Thursday, December 10, 2015

முற்குகர் என்னும் குகன் குல வரலாறு-சிவ.சன்முகம் போடியார்


மட்டகளப்பு முற்குகர் வரலாறு பற்றிய இன்நூல் தமிழர்களின் பண்டைய கால குடியேற்றத்தை பற்றிய விபரங்களை எழுதபட்ட ஒன்றாகும்.




சேது காவலர்களும் மட்டகளப்பு வன்னிபங்களும்
முற்குகர் என்னும் குகன் குல வரலாறு-சிவ.சன்முகம் போடியார்
ஈழத்தமிழ் வேந்தன் வெடியரசன்
ஆரிய சக்கரவர்த்தி யார்?
வன்னி நாட்டை அரசு புரிந்த வனிதையர்(மறவர் குல நாச்சியார்) - பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை
சோழகங்கதேவன்(கலிங்க மாகன் ) ஈழப் படையெடுப்புகள்
இலங்கையில் மறவர்குடியேற்றம் சோழ,பாண்டியர் காலத்தில்
ஏழுகடல் ராசாக்கள் என்னும் கதை இந்தியா முழுதும் வழங்குகிறது. கடல் அரசர்களாக கடலில் மாட்சி செய்து கடல் கரைகளில் தங்கள் தலைநகரங்களை அமைத்து பல நாடுகளில் பல அரசுகளை ஸ்தாபித்தவர்கள் இவர்களே என்று நான் கூறினால் அது மிகையாகவும் நம்பமுடியாத விஷயமகவும் இருக்கும். தலைக்கணமாக கூட தோனலாம் பரவாயில்லை. ஆனால் உண்மை அதுவே. வஞ்சி,கொற்கை,புகார்,கலிங்கம்,வங்கம்,அங்கம்,சீனம்,சாவகம்,சுவர்ணம்(மலயா) முதல் மேற்கே எகிப்து,கீரீட் முதல் மீசோ அமெரிக்க வரை சென்று பெண் தெய்வ வழியை உலகுக்கே ஒரு காலத்தில் பரப்பியவர்கள் இவர்களேயாவர்.

மட்டக்களப்பில் முற்குகர்கள் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே குடியேறி இங்கு வாழ்ந்தார்கள் என்று சில கல்வெட்டு பாடல்களின் மூலம் அறியக்கூடியதாய் இருக்கிரது. மட்டகளப்பு முற்குகர்கள் பற்றி சில மேல் நாட்டு,உள்நாட்டு சரித்திர ஆசிரியர்கள் அவர்கள் இந்தியாவின் மலபார் பிரதேசத்திலிருந்துதான் வந்தார்கள் என கூறுவதை அப்படியே ஏற்று கொள்ள முடியாததாக உள்ளது. முற்குகர்கள் குகன் குலத்தினைச் சார்ந்தவர்களென்றும் அயோத்தி,கலிங்கம் ஆகிய இடங்களிலிருந்து இவர்கள் வந்தவர்களென்றும் கல்வெட்டு,பாடல்களிலே தெரிவிக்க படுகின்றது. மட்டகளப்பு ஆட்சி செலுத்திய கலிங்க மன்னர்களுக்கும்,இவர்களுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பினையிட்டு மட்டகளப்பு பூர்வீக சரித்திரத்தினை ஆழமாக படிப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம்.(இது எனது கருத்தேயாகும்)

முற்குகர்கள்,புதுப்புது இடங்களிற்சென்ரு குடியேறி வாழும்,ஒரு வீர மறவர் குழுவை சேர்ந்தவர்களென்று கூறுவதும் பொருத்துமுடியதாகும். இவர்கள் மறவர் குலத்தையே சார்ந்தவர்கள் என்பதே உண்மையும் கூட.மட்டகளப்பு நாட்டிலே மிக நீண்ட காலத்திற்கு முன் குடியேறி இந்நாட்டின் இங்குள்ள நிலபுலன்களுக்கெள்ளாம். சொந்தகாரர்களாக் இருந்தவர்களும் இவர்களேயாகும்.மட்டகளப்பு நாட்டின் திருப்படைக் கோவில்களின் பாதுகாவலர்களாக,வண்ணக்கர்களாக இருந்து இங்கு வீரசைவமும்,தமிழும் சிறதோங்க வழிவகுத்தவர்களும் இவர்களே யாவர்.



முற்குகர்:

முற்குகர் சோழர் காலத்தில் சோழனால் அனுப்பட்ட வேளக்காரர்,வில்லிகள்,
முனைவீர படைகளை சேர்ந்தவர்களாவர்.

The Vannimai ruling class arose from a multi-ethnic and multi-caste background. According to primary sources such as the Yalpana Vaipava Malai, they were of MukkuvarKaraiyarVellalar and other caste origins.[11][12][13][14] Some scholars conclude the Vanniyar title as a rank of a local chieftain which was introduced by the Velaikkarar mercenaries of the Chola dynasty.[15


ஆயினும் கல்வெட்டு என்று அழைக்கபடும் மட்டகளப்பு பூர்வீக சரித்திரமான ஏட்டு பிரதிகளில் கூறப்பட்டுள்ள கலிங்க மன்னர்களுக்கும் இவர்களுக்கும் உள்ள தொடர்பினை பற்றி இதுவரை எந்த ஆய்வும் மேற்கொள்ளவில்லை. இதற்குரிய காரணம் தமிழறிஞர்களின் அசிரத்தையான மனப்போக்கே காரணமாகும். கிராமபுரங்களில் முடங்கிக் கிடக்கும் இந்த ஏட்டுப் பிரதிகளைப் பெறுவதிலுள்ள சிரம்முமே என்று கூறுதல் பொருத்தமானதாகும். பிற்காலத்தில் ஆங்கிலேயரால் குடியேற்றப்பட்ட அவர்களின் அடிவருடிகள் வரலாற்றில் முற்குகர்களை பற்றி தவராக எழுதினர் என்பதும் இங்கு நோக்கதக்கது. 
மகாவம்சம் கூறும் பண்டைய் சிங்கள சரித்திர ஆசிரியர்கள் கூறுவது போல் கிழக்கு மாகாணத்தின் தெற்கு பகுதியாகிய மட்டகளப்பில் தமிழர்கள் பிற்காலத்தில் வந்து குடியேறியவர்கள் என்ற கூற்று ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதில்லை. மட்டகளப்பின் பல பகுதிகளிலும் ஆட்சி செலுத்திய முற்குகச் சிற்றரசர்களான வன்னியர்களை "அரசர்கள்"(KINGS OF BATTICALOA) என்றே சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்ரனர். இவர்கள் மற்றவர்களின் தலையீடின்றி சுயமாக ஆட்சி செலுத்தியதாலேயே,மன்னர்கள் என்று அழைக்கபட்டனர். இலங்கையில் மட்டகளப்பு நாட்டிலும் புத்தள பிரதேசத்திலும் மட்டுமே முற்குக வன்னியர்கள் நீண்ட காலமாக ஆட்சி செலுத்தினர். 

முற்குக வன்னியர்களின் மறைவிற்குப் பிறகு இங்கு செல்வாக்கு செலுத்திய இருபெரும் போடிகளான அறுமக்குட்டிப் போடி,கந்த போடி ஆகியோர் பற்றி மட்டகளப்பு மான்மியத்தின் மூலம் பலர் அறிந்திருப்பார்கள் மட்டகளப்பு நாடு முற்குக தேசம் என அழைக்கபட்டது. டச்சுக்காரரின் "லாண்டி றாட்" என்னும் சபை அழைக்கபடும் வரை இது செயலில் இருந்தது.

அன்னியரான போர்த்துகீசியர்,ஒல்லாந்தர்,ஆங்கிலேயர் போன்றோர் மட்டகளப்பின் முற்குகர் குலத்தவர்களுக்கு எதிரான பல நடவடிக்கைகளை எடுத்த போதெல்லாம்,அவர்கள் தங்கள் சுகந்திரத்தினை காப்பற்ற அவர்களுக்கு எதிராக சண்டையிட்டு வீரமறவர்களாக வாழ்ந்தனர்,யாழ்பாண,கோட்டை அரசர்கலைப் போல் வன்னிய அரசர்களும் அன்னியருக்குகெதிராகப் போராட்டம் நடத்திய சுதந்திரப் போராட்ட வீரர்களாகவே இருந்தனர். (நமது இரத்தமாண எங்கள் மறவர்களான முற்குகர்களும் ஒன்றுதான் எவனுக்கு அடிபணிந்ததில்லை) 

கடைசியில் ஆங்கிலேயருடனான சண்டையிலேயே 1803-இல் தமது சுதந்திரத்தினை முற்குகர் இழந்தனர்.இலங்கை மாகான முற்குகர் சட்டம் பற்றியும் கூறப்பட்ட விரிவான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இலங்கையின் வடமாகணப் பிரதேசமான யாழ்ப்பாணம்,வன்னி ஆகிய பிரதேசங்களில் தேசவழுவாமை சட்டம் அமுலில் இருந்தது,போன்று,மட்டகளப்பு நாட்டிலும் முற்குக சட்டமே நீண்ட காலமாக அமுலில் இருந்தது. 1867ல் பின்னால் இலங்கை சட்டவாக்கத்திலிருந்து நீக்கப்பட்டது. வெளியிலி இருந்து வந்த ஆங்கிலேயரின் அடிவருடிகலே,இதனை சட்டவாக்கத்தில் ஏற்றுக் கொள்ளப்படாமல் செய்தவர்களாவர். ஆனாலும் முற்குக சட்டத்தின் சிறப்புகளைப் பற்றி தெளிவாக குறிப்பிடபட்டுள்ளனர். மட்டகளப்பு நாட்டிலே செல்வாக்குடன் திகழ்ந்து வந்த முற்குக குலத்தினருக்கு,சைவசமத்தோடு உள்ள தொடர்புகள் மற்றும் கலை,க்லாசாரத்தோடு அவர்களுக்கிருந்த பங்களிப்பினையும் பற்றி தமிழ் மதமான சைவசமத்தினைப் பற்றி நின்ரு வாழ்ந்தவர்கள் முற்குககுலத்தினர் நில உடைமையாளர்களான அரசர்களானவர்களாக இருந்தனர்.

மட்டகளப்புக்கேயுரிய திருமண சம்பிரதாயங்கள் மற்றும் சமூக நிகழ்வுகள் தனித்துவமானவை. இவை இன்று மறைந்து விடுமோ என்று அஞ்சவேண்டிய நிலையில் நாம் உள்ளோம். வெகு நீண்ட கால்த்திற்கு முன்பிருந்தே,தமிழ்மன் முற்குக வன்னியரால் ஆளபட்டு தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்த தமிழர் தாயகமாக இருந்த இடமே மட்டகளப்பு நாடாகும். மேலும் இந்நூலில் பல ஊழியக் குடியினரை கூறும்போது மட்டுமே சாதிப்பிரிவில் உள்ளவரே கூறியுள்ளேன்.

இராமணனின் "நான்கு சகோதரருடன் ஐவரான" குகன் குலம் என்ற பெயரில் கார்த்திகை மைந்தனான முருகப்பெருமானின் திருப்பெயரில் உள்ள குலமான குகன். முற்குகர் என்று திரிபுபட்டு முக்குவர் என வழங்கியது.

"சீர்வருதுளுவச் சீதரன் மார்பினில் மருவளர் புவில் மனுவாய் உதித்து குகனென குலமும் குவலயத்தமைத்து மிக மகிழ்வோடு வேண்டிய வரமும் சங்கு,சக்கரமும்,தண்டாயுதமும் சூலமும் கெருடத் துவசமும் பெற்று ஞாலத்துயர்ந்த நறும் புனை மாலையும் சங்கினால்.....

காரர் குழலி கணவனை வனங்கி பட்டப் பரிசு பஞ்சாயுதமும் திட்டமாய் எடுத்து சிரசில் முடித்து பதினென் வரிசை பவிகடன் நடக்க அதிர் முரசறைய அரிவையர் ஆட ஆனை சேனை அணி அணி சூழத்தானை சூழ் தலைவர் தான் திறையளிக்க கொங்கு,வங்காளம்,கோசலம்,தத்தை மங்குறாச் சீனம்,மயிலை,புன்னலை,அயோத்தியா தேசம் ஐம்பத்தாறும் துய்யதோர் குடைக்கீழ் துரைத்தனம் இயற்றி இருக்கும் நாளில் இடருதல் போலை கண்ணகை அம்மன் காற்சிலம்பிற்காய் வண்ணமாய் நாகமனி எடுக்க வந்த மீகமான் வழிதனை மரித்து

............ நீடிய இராசதர் நிறைந்திடும் இலங்கையில் மட்டுமானகரில் வந்தே இறங்கி பாட்டாணிகளைப் பரிவுடன் சேர்த்து கந்த பாணத்துறைக் கந்தமூர்த்திக்கும் கொக்காட்டிசோலை குருபரனார்க்கும் பண்டகானிக்கை பரிவுடன் கட்டி........வண்டிரல் குகன் குல முறை இதுவே மேற்குறிய பாடலில் முற்குகர்கள் குகன் குலத்தில் இருந்தே வந்தவர்கள் என குறிப்பிடபடுகிறது. 2-ஆம் நூற்றாண்டிற்கு முன்னே இவர்கள் குடியேறியதாக ஹெச்.வ.தம்பையா அவர்களும் கூறுகிறார்.

மட்டகளப்பு பூர்வ சர்த்திரம் கல்வெட்டுபாடல்களும்: 

மட்டகளப்பு பூர்வீக சரித்திரத்தை முற்றிலும் ஏற்க முடியாத ஒன்று என தள்ளபடவில்லை ஏனெனில் இதில் குறிப்பிடும் மன்னர்கள் மகாவம்சத்திலும் சூளவம்சத்திலும் குறிப்பிடபடுகின்றனர். முற்குகர்கள் முதன் முதலில் கடலில் வந்து குடியேறிய இடம் "மன்முனை" ஆகும். இவர்கள் அயோத்தியிலிருந்து வந்தார்கள் என்பது இந்தியாவில் உள்ள அயோத்தியாவா என்பது ஆய்வுக்குரியது.

முற்குகர் வருகை பற்றிய கல்வெட்டு பாடலை இங்கு நோக்கலாம். 

"கலியாப்தம் 2808 வலிடமையுடன் வந்திறங்கி புலி புகுந்த பசுநிரல் போல் திமிழர் யாவும் கொன்று புகழே ஒரு ஏழு முற்குகர் நாடிவந்து நகர்தனை கண்டதும்.. பாலகனின் ஆறெழுத்தை பரிவாய் என்னி, எந்நாடும் தாய்நாடாய் ஏற்கும் நாடு இந்தியா எனும் நகருக்கேகி, அந்த பொன்னாச்சி வளவனுடன் வைகை மாறன் புகழ் சேரபூபதி வாழ் புகன்றான் யாவும்............ மாழவர் கலிங்கர்.............தமிழாரச சுபனிலங்கள் தலைத்தோங்க தாங்கள் சிவமுறைகள் மூவேந்தர் செப்பு நூல் பட்டயத்தில் பன மணுகா பெருமை பகரப்போமோ?

மேற்குரிய பாடலின் படி (கி.மு.261)-இல் முற்குகர் மட்டகளப்பு ஆட்டில் குடிபுகுந்தனர் எனவும். மட்டகளப்பு நாட்டிற்கு முதன் முதல் குடியேறிய தமிழர்கள் முற்குகர்களாக இருப்பதால் அவர்கலே திருக்கோவில் பதிக்கு ஊழியம் செய்யும் ஆட்களை கொண்டு வந்து குடியேற்றினர்.ஆலய ஊழியர்களை குடியேற்றி சைவம் தழைத்தோங்க செய்தனர்.

திருப்படைக்கோயில்களின் பரிபாலர்களாக முற்குகர்குல வன்னிமகளும் பின்பு போடிகலுமே இருந்தார்கள் என்பதே மிக தெளிவான ஒன்றாகும்.

இக்கோவில்கள் போர்த்துகேயர்களால் இடிக்கப்பட்டன என்றும் பின்பு இதே சைவகோவில்கள் டச்சுக்காரகள் காலத்தில் முற்குகர்களால் கட்டப்பட்டன என தெரிகின்றது.

Some comments on Neville Jayaweera’s autobiographical Reflections

 

article_image
N.Q. Dias

by R. M. B Senanayake

We may ask the question what it is that Neville Jayaweera wants to convey to the public and to posterity through his autobiographical reflections?

Direct or first hand experiences of events impart a special depth as opposed to the third hand reports of the same events. Those of us who were Jayaweera’s contemporaries in the CCS in the 1960s, such as I, can confirm that his narration of those experiences, in his Reflections, is generally a correct portrayal of the history of those times. One might not share all of his views, but his work is a sparkling revelation, full of spiritual substance, candour and intellectual depth.

What impressed me most in Neville Jayaweera’s (NJ hereafter) Reflections was his inherent sense of justice and fair play and, as Susil Sirivardena says in his Preface, his granite-hard commitment to conscience and humanistic values, He was influenced entirely by the Buddhist concepts of avijja (ignorance of things as they are) the yatharthaya and maya (illusions) and concludes that "within Buddha’s epistemology there is no room for ethnic divisions, for nationalisms or even for patriotism"

Clearly, as the GA of Jaffna , between 1963-1966, Jayaweera’s values were rooted in the Sutras and in the true Abhidhamma of the Buddha and in the Brahma Viharas, but were light years away from the distorted values of the Mahavamsa and the nationalisms of Anagarika Dharmapala and of N.Q. Dias.

Marauders from Kalinga

Jayaweera refers to the marauding Kalinga King, Kalinga Magha, who invaded Sri Lanka and laid it waste, desecrating temples and dagabos in the Rajarata not sparing even the Ruwanvelisaya or the irrigation systems on which the ancient Sinhala civilization of Anuradhapura and Polonnaruwa was built. He displayed callous brutality in blinding and executing the incumbent ruler Parakrama Pandya. Jayaweera says the memory of such brutality is deeply ingrained in the collective subconscious of the Sinhala people and probably accounts for the prejudice they feel to the Tamils even today.


The brutality of the Maravar invaders has bequeathed the word "maravara balaya" to the Sinhala language to denote the power of brutality, extreme cruelty and intimidation displayed first by the Maravar warriors of Kalinga Magha. NJ cites several comparable cases from diverse cultures across the globe. Without condoning it, Jayaweera says that the brutality of the modern LTTE is only a manifestation of this historical barbarism of the Maravars.
நாம் மேலே கூறியுள்ள கல்வெட்டு பாடலின்படி முற்குகர்கள் கி.மு.261 முதல் இங்கு குடியேறினர் என்பதாகும். 
இதற்க்குமுன் மட்டகளப்பு பகுதியில் வேட்டுவரும்,திமிழரும் குடியிருந்தனர். அவர்களை விரட்டி கொன்ற இடமே "சத்ருகொன்றான்" என வழங்குகிறது.

முற்குகர்கள் மட்டகளப்பில் மட்டும் குடியேறவில்லை யாழ்பானம்,புத்தளம்,கற்பிட்டி,புத்தளம்,கதரமலை போன்ற துரைமுகங்களிலும்

உலகநாச்சி வருகையும்,மண்முனைக் குடியேற்றமும்: 

முற்குகர்களின் ஏழு குடிகளும் கலிங்க மன்னன் குகசேணனின் புத்திரி உலகநாச்சியின் வம்சாவளியினர் என கூறப்படுகின்றது. 
கி.பி.399ல் குணசிங்கண் என்னும் மன்னன் மட்டகளப்பை ஆளும் போதுகலிங்க ஓரிசா தேசத்தை அரசுபுரியும் குகசேனனுடைய புத்திரி உலகநாச்சி என்பவள் கௌதமபுத்தருடைய தசனத்தை எடுத்து நெடுங்கூந்தலுள் மறைவாய் வைத்துக் கைலயங்கிரியில் குகவம்சத்தார் முன் காலத்தில் எடுத்துக் கொண்டுவைத்த சிவலிங்கத்தையும் எடுத்துக்கொண்டு தனது சகோதரன் உலகநாதனுடன் தனது தந்தை குகசேனனிடம் விடைபெற்று வர்த்தகருடைய படகிலேறி மணிபுரத்திலிறங்கி விசயதுவீபத்தில் வந்து மேகவண்ணனைக்கண்டு குலங்கோத்திரமெல்லாம் விளங்கப்படுத்திப் புத்தருடைய தசனத்தைக் கொடுத்தாள். மேகவர்ணனும், புத்தமதத்துக்கு இனி அபாயமில்லையென்று அதிக சந்தோஷங் கொண்டு உலகநாச்சியை நோக்கி உமக்கு வேண்டியதைக் கேளுமென்ன உலகநாச்சியும் அரசனே! இந்த இலங்கையில் காடுசெறிந்து குடிவாழ்வில்லாத கிராமமொன்றீயும்படி வேண்டினள். அதைக்கேட்ட மேகவர்ணன் மட்டக்களப்பை அரசுபுரியும் குணசிங்கன் தனது சிநேகிதனாதலால் ஒரு திருமுகம் வரைந்து அதில் உமது மட்டக்களப்பு, உன்னரசுகிரி இவைகளில் காடுசெறிந்து குடிவாழ்வில்லாத பதி ஒன்று இந்த உலகநாச்சிக்குக் கைலஞ்சமாய் ஈய்ந்து கொடுக்கும்படி வேண்டி உலக நாச்சிக்குக் கொடுக்கும் உபகாரங்களையும், இரத்தினமாலையையும் கொடுத்து மட்டக்களப்புக்கு அனுப்பிவைத்தான். அவர்கள் கொங்கு காசி அப்பன்புட்டி வழியாய் வந்து திருமுகத்தைக் குணசிங்கன் கையில் கொடுத்தனர். குணசிங்கனும் திருமுகத்தை வாசித்து சந்ததியுரிமை கொண்டாடி மட்டக்களப்புக்கு வடபாகமாயுள்ள அம்பிலாந்துறைக்கப்பால் மன்னேறிமுனை வளர்ந்து காடுசெறிந்து குடிவாழ்வற்ற பகுதியை நிந்தமாயீந்து ஒரு இடத்தில் குடிகளை அனுப்பி வெட்டித்தூர்த்து மாளிகை உண்டாக்கி உலகநாச்சிக்கீய உலகநாச்சியும் குடிவாழ்ந்து சில காலம் சென்றபின், தனது தம்பி சிவநாதனைத் தந்தையிலிடத்திலனுப்பிக் குகன் குடும்பம் நூற்றாறும், சிறைக் குடும்பம் முப்பதும் எடுப்பித்துக் குகக்குடு;ம்பங்களைத் தன் அருகாயிருத்தி அந்த இடத்தில் ஆலயமியற்றிச் சிவலிங்கத்தை ஸ்தாபித்து வணங்கிவந்தனர். பின்பு இன்னும் ஒரிசாநகரமிருந்து அநேக குகக்குடும்பங்களை அழைத்து காப்புமுனைக் காட்டை அழித்துச் செப்பனிட்டுக் குடியேற்றி அப்பகுதிக்கு அரசியாகி மண்முனையென நாமஞ்சூட்டி வாழுங்காலம் களப்புமுனைக்குத் தென்பாகமாயுள்ள காட்டை அழிப்பிக்கும் போது திடகனென்பவன் கொக்குநெட்டி மரத்தை வெட்ட உதிரம் பாய்ந்தது.

தொன்றுதொட்டே முற்குகர்கள் குடியேறி மட்டக்களப்பு நாட்டின் வன்னிய சிற்றரசர்களாக ஆதிக்கம் செலுத்தி வந்தமையாலும் அவர்களே இங்கு மட்டகளப்பை "முற்குகர் தேசம்" என்று அழைக்கப்பட்டது.

இலங்கையில் தமிழர் பெரும்பான்மையாக வாழும் வடக்கிழக்கு பிரதேசம் "முற்குகர் தேசம்" என அழைக்கப்பட்டது. வேறு எந்த தமிழ் சாதியினரின் பெயரிலும் அச்சாதியினரின் நாடு என்று எப்பிரதேசமும் வடக்கு-கிழக்குப் பகுதியில் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சைமன் காசிச்செட்டி மேலும் கூறுகையில் முற்குகர்கள் ஆரம்பத்தில் அயோத்தியில் அல்லது இந்துஸ்தானத்தில் அவுடே என கூறுகின்றனர்.

கி.பி.1215-55 இல் கலிங்கமாகன் என்னும் மன்னன் கேரள வீரர்கள் 30000 பேருடன் வந்தான் என சரித்திரம் கூறுகிறது அவனாலும் அங்கு வீர மறவர்களான முற்குகர்கள் பலர் குடியேற்றப்பட்டனர். Neville Jayaweera’s autobiographical Reflections

Some comments on Neville Jayaweera’s autobiographical Reflections N.Q. Dias by R. M. B Senanayake

http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=108990#

Marauders from Kalinga

Jayaweera refers to the marauding Kalinga King, Kalinga Magha, who invaded Sri Lanka and laid it waste, desecrating temples and dagabos in the Rajarata not sparing even the Ruwanvelisaya or the irrigation systems on which the ancient Sinhala civilization of Anuradhapura and Polonnaruwa was built. He displayed callous brutality in blinding and executing the incumbent ruler Parakrama Pandya. Jayaweera says the memory of such brutality is deeply ingrained in the collective subconscious of the Sinhala people and probably accounts for the prejudice they feel to the Tamils even today. The brutality of the Maravar invaders has bequeathed the word "maravara balaya" to the Sinhala language to denote the power of brutality, extreme cruelty and intimidation displayed first by the Maravar warriors of Kalinga Magha. NJ cites several comparable cases from diverse cultures across the globe. Without condoning it, Jayaweera says that the brutality of the modern LTTE is only a manifestation of this historical barbarism of the Maravars

முற்குகர்கள் தமிழ் பேசுபவர்களாக இருப்பதனாலும் மலபார் பிரதேசத்தில் முக்குவர் என்ற பெயரோடு மீன் பிடிக்கும் மக்கள் இருப்பதாலும் முற்குகர்கள் மலபாரிலிருந்து வந்தனர் என்று கூறுகின்ரனர். ஆனால் மட்டக்களப்பில் குடியேறிய முற்குகர்கள் எந்த கால கட்டத்திலும் மீண்பிடித்தலைத் தொழிலாகக் கொண்டு இருக்க வில்லை இங்கு நோக்க வேண்டும். இங்கு ஆட்சி செலுத்தும் வன்னியச் சிற்றரசர்களாகவே தமது குலமக்களுடன் ஊழியக்குடிகலுடன் குடியேறியுள்ளனர் என்பதையும் நாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டியதாக உள்ளது. 

முற்குகர்கள் இந்தியாவில் அயோத்தி,கலிங்கம் ஆகியவற்றிலிருந்து வந்தார்கள் என கல்வெட்டு பாடல்களில் குறிக்கபடுவதை புரம் தள்ள முடியாது. மட்டகளப்பில் முன்பு ஆட்சி செலுத்திய கலிங்க் அம்மன்னர்களின் பரம்பரையினரே முற்குககுல மன்னர்கள் என்று கூறப் பல சான்றுகள் உள்ளன.

மறவர்களில் நெடுநாள் முன்னேயே கடல் கடந்து சென்று பிறநாடுகளில் குடியேற்றங்களை ஏற்படுத்தி அப்படி அங்கே வாழும் ஒருவகை வீர மரபினரே முற்குகர்கள்

பிரித்தானியர் காலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்:

மட்டகளப்பு நாட்டின் வன்னியர்களாகவும் போடிகளாகவும் இருந்து செல்வாக்கு பெற்ற இருந்த முற்குகர் வம்சத்தினர் போர்த்துகேயர்,ஒல்லாந்தர் ஆகியோரால் படிப்படியாக அழித்தொழிக்கபட்டு அவர்களின் அதிகாரம் பிரித்தானியர்களால் முற்றிலும் அழிக்கப்பட்டது

இலங்கை பிரித்தானியரின் 1802ல் மட்டகளப்பின் போடிகளின் அதிகாரத்தை வேறு இடங்கலிருந்து வந்த தமது மதத்தை விட்டு மாறி அன்னிய மதமான கிகிறிஸ்தவ மதத்துக்கு சென்றவர்களிடம் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.

வெள்ளைக்காரகளின் ஆட்சி காலத்தில் "முற்குகரின் சட்டம்" அடியோடு அழித்தொழிக்கப்பட்டது. இவர்களால் குடியேற்றப்பட்ட புதுக்குடியேற்ற அடிவருடிகளால் முற்குகர் ஆதி மதமான சைவ மத்திலிருந்து மாறமாட்டோம் மதமாற்றும் வேலையை முற்குகர் மக்களிடே பரப்பினர்

வெள்ளாளர்:

முற்குகர் சாதியமைப்பில் போட்டி நியலைக்கு வெள்ளாளர் யாழ்பானத்திலும் வாழ்பவர்கள். கடந்த காலத்தில் வெள்ளாளர்கள் முற்குக தலைவர்களின் ஆட்சியின் கீழ் இருக்கவில்லையென்று கூறினாலும் உண்மைனிலை அப்படியல்லவென்பது தான் சரியானது.(அவர்கள் முற்குகத்தலைவர் ஆட்சியின் கீழ் இருந்தார்கள் என்பதே சரியானது.) 
வெள்ளாளர் அரசியல் நிலைக்கு முன்பு முற்குகரின் கீழ் இருந்தவர்கள்.

முற்குக வன்னியரும் சிற்றரசர்களும்:

டச்சு பாதிரியார் குறிப்பில் எறாவூர்,பழுகாமம்,சம்மாதுரை இங்கு முற்குக வன்னிய (பிரதேச) சிற்றரசர்களும் மன்முனையில் வன்னிய அரசி ஆட்சி செய்தனர் என கூறுகிறார்


மட்டகளப்பு மான்மியம்:

வன்னிபங்கன் குலவரிசை முட்டிகூற மகிழ்ச்சிகொண்டு எழுந்திடுன் மரபும் நாடுமெந்த மன்னருன்னை வன்னிபமாய் வகுத்ததென்றும் மானிலத்திலுங்கள் முன்னோர் வாழ்ந்தவூரும் துன்னுபுகழ் கோத்திரமும் தொன்று தொட்டுத் துணையரசன் பேரூருஞ் சொன்னாலிந்த பன்னுபுகழ் சபையோர்கள் மகிழக்கூறிப் பங்குபெறு மறியாயானாற் பாவமாமே.

அறமியாதா னிச்சபைக்கு அகலநிற்பான் னெங்கள் பரன்றோழும்பேர் பழிப்புரைப்பாரறைவே நெறிதவறார் சுயநாடு காளிகட்டம் நீர்குலமே படையாட்சி யுழுதூ ணுண்டோர் வெறிகமழு மகாலிங்க வாசனெங்கள் திறத்தோரைப் படைத்துணைக்குத் தலைவனாக்கி குறியறிந்து வன்னிபங்கள் குலமே என்றும் குகப்பட்டத்தரசு கொண்டோனானே. 

தாந்தோன்றீர்ஸ்வரர் கோவில் தேரோட்டம் திருவேட்டை ஆடுவதும் அதன்பின் மட்டகளப்பு நாட்டிலுள்ள பல்வேறு தமிழ் சாதிப் பிரிவுகள் மரியாதைகள் பெற்றுகொள்கின்றன. அப்போது மரியாதை கூற எழுந்தபோது.

சூத்திரசாதிகள் அனைவரும் எழுந்து கலிங்கராசனை வணங்கி அவன் கையால் வாங்கமாடோம் என்று வெள்ளாளர் முதலான பதினெட்டு சிறைகளும்(சூத்திரர்)கூறி வெள்ளாளரே பதினெட்டு சிறைகளின் அதிபதியாய் முதல் மரியாதையாக மன்னன் கையில் வாங்க மாட்டோம் முட்டியிலே வாங்குவோம். என சூத்திரர் அரசரிடம் கைகளில் வாங்கமாட்டார்கள் என வெள்ளாளர் முதலான பதினெட்டு சிறைகலும் கூறி அனுமதிக்குமாறு கூறினர்.ஆனால் முட்டியின்மேலே பட்டுப் போட்டு எக்காலமும் வரிசைமுட்டி கூறவேண்டுமென்றும் சூத்திரசாதி முதற்குலம்- வெள்ளாளனுக்கும் உங்கள் பதினெட்டுச் சிறைகளுக்கும் பட்டுப்போடப்படாதென்றும் கட்டளையிட்டு வரிசை முட்டி கூறும்படி பண்ணி வணிகனை அவிழ்த்துவிட்டுப்பின்பு வெள்ளாளர்களை அவிழ்த்து மஞ்சள் தண்ணீர் தெளித்து வரிசை கூறும்படி செய்தனர்.

(பதினெட்டு சிறை சாதிகள் பதினென் சாதிகள் என சிறைகள் எனவும் சூத்திரர் எனவும் கூறுவர்).

அப்படி செய்தால் எக்காலமும் சிவமதத்திலேயேயிருந்து குகன் குலத்து வன்னிபங்கன் சொற்படி அரசனிட்ட கட்டளை தவறாமல் தேவாலய ஊழியஞ் செய்வோமென்று பதி கூற அரசன் கேட்டு சூத்திர மரியாதை பெற்றனர்.

இப்படி பதினெட்டு சிறையினர்கள் குகன் குலத்துக்கு ஊழியம் செய்வதை பெரும் பேறாக கருதினர்.

டச்சுகாரகள் காலத்தில் முற்குக வன்னியர்கள்:

டச்சுக்காரகள் காலத்தில் முற்குக வன்னியர்கள் கொடூரமாக கொல்லப்பட்டு முத்திரக்கூடம் எனும் 18 அங்க வன்னியர்களும் சிங்களர் கூட்டில் டச்சுப்படைகள் அழித்தனர். இதை பரக்கிரமபாகு "முக்கரஹட்டன்" என விளக்குகிறது. இதுவே 18 வன்னியர் அழித்தல் என வரலாற்றில் குறிப்பிடபடுகின்றது. இதன் பின்பே வன்னியர் என்னும் சிற்றரசர்கள் பதிவியிலிருந்து விலக்கப்பட்டு போடிகள் எனும் ஏழு பிரிவினர் டச்சுக்காரகளால் நியமிக்கப்பட்டது.

ஆங்கிலேயர் கால்த்தில் முற்குகர்கள் நிலை:

டச்சுகாரர்களால் அழிக்கப்பட்டும் முற்குகர் சட்டம் மட்டும் மட்டகளப்பு பகுதியில் எஞ்சியிருந்த நிலையில் ஆங்கிலேயர் 1803ல் பெற்ற வெற்றியினால் முற்றும் பரிபோனது. இன்னும் மதமாற்ற பிரசிங்கிகள் நிறைய இறக்குமதி செய்யப்பட்டு தமிழ்நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறைமக்கள் பலரால் இவர்கள் நிலமும் அபகரிக்கபட்டது. அக்காலக்கட்டத்தில் தங்கள் நிலத்தையே ஏலம் எடுத்து விவசாயம் செய்தனர் முற்குகர்கள்.

முற்குகர்களை தாழ்வானவர்கள் என்னும் செய்தி பரப்ப முற்குகர்களை பற்றி தவறான கருத்துக்களை அவர்களின் தமிழ் ஊழியக்காரகளின் மூலம் பரப்புரை செய்தனர்.
சேதுபதிகள் மகள் நீலகேசியை மணந்த வெடியரசன் விஷ்னுபுத்திரன்:
சேதுபதிகளுக்கும் நெடுந்தீவு நயினாத்தீவு முற்குக தேசத்தலைவர் விஷ்னுபுத்திர வெடியரசருக்கும் இடையே மண உறவுகள் இருந்துள்ளது. சேதுபதி மகளை மணந்த வெடியரசன் கதை பற்றிய கோட்டை கொத்தலங்கள் நெடுந்தீவில் காணலாம்.


சேதுபதி மகராஜவின் வழியில் வந்த குளக்கோட்டன்:
குளக்கோட்டன் என்னும் மகாராஜன் சேதுபதி ராசர் பரம்பரையில் வந்தவன் என வெடியரசன் கதை கூறுகிறது.



முற்குகக் குடிகள்:

தொன்று தொட்டே முற்குகர் தம்மிடையே ஏழு குடிகளாக வகுத்து செயல்பட்டனர். கல்வெட்டு பாடலில் வரும் "ஓரேழு முற்குகர்" என்னும் வரியிலிருந்து அறியலாம்"

"சீர்தங்கும் வில்லவராம் பனிக்கனாரும் சிறந்த படையாண்டானே உலகிப்போடி கார்தங்கு மழவராசன் தஞ்சயன் கலிங்கன் என் ஏழுகுடி" 



1)வில்லவர்2)பணிக்கனார்3)உலகிப்போடி4)மழவராசன் 5)கலிங்கர் 6)தனஞ்சயன் 7) கச்சிலான்

என பிரித்து இருந்தனர். இவர்கள் அனைவரும் அந்த அந்த மன்னர்கள் வழியை கொண்டவர்கள்.


ஆலயம் தோறும் வன்னாக்கர்களாக கொண்ட முற்குகர்கள் பற்றி மட்டக்களப்பு பூர்வ சரித்திரத்தில்

"மதிவேவு உலகுபுகழ் தசராதன் வரும் ராச மரபில்
உயர் குகசேனன் வம்சமுடி சிரசில் அனியும்
மலர்வேவும் கழி சூழ் ராமனாடரசாண்ட மறவர் குல
மாதரெழுவர்
வடநாடு விட்டு இலங்காபுரியில் வருவேளை-மனமகன் சிறைகளும் உறவினர்கள்
ஆறுகுடிகள்-மணிமேவு இராமேஸ்வரத்துதிகள் செய்தபின்
மாலோட மீதேறியே வள்ராழி தாண்டி வெகு அநுரதன் அடலோடு வளர்
நகரமேவி வரவே வசைபட்ட மாது.... மறவர் குலமாதொரொடு
வன்னியரில் ஐந்துகுடி வந்தமுறைவந்தம்மா பதிமேவுமுங்கள் மரபே.....
ஓதமொழி பரராசர் மரபிலுயரும்,படர் நாகக்கொடி உயர்
அத்தினாபுரம் பாண்டு மகராசர் மரபாம் 

பண்டு கமத்தொழில் என்றுஞ்ச செய்துண்டு வந்தகுலம்........... அவரவர் கனவருடனே கலைதங்கு ஏழு பெண்கள் நாமமாவது
கலைவஞ்சி,வீரம்மை,மங்கியம்மை,களபமுலை
செட்டிச்சி,மகிழம்மை,நாச்சியம்மை,வீரம்மை,பாலம்மை
....
...வாழவைத்தும் நரபால ஸ்ரீ சங்க போதி குகன் என அவரவர்கள் போடிகளெனவும் சுபபோசந்த்துயர் ராம நாட்டிலுயர் நங்கை ஏழு பெண்கள் வரவால் நதி மட்ட நகரம் ஆண்ட முக்குவரிலே ஏழுகுடி நவில்வதுவே.

மேலே கூறப்பட்ட பாடலில் மறவர் குலத்தை சேர்ந்த மாதர்கள் மட்டகளப்பு நாட்டிற்கு வந்து ஏழு இடங்களில் குடியேறினர். இவர்களே முற்குகர்களின் மூதாதயர்கள். 

முற்குகர்குடிகள் தாய்வழி மூலமே ஏற்பட்டு இன்றும் அவ்வாரே நடைமுறியில் ஒரு தாயின் வயிற்றிலிருந்து பிரித்து பெருகியவர்களின் சந்ததிகளே இன்றும் ஒவ்வோரு குடியினராக இருக்கின்றனர். இவ்வாறு ஒரே குடியாய் இருப்பவர்கள் தங்களைச் சகோதரர்களாக எண்ணி அவ்வாரே நடைமுறியிலும் செயற்பட்டு வருகின்றனர். இதனால் ஒரே குடியினருக்குள் திருமன உறவுகள் நடப்பதில்லை. 

முற்குகர் சட்டம்:

இலங்கையில் வாழ்ந்த சட்டங்கலில் இதுவே பிரதானமானது. டச்சுக்காரகள் இதை ஆராய்ந்து ரோம்,கிரேக்கம்,ஹாலந்து,கெல்டுகள் பழக்கங்களில் இதே போன்ற தாய்வழி உரிமை சட்டம் பின்பற்றப்பட்ட உன்மையை டச்சுக்காரர்கள் குறித்துள்ளனர்.

சேர நாட்டின் சட்டங்கள் இதைப்போன்றவே. முற்குகர் சட்டங்களே வேளாளர்களும் பின் பற்றினர்.

இதை பற்றி இன்நூலில் விரிவாக குறிப்பிடபடுகின்றது. இது மிக விரிவான ஒன்று நூலில் அதிகம் இது வருகின்றது.

முற்குகர்கள் தமிழக இராமநாதபுரம் மறவர்களே என்னும் ஆதாரம் இந்த நூலின் 78 ஆம் பக்கத்திலே ஆசிரியர் தெளிவாக எடுத்து சொல்லியுள்ளார். அதில்.


02 மாதாக்கள்:
மாதாக்கள் என்பது ஒரு முற்குகரின் மாதாவினும் அவரின் முன் கிளைவழியினரையும் மட்டுமன்றி அவரின் தந்தையின் கிளைவழியினரையும் குறிக்கும். 

04.மூதாக்கள்:
மூதாக்கள் என்பது ஒருவரின் முன்னோர்கள் தாய்,தந்தையின் முன்னோர்களையும் அம்முன்னோர்களின் முற்கிளைவழியினரையுங் குறிக்கும்.

ஒருதாயின் வழியில் வருபவர்களே ஒரே குடியினர்களாவர் ஒரு குடியைசேர்ந்தவர்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தார்கலும் சகோதரர்களாகவே கருதப்படுவர்.
-சிவ.சண்முகம்

மேலே சொன்ன கிளை முறைகள் மற்றும் தாய் கிளையினர் என சொல்லும் வார்த்தை தமிழ் நாட்டில் யாரை குறிக்கும் என நன்றாக விசாரித்தால் தெரியும்.

கிளை முறைகளும்--மறவர் குல பழவழக்கமும்

thevar-mukkulator.blogspot.com/2013/01/blog-post_9208.html
இவர்கள் மறவர்களே.


மேலும் இந்த முற்குகர் சட்டம் பல பக்கங்கள் கொண்ட மிக நேர்த்தியான கட்டமைப்பு என தெரிகின்றது. முற்குகர்களின் சமயம் "சிவமதம்" சைவ சமயத்தவர் தாந்தோன்றீஸ்வரர்,கந்தசாமிகோவில்,கன்னகை அம்மன் போன்று சைவ சமயத்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் திருமணமுறை அப்படியே மறவர்களின் அழிமுறைதான். காணாத்தாலி கட்டுத்தாலி போன்று அப்படியே சம்பிரதாயங்கள் உள்ளன. இவைகளும் பல பக்கங்களுக்கு நீள்கின்றனர்.

முற்குகர்கள் விவசாய முறை:

இவர்கள் தங்கள் ஊழியக்குடிகளை வைத்து விவசாயம் தழைக்கவும் இவர்கள் ஆதரவு அபரிமானது. இதை இப்புத்தகத்தை படிக்கும் போது தெரிகின்றது. இவையும் பல பக்கங்களுக்கு நீள்கின்றது.

போடிகள் கல்வெட்டு,மகாவம்ச,ஆங்கில,போர்த்துகேய,டச்சு மற்றும் கல்வெட்டுகள் மூலம் அருமையானதொரு வரலாறை வழங்கியுள்ளார் ஆசிரியர்.














முற்குகர்களே மறவர்கள் நமது இலங்கையின் நமது உறவுகளின் எச்சம் எத்தனை எத்தனை அன்னியர்களால் அழிக்கப்பட்டு இவர்கள் வீழ்ந்த போதும் வீர மறவர்களாகவே வாழ்ந்தனர். இன்று இலங்கையில் நடந்த படுகொலையில் எத்தனை பேர் அழிக்கப்பட்டனரோ தெரியவில்லை.

இதில் குறிப்பிடப்படும் போடிகள் என்னும் அமைப்பு அப்படியே ஒரு உள்ளாட்சி அரசாங்கம் அதைப்போல் தலைமையை இழந்து நம் மறவர்களும்,கள்ளர்களும்,அகமுடையோர்களுமான முக்குலத்தோர்கள் இழந்து இன்று மோசமான நிலைக்கு சென்றுள்ளோம். இந்த அமைப்பை அப்படியே இழந்துள்ளோம்.

இந்த நூலை எழுதியவர் மட்டகளப்பு போடிகள் தலைமை குடும்பத்தை சேர்ந்த ஒருவரே என்பது இங்கு கண்கூடு. அவர்களை எங்கள் உறவிணராகவும் முன்னோடியாகவும் கருதி அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். இந்த நூல் முற்குகர்களுக்கு மட்டுமல்ல முக்குலத்தோரான நமக்கும் ஒர் பழங்கால வழிமுறைகளின் பெட்டகமாக இருக்கும் என்பதை நான் தெரிவித்து கொள்கிறேன்.

நன்றி:
www.noolagam.org
மட்டக்களப்பு முற்குகர்கள் வரலாறும் மரபுகளும்-சிவ சண்முகம்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.