Saturday, January 3, 2026

விருதுநகர் மாவட்ட மறவர் கல்வெட்டுகள்

க/எண்:311/2005

13-ஆம் நூற்றாண்டு மறவர் பாடிக்காவல் பற்றிய கல்வெட்டு

இடம் : செங்குன்றாபுரம் ,விருதுநகர் மாவட்டம்

அரசு : பாண்டியர்

செய்தி :  கொற்றனேரியும் சேந்தநேரியும் மறவர் பாடிகாவலுக்காக அனுபவித்து வந்ததை குறிப்பிடுகின்றது.

கல்வெட்டு:

மீனசிங்காசனத்தில் வீற்றிருப்ப......வெந்திகிரி .........காணவேங்கையும் சிலையும் கெட............
கற்பக நிழற்களை வளம் பெருகிட...................செங்குடி நாட்டு செங்குடி நகரான அபிமான மேருபுறத்து
ஸ்ரீ கைலாஸாரி தேவ கன்மிகளுக்கு ம்   மகா கொற்றனேரிக்கும் சேந்தனேரிக்கும் மறவர் பாடிகாலுக்கு..............






மேற்படி கல்வெட்டும் சேந்தனேரி காவலும் கொண்ட மறவர்கள்  பழையனூர் மறவர்கள் யாவரும்
ஓடாத்தூர் செண்பகமூர்த்தி அய்யனார் கோவிலில் முதல் மரியாதை பெரும் குழுவினர் என்றும்.
இக்கோவில் பாண்டிய மன்னனால் உருவாக்கப்பட்ட கோவில் என்றும் அக்கோவிலில் இரட்டை கயல் மீன்  சின்னம் காணப்படுகிறது என்பதும் குறிப்பிட படுகிறது.

க/எண்:312/2005

13-ஆம் நூற்றாண்டு மறவர் பாடிக்காவல் பற்றிய கல்வெட்டு

இடம் : செங்குன்றாபுரம் ,விருதுநகர் மாவட்டம்

அரசு : பாண்டியர்

செய்தி :  கொற்றனேரியும் சேந்தநேரியும் மறவர் பாடிகாவலுக்காக அனுபவித்து வந்ததை குறிப்பிடுகின்றது.

கல்வெட்டு:

மீனசிங்காசனத்தில் வீற்றிருப்ப......வெந்திகிரி .........காணவேங்கையும் சிலையும் கெட............
கற்பக நிழற்களை வளம் பெருகிட...................செங்குடி நாட்டு செங்குடி நகரான அபிமான மேருபுறத்து
ஸ்ரீ கைலாஸாரி தேவ கன்மிகளுக்கு ம்   மகா கொற்றனேரிக்கும் சேந்தனேரிக்கும் மறவர் பாடிகாலுக்கு அனுபவித்து வந்தமையால் .இத் தேவர் பழதேவதானம் நீக்கி .......அவர்களை(மறவர்) தவிர்த்து  ...
சேதுபதியின் மூதாதயராக இருக்க கூடிய சடைக்கன் கல்வெட்டு:
க/எண்:238/2005
இடம்:விருதுநகர் மாவட்டம்,தொப்பலாகரை பெருமாள் கோவில்
மன்னன்:குலோதுங்க சோழன்
கல்வெட்டு:
ஸ்ரீஎங்கள் பிரான் சோழற்கு யாண்டு...python manage.py sqlmigrate members 0001
எழில் துங்கமதில்சூழ்
குளத்தூரில் துர்க்கைக்கி சிங்கமது செய்வித்தான்
வீரன் சடைக்கன்...செந்தமிழ்சேர் தம்மவித்தகன் வெண்புள் வேந்து...


செய்தி:
சேதுபதியின் மூதாதயராக இருக்க கூடிய சடைக்கன் என்பவ்ர் துர்க்கைக்கு சிம்ம வாகனம் செய்தது.

சேதுபதியின் மூதாதயராக இருக்க கூடிய ஜெயதுங்கன் கல்வெட்டு:
க/எண்:246/2005
இடம்:விருதுநகர் மாவட்டம்,ஆவியூர் இராஜேந்திர சோழீஸ்வரர் கோவில்
மன்னன்:இரண்டாம்
மாறவர்மன் சுந்தர பாண்டியன்

கல்வெட்டு:
ஸ்வஸ்திஸ்ரீ கோமாறபன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள்
ஸ்ரீ சுந்தரபாடியதேவர்க்கு யாண்டு...
சூரியன் பொதியனான செயதுங்க நாடாள்வான் எழுந்தருவித்த திருக்காமகோட்ட நாச்சியாற்கு...


செய்தி:
சேதுபதியின் மூதாதயராக இருக்க கூடிய செயதுங்க நாடாள்வான் காமகோட்ட நாச்சியாரை எழுந்தருவித்தார்...

இடம்:அருப்புகோட்டை ,இராமநாதபுரம் மாவட்டம் ,பொம்மகொட்டை கிராமத்தில்உள்ள திட்டு

திருமலை சேதுபதி காத்த ரகுநாத தேவர்.............

ஆண்டு:கி.பி 1682

கல்வெட்டு:

துந்துமி சித்திரை........ஸ்ரீ...மது திருமலை ரகுநாத தேவர்க்கு கர்தரான தம்பி உடையதேவர் அறுப்புக்கோட்டை வாளவந்தாளம்மைக்கு

பாகமனிப்பட்டயங்கொடுத்தபடிரெகுநாத தேவருக்கு......புன்னியமாக அம்மன் நிவந்தமாக.......பொம்மக்கக்கோட்டை தோள்மலை அழகிதிய தேவன் மல்லனயம்பட்டிமக.......யக்கன் கட்டை கெஞ்சன் படி மக்கஞ்சனாயக்கன் சொல்ல கல்வெட்டு எழுதினினேன் சொக்கலிங்க ஆசாரி



செய்தி\:

பொம்மக்கோட்டை வாழவந்தம்மன் கோவிலுக்கு நித்தபூசைக்கு தந்த மானியம்

இதை ஆனைபிரப்பித்தவர் திருமலை சேதுபதி..........


கல்வெட்டு தொடர் என்.545/1992 ஆண்டு:கி.பி.1070-1210 வட்டம்:சிவகாசி ஊர்:திருத்தங்கல்
அரசு:பாண்டியர் மன்னன்:கோனேரின்மை கொண்டான் இடம்:நின்ற நாராயன பெருமாள் கோவில்

குறிப்பு: இறைவனின் நித்தியபூசைக்கு கொடுக்கப்பட்ட தானம்

கல்வெட்டு:

...........ஸ்ரீ திருபுவன சக்கரவர்த்திகள் கோனேரின்மை கொண்டான் திருத்தங்கல் மூல பருஷை............. .................. நாடு பிடித்த அமரிலாதேவனுக்கு ஒற்றி வைக்கலே

5. முத்தூர் கூற்றத்து கப்பலூருடையான் வீர சோழதேவனுள்ளிட்டோர் இம் மறவர் பக்கலே விலைகொண்ட.........




கல்வெட்டு தொடர் என்.545/1992 ஆண்டு:கி.பி.1190-1217 வட்டம்:சிவகாசி ஊர்:திருத்தங்கல்
அரசு:பாண்டியர் மன்னன்:குலசேகரன் இடம்:நின்ற நாராயன பெருமாள் கோவில்

குறிப்பு: பிராமணர்களுக்கு தேவதானம் வழங்கிய செய்தி

கல்வெட்டு:

...........அவனிமுழுதுடையாளோடு வீற்றிருந்த கோச்சடை வர்மரான ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் குலசேகர பாண்டிய தேவர்களூக்கு பதிமூன்றாவது திரை ஆண்டு............. ..................

20.. கற்பூர விலையும் மறப்பாடிகாவல் எங்கள் வினியோகங்கள் தடிப்பதற்க்கு மற்றுள்ள சில்வரி.........

செய்திகள்:

கோயில்களில் கற்பூர விலையும் மற்றும் மறவர்களின் பாடிகாவல் நீங்களான வரிகளனைத்தினுள்ளும் உண்டாக என மறவரின் பாடிகாவல் திசைகாவல்கள் உரிமை 11- ஆம் நூற்றாண்டிலே இருந்துள்ளது என மற்றுமோர் கல்வெட்டு.


நன்றி:விருதுநகர் மாவட்ட கல்வெட்டுகள்

தமிழக தொல்லியல் துறை

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.