இந்தப்
பதினாறு கல்வெட்டுகளையும் காலவரிசைப்படி பொருளறிந்து நன்கு நிறுவப்பட்ட
சோழமன்னர்களின் ஆட்சியாண்டுகளுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தோமானால், கி.பி 881
முதல் கி.பி 1020 வரை பழுவூரை ஆண்ட மன்னர்களைக் கீழ்க்கண்டவாறு வரிசைப்
படுத்தலாம்.
சேர மறவர்
---------------
பழுவூரை ஆண்ட மறவர் வம்சத்தவர் யார்?
சேர மறவர் வம்சம்(பழுவேட்டரையர்)
மலையமான் என்னும் மன்னிய சேர குலத்தோன்றல்
கன்னியாகுமரி கேரளா வட்ட மறவர் கல்வெட்டு
சேர நாட்டின் மலப்புரம் பகுதியை ஆண்ட மறவர் கிரந்த கல்வெட்டு
புறப்பொருள் வென்பாமாலை பாடிய சேர மன்னன்
க்ஷத்திரிய மறவன் சேரன் பழுவேட்டரையன்
https://thevar-mukkulator.blogspot.com/2026/01/blog-post.html
பழுவேட்டரையர்கள் எந்த சாதி?
--------------------------------------------------------
பழுவேட்டரையர்கள் சேர மன்னர்களின் பரம்பரையாகும் அதுபோல் பல சோழ மன்னர்களின் தாயர்கள் பழுவேட்டரையர் வம்சத்தில் வந்த அரசியர்களாகும். பழுவேட்டரையர்கள் முத்தரையர்,இருக்குவேளிர்,சோழருடன்
மன உறவு கொண்டிருந்தனர். பழுவேட்டரையர் மறவர் குலத்தில் தோன்றியதால் மறவனீஸ்வரம்,மறவனேரி,க்ஷத்திரிய
மறவன் என பெயர் கொண்டிருப்பதை கண்ட பல கோமாளி சாதிகள் தாங்கள் தான் பழுவேட்டரையர் எனஊளையிட்டு எழுதிகொள்கின்றனர். பள்ளி,கொங்கவேட்டுவர் மற்றும் பல சாதிகள் சொல்லி கொள்கின்றனர்.
மறவன் என்பது பன்பு பெயர் தான் என சொல்கின்றனர். நாம் பழுவேட்டரையர்,வன்னாடுடையார்,இருக்குவேளிர்,
மலையமான்,வாணர் அல்லாத பல நூறு சோழ,பாண்டிய,பல்லவ கல்வெட்டுகளை மறவர் என்ற சாதி பெயர் கொண்டிருப்பதை காட்டி விட்டோம் இருப்பினும். பழுவேட்டரையர் மறவர் சாதி தான் என நிருபிப்போம்.
பழுவேட்டரையர் பெயர் விளக்கம்:
பழுவூர் என்ற பெயரில் கீழ பழுவூர் மேல பழுவூர் என்ற பழுவூரை ஆண்ட அரையர்களே பழுவேட்டரையர்கள்.
மற்றபடு வேட்ட எனற பெயரை வைத்து வேட்டவன் கோமாளிதனமாக கூவினால் அது பழுவேட்டரையர்களுக்கு
பொருந்தாது பழுவேட்டரையர் போர் கொண்ட மாவீரர்கள் எலி அடிக்கும் கன்னட வேடா(பேடா) இல்லை.
பழுவேட்டரையர் காலம் எது:
மேலும் சில கோமாளிகள் போட்டோ ஷாப்உதவியில் இன்று பழுவேட்டரையர் வம்சம் இருப்பது போல் சில போலிகளை உருவாக்கியுள்ளனர். உண்மையில் பழுவேட்டரையர் காலம் எது.பழுவேட்டரையர்கள் சோழ மன்னன் விஜயால சோழன் காலத்தில் தொடங்கி இராஜேந்திர சோழன் காலத்தில் முடிந்து விட்டது. பிற்காலத்தில் பழுவேட்டரையன் என்ற பெயரில் எந்த ஒரு அரையரும் குலோதுங்க சோழன்
காலத்திலோ அல்லது பாண்டியர் காலத்திலோ அல்லது நாயக்கர் கால எந்த ஒரு கல்வெட்டுடிலும் பழுவேட்டரையன் என்ற பெயரே இல்லாதபோது பழுவேட்டரையர் பரம்பரை என சில மூடர்கள் கூவுவது கோமாளித்தனமே.
பழுவேட்டரையர்கள் சோழர் காலத்தில் தோன்றி ராஜேந்திர சோழர் காலத்திலே மறைந்து போன மறவர் அரசே பழுவேட்டரையர்கள்.
பழுவேட்டரையர்கள் மறவர்கள் என ஆதாரமுள்ள கல்வெட்டு இதோ:
-------------------------------------------------------------------------------------------------------------------------
அவனிகந்தப்ப ஈஸ்வரம் கோவில் கல்வெட்டில்:
கல்வெட்டு:
ஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பரகேசரி பன்மருக்கு யாண்டு......எட்டாவது அடிகள் பழுவேட்டரையர் கண்டன் மறவனார்
படை இளைய இரணமுக கைக்கோளன் பலதேவனும் வைய்ரியை கூற்றத்து மல்லூர் இருக்கும்
வெள்ளாளன் கிழவன் நம்பனும்......அடிகள் பழுவேட்டரையர் கண்டன் மறவனார் சிறு பழுவூர்
திருவாளந்துரை தேவர்க்கு........
செய்தி:
பழுவேட்டரையர் கண்டன் மறவன் தன் கைக்கோள பரிவாரத்தில் இருக்கும் கைக்கோளன் பலதேவனுக்கும் வெள்ளாளன் கிழவன் நம்பனுக்கும் சேர்த்து இறையிலி வழங்கி செய்தி.
ஒரே கல்வெட்டில் மறவர்,கைக்கோளர்,வெள்ளாளர் என்ற மூன்று ஜாதி பெயரில் வந்த கல்வெட்டில் பழுவேட்டரையர்மறவர் என உணர்த்தியுள்ளது. இப்போது தெரிகிறதா பழுவேட்டரையர் மறவர் என்று.
க்ஷத்திரிய மறவன் பழுவேட்டரையர் கல்வெட்டு:
...ஸரிபம்மற்கு யாண்டு இருபத்திரண்டாவது அவநிகந்தர்ப்ப ஈஸ்வர கிருகத்து மஹாதேவர்க்கு..
மஹரிஷி வம்சத்து க்ஷத்திரியன் பொதுகள பெருமாள் பழுவேட்டரையன் குமரன் மறவன் பிரஷாத......
செய்தி:
சேரரின் நேரடி குடியிலும் சோழரின் கிளைக்குடியாய் கொண்ட பழுவேட்டரையர்கள் மஹரிஷி வம்ஸத்தில் தோன்றிய க்ஷத்திரியர்களான மறவர் இனத்தவராகம்.மறவர்களும் அகத்திய,காசிப போன்ற குரு மகரிஷி வழி வந்த க்ஷத்திரியர்கள் ஆவர்.
1. குமரன் கண்டன்
2. குமரன் மறவன்
3. கண்டன் அமுதன்
4. மறவன் கண்டன்
5. கண்டன் சத்ருபயங்கரன்
6. கண்டன் சுந்தரசோழன்
7. கண்டன் மறவன்
இதுதான் கல்வெட்டுகளிலிருந்து வரலாற்றுச் செய்திகளை வடித்தெடுக்கும் முறை. கல்வெட்டுகளில் இருப்பவை பெரும்பாலும் நிவந்தங்கள் கொடையளித்த செய்திகள்தான். ஆனால் அவற்றினுள் ஒளிந்திருக்கும் செய்திகளை Reading through the lines என்று ஆராய்ச்சிக் கண்கொண்டு நோக்கினால், வரலாறு வெளிப்படும். ஒரு மின்விளக்கைக் கொடையளித்துவிட்டு, அதிலிருந்து வரும் வெளிச்சத்தை மறைக்குமளவுக்குத் தன் பெயரை எழுதிவைத்து விடும் இக்காலத்து வழக்கத்துடன் கல்வெட்டுகளை ஒப்பிட்டுப் புறந்தள்ளாமல், அவை எப்பேற்பட்ட அட்சயப் பாத்திரங்கள் என்று உணரத் தலைப்படுவோமே!
கண்டன் சத்ருபயங்கரன், கண்டன் சுந்தரசோழன், கண்டன் மறவன் ஆகிய மூவரும் உடன் பிறந்தவர்கள் என்ற செய்தி உடையார்குடி அனந்தீசுவரர் கோயில் கல்வெட்டின் மூலம் தெளிவாகின்றது. எனவே, இவர்கள் மூவரின் பெயர்களிலும் உள்ள கண்டன் என்பது மறவன் கண்டனின் பெயர் என்று புரிந்து கொள்ளலாம். இதே அடிப்படையில் பார்த்தால், இந்த 7 பேர்களுக்குள் உள்ள உறவு முறையைக் கீழ்க்கண்டவாறு பகுக்கலாம்.
"முதலாம் இராஜேந்திரரின் எட்டாம் ஆட்சியாண்டில் பழுவூரை ஆண்டுகொண்டிருந்த பழுவேட்டரையர் யாரென்பது உறுதியாகத் தெரியவில்லை. வேறு சான்றுகள் ஏதுமற்ற நிலையில் இவரைக் கண்டன் மறவனாகவே கொள்ளலாம். உத்தமச்சோழரின் பதினைந்தாம் ஆட்சியாண்டில் பழுவூர் மன்னராக ஆட்சிப் பொறுப்பினை ஏற்று, முதலாம் இராஜராஜர் காலத்தில் மன்னுபெரும் பழுவூரில் திருத்தோற்றமுடையார் கோயிலைச் செங்கல் திருப்பணியாய் எடுப்பித்து, முதலாம் இராஜேந்திரரின் எட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுடன் வரலாற்று நீரோட்டத்திலிருந்து மறையும் கண்டன் மறவனுடன் பழுவேட்டரையர் மரபும் ஒரு முடிவுக்கு வருகிறது. முதலாம் ஆதித்தரின் பத்தாம் ஆட்சியாண்டில் பழுவூர் அரசராகப் பழுவேட்டரையர் குமரன் கண்டனோடு தொடங்கும் பழுவேட்டரையர் ஆட்சி முதலாம் இராஜேந்திரரின் எட்டாம் ஆட்சியாண்டில் பழுவேட்டரையர் கண்டன் மறவனை இறுதி மன்னராய்க் காட்டி முற்றுப் பெறுவதாகக் கருதலாம்." என்று பழுவூர் - அரசர்கள், கோயில்கள், சமுதாயம் என்ற தனது நூலில் முனைவர் இரா.கலைக்கோவன் உரைக்கிறார்.
மறவன் கண்டன் சுந்தரசோழரின் ஆட்சிக்காலத்தில் பழுவூரை ஆண்டவர். இவரது மூன்று பிள்ளைகளில் கண்டன் மறவன் சுந்தரசோழருக்குப் பிறகு சுமார் 40 ஆண்டுகள் பழுவூரை ஆண்டார். எனவே, அப்போது கண்டன் மறவன் சிறுபிள்ளையாயிருக்க, மூத்த சகோதரர்கள் கண்டன் சத்ருபயங்கரனும் கண்டன் சுந்தரசோழனுமே சுந்தரசோழர் காலத்தில் வாழ்ந்தவர்கள். இப்போது புரிகிறதா? கல்கி 'பெரிய பழுவேட்டரையரையும்', 'சின்னப் பழுவேட்டரையரையும்' எங்கிருந்து எடுத்தார் என்று?
இத்தனை சிறப்புகள் வாய்ந்த பழுவூரைக் காண வாசகர்கள் விரும்பினால், திருச்சிராப்பள்ளியிலிருந்து ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் 55வது கிலோமீட்டரில் தஞ்சாவூர்/திருவையாறு செல்லும் சாலை பிரியுமிடத்தில் அமைந்துள்ள பகைவிடையீசுவரம்,
அவனிகந்தர்ப்ப ஈசுவரம், திருவாலந்துறையார்
கோயில் மற்றும் மறவனீசுவரம் ஆகிய கோயில்களுக்குச் சென்று வீரவரலாற்றைத்
தரிசிக்கலாம். பழுவூர்க் கோயில்களின் சிற்பக்கலை, கட்டடக்கலை மற்றும்
கல்வெட்டுகளை முழுமையாகப் புரிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்கு ஒரு
பரிந்துரை. செல்லும்போது முடிந்தால் முனைவர் கலைக்கோவன் எழுதிய பழுவூர் -
அரசர்கள், கோயில்கள், சமுதாயம் என்ற நூலை எடுத்துச் செல்லவும். கோயில்களின்
மீதான உங்களின் பார்வை முற்றிலுமாக மாறி, சரித்திர ஆர்வ வியாதி
முற்றுவதைக் கண்கூடாகக் காணலாம்.















No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.