பாண்டியர்
-----------------
பாண்டியர் வழிதோன்றலான சின்னஞ்சாத்தேவர்(வடகரை சொக்கம்பட்டி ஜமீன்)
மறவர் பாடிகாவல் குலசேகர பாண்டியன் காலத்தில்
MARAVARS ARE KSHATHRIYAS OF STOCK OF PANDYA,CHOLA,KERALA
Narasha Nayaka Killed Manabhusha Marava the ruler of Madurai
மறவர் குல பாண்டியன் மானக்கவசன்
திருவாடானை பாண்டியர்கள்
கவுரியன்(பாண்டியன்)
சங்கம் மறுவிய தமிழ் கூறும் நல் உலகத்தை ஆண்ட வேந்தரில் பண்டையோன்,செழியன்,வழுதி,மீனவன் போன்ற புகழ் மொழிக்கு உரியவன் தென்னவன்பாண்டியன் ஆவான். அவனை "மறப்போர் பாண்டியன் மறக்களிறு மறப்போர் ஏறு" என சங்க இலக்கியங்கள் குறிக்கின்றது. அவன் மறக்குடியை சார்ந்தவன் என நாம் பல சான்றுகள் காட்டினாலும்
சில பொறாமைகொண்ட விஷமிகளால் பொறுக்க முடியாமல் நம்மில் சில சிகண்டிகளை
முன்னிறுத்தி அம்பெரிந்து வருகின்றனர். அந்த அறியாமையை நீக்க மேலும் ஒரு சான்றாக
தஞ்சையை சோழர்களுக்கு முன் ஆண்ட முத்தரையன் கல்வெட்டு பாண்டியனை சங்க இலக்கியம் கூறும் "மறப்படை பாண்டியன்" என்பதை போல் "மறப்படை மீனவன்" என்று முத்தரையன் கல்வெட்டு கூறுகின்றது.
கல்வெட்டு கூறும் செய்தி யாதனில் முத்தரையன் செந்தலை என்ற சந்தரலேகையை வைத்து
தஞ்சை நகரத்தை தலைநகராக கொண்டு சோழ நாட்டை பல்லவர்களுக்கு உட்பட்டு ஆண்ட ஒரு குறுநிலை மன்னன். முத்தரையன் பல்லவனின் தலைமையில் பாண்டியனை போரில் எதிர்க்கிறான். அப்போது விளக்கும் காட்சியே இந்த கல்வெட்டு இது திருச்சிராப்பள்ளி அருகே
செந்தலை என்னும் ஊரில் கானப்படுகின்றது. இங்குள்ள பிடாரி அம்மன் கோவில் என்ற
7-ஆம் நூற்றாண்டு பல்லவர் கால கோவிலில் தென்முகத் தூனில் உள்ள கல்வெட்டு
வாசகம்.
இடம்:செந்தலை தூன் கல்வெட்டு
தெற்கு தூன் முகம்:
ஆண்டு : 8-ஆம் நூற்றாண்டு
மன்னன்: பெரும்பிடுகு முத்தரையன்
செய்தி:
மறப்படை மீனவன் வல்லரன்
பல்லவன் சேனைகண்று புறப்படுமாறு
....பெருங்களிறுக்......
விளக்கம்:
மறப்படையுடைய பாண்டியனை எதிர்க்க வல்லமை கொண்ட பல்லவன் தன்
சேனைகளுடன் தன் யானை மீது அமர்ந்து செல்கிறான்.
மறப்படையுடையவனுக்கு தலைவன் யாராக இருப்பான் மறவனாகவே இருப்பான்.
இருந்தாலும் சில ஆதாரங்களை முன் வைப்போம். எனவே மறப்படைக்கு தலைவனான பாண்டியனும் மறவனே ஆவான்.
மறப்படை என்பதும் மறவர் படையே இதற்க்கும் ஆதாரம் கூறுகிறோம்.
இதே போல் குலோத்துங்க சோழன் கல்வெட்டும் பாண்டிய மறவர் படையுடன் ஏழகப்படையை
வென்றதாக நிறைய கல்வெட்டு வருகிறது.
நேதிராச பாண்டியன் வாரிசுகளான செம்மநாட்டுமறவபாண்டியர்ள்
13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பாண்டிய அரசு ஆளுகைக்குட்பட்டு இருந்தது முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன்
மதுரைக்கு அடுத்த படியாக புதுக்கோட்டை வலுப்படுத்த நினைத்து பல கோட்டைகள் மறவர் படைப்பற்றுகள் ஏற்படுத்தி பொன்னமராவதியை அவர் இரண்டாம் தலைநகரமாக வலுவாக கட்டமைத்தார்.கி.பி 1216 முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் "மழவராயன்”என்ற சிம்மாஸனமும் பள்ளியறைக் கூடமும்,பொன்னமராவதியில் அமைத்திருந்ததை திருக்கோளக்குடி கல்வெட்டு கூறுகிறது.

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டிய மன்னனின் பரம்பரை வழிவந்த நேதிராச பாண்டியன் என்பவர் சுல்தான் ஆட்சின் போது புதுக்கோட்டை ராம்நாடு பகுதியில் ஆட்சி செய்த பாண்டிய அரசின் வீரபாண்டியன் ஆட்சியை தொடர்ந்து இப்பகுதி குறுநீல மன்னனாய் பொன்னமராவதியில் அரசு செலுத்திவந்தவர்.
நேதிராச பாண்டியன் காலத்தில் ராஜமங்கல வள நாடு மற்றும் மானாமதுரைப் பகுதியில் இருந்து 200க்கும் மேற்பட்ட செம்பியநாட்டு மறவர்குடிகளை குடியேற்றிய படைபற்று அரசு பதவி கொடுத்து அரனமைத்தார் அப்போது பொன்னமராவதியை கைப்பற்ற நினைதத்த பொன்னமரன் போர் தொடுத்து தோல்வி அடைந்தான்
அதன் பின் நேதிராச பாண்டியன் செம்பியநாட்டு மறவர்குல மங்கையை மணந்து இவர்களது வாரிசுகளிடம் புதுக்கோட்டை பொன்னமராவதியையும் மற்ற பகுதிகளையும் இறுதி காலத்தில் கொடுத்ததுள்ளார்.இவர்களது மக்களுள் வீர காங்கேயன் பாகப்பீரிவினையாய் நெற் குப்பையையும் செவலூர் அதன் பகுதியையும் கொடுதுள்ளார் இவை அனைத்தும் பழங்கால ஓலைச்சுவடி மற்றும் செப்பேடு மூலம் அறியமுடிகிறது என தமிழக தொல்லியல்துறை வரலாற்று குறிப்பிலும் ஆராச்சி இதழிலும் தெளிவாக குறிப்பிடபட்டுள்ளது.
பாண்டியர்களின் கடைசி வாரிசுகளாக வரலாற்றில் நேரடியாக அறியப்படுவது பழைமையும் சிறப்பும் மிக்க அரசமக்கள் ஆன மறவர்களே(செம்மநாட்டார்கள்) என தெளிவாகியுள்ளது.
Ref:
Goverment Manual of the pudukkottai state.
Tamilnadu Archeology Department.
ஆராச்சி இதழ்
நன்றி:
செய்தி வழங்கியவர் :
இருந்தும் சில தற்குறிகள் அந்த மறவர் நீங்களா என கேக்க கூடும் அதற்கும் பொன்னமராவதியில் பாண்டியனுடன் சோழநாட்டுக்கு படை எடுத்த மறவர்கள்பற்றிய மறமானிக்கர் குறிப்பு இவர்கள் இன்னமும் பொன்னமராவதியில் இருக்கின்றனர்.
பாண்டியன் மறவனே என்பதற்கு பல ஆதாரங்களுள் இவையும் ஒன்று
நன்றி:
தென் இந்திய கல்வெட்டு தொகுதிகள்
இராகவ ஐயங்கார்(செந்தமிழ்).
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.