13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பாண்டிய அரசு ஆளுகைக்குட்பட்டு இருந்தது முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன்
மதுரைக்கு அடுத்த படியாக புதுக்கோட்டை வலுப்படுத்த நினைத்து பல கோட்டைகள் மறவர் படைப்பற்றுகள் ஏற்படுத்தி பொன்னமராவதியை அவர் இரண்டாம் தலைநகரமாக வலுவாக கட்டமைத்தார்.கி.பி 1216 முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் "மழவராயன்”என்ற சிம்மாஸனமும் பள்ளியறைக் கூடமும்,பொன்னமராவதியில் அமைத்திருந்ததை திருக்கோளக்குடி கல்வெட்டு கூறுகிறது.

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டிய மன்னனின் பரம்பரை வழிவந்த நேதிராச பாண்டியன் என்பவர் சுல்தான் ஆட்சின் போது புதுக்கோட்டை ராம்நாடு பகுதியில் ஆட்சி செய்த பாண்டிய அரசின் வீரபாண்டியன் ஆட்சியை தொடர்ந்து இப்பகுதி குறுநீல மன்னனாய் பொன்னமராவதியில் அரசு செலுத்திவந்தவர்.
நேதிராச பாண்டியன் காலத்தில் ராஜமங்கல வள நாடு மற்றும் மானாமதுரைப் பகுதியில் இருந்து 200க்கும் மேற்பட்ட செம்பியநாட்டு மறவர்குடிகளை குடியேற்றிய படைபற்று அரசு பதவி கொடுத்து அரனமைத்தார் அப்போது பொன்னமராவதியை கைப்பற்ற நினைதத்த பொன்னமரன் போர் தொடுத்து தோல்வி அடைந்தான்
அதன் பின் நேதிராச பாண்டியன் செம்பியநாட்டு மறவர்குல மங்கையை மணந்து இவர்களது வாரிசுகளிடம் புதுக்கோட்டை பொன்னமராவதியையும் மற்ற பகுதிகளையும் இறுதி காலத்தில் கொடுத்ததுள்ளார்.இவர்களது மக்களுள் வீர காங்கேயன் பாகப்பீரிவினையாய் நெற் குப்பையையும் செவலூர் அதன் பகுதியையும் கொடுதுள்ளார் இவை அனைத்தும் பழங்கால ஓலைச்சுவடி மற்றும் செப்பேடு மூலம் அறியமுடிகிறது என தமிழக தொல்லியல்துறை வரலாற்று குறிப்பிலும் ஆராச்சி இதழிலும் தெளிவாக குறிப்பிடபட்டுள்ளது.
பாண்டியர்களின் கடைசி வாரிசுகளாக வரலாற்றில் நேரடியாக அறியப்படுவது பழைமையும் சிறப்பும் மிக்க அரசமக்கள் ஆன மறவர்களே(செம்மநாட்டார்கள்) என தெளிவாகியுள்ளது.
Ref:
Goverment Manual of the pudukkottai state.
Tamilnadu Archeology Department.
ஆராச்சி இதழ்
நன்றி:
செய்தி வழங்கியவர் :
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.