சமஸ்தானம். இராமநாதபுரத்து அரசமகளிர் மிகவும் அரிதான தொன்மையான பழக்கவழக்கங்களை கடைபிடித்து வந்தனர் அதில் முக்கியமாக "உடன்கட்டை ஏறுதல்" அவர்களின் தொன்மையை விளக்கிறது.
(காலநிய ஆதிக்கத்தின் விளிம்பில் இந்தியா :நிக்கோலஸ் டிர்க்ஸ்)

Sembinaattu Maravar women engagein economic activities outside the house.
They also participate in religious ritualsand social activities like their men.
Women of the royal family use to commit sati inthe 18th centuary.

People of India, Volume 40,part 2
Kumar suresh sing,anthropological survey
of India,2001

செம்பிநாட்டு மறவர் குல பெண்கள் தங்கள் கணவன்மார்களை போலவே சமூக பங்களிப்பில் ஆர்வம் கொண்டிருந்தனர் முக்கியமாக ஆலய பணிகளில் மும்முரம் காட்டினர். அவர்களில் அரசகுலத்தவரிம் 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிகளில் சதி என்னும் உடன்கட்டை ஏறுதல்
பழக்கம் இருந்தது.

இந்தியாவின் மக்கள் தொகுதி 40,2 குமார் சுரேஷ் சிங்,ஆந்திராபாலஜி சர்வே என் 2001.

கிழவன் சேதுபதியின் மரணத்தின் போது அவரது 47 மனைவிகளும் உடன்கட்டை ஏறினர் என்பது ஏசுசபை
என்னும் போர்துகேய கத்தோலிக்க திருச்சபை ஆவணங்கள் காட்டும் ஆதாரங்கள்.

கிழவன் சேதுபதி 47 மனைவியரும் தீப்பாய்ந்த காட்சியை பார்த்த பாதிரியார்:




மறவர் குல பெருமன்னர் தலைசிறந்த கிழவன் சேதுபதி இறந்த போது அதனை நேரில் பார்த்த ஏசு சபை பாதிரியார் மார்டின் "மதுரை மிஷன்" என்னும் நூலில்  இருந்து "மதுரா மானுவல்" எழுதிய ஜேம்ஸ் ஹென்ரி நெல்சன்  கூற்று.
According to Nelson whose account appears to be based on the jesuit
letters of Father martin of Madurai Mission:
The death of Kilavan sethupathi followed by one of those painful spectales in spirit of Hinduism his forty sevan wives burnt themselves.At city of Ramnad a land distance is ditch and arrange by the attendent brahmins for sati.The chief widow first wife "held up the sword to his son next hing and praise about husband and thorw herself with loudly upon calling the names of god".

The second wife a kalla women of the sister of pudhukkottai thondaiman
and jump in the fire pit loudly with "oh siva shiva " the name of first boldness.
This ceremoney is done by attendent brahmins after the raise a temple on the incident
of king and queens sati. And wash their ashes in Rameswaram seashore.

கிழவன் சேதுபதி மன்னர் இறந்துவுடன் அவரது கரும காரியங்கள் ஹிந்து முறைப்படி நடந்து கொண்டு இருந்தது. இதை பிராமணர்களே செய்தனர். அவரின் 47 மனைவியரும் தீப்பாய ஒரு இடத்தை இராமநாதபுரம் நகருக்கு வெளியே ஒரு மிகப்பெரிய பள்ளம் வெட்டப்பட்டது. அதில் கட்டைகளால் நிரப்பபட்டு.நிரப்பட்ட கட்டைகளை அடியில் பிராமணர்கள் தீ மூட்டினர். அப்போது சேதுபதி மன்னர் பிரேதத்திற்கு மாலைகளையும் அணிகளன்களையும் அலங்கரித்து தீ மூட்டப்பட்டது.

முதல் மனைவியும் பட்டத்து அரசியும் முதல் மனைவியான மறக்குல மாதரசி சேதுபதி மன்னர் பயன்படுத்திய அரச வாளான "ராமபானம்" என்னும் வாளை தாங்கி மார்போடு அனைத்து  அந்த வாளை அடுத்து வரும் மன்னனான இளவரசனை பார்த்து பேசத்தொடங்கினார். "இந்த வாள் எதிரிகளை வீழ்த்தி எப்போதும் வெற்றிகளை பெற்ற வாளான இந்த பொக்கிஷத்தை வேறு எதற்க்கும் பயன்படுத்த கூடாது.உன் குடிகளை இரத்தம் சிந்தி காப்பாற்றவே பயன்படுத்த வேண்டும்.
உணது குடிகளுக்கு நீ தகப்பன் ஸ்தானத்தில் இருந்து அவர்களை காத்து இந்த தேசத்தை நெடுநாள் ஆள வேண்டும்.

ஆனால் எனக்கு அவர் போன பின் இந்த மண்ணில் ஏதுமில்லை ஆதலால் அவரது தடத்தை  பற்றி அவருடன் செல்கிறேன். என இளவரசனான அந்த புதிய மன்னனிடம் கொடுத்துவிட்டு எந்த எண்ணமும் இல்லாமல் "சிவசிவசிவ" என கூறிக்கொன்டே எரிந்த குளியில் விழுந்தார்.

அடுத்து இரண்டாம் விதவையான கள்ளர் குல அரசியார் வந்தார். இவர் புதுக்கோட்டை தொண்டைமான் சகோதரி ஆவார். அவரின் அருகில் ஒரு சகோதரி அவரின் நகைகளை வாங்கிகொண்டார். அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை.அருகில் நிறை பெண்கள் அவரை கட்டி பிடித்து அழுதுகொண்டு நின்றனர். அவரை தேற்ற முடியாமல் தடுமாறினார்கள். எல்லாவற்றையும் விளக்கிய பின்னர் அவரும் "சிவசிவசிவ" என கூறிக்கொண்டே தைரியத்துடன் தீப்பாய்ந்தார்.

இதனை கண்டு பாதிரியாரும் அவருடன் வந்த ஐரோப்பிய வீரர் ஒருவரும் பதறி நின்றனர். இப்படி அனைத்து மனைவியரும் தீப்பாய்ந்த உடன் அந்த சிதை முழுவதுமாக எரிந்தவுடன் பிரமணர்களால் அது ஒரு துனியில் பத்திரமாக எடுக்கபட்டு இராமேஸ்வரத்தில் கரைக்கபட்டது.


சிதை எரிந்த இடத்தில் சிறிது நாளில் சேதுபதி மன்னரும் இராணியரும் தீ சமாதி அடைந்த இடத்தில் ஒரு கோவில் சேதுபதி மன்னனை கவுரவ படுத்த கட்டபட்டது.

சுத்தமான சத்திரிய வர்க்கத்தின் சடங்கு இது. இது ஒன்றே சோழர்களுக்கு பின் தமிழர்களுக்குள் நடந்த ஆதாரப்பூர்வமான சடங்கு இதுவே ஆகும்.





உடன்கட்டை ஏறிய உத்தம மறத்திகள்:



ஆதிகாலத்தில் உடன்கட்டை ஏறுதல் எனும் "சதி" என்னும் வழக்கு இருந்தது. கேட்போரைக்கிலிகொள்ளச்செய்யும், இந்நிகழ்வுகள் பல வரலாற்றுத்தடங்களை நம்மிடையே விட்டுச்சென்றுள்ளது. அதைச்சிறிது காண்போம்!

தீப்பாய்ந்த நாச்சியார்கள்!

சங்ககால்த்தில் இருந்த சிதையேறும் மகளிர்:

சேரன் செங்குட்டுவன் கி.பி 2-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். சேரன் செங்குட்டுவனின் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மறைந்தபோது, குலவழக்கப்படி நெடுஞ்சேரலாதனின் மனைவியான "நற்சோணை" என்ற சோழ மகள் உடன்கட்டை ஏறினாள். செங்குட்டுவன் தன் தாயாரின் நினைவாக கோயில் எடுக்க எண்ணி, இமயமலையிலிருந்து கல் கொண்டு வந்து கோயில் எடுத்தலே சிறப்பு எனக்கருதி இமயத்தின் மீது படையெடுத்து கல்லெடுத்து கங்கையில் நீராட்டி நாடு மீண்டான். "நற்சோணையம்மன்" சேரர் குலதெய்வம் ஆனாள். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்துாரில் 17 ம் நுாற்றாண்டை சேர்ந்த கல் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.சேத்தூர் மாரியம்மன் கோயில் பின்புறம் காலியிடத்தில் குப்பை இடையில் ஒரு கல் சிற்பம், தனியார் ஆங்கிலப்பள்ளி எதிரே பள்ளத்தில் சாய்ந்த நிலையில் இரண்டு கல் சிற்பங்கள் கண்டுகொள்ளப்படாமல் இருந்தன. இது தொடர்பாக ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் கந்தசாமி கூறியதாவது: இப்பகுதியில் பழங்காலத்தில் சமுதாயத்தின் உயர் நிலையில் உள்ள தலைவர், வீரன், குறுநில மன்னர் இறந்தால், அவரது மனைவியும் சேர்ந்து இறந்து விடுவது வழக்கத்தில் இருந்தது. கணவன் மீது வைத்திருந்த காதல் மிகுதியால் மனைவி உடன்கட்டை ஏறுவது சமூக மரபாக இருந்தது. சங்க இலக்கியங்களில் உடன்கட்டை ஏறிய பெண்களைப் பற்றி பல பாடல்கள் குறிப்பிடுகின்றன.

சோழர்கள் தமிழகத்தை ஆண்ட காலத்திலும் பலதாரமணம் நடைமுறையில் இருந்தது. ஆனால், இதில் ஒருத்தியே பட்டத்து அரசியாக இருக்க தகுதிபெற்றவள் ஆவாள். பூதப்பாண்டியன் இறந்தபொழுது அவன் மனைவி பெருங்கோப்பெண்டு உடன்கட்டை ஏறியதை வரலாறு காட்டும். கணவரை இழந்த பெண் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறுவதைப் பற்றி சில கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சோழநாட்டில் இத்தகைய நிகழ்ச்சிகள் மிகக் குறைவாகவே நடந்தன. இது பரவலான வழக்கமாக இல்லை. முதலாம் பராந்தகன் ஆட்சிக் காலத்தில், வீரச் சோழ இளங்கோவேள் என்ற கொடும்பாளூர்ச் சிற்றரசனின் மனைவி கங்கா தேவியார் என்பவள் தீக்குளிக்கும்முன் ஒரு கோயிலில் நந்தா விளக்கேற்ற நிவந்தங்கள் கொடுத்தாள் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இராஜராஜ பேரரசனின் தாயாரும் சுந்தர சோழனின் மனைவியுமான வானவன் மாதேவியார் உடன்கட்டை ஏறிய செய்தி திருவாலங்காட்டுச் செப்பேட்டில் குறிக்கப்பட்டிருக்கிறது. வீரமிக்க இந்தச் செயலுக்காக, மக்கள் வானவன் மாதேவியாரைப் போற்றி வழிபட்டார்கள்.


இதைப்போல சிவகங்கை மன்னர் சசிவர்ணத்தேவரின் திருமணத்திற்கு பின் நோய்வாய்ப்பட்டார் அவரது தந்தை பெரிய உடையணத்தேவர் மஹாராஜா அவர்கள்.பெரிய உடையணத்தேவரின் மரணம் சேது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய பலவீனம் ஆனது. இவரது இறுதி சடங்குகள் நாலுக்கோட்டை அருகில் உள்ள கந்தமாதனப் பொய்கையில் நடந்தது. சந்தனக் கட்டைகளால் அடுக்கப்பட்ட சிதையில் மறக்குல ராணியார் சிந்தாமணி நாச்சியார் எனும் உத்தமமறத்தி தன் கணவருடன் உடன்கட்டை ஏறினார். இருவரும் இறந்ததன் நினைவாக நிறுவப்படும் நினைவுக்கற்களே' சதிக்கல்' என அழைக்கப்படுகிறது. இத்தகைய சிற்பங்கள் வழிபட வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. சொக்கர் - மீனாட்சியாக வழிபாடுமாரியம்மன் கோயில் பின்புறம் உள்ள சிற்பத்தை, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சொக்கர் - மீனாட்சி என்ற பெயரில் வழிபட்டு வந்துள்ளனர். இச்சிற்பத்தில் ஆணும்,பெண்ணும் அமர்ந்த நிலையில் ஆண் தனது வலது காலை கீழே தொங்கவிட்டபடி, இடது காலை மடக்கி வைத்திருப்பது போன்றும், அருகில் ஓரு பெண் வலது காலை மடக்கியும் இடது காலை தொங்க விட்ட நிலையில், ஆண் தனது வலது கையில் அல்லிமலர் ஒன்றை வைத்திருப்பதும், இடது கையைத் தன் தொடை மீது வைத்துள்ள நிலையில், இதே போல பெண்ணும் வலது கையில் கண்ணாடியுடன், கொண்டையை பிடித்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தில் ஆணின் தலையலங்காரம் கிரீடம் போன்றும், ஆண், பெண் இருவரின் காதணிகளும் தோள்பட்டையை தொட்டவாறு சிற்பத்தில் காட்டப்பட்டுள்ளது. அதோடு சிற்பத்தின் கீழ்பகுதியில் ஒரு பெண் மட்டும் தன் இரண்டு கால்களை மடக்கி அமர்ந்துள்ள நிலையில், வலது கையில் அல்லி மலர் ஒன்றை ஏந்தியுள்ளது போன்று செதுக்கப்பட்டுஉள்ளது. மற்ற இரண்டு சிற்பங்களில் சற்று வித்தியாசங்களுடன் பூச்செண்டு, வாள் வைத்திருப்பது போன்று மிக அழகாக வடிவமைத்துள்ளனர்.

சேத்தூர் பாளையக்காரரின் மறைவால் பிரிவாற்றாமை தாங்காத அவரின் மனைவியான ராணியார் அவர்கள் கணவரோடு உடன்கட்டை ஏறியதலின் நிகழ்வாகவே அவ்விருவர் சிலைகளும் வடிவமைக்கப்பட்டு தற்போது சேத்தூர் ஜமீன் குடும்பத்தினரால் வழிபடப்பட்டு வருகிறது. சேத்தூர் ஜமீன்தார்கள் வணங்காமுடி பண்டார (பண்டாரம் -பொக்கிஷம் )மறவர் பிரிவைச்சேர்ந்தவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக. கிழவன் சேதுபதி மன்னர் இறந்தபின் அவரின் 47 மனைவியரும் அவருடன் உடன்கட்டை ஏறியதாக வரலாறு உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி அருகே கொக்க ரசன்கோட்டை என்ற ஊரில் பஸ் நிறுத்தம் அருகில் ஒரு மாலைக்காரியம்மன் கோயில் உள்ளது. 18-ம் நூற்றாண்டில் இவ்வூரில் வசதி வாய்ப்புடன் இருந்த குடும்பத்தைச் சேர்ந்த மறவர் ஒருவர், குதிரையில் வந்தபோது இடறி விழுந்து இறந்துவிட்டார். அவருடன் அவர் மனைவியும் உடன்கட்டை ஏறினார்.இதனால் அப்பெண்ணின் விருப்பப்படி அவருடைய வம்சாவளியினர் இக்கோயிலைக் கட்டி தற்போதும் வழிபாட்டில் உள்ளது.

இன்னுயிரை தீயில் மாய்த்த ஈழத்து மறத்திகள்!


ஈழத்தில் முற்குகர் வன்னி மறத்திகள் மட்டகளப்பு குடா நாடுகளில் தங்கள் கனவனை போல அரசு செய்துவந்தனர். இவர்களை வன்னி நாச்சிமார் என வழிபடும் வழக்கம் இன்றும் உள்ளது.

யாழ்ப்பாண வன்னிநாட்டிற் கண்டெடுக்கப்பட்ட பழைய ஏட்டுப் பிரதியொன்றில் பின்வரும் வரலாறு காணப்படுகின்றது:- “அறுபது வன்னியமார்(மறவர்கள் )இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து ‘அரசு’ புரிந்துகொண்டிருந்தனர். அவர்கள் இங்கு வரும்போது தம்முடைய மனைவிமாரை மதுரையில் விட்டுவிட்டு வந்தனர். அக்காலத்திலே வட இலங்கையின் பல பாகங்களைப் பறங்கிக்காரர் கைப்பற்றத் தொடங்கினர். அப்பொழுது அந்த வன்னியமார் அறுபது பேரும் பறங்கிக்காரரோடு போர் புரிந்தனர். அவருள் 54 பேர் போரில் மாண்டனர்.” (மேல் வரும் பகுதி நேரடியாக ஏட்டுப் பிரதியிலிருந்து எடுக்கப்பட்டதாகும்). “ஆனால், அக்கூட்டத்தில் ஐவர் பறங்கிக்காரரோடு பெரும் போர் நிகழ்த்தி தாம் இருக்கும் வன்னி நாட்டைக் கைப்பற்ற விடாது அவரை முறியடித்து, முள்ளியவளை முனையாக அந்த நாடுகளையும் அரசு பண்ணினர். ஒருவன் கண்டி இராசனுக்குத் திசை (திசாவா) (2) யாகப் போய்விட்டான். அதன்பின்னர் எஞ்சிய ஐந்து வன்னியமார்கள் மதுராபுரிக்குப் போய்த் தமது மனைவிமாரை இட்டு வரும்படிஓடமேறிச் சென்றனர். அவர் போகும்போது அவர் போன ஓடம் கடலில் ஆழ்ந்துவிட்டது. அதனால், அவர் மாண்டனர்.” “இது இவ்வாறிருக்க அந்த வன்னியமார் அறுபது பேருடைய பெண்சாதிமார் மதுரையிலே இருக்கும்போது ஒரு நாள் அந்த நாட்டரசன் அவர்களிருக்கும் தெருவீதியிலே குதிரை மீதேறி, பெண்கள் இருக்கும் தெரு என்றும் கவனம் பாராது தன் குதிரையை ஓட்டி வந்தான். அவ்வாறு அவன் வந்தபடியினால் அவர், ‘இனிமேல் நாங்கள் இங்கிருந்தால் எங்களுடைய மானம் கெட்டுப் போகும். எங்கள் முதலாளிமார் இலங்கை நாட்டிற்குப் போய் இராசாக்களாக இருப்பதால் நாங்களும் அவ்விடம் போக வேண்டும்’ என எண்ணினர். தமது பயணத்திற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்துகொண்டு தங்கள் பணியாட்களுடன் ஓடமேறி வட இலங்கைக்கு வந்தார்கள். பின்னர் வன்னிய நாட்டுக்கு வரும்போது வன்னியமார் இறந்த சேதிகொண்டு தூதன் பின்வருமாறு சொல்லுவான்: “எங்கள் முதலாளிமார்கள் 60 பேரிலே 54 பேர் பறங்கிக்காரருடன் பொருதுபட்டுப் போனார்கள். ஒருவர் கண்டியில் இராசாவுக்குத் திசையாக நிற்கின்றார். மற்ற 5 பேரும் பறங்கிக்காரரையும் வென்று வன்னியை ஐந்து பற்றாகப் பிரித்து அரசு பண்ணினார்கள். அப்படி அரசு பண்ணிவிட்டு அந்தந்தப் பற்றுக்கு அந்தந்த வேளாளரை முதன்மையாக்கிப் போட்டு முள்ளியவளையிலே இளஞ்சிங்க மாப்பாணனை(இளஞ்சிங்க வீரன் என்னும் மறவன்) [சேதுபதி செப்பு பட்டயத்திலே அவரின் பட்டங்களாக இளஞ்சிங்கம்,தளசிங்கம்,சொரி முத்து வன்னியன் என அவரது விருதுகள் வருகின்றது] முதன்மையாக்கிப் போட்டு மதுரைக்கு வந்தார். அதன் பின்பு அவர் கதை யாதொன்றுந் தெரியாது” என்றனர். “இவ்வாறு தூதன் சொல்ல அது கேட்டு முன்னமே இறந்த 54 வன்னியமார்களுடைய பெண்சாதிமார்களும் தெல்லிச்சி வாய்க்காலிலே (3) தீயிலே வீழ்ந்து மரணமடைந்து போனார்கள். அப்போது அவர்களுக்கு நாச்சிமார் என்று பெயராயிற்று. அவர்களுக்குக் குதிரை விட்டுவந்த சேவகரும்(மறவர்களின் குதிரை சேவகரான பள்ளர்) அறுபது பேரும் வீரக் குடும்பன்(குதிரை சேவகர் தலைவர்) முதல் ஆரிய குடும்பன் முதலாகத் தீயில் விழுந்துவிட்டார்கள். அன்றுமுதல் அவர்களுக்கு (மறவர் பென்கள் குடும்ப மக்களை தன் அண்ணன் என அழைப்பது வழக்கம்) அண்ணமாரென்னும்பெயராயிற்று. ஒரு வன்னிச்சிமாரும் வன்னி ஐந்து பற்றிலுமிருந்து அரசு புரிந்தார்கள் அதன் காரணத்தால் பெண்களுக்கு வன்னிமை என்றும் ஆண் பிள்ளைகளுக்கு ‘ஐதாந்தி’ என்றும் பெயராயிற்று.” இவ்வன்னிநாட்டு வரலாறு ஒருபுறமிருக்க யாழ்ப்பாணத்தில் நாச்சிமார் வழிபாடிருக்கும் சில பகுதிகளில் வழங்கும் வரலாற்றை இங்கு தருவாம். அது பின்வருமாறு: ஆறு வன்னிமைப் பெண்கள் வன்னி நாட்டிலிருந்து ஆட்சி புரிந்து வந்தனர். பறங்கிக்காரர் வட இலங்கையின் ஒரு பகுதியை கைப்பற்றிய பின்னர் வன்னியையும் கைப்பற்ற முயன்றனர். ஒவ்வொரு முறையும் அவர் முயற்சி பலிக்காமல் போரில் தோல்வியுற்று வன்னிநாட்டினின்றும் திரும்பவேண்டியவரானார். ஏதோ ஒரு வகையாகத் தாம் வெற்றி பெறவேண்டுமெனப் பெரும் ஊக்கத்துடன் தமது படையை அணிவகுத்துப் பின்னரும் சென்றனர். அங்கு போய் வன்னிநாட்டுப் படைகளுடன் பெரும் போராற்றினர். இம்முறை வன்னிநாட்டவர் படை சிறிது தளர்வுற்றனர். அதைக் கண்ட அந்த நாட்டினை ஆளும் வன்னிமைப் பெண்கள் அறுவரும் அவரது பணிப்பெண் ஒருத்தியும் ஆண்களைப்போல், அம்பு, வில்லு, வாள், சதங்கை முதலிய படைதாங்கித் தமது சேனையை நடாத்திப் பறங்கியர் முன்னர் வந்தனர். இருபடையினர்க்கிடையிலும் இதுகாறும் நடந்த போர்களைக் காட்டிலும் பெரியதோர் போர் மூண்டது. இப்பெண்கள் பறங்கியர் படை எதிரில் நின்று மிகுந்த வீரத்தோடு போர் செய்தனர். அதனால், பறங்கியர் முதுகுகாட்டி ஓடவேண்டிய நிலையும் வந்தது. எனினும் ஏதோ சூழ்ச்சியால் பறங்கியர் தலைவன் போரை வென்றனன். அதனால், வன்னிப்படையினர் மனமுடைந்தனர். அப்பெண்கள் ஏழுபேரும் பறங்கியரின் கைகளில் அகப்பட்டால் மானபங்கம் அடைய நேரிடும் என உள்ளம் பதைத்தனர். மானமிழந்து வாழ்வதைக் காட்டிலும் உயிர் நீத்தலே சாலச்சிறப்புடைத்து என உறுதி கொண்டனர். உடனே அப்பெண்கள் எழுவரும் நஞ்சுண்டிறந்தனர். அதைக்கண்ட வன்னிநாட்டவர் அவரைத் தெய்வமாக்கினர். கற்பினிற் சிறந்து விளங்கிய கண்ணகியைக் கடவுளாக்கி வழிபடும் தமிழ் மக்களாகிய வன்னிநாட்டவரிடை வீரத்திற் சிறந்து திகழ்ந்த இவ்வெழுபெண்களையும் வழிபடும் வழக்கம் எளிதிற் பரவியது, நாளடைவில் இவ்வழிபாடு வன்னிநாட்டில் மட்டுமின்றி ஏனைய இடங்களுக்கும் பரவியது. யாழ்ப்பாணத்திலே வடமராட்சி(வட மறவர் ஆட்சி)கிழக்குப் பகுதியைச் சேர்ந்த நாகர்கோயில் என்னும் ஊரிலும் பருத்தித்துறை, சாளம்பை(4) வட்டாரத்திலும், காங்கேசன்துறை வன்னியனார் வளவிலும் அராலியிலும் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியிலும் இவ்வழிபாடு இன்றும் நடைபெறுகிறது.

மருது வணங்கிய தீப்பாய்ந்த அம்மன்!

கணவனும் மனைவியுமான இருவர் பிழைப்பு தேடி தங்கள் ஊரான கோசுகொண்டுவை விட்டு புறப்பட்டு வந்தவர்கள் வழியில் மருதுகளின் நரிக்குடி சத்திரத்தில் தங்கியிருந்தனர். நேரமோ நள்ளிரவு.அவர்களின் நாய் மட்டுமே அவர்களுக்கு துணை. அந்த நேரம் அங்கு வந்த கயவர் கூட்டம் நயவஞ்சகத் திட்டம் ஒன்றினை தீட்டியது. கணவரிடம் நயமாக பேகி பேச்சுக் கொடுத்து கொண்டே காட்டு பக்கம் கூட்டி சென்று நாடான் ஊருணி எனும் குளத்தருகில் கொன்று போட்டனர். சென்ற கணவன் திரும்பாதது கண்டு மனைவி துடித்தாள். நாய் வழி காட்டிட கடைசியில் அது நின்ற இடத்தில் கணவனின் பிணத்தை கண்டாள்.நரிக்குடி சத்திரத்திற்கு திரும்பி வந்து நடந்த துயரை சொல்லி புலம்பினாள். அங்கிருந்தவர்கள் மன்னரிடம் சென்று முறையிட சொன்னார்கள்.சிவகங்கை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தாள். கண்ணீரும் கம்பலையுமாக தம் முன் நிற்கும் பெண்ணை கண்ட மருதரசர்கள் ''உற்ற துன்பம் என்ன?'' என்று உசாவி முடிக்கும் முன்பே ''அரசே பிழைக்க வழி தேடி வந்தால் உயிருக்கே உலை வைத்து விட்டார்களே! இந்த நாட்டில் ஊருக்கு ஊர் கொலைக்களம் என்று தெரிந்திருந்தால் வேறெங்காவது போயிருப்போமே! இது தான் உங்கள் நாட்டில் நீதியா?'' என்று கண்ணகி போல் தன் ஆவேசத்தை கொட்டி தீர்த்தாள். கேட்ட பார்த்திபர்கள் அவளையும் உடன் அழைத்துக் கொண்டு கொலைபட்ட இடம் நோக்கி விரைந்தனர். அதற்குள் கயவர்கள் பிடிபட்டனர். உரிய விசாரணைக்கு பிறகு தண்டனை வழங்கப்பட்டது. தாயினும் மேலாக பார்த்துக் கொள்வதாக  கூறியும் அப்பெண் மறுத்து தன் கணவனுடன் தீப் புகுந்தாள். தீப்புகும் முன் தன் சேலையும், கருகமணி, காதோலையும் கருகாதிருக்குமென்று உரைத்து விட்டுத் தீப்புகுந்தாள். உடல் கருகிய பின் கருகாதிருந்த பொருட்கள் சேகரிக்கப்பட்டு மருதிருவர் குடும்பத்தினரால் நரிக்குடி முக்குளத்தில் பாதுகாக்கப்பட்டன. அப்பெண்ணை தீப்பாய்ந்த அம்மனாக போற்றி அவர் சிதையிலிருந்து எரியாமலிருந்து எடுத்ததாக கூறப்படும் கீழ்க்கண்டவற்றை நார்ப்பெட்டியில் பரணில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது என்றும் விசேட நாட்களில் அதை எடுத்து வீட்டு பெண்கள் வழிபடுவர் என்றும் மருதரசர்களின் வாரிசுதாரர்கள் சொல்கின்றனர். பெரிய மருதுகள் வழியினரான முக்குளம் முன்னாள் கர்ணம் முத்துக்கருப்பன் சேர்வை இல்லத்தில் உள்ள அந்த நார்ப்பெட்டியில் வைத்துப் போற்றிக் காக்கப் படுபவை :- 1.பதினாறு முழ வெள்ளைப்புடவை. 2.கருகமணி. 3.காதோலை. 4.கணவர் அணிந்திருந்த வட்டுடை. 5.ஒரு நீளமான பை. 6.வெட்டப் பயன்படுத்திய அரிவாள். 7.இவற்றை கட்டிய கொச்சக்கயிறு ஆகியவை. அன்று மருதுகளின் ஆட்சிக் காலத்தில் நாட்டில் அமைதியைக் குலைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் கயவர்கள் செய்த கொடூரச் செயல்களினால் ஒரு பத்தினிப் பெண் பாதிக்கப்பட்டாள்.

பட்டுக்கோட்டையில் பத்தினித்தெய்வம்!

 பட்டுக்கோட்டையில் இருந்து கிழக்கே முத்துப்பேட்டை சாலையில் தாமரங்கோட்டை கிராமத்திற்கு அடுத்ததாக இருக்கும் பரக்கலக்கோட்டை கிராமத்தில்!.. இந்த தாமரங்கோட்டை கிராமத்தில் சுமார் இருநூறு வருடங்களுக்கு முன் - தன் கணவனின் சிதையோடு ஒன்றி உடனாகி தீக்குள் தீயாகி நின்ற திருவிளக்கு - நல்லம்மாள் எனும் மாதரசி!.. அந்த அம்மையார் தீக்குள் புகுந்த இடத்தில் முளைத்தெழுந்தது - ஒரு மாங்கன்று. சிலவருடங்களில் அதை அரவணைத்து ஆல் ஒன்றும் முளைத்தது. மாங்கன்று ஆலமரத்தினுள் ஐக்கியமாகி விட - இப்போது அங்கே விளங்குவது பிரம்மாண்டமான ஆலமரம் மட்டுமே. மாதரசி நல்லம்மாள் இன்னும் இந்த ஆலமரத்தில் உயிர்ப்புடன் உறைகின்றாள். அதனாலே - தீப்பாய்ந்த அம்மன் என்றும் தீப்பாய்ந்த நாச்சியார் என்றும் சித்திரை முதல் நாளில் பெரியதொரு விழா எடுத்து கொண்டாடி மகிழ்கின்றார்கள்.

 சதிகல்!



 கணவன் இறந்த பிறகு தீப்பாய்ந்த பெண்ணும் நடுகல் தெய்வமானாள். சங்ககால இலக்கண நூலான தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பரணர், நச்சினார்க்கினியர் ஆகியோர் நடுகற்கள் தொடர்பான செய்திகளைக் குறிப்பிடும்போது மேற்கோள் பாடல்களையும் குறிப்பிட்டுள்ளனர். இதில் தொல்காப்பியர் அகத்திணையை ஏழாக வகுத்துக் கொண்டது போல புறத்திணையையும் ஏழாக வகுத்துக்கொண்டார். இதே போல சங்க இலக்கியத்தில் உடன்கட்டை ஏறிய மனைவியரைப் பல பாடல்கள் குறிப்பிடுகின்றன. புறநானூறு 250-ஆம் பாடல் உடன்கட்டை ஏறிய கற்புக்கரசியைப் போற்று இவ்வாறு பாடுகின்றது தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றார் இகழினும் கேள்வரை எட்டி இறைஞ்சுவர். (பரிபாடல் 20-80-89) புறநானூறு கற்புக்கு அடையாளமாக அருந்ததியைக் குறிப்பிடுகிறது. (புறம் 22-8-9) சிலம்பும் அருந்ததியைப் போற்றுகிறது. பிற்கால நூல்களும் அருந்ததியைப் போற்றும் இருந்து தோன்று விசும்பின் உலகத்து குறும்பை மணிப்ப+ண் புதல்வன் தாயே என்று அகம் அருந்ததியைப் பாராட்டுகிறது.(அகநானூறு 42-3-5) கணவன் இறந்த பின் தீப்பாய்ந்து இறந்து போன பெண்ணிற்காக நடுகற்கள் எடுக்கப்பட்டன. 

கைம்மை நோற்கும் பெண்கள் மிகுந்த கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டிருந்ததும் கொடுமைக்கும் ஆளாக்கப்பட்டிருந்ததும் இதற்கு காரணமாக இருக்கலாம். மற்றொரு புறம் கணவன் இல்லாத வாழ்வைப் பொறுத்துக்கொள்ளமுடியாது தீப்பாய்ந்து இறந்துபோன பெண்களைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடியதைக் கண்டு தீக்குளிப்பதை பெண்கள் விரும்பியிருக்கவேண்டும். இக்கோயில்கள் மாலையம்மன்கோயில், தீப்பாய்ந்த அம்மன்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. தீப்பாய்ந்து இறந்துபோன பெண்களின் உருவங்கள் கணவனோடு அமர்ந்து இருப்பது போன்றம் சேர்ந்து இருப்பது போன்றும், கணவனை வணங்கி நிற்பது போன்றும் சதிகற்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை தவிர கற்பின் பெயராலும், கணவன் இறந்தாலும் தம் எதிர்காலம் பாழ்பட்டுப்போய்விடும் என்ற அச்சத்தாலும் பண்பாடு, மரபு சிந்தனைகள் தாக்கத்தாலும் பெண்கள் கணவன் மரணமடைந்ததும் தாங்களும் தன் பலியாகச் சிதையில் விழுந்து இறந்த செய்திகள் கூடக் காணப்படுகின்றன.


தூத்துகுடி மாவட்டம் வேம்பார் என்ற ஊரில் சிவப்பெருங்குன்றம் என்ற மாலைக்கோவில் உள்ளது. இது வேட்டைக்கு போன வீரன் ஒருவன் பாம்பு கடித்து இறந்துவிட அவனின் மனைவி தீப்பாய்த ஞாபகமாக கட்டப்பட்ட கோவிலாகும். இதை மறவர் சமுதாயத்தினர் குலதெய்வமாக அவர்கள் வம்சாவளியினர் வழிபட்டு வருகின்றனர்.

நடவுப்பாடல்களில் "தீ" நாச்சியார்!

நடவுப்பாடல்:- நடவு நடும்போது பெண்கள் வயல்களில் பாடும் பாட்டு நயம் கலந்தவை. "தீப்பாய்ந்த நாச்சியாரே தேசம் போற்றும் ஆச்சியாரே மங்கை குறை சொல்லிவாரேன் அம்மா என் மனக்கவலை மாற்றவேவேணும் - அம்மா ஊரை விட்டுப் போனவரை காரிலேறி தேடப்போனேன் காடுவோட்டும் நடவர்தாண்டி அம்மா கண்ணடிச்சி பாக்குராண்டி அம்மா"....... ......இன்னும் வரும்!

எனவே தீப்பாய்தல் என்னும் சதி அரசுமகளிர் தற்கொலை ஜௌகர் என்னும் வழக்கம் இராஜபுத்திரர்கள் மட்டுமல்ல தமிழகத்து மறத்தியர்களிடமும் இருந்துள்ளது என முற்காலம் காட்டும் ஏடுகள் பல உள்ளன.


 வாழ்க! முக்குலத்து மறத்திகள் தியாகம்! ... வளர்க! ...தீ... நாச்சியார்கள் வழிபாடு! !!!!

நன்றி:
உயர் திரு ஐயா அமரர் எஸ்.எம் கமால்


ஆவணங்கள்:
Jauhar practise of Ramnad is Witness in
Military Country Correspondence,vol IX(10-2-1771)
St.George Fort Documents about Arcot Nawab wars.

Castes of Mind:Colonialism
and making of Modern India
By Nicholas B.Dirkes

People of India, Volume 40,part 2
Kumar suresh sing,anthropological survey
of India,2001

 .

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.