பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினைச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரர்களின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.
இதே சேர நாட்டில் ஆண்டு தோரும் ஆவணி மாதத்தில் ஒனம் என்னும் திருநாள் கொண்டாட்டம் மிக பிரசித்தம். அந்த நாளில் தங்கள் அரசனான மகாபலி தன் சொந்த மக்களைகாண வருவதாக நம்பிக்கை. நாம் அறிந்த வரையில் சேர நாட்டில் சேரர்கள் தானே மன்னனாக இருப்பதாக சங்க இலக்கியம் முதல் பிற்கால இலக்கியம் வரை கூறுகிறது பின்னே மாவலி எப்படி சேர நாட்டுக்கு அரசன் அவன் அசுரனாயிற்றே என தோனலாம்.
சேர அரசர்களும் மக்களும் கொண்டாடும் மாவலியே ஒரு அசுரன் எனில் சேரன் மட்டும்வேறு இனமாக இருக்கு கூடும் மகாபலி மூதாதயரும் அவரின் சந்ததியினர்களின்வடமொழி பெயரை மொழிய் பெயர்தாள் அப்படியே சேர மன்னர்கள் பெயர்கள் வருவதுகன்கூடு.
ஆய்வுக்கு செல்வோம்...
மாவலி வம்சத்தோர் விந்தய மலையிலிருந்து தெற்கே மேற்கு தொடர்க்சி மலை வரை
ஆண்டுள்ளனர்.
இதை பற்றி வளவு திரு இராம்.கி அவர்களின் கூற்றுகள். ..............
வாணர் என்றாலே மாவலி வம்சத்தோர் என்றே பொருள்.மாவலியின் குரு சுக்கிரச்சாரியர் என்னும் பார்க்கவரே ஆவார்.மாவலி சேர அரசர்.அசுரனாக அவரைக் கூறுதல் கட்டுக்கதையே.தென்புல அரசர்களையே புராணங்கள் அசுரன் எனக்கூறுகிறது எனவே மாவலி வழி வந்த சேர வம்சமே மலைநாட்டு அரசர்கள்.
"நீள்நிலம் கடந்த நெடுமுடி அண்ணல்"
என்று குறிப்பிட்டுக் காடுகாண் காதை
11:148 ல் சொல்லப்படும்.
இந்த அவதாரக் கதையில் வரும் மாவ(ல்)லி மன்னன் ஒரு சேர அரசனாய் இருந்திருக்க வாய்ப்பு உண்டு.
(இன்றைக்கும் மாவலி ஒவ்வொரு ஓணத்தன்றும் கேரளத்தில் நினைவு கூரப்படுகிறான்.)
அவன் அரக்கன் என்பது நிறம் கருதியே அன்றி வேறாய் இருக்க வாய்ப்பு இல்லை.
அரக்கு நிறம் என்பதும் தமிழர் நிறம் தான்.
மாந்தளிர் நிறம் அரக்குத் தானே?
சேரமான் மாவண் கோ,
விளங்கில் மாவண் கடலன்,
மாவண் புல்லி,
மாவண் கிள்ளி எனப் பல்வேறு அரசர்களும்,
வேந்தர்களும் சங்க காலத்தில் சொல்லப் படுகிறார்கள்.
இந்த மா என்னும் முன்னொட்டு அவன் தமிழ் அரசன் என்று உணர்த்திவிடுகிறது.
மாவல்லியின் தாத்தன் பெருகலாதன் என்பதும் கூடப் பெருஞ்சேரலாதன்>பெருங்கேரலாதன்>பெருங்கலாதன்>பெருகலாதன் என்ற திரிவில் அமையக் கூடிய பெயரே.
அப்படி அய்யுறுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
ஒன்று ஆதன் என்னும் பெயரீறு சேர அரசர் பலருக்கும் இருந்திருக்கிறது.
இரண்டு,
மாவலியின் வழியில் வந்தவன்,
சோழன் மாவண் கிள்ளிக்குப் பெண் கொடுத்ததாக மணிமேகலைக் காவியத்தில் சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதையில்
(16:53-55)
நீரிற் பெய்த மூரி வார்சிலை
மாவலி மருமான் சீர்கெழு திருமகள்
சீர்த்தி என்னும் திருத்தேவி
------
என்று பதிவு செய்யப் படும்.
இதே மாவண் கிள்ளியைச் செங்குட்டுவனின் மைத்துனன் என்று சிலம்பில் இளங்கோவடிகளும் பதிவு செய்வார்.
செங்குட்டுவனின் தாய் ஞாயிற்றுச் சோழன் என்று சிலம்பில் காணப்படும்.
ஆனால்,
பதிற்றுப் பத்தில் ஐந்தாம் பத்திற்கான பதிகத்தில்
"குடவர்கோன் நெடுஞ்சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளி மகள் ஈன்ற மகன்"
என்று மணக்கிள்ளியாக
"ஞாயிற்றுச் சோழன்"
என்னும் செங்குட்டுவனின் தாய்வழித் தாத்தனை உணர்த்தும்.
இத்தகைய உறவு முறையால் மாவல்லி என்பவன் சேரனாய் இருக்கவே பெரிதும் வாய்ப்பு உண்டு.
இப்படி
"சேர"
என்ற சொல்லை
"அசுர"
என வைத்து கொண்டு பார்ப்போம்.
அப்படியே சேரனை
"அசுரன்"
என புராணங்கள் கூறியுள்ளது.
இருவரும்
மலைநாடுகளையே ஆண்டுள்ளனர்.
அசுர மன்னர்கள் பட்டியல்
---------------------------------------------------
காசிபர்
|
|-------------------------|
இரண்யகசிபு இரன்யாக்ஷன்
|
பிரஹலாதன்
|
விரோசனன்
|
மகாபலி
|
வாணன்
சேர மன்னர்கள் பட்டியல்:
---------------------------------------------------
முற்காலச் சேரர்கள்
:
சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் ---கி.மு
1200 - (?)
கடைச்சங்க காலச் சேரர்கள்
: உதியஞ்சேரலாதன் கி.பி.
45-70
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கி.பி.
71-129
பல்யானைச் செல்கெழுகுட்டுவன்கி.பி.
80-105
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் கி.பி.
106-130
செங்குட்டுவன்கி.பி.
129-184
பொன் மாந்தஞ்சேரல் இரும்பொறை(காலம் தெரியவில்லை)
செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறைகி.பி.
123-148
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்கி.பி.
130-167
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறைகி.பி.
148-165
இளஞ்சேரல் இரும்பொறைகி.பி.
165-180
குட்டுவன் கோதைகி.பி.
184-194
மாரிவெண்கோகாலம் தெரியவில்லை
சேரமான் வஞ்சன்காலம் தெரியவில்லை
மருதம் பாடிய இளங்கடுங்கோகாலம் தெரியவில்லை
சேரமான் கணைக்கால் இரும்பொறைகாலம் தெரியவில்லை
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதைகாலம் தெரியவில்லை
(அ)சுர பிரகலாதன் என்ற பெருஞ்சேரலாதன்
----------------------------------------------------------------------------
ஆதன் என்னும் பெயர் சேர மன்னனை குறிக்கிறது என சங்க இலக்கியங்கள் கூறுகிறது.
இதற்கு ஆதாரமாக ஐங்குறுநூறு ஒரம்போகியார் பாடல்
"வாழி ஆதன்,வாழி அவினி
விளைக வயல்"
"வாழி ஆதன்,வாழி அவினி
பால்பல ஊறுக'
பொருள்:
எங்கள் தாயாகிய சேர மன்னன் ஆதன் குடியில் தோன்றிய அவினி
வாழ்க அவனது ஆட்சியைல் வயல் விளைந்து பால் உற்பத்தி பெருகி........
அசுரர்களி பிரகலாதன் என்பவன் மாவலியில் தாத்தா.
'பிரக'
என்பதற்கு பெரிய என
பொருள்.தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு வடமொழியில் பிரகதீஸ்வரர் என பொருள்.
பிரகலாதன் என்பதற்கு பெரிய+லாதன் என்பது பொருள் அதோடு
'அசுர'
அல்லது
'சேர'
என பெயரை சேர்த்தால் பெருஞ்சேரலாதன் என பொருள் வரும்.
பிரகலாதனே பெருஞ்சேரலாதன் அல்லது நெடுஞ்சேரலாதன் என்பது
100% பெயர்
ஒத்து போகிறது..
(அ)சுர ஹிரன்யகசிபு என்ற மாந்தசேரல் இரும்பொறை
----------------------------------------------------------------------------------------------
காசிபர் மகன் ஹிரன்யன்.ஹிரன்யன் என்றால்
"பொன்னன்"
என்று அர்த்தம் இதற்கு
"பொன் மாந்தன்"
என்பது
ஹிரன்யகசிபுக்கு அர்த்தம்.
பொன்மாந்த சேரல் இரும்பொறையே ஹிரன்யகசிபு ஆகலாம்
(அ)சுர ஹிரன்யக்ஷன் என்ற கனக்கால் இரும்பொறை
----------------------------------------------------------------------------------------------
ஹிரன்யன் போலே ஹிரன்யாக்ஷன் பொன்மாந்த கனக்கால் இரும்பொறை ஆகலாம்.
(அ)சுர விரோசனன் என்ற உதயன் சேரலாதன்:
----------------------------------------------------------------------------
ப்ரகலாதன் மகன் விரோசனன்.விரோசனன் என்பதற்கு சூரியன் என்று பொருள்.சூரியன் தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கு
பொதுவாணவன் ஆனால் அசுர பாதாள உலகமான இடங்களில்
விரோசனன்
சூரிய கடவுளாக கருதப்படுகிறான்.
இந்த விரோசனனே அயோத்தி தசரத ஸ்ரீராமனுக்கு
மூதாதயனாக கூறப்பட்டுள்ளான்.
இவனை உதயன்(சூரியன்)
சேரலாதன் என
பொருள் கொள்ளலாம்.
(அ)சுர மாவலி என்ற சேரமான் மாவன்கோ
---------------------------------------------------------------------------
மகாபலி விரோசனன் மகன்.மாவலி என்பது மகாவலிமை பொருந்திய அரசன் என பொருள் படும்.
மாவன்+கோ(அரசன்)
என்பதற்கு அதே சேரமான் மாவன்கோ என பொருள் கொள்ளலாம்.இவனே ஒனம் திருநாள் நாயகன்.
(அ)சுர வாணன் என்ற வில்லவன் கோதை
-----------------------------------------------------------------------
மகாபலி மகன் வாணன்(பாணன்)
என்பதற்கு அம்புமுனை கொண்டவன் என பொருள்.
இவனது பெயரே இறுதியில் சேரர்களுக்கு சின்னமான வில்லம்பு ஆனது.
இவனை
வில்லவன் சேரமான் கோதை என கருதலாம்.
இப்படி சேரர்களின் மொத்த பெயரே புராணங்களாக அசுரர் என எழுதப்பட்டது.
சேரர்களின் தலைநகரம் மகோதையபுரம்.
அதே போல் வாணகோவரையர்கள் தங்கள்
தலைநகரம் மகதை என்ற சேலம் ஆத்தூர் பகுதி என அறிகிறோம்.
சேலம்(சேரலம்)
என சில நூல்கள் குறிக்கின்றது.
சேரர்கள் இமயமலை வரை சென்று வெண்று அங்கும்
"மகத"
நாடு ஒன்று உருவானது.
இப்படி அசுரர்களான சேரர்களின் மாவலியே சேர,கங்க,கட்டி,துளு,வங்காள,நேப்பாள மக்களுக்கு மூதாதயராக அறியப்படுகின்றான்.
நன்றி சங்க இலக்கியம்


.jpg)











No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.